Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; அவதானத்துடன் இருக்கவேண்டிய பெற்றோர் - இரா. சிவலிங்கம்


சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகள் இன்று நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்கள் அனைவரும் சிறுவர்களாவர். இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள் என்று போற்றப்படுகிறது. ஆனால், தற்போது சிறார்கள் படும் வேதனையையும், இன்னல்களையும், கொடூரங்களையும், பாலியல் வன்முறைகளையும், யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.

அரசாங்கம், சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இதனை எவ்வாறு ஒழிப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றனர். அதேவேளை, பொதுமக்கள் இதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கோருவதும், அவ்வப்போது வீதியில் இறங்கி போராடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இன்றைய சமூகத்தில் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதைக் காணலாம். இவ்வாறான நிலைக்கு இன்றைய சமூகம், கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம், பழக்க வழக்கம், விழுமியம் போன்ற உயர் சிந்தனைகளிலிருந்து படிப்படியாக கீழிறங்கி சென்று கொண்டிருக்கின்றதோ என்ற கேள்வி அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை. குறிப்பாக, இன்று வயது வித்தியாசமின்றி சிறுவர்கள், குறிப்பாக, சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மனித இனத்தின் இழிந்த நிலையையும், கேவலமான சிந்தனையையும், மோசமான செயல்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

அனைத்து சமயங்களையும் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில் மனித நேயமற்றவர்களால் சிறார்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதென்பது எந்தளவிற்கு சிறுவர்களை மதிக்கின்றார்கள், அவர்களை நேசிக்கின்றார்கள், விசுவாசமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியே. ஆலயங்களில், விகாரைகளில், கோயில்களில், பள்ளிவாசல்களில் போதிப்பது எல்லாம் வீணாகின்றதா? சமயம் ஒன்றே. எந்தவொரு சமூகத்தையும் சரியான வழியில் வழிநடத்தக்கூடியதொன்றாகும். கடந்த வருடத்தில் மட்டும் 2,500 இற்கு மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஒரு புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் மிகவும் கொடூரமானவையாகும். குறிப்பாக, வித்தியா, சேயா, பிரசாந்தி போன்ற சிறுமிகள் தொடர்பான சம்பவங்கள் நாட்டு மக்கள் அனைவரையும் கலங்கடித்துவிட்டன எனலாம்.

பெருந்தோட்டப்புற சிறுவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்களே அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் இன்று பலராலும் பல்வேறு முறைகளில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதை கேள்விப்படுகின்றோம்.

இவ்வாறான விடயங்களில் யாரை நம்புவது? யாரை நம்பாது விடுவது என்ற துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. தனது சொந்த மகளையே துஷ்பிரயோகப்படுத்தும் தந்தைமார் எமது சமூகத்தில் உள்ளனர். சொந்த சகோதரியை மானபங்கம்படுத்தும் சகோதரன் இருக்கின்றான். மாதா, பிதா, குரு என்ற முதுமொழியின்படி தாய், தந்தைக்குப் பின் தாய், தந்தையாக இருக்கக்கூடிய குருவே (ஆசிரியர்களே) தன்னுடைய மாணவர்களை (பெண் பிள்ளைகளை) துஷ்பிரயோகப்படுத்தும் செய்திகளும் வராமல் இல்லை.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பு தரப்பை நாடும்போது அங்கும் பாதுகாப்பு கிடைக்காமல் துஷ்பிரயோகப்படுத்தும் சம்பவங்களும் நடந்தேறுகின்றன. அதாவது வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது?

பெருந்தோட்டப் பிரதேசத்தில் இருக்கின்ற பெற்றோர்கள் குறிப்பாக, தாய்மார்கள் மிகவும் கவனமாகப் பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இன்றைய சினிமா கலாசாரம், தொலைக்காட்சி, இணையத்தளம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர், தொடர் நாடகங்கள், ஆபாசப் படங்கள், வீடியோ, கையடக்கத்தொலைபேசி பாவனை போன்ற விடயங்களும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக இருக்கின்றன.

அத்துடன் அதிகரித்த மதுபாவனை, போதைவஸ்து பாவனை, குடு, கஞ்சா, ஹெரோயின் பாவனை, வாழ்க்கையில் விரக்தியடைந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப அங்கத்தவர்கள், அயல் வீடுகளில் வசிக்கும் பிழையான நடத்தைக் கொண்டவர்கள் போன்ற விடயங்களும் இதற்கு காரணங்களாக அமைந்து விடுகின்றன.

குறிப்பாக வறுமை, கல்வியறிவு குறைவு, அறியாமை, விழிப்புணர்வின்மை, ஆலோசனை கிடைக்காமை, தொடர் வீடமைப்பு முறை, (லயத்து அமைப்பு முறை) போன்ற விடயங்களும் ஏதுவாக அமைந்து விடுகின்றன. பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான வழிகாட்டல் ஆலோசனைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. பிரச்சினை அல்லது தப்பு நடந்தபின்பே அதுபற்றிய விடயங்கள் பேசப்படுகின்றன. இது நேரத்தையும், வளத்தையும் வீணடிக்கும் செயல்களாகும்.

வெள்ளம் வரும் முன்னே அணைகட்ட வேண்டும். அரசாங்கம் பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வுகளை பயிற்றப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டும் துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்டும் நடத்தவேண்டும். கல்வித் திட்டத்தில் இதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். பாடசாலை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இவ்விடயம் சம்மந்தமாக போதிய வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

அரசினால் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களை பாராபட்சமின்றித் தண்டிக்கவேண்டும். பாடசாலைக்கு தனியார் வாகனங்களில் செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களே விழிப்புடன் இருக்கவேண்டும். தேயிலைத் தோட்டங்கள் வழியாக நடந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்களும,; சமூகமும் இணைந்து செய்யவேண்டும்.

சிறுவர்களுக்குத் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற விடயங்களை பாடத்திட்டத்திலேயே கொண்டுவரவேண்டும். அத்துடன் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் பாடசாலை தோறும் விழிப்புணர்வு செயலமர்வுகளை அதிபர், ஆசிரியர், பெற்றோர், மாணவர்களுக்கும், சமூகத்திலுள்ளவர்களுக்கும் வழங்க முன்வரவேண்டும். துர்நடத்தைகளில் ஈடுபடும் நபர்களை சமூகத்திலுள்ளவர்களே காட்டிக் கொடுக்க வேண்டும்.

பெருந்தோட்டப் பிரதேசத்தில் மதுபானசாலைகளை குறைக்கவேண்டும். கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்பனைகளை பொலிஸார் தடுக்க வேண்டும். பாடசாலை விடும் நேரங்களிலும், பாடசாலைக்கு பிள்ளைகள் வரும் நேரங்களிலும் மாணவர்கள் சேர்ந்து போகவேண்டும். சந்தேசங்களில் இடமான நபர்கள், வாகனங்கள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றை பொலிஸார் தொடர்ச்சியாகக் கண்கானிக்க வேண்டும். பாடசாலைகளில் தியான வகுப்புக்கள், யோகா பயிற்சிகளை வழங்க வேண்டும். மாணவர்களை தங்களை தாங்களே பாதுகாத்துகொள்ளக் கூடியவாறு தயார்படுத்த வேண்டும். சமய நிறுவனங்கள் போதியளவான பங்களிப்பை உடனடியாக செய்வதற்கு முன்வர வேண்டும்.

இன்று பெருந்தோட்டப் பிரதேசங்களில்; இருக்கின்ற பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் வயது வந்த பிள்ளைகளையும், சிறுவர்களையும் தந்தையின் பொறுப்பிலும், உறவினர்கள் (தாத்தா, பாட்டி) பொறுப்பிலும் விட்டு வெளிநாட்டிற்குச் செல்வதைக் காணலாம். இவர்களுக்கான பாதுகாப்பு சகல வழிகளிலும் கேள்விக் குறியாகவே உள்ளதை அவதானிக்கலாம்.

கல்வி அமைச்சும் சிறுவர் பாதுகாப்பு அமைப்பும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தேசிய கல்வி நிறுவனமும் சேர்ந்து ஒரு பாடத்திட்டத்தை சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமாக உருவாக்க வேண்டும். இலங்கையில் இவ்வாறான ஒரு துரதிஷ்டமான செயல்கள் எவ்வாறு உருவாகியது, இதற்கான காரணங்கள் யாது? இதனை எவ்வாறு தடுக்கலாம், இதனை செய்வது யார்? எப்படி இவ்வாறான விடயங்கள் தொடர்ச்சியாக நடக்க முடியும் என்பதுபற்றி ஆராய்ந்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

நன்றி - வீரகேசரி

எங்களுக்கும் பொது மன்னிப்பு கிடைக்குமா? - சிவலிங்கம் சிவகுமார்


இலங்கை சிறைகளிலிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை குறித்து முதன்முறையாக ஆரோக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என்றும் கூறப்பட்டது. இவர்கள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் இப்போது தீவிரம் பெற்றுள்ளன.இதை முன்வைத்து கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதமும் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மலையகப்பகுதிகளில் பல்வேறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகி நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் இளைஞர்களின் நிலை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி இடம்பெற்ற பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் சம்பவமும்,அதன் பின்னர் மலையகப்பகுதிகளில் ஏற்பட்ட குழப்ப நிலைகள், கலவரங்களால் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் கதை எவருக்கும் தெரியாது மறக்கடிக்கப்பட்டுள்ளது.

