Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

யாழ்ப்பாணக் கலாச்சாரத்தில் இடதுசாரி இலக்கிய இயக்கம் - எஸ். பொன்னுத்துரை

எஸ்.பொன்னுத்துரை 1965 இல் எழுதிய இக்கட்டுரை 1970இல் தமிழகத்தில் வெளியான "சுடர்" என்கிற சஞ்சிகையில் மீள் பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. அங்கிருந்து நன்றியுடன் இங்கே மறு பிரசுரிக்கிறோம்.

நற்போக்கு இலக்கியம் பற்றிய ஆழ்ந்த ஆய்வுகளை நிகழ்த்தியவர், வீ, தீ முதலான நூல்களின் ஆசிரியர், ஈழத்து இலக்கிய உலகின் தனி ஓர் இயக்கம் என்னும் பல சிறப் புக்களுக்கு உரியவர் திரு. எஸ். பொன்னுத்துரை. தமிழில் இப்போது உருவாக வேண்டிய இலக்கியத்தைப் பற்றித் தமக்கென்று சில தனி நோக்குகள் கொண்டிருந்த அண்ணாவைப் பாராட்டும் இம்மலரில், 'ஈழத்துச் சிறு கதை மன்னன்' பொனனுத்துரையின் எண்ணச் செறிவு மிக்க குறிப்பு ஒன்றை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடை கிறோம். அவருடைய நோக்கையும் போக்கையும், எழுத்து வாழ்விலே அவருக்குள்ள நேர்மைத் துணிவையும் உணர்ந்து கொள்ள இந்தக் குறிப்பு ஒன்றே போதுமானது. 

யாழ்ப்பாணம் ஒரு தனி உலகம். அந்த மண்ணிற்கே உரித் தான தனித்துவக் கலாச்சாரப் போக்கும் அதற்குண்டு. உணர்ச்சிகளின் சொரூபங்களையும், எண்ணங்களின் முகங்களையும் வெளியே காட்டாது, ஏதோ மனோ சிக்கலிலும் மன அவசத் திலும் அவற்றைத் திரையிட்டு வாழும் பண்பு அக் கலாச்சாரத் திற்கு மட்டுமே உண்டு. அந்தத் திரை தான் தென்னோலை வேலி கள், Cadjan Curtain. இந்த வேலியால், கறையான் பிடித்து உக்கிப்போன' செத்தையாக இருந்தாலும், தனது அம்மண வாழ்க்கையை மறைத்து விடலாமென்பதில் யாழ்ப்பாணத்திற்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. அந்த நம்பிக்கையும், அது எழுந்து நிற்கும் 'கதிகால்'களும் யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் பிரிக்க இயலாத அம்சங்களாகும். 

கிடுகு வேலி 

ஆமைக்கு ஓடு எப்படியோ, அப்படித்தான் யாழ்ப்பாணத் திற்கு வேலி. வேலியே வேலிகள். இவ்வேலிகளும் பல வகைத்து. வேலிகள் கட்டி வாழும் மனோபாவத்தின் உருவமாகத்தான் கிடுகு வேலி அமைந்துள்ளது. பழைமைக்கு இசைந்தொழுகுவ தாகக் காட்டிக்கொள்ளுதல்; தடிப்பான சாதி ஆசாரத்தைப் பேணுதல், 'மணச் சடங்கு மூன்று நாட்கள் நடைபெறும்' 

என்று அழைப்பிதழ் விடுதல் ; மரக்கறி மனோபாவத்திற் பிரீதியென நடித்தல் ; உறவு முறைகளை இறுக்கி வைத்தல் ;-- எல்லாமே தாழ்வுச் சிக்கலில் அழுந்தும் ஒரு சமூகந் தன்னைப் பாதுகாப்பதற்கு ஏற்படுத்திய வேலிகளே. பணம் என்ற ஜடத்தையே உயிர்ப் பொருளாக்கி, அதைத் தெய்வ பீடத்திலமர்த்தி, அதையே பூஜை செய்து கொண்டு அதைப் பூஜை செய்யாதது போலக் காட்டிக்கொள்வது கூட, அது பச்சையான மத்திய தர வகுப்பினைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும் - அதுவும் யாழ்ப் பாணக் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கவே உதவுகின்றது. உணர்ச்சிகளை மறைத்தும் அமுக்கியும், காப்புறுதியை உறுதிப்படுத்துஞ் சடங்குகளாகவே யாழ்ப்பாணக் கல்யாணங்கள் நிறைவேறுகின்றன. காணி பூமி - நகை நட்டு சேனை சனம்- குலம் கோத்திரம் - எல்லாமே அவர்களுக்கு 'இன்சூரன்ஸ் பொலிஸி'களே. அத்தகைய வாழ்க்கை முறைகளும், வேலிகளும். 

பூச்சு வேடம் இந்த வேலிகளை எஃகுலித்து, வீதிக்கு வரும் விவகாரங்கள் ஈழத்தின் சுவை மிகு வழக்குகளாகப் பிரபல்யமடைகின்றன. இவற்றைப் பிரபல்யப்படுத்தி, பழியைச் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது சுமத்தி, இவை விதிவிலக்குகளே என்று பறை சாற்றுவதும் யாழ்ப்பாணக் கலாசாரத்தின் ஓரம்சமாகும். யாழ்ப்பாணம் இறுக்கமான கட்டுப்பாடான ஒழுக்க நெறி களுக்கு இசைந்தொழுகிக் கற்புத்தனத்தைக் காப்பாற்றுகின்றது' எனப் பிறரை ஏமாற்ற இஃது உதவுகின்றது. பிறரை ஏமாற்றும் அதே நேரத்தில், அவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள். இந்தப் போக்கும் யாழ்ப்பாணக் கலாசாரத்திற்கு இயல்பானதாகும். இந்தப் போக்கும்ஞ் சேராமல் யாழ்ப்பாணக் கலாசாரம் பூரண மடைவதில்லை. இவையெல்லாம் யாழ்ப்பாணக் கலாசாரத்தின் பூச்சு வேலைகளே, சைவனொருவன் தன்னை அவ்வாறு காட்டிக்கொள்ள நெற்றியிலே தாராளமாக விபூதிப்பூச்சை அப்பிக் கொள்வதைப் போல! சைவர்கள் புனைந்து கொள்ளும் வேடமே விபூதிப் பூச்சு. அந்த விபூதிப் பூச்சினால் சைவத்தின் உயிர் மூச்சினை உணர்த்த முடியாது. ஆனால், இந்த வெளிப்பூச்சையே யாழ்ப்பாணக் கலாசாரம் என்று நம்பி ஏமாறுவதும் ஏமாற்றுவதும் யாழ்ப்பாணக் கலாசாரத்திற்கு இன்றியமையாத பண்பாகத் தேவைப்படுகின்றது. 

நேர்மை உழவன் உண்மையில், இந்தப் பூச்சு வேடங்களைக் கலைத்து, வேலித் திரைகளை அகற்றி, ஆழமான பார்வையை ஊடறுத்துச் செலுத் தினாற்றான் யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் மூல விக்கிரகத்தை, அல்லது உயிர் மூச்சினை நம்மால் தரிசிக்க முடியும். அவ்வாறு தரிசிப்பதற்கு நமக்குத் துணிவு வேண்டும்; தெளிவு வேண்டும்; யாழ்ப்பாணக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்து வாழ்ந்து, அதனின்றும் தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒரு துறவறப் பக்குவமும் வேண்டும். இவை மூன்றும் அமையப்பெற்று, பேனாவை நேர்மையாக உழத்தெரிந்த பெற்றியனே உண்மை யான-வேடம் கலைக்கப்பட்ட சுயம்புவான யாழ்ப்பாணத்தைத் தரிசிக்கிறான். 

இடதுசாரி இயக்கம் புரட்சி ஓங்குக' என்ற சர்வதேசக் கோஷம் ஒன் றுடன் யாழ்ப்பாணத்திற்கு இடது சாரி இயக்கம் வந்து சேர்ந்தது. அதன் இலக்கியக் கிளையாக முற்போக்கு இலக்கிய இயக்கந் தோன்றிற்று. இந்த இயக்கம் முற்போக்கு இலக்கியம்-, தேசிய இலக்கியம் - மண்வாசனை இலக்கியம் - என்ற சில கோஷங்களை இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கைகளாக அறிமுகப் படுத்தியது. இக்கோஷங்களை எழுப்பியவர்களால், இக்கோஷங் களை விளக்கக் கூடிய திருட்டாந்தங்களாக அமையவல்ல இலக் கியங்களைப் படைக்க முடியவில்லை, இதன் கோஷங்களின் தாற் பரியங்களை அதை எழுப்பியவர்களாலேயே உய்த்துணர முடிய வில்லையென்பது தான் இந்த இயலாமைக்குக் காரணம். முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இலக்கியப் பயிற்சி குறைந்தவர்களாகவும், தனித்துவப் பார்வை இல்லாதவர்களாக வும் இயக்கத்தின் பிரசார பலத்திலே சுயமனித முன்னேற்றங் காணவேண்டுமென்ற அவாவுடையவர்களாகவும் இருந்தமை மட்டுமே இக்கோஷங்களின் தோல்விக்குக் காரணங்களல்ல. இவை தோல்வியைக் கடுகதியிற் கொண்டுவர உதவின. ஆனால், இலக்கிய இயக்கத்திற்குக் குருபீடமாக அமைந்த அரசியல் இயக்கமே யாழ்ப்பாணக் கலாசாரத்தின் தனித்துவத்திற்குள் அமுங்கிவிட்டது. அப்படி அமுக்கும் வலிமை யாழ்ப்பாணக் கலாசாரத்திற்கு உண்டு இதன் காரணமாகத்தான் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த உயர் சாதி இந்துக்களின் தலைமை பீடமே இடதுசாரி இயக்கத்தை வழிநடத்த வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சாதிக் கட்டுப்பாடுகளின் இறுக்கம் வர்க்க முரண்பாடுகளுக்குத் தவறான விளக்கங்கொடுக்கத் தூண்டியது. சக்கிலியனான ஸ்டாலினை ருஷியப் பெருமக்கள் ஒரு வர்க்கத்தின் பெருந்தலைவனாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் இதனைக் கற்பனை செய்து பார்க்கக்கூட அனுமதிக்கமாட்டாது! எனவேதான், சிருஷ்டி இலக்கியத்தில் ஓரளவு பயிற்சியுள்ளவர்களும், சாதித்தாழ்வின் சிக்கலுறுத்த, சிருஷ்டி இலக்கியப் பயிற்சி அற்றவர்களைச் சாதி மேண்மை காரணமாக இலக்கிய இயக்கத்தின் தலைமைப் பீடத்திற்கு உயர்த்த வேண்டியிருந்தது. 

முரண்பாடு 

தலைமைப்பீடம் யாழ்ப்பாணத்து வெளிடே கலாசாரத்தைப் பேணவிழைந்த பொழுது, மற்றவர்கள் அப்போக்கிற்கு இசைவாக எழுதினர். இந்த முரண்பாடு முற்போக்கு இலக்கியகாரரின் எழுத்துக்களில் மிகமிக அம்மணமாகத் தெரிகிறது. இவர்களுடைய சிருஷ்டிகள், தலைமைப்பீடம் இவர்களுக்கு விளக்க முடியாத கோஷங்களை விளங்கிக் கொண்டதான 'பாவலா' வையும், தங்களுடைய சாதியே தொழிலாளி வர்க்கமாக நிலை நாட்டிவிட வேண்டுமென்ற ‘றாங்கி யையுங் கொண்டு போலியாகி விடுகின்றன. மேலும், இலக்கியப் பயிற்சி அதிகமில்லாத இவர்கள் பிராந்தியத்திற் பயிலப்படும் சில சொற்களை மட்டும் பெயர்த்தெடுத்து ஒட்டு வேலை செய்து விட்டால், தேசீய இலக்கியமும் - மண்வாசனை இலக்கியமுந் தோன்றிவிடுமெனத் திரிகரண சுத்தியாகவே நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை இவர்களுடைய படைப்புக்கள் போலியானவை என்பதை நிறுவவே உதவுகின்றது. 

மீண்டும் வேலி இலக்கியத்தின் தொனிப் பொருளே ஒரு பிராந்தியத்தின் உயிரைப் பிரதிபலிக்க வல்லது. அந்த உயிர் தனக்கு இசைவான உருவந்தாங்கி இலக்கியமாக உயர்கின்றது. இதைக் கூட உணராத தலைமைப்பீடம், இந்த போலிகளுக்கும் இலக்கிய அந்தஸ்து உண்டு என வாதாடி, தன்னைப் படித்த வர்க்கமாக உயர்த்திக் கொண்டது. மீண்டும் யாழ்ப்பாணக் கலாசாரத்தின் பிரிக்க இயலாத வேலி நுழைந்து கொண்டது சிருஷ்டி இலக்கிய ஆற்றலற்ற தலைவர்களுக்கும், எழுத்துப்பயிற்சியில் ஈடுபட்ட பாமர எழுத்தாளர்களுக்கும் இடையில் எழுந்த வேலி. வர்க்க போதத்தையூட்டி. சாதிகளை ஒழிக்க வந்த இயக்கம் புதிய சாதி களைத் தோற்றுவித்துத் தோற்றது. 

- யாழ்ப்பாணக் கதைகள்.

யாழ்ப்பாணமும் தொல்லியலும் - வி. சிவசாமி (வரலாற்று விரிவுரையாளர்)

48 வருடங்களுக்கு முன்னர் (1973 - நவம்பர்) கண்டியிலிருந்து வெளியான ஊற்று என்கிற ஆய்வுச் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டிருந்த கட்டுரை இது. தொல்லியல் சார் சர்ச்சைகள் இன்று எரியும் பிரச்சினையாக ஆகியிருக்கும் இந்த நேரத்தில் இக்கட்டுரை மறுவாசிப்புக்காக மீண்டும் இங்கே பகிர்கிறோம். இக்கட்டுரை வெளியாகி அடுத்த ஆண்டு (1974 மே) தமிழகத்தில் இருந்து அன்று வெளியான "கொங்கு" என்கிற சஞ்சிகையில்  மறு பிரசுரம் செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

தொல்பொருளியல் எனில், பழையகால மனிதன் பயன்படுத் திய மண், மரம். கல், உலோகம் முதலியவற்றினாலான கருவிகள், உபகரணங்கள். விளையாட்டுப் பொருட்கள், வழிப்பட்ட கோயில் கள் சிலைகள், பிறசிற்பங்கள், தீட்டிய ஓவியங்கள், பொறித்துள்ள சாசனங்கள் பயன்படுத்திய நாணயங்கள், இருப்பிடங்கள், முதலி யனவும், இறந்த மனிதனின் எலும்புகள் ஆகியனவும், பற்றிய திட்டவட்டமான அறிவு எனலாம். 