பிந்துனுவெவ சம்பவம்
பண்டாரவளையிலிருந்து பதுளை செல்லும் மார்க்கத்தில் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சுமார் 41 பேர் இருந்தனர். புனர்வாழ்வு பெற்று வந்தாலும் இவர்களுக்கு இங்கு சுதந்திரம் இருந்தது. பண்டாரவளை நகருக்கு சென்று வருவதற்குக்கூட இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அருகில் இருக்கும் கிராமத்தவர்களுடன் இணைந்து சமூக பணிகள் ,சிரமதானப்பணிகள் போன்றவற்றை செய்து வந்த இவர்களின் மீது அந்த பிரதேச பெரும்பான்மை இன மக்கள் நல்லபிமானம் வைத்திருந்தனர். இந்த நிலையில் ஒக்டோபர் 24 ஆம் திகதி காலை இங்கு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் முகாமில் இருந்த 41 தமிழ் கைதிகளில் 27 பேர் வெட்டிச் சிதைக்கப்பட்டனர்.அல்லது இறக்கும்வரை தாக்கப்பட்டுள்ளனர், மற்றும் எஞ்சிய 14 பேர் காயமுற்றதோடு சிலர் படுகாயமடைந்தனர். படுகொலைகள் இடம்பெற்ற காலை நேரம், 2,000 முதல் 3,000 வரையிலான குண்டர்களால் முகாம் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. ஒரு குறிப்பிட்டளவிலான பொலிஸ் படை தன்னியக்க ஆயுதங்களுடன் நின்றிருந்த போதிலும், பொல்லுகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதபாணிகளாகியிருந்த குண்டர்கள் முகாமுக்குள் நுழைந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை தாக்கும்போது எதையும் செய்யவில்லை. இது ஒரு திட்டமிட்ட படுகொலைச்சம்பவம் என பலராலும் கூறப்பட்டது. மலையகமெங்கும் இச்செய்தி காட்டுத்தீ போன்று பரவியது. அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்று 5 நாட்களுக்குப்பிறகு வட்டகொடை நகரில் கலவரம் இடம்பெற்றது.

வட்டகொடை கலவரம்
ஒக்டோபர் 29 ஆம் திகதி காலை 10 மணியளவில் வட்டகொடை புகையிரத நிலையத்தில் திரண்ட பிரதேசவாசிகள் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் உடரட்ட மெனிக்கே புகையிரதம் மற்றும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச்செல்லும் பொடிமெனிக்கே புகையிரதங்களை சற்று தாமதித்துச்செல்லும்படியும் இது பிந்துனுவெவ சம்பவத்திற்கு தாம் காட்டும் எதிர்ப்பு என்றும் தெரிவித்தனர். பதுளை செல்லும் இரயில் வண்டி ஒருவாறு சென்று விட்டது. எனினும் கொழும்பு செல்ல வட்டகொடை இரயில் நிலையத்தின் இரண்டாவது தண்டவாளத்தில் (Second Flatform) தரித்து நின்ற உடரட்ட மெனிக்கே இரயிலை தாமதித்துச்செல்ல பிரதேசவாசிகள் எடுத்த முயற்சி கலவரத்தில் முடிந்தது. இரயில் நிலைய பொறுப்பதிகாரி தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்க சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் வந்து அமைதியாக இருந்த பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். இதில் துரைராஜ் முத்துகுமார் என்ற இளைஞரின் காலில் காயம் ஏற்பட்டது. எல்லோரும் கலைந்து ஓட நின்று கொண்டிருந்த இரயிலின் காட்சிகாண் கூடம் (கடைசி பயணிகள் பெட்டி) பகுதியிலிருந்து தீ கிளம்பியது. இதையடுத்து ஒன்று சேர்ந்த வட்டகொடை மேற்பிரிவு,கீழ்ப்பிரிவு மற்றும் மடக்கும்பரை தோட்ட நகர்ப்புற இளைஞர்கள் இரயிலுக்கு தீ பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். பயணிகளையும் பத்திரமாக இறக்கி மிகுதி பயணிகள் பெட்டிகளை இரயில் எஞ்சின் ஓட்டுனர் மூலம் தனியாக்கினர். எனினும் இரண்டு பயணிகள் பெட்டிகள் தீக்கிரையாகின. வட்டகொடை இரயில் நிலையம் கல்வீச்சுக்குள்ளானது. இரயில் நிலைய பொறுப்பதிகாரியே பொலிஸாருக்கு தவறான தகவல் கொடுத்தார் என பிரதேச வாசிகளால் கூறப்பட்டது. பயணிகள் அனைவரும் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரின் வீட்டிலும்,ஏனைய இடங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பான்மை இனத்தவர்களான அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்த வட்டகொடை இளைஞர்கள் பொலிஸாருடன் இணைந்து அவர்களுக்கு காவல் இருந்தனர். உணவு சமைத்து விநியோகித்தனர்.

12 இளைஞர்கள் கைது
இந்த சம்பவம் இடம்பெற்று அமைதியான சூழல் திரும்பிக்கொண்டிருந்த வேளை நவம்பர் 8 ஆம் திகதி கலவரத்தை தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் வட்டகொடை பிரதேச இளைஞர்கள் 12 பேர் தலவாக்கலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 12 பேரின் விபரங்கள் வருமாறு.

1)சிதம்பரம்பிள்ளை வசீகரன்
2)வடிவேல் சிவஞானம்
3)வடிவேல் சிவலிங்கம்
4)பொன்னையா வடிவேல்
5)கருப்பையா தியாகராஜ்
6) வெள்ளைச்சாமி ராமமூர்த்தி
7) பழனியாண்டி யோகேஸ்வரன்
8) ஆறுமுகன் ராஜேந்திரன்
9)சுப்ரமணியம் ரவி
10) துரைராஜ் முத்துகுமார் (காலில் துப்பாக்கிச்சூடு பட்டவர்)
11) சுப்பிரமணியம் ஜெயரட்ணம் (இறந்து விட்டார்)
12) ராஜி பாலச்சந்திரன் (இறந்து விட்டார்)

கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரின் மீதும் கலவரத்தை தூண்டி விட்டார்கள் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டு பதுளை சிறைச்சாலையில் 3 மாதகாலம் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் பிணையின் மூலம் வெளியில் வந்த இவர்கள் மீது தற்போது வரை வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த 12 பேரில் சுப்பிரமணியம்ஜெயரட்ணம் மற்றும் ராஜி பாலச்சந்திரன்ஆகியோர்

காலமாகி விட்டனர். மிகுதி 10
பேரும் யாருடைய தயவும் துணையும் இன்றி கடந்த 15 வருடங்களாக நீதிமன்றுக்கு அலைந்து திரிந்து சட்டத்தரணிகளுக்கு தமது பணத்தை செலவளித்து, நிம்மதியிழந்து தவித்து வருகின்றனர். இவர்கள் மீதுள்ள வழக்கு 2005ஆம் ஆண்டு கண்டி நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

பின்னர் 2009 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் உயர்நீதிமன்ற பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கு மாற்றப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து இது வரை நுவரெலியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் திரட்டப்படவில்லை. ஆரம்பத்தில் இவர்கள் பிணையில் வௌியே வர அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் சந்திரசேகரன் உறுதுணை புரிந்தார். அவர் இறந்த பிறகு எந்த ஒரு அரசியல் பிரமுகர்களும் இந்த அப்பாவி இளைஞர்களை கண்டு கொள்ளவில்லை.

இவர்கள் அங்கம் வகித்த தொழிற்சங்கம் இது வரை இவர்களை ஏறெடுத்தே பார்க்கவில்லை.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை
பிந்துனுவெவ சம்பவத்திற்கு காரணமாவர்கள் என கைது செய்யப்பட்ட 41 பேரில் பண்டாரவளை மற்றும் தியத்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளடங்கலாக 19 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர். விசாரணைகளின் பின்னர் 2003 ஜுலை ௧ ஆம் திகதி இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு பெரும்பான்மையின நபர்கள் உட்பட நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர். . இதை எதிர்த்து இவர்கள் மேன்முறையீடு செய்தனர். அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் பின் 2005 ஆம் ஆண்டு மே மாதம் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

எமக்கு எப்போது விடுதலை?
வட்டகொடை கலவர சம்பவத்தில் கைதாகி பிணையிலிருக்கும் இந்த 10 பேரும் தமக்கு விடுதலையா அல்லது தண்டனையா அது எப்போது , தீர்ப்பு எப்படியாக அமையும் என காத்திருக்கின்றனர். குறித்த சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் நாம் கலவரத்தில் ஈடுபட்டோம் என எவரும் சாட்சி கூறாத நிலையில் சந்தேகத்தின் பேரில் எவரோ எமது பெயர்களை கொடுத்துள்ளனர் எனத்தெரிவிக்கும் இவர்கள் அனைவரும் குறித்த சம்பவத்தின் விளைவாக கைது செய்யப்பட்டமை சிறையிலிருந்தமை தற்போது வழக்குக்கு அலைந்து திரிந்து கொண்டிருப்பதால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

சில இளைஞர்கள் தலைநகரில் தொழில் பார்த்தாலும் வழக்கு தினமன்று கட்டாயம் நீதிமன்றில் ஆஜராக வேண்டியிருப்பதால் விடுமுறை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் எனத்தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை காரணமாக பலரும் தம்மை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதாகவும் நிரந்தரமான தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சிறையிலிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளின் நிலை குறித்து இப்போது அனைவரும் பேசுகின்றனர். இதில் அமைச்சர் மனோ கணேசன் போன்றோர் அக்கறையுள்ளவர்கள். அவர் தலைவராக உள்ள தமிழ் முற்போக்குக்கூட்டணி சார்பில் எமது மண்ணிலிருந்து தெரிவாகி தற்போது அமைச்சராக இருக்கும் பி.திகாம்பரம் அவர்களும் மனோ கணேசன் அவர்களும் இது குறித்து பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்ரி ஆகியோரிடம் பேசி வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்து அல்லது பொது மன்னிப்பை பெற்றுத்தர ஆவண செய்வார்களா என கோரிக்கை விடுத்துள்ளனர். செய்வார்களா நல்லாட்சியின் தலைவர்கள்? காத்திருக்கிறார்கள் வாக்களித்த மைந்தர்கள்.


நன்றி - சிவலிங்கம் சிவகுமார் (முகநூல் வழியாக)

இன்று மீரியபெத்த நினைவு நாள் : மறக்கப்பட்ட மீரியாபெத்தை மக்கள் - செல்வராஜா ராஜசேகர்


படங்கள் | செல்வராஜா ராஜசேகர்

மலையக மக்களின் உரிமைகள் அனைத்தும் முழுமையாக கிடைத்துவிடும் போல எண்ணத் தோன்றியது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலில் வெற்றி பெறும் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் மலையக அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிப்பட்டதைப் பார்த்தபோது. ஏனைய மக்களைப் போன்று மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வழிசெய்வோம், 7 பர்ச்சர்ஸ் காணிகளைப் பெற்றுத் தருவோம், காணியுரிமை மக்களுக்கு வழங்கப்படும், வீட்டுரிமை வழங்கப்படும், மலையக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என மயிர் சிலிர்க்கும் வகையிலான வாக்குறுதிகள் அனைத்து மலையக தோல்வியுற்ற, வெற்றி பெற்ற வேட்பாளர்களிடம் இருந்து வந்தாயிற்று.

சரி, இந்த வாக்குறுதிகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு, கொஞ்சம் 11 மாதங்கள் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி பதுளை, கொஸ்லந்தை, மீரியாபெத்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை குறித்து இவர்கள் அறிவார்களா? அனர்த்தம் இடம்பெற்று 11 மாதகாலமாகியும் இன்னும் நான்கு மாடிகள் கொண்ட பழைய தேயிலை தொழிற்சாலையில் – கீழ் மாடியில் – சிறிய அறைகளில் அடைப்பட்டுக் கிடக்கும் உறவுகளை இழந்த அந்த மக்களின் துயரத்தை அரசியல்வாதிகள் பங்கெடுத்தார்களா?

கூப்பன்களுக்கு வழங்கப்படும் அரிசியில் அரிசியை விட புழுக்கள் அதிகம் குடியிருப்பது அவர்களுக்குத் தெரியுமா? முகாமினுள் காற்று வெளியேற முடியாமல் சுவாசிப்பதற்கே கஷ்டத்தை எதிர்கொள்ளும் மக்களின் நிலை குறித்து அறிய முற்பட்டார்களா? உறவுகளை, பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் கல்விக்கு அரசியல்வாதிகள் உதவினார்களா? 11 மாதகாலமாகியும் 75 வீட்டுகள் கொண்ட திட்டத்தில் 4 வீடுகள் மட்டுமே (அதுவும் முழுமை பெறாத) கட்டப்பட்டுள்ளன என்பதை அறிவார்களா? ஒரு மாதத்திற்குள் 4 வீடுகளை கட்டிமுடித்த இராணுவத்தினருக்கு ஏனைய வீடுகள் கட்டி முடிப்பதற்கான பொருட்கள் வந்துசேருவதில்லை என்பதை அறிந்துகொள்ள முற்பட்டார்களா? மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கவிருப்பதாக கூறினார்களே, அதற்கு என்ன நடந்தது? மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் – லயன்களில் வாழ்ந்து வருபவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் தொந்தரவு செய்கிறார்களே, அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்களா? மண்சரிவு இடம்பெற்று 3 மாதங்களில் அவர்களுக்கான கூப்பன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதை அறிவீர்களா?

இன்னும் கேள்விகள் உண்டு, கேட்பதற்கு. இலங்கையில் இடம்பெற்ற இரண்டாவது மிகப்பெரிய இயற்கை அனர்த்தம், பாதிக்கப்பட்டவர்கள் எதுவித வசதியுமற்ற – உரிமைகளற்ற மக்கள் தொகுதியினர் என்பதை அரசியல்வாதிகளும் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆக, இதுவரை எத்தனை மக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளார்கள் என்பதை கூட 11 மாதங்களாக தேடியறிந்து சரியான எண்ணிக்கையைத் தெரியப்படுத்த முடியாத உங்களால், எவ்வாறு மலையக மக்கள் ஏனைய இன மக்களுக்கு இணையான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என உறுதி கூற முடியும்? இன்னும் 17 நாட்களில் ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் இன்னும் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. பதிலாக, மண்சரிவின் காலடியில் ஒற்றையாக நின்று கொண்டிருக்கும் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் சுவரொட்டிகளில் மண்மேடைப் பார்த்தவாறு அரசியல்வாதிகள் சிரித்துகொண்டிருக்கின்றனர்; மண்ணினுள் ஆன்மாக்கள் அழுதுகொண்டிருக்கின்றன.

மண்சரிவிலிருந்து உயிர் பிழைத்த – இன்னும் தொழிற்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் – அனர்த்த அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மீரியாபெத்தை மக்களின் மனக்குமுறலைப் பாருங்கள்.

காலை ஏழரை மணியிருக்கும், மண்சரிவு இடம்பெற்ற பகுதியைப் பார்த்தவாறே அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தார் அவர். வெள்ளம் அடித்துச் சென்றதனால் பாதையில் பாறைகள் முளைத்திருக்கின்றன. கீழே பார்த்தவாறு காலை எடுத்துவைப்பதும், காடாக காட்சியளிக்கும் மண்சரிவை ஏக்கமாகப் பார்ப்பதுவுமாக விறு விறுவென நடந்துகொண்டிருந்தார்.

55 வயதான வீராச்சாமி தனது அக்கா, அண்ணன் மனைவி, தம்பியின் மனைவி என மூவரை இந்த அகோர மண்சரிவில் இழந்திருக்கிறார். உயிரிழந்த ஒருவருக்குத் தலா ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா அரசால் வழங்கப்பட்டதாக வீராச்சாமி கூறுகிறார்.

“அக்காவயும், அண்ணன் சம்சாரத்தையும் எடுத்துட்டாங்க. தம்பி சம்சாரத்ததான் எடுக்க முடியல்ல” – என்னைப் பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவர் மேலே திரும்பி பார்க்கிறார்.

“நாலு வீடுக கட்டியிருக்காங்க. மத்த வீடுக கொஞ்சம் செவுரு ஏத்தியிருக்காங்க. எங்களுக்கு வீடு தாரத பத்தி இதுவர யாரும் ஒன்னும் சொல்லல” – வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் பேசுகிறார் வீராச்சாமி.

“தம்பி நேரமாகுது, கெரேஜுக்கு போகனும்” என்று விடைபெற்றவர் மீண்டும் மேலே பார்ப்பாரா என பார்த்துக் கொண்டிருந்தேன், பார்த்துக்கொண்டுதான் சென்றார்.
“எங்களுக்கு ஒரு உதவியும் இல்லயே, வீடு குடுக்க மாட்டேங்கிறான். இப்ப இதுலயும் இருக்க வேணாம், போ போனு தொரத்துறான். வீடு ஒன்னு குடுக்காம எங்க போய் சட்டி முட்டியெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கிறது?” என்கிறார் செல்லம்மா.

கையில் சாணம் சேகரித்த வாளியுடன், கையில் அப்பிய சாணத்துடன், கீழ் நோக்கிய சாரி முனையொன்றை தூக்கி இடுப்பில் சொருகியவாறு இருக்கிறார் 63 வயதான செல்லம்மா.

மண்சரிவு இன்னும் கொஞ்சம் நூலளவில் கையை அகல விரித்திருந்தால் செல்லம்மாவும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்; மீதி இரண்டு லயன்களைச் சேர்ந்தவர்களும் புதையுண்டிருப்பார்கள். லேசாக பூமி குலுங்கினாலே போதும், இப்போதுள்ள லயன் அறைகள் உடைந்து தரைமட்டமாகிவிடும். அந்தளவுக்கு வெடிப்புகள்.

“இன்னொரு ஸ்லிப்பு வந்து நாங்க பொய்ட்டாலும் பரவாயில்ல. அதுதான் இந்த லயத்தில வந்து இருக்கிறம். ஒரு எட்டு, ஒன்பது குடும்பம் இருக்கம், ஸ்லிப்பு வந்து மூடுனாலும் பரவாயில்லனு நெஞ்சு வெறுத்துப் போய் இருக்கோம். எந்த உதவியும் அரசாங்கம் குடுக்க மாட்டேங்குதே. கூப்பன் குடுத்துக்கிட்டு இருந்தான், இப்ப அதயும் நிப்பாட்டிட்டான்”.

எந்தவித வருமானமும் இல்லாத பிள்ளைகளற்ற செல்லம்மா, சுகவீனமுற்ற கணவரின் உதவியுடன் வீட்டு வாசலில் மரக்கறி பயிரிட்டு வருகிறார்.

“ஒரு வருஷம் முடிஞ்ச பிறகு ஒரு பூசைய குடுத்திட்டு, மகாமுனி சாமிய தூக்கி நிப்பாட்டலாமானு நினைச்சிருக்கம். அப்படி இல்லனா ஒரு நாலு தகரம் போட்டு இப்படியே வச்சி கும்புட வேண்டியதுதான்”.