இன்றைக்குச் சில நூற்றாண்டுகளுக்குமுன் தொல்பொருளி யல் என்றால் பழைய கட்டிடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், முதலி யனவற்றைச் சேகரிப்பதும், அவைபற்றிய அறிவும் எனக்கருதப் பட்டது. ஆனால், இன்றோ நிலை வேறு. முழு மனிதனைப் பற்றிய ஞானமே தொல்பொருளியலின் பிரதான நோக்கம் என அறிஞர் கருதுவர். இக்கருத்து மேற்குறிப்பிட்ட வரைவிலக் கணத்திலே காணப்படுகின்றது. 

மனிதவரலாற்றினை, குறிப்பாக எழுத்துப் பயன்படுத்து வதற்கு முற்பட்ட வரலாற்றினை அறிவதற்கான வரலாற்று மூலங் களிலே தொல்பொருளியல் மிக முக்கியமானதாகும் எழுத்துப் பயன்படுத்தப்பட்ட கால வரலாற்றின் பல கூறுகளையும் அறி தற்கு இஃது ஓர் உறு துணையாக உள்ளது. யாழ்ப்பாண வரலாற் றினைப் பொறுத்த அளவிலே, கி. பி. 13 ஆம் நூற்றாண்டில், தனிப் பட்ட சுதந்திர அரசு இங்கு உதயமாகிய பின்னரே ஒழுங்கான வரலாற்று மரபு உருவாகி நிலவிற்று. இம்மரபு கைலாய மலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை முதலிய நூல்களிலே பிரதி பலிக்கின்றது. இதே வகையினைச் சேர்ந்த இராசமுறை பரராச சேகரன் உலா ஆகிய இரு நூல்களும் இதுவரை கிடைத்தில. இனிமேலாவது கிடைக்குமா? 


ஈழத்தில் வளர்ந்த பௌத்த சிங்கள வரலாற்று மரபைப்பின் பற்றி எழுதப்பட்ட தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் முதலிய பாளி நூல்கள், அநுராதபுரம், பொலநறுவை முதலிய இடங்களி லிருந்து ஆட்சி செய்த சிங்கள மன்னர், காலத்திற்குக்காலம் யாழ்ப்பாணத்திற் கொண்டிருந்த தொடர்புகளை இடையிடையே குறிப்பிடுவன. எனவே கி. பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய யாழ்ப்பாண வரலாற்றினை அறிவதற்கு தொல்பொருளியலின் முக்கியத்துவம் வெள்ளிடைமலை. ஆகவே, யாழ்ப்பாணத்தி லுள்ள தொல்பொருட்கள் யாவை? என்பது பற்றிச் சற்றுக் குறிப்பிடலாம். 

இலங்கையின் பிறபாகங்களிற் போலவே, யாழ்ப்பாணத்தி லும் நாகரிகமுள்ள மக்கள் கிறித்து ஆண்டிற்குச் சற்று முந்திய சில நூற்றாண்டுகள் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். இம்மனி தர்-எமது முன்னோர் விட்டுச் சென்றுள்ள நிலையான பொருட் களிற் பல போத்துக்கேயர், ஒல்லாந்தர் முதலியோரின் சுதேசக் கலை அழிவுக் கொள்கையால் அழிந்து விட்டன; எஞ்சியவற்றிலும் சில எம்மவரின் தேசப்பற்றற்ற கொள்கையால் முற்றாகவோ, பகுதி பகுதியாகவோ அழிந்து விட்டன; அழிந்து கொண்டிருக் கின்றன; மூடி மறைக்கப்படுகின்றன. ஒரு சிலவே. சுதேச நூதனசாலைகளிலும், தனிப்பட்டவா சிலரின் சேகரிப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. 


இங்குள்ள தொல் பொருட்களிலே, சில கட்டிட அழிபாடுகள் சிலைகள், மரவேலைப்பாடுகள், நாணயங்கள், சில சாசனங்கள், குறிப்பாக மட்பாண்ட ஓடுகள், பிற்காலக் கோட்டைகள் ஆகியன வற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள்ளே, யாழ்ப்பாணம் கோட்டை, ஊர்க்காவற்றுறைக்கு அண்மையிலுள்ள ஹமென் ஹீல் கோட்டை, கந்தரோடையிலுள்ள ஒரு சில பௌத்த சின்னங்கள் முதலியனவற்றைத் தவிர்த்துப் பிறவிடங்களிலுள்ளவை, முறைப் படி பேணப்படுகின்றனவா? மேற்குறிப்பிட்டவையும் அரசாங் தொடர்பாலே தான் பேணப்படுகின்றன. ஒரு சில சாசனங்கள் அவற்றில் ஈடுபாடுள்ள சிலரின் அரும்பெரும் முயற்சிகளால் யாழ்ப்பாண நூதனசாலையிலே, சிதைந்த நிலையிலாவது வைக்கப் பட்டுள்ளன. வேறுசில அவ்வவ்வடங்களிலேயே விடப்பட் டுள்ளன. அவற்றின் கதி என்னவாகுமோ? 

யாழ்ப்பாணத்தினைப் பொறுத்த மட்டில், ஈழத்தின் வேறு பல இடங்களிலும் பார்க்கத் தொல்பொருட்கள் தற்போது குறை வாகக் காணப்படினும், இங்கு உள்ளவற்றினைத் தேடுவதிலும் தேடிப் பாதுகாப்பதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. பொது மக்கள் மத்தியிலே, இவற்றின் முக்கியத்துவம், இன்றியமை யாமை, அருமை பற்றிய அபிப்பிராயம் நன்கு நிலவவில்லை. பலருக்கு, படித்தவர் மத்தியிற்கூட இவைபற்றிய அறிவோ மிகக் குறைவு. இவற்றின் முக்கியத்துவத்தினை அறிந்தோர்கூட, இவற் றைப் புறக்கணித்தற்குச் சிறந்த உதாரணம் நல்லூர். இன்று நல்லூரைப் பார்ப்பவர் எவரும் அதனை மத்தியகால ஈழத்தமிழ் மன்னரின் தலைநகர் என்று கூறுவாரா? எஞ்சியிருக்கும் யமுனாரி யின் தோற்றமே பயங்கரமாயுள்ளது. இத்தகைய நிலை எங்க ளுடைய நாட்டுப் பற்றற்ற வெட்க நிலையைத்தான் காட்டுகின்றதா? எமக்கு வரலாற்றுச் சிந்தனையிலுள்ள பராமுகத்தினைக் காட்டுகிறதா? 

இன்றைய யாழ்ப்பாணத்திலே. கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்களிலேதான் தொல்பொருட்கள் ஓரளவாவது பரவ லாகக் கிடைக்கின்றன. நாணயங்கள், மணிவகைகள். மட் பாண்ட ஓடுகள், சில கட்டிட அழிபாடுகள் முதலியன குறிப்பிடற் பாலன. வல்லிபுரத்திலே கிறித்துவுக்கு முற்பட்டகாலத் தமிழர் நாகரிகத்தினைப் பிரதிபலிக்கும் தாழியொன்றும் கிடைத்துள்ளது. ஆனால், இத்தாழிபற்றிய கருத்து திட்டவட்டமான அகழ் வாராய்ச்சி நடைபெற்று நிரூபிக்கும் வரை ஊகமேயாம். ஆனால் வல்லிபுரம் கந்தரோடை ஆகிய இடங்களில் இன்று தொல்பொருட் கள், குறிப்பாகப் பழைய நாணய வியாபாரம் நடைபெறுகின் றது. குறிப்பாக, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளும், அறி ஞர் சிலரும் அதிக பணம் கொடுத்து எமது தொல்கலைச் செல்வங் களைப் பெற்றுச் செல்லுகின்றனர். எம் நாட்டவர் இவற்றைப் பேணிப் பாதுகாத்துத் தமது முன்னோரை நினைவுகூர முடியாதா? அவர்களைப் பற்றிப் பெருமைப் படலாமே. நல்லூர் அல்லது மாவிட்டபுரத்தில் இருந்த புகழ்பெற்ற முருகன் ஆலயத்திலே பேணப்பட்டுவந்த செப்புப்பட்டயம் எங்கே? எவரின் பண ஆசைக்காகவோ, பிற காரணத்திற்காகவோ உருக்கி அழிக்கப் பட்டது? இன்னும் சில இடங்களிற்கிடைக்கும் செம்பு, பொன், வெள்ளி நாணயங்களும் இதேகதி அடைகின்றன. இதனைத் தடுக்க முடியாதா? 

கந்தரோடை

சில இடங்களிலே பௌத்த அழிபாடுகள் வந்தவுடன் சிலர் நியாயமாகவோ, நியாயமின்றியோ அச்சமடைகின்றனர். அவை பற்றிக் கூறமறுக்கின் றனர். எமது மூதாதையரில் ஒரு சாரார் பௌத்தராக விளங்கினர் என்பது வரலாறு கண்ட உண்மை. இப்பொழுது எம்மவர் மத்தியிலே சைவர் , வைணவர் மட்டுமன்றி கிறித்தவர், இசுலாமியர், பௌத்தர்களும் வாழுகின்றார் களே. தென்னிலங்கையிலே, இந்து சமயம், தமிழர் சார்பான தொல்பொருட்கள் வரும்போது பௌத்த சிங்கள மக்களும், தமிழரைப் போன்றே பாராமுகமாயுள்ளனர். இத்தகைய நிலை மாறிப் பரஸ்பர நல்லெண்ணமும், ஒற்றுமையும் ஏற்பட வேண் டும். 

யாழ்ப்பாணத்திலே, மேலும் பொன்னாலை, சம்பல் துறை, சுழிபுரம், பனாளை, சுன்னாகம், தெல்லிப்பழை, கீரிமலை, கோப்பாய் கட்டைவேலி, நாகர்கோயில், லைடன் தீவு, நெடுந்தீவு முதலிய இடங்களிலே. தொல்பொருட் சின்னங்கள் பல்வேறு வகையில் உள்ளன. இவற்றை முறைப்படி பாதுகாக்க வேண்டும்; ஆய வேண்டும். யாழ்ப்பாணத்தின் பல விடங்களிலும் பரவலாகக் கிடைக்கும் ஒரேயொரு தொல்பொருட் சின்னம் மட்பாண்ட ஓடு களாகும். இவை முறைப்படி ஆயப்படல் வேண்டும். 

கந்தரோடை தவிர்த்த வேறு எவ்விடங்களிலும் முறையான ஆய்வுகள் இன்று வரை நடைபெற்றில. கந்தரோடையிலும், வேறு சில இடங்களிலும் திரு போல் இ.பீரிஸ் 1916-17 லேயே மேலாய்வுகள் நடத்திக் குறிப்பிடத்தக்க பெளத்த சின்னங்கள், நாணயங்கள் முதலியன சேகரித்தார்; இவைபற்றி எழுதினார். பின்னர் 1966லே தொல்பொருளியல் இலாகா அகழ்வாராய்ச்சி ஒன்று நடத்திற்று. இவ் ஆய்வு நடத்திய பகுதியிலே கண்டு பிடிக்கப்பட்ட ஸ்தூபிகளின் அடிப்பகுதிகள் இப்போது திருத் தப்பட்டு மேற்பகுதிகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் இத் தகைய போக்கு அவற்றின் பழமையினை எந்த அளவிற்கு எடுத் துக்காட்டுமோ தெரியாது. கடைசியாக 1970-ஆம் ஆண்டு பென்சில்வேனியாப் பல்கலைக்கழக நூதன சாலையினைச் சேர்ந்த திரு புறோன் சன், கலாநிதி விமலா பெக்லி ஆகியோர் நடத்திய 

அகழ்வாராய்ச்சியே மிகக் குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக முழுமையான அகழ்வாய்வு சில வளவுகளிலாவது நடைபெற்றது. இவர்களுடைய கண்டுபிடிப்புகளின்படி வட இலங்கையிலே ஆரிய நாகரிகம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலே பரவுமுன் ஆரியச் சார்பற்ற நாகரிகம் நிலவிற்று. இந்நாகரிகத்திற்கும், சமகாலத் தமிழகத்திலுள்ள அரிக்கமேடு போன்ற இடங்களிலே நிலவிய நாகரிகத்திற்குமிடையிலே மிக நெருங்கிய ஒருமைப்பாடு காணப் படுகிறது. இவ் ஆய்வாளர்களின் விபரங்களடங்கிய அறிக்கை வெளிவரும். அப்போது மிகப் பழையகால யாழ்ப்பாணத்தின் நாகரிகம் மற்ற விபரங்கள் பல தெளிவாகும். 

மேற்குறிப்பிட்ட சூழ்நிலையிலேதான், யாழ்ப்பாணத் தொல் பொருளியற் கழகம் 1971ல் ஆரம்பமாயிற்று. ஆண்டுதோறும் தொல்பொருளியல் பற்றிய விரிவுரைகள், குறிப்பாகச் சாசன வியல் விரிவுரைகள் நடத்தியும், வேரப்பிட்டி (காரைநகரில்) நல்லூர், கந்தரோடை, கட்டைவேலி, வல்லிபுரம் போன்ற இடங் களிலே சில மேலாய்வுகளும் செய்து வருகின்றது ; இவற்றுடன் இவைபற்றிக் கட்டுரைகளும், செய்திகளும், பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் வெளியிட்டு வருகிறது. பொது மக்கள் மத்தியிலே தொல்பொருள் பற்றிய கவனம் ஓரளவாவது ஏற்படவேண்டும்; முக்கியமான கிராமங்கள், நகரங்கள் தோறும் அவ்வப் பகுதிச் சின்னங்கள் சிலவாவது ஓரிடத்திலே பேணப்பட வேண்டும். அறிவியலின் பல்வேறு துறைகளிலும் மேம்பட்டு விளங்கும் யாழ்ப்பாண மக்கள் இத்துறையிலும் சற்று கவனத்தைத் திருப்புவார்களாக! 

வி. சிவசாமி B.A. Hons. (Lond.) MA. (Cey) (இணைச் செயலாளர், யாழ், தொல்லியற் கழகம்) 

வரலாற்று விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை

நன்றி - ஊற்று - 1973 - நவம்பர்

நன்றி - நூலகம்

ஐ.நா.வில் சிறிலங்காவுக்கே வெற்றி என்கிறார் அமைச்சர்! - என்.சரவணன் (இணைப்புடன்)


ஐ.நா.வில் சிறிலங்காவுக்கே வெற்றி என்கிறார் அமைச்சர்!

ஐ.நாவில் மீண்டும் தாம் வென்றிருப்பதாக சிறிலங்கா தெரிவிக்கிறது.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அதற்கு கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள்...

பிரித்தானியா கொண்டு வந்த யோசனை என்று இந்த பிரேரரனையை சிறுமைப்படுத்தல். அதன் மூலம் இது பல சபையின் தீர்மானமல்ல என்றும், பல நாடுகளின் தீர்மானமில்லை என்று காட்ட முயற்சித்தல்.