உடைந்த நிலையில் கீழே சாய்ந்து கிடக்கும் மகாமுனி கடவுளை வழிபட வந்திருந்த 50 வயதான சுப்ரமணியம் இவ்வாறு கூறுகிறார். மண்சரிவு முதலில் தன்னோடு இழுத்துக் கொண்டு சென்றது இந்த மகாமுனி கோயிலைத்தான். அந்த இடத்தில் கோயில் இருந்ததற்கு அடையாளமாக மரமொன்றே இருக்கிறது. கீழே சாய்ந்து கிடக்கும் சிலையின் கைகள், கால்கள் என சிதறுண்டு காணப்படுகிறது.

“இந்த மாதம் திருவிழா வச்சிருக்கனும். இந்தியாவுல இருந்தெல்லாம் மகாமுனிய கும்புட வருவாங்க. 200, 250 வேஷ்டி மகாமுனிக்கு கெடக்கும். புள்ளங்க இல்லாதவங்க இந்த மாதம் வந்து நேத்திக்கடன் வச்சிட்டுப் போனா, அடுத்த வருஷம் இதே மாசம் புள்ள கெடக்க இருப்பாங்க. அவ்வளவு சக்தி வாய்ந்த சாமி இது. நாங்க என்னதான் பாவம் செஞ்சோமோ?” – கண்ணீர் முந்தி வருகிறது சுப்ரமணியத்துக்கு.

பாடசாலை போகாத வயதுள்ள இரண்டு பிள்ளைகளுடன் ஞானசேகரனும் அவரது மனைவியும் செல்லம்மா இருக்கும் லயன் குடியிப்பில்தான் வாழ்ந்து வருகிறார்கள். நான் அங்கு சென்றபோது லயன் அறையிலிருந்த தகரம், பலகை என இன்னொரு தற்காலிக வீடொன்று அமைப்பதற்கான பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்க அவரது மனைவி அவற்றை பிரதான பாதைக்குக் கொண்டு சென்றுகொண்டிருந்தார். ஏன்? எதற்காக இவற்றை அகற்றுகிறீர்கள் எனக் கேட்டேன்?

“ஸ்லிப் போனவுடன் பூணாகல தமிழ் வித்தியாலயத்துல 2 மாசமா இருந்தம். பிறகு கொஸ்லந்தை கணேஸா தமிழ் வித்தியாலயத்துக்கு கொண்டுவந்தாங்க. 2, 3 மாசம் கூப்பனும் தந்தாங்க. பிறகு சொந்தக்காரங்க வீட்ல போய் இருங்கனு எங்கள அனுப்பி விட்டாங்க. எங்களுக்கு எங்கயும் போய் தங்க முடியாது. இந்த லயத்துலதான் வந்து இருந்தம். பிறகு கரன்ட வெட்டிட்டாங்க. திரும்பவும் இங்க இருக்க வேணாம்னு சொல்றாங்க. இருக்க வேணாம்னா நாங்க எங்க போய் இருக்கிறது. ஒரு பாதுகாப்பான இடத்தில தற்காலிகமா வீடொன்ன அமைச்சு கொடுத்து போகச் சொன்னா பரவாயில்ல. சந்தோஷமா போகலாம். ஆனா இதுவரைக்கும் ஒன்னுமே நடக்கல்ல. இப்ப எங்கயாவது போவோம்னு சாமாங்களயெல்லாம் வெளியில எடுத்துக்கிட்டு இருக்கம். புள்ளங்கள பாதுகாக்கனுமே” – என்னுடைய முகத்தைப் பார்த்து பேச அவரது மனம் ஏதோ தடைபோட்டுக் கொண்டிருந்தது.



பத்திரிகைக்காரர்களும், டிவிகாரர்களும் வந்து படம், வீடியோ எடுத்துக்கொண்டு மட்டும்தான் போகிறார்கள், ஒன்றும் நடப்பதில்லை என்று அவரிடமிருந்து விடைபெறும்போது கூறினார். மனம் தடைபோட இது காரணமாக இருக்கலாம்.

மகாமுனி கோயிலோடு அடித்துச் செல்லப்பட்ட மேகலாவின் வீட்டில் அவரது கணவரின் உறவினர்கள் ஐவர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்திருக்கின்றனர். மூன்று பிள்ளைகளுடனும் கணவருடனும் பூணாகலை தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள 8க்கு 10 அடி கொண்ட முகாம் அறையில் வாழ்ந்துவருகிறார். ஓரமாக போடப்பட்டிருக்கும் கட்டிலுடன் அறை வெற்றிடம் முழுமையடைந்துவிட்டது. மீதப்பட்டிருக்கும் இடத்தில் சமைக்கவும் கதவு திறக்கவும் போதுமானதாக இருக்கிறது. பிள்ளைகள் விளையாட இடமில்லை.

மண்சரிவில் முதன்முதலாக அடித்துச் செல்லப்பட்ட, உறவுகளை இழந்த மேகலா குடும்பத்துக்கு வீடு தரமுடியாது என அதிகாரிகள் கூறியிருக்கிறார்களாம்.

“எஸ்டேட்ல யாரும் வேலை செய்யாததனால பதிவு இல்லயாம், அதனால வீடு தர முடியாதுனு சொல்றாங்க” – வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்று வருவதை மேகலாவின் கண்களும் முகமும் அப்படியே காட்டுகிறது.

“வீடு கிடைக்குமானு சந்தேகத்திலதான் இருக்கிறம். ஏ.ஜி. ஒபிஸுக்கும் போய் பேசிக்கிட்டுதான் இருக்கிறம். பாதிக்கப்பட்ட எல்லாத்துக்கும் வீடு தாறதா சொன்னாங்க. ஆனா முடிவு என்னனு தெரியல்ல” – என்கிறார் மேகலா.

தேர்தலில் வென்றவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டேன்?

“தேர்தல்ல யார் வென்றாலும் பரவாயில்ல. எங்களுக்கு வீடு கட்டி கொடுத்தா அதுவே போதும்” – வீடுதான் என்கிறார் மேகலா.

“காசு, பணம், சொத்து, சுகம் எதுவும் ஆச இல்லாமலே போயிருச்சி, இனி எங்களால ஒழைக்க முடியாது, ஒரு வீட்ட கட்டிக் கொடுத்தீங்கனா அதுவே போதும்” என்கிறார் முகாம் அறையில் மகள், மருமகன், 3 பேரப்பிள்ளைகள் என 5 பேருடன் கடந்த 11 மாதங்களாக வாழ்ந்து வரும் 62 வயதான ஜெயலெச்சுமி.

“மீரியாபெத்தையில இருந்திட்டு வந்து ஆசையே இல்லாம போயிருச்சி. எனக்கு பென்ஷனா அஞ்சு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் குடுத்தாங்க. அவ்வளவுக்கும் நகைதான் எடுத்தன். எல்லாம் மண்ணோட மண்ணா போயிருச்சி” – கண்ணீர் கொட்ட சாரித் துண்டை எடுத்து துடைத்துக் கொள்கிறார் ஜெயலெச்சுமி. தனக்கு அத்தனை நகைப் பொருட்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் இருக்கிறார் அவர்.

“எங்க லயன்தான் மேலேயே இருந்திச்சி. ஒரு நேரம் அது எனக்கு கிடைக்கும். கிடைக்கும்கிற நம்பிக்கையிலதான் இன்னக்கும் நான் இருக்கேன்” – திரும்பவும் கண்ணீர் பாய்கிறது.



“இப்ப மீரியாபெத்தைய எல்லாரும் மறந்திட்டாங்க. மண்சரிவு நடந்தப்போ எல்லா பக்கமிருந்தும் வந்தாங்க. ஆனா, இப்ப இந்த முகாமுக்கு யாருமே வாரதில்ல. நாங்க எப்படியிருக்கம்னு யாருமே வந்து தேடிப்பார்க்கிறதில்ல. நாங்களே போய் ரிப்போர்ட் பண்ணினாதான் இங்க உள்ள பிரச்சின வெளியில தெரியவருது” – என்கிறார் 26 வயதான கலைமகள்.

தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு யாரும் இங்கு வருவதில்லை எனக் குறைகூறுகிறார் கலைமகள்.

“இந்த முகாமுக்குள்ள உள்ள காற்று வெளிய போக முடியாததால சுவாசிக்க முடியாம கஷ்டத்த எதிர்நோக்க வேண்டியிருக்கு. முக்கியமா வயசுபோனவங்க கஷ்டப்படுறாங்க. இங்க எல்லா வீட்லயும் லாமண அடுப்புதான் இருக்கு. அதனால இரவானதும் லாமண பொக முகாம் பூரா நிரம்பியிருக்கும். காலப்போக்குல நல்ல இருக்குறவங்களுக்கும் நோய் வரலாம். லாமண அடுப்ப வெளியில வச்சி சமைங்கனு ஏ.ஜி. ஒபிஸ்ல இருந்து வந்தவங்க சொன்னாங்க. புள்ளங்கள வீட்டுக்குள்ள விட்டுட்டு நாங்க வெளியில போய் எப்படி சமைக்க முடியும்” என்கிறார் கலைமகள். நாங்கள் இருந்த பகல் நேரமே மண்ணெண்ணை மனம் காற்றோடு கலந்துவருவதை உணர முடிந்தது. ஒரே நேரத்தில் அடுப்பை பற்றவைத்தால் எப்படியிருக்கும்?

“ஒரு மாசத்துக்குள்ள வீட கட்டித்தாறம். அதுவரைக்கும் பெக்ரிகுள்ள இருங்கனு சொன்னாங்க. இன்னக்கு 11 மாசமாகிடுச்சி. இன்னும் வீடு கட்டி குடுத்தபாடில்ல. மீரியபெத்த மக்களுக்கு சேவை செய்யனும்கிற மனசு இப்ப யார்கிட்டயும் இல்ல” – விரக்தியுடன் பேசுகிறார் கலைமகள்.

“மீரியாபெத்தயில பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட கட்டி குடுத்து, பழைபடி அவங்க சந்தோஷமா வாழனும். முன்ன எப்படி சந்தோஷமா இருந்தமோ மறுபடியும் அப்படி நாங்க வாழனும்” என்கிறார் கலைமகள்.

“நாங்க குடியேறப்போகும் பகுதியில மண்சரிவில உயிரிழந்தவங்களுக்காக நினைவுச் சின்னம் ஒன்ன அமைச்சுத் தரனும்னு கேட்டுக்கொள்றோம். மீரியாபெத்த தோட்டத்த அப்படியே எந்தவித பாவனைக்கும் உட்படுத்தாம விட்டுடனும்னுதான் நாங்க எல்லாரும் நினைச்சிருக்கம்” – இதையாவது நிறைவேற்றித் தருவார்களா என்றது கலைமகளின் பார்வை.



64 வயதான ஆண்டி கொழும்பில் வீடொன்றில் வேலை செய்துவருபவர்.

“புள்ளங்க படிப்புதான் முக்கியம். ஓலெவல், கொலர்ஷிப் படிக்கிற புள்ளங்க நிறைய பேர் இங்க இருக்காங்க. கொஞ்சம் பேர் கொழும்புல படிக்கிறாங்க. சிலர் உதவி செய்றாங்க அவங்க படிக்கிறதுக்கு. கொஞ்சம் பேர் இங்க படிக்கிறாங்க” என்கிறார் ஆண்டி.

படிச்சாதான் எங்கள மாதிரி மண்வெட்டிய பிடிச்சிகிட்டு கான (கால்வாய்) வெட்டாம நல்லமாதிரி இருக்கலாம் என்று கூறுகிற ஆண்டி, இங்க படிக்கிறவங்களுக்கு ஏதாவது உதவி செஞ்சா நல்லா இருக்கும் என்றும் கூறுகிறார்.

“எங்களுக்கான வீடுகள எப்பதான் கட்டிக்கொடுப்பாங்கனு தினம் தினம் செத்துக் கொண்டுதான் இருக்கிறம். வீடுதான் எங்களுக்கு முக்கியம்” என்கிறார் காமதேவன்.

தலை தீபாவளிக்கு வீட்டுக்கு வந்திருந்த மகள், மருமகன் மண்ணில் புதையுண்ட சம்பவத்தை அவரால் இன்னும் மறக்கமுடியவில்லை. தொடர்ந்து பேசாமல் இடையிடையே நிறுத்தி நிறுத்தி பேசுகிறார். உறவுகளை இழந்த நினைவு பேசவிடாமல் மூச்சை அடைக்கிறது. நிதானித்து பேசத் தொடங்குகிறார்.

“வரும்போது இங்க இருந்த வசதி அப்படியே குறைஞ்சிருச்சி. இருந்தாலும் நாங்க இருக்கிற இடத்த நாங்கதான் சுத்தப்படுத்தி வச்சிக்கனும். டொய்லட் கட்டி குடுத்திருக்காங்க. அத நாங்கதான் கழுவி சுத்தமா வச்சிக்கனும். யாரும் வந்து கழுவி குடுக்கமாட்டாங்க” என்று கூறுகிறார் காமதேவன்.

இங்குள்ள மக்கள் ஒற்றுமையாக இருந்து பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் ஒவ்வொருவரும் குழுக்குழுவாக பிரிந்து செயற்படுவதாக கவலை தெரிவிக்கிறார் அவர்.

“ஒரு இடத்த தெரிவு செஞ்சி நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்போவதாக போன அரசாங்கத்த சேர்ந்தவங்க சொன்னாங்க. இப்ப ஒருத்தர் வந்து, நினைவுச் சின்னம் அமைக்கனும்னு சொன்னார். நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா? இல்லையா என்பது கேள்விக் குறிதான் – அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை அற்றுப் போயுள்ளதை காமதேவனின் பேச்சில் காணமுடிகிறது.


திருமணம் முடிக்காத 52 வயதான பரமேஸ்வரி தம்பி, அவரின் மனைவி இழந்தவர். மண்ணில் புதையுண்டவர்களின் மூன்று பிள்ளைகளையும் அவர் பராமரித்து வருகிறார்.

“தம்பி, தம்பி சம்சாரம், மாமா மண்ணோடு மண்ணா போய்ட்டாங்க. அவங்க புள்ளங்கள நான்தான் பார்த்துக்கிறேன். அவங்கள நல்லா படிக்கவைக்கனும். ஒரு வேலையும் இல்லாம எப்படித்தான் அவங்கள படிக்க வைக்கப் போறேனோ?” எதிர்காலம் குறித்து எந்தவித நிச்சயம் இல்லாமல் பேசுகிறார் பரமேஸ்வரி.

“மகாமுனி கோயில்ல சாமி பாத்து கொஞ்சம் காசு உழைச்சிக்கிட்டிருந்தேன். இப்ப அதுவும் இல்ல. என்ன செய்றதுனு தெரியல்ல. யாராவது உதவி செஞ்சாங்கனா புண்ணியமா போகும்” – வேறு எந்த வழியும் தெரியாமல் உதவியை நாடுகிறார் பரமேஸ்வரி.

நன்றி - மாற்றம்

மண்சரிவால் பாதிக்கபட்ட மலையக மக்களுக்கு வீடுகள் வழங்கக்கோரி போராட்டம்...


இலங்கையில் எந்த அரசுகள் அதிகாரத்துக்கு வந்தாலும் உழைக்கும் மலையக மக்கள் துயர் தீர்ந்த பாடில்லை. கடந்த வருடம் 29 ஐப்பசி மாதம் 2014 அன்று காலை 7:30 மணியளவில் பாரிய மண்சரிவு பதுளை பிரதேசத்தில் உள்ள கொஸ்லந்த கிராமத்தை தாக்கியது. மீரியாபெத்த மண்சரிவு அவலம் எனவும் அழைக்கப்படும் இம் மண் சரிவு 200 பேருக்கு மேற்பட்டவர்களை பலி வாங்கியது. 150 வீடுகளை துவசம் செய்தது.

இவ் இயற்க்கை அனர்த்தத்தின் பின்னர் அரசாலும், பல சமூக நிறுவனங்களாலும் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பாலும் தேனும் ஓட்டச் செய்வதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித உதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை. பல குடும்பங்களை இன்றும் வறுமையில் வாடி வருகின்றனர். தனி மனிதர்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்களும், சில இடதுசாரிக் கட்சிகளின் முன்னணிகளுமே இன்றுவரை அவர்களுக்கு தேவையான் சிறு உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், இவ் அவலத்தின் ஒருவருட நாளில் இம்மக்களின் உரிமைகோரி -அவர்களுக்கான வாழ்வாதாரம் கோரி - வீடுகள் கோரி இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இடம் : பதுளை நகர்

காலம்: 29 ஒக்டோபர் 2015

நேரம் : பகல் 11.00

தகவல்  - http://ndpfront.com/

தொழிலாளர்களின் சம்பள உயர்வு நெருக்கடி -கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்வதாகக் கூறப்படுகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள நாளாந்தம் 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாளாந்தம் 770 ரூபா என்ற சம்பளத்துடன் சமரசத்திற்கு வரலாம் என்ற செய்தியிலும் இதுவரை எவ்வித திருப்பமும் இல்லை.

இது ஒருபுறம் இருக்க, தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எவ்வகையிலும் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்ற நிலையிலேயே உள்ளது. முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது துரைமார் சம்மேளனம் சம்பளம் தொடர்பாக மாற்று யோசனையை முன்வைத்தது. இம்மாற்று யோசனைகள் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்ட அதேவேளை, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பாக ஆங்கிலப் பத்திரிகைகளில் பல செய்திகளும் கட்டுரைகளும் எழுதப்பட்ட வண்ணம் உள்ளன.

சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு காணிகள் பிரித்து வழங்கப்பட்டு அதில் கொழுந்து பறித்து தருமாறும், அதற்குரிய பணத்தை தோட்ட நிர்வாகம் வழங்குவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் பெருந்தோட்டங்கள் பற்றி கம்பனிகளின் எண்ணங்கள் என்ன? பெருந்தோட்டங்கள் எதனை நோக்கி நகர்கின்றன என்பன பற்றி சுருக்கமாக அவதானிக்கலாம்.

இன்று தேயிலையை பெருமளவில் உற்பத்தி செய்வது பெருந்தோட்டக் கம்பனிகள் அல்ல. கம்பனிகளின் உற்பத்தியானது மொத்த தேயிலை உற்பத்தியில் (324 மில். கி.கி.) சுமார் 30 வீதமாக, அதாவது, சுமார் 110 மி. கி.கி மட்டுமே உற்பத்தி செய்கின்றனர். மொத்தமாக தேயிலை பயிரிடப்படும் பரப்பில் (2,22,000 ஹெக்டேயர்) சுமார் 85,000 ஹெக்டேயர்களில் மட்டுமே அதாவது, சுமார் 40 வீதமான நிலப்பரப்பிலேயே பெருந்தோட்டக் கம்பனிகளின் பராமரிப்பில் உள்ள தேயிலை நிலங்களாக இருக்கின்றதையும் யாவரும் அறிவோம். பெருந்தோட்டக் கம்பனிகளிடம் உள்ள நிலங்களில் சுமார் 35,000 ஹெக்டேயர் காணிகள் தேயிலை பராமரிப்பில் இருந்து ஒதுக்கிவிடப்பட்ட பயிர் நிலங்களாக காணப்படுகின்றன. இவ் விபரங்கள் வருடாந்தம் பெருந்தோட்ட அமைச்சினால் வெளியிடப்படும். Statistical Information on Plantation Crops இல் காணலாம்.