14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது உண்மை. ஆனால் அதுவும் தமக்கு சாதகமாகத் தான் அந்த நாடுகள் நடந்துகொண்டதாக அவர் அறிவித்திருக்கிறார். "இந்த பரிந்துரையை ஆதரிப்பதை தவிர்த்திருக்கிறார்கள் என்கிறார்.  தாம் வாக்களிப்பதை தவிர்ப்பதாக அந்த நாடுகள் அறிவித்ததாக குரிப்பிடுகிறார். அப்படி எதுவும் அங்கு அறிவித்து தவிர்ப்பதில்லை. இயல்பாக ஓரங்கட்டினார்கள் என்று தான் கூற வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அந்த 14 நாடுகளும் பிரேரணையை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவுமில்லை என்று தான் பொதுவில் எடுத்துக்கொள்வார்களேயொழிய ஒன்றை ஏதோ ஒன்றை சார்ந்திருந்தார்கள் என்று எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் விழுந்தும் மேசையில் மண் படவில்லை என்கிற தொணியில் அவர் 

44 நாடுகளில் 21 வாக்குகள் தான் ஆதரவளித்துள்ளன 25 நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த இந்த ஏகாதிபத்தியவாதிகளின் தீர்மானத்துக்கு ஆதரவாக வென்றெடுக்க முடியவில்லையாம். பெரும்பான்மை நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவில்லையாம். 47 இல் 25  நாடுகள் அதாவது பெரும்பான்மை நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திடவில்லையாம்.

இவ்வளவு காலம் இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியா, ஜப்பான் ஆகியவையும் இலங்கைக்கு ஆதரவளிக்கவிலையே என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது "அனால் அவர்கள் பிரித்தானிய தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவில்லையே! அப்படிப் பாருங்கள் என்கிறார் அமைச்சர்.

அமைச்சர் இந்தியா ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் நன்றி தெரிவித்து அவரின் ட்விட்டரில் பகிர்ந்த செய்தி


இது இலங்கையின் இராஜதந்திர தந்திர முயற்சிகளுக்கு கிடைத்த தோல்வி என்பதை மறைக்க அத்தனை முயற்சிஎடுக்கிறார் அமைச்சர். இதற்கு பொறுப்பு சொல்லவேண்டிய அமைச்சு என்கிற வகையில் வெளியிறவுத்துறை அமைச்சும், அதன் அமைச்சராக தினேஷ் குணவர்த்தன அப்படியே தலைகீழாக இதனை தமது வெற்றி என சிங்கள மக்களின் காதுகளில் பூ சுற்ற முயற்சிக்கிறார்.

சிங்களப் பேரினவாத அரசு இதை இரண்டு வகையில் அணுக முடியும். சிங்கள பெரும்பான்மை மக்களிடம் தமக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள் என்று கூறி தமது கைமீறிய விடயம் என்று தெரிவித்து மக்களைக் கொண்டு ஐ.நாவுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடலாம். அல்லது மேலே சொன்னவாறு தமக்கு தான் வெற்றி என்று போலி வாக்களிப்பு சூத்திரத்தின் மூலம்  மக்களை சுயகளிப்பில் வைத்திருக்க முயற்சிக்கலாம். இந்த இரண்டாவது வழியைத் தான் சிறிலங்கா இப்போது கையாள முயற்சிக்கிறது.

அதே வேளை இனி அடுத்ததடுத்த நாட்களில் ஐ.நாவுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகளை சிங்கள மக்களைக் கொண்டு தூண்டிவிடத்தான் செய்யும் அரசாங்கம்.

2009 யுத்தம் முடிந்ததிலிருந்து சர்வதேச ரீதியில் எழுந்த யுத்தக் குற்றச்சாட்டு நெருக்கடிகளை சமாளிப்பதற்காக போலி சமாதானங்களையும், பொய் வாக்குறுதிகளையும் சர்வதேசத்துக்கு வழங்கி நீதியை நீர்த்துப்போகச் செய்து வந்தது சிங்கள அரசு. இந்த ஒத்திவைப்புகள் காலப்போக்கில் மக்கி மறைந்து காணாமல் போய்விடும் அதற்கப்புறம் அவரவர் வேலைகளைப் பார்த்துவிட்டு அந்தந்த நாடுகள் போய்விடும் என்று நம்பியே இருந்தது அரசு. நீதியை வழங்குவதற்குப் பதிலாக இருந்த உரிமைகளை திட்டமிட்டு பறிக்கும் வேளைகளில் மும்முமுரமாக இருந்தது. இம்முறை வாக்களிப்பு தமக்கு சாதகமாக இருக்காது என்பதை ஓரளவு கணித்திருந்த ஸ்ரீ லங்கா ஆரசு பல நாடுகளிடம் இராஜதந்திர தூது சென்று ஆதரவு கேட்டது. ஆனால் சர்வதேச நாடுகள் இலங்கையிந மீது தமது நலன்களை அடைவதற்காக அரசியல் சதுரங்கக் கைகளை நடத்துவதிலேயே குறியாக இருந்தது.

இப்போதும் ஆதரவளித்த, எதிர்த்த நாடுகள் பலவற்றின் வாக்களிப்பு இலங்கையை தமது நிகழ்ச்சிநிரலுக்குள் கையாள்வதற்காக கொடுத்த வாக்குகள் தான்.

மறுபக்கம் இந்தத் தீர்மானம் கூட தமிழ் மக்களின் ஆகக் குறைந்தபட்ச அபிலாசையை உள்ளடக்கிய தீர்மானம் அல்ல என்பதையும் பதிவு செய்ய கடமைபட்டுளோம்.


Sri Lanka UN Resolution 22.03.2021 by SarawananNadarasa on Scribd

நெப்போலியன் இலங்கையை பிரித்தானியாவுக்கு எழுதிக் கொடுத்த கதை - என்.சரவணன்

ஒல்லாந்தருடன் போர் புரிந்து இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள் என்றுதான் நாம் வாய்ப்பாடமாக கற்றிருக்கிறோம். ஆனால் அதில் சிறிது உண்மை தான் இருக்கிறது. அப்படி என்றால் முழுமையான உண்மை என்ன?

ஐரோப்பாவில் முக்கிய நாடுகளுக்கு இடையில் நிகழ்ந்த போர்களால் தற்காலிகமாக இலங்கையை இங்கிலாந்து கையகப்படுத்துவதாகத் தான் அது நிகழ்ந்தது. அது ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தான் நிகழ்ந்தது. அந்த ஒப்பந்தத்துக்குப் பெயர் ஏமியன் உடன்படிக்கை. இலங்கையின் வரலாற்றைப் பற்றி பேசுபவர்கள் அனைவரும் ஏமியன் ஒப்பந்தத்தின் வகிபாகம் குறித்து மிகச் சுருக்கமாக ஓரிரு வரிகளில் கடந்து போயிருப்பதையே கண்டிருக்கிறோம் இக்கட்டுரை அவ்வொப்பந்தத்தின் மூலம் இலங்கையை ஒல்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் எப்படி தமக்குள் கைமாற்றிக்கொண்டார்கள் என்கிற கதையை விளக்கமாக விபரிக்கிறது.

பிரித்தானியர் 1796 இல் ஒல்லாந்தரிடம் இருந்து இலங்கையைக் கைப்பற்றிவிட்டபோதும் இலங்கையை ஒல்லாந்தரிடம் இருந்து “1801 Treaty of Amiens” (அல்லது Treaty cession) என்கிற விட்டுக்கொடுப்பு ஒப்பந்த மொன்றுக்கு ஊடாக தங்களுக்குள் கைமாற்றிக்கொண்டார்கள். 1815 ஒரு சமரசத்துடன் செய்துகொண்ட கண்டிய ஒப்பந்தத்தின் மூலம் முழு இலங்கையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரித்தானிய கிரீடத்துக்கு உட்படுத்தப்பட்ட (Britain’s first crown colony) முதல் நாடாக இலங்கையை 1801 இல் பிரகடனப்படுத்தினார்கள்.

சூரியன் மறையாத நாடு எனுமளவுக்கு உலகில் பல நாடுகளை பிரித்தானியர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதும் அதன் பேணுகை என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டது. இலங்கையை Crown Colony என்று அழைத்ததைப் போல அவர்கள் மேலும் பல நாடுகளை Annexation, Proclamation, Treaty cession, Conquest, Settlement, Convention with, Lease, Purchase என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

1898 இல் வெளியான “The growth of Greater Britain, a sketch of the history of the British colonies and dependencies” என்கிற நூலில் அப்படி வெளியிட்டிருந்த பட்டியலொன்றை தற்செயலாகக் கண்டதையும் இக்கட்டுரையில் பகிர்ந்துள்ளேன். இந்தப் பட்டியலின் படி சில நாடுகளை குத்தகைக்கும், சில நாடுகளை விலைக்கு வாங்கியதையும், அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேற்றம் செய்யப்பட்டதையும் அந்த காலப்பகுதியையும் காணலாம்.

1795 வரை டச்சுக் கம்பனியின் ஆட்சியின் கீழ் இலங்கை பெருவாரியான கரையோரப் பிரதேசங்கள் இருந்தன. அப்போதைய டச்சுக் கொம்பனியின் கீழ் இருந்த ஆட்சிகளை நிர்வகிக்கும் தலைமை இடமாக Batavia இருந்தது. 12 ஒக்டோபர் 1798 தொடக்கம் 1 ஜனவரி 1802 வரை டச்சுக் கொம்பனி – பிரித்தானியா என இரு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது இலங்கை.

அதுபோல இந்த இடைக்காலத்தில் பிரித்தானியரின் அதிகார செல்வாக்கும் கூட இரண்டு சக்திகளின் கீழ் இருந்தது. இதை ஒரு வகையில் இரட்டை ஆட்சிகாலம் என்றும் அழைப்பார்கள். அதாவது இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் ஆட்சியை மேற்கொண்டார்கள்.

பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்திற்கெதிராக 1797ம் ஆண்டு நிகழ்ந்த கலகமே இலங்கையில் இரட்டையாட்சியொன்றை ஏற்படுத்த அடிப்படையான காரணமாகியது. 1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, தேசாதிபதியொருவர் பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். அப்படி இலங்கைக்கு நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி தான் சேர் பிரடரிக் நோர்த்.

அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகத்தையும், இறைவரி நிர்வாகத்தையும் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமே மேற்கொண்டு வந்தது. இதைத் தான் இரட்டை ஆட்சி என்றார்கள். இக்காலப்பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகளும் எழுந்தன.

ஆக டச்சு கிழக்கிந்திய கம்பனி, பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி, பிரித்தானிய அரசு ஆகியவற்றின் கலப்பு ஆட்சி நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது தான் ஏமியன்ஸ் உடன்படிக்கை.

இறுதியாக இருந்த
டச்சு கட்டுப்பாட்டு பிரதேசம்

டச்சுக்காரர்களிடம் இருந்து ஆங்கிலேயர்கள் இலங்கையைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் திருகோணமலைத் துறைமுகத்தையடுத்து 1796 இல் கொழும்பு துறைமுகத்தில் பெரும் சண்டை நிகழ்த்தியிருந்தார்கள். அது தான் அவர்கள் நடத்திய மாபெரும் இறுதிச் சண்டை எனலாம். கொழும்புடனான போர் பற்றிய மூலத் தகவல்களைப் பெறக்கூடிய ஆவணமொன்றைப் பற்றிய விபரங்களை CEYLON -GENERAL DESCRIPTION OF THE ISLAND, HISTORICAL, PHYSICAL, STATISTICAL (1876) என்கிற நூலில் கவனிக்க முடிந்தது. (1)

அதில் கிழக்கிந்திய கம்பனியிடம் இருந்து அதிகாரங்கள் மீளப்பெற்று பிரெடெரிக் நோர்த் ஆளுநராக நியமிக்கபட்டமைக்கான காரணம் குறிப்பிடப்படுகிறது.

அதாவது கிழக்கிந்தியக் கம்பனியினர் அதுவரை வழமையாக வரி வசூலித்து வந்த உள்நாட்டுச் சிங்கள – பௌத்தர்களை நீக்கிவிட்டு முஸ்லிம்களையும், பார்சி இனத்தவர்களையும், இந்திய செட்டிமார்களையும் பயன்படுத்தியதாகவும்; அந்த வரி வசூலிப்பாளர்களின் மூர்க்கத்தனத்தை எதிர்த்து சிங்களவர்கள் கிளர்ச்சி செய்ததாகவும் இந்த நிலைமையை டச்சுக்காரர்கள் ஊக்குவித்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இதை மெட்ராசிலிருந்து ஹோபர்ட் பிரபு கேர்னல் டி மேரோன் என்பவரை அனுப்பி அடக்கிவிட்டு இந்த நிலைமையை விசாரிக்க ஒரு குழுவை அமர்த்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாகத் தான் இலங்கையை மெட்ராஸ் நிர்வாகத்திடமிருந்து தனியாக பிரித்து இலங்கைக்கான முதலாவது கவர்னராக 1798இல் ப்ரெடரிக் நோர்த் நியமிக்கப்பட்டார்.

இனி இங்கே ஏமியன்ஸ் உடன்படிக்கைக்கு தள்ளிய ஐரோப்பிய அரசியல் காரணங்களையும், அதற்கு உந்திய ஐரோப்பாவில் டச்சு நாட்டின் வீழ்ச்சியைப் பற்றியும் விரிவாக அறிதல் முக்கியம்.

டச்சு வீழ்ச்சி – பிரெஞ்சு பின்னடைவு - பிரித்தானிய எழுச்சி

இலங்கையைப் பொறுத்தளவில் போர்த்துக்கேய ஆட்சியை துரத்திவிட்டு பின்னர் இலங்கையின் கரையோரப்பகுதிகளை கைப்பற்றி ஆட்சி புரிந்தவர்களாக ஒல்லாந்தர்களை குறிப்பிடுவோம். ஒல்லாந்தரை டச்சுக்காரர் என்றும் அழைப்போம். நெதர்லாந்து என்றும் அழைப்போம். இலங்கையில் ஒல்லாந்தர் என்றே அதிகம் அழைக்கப்படுகிறது. ஆக “டச்சு”, “ஒல்லாந்து”, “நெதர்லாந்து” என்றெல்லாம் நாம் அழைப்பது ஒன்றைத்தான் என்பதையும் இங்கு கூறிச்செல்வது நல்லது. (2)

இன்று அதன் பெயர் நெதர்லாந்து. கடல் வாணிபத்தில் தலைசிறந்து விளங்கியவர்களே வல்லரசுகளாக திகழ்ந்த காலம் ஒன்று ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகி இருந்தது. அப்படி  17ஆம் நூற்றாண்டில் கடல் வல்லரசாகவும், பொருளாதார வல்லரசாகவும் திகழ்ந்தது தான் அன்றைய டச்சுக் குடியரசு.