மேற்குறிப்பிட்ட தகவல்களின்படி இன்று சிறு தோட்டங்களே இலங்கையில் மொத்த தேயிலை உற்பத்தியில் 70 வீதமானவற்றை (225 மி.கி) உற்பத்தி செய்வதாக இருப்பதுடன், சுமார் 4,00,000 பேர் சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்ளனர் . இவர்கள் பெரும்பாலும் இரத்தினபுரி, காலி, மாத்தறை , கேகாலை மாவட்டங்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சிறு தோட்ட உரிமையாளர்களிடம் காணப்படும் தேயிலை செடியில் 95 வீதமானவை உயர் விளைவு தரும் தேயிலைச் செடிகளாகும். இவை யாவும் 197080 களின் பின்னர் நடப்பட்ட புதிய இன தேயிலையாகக் காணப்படுவதுடன், வருடாந்தம் சுமார் 3,000 கிலோகிராம் வரையிலான உற்பத்தியை ஒரு ஹெக்டேயரில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக காணப்படுகின்றது. ஆனால் கம்பனிகளின் தேயிலையோ மிகவும் பழைமையானதாகும். கம்பனிகளின் கீழ் உள்ள தேயிலையில் சுமார் 60 வீதமானவை 1930 களில் நடப்பட்ட தேயிலையாகும். அதன் உற்பத்தி திறன் வீழ்ச்சியடைந்து, இப்போது சுமார் 900 கிலோகிராம் உற்பத்தியை மட்டுமே ஒரு ஹெக்டேயரில் ஒரு வருடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட தகவல்களிலிருந்து கம்பனிகள் தேயிலை நிலத்தை பாதுகாப்பதிலோ அல்லது உற்பத்தி திறனை பெருமளவு பெற்றுக் கொள்ளக் கூடியவகையில் அதிக விளைவு தரும் தேயிலையை உற்பத்தி செய்யவில்லை என்பதும் தெளிவாக புலப்படுகின்றது.

இந்தநிலையில் கம்பனிகளின் கீழ் உள்ள தோட்டங்களில் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சுமார் 100 வருடங்கள் பழைமையான தேயிலை செடிகளிலிருந்து அதிக விளைவு தரும் சிறு தோட்ட உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளும் உற்பத்தியை எப்படி எதிர்பார்ப்பது? தோட்டங்களில் அதிக விளைவு தரும் தேயிலையை பயிரிடத் தவறியமை தோட்ட கம்பனிகள் தவறாகும். அதேபோல பழைய தேயிலையை வைத்துக் கொண்டு தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறிப்பதில்லை, சோம்பேறிகள் வேலைக்கு வருவதில்லை என்று அவர்களை குற்றம் சாட்டுவதை எவரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

இது ஒருபுறம் இருக்க நட்டம்” , “நட்டம்என்று எப்போதும் கூறுகின்றனர். தேயிலைக்கான மொத்த உற்பத்தியில் 60 முதல் 70 வீதமானவை தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளமாக காணப்படுகின்றது என்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் ஒரு நாளில் எடுக்கும் சுமார் 20 கிலோ கிராம் தேயிலையில் இருந்து ஏறக்குறைய 4½ கிலோ கிராம் அளவில் சந்தைப்படுத்தக் கூடிய தேயிலை தயாரிக்கலாம். இந்த 4½ கிலோ கிராம் தேயிலை ஏல விற்பனையின்போது 4½ x 500 ரூபா  2250 ரூபாவாக விற்பனை செய்கின்றனர்.

இதில் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 450 ரூபா மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் வீடு, மருத்துவ வசதிகள் EPF கொடுப்பனவு மற்றும் இதர செலவுகள் என்று மொத்தமாக 1500 ரூபா செலவானாலும் தொழிலாளியின் ஒவ்வொருநாள் உழைப்பிலும் சுமார் (1,2501,500) 750 ரூபா வருவாய் இல்லை என்று கம்பனிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

மேற்படி கணிப்பீட்டை கம்பனிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் கணிப்பீட்டில் நாளாந்தம் தயாரிக்கும் ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலையிலும்; சுமார் 100 ரூபா நட்டம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். உண்மையில் தேயிலையின் உற்பத்தி செலவு என்று கம்பனிகள் கூறுகின்ற கணக்கே காணப்படுகின்றது. தனிப்பட்ட முறையில் நிறுவனங்களோ அல்லது அது பற்றிய கல்வித் தகைமையுள்ளவர்களால் கணிப்பிடப்பட்ட மதிப்பீடுகள் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந் நிலையில் கம்பனிகள் கூறும் நட்டக் கணக்கு விவாதத்திற்குரியதாகும்

இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கூட்டு உடன்படிக்கையின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட மாதம் 25 நாள் வேலை என்றவாறு வருடம் 300 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் கம்பனிகள் இப்போது இல்லை என்பது தெளிவாகின்றது. இதைவிட மாதம் வழங்கும் 25 நாள் வேலையில் 75 வீதம் வேலைக்கு வருவதால் 620 ரூபா தரப்பட்டாலும் அதற்கு குறைவாக வருகை தந்தால் குறைந்த பட்சம் சம்பளமாக 450 ரூபா வழங்கப்படும் என்ற ஏற்பாடுகளும் இப்போது இல்லை. கம்பனிகள் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வேலை வழங்குவதாகவும் அதற்கு 500 ரூபா தருவதாகவும் ஏனைய நாட்களில் கொழுந்து காசுகொடுப்பதுபோல பறிக்கும் ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலைக்கு 40 ரூபா தருவதாகவும் தமது முன்மொழிவை வைத்துள்ளன.

இந்நிலமையானது தோட்டத் தொழிலை கம்பனிகள் முழுமையாகக் கைவிடும் நிலைமைக்கு சமனானதாகும். இந்த முன்மொழிவை அவர்கள் மாற்றிக் கொள்பவர்களாக இல்லை என்பது தெளிவாகின்றது.

நிகழ்வுகளை பார்க்கும்போது பெருந்தோட்டக் கட்டமைப்பில் விரைவாக மாற்றங்கள் ஏற்படலாம். கம்பனிகள் தேயிலைத் தொழிலைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் நடத்தப் போவதில்லை. அவர்கள் மாற்று உபாயங்களை முன்வைக்கலாம். அதில் தொழிலாளர் தாம் தொடர்ந்து பெருந்தோட்டங்களில் தங்கியிருப்பதற்கு பெருந்தோட்ட தொழில்கள்போல வேறு தொழில்களை செய்து தமது வாழ்வாதாரத்தை பராமரிக்க முடியுமா என்பதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஒன்றிணைந்து பொருத்தமான வேலைத் திட்டங்களை முன்வைப்பது மிக அவசியமாகும். எத்தகைய வேலைத் திட்டங்களும் கம்பனிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு அமைய வேண்டியிருப்பதுடன் மக்கள் தொடர்ந்தும் தேயிலைத் தொழிலில் இலங்கையில் உள்ள சராசரி மனிதனது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியவாறு மாற்றி அமைத்தல் அவசியமாகும்.


நன்றி - வீரகேசரி

பரீட்சைகளில் தோற்றும் ஆசிரியர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ளனர்- பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன்

பரீட்சைகளில் தோற்றும் ஆசிரியர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ளனர்- பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன்


எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைப்பெவுள்ள அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையும் இலங்கைத் திறந்த பல்கலைகழகத்தின் பட்ட பின் கல்வி டிப்ளோமா பரீட்சையின் பாடம் ஒன்றும் ஒரே தினத்தில் நடைப்பெறவுள்ளதால் இவ்விரு பரீட்சையிலும் தோற்றும் ஆசிரியர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ளனர். இவ்வம்சம் அவ்வாசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள ஏற்றம் என்பனவற்றை பாதிப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடதக்கதொன்றாகும். இலங்கை பரீட்சை திணைக்களம் அசிரியர்களின் நலன்கருதி ஏற்கனவே பரீட்சைக்காக நிச்சயக்கப்பட்ட தினத்தை பின் போட்டுள்ளனர். இந்நிலையில், சம்மேளனத்தின் பல அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவொன்றினை மேற்கொள்ளுமாறு இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் இலங்கைத் திறந்த பல்கலைகழக துணைவேந்தருக்கு விண்ணப்பித்துள்ளார்.

பெருந்தோட்ட சமுதாயத்தின் சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டு திட்டம் உருவாக்கமும் செயலாக்கமும்: ஒரு பார்வை - எம்.வாமதேவன்


சர்வதேச முன்னெடுப்புகள்  புத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் (MGD)
சர்வதேச மட்டத்தில் நாடுகளின் அபிவிருத்தி குறித்து 2000 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான புத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் அல்லது மிலேனியம் அபிவிருத்தி குறிக்கோள்கள் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். இதன்படி 2015இல் எய்தப்பட வேண்டிய 8 குறிக்கோள்கள் அடையாளம் காணப்பட்டன. அவை:

1. தீவிர பசிப்பிணியையும், வறுமையை யும் இல்லாது ஒழித்தல்
2. சகலரும் அடிப்படைக் கல்வியைப் பெற்றுக்கொள்ளல்
3. பால் சமத்துவத்தை மேம்படுத்துதலும், பெண்களை வலுவூட்டுதலும்
4. சிறுவர் மரண வீதத்தை குறைத்தல்
5. பால் சுகாதாரத்தை மேம்படுத்துதல்
6. எச்.ஐ.வி எய்ட்ஸ், மலேரியா மற்றும் ஏனைய நோய்களை குறைத்தல்
7. சூழல் நிலைப்பேற்று தன்மையை உறு திப்படுத்துதல்
8. அபிவிருத்திக்கான சர்வதேச பங்குடைமையை அபிவிருத்தி செய்தல்

நிலைபேண்தகு குறிக்கோள்கள் – (Sustainable Development Goals–(SDG)
2015ஆம் ஆண்டு மிலேனியம் அபிவிருத்தி குறிக்கோள்களுக்கான கால எல்லை நிறைவடைந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை புதிய அபிவிருத்தி இலக்குகள் குறித்து 2015இல் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற முடிவொன்றை மேற்கொண்டது. இதன்படி 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிலைப்பேண்தகு அபிவிருத்திக்கான (Sustainable Development Goals)–SDG நிகழ்ச்சி நிரல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இத் தீர்மானத்தின்படி 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிலைப்பேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களாக 17ஐ அடையாளம் கண்டு 15ஆம் ஆண்டுகளின் எய்தப்படவேண்டும் என தீர்மானித்தது.

இப்பதினேழு குறிக்கோள்களாவன:

1. வறுமையை எல்லா வடிவங்களிலும் இல்லாதொழித்தல்

2. பசியை இல்லாதொழித்து உணவு பாதுகாப்பை எய்தி போசாக்கை மேம்படுத்துதலும் நிலைப்பேண்தகு விவசாயத்தை மேம்படுத்துதலும்

3. சுகாதாரமான வாழ்க்கையை உறுதிப்படுத்தி எல்லாருக்கும் எல்லா வயதினருக்கும் நல்வாழ்வினை மேம்படுத்தல்

4. அனைத்தையும் உள்ளடங்கியதும் சமூக நீதியானதுமான தரம்மிக்க கல்வியை உறுதி செய்தலும் வாழ்நாள் முழுவதற்கும் கற்றலுக்கான சந்தர்ப்பத்தை மேம்படுத்துதல்.

5. பால்நிலை சமத்துவத்தை எய்துதலும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுப்படுத்துதல்

6. நீர் மற்றும் மலசலக்கூட வசதிகள் என்பவற்றை எல்லோருக்கும் கிடைப்பதையும் அவற்றின் நிலைப்பேண் முகாமைத்துவத்தையும் உறுதிசெய்தல்

7. பெற்றுக்கொள்ள கூடியதும் நம்பத்தகுந்ததும் நிலைப்பேறானதும் நவீனத்துவமான சக்தியைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்

8. நிலைபேறானதும் அனைத்தையும் உள்ளடங்கியதும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியையும் முழுமையானதும் உற்பத்தி சார்ந்த சூழலையும் மதிக்கத்தக்க தொழிலையும் மேம்படுத்துதல்

9. உறுதியான உட்கட்டமைப்பை நிர்மாணித்து அனைத்தையும் உள்ளடங்கியதும் நிலைத்து நிற்கக்கூடிய கைத்தொழில்மயத்தை பேணுதலும் புத்தாக்கத்தை வளர்த்தலும்

10. நாட்டுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயும் சமத்துவமின்மையை குறைத்தல்

11. நகரங்களையும் மனித குடியமைப்புகளை உள்ளடங்கியதாகவும் பாதுகாப்பானதும் உறுதியானதும் மற்றும் நிலைத்து நிற்கக்கூடியதாக உருவாகுதல்.

12. நிலைத்து நிற்கக்கூடிய நுகர்வு மற்றும் உற்பத்தி முறைமைகளை உறுதிசெய்தல்

13. காலநிலை மாறுதல்களையும் அதன் பாதிப்புக்களை குறைப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை எடுத்தல்  காலநிலை மாறுதலுக்கான ஐக்கிய நாட்டு சட்டகத்தில் மகா நாட்டினை காலநிலை மாறுதல்களுக்கு பூகோள ரீதியாக முகம் கொடுப்பதற்கு பேச்சுவார்த்தைக்காக அடிப்படை சர்வதேச நாடுகளுக்கிடையேயான மன்றமாக ஏற்றுக்கொள்ளல்

14. சமுத்திரம், கடல், கரையோர வளங்கள் என்பவற்றை நிலைப்பேறான அபிவிருத்திக்காக பாதுகாத்தலும் நிலைப்பேறாக உபயோகித்தல்

15. சூழல் அமைப்புகளை நிலைத்து நிற்கக்கூடிய உபயோகத்திற்காக பாதுகாத்தலும் மீளமைத்தலும், மேம்படுத்தலும். நிலைத்து நிற்கக்கூடிய வகையில் காடுகளை மேற்பார்வை செய்தல். பாலைவனமாக்குதல் மற்றும் நிலச்சீரழிவினை பின்நோக்கி செய்தலும், அதனை தடுத்து பாலைவனமாக்குதலை நிறுத்துதல்

16. நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்காக சமாதானமானதும் எல்லாவற்றையும் உள்ளடங்கிய சமுதாயங்களை பேணுதலும், எல்லோருக்கும் நீதியை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்தலும், எல்லா மட்டங்களிலும் பயனுறு முறையிலானதும் பொறுப்பானதும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய நிறுவனங்களை ஸ்தாபித்தல்

17. நிலைப்பேறான அபிவிருத்திக்காக பூகோள பங்குடைமையை உயிர்ப்பித்தலும், நடைமுறைப்படுத்தலுக்கான சாதனங்களை வலுப்படுத்தலும்

இங்கு 17 குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் 8 இலிருந்து 12 இலக்குகளைக் கொண்டதாக 169 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இக்குறிக்கோள்களை அடைந்து கொள்ள (2020–2030) இடைப்பட்ட கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தாயிரம் அபிவிருத்தி குறிக்கோள்களான எட்டும், புதிய குறிக்கோள்களாக 17ஆக உயர்ந்து விரிவுபடுத்தப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. முன்னைய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்த பசியும், வறுமையும் இப்பொழுது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. சில விடயங்களில் (கல்வி, சுகாதாரம்) புதியவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து 17 குறிக்கோள்களிலும் நிலைத்து நிற்கக்கூடிய அம்சம் வலியுறுத்தப்படுகின்றன. எனவேதான் புதிய அபிவிருத்தி குறிக்கோள்கள் நிலைப்பேற்று அபிவிருத்தி குறிக்கோள்களாக அடையாளம் காணப்படுகின்றன. நிலைப்பேற்று தன்மை என்பது பொருளாதாரம் மற்றும் சூழல் அம்சங்களையும் இணைந்த ஒன்றாக இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தேசிய மட்ட முன்னெடுப்புகள்
தேசிய மட்டத்தில் தற்போது இது குறித்த நடைமுறைப்படுத்தல் பற்றிய முன்னெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளன. தேசிய மட்டத்தில் ஒவ்வொரு நாடும் தங்களது நிலைமைகளுக்கேற்ப இக்குறிக்கோள்களுக்கு அழுத்தம் கொடுத்து கொள்ளலாம். இலங்கையைப் பொறுத்தவரை சில ஆய்வாளர்கள் பலவற்றிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வாதிடுகிறார்கள். டுலிப் ஜயவர்தன என்பவர் தனது கட்டுரையொன்றில் (Daily Mirror 16/10) 3,7,10 மற்றும் 11 தவிர்ந்த ஏனைய 13 குறிக்கோள்களில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். அவர் நாட்டிற்கு சுகாதாரமான வாழ்வு (3) நவீனத்துவமான சக்தி (7) சமத்துவமின்மை (10) நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புகளின் பாதுகாப்பு (11) என்பவற்றிற்கு குறைந்த அளவிலான முக்கியத்துவமே அளிக்கின்றார். இந்த நாட்டிலே பிரதேசம் மற்றும் இனங்களுக்கிடையே பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக நலன் குறித்து பல்வேறு சமத்துவமின்மைகள் காணப்படுகின்றன. எனவே, குறிக்கோள் இலக்கம் 10ம் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டியவொன்று என நாம் வாதிடலாம். ஜனாதிபதியின் கீழ் வருகின்ற சூழல் விடயங்கள் இப்பொழுது அழுத்தம் பெறுவதை காணக்கூடியதாக உள்ளது. இந்த பகைப்புலத்தில் மலையகம் குறித்த அபிவிருத்தி எத்தகையதாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெருந்தோட்டத் துறைக்கான பத்தாண்டு திட்ட உருவாக்கம்
முன்னைய புத்தாயிரம் அபிவிருத்தி குறிக்கோள்களை (1990.20.15) ஒட்டியதாக (2006.20.15) ஆண்டு தோட்ட சமுதாயத்தின் தேசிய நடவடிக்கை திட்டம் ஒன்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சினால் உருவாக்கப்பட்டது. இதுவே பத்தாண்டு திட்டம் என அடையாளம் காணப்பட்டது. இந்த திட்டம் அதிகமான அளவில் புத்தாயிரம் அபிவிருத்தி குறிக்கோள்களுடன் இணைந்த ஒன்றாக இருந்தது. இத்திட்டத்திற்காக அமைச்சரவை 2006ஆம் ஆண்டு அனுமதி வழங்கியிருந்தாலும் அரசியல் மற்றும் அமைச்சுகள் அரசாங்க கொள்கைகள் மாற்றம் காரணமாக இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், இத்திட்டத்தின் நடைமுறை ஆக்கம் குறித்து ஊடகங்களும் மற்றும் சிவில் அமைப்புகளும் தொடர்ந்தே வலியுறுத்தி வந்தன.