1650ஆம் ஆண்டளவில் டச்சுக்காரர்களிடம் 16,000 வணிகக் கப்பல்கள் இருந்தன. ஐரோப்பாவில் ஒரு குட்டி நாடு அது.(3) மொத்தம் 41,543 சதுர கிலோமீட்டர்களை மட்டுமே கொண்ட நாடு. இன்னும் சொல்லப்போனால் இலங்கையின் பரப்பளவை விட சிறிய நாடு. ஆனால் வணிகத்தை விரிவுபடுத்த விளைந்த அவர்களின் நாடுகாண் பயணங்கள் இறுதியில் வலிமை குறைந்த நாடுகளைக் கைப்பற்றி அங்கிருந்து வளங்களை சுரண்டி கொழுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. தாம் கைப்பற்றிய நாடுகளின் அரசியல் தலையீடுகளை செய்ததுடன், ஆட்சிகளை மாற்றியும், கைப்பற்றியும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டனர். கூடவே தமது சமய பரப்புகளையும் செய்தனர். உலகின் முதலாவது தோன்றிய முதலாளித்துவ அம்சமுடைய நாடாக நெதர்லாந்தைக் கூறும் அறிஞர்களும் இருக்கிறார்கள்.


1581–1795 காலப்பகுதியில் தான் அது டச்சுக் குடியரசாக இருந்தது. 1794இல் சிறிய அயல் நாடான இன்றைய பெல்ஜியத்தைக் பிரான்சிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிப்படை கைப்பற்றியது. 1795 இல் அதற்கடுத்த சிறிய நாடான ஒல்லாந்தையும் கைப்பற்றியது. அவ்வாறு டச்சுக் குடியரசைக் (ஒல்லாந்தைக்) கைப்பற்றி பத்தாவிய குடியரசு (Batavian Republic) என்று பெயரை அறிவித்தது.

1806 வரை பத்தவியா குடியரசு பிரெஞ்சுக் குடியரசின் அமைப்பைத் தழுவியதாகத் தான் இருந்தது. 1806 ஆம் ஆண்டு ஒல்லாந்து இராச்சியம் நெப்போலியன் போனபர்ட்டினால் (Napoleon Bonaparte) உருவாக்கப்பட்டு, ஒரு பொம்மை அரசாக நெப்போலியனின் தம்பியான லூயிசு போனபேர்ட்டினால் 1814 ஆம் ஆண்டுவரை ஆளப்பட்டது. இந்த காலப்பகுதியில் தான் நெதர்லாந்தின் முக்கியமான மாகாணமான ஒல்லாந்தின் பெயரால் முழு நாடும் அழைக்கப்பட்டது.

16ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் போர்த்துகேயரின் செல்வாக்குடன் நுழைந்த ஐரோப்பிய காலனித்துவ ஏகாதிபத்தியம் 17ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரின் நுழைவுடன் மேலும் விரிவுற்றதை நாமறிவோம். அதுவே 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியாவும், பிரான்சும் தம் பங்குக்கு தத்தமது ஆதிக்கத்தை விஸ்தரிக்கத் தொடங்கின. போர்த்துகேயரும், ஒல்லாந்தரும் நாடுபிடி சண்டையில் ஈடுபட்டு பலவீனப்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட இந்தியாவில் மொகலாயப் பேரரசும் வீழ்ச்சியுறத் தொடங்கியது. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் ஒரு புதிய வல்லரசின் கைகளின் சிக்குவதற்கான வாய்ப்புகள் திறக்கப்பட்டன. அந்த வாய்ப்புக்காக பிரித்தானியாவும் பிரான்சும் போட்டியிட்டன.

ஒல்லாந்தர் தோற்றார்களா? சமரசமாக ஒதுங்கினார்களா?

நெதர்லாந்து பிரான்ஸ் கைவசம் சென்றதால் நெதர்லாந்தின் காலனித்துவ நாடுகளும் பிரான்சிடம் வீழ்ந்துவிடுமோ என்று பிரித்தானியா பயந்தது. ஏற்கெனவே பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் பகைமையும் யுத்தங்களும் நீண்டவண்ணம் இருந்தன. அதுபோல பிரித்தானியாவும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் தமது காலனித்துவத்தை நிறுவ முற்பட்டுகொண்டிருந்த காலம். அதுபோல காலனித்துவ போட்டியில் பிரான்சும் இறங்கியிருந்தது. குறிப்பாக சொல்லப்போனால் இந்தியாவில் ஏக காலத்தில் ஒல்லாந்தும், பிரான்சும், பிரித்தானியாவும் அங்காங்கு கால் பதித்திருந்தன. ஒல்லாந்து பிரான்சிடம் சிக்கிக்கொண்ட நிலையில் ஒல்லாந்தின் கட்டுபாட்டில் உள்ள ஆசிய நாடுகள் பல பிரான்சின் கைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். அது தமது காலனித்துவ முயற்சிகளுக்கு மாத்திரமல்ல, பிரான்ஸ் மேலும் ஐரோப்பாவில் பலமடைந்து பிரித்தானியாவின் எதிர்காலத்தையும் சிக்கலாகிவிடும் என்று பயந்தது பிரித்தானியா.

இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றுவதற்காக ஒல்லாந்தருடன் பிரித்தானியா அடிக்கடி தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருந்த சமயம் அது.

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னாசியாவில், அதாவது இந்தியாவையும், இலங்கையையும் உள்ளடக்கிய பிராந்தியத்தில், ஒல்லாந்து, பிரித்தானியா, பிரான்சு ஆகிய மூன்று ஐரோப்பிய வல்லரசுகளும் ஏறக்குறையச் சமமான வலுவுடன் காணப்பட்டன. இலங்கையின் கரையோரப் பிரதேசத்தில் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கரையோரத்தில் நாகப்பட்டினம் போன்ற இடங்களிலும் டச்சுக்காரர்கள் பலமாக இருந்தனர். ஆங்கிலேயர் தமிழ்நாட்டின் கரையோரத்திற் சென்னையிலும் (அன்றைய மதராஸ்), மேற்குக் கரையில் பம்பாயிலும் (மும்பாய்), வங்காளக் கரையிற் கல்கத்தாவிலும் (கொல்கத்தா), வேறுசில இடங்களிலும் தங்கள் அதிகார நிலையங்களை அமைத்திருந்தனர். பிரெஞ்சுக்காரர் இந்து சமுத்திரத்தில் மொரிசியஸ் தீவுகளிலும், தமிழ்நாட்டுக் கரையிற் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தனர். இக் காலகட்டத்தில் ஐரோப்பாவில் தோன்றிய அரசியற் பிரச்சினைகளால், ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் ஒருவருக்கொருவர் பகைவராகி விட்டனர். இவர்களுக்கிடையில் சிக்கிய டச்சுக்காரர் பல பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இவற்றின் விளைவுகளை இலங்கையும், இந்தியாவும் எதிர்கொண்டது.

இந்தியாவிலும் பிரெஞ்சுக்காரர் தோல்வியுற்றதன் விளைவாக, பிரித்தானியர் பலமடைந்தார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியர் ஒல்லாந்தரிடமிருந்து இலங்கையைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். ஐரோப்பாவில் ஒல்லாந்தர் அதுவரை காலம் தொடர்ந்தும் முதன்மைச் சக்தியாக இருந்த நிலை முடிவுக்கு வந்தது. ஐரோப்பாவிலும், தூர தேசத்து காலனித்துவ நாடுகளிலும் ஏற்பட்ட நிகழ்வுகளினாலும், அதிக செலவு மிகுந்த ஐரோப்பிய கூலிப்படைகளைக் கொண்ட, பெரிய இராணுவ அமைப்பு ஒன்றை வைத்திருக்கவேண்டிய அவசியம் ஒல்லாந்தருக்கு ஏற்பட்டது.

ஆனால் நிதி ஒழுங்குகள் சீர்குலைந்திருந்ததுடன், டச்சு ஊழியர்களின் நடத்தைகூட சீரழிந்ததாகக் காணப்பட்டது. ஆர்வமும், உற்சாகமுமிக்கவர்களாகவும் ஒருகாலத்தில் இருந்த அவர்களின் நிலையம் தலைகீழாக மாறியிருந்தது. எனவே தான் இலங்கையைத் தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கு பிரித்தானியருக்கு எதிர்ப்பே இருக்கவில்லை. டச்சுகாரர்களை விட பிரித்தானியர் ஒழுங்கு மிக்கவர்களாக இருந்தார்கள் என்பது உணமையே.

பிரித்தானியரின் தாக்குதல்களுக்கு ஓரளவு எதிர்ப்பை டச்சுக்காரர் காட்டியபோதும், திருகோணமலை 1795 ஆகஸ்ற்றிலும், மட்டக்களப்பு செப்ரெம்பரிலும், யாழ்ப்பாணம் சில நாட்களின் பின்னரும் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்தன. பிரித்தானியா 1796ல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் கைப்பற்றியது. குறுகிய காலத்தினுள் மன்னாரையும் தம்வசமாக்கிய பிரித்தானியர் கரையோரமாக முன்னேறினர். வழியில் நீர்கொழும்பைத் தமதாக்கி, கொழும்புக்கு அண்மையிலுள்ள களனி கங்கையை 1798 பெப்ரவரியில் கடந்தனர். அதே ஆண்டு பெப்ரவரி 15 ம் திகதியன்று கொழும்பு வீழ்ச்சியடைந்ததோடு இலங்கையில் டச்சுக்காரரின் ஆட்சி இராணுவ ரீதியில் முடிவுக்கு வந்தது. 

இந்த ஒல்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய மூன்று  ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் நடந்த போராட்டத்தின் விளைவாகவே இலங்கையும், இந்தியாவும் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயராட்சிக்கு உட்பட்டன. இப் போராட்டத்திற் திருகோணமலை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆதிக்கம் பெறவிரும்பிய எந்த வல்லரசுக்கும் திருகோணமலைத் துறைமுகம் மிகவும் அத்தியாவசியமானதாக விளங்கியது. 

இதனால் டச்சுக்காரரும், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் பதினெட்டாம் நூற்றாண்டில் மாறிமாறித் திருகோணமலையைக் கைப்பற்றினர். இதற்காக இலங்கையின் கண்டி மன்னனுடன் நல்லுறவு கொண்டிருப்பதும், இந்த ஐரோப்பிய வல்லரசுகளுக்கு அவசியமானதாக இருந்தது. 

இலங்கையின் கரையோரப் பிரதேசம் டச்சுக் காரருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த போதும் இலங்கையின் மத்திய பகுதியில் கண்டி இராஜ்ஜியம் தமிழ்பேசும் நாயக்க வம்சத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கண்டி மன்னனுடன் நல்லுறவு கொண்டிருப்பதற்காக பிரித்தானியர் பல தடவை மன்னனுக்குத் தூது அனுப்பினர். டச்சுக்காரரும் அவனுடன் உடன்படிக்கை செய்தனர். ஆனால் பின்னர் டச்சுக்காரரை இலங்கையிலிருந்து வெளியேற்ற விரும்பிய கண்டி மன்னன் தன் ஆதரவை பிரித்தானியருக்கு வழங்கினான்.

இந்த நிலையில், ஐரோப்பாவில் பிரான்சுக்கு எதிரான போரில் பிரித்தானியா வெற்றிபெற, இந்தியாவிலும், இலங்கையிலும் பிரித்தானியர் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. பதினெட்டாம் நூற்றாண்டு முடிவடையும் காலகட்டத்தில் ஒல்லாந்தர் இலங்கையில் தாம் ஆண்ட நிலப்பகுதிகளை இழந்தார்கள். அதிலிருந்து பிரித்தானியராட்சி நிலைபெறத் தொடங்கியது. இதன் விளைவாகப் படிப்படியாக இந்திய அரசுகளை வீழ்த்தி பத்தொன்பதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் தங்கள் பேரரசை பிரித்தானியர் முழுமையாக நிறுவினர். ஏமியன் ஒப்பந்தத்தின் மூலம் தான் பாண்டிச்சேரியை பிரான்ஸ் தம் வசம் தொடர்ந்து பேணும் உரிமையையும் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த ஏமியன் உடன்படிக்கையால் தான் பிரித்தானிய நிரந்தரமாக நிலைபெற்றதும், முழு இலங்கை நாடும் பறிபோவதற்கு வித்திடப்பட்டது.

பிரெஞ்சு புரட்சி

பிரெஞ்சு புரட்சி என்றும் புரட்சிகரப் போர் என்றும் தொடர் கிளர்ச்சிகளின் கதம்பமாக இருப்பது தான் பிரெஞ்சுப் புரட்சி.

 1700 களின் பிற்பகுதியில், பல ஐரோப்பிய நாடுகளில் முடியாட்சிகள் பலமாக நீடித்து வந்த காலம். பிரான்சிலும் அத்தகைய ஒரு அரசர் இருந்தார். அவர் மன்னர் லூயிஸ் XVI. 1789 ஆம் ஆண்டின் பிரெஞ்சு புரட்சி அவரது ஆட்சிக்கெதிரான மக்கள் எழுச்சியாகும்.

பிரெஞ்சு புரட்சியின் விளைவாக அந்த நாடு குடியரசாக மாறியது. ஐரோப்பாவில் முடியாட்சிகள் கலக்கமடைந்தன. ஆகஸ்ட் 1792 இல் தான் லூயிஸ் மன்னர் அதிகாரப்பூர்வமாக அரியணையில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அதன்பின்னர் பல ஐரோப்பிய நாடுகள் பிரெஞ்சு புரட்சிகரப் படைகளுக்கு எதிராக போரைப் பிரகடனம் செய்தன.

பிரான்சுக்கு எதிரான முதல் கூட்டணி 1792 இன் ஆரம்பத்தில் உருவானது. ஏப்ரல் 20, 1792இல், முதல் கூட்டணி (War of the First Coalition) போரைத் தொடங்கியது. ஜனவரி 1793 இல் மன்னர் லூயிஸ் XVI கில்லட் என்கிற இயந்திரத்தால் தலை துண்டிக்கப்பட்ட பின்னர் இந்த கூட்டணி மேலும் விரிவடைந்தது. இதில் ஆஸ்திரியா, பிரஷியா, பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், சார்டினியா, ஒல்லாந்து ஆகிய நாடுகள் அடங்கும்.

ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்த பிரான்ஸ், பின்னர் பல சமர்களை வென்றது. இதற்கிடையில், 1794 இல் இன்றைய பெல்ஜியத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 1795 இல், பிரெஞ்சு புரட்சிகர படைகள் ஒல்லாந்தை ஆக்கிரமித்தது.

ஆரம்பத்தில் ஒரு கலப்பு ஆட்சியாக அக்குடியரசு நிர்வகிக்கப்பட்டது. இளவரசன் ஐந்தாம் வில்லியம் (William V, Prince of Orange) அரச தலைவராக ஆனான். 

பிரெஞ்சு புரட்சிகரப் படைகள் ஒல்லாந்து மீது படையெடுத்தபோது, ஒல்லாந்தைச் சேர்ந்த சில பிரிவினர் அப்புரட்சிக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களுடன் இணைந்துகொண்டனர். நிலைமை மோசமடைந்ததைக் கண்ட ஐந்தாம் வில்லியம் 1795 இல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். டச்சு குடியரசு பத்தாவியன் குடியரசு என்று பிரதியீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு பத்தாவியன் புரட்சி (Batavian Revolution) என்று அழைக்கப்படுகிறது.

William V Prince of_Orange
கியூ கடிதங்கள் (Kew Letters)

இளவரசர் ஐந்தாம் வில்லியம் இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் அரண்மனைக்குச் சென்று அங்குள்ள 'டச்சு மாளிகையில்' தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த கியூ மாளிகையில் இருந்தபடி தமது ஒல்லாந்து காலனி நாடுகளின் ஆளுநர்களுக்கு கடிதங்களை எழுதினார். அந்த கடிதத்தின் பிரகாரம் பாதுகாப்புகாக அக் காலனி நாடுகளை பிரித்தானியரிடம் ஒப்படைக்கும்படி அக்கடிதங்களில் எழுதினார். அந்தக் கடிதங்களைத் தான் “கியூ கடிதங்கள்” என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள் எழுதப்பட்ட அந்த மாளிகை இன்றும் மக்கள் பார்வைக்கு டச்சு மாளிகையாக இங்கிலாந்தில் இருக்கிறது.

இந்தக் கட்டளைகளின் மூலம் பிரெஞ்சு புரட்சிப் படைகள் இக்காலனித்துவ நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் என்று அவர் நம்பினார்.

இந்த கடிதங்கள் டச்சு காலனி நாடுகளை அடைய சிறிது காலதாமதம் ஆனது. இந்த இடைக்காலத்தில் ஆங்கிலேயர்களுக்கும் பத்தாவியா குடியரசிற்கும் இடையில் போர் மூண்டுவிட்டது. (உத்தியோகபூர்வமாக போர் அறிவிப்பு இல்லை என்றாலும்) ஒல்லாந்தர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் வலுவான நட்பும் இருக்கவில்லை. அவர்கள் வரலாற்றில் பல முறை தங்களுகிடையில் போரில் ஈடுபட்டுள்ளனர், இறுதியாக அதற்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதாவது 1783 வரை போர் நடந்திருக்கிறது.

லண்டனில் இன்றும் எவரும் சென்று காணக் கூடிய கியூ மாளிகை (Kew Palace)

இதற்கிடையில் கியூ கடிதங்களில் உள்ள குழப்பம் காரணமாக, டச்சு அதிகாரிகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களின் பிரதேசங்கள் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமா அல்லது அவர்களின் படைகள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வைக்கப்பட வேண்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இளவரசர் ஐந்தாம் வில்லியம் இன்னும் ஒல்லாந்தின் ஆட்சியாளரா என்கிற கேள்வியும், சந்தேகமும் கூட அவர்களுக்கு எழுந்தது. அங்கிருந்து ஒரு தகவல் கீழைத்தேச நாடுகளுக்கு வந்து சேருவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. அதற்கு பல நாட்கள் எடுக்கும். சில அதிகாரிகள் ஒல்லாந்தை இப்போது பத்தவியா கலப்பாட்சியே ஆளுவதால் தாம் அந்த அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்குத் தான் கட்டுப்பட்டவர்கள் என்றார்கள்.

இதன் விளைவாக, சில பிரதேசங்களில் டச்சுக்காரர்கள் தங்கள் பிரதேசத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர், ஆனால் மற்ற இடங்களில் சண்டை வெடித்தது. மலாக்கா, அம்போனியா மற்றும் சுமாத்ரா போன்ற இடங்களில் தங்கள் பிரதேசங்களை சண்டையின்றி பிரிட்டனுக்குக் கொடுத்தன. ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒல்லாந்து  அதிகாரிகள் தமது பகுதிகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்.


பல வெற்றிக் களங்களைக் கண்டு பிரான்ஸின் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்ட நெப்போலியனுக்கு பெரும் உறுத்தலாகவும், சினம்கொள்ளச் செய்யும் நாடாகவும் பிரித்தானிரும் அதன் கடற்படையினரும் இருந்தது. அவர்கள் அத்தனை பெரிய பலசாலிகளாக திகழ்ந்தார்கள். தரைப்படை நடத்துவதில் தன்னிகரற்றுத் திகழ்ந்த நெப்போலியனுக்கு, இந்த பிரித்தானிய கடற்படைதான் தண்ணி காட்டியது என்றால் மிகையல்ல. 1801-ம் ஆண்டு பிரிட்டன் மீது படையெடுத்து அந்த நாட்டையே உருத்தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட நெப்போலியன் விரைவிலேயே கள நிலையைப் புரிந்துகொண்ட பின்வாங்கி ஏமியன்ஸ் ஒப்பந்தத்துக்கு உடன்பட்டதை நாம் கண்டோம்.

வெற்றிகளைப் போலவே நெப்போலியன் தனது பேராசையால் பல தோல்விகளையும் கண்ட போது பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி தனது கட்டுபாட்டில் இருந்த அமெரிக்காவின் பெரும்பகுதி நிலங்களை ஏக்கர் ஒன்று 3 செண்டுக்கு விற்றார். பிரித்தானியாவும் இதே காலத்தில் அத்தகைய ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இத்தகைய பின்னணி தான் ஏமியன்ஸ் ஒப்பந்தத்துக்கு அவர்களைத் தள்ளியதற்கு இன்னொரு முக்கிய காரணம்.

ஒல்லாந்தைக் கைப்பற்றிய வேளை நெப்போலியன் தன்னைத்தானே ஒல்லாந்தின் “காவலனாக” ஒல்லாந்து மக்களுக்கு அறிவித்துக்கொண்டார். ஆனால் ஒல்லாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையை இலகுவாக இங்கிலாந்துக்கு தாரைவார்த்தார் என்று விமர்சிக்கப்படுவதுண்டு. இரு பெரும் பலமான நாடுகளின் அதிகாரப் பந்தாட்டத்துக்குள் இலங்கை சிக்கித் தவித்தது என்றே கூறவேண்டும். (4)

Map of The Island of Ceylon Drawn by A. Arrowsmith 1805.

இலங்கைக் கரையோரங்களின் மீது பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு


இலங்கையில் உள்ள ஒல்லாந்து கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றுமாறு பிரித்தானியா; மதராஸில் (சென்னைப் பட்டணம்) இருந்த தமது ஆளுநருக்கு அறிவித்தது. அந்த ஆளுநர் சேர் ஹோபார்ட் (Lord Robert Hobart) இந்தப் பணியை கர்னல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட்டின் (Colonel  James Stuart) படைப்பிரிவிடமும், ரியர் அட்மிரல் பீட்டர் ரேனியரின் (Admiral Peter Rainier) கடற்படையிடமும் ஒப்படைத்தார்.

Admiral Peter Rainier, Colonel  James Stuart, Lord Robert Hobart

ஆகஸ்ட் 1795 இல், திருகோணமலையைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் தங்கள் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினர். அவர்கள் திருகோணமலை கோட்டைக்கு வெளியே இராணுவத்தை இறக்கி கோட்டையைச் சுற்றி வளைக்கத் தொடங்கினர். சில நாட்களில் டச்சு துருப்புக்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் சரணடைய முடிவு செய்தது. இதே 1795 இல் தான் ஒல்லாந்தை (டச்சு) பிரான்ஸ் கைப்பற்றியது. அந்த ஒல்லாந்து பத்தாவியா குடியரசு என்று பெயர் மாற்றப்பட்டு 1806  வரை அந்த ஆட்சி தொடர்ந்தது என்பதை இங்கு குறிப்பாக மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவேண்டும். வேறு வழியில் சொல்வதாயின் பிரித்தானியா 1795 இல் டச்சுக்காரர்களோடு (டச்சு கிழக்கிந்திய கம்பனி) சண்டையிட்டார்கள் என்பதைவிட பிரான்சுக்கு உரிய படைகளோடு சண்டையிட்டார்கள் என்று குறிப்பிட முடியும். திருகோணமலை, கொழும்பு துறைமுகங்களை அவர்கள் பிரான்சிடம் இருந்து தான் கைப்பற்றிக்கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது.

சில நாட்களுக்குப் பிறகு, திருகோணமலை ஊஸ்டன்பர்க் கோட்டை (Ostenburg Fort) சரணடைந்தது. அதன்பின்னர் பின்னர் டச்சு கோட்டைகள் ஒவ்வொன்றாக ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தன.


பிப்ரவரி 1796 இல், ஆங்கிலேயர்கள் கொழும்பைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையைத் தொடங்கினர். அவர்கள் தமது கப்பல்களில் வந்து நீர்கொழும்பில் இருந்து இறங்கி கொழும்பை நோக்கி அணிவகுத்தபோது, டச்சுக்காரர்கள் எதிர்க்கவில்லை. இறுதியில், டச்சு ஆளுநர் ஜோஹான் வான் எங்கல்பீக் (Johan van Angelbeek) ஆங்கிலேயர்களுக்கு தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டார். எங்கல்பீக் தான் இலங்கைக்கான இறுதி டச்சு ஆளுநர். 

ஏமியன் ஒப்பந்தம் (Treaty of Amiens)

இலங்கை 1796இலிருந்து மெட்ராஸ் ஆட்சியின் கீழ் சிறிது காலம் ஆளப்பட்டது. 1798 இல் ஆங்கிலேயர் முதற்தடவையாக இலங்கைக்கான ஆளுனரை நியமித்தனர். அவர் ஃபிரடெரிக் நோர்த். இவ்வாறு, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் பிரிட்டிஷ் முடியும் சேர்ந்து கலப்பாட்சி ஒன்றை இடைக்காலத்தில் ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால் அந்த கூட்டு நீண்ட காலம் நிலைக்கவில்லை. பிரித்தானியாவில் போர்களுக்கான உள்நாட்டுச் செயலாளராக இருந்த ஹென்றி டுண்டா ஸ் (Lord Henry Dundas)  1801இல் கிழக்கிந்திய கம்பனியிடம் இருந்து விடுவித்து நேரடியாக இங்கிலாந்து முடியின் கீழ் ஆட்சியைக் கொண்டுவந்தார். ஆனால் பின்னர் 1802 இல் செய்துகொள்ளப்பட்ட ஏமியன் உடன்படிக்கை இந்த முடிவை மேலும் உறுதிபடுத்தியது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் கிழக்கிந்திய கம்பனியால் நிர்வாகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிவில் உத்தியோகத்தர்கள் அனைவரும் மீண்டும் திருப்பி அனுப்பபட்டார்கள்.(5) 

ஏமியன் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதை புகைப்படக் கருவியற்ற அந்தக் காலத்தில் அதை சித்திரித்து வரையப்பட்ட ஓவியம்

இதற்கிடையில், ஐரோப்பாவில் பிரான்ஸ் விடயத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் ஒன்று 1798 ஆம் ஆண்டு நிகழ்ந்த 'இரண்டாவது கூட்டணிப் போர்'. அதாவது பிரான்ஸ் கூட்டாட்சிக்கு எதிரான இரண்டாவது யுத்தம். மற்றொன்று நெப்போலியன் ஆட்சிக்கு வந்தது.

நெப்போலியன் 1799 இல் பிரான்சின் முதல் தலைவராக (கொன்சல்) ஆனார். ஒரு கட்டத்தில் நெப்போலியன் இங்கிலாந்துடன் ஒரு அமைதி பேச்சுவார்த்தைக்கும் முயற்சி செய்த போதும் அன்றைய பிரித்தானிய பிரதமர் வில்லியம் பீட் அதற்கு உடன்படவில்லை. 

இருப்பினும், 1801 இல் வில்லியம் பீட் பதவி விலகிய பின்னர், புதிய பிரதம மந்திரி ஹென்றி எடிங்டன் (Henry Addington) பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். இதற்கிடையில், டச்சு காலனிகளின் மீதான தமது உரிமைகளைக் கைவிடுவதாக ஐந்தாம் வில்லியம் அறிவிக்கிறார். இதனால் பத்தவியா குடியரசு அந்த காலனி நாடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சட்டப்பூர்வமான அதிகாரத்தைப் பெற்றது.

இந்தச் சூழல் தான் சம்பந்தப்பட்ட பிரதான நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்புகளை திறந்தன. 1801 இன் பிற்பகுதியில், இந்தியாவின் முன்னாள் பிரிட்டிஷ் ஆளுநரான ஜெனரல் சார்லஸ் கொன்வொலிஸ் (Charles Cornwallis) இந்த பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்சின் ஏயன்ஸ் நகரை வந்தடைந்தார். அப்போது பிரான்ஸை நெப்போலியன் போனபார்ட்டின் சகோதரர் ஜோசப் போனபார்ட் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி சார்ல்ஸ் டெலிடிரன்ட் (Charles Maurice de Talleyrand) ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இதற்கிடையில், பத்தவியா குடியரசின் பிரெஞ்சுத் தூதர் ரட்ஜர் யான் ஜான் சிம்மெல்பெனிக் (Rutger Jan Schimmelpenninck) என்பாரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இவர் தான் இந்தியாவின் பிரிட்டிஷ் ஆளுநரான ஜெனரல் சார்லஸ் கொன்வொலிஸ் கார்ன்வாலிஸுடன் இலங்கை உள்ளிட்ட முன்னைய  காலனி நாடுகளைப் பற்றிப் பேசுவதற்காக கலந்துகொண்டவர். இவர்களை விட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நான்காமவர் ஜோசே நிக்கலஸ் டி அசாரா (José Nicolás de Azara). இவர் ஸ்பெயின் அரசர் நான்காம் சார்ல்ஸ் அவர்களை பிரதிநிதித்துவபடுத்தியவர்.

பிரான்சிலுள்ள ஏமியன் நகரில் பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், பதாவியா குடியரசு (நெதர்லாந்து / ஒல்லாந்து / டச்சு எப்படியும் புரிந்துகொள்ளலாம்) நாட்டுப் பிரதிநிதிகள் கூடி ஏமியன் நகரில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதால் அந்த நகரின் பெயரிலேயே ஒப்பந்தம் அழைக்கப்பட்டுவருகிறது.


இந்தப் பேச்சுவார்த்தையில் தான் டச்சு காலனி நாடான இலங்கையையும், ஸ்பெயின் கைப்பற்றியிருந்த டிரினாட் (Trinad) என்கிற நாட்டையும் பிரித்தானியாவுக்கு வழங்கும் தீர்மானம் எடுக்கப்படுகிறது. அதுபோல பதிலுக்கு பிரித்தானியா தரப்பில் டச்சுக்காரர்களிடமிருந்து கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளையும், தென்னாப்பிரிக்க கேப் காலனியையும் பத்தாவியா குடியரசிடமே பிரித்தானியா மீளக் கையளிப்பது என்கிற உடன்பாடும் எட்டப்படுகிறது.

இலங்கையை அவ்வாறு வழங்குவதற்கு பத்தவியா குடியரசு ஒப்புக்கொள்வது தொடர்பான உரையாடல்கள் நிறைய இடம்பெற்றுள்ளன. அந்த உரையாடல்களை அன்றைய பல ஆவணங்களில் காணலாம். இவற்றைப் பற்றி The Annual Register or a view of the History, Politics, and Literature, for the year 1803. – London என்கிற நூலில் விபரங்கள் உண்டு. அதைத் தவிர சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான The Amiens Truce என்கிற நூலும் பல விபரங்களை உள்ளடக்கியது. 

இலங்கையைப் பற்றி ஒப்பந்தத்தில்

1802 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி ஏமியன்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்ஸ், பிரித்தானியா, பத்தாவிய குடியரசு மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கிடையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதில் பிரான்ஸ் தரப்பில் இருந்து நெப்போலியன் சார்பாக அவரின் சகோதரன் ஜோசப் போனபார்ட் கையெழுத்திட்டார். நெப்போலியன் இந்த உடன்படிக்கையை பரிசீலித்து அதற்கு ஒப்புதல் அளித்த பின்னர் அவ்வொப்பந்தத்தில் அனைவரும் கைச்சாத்திட்டார்கள்.

இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 12 அம்சங்கள் உள்ளன. அதில் 3வது, 5வது விடயங்கள் இலங்கைப் பற்றிப் பேசுகிறது.  இந்த ஒப்பந்தத்துக்கு முன்னரே இந்த நாடுகளுக்கு இடையில் உடன்பாடுகள் குறித்த கடிதப் பரிமாற்றங்களும், உரையாடல்களும் நிகழ்ந்திருப்பதை அபோது வெளியான பல்வேறு அறிக்கைகளைக் கொண்ட ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது.


இலங்கை தொடர்பாக காணப்படுகிற சரத்துக்கள் இவை தான்

பிரிவு iii

இலங்கையில் இருக்கும் டச்சுக்காரர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ட்ரினிடாட் தீவு தவிர [மற்றவற்றை] முந்திய போரில் பிரிட்டிஷ் படைகளால் கைப்பற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அல்லது அவர்களுக்குச்  சொந்தமாக இருந்த  குடியேற்றப் பகுதிகளையும் மற்ற உடைமைகளையும்  பிரித்தானியத்  தலைமை பிரெஞ்சு மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு அதாவது பத்தாவியா குடியரசுக்கும் கத்தோலிக்க தலைமைக்கும் திருப்பிக் கொடுகிறது.

பிரிவு v

ஆனால் பத்தாவியா குடியரசு டச்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கு சொந்தமான அதாவது  போருக்கு முன்பு அவர்களுக்கு சொந்தமாக இருந்த இலங்கையில் உள்ள சில  நிலப்பகுதிகள் அனைத்தையும் அவற்றின் கட்டிடங்கள் மற்றும் உடைமைகளுடன் பிரித்தானிய முடியிடம் ஒப்படைப்பதற்கு உத்தரவாதமளிக்கிறது.

இந்த ஏமியன் உடன்படிக்கைக்குப் பின்னர் தான் இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சி உறுதியாக நிறுவப்பட்டது. பிரித்தானியாவின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு (Crown colony) இலங்கை தான்.

இந்த ஒப்பந்தம் ஆங்கிலத்தில் தான் பல்வேறு நூல்களில் காணக்கிடைத்தன. ஆனால் இக்கட்டுரைக்காக மூல ஒப்பந்தத்தின் வடிவத்தைத் தேடினேன். ஆங்கிலத்தில் தேடி எங்கும் கிடைக்கவில்லை. பிரெஞ்சு மொழியில் தேடிய போது அந்த மூலம் பிரதியின் படங்கள் கிடைத்தன. டச்சு, பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிய மொழி நாடுகளுக்கு இடையில் இவை நிகழ்ந்திருந்தாலும் இந்த ஒப்பந்தம் பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் தான் ஆக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அதாவது ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு கொலம்களைக் கொண்டதாகவும் இடதுபுறம் பிரெஞ்சு மொழியிலும் அதன் ஆங்கில சரத்துக்களின் வடிவம் அதன் அருகில் வலது புறமாகவும் கையெழுத்தில் எழுதப்பட்டிருப்பதை காண முடிகிறது. இறுதிப் பக்கத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டவர்களின் கையெழுத்துடன் முத்திரை பதிக்கப்பட்டு முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் நிகழ்ந்து 13 ஆண்டுகளின் பின்னர் முழு இலங்கையும் பறிபோவதற்கு காரணமான கண்டி ஒப்பந்தமும் இதே முறையில் தான் கையெழுத்தில் வலதுபுறம் ஆங்கிலத்திலேயும் அதன் சிங்கள மொழிபெயர்ப்பு அருகாமையில் உள்ள கொலத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பத்தையும் காணலாம். ஆனால் கண்டி ஒப்பந்தத்தில் முத்திரைகள் கிடையாது.

கண்டி ஒப்பந்தத்தில் இடது பக்கம் ஆங்கிலத்திலும் வலது பக்கத்தில் அதன் சிங்கள மொழிபெயர்ப்பையும் கொண்டிருப்பதைக் காணலாம்

ஏமியன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 27ஆம் திகதி நான்கு தரப்பினரும் ஒரு துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிட்டது. ஏனென்றால் அவ் ஒப்பந்தம் ஆங்கில - பிரெஞ்சு மொழிகளில் தான் வரையப்பட்டிருந்தது.  இந்த இரண்டு மொழிகளில் மாத்திரம எழுதப்பட்டதானது அங்கே பாரபட்சமாக கருதப்படாவிட்டாலும் கூட அது ஒரு முன்மாதிரி அணுகுமுறையாக இராது என்பதால் டச்சு - பிரெஞ்சு பிரதிநிதிகள் ஒரு தனி ஒப்பந்தப் பிரதியில் கையெழுத்திட்டனர். குறிப்பாக அதில் பத்தாவியா குடியரசு சில இழப்பீடுகளுக்கு நிதி ரீதியாக பொறுப்பேற்காது என்பதை உறுதிசெய்துகொள்வதற்கானதாக இருந்தது. இந்த பிரேத்தியேக ஒப்பந்தப் பிரிவை அவர்கள் Separate article to the definitive treaty, added thereto March 27, 1802 என்று குறித்துக்கொண்டார்கள். 

மகாவம்சத்தில் இலங்கை

இலங்கையின் வரலாற்றை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துவரும் புனித நூலான மகாவம்சத்தில் இந்த முக்கிய நிலைமாறுகால விடயங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. மகாவம்சத்தின் மூலத் தொகுதியான முதலாவது தொகுதி கி.மு. 483 லிருந்து கி.பி. 301 ஆம் வரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அதுபோல இரண்டாம் தொகுதி  கி.பி  302 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியை பதிவு செய்திருக்கிறது. அதாவது ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயர்களின் கைகளுக்கு ஆட்சி மாறுகின்ற அந்த நிலைமாறுகாலம் இரண்டாவது தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மகாவம்சத்தில் இந்த நிலைமாறுகாலகட்டத்தில் இலங்கை தொடர்பில் உள்நாட்டில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதேயொழிய சம்பந்தப்பட்ட நாடுகளின் கைகளில் கையில் இலங்கை சிக்கித்தவித்தது எப்படி, இலங்கை மக்களுக்கே தெரியாமல் இலங்கையல்லாதவர்கள், இலங்கைக்கு வெளியில் இலங்கையின் தலைவிதியை எப்படி பேரம்பேசி முடித்துக்கொண்டார்கள் என்பது பற்றிய விபரங்கள் அந்த மகாவம்சத்தில் பேசப்படாதது வியப்பான விடயம்.

இந்தியாவின் மாநிலமாக இலங்கை

இந்த ஒப்பந்தம் நிகழாது இருந்திருந்தால் இலங்கை நெப்போலியனின் காலனி நாடாக ஆகியிருக்கும். பிரெஞ்சுக் காலனியாக தொடர்ந்திருக்கும். சிலவேளைகளில் பிற்காலத்தில் பாண்டிச்சேரி போன்ற ஒன்றாகவும் இருந்திருக்கும்.

இன்னொருபுறம் இந்த ஒப்பந்தம் நிகழாது இருந்திருந்தால் ஆங்கிலேயர்கள் இலங்கையை தமது இந்திய காலனியின் ஒரு அங்கமாகக் கூட தொடர்ந்து பேணியிருந்திருக்கக்கூடும். 1796 – 1801 வரையான காலப்பகுதியில் இலங்கையின் மீதான நிர்வாகம் அங்கிருந்து தான் மேற்கொள்ளப்பட்டது.

பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய இரண்டு ஐரோப்பிய வல்லரசுகளுக்கிடையில் தோன்றிய போட்டியில் பிரித்தானியா வெற்றி பெறாது பிரான்ஸ் வெற்றி பெற்றிருந்தால் இன்று ஆசியாவில் ஆங்கில மொழியும், ஆங்கில மொழி கோலோச்சும் நாடுகளின் பெருக்கமும், ஆங்கிலேய பாராளுமன்ற ஆட்சி முறையும் மேலோங்கியிருக்க வாய்ப்பில்லை. அவ்வாறான நிலைமையுற்றமைக்குக் காரணம் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியாவும் பிரான்சும் நாடுபிடி சண்டைகளை நடத்தி, இறுதியில் ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் பிரித்தானியா வெற்றி பெற்றதன் விளைவே என்று கூறலாம்.

இலங்கையை ஐரோப்பியர் கைப்பற்றும்போது “இலங்கை” (Ceylon)என்கிற அடையாளத்தை இலங்கைக்கு வெளியில் இருந்த நாடுகள் தந்தனவே அன்றி இலங்கையர்கள் அப்படி ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்கவில்லை. இலங்கைத் தீவுக்குள் வெவ்வேறு ராஜ்ஜியங்கள் இருந்தன. அந்த ஆட்சிகள் இன ரீதியில் வேறுபட்டிருந்தன. இலங்கையை கைப்பற்றியவர்கள் தமக்கு சாதகமாக அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து ஆட்சி செலுத்தினார்கள். இறுதியாக வெளியேறும்போது அதை முன்னர் இருந்தபடி விட்டுச் செல்லவில்லை. பெரும்பான்மை இனத்தின் பிடியில் சிக்கிய இலங்கையாக அதனை விட்டுவிட்டுச் சென்றார்கள்.

அதே உதாரணத்தை இன்னொரு விதமாகப் பாருங்கள். இந்தியா என்கிற நாடும் காலனித்துவத்தால் உருவாக்கப்பட்ட நாடே. மொழிவாரி மாநிலங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதே இந்தியா என்கிற நாடு. அதே ஆங்கிலேயர்கள் இந்த ஏமியன் உடன்படிக்கை நிகழ்வு சற்று மாறுபட்டிருந்தாலும் இலங்கையையும் அப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஒரு மாநிலமாக அவர்கள் ஆக்கிவிட்டு போகும்போது இலங்கையையும் இந்தியாவாவின் அங்கமாகவே விட்டுவிட்டுச் சென்றிருக்கக் கூடும்.

இந்தியாவை சுற்றி இருந்த அந்தமான், நிகோபார், டியாகோ கார்சியோ, சாகோஸ், மாலைதீவு போன்ற தீவுகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஆண்டார்கள்.  இவற்றில் இந்தியாவுக்கு நெருக்கமான தீவுகளாக இருந்த அந்தமான் நிகோபார் போன்ற தீவுகளை இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் வைத்துக்கொண்டவர்களுக்கு; அதைவிட அருகாமையிலிருந்த நாடான இலங்கையையும் அவர்களால் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக ஆக்குவது ஒன்றும் கடினமான ஒன்றல்ல. அப்படி ஒன்று நிகழாததால் தான் இன்றும் இலங்கை என்கிற நாடு தனி நாடாக எஞ்சியிருக்கிறது என்கிற முடிவுக்கு நாம் வர முடியும். 

சூரியன் அச்திமிக்காத சாம்ராஜ்யம் என்று கூறுமளவுக்கு பரந்து விரிந்திருந்த பிரித்தானிய குடியேற்ற நாடுகள்.

முழு இலங்கையும் பறிபோன கதை

ஏமியன்ஸ் ஒப்பந்தம் பின்னர் அற்ப ஆயுளில் முறிந்தது ஒரு தனிக்கதை. ஒரே ஆண்டில் இரு நாடுகளின் மீதும் மீண்டும் போர்மேகங்கள் கவியத் தொடங்கின. நெப்போலியன் தன்னை பேரரசனாக நிலை நிறுத்துவதற்கான கவனத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் நெப்போலியனுக்கு கூட்டாளி நாடுகளாக இருந்த ரஷ்யா, ஆஸ்திரியா போன்ற நாடுகளை தன் பக்கம் ஈர்த்து தமது நட்பு நாடுகளாக ஆக்கிக் கொண்டது பிரித்தானியா. அந்தத் துணிவுடன் 1803 ஆம் ஆண்டு பிரான்சுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தது இங்கிலாந்து. அடுத்து ஐரோப்பாவில் பத்தாண்டுகாலம் நடந்த பல கட்டப் போரில் வெற்றியும், தொல்வியுமாக இறுதியில் நெப்போலியன் தோல்வியுற்று நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட கதை ஒரு தனி வரலாற்றுக் காவியம் தான்.

இந்த இடைக்காலத்தில் பிரித்தானியா இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் தமது நிலைகளைப் பலப்படுத்தி ஆட்சியை மெதுமெதுவாக நிறுவிக் கொண்டே முழு நாட்டையும் கைப்பற்றும் இலக்குடன் கண்டியுடன் மோதல்களை செய்துகொண்டே இருந்தது.

1803 இல் ஐரோப்பாவில் நெப்போலியனுக்கு எதிராக போர் பிரகடனம் செய்த அதே ஆண்டு பிரித்தானியா இலங்கையில் கண்டியைக் கைப்பற்ற படையெடுத்தது. ஆனால் படுதோல்வியை தழுவிக்கொண்டது பிரித்தானிய படை. ஆனால் அதன் பிறகு தனது உளவுச் சேவையை உச்ச அளவில் பயன்படுத்தி பல விதமான சதிகளைச் செய்து கண்டி அரசுக்குள்ளேயே அரசவைக்குள் திட்டமிட்டு பிளவுகளை ஏற்படுத்தி ஈற்றில் கண்டியைக் கைப்பற்றியது.

1796 இல் பிரித்தானியர் இலங்கை முழுவதையும் கைப்பற்றியதாகவும், 1802 இல் இலங்கை, பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டபோதும் நாட்டின் பெரும்பகுதி அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக வன்னியும், கண்டி இராச்சியமும் சுதந்திரப் பிரதேசங்களாகவே இருந்தன. 1803 இல் பண்டாரவன்னியனுக்கும், பிரித்தானிய தளபதி (F. W. Von Drieberg) வொன் டிறிபேக்குக்கும் இடையில் ஏற்பட்ட நேரடி மோதலில் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டபோதும் கண்டியோடு தொடர் இழுபறியை ஆங்லேயர்கள் சந்தித்துக்கொண்டே இருந்தார்கள். கண்டிச் சமர்களில் பெற்ற தோல்விகளின் காரணமாக இனிமேல் கண்டியோடு யுத்தம் செய்து கைப்பற்றும் எண்ணத்தை அவர்கள் கைவிட நேரிட்டது. அதற்குப் பதிலாக அவர்கள் இராஜதந்திர வழிகளையும், உளவுச் சேவையைப் பலப்படுத்தி குள்ளநரித்தனமான சதிகளையும் பிண்ணித்தான் ஏறத்தாள 20 ஆண்டுகளின் பின்னர் 1815 இல் கண்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் முழு இலங்கையையும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்படுத்தினார்கள்.


1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராஜாதிராஜசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். அந்த இறப்பின் பின் ராஜாதிராஜசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரும் புதிதாக முடிசூட்டப்பட்ட கண்ணுசாமிக்கு சூட்டப்பட்டது. 

ஏமியன் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டு அடுத்த ஆண்டே கண்டியை கைப்பற்ற எடுத்த முயற்சியை கண்டி அரசனால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை சூழ்ச்சியாக வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.

1815 இல் கண்டி ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரங்களை பிரித்துக்கொண்டு ஆள உடன்பட்டாலும் தமது அரசியல், இராணுவ நிலைகளை பலப்படுத்திய பின்னர் சுதேசிகளை முழுமையாக அதிகாரத்திலிருந்து துரத்திவிட்டு முழுத் தீவையும் ஆங்கிலேயர்கள் தமது ஆட்சின் கீழ் கொண்டு வந்தார்கள். இதில் கண்டிய அரசியல் உட்குழப்பங்களின் வகிபாகதத்தின் பாத்திரம் எத்தகையது என்பது வேறொரு தனிக்கதை.

ஏமியன் ஒப்பந்தமும் கூட அப்படித்தான். ஆங்கிலேயர்களுக்கு தமது நிலைகளைப் பலப்படுத்திக்கொள்ளத் தான் அப்படியொரு ஒப்பந்தம் தேவைப்பட்டது. ஒல்லாந்தரை முழுமையாக கரையோரப் பகுதிகளில் அதிகாரத்திலிருந்து தூக்கியெறியும் வரை தான் தேவைப்பட்டது. ஏமியன் ஒப்பந்தம் செய்துகொண்ட அடுத்த ஆண்டே பிரான்சுக்கு எதிரான யுத்த பிரகடனத்தை பிரித்தானியா செய்து கொண்டதையும் இங்கு குறிப்பிடவேண்டும். அதன் பின்னர் ஏமியன் ஒப்பந்தம் இயல்பாகவே காலாவதியானதும், அது குப்பைக்கூடைக்குப் போனதும் தான் வரலாறு. கண்டிய ஒப்பந்தமும் இது போலவே இரண்டே ஆண்டுகளில் காலாவதியானது. 1818 இல் ஊவா – வெல்லஸ்ஸ என்கிற மாபெரும் கிளர்ச்சி ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடங்கியதையும் அது மிகவும் குரூரத்தனமாக ஒடுக்கப்பட்டதும் தனிக்கதை.

கண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட அதே 1815 ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டுத் தொடர்களும் (Congress of Vienna), ஒப்பந்தங்களும் நிகழ்ந்தன. அந்த ஒப்பந்தத்தை வியன்னா ஒப்பந்தம் (Treaty of Vienna - 1815) என்று அழைப்பார்கள். நெப்போலியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏனைய நாடுகள் தமக்கிடையில் சமரசமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்னர். எவற்றை தக்கவைத்துக்கொள்வது, எவற்றை விட்டுகொடுப்பது என தமக்கிடையில் உத்தரவாதங்களை உறுதிசெய்துகொள்ள இந்த பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தமும் அவர்களுக்கு அவசியப்பட்டது. அப்படிப்பட்ட உத்தரவாதங்களில் ஒன்று தான். இங்கிலாந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட இலங்கை, மால்டா, மொரிசியஸ் போன்ற நாடுகள் தமக்கானவை என அங்கு உத்தரவாதம் செய்துகொண்டன. இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட வேளை இலங்கையில் கண்டி ஒப்பந்தத்தின் மூலம் முழு நாட்டையும் இங்கிலாந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.

உலகத்தின் பார்வையில் இலங்கை என்கிற குட்டித்தீவுக்கு இருக்கின்ற மவுசு சாதாரணமானதல்ல. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் அப்படிப்பட்டது. “உலகின் மிக மதிப்புமிக்க காலனித்துவ உடைமை” என பீட் (Pitt) என்கிற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஏமியன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட 1802இல் பாராளுமன்றத்தில் விபரித்தார்   

அதனால் தான் இலங்கை தனது வரலாற்றில் 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளைச் சந்தித்துள்ளது. ஆக்கிரமித்தவர்கள் உள்நாட்டவர்களால் போர் புரியப்பட்டு விரட்ப்பட்டுமிருக்கிரார்கள். அதுபோல ஒரு ஆக்கிரமிப்பாளர் மறு ஆக்கிரமிப்பாளரால் துரத்தியடிக்கப்பட்டு மாறி மாறி அவர்களே ஆக்கிரமித்து ஆண்டு போயிருக்கிறார்கள். இறுதியாக ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர்களைத் தவிர ஏனைய அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் ஏதோ ஒரு வகையில் விரட்டபட்டுத் தான் போயிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் அவர்களாக விட்டுவிட்டு போனார்கள். அவர்கள் அவ்வப்போது சுதேசிகளின் சமர்களையும், எதிர்ப்புகளை ஒவ்வொரு காலகட்டத்தில் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் இலங்கையைக் கைவிட அந்த எதிர்ப்புகள் வலுவான காரணியாக இருக்கவில்லை. மாறாக இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஏற்பட்ட காலனித்துவத்துவ ஆக்கிரமிப்பை கைவிடும் கொள்கை உலக அளவில் வலுத்ததும் ஒரு காரணம் தான். இந்தியா போன்ற பலமான பெரிய நாடுகளைக் கைவிடும் போது இலங்கை என்கிற குட்டித்தீவை வைத்திருப்பதில் அரசியல் – பொருளாதார ரீதியில் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தே அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.

ஆனாலும் இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்தியா போன்ற பெரிய நாட்டைக் கைவிட்டு செல்லுகின்ற போதும் கூட இலங்கையை அவர்கள் முழுவதும் கைவிடத் தயாராக இருக்கவில்லை. இலங்கையில் அவர்களின் பிடியை வைத்திருக்கவே செய்தார்கள். எனவே 1972 இல் இலங்கை ஒரு குடியரசாக ஆகும் வரை அந்த பிடி நீடித்தது.

அடிக்குறிப்பு

  1. பிரெஞ்சுப் படையில் கப்டனாக இருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த C.S.Tombe இலங்கை, இந்திய கடற்பயணம் செய்த பின் 1810இல் அதாவது (இலங்கை 1815 இல் ஆங்கிலேயர்கள் முழுமையாக கைப்பற்ற முன்) வெளியிட்ட VOYAGE AUX INDES ORIENTALES என்கிற அந்த நூலில் ஒரு தனிப்பகுதி ATTAQUE ET DEFENSE DE COLOMBO (கொழும்பின் மீதான தற்காப்புத் தாக்குதல்) சுமார் 40 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இது பிரெஞ்சு மொழியில் தான் இந்த நூல் இருக்கிறது. இத்தகைய நூல்களுக்குள் இலங்கையின் காலனித்துவ வரலாற்றை ஆராய்ந்தவர்கள் பலர் நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்றேபடுகிறது. இப்படி இலங்கையின் மீதான காலனித்துவ ஆட்சி காலத்தைப் பற்றி பேசுகிற ஏராளமான மூல ஆவணங்கள் டச்சு, போத்துக்கீச, பிரெஞ்சு போன்ற மொழிகளில் இருகின்றன. அவை எல்லாம் நமது மொழிகளில், அல்லது ஆங்கிலத்திலும் கிடைக்கும் போது தான் விடுபட்டுப்போன பல வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணர முடியும்.
  2. சிங்கள மொழியில் போர்த்துகேயரை “பறங்கி” என்று அழைப்பார்கள். ஒல்லாந்தரை “ஒலந்த” என்றும் “லந்தேசி” என்றும் அழைப்பார்கள்.
  3. Kent, Deborah - In the middle colonies - New York : Benchmark Books, 2000
  4. D.C. Wijewardena - The Revolt in the temple – Sinha Publication – 1953, P.84
  5. S.Peter - A Short Hoistory of modern times Ceylon & World – from 1796 to the present day – S.S.shanmuganathan & sons, Jaffna - 1939
  6. John D.Grainger, The Amiens Truce – The Boydell Press, 2004
  7. இந்தக் கட்டுரைக்காக ஏமியன் உடன்படிக்கை குறித்து தேடிக்கண்டுபிடித்த பல்வேறு ஆவணங்களில் மிகவும் மிகவும் மூல ஆவணமாக அமைந்தது லண்டனில் வெளியிடப்பட்ட Cobbetts - Annual Register – Volulme – I, From January to June, 1902 என்கிற ஆவணம். ஏமியன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு மூன்று மாதங்களில் வெளிவந்த இந்த 220 ஆண்டுகால பழைய ஆவணம் மொத்தம் 768 பக்கங்களைக் கொண்டது. வில்லியம் கொபட்ஸ் (Wiiliam Cobbets) தொகுத்த இந்த அறிக்கையானது ஆண்டு தோறும் பிரித்தானியாவின் அரசியல், நிர்வாகத்துறை குறித்த ஏராளமான துளியமான விபரங்களைக் கொண்ட அறிக்கையாகும். வில்லியம் கொபட்ஸ் பிரித்தானிய அரசியல் விவகாரங்களை வாராந்தம் அறிக்கையாக வர்த்தக ரீதியில் தொகுத்து வெளியிட்டு வந்த ஒருவர். பாராளுமன்ற விவாதங்களை அறிக்கையிடும் கலாசாரத்தின் முன்னோடிகளில் ஒருவராக அவரைக் கொள்ள முடியும். அதற்கு முன்பே பாராளுமன்ற விவாதங்களைத் தொகுத்து வெளியிடும் பணியை மேற்கொண்டிருந்தவர் லூக் ஹன்சார்ட் (Luke Hansard) அந்த ஹன்சார்ட்டின் பெயரில் தான் இன்றும் ஹன்சார்ட்கள் அழைக்கப்படுகின்றன. வில்லியம் கொபட்ஸ் தொகுத்த வாராந்த அரசியல் நிலவர அறிக்கைகள் அந்தக் காலத்திலேயே வாரத்துக்கு 6000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. கொபட்டின் அறிக்கையில் 321 இல் இருந்து இந்த ஒப்பந்தத்தின் விரிவான அம்சங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
  8. Burke, Edmund (ed) (1803). Annual Register, Volume 45. London: Longman and Greens. C
  9. The Annual Register, or a view of the Politics, and iterature, for the year 1802, London Printed by R.Wilks, 1803.
  10. தென்னாசியாவில் ஆங்கிலேயர்களிடம் இருந்து இறுதியாக விடுதலை பெற்ற (1965) நாடு மாலைதீவு. டட்சுக்கரர்களை இலங்கையை விட்டு விரட்டிய அதே காலத்தில் தான் மாலைதீவிலிருந்தும் டச்சுக்காரர்களை ஆங்கிலேயர்கள் விரட்டியடித்துவிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். 1887 இல் மாலைதீவு ஆங்கிலேயர்களுக்கு எழுதிகொடுக்கப்பட்டபோது, மாலைதீவு சுல்தானுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநருக்கும் இடையில் தான் அதற்கான  ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
  11. HENRY MARSHAL - CEYLON: A GENERAL DESCRIPTION OF THE ISLAND AND ITS INHABITANTS ; AN HISTORICAL SKETCH CONQUEST OF THE COLONY BY THE ENGLISH - lONDON - 1846
  12. Fr S. G. Perera, ed. The Douglas Papers, Colombo, 1933, p. 32. Sylvester Douglas’s notes of 19 September 1800.

மேலதிகமாக உதவியவை:

  • The gentleman's magazine: and historical chronical for the year MDCCV. Volume *LXXV by Sylvanus urban - 1805
  • Ajay Parasram - Becoming the State: Territorializing Ceylon, 1815 – 1848 - Carleton University, Ottawa, Ontario, 2017
  • ALICIA SCHRIKKER - DUTCH AND BRITISH COLONIAL INTERVENTION IN SRI LANKA - 1780 - 1815, Expansion and Reform - LEIDEN • BOSTON 2007
  • H.A.Colgate - The Royal navy and trincomalee - The history of their conection c 1750-1958 - (The Ceylon Journal of historical and social studies Vo.7 - No 1, 1964)

நன்றி - காக்கைச் சிறகினிலே மார்ச் - 2021

நெப்போலியன் இலங்கையை பிரித்தானியாவுக்கு எழுதிக் கொடுத்த கதை - என்.சரவணன் by SarawananNadarasa 

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் - க.சண்முகலிங்கம்

இந்தியாவிற்கு வெளியே பௌத்தம் பரவியபோது, அச்சமயம் முதலில் இலங்கைக்குப் பரவியது.

அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். இலங்கையின் பௌத்தத்திற்கு 2500 ஆண்டு களுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான வரலாறு உள்ளது. இக்காரணங் களினால் இலங்கையின் பௌத்தம் தனக்கேயுரிய சிறப்பியல்பு களை உடையதாய் இருக்கிறது. இச்சிறப்பியல்புகளை 'தத்து வமும் - நடைமுறையும்' என்னும் தலைப்பில் ஆராய் வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். மேற்போக்கான பார்வையில் முரண் பாடாகத் தோன்றும் விடயங்கள் பௌத்தத்தின் 'நிலைமாற்றம்' (Transformation) செய்துகொள்ளும் திறன் மூலம் இணக்கம் செய் யப்படுவதையும் காண்கிறோம். பௌத்தத்தின் இப்பண்பினை நிலைமாற்றத்திறன் (Transformative Capacity) என ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

கடவுள் மறுப்புக்கொள்கை:

பௌத்தம் கடவுள் மறுப்புக் கொள்கையை கொண்டது. அது ஓர் அற ஒழுக்க இயக்கமாகும் (An Ethical Movement). அதனைச் சம யம் என்று கூறுதல் இயலாது என்று வாதிடுவோர் உள்ளனர். இவ் வாதத்தின் தர்க்கரீதியான முடிவு இலங்கையில் பௌத்தம் என்று ஒரு சமயம் இல்லை . ஓர் அற இயக்கம் அப்பெயரில் இருந்து வந் துள்ளது என்றல்லவா அமைந்து விடும்? இந்த வாதத்தின் பொருத்தமின்மையை கொம்பிரிட்ஜ் என்ற அறிஞர் எடுத்துக் காட் டியுள்ளார். பௌத்த அறக்கருத்துக்கள் பௌத்த சமயத்தின் ஓர் அம்சம் மட்டுமே. அது சமயத்தின் அனைத்துப் பண்புகளையும் உடையதாய் உள்ளது என்று அமைதி காண்பதே சரியானது. குறிப்பாக பௌத்த சமயத்தின் சமூக - நிறுவன வடிவங்கள் அதற்குச் சமயத்தின் பண்புகளை வழங்கியுள்ளது என்பதே அறி ஞர்களின் முடிவாகும். ஆகையால் ஒரு சமூகத்தின் சமூக வர லாற்றின் ஊடாக அச்சமூகத்தின் சமயம் பற்றி ஆராய்வதை அறி ஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடவுள் மறுப்புக்கொள்கை பௌத்தத்தின் நடைமுறைகளுடன் முரண்பாடின்றி இணக்கம் பெறுவதை அடுத்துப் பார்ப்போம். பௌத்த சமயப் பிரபஞ்சவியல் (Cosmology) இவ்வுலகம், அப் பால் உள்ள உலகம் என்ற இருவேறு உலகங்களைக் குறிப்பிடு கிறது. நாம் வாழும் இவ்வுலகம் பெளதிக உலகம் ஆகும். அப் பால் உள்ள உலகம் 'லோகோத்திர' ஆகும். பௌத்த சமயத்தின் பிரபஞ்சவியலில் அப்பால் உலகில் வாழும் கடவுளர்களுக்கும், தேவர்களுக்கும் அல்லது தேவதைகளுக்கும் இடம் உள்ளது. புத் தர்பிரான் உயர் நிலையிலும், அடுத்தபடியில் கடவுளர்களும், தேவர்களும் வைக்கப்பட்டுள்ளனர். ஆவிகள், பிசாசுகள் போன்ற இயற்கையிருந்த சக்திகளுக்கும் பௌத்தத்தில் இடம் உள்ளது. புத்தர்பிரான் முதல் ஆவிகள், பிசாசுகள் வரை ஒருபடிநிலைய மைப்பு உள்ளது. இப்படித் தரக் கட்டமைப்பு (Hierarchy) பௌத்த சமயச் சடங்குகள், நடைமுறைகளை விளங்கிக் கொள்வ தற்கு உதவுகிறது. கடவுளர்களுக்கும், தேவர்களுக்கும், தீய ஆவி கள், பிசாசுகள் என்பனவற்றிற்கும் செயல் வகிபாகம் (Functional Role) உள்ளது. மக்கள் புத்த பெருமானிடம் உலகியல் நன்மை களை வழங்கும்படி கேட்டு முறையிடுவதோ வணங்குவதோ கிடை யாது. உலகியல் நன்மைகளை வழங்குபவர்கள் கடவுளர்களும், தேவர்களும் ஆவர். உலகில் தீய செயல்களைச் செய்பவர்க ளுக்கு தண்டனை வழங்குவன தீய ஆவிகளும், பிசாசுகளுமாகும். இவ்விடயம் சில ஆய்வாளர்களால் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

சமயமும் இனத்துவமும் அரசும் :

இனம், சாதி, மொழி, தேசம் என்ற எல்லைகளைக் கடந்த உலகப் பொதுவான அற ஒழுக்கங்களையும் விழுமியங்களையும் போற்று வது பௌத்த சமயம். அத்தகையதொரு சமயம் இலங்கையில் சிங்களவர் என்ற இனத்துவ அடையாளத்துடன் பிணைக்கப்பட்டு 'சிங்கள - பௌத்தம்' ஆக வளர்ச்சியுற்றுள்ளது. இந்த அடையா ளம் பௌத்தத்தின் உலகப்பொதுமை என்ற விடயத்துடன் முரண் படுகிறது.

பௌத்த சமயத்திற்கும் சிங்கள இனத்திற்கும் இடையிலான பிரிக்கமுடியாத உறவு, இலங்கையின் பௌத்த சமய வரலாற்றின் ஊடாக விளக்கப்படவும், புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். இலங்கையின் பௌத்த சமய வரலாற்றின் சிறப்புக் கூறுகளாக நான்கைக் குறிப்பிடலாம்.

  • பௌத்த சமயம் இலங்கைக்கு அரச ஆதரவுடன் பரப்பப்பட்டது.
  • துறவிகளான பிக்குகள் பௌத்த சமயத்தின் பரப்புகையிலும், அதனைப்பேணிப் பாதுகாப்பதிலும் முதன்மையான பங்காற்றினர்.
  • சிங்கள மக்கள் என்ற அடையாளமும் பௌத்த சமயிகள் என்ற அடையாளமும் ஒன்றிணைந்து 'சிங்கள - பெளத்தம்' என்ற ஒரு மித்த அடையாளத்தைப் பெற்றது.
  • தொடக்க முதலே இருந்து வந்த அரசு - சமயம் - இனத்துவம் என்ற பிணைப்பு நவீன காலம் வரை தொடந்தது.

தீபவம்சம், மகாவம்சம் போன்ற பௌத்த வரலாற்று நூல்களின் வழியாக கட்டமைக்கப்பட்ட இலங்கை வரலாறு மேற்குறித்த சிறப் பியல்புகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது. தீபவம் சம் கி.பி.4 அல்லது 5ம் நூற்றாண்டிலும் மகாவம்சம் 6ம் நூற் றாண்டிலும் இயற்றப்பட்டதென வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின் றனர். இவ்விரு நூல்களும் புராணக் கற்பனைகளையும், பழமரபுக் கதைகளையும் உள்ளடக்கியனவாக உள்ளன.

இலங்கையில் பௌத்த சமயமும் அரசும் பிரிக்கமுடியாத உறவு உடையவை என்ற கருத்தும் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையேயான இன்னொரு முரண் ஆகும்.

  • பௌத்த சமயம் அதன் தூய தத்துவ வடிவில் தனிநபர் ஆன் மீகத் தேடலை வலியுறுத்துவது. அவ்வகையில் அது தனிமனி தவாதப் பண்புடையது. இலங்கையில் பொதுஜனங்களின் சமய மாக வெகுஜன சமயமாக பௌத்தம் மாறியபோது அதன் தனிமனிதவாதப் பண்புகள் மறைந்தன. துக்கம் - துக்க நீக்கம் என்ற ஆன்மீகம் சார்ந்த விடயங்க ளோடு தொடர்புடைய ஆன்மீகத் தேடல் அரசியலை புறம் தள் ளுவது. ஆகையால் அது அரசியலை விலக்குவது.
  • இலங்கையில் பௌத்தம் நவீன காலத்தில் அரசியலோடு கலப் புற்ற வெகுஜன பௌத்த சமய இயக்கமாகியதும், அரசுடனான பிணைப்பு வலியுறுத்தப்படுவதால் அரச மதம் ஆவதும் இம்மு ரணை வெளிப்படையானதாக்கியுள்ளது.

சொத்துடமை :

சொத்துக்கள் எதுவும் அற்றவரான துறவி, பெளத்த துறவு ஒழுக் கத்தின் இலட்சிய மாதிரி ஆவர். உடைமைகள் இல்லாதவர், வீட் டைத்துறந்தவர், வறுமையில் வாழ்பவர், வனவாசி என்பன துறவின் இலட்சிய மாதிரியின் ஏனைய கூறுகளில் சிலவாகும். உபாசகர்க ளான உலகியல் வாழ்க்கையில் ஈடுபடும் மக்களுடன் தொடர்பு கொண்டு வாழும் தேவையும் துறவிக்கு உள்ளது. இவ்வாறான உலகியல் தொடர்பு பல சந்தர்ப்பங்களில் அவரை சொத்தின் உடைமையாளராகவும், சொத்தின் நிர்வாகியாகவும் மாற்றுகிறது. நீதிவாசகம் அல்லது தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையி லான முரண்பாடாகவும் இது அமைந்து விடுவதும் உண்டு. இலங் கையின் பௌத்தத்தின் நீண்ட வரலாற்றில் இம்முரண்பாடு பல வடிவங்களில் வெளிப்பட்டதைக் காணமுடியும்.

இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் ஏற்பட்ட முரண்நிலை ஒன்றைப் பற்றி இங்கு சுருக்கமாகக் கூறுவோம். கண்டி இராச்சிய காலத்தில் 16ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 18ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைபட்ட காலத்தில் 'ஹன்னினான்சே' என்ற வகையினர் பௌத்த கோவில்களின் உடைமையாளர்களாக இருந்தனர். 'உப சம்பாத' என்னும் சடங்கு நடத்தப்படாமையால் கோவில்களின் பிக் குகள் முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டவர்களாய் இருக்க வில்லை. கண்டிப் பகுதியில் கோவில்கள் நில உடைமையாளர் குடும்பங்களின் சொத்துக்களாக இருந்துவந்தன. இக்குடும்பங்கள், தமது குடும்பத்தின் ஆண்மகன் ஒருவரை 'சமனேராவாக' (இளம் துறவி) சேர்த்து, 'உபசம்பாத' சடங்கு நடத்துவித்த பின்னர் துறவி யாக ஆக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. முறைப்படி பிக்கு வாக 'உபசம்பாத' பெற்ற ஒருவர் கோவிலின் உடைமையாளராக இருப்பார். இதற்கு மாறாக கண்டியில் 16ம் நூற்றாண்டு முதல் 'உபசம்பாத' பெறாதவர்கள் கோவில்களின் பிக்குகளாக இருக்கும் நிலை தோன்றியது. இவர்கள் உண்மையில் பிக்குகள் என்ற தகு தியை உடையவர்கள் அல்லர். இவர்கள் 'ஹன்னினான்ச' எனப்பட் டனர்.

18ம் நூற்றாண்டுகளின் தொடக்க ஆண்டுகளின் போது சிங்கள சங்க அமைப்பு துறவிகளுக்குரிய பண்புகளை இழந்த அமைப் பாகச் சீரழிந்திருந்தது (சரத் அமுனுகம 2016:212) சிறியனவும் பெரியனவுமான கோவில்கள் ஹன்னினான்சே' களின் உடைமைக ளாக இருந்தன. நில உடைமையாளர்களான 'ஹன்னினான்சே'கள் தம் பெரும்பகுதி நேரத்தை உலகியல் அலுவல்களிலேயே கழித்த னர். 'சுவாமின்வகன்சே' அல்லது 'உன்னான்சே' என்று மதிப்புடன் அழைக்கப்பட்ட துறவி 'ஹன்னினான்சே' என்று அழைக்கப்படும் தாழ்நிலை ஏற்பட்டது (மேலது பக். 212) ஹன்னினான் சேகளில் பெரும்பான்மையினர் பிரம்மசாரிகளாகக் கூட இருக்கவில்லை. தமது ஆசை நாயகிகளையும் அவர் தம் பிள்ளைகளையும் கோவில் வளவுகளிலும், கோவில்களுக்கு அருகில் உள்ள கோவில் நிலங்களிலும் குடியிருத்தினர். இவர்களது சந்ததியினரின் 'வாசகம்' பெயர்களில் விகார வளவுகே' எனவும் 'விகார கெதரே' எனவும் சொற்கள் இணைந்து கொண்டன. இவ்விதமாக இரத்த உறவு முறைப் பெயர்கள் சொத்துடமை அடையாளத்துடன் கலப் புற்றன. ஹன்னினான் சகள் மஞ்சள் ஆடையை அணியாது வெள் ளுடை தரித்தனர். 'உபசம்பாத' சடங்கு, கைவிடப்பட்டது. சமய நூல்களைக் கற்பதில் இவர்கள் நாட்டம் கொள்ளவில்லை. பாளி மொழிக் கல்வியும் கைவிடப்பட்டது. சோதிடம், மந்திர தந்திரச் சடங்குகள், ஆவிகளுடன் உரையாடுதல் போன்ற விடயங்களில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றனர்.

சங்க அமைப்புக்கு நேர்ந்த இந்த அழிநிலைக்கு எதிர்ப்பு மல்வத்த, அஸ்கிரிய போன்ற மடாலயங்களின் பொறுப்பில் இருந் தோரிடம் இருந்து எழவில்லை. கண்டியின் எல்லைப் பகுதியான 'தும்பன'வில் உள்ள 'வெலிவிட்ட' என்ற கிராமத்தைச் சேர்ந்த 'சமனேரா' (இளம் பிக்கு) ஆகிய வெலிவிட்ட கரணங்கர அவர்கள் இந்த எதிர்ப்பியக்கத்தை தொடக்கி வைத்தார். இதுவே சரணங்கர தேரர் பெயரால் அழைக்கப்படும் 18ம் நூற்றாண்டின் பௌத்த மறு மலர்ச்சி இயக்கமாகும். 'உபசம்பாத' சடங்கு நிகழாமையின் விளைவாக ஏற்பட்ட தீங்குகளைக் களைவதற்கான இந்த மறு மலர்ச்சி இயக்கத்தின் பின்புலத்தில் சொத்துடமையும், நிலப்பிரப் புத்துவ நலன்களும் தொடர்புபட்டிருப்பதையும் காணலாம். சர ணங்கர தேரரின் மறுமலர்ச்சி இயக்கம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான இயக்கம் என்று கருதுவதற்கு இல்லை. சொத்துடமை முறை சங்க அமைப்பில் புகுத்திய தீய அம்சங்களைக் களைந்து அதனைத் தூய்மைப்படுத்தும் இயக்கமாகவே இது அமைந்தது.

சாதியும் சமயமும் :

பௌத்த கோவில்களுக்கு அரசனால் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் கண்டி இராச்சியப் பகுதிகளில் 'விஹாரகம்' என அழைக்கப்பட்டன. அவ்வாறு நிலங்கள் அரசனால் வழங்கப்பட முன்னர் அவை 'கபடாகம்' என்ற பெயரைப் பெற்றன. கண்டியின் 'கபடாகம் கிராமங்களின்' நிலங்களைப் பயிரிட்ட குடியான் விவ சாயிகள் தத்தம் சாதிக்குரிய சேவைக் கடமைகளை அரசனின் 'கபடாகம்' திணைக்களத்திற்கு வழங்கினர். குறித்த நிலங்கள் 'விஹாரகம்' நிலங்களாக மாறியபோது, அந்நிலங்களின் குடியான் விவசாயிகளும் விகாரைகளின் குடியான்களாகவும், சேவைகளை விகாரைகளுக்கு வழங்குபவர்களாகவும் மாற்றப்பட்டன. கண்டியின் நிலப்பிரபுத்துவ சமூக ஒழுங்கமைப்பின் பாகமாக கோவில் என்ற சமய நிறுவனம் விளங்கியது. இதனை கித்சிறி மலல்லகொட என்ற ஆய்வாளர் பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளார்.

'நிலமானிய பொருளாதார முறையின் சிக்கலான தொழில் பிரிவினை சாதியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மடாலயங்களின் சொத்துக்களின் நிர்வாகக் கட்டமைப்பிலும் இதுபோன்ற தொழில் பிரிவினை இருந்தது. மடாலயங்களுக்குச் சொந்தமான 'முத்தெட்டு' வகை நிலங்களை கொவிகம் சாதியினைச் சேர்ந்தோர் குத்தகைக்குப் பயிரிட்டனர