2015இல் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. அந்த அமைச்சின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் ஒன்றாக இந்த பத்தாண்டு திட்டத்தின் மீள் உருவாக்கம் சேர்த்துக்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கை மீண்டும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்ட உருவாக்கலில் சம்பந்தப்பட்ட சகல உரித்தாளர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர். இதன் ஆரம்ப நிகழ்வாக தேசிய மட்டத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அன்றைய நிதி அமைச்சரும், கொள்கை திட்டமிடல் பிரதியமைச்சரும் பெருமளவிலான நன்கொடை நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2ஆவது நிகழ்வாக பிராந்திய மட்டத்தில் மாகாண, மாவட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பங்களிப்போடு கலந்தாலோசனை நடைபெற்றது. அதன் பின்னர் பிரதேச செயலக மட்ட பிரிவுகள் சம்பந்தப்பட்ட அரசாங்க துறைசார் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் என்பவற்றோடு கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்தோடு ஒரு செயல் தூண்டல் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் அங்கத்தவர்களிடையே இத்திட்டத்தின் வரைவு சமர்ப்பிக்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்களை உள்ளடக்கியதான திட்டவரைவு அனைத்து தரப்பினரின் ஆலோசனையுடன் தேசிய மட்டத்திலான ஒரு கலந்துரையாடல் மூலம் இறுதியாக்கப்பட்டது.

சமீபத்தில் பொதுத்தேர்தலை (ஆகஸ்ட் 17) தொடர்ந்து தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி என அமைக்கப்பட்டுள்ளது. இதுவே பத்தாண்டு திட்ட நடைமுறைப்படுத்தலுக்கு பொறுப்பான அமைச்சாகும். இந்த இறுதி வடிவம் தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் கிடைத்ததற்கு பின்னால் இத்திட்ட நடைமுறைப்படுத்தலுக்கு தேவையான நிதி வளங்களை திரட்டுவதற்காக நன்கொடையாளர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படும். அங்கு இத்திட்டம் அச்சு வடிவில் வெளியிடப்பட்டு, சகலருக்கும் விநியோகிக்கப்படும்.

பத்தாண்டு திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்
இத்திட்டம் பெருமளவில் வீடமைப்பினருக்கே அதிக அழுத்தம் கொடுத்துள்ளது. 160,000 வீடுகள், நீர்வசதி, மலசலக்கூடம், பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிர்மாணித்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அத்தோடு கல்வி, சுகாதாரம், தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, சமுதாயத்தில் வலுப்படுத்தலுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கு பெண்களின் சமத்துவம், சிறுவர் மற்றும் இளைஞர் உரிமைகள், விளையாட்டு மற்றும் கலாசார தேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நல்லாட்சி பிரதேச மட்டங்களிடையே காணப்படும் வேறுபாடுகள் மற்றும் இந்த மக்களின் உரிமைநிலை போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆக, அபிவிருத்தியின் பல்வகை பரிமாணங்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல் கலாசாரம்  உள்ளடக்கியதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

செயலாக்கம்
இத்திட்டத்தின் செயற்படுத்துகைக்கு பல்வேறு உரித்தாளர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

*வெளிநாட்டு நன்கொடையாளர்களின் நிதி
*அரசாங்க வரவு–செலவு திட்டத்தின் மூலமான நிதி
*ஏனைய துறைசார் அமைச்சுகளின் ஈடுபாடு
*சிவில் சமூகத்தின் பங்களிப்பு
*நிறைவேற்றும் அமைச்சினது நிறுவன ரீதியான பலம்

இவை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டியவையாகும். இவற்றுள் நிறைவேற்று அமைச்சினது நிறுவனங்களினது நிறுவன ரீதியான பலம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இந்த அமைச்சின் கீழுள்ள ஆளணி எண்ணிக்கை அளவில் அதிகமாக காணப்பட்டாலும் உயர் மட்டத்தில் செயல்திறன் மற்றும் இயல்திறன் (ஊயியடிடைவைல யனெ ஊயியஉவைல) உள்ளவர்கள் குறைவானவர்களே உள்ளனர். எண்ணிக்கை அளவில் 250க்கு மேற்பட்ட பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியாளர் (Pடயவெயவழைn ஊழஅஅரnவைல ஊழஅஅரniஉயவழைn குயஉடைவையவழசள) பெருந்தோட்ட மாகாணஇ மாவட்ட அரசாங்க நிறுவனங்களில்இ தொழில்நுட்ப மல்லாதஇ முகாமைத்துவ உதவியாளர்களுக்கு குறைவானதும் சிற்றூழியர்களுக்கு சற்று உயர்வான நிலையில் கணிக்கப்படுகின்றனர். அத்தோடு இவர்கள் தோட்டத்துறையோடு அடையாளம் காணப்படாது மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் அமைந்துள்ளன. அரச நிறுவனங்களில் பல்வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்தோடு தற்போது இவர்களில் கணிசமானோர் முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையில் தேர்வு பெற்றுஇ பதவி உயர்விற்காக காத்திருக்கின்றனர். இவர்களை விடஇ ஏனைய உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் செயற்றிறனும் மட்டுப்படுத்தப்பட்டவொன்றாகவே உள்ளது.

இந்த அமைச்சின் கீழ் இரண்டு நிறுவனங்கள் நிரல்படுத்தப்பட்டிருக்கின்றன.

1. பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் (PHDT)
2. சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த நிறுவனம் (STMF)

முதலாவதுஇ டிரஸ்ட் என பொதுவாக அறியப்படுகின்றது. இதுவே தற்போது அமைச்சின் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் நிறுவனமாக உபயோகப்படுத்தப்படுகின்றது. இது தோட்ட முகாமைத்துவம், அரசாங்கம் தொழிற்சங்கம் என்ற முத்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முகாமைத்துவத்தை கொண்டிருந்தாலும் இது பெருமளவில் தோட்ட முகாமைத்துவம் சார்ந்த ஒன்றாகும். இந்நிறுவனத்தின் மீள்வரும் செலவுகள் (Recurrent Expenditure) தோட்டக் கம்பனிகளால் வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்க நிதி, அந்நிறுவனம் செயற்படுத்தும் அபிவிருத்தி திட்டங்கள் ஊடாகவே வழங்கப்பட்டு வருகின்றது. இதனது விடயப்பரப்பு, வீடமைப்பு, சுகாதாரம் போன்றவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக தோட்டத்தொழிலாளரின் நலன் (Welfare) சார்ந்ததாக அமைந்துள்ளதே தவிர அவர்களது அபிவிருத்தி சார்ந்ததாக இல்லை.

இரண்டாவது சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த நிறுவனம். இது பாராளுமன்ற சட்டத்தினால் 2005இல் மறைந்த தொண்டமானின் நினைவை நிலைத்திருக்க வைக்கும் நோக்கம் கொண்டதாக நிறுவப்பட்டது! இதனது முகாமைத்துவம் அரசியல் சார்பு தன்மையானது. தொழிற்கல்வி(ஹட்டன்);, கலாசாரம் (றம்பொடை), விளையாட்டு (நோர்வூட்) போன்றவற்றிற்கான 272 மில்லியன் ரூபா அரசாங்க நிதியினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று அமைப்புகள் இந்த நிறுவனத்தின் கீழ் செயற்படுகின்றன. இதைவிடஇ பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் 400க்கு மேற்பட்ட செயற்றிட்டங்கள் தோட்ட மட்டத்தில் இந்நிறுவனத்தினூடாக செயற்படுத்தப்படுகின்றது. இதற்கான மீள்வரும் மற்றும் மூலதன செலவுகள் (சநஉரசசநவெ யனெ உயிவையட) அமைச்சினது செயற்றிட்டம் ஒன்றின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. சொந்த நிதியிலிருந்து (ளநடக கயைnஉé) இதனது செயற்பாடுகள் நிறைவேற்றப்படவில்லை. நிதி அமைச்சின் அங்கீகாரத்துடன் 150பேர் இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். எனினும் இந்நிறுவனத்தின் அரசியல் சார்புத்தன்மை காரணமாக புதிய அமைச்சின் கீழ் இதனது செயற்பாடு தற்போது கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது.

புதிய அதிகாரசபையின் தேவை
இத்தகைய பகைப்புலத்தில் பத்தாண்டு திட்டத்தினை செயற்படுத்துவதற்கான உரிய தெரிவு (Choice) என்ன? 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்பட்ட மஹிந்த சிந்தனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் அப்போதைய அமைச்சு தயாரித்த மூன்றாண்டு அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்த “ஒரு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அதிகார சபை” உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் அன்றைய அமைச்சு இந்த அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தபோது அது அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் இத்தகைய அதிகாரசபை உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஊடகங்களிலும் சிவில் சமூகத்தினாலும்; வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. அத்தோடு 2015இல் பொதுத் தேர்தலுக்கு முன் “தமிழ் முற்போக்கு முன்னணி” தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த 23 கோரிக்கைகளில் இத்தகைய அதிகாரசபை உருவாக்கப்படவேண்டும் என்பதையும் முன்வைத்துள்ளது.

எனவே தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் அது விடயப்பரப்புக்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில்இ மலைநாட்டு புதிய கிராமங்களை அபிவிருத்திக்கான அதிகாரசபை (Hill Country, New Village Development Authority என்ற கோரிக்கை உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஏற்கனவே தற்போது இறுதியாக்கப்பட்டுள்ள பத்தாண்டு திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இத்தகைய அதிகாரசபை போதிய நிறுவன ரீதியான கட்டமைப்பை தருவதோடு தேவையான உந்து சக்தியையும் அளிக்கக் கூடியதாக அமையும்.

நன்றி - வீரகேசரி

சம்பள உயர்வு பற்றிய கலந்துரையாடல் - சந்திரசேகர், வடிவேல் சுரேஷ்


தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி வசந்தம் தொலைக்காட்சியில் சந்திரசேகர், வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கிடையில் நிகழ்ந்த கலந்துரையாடல்.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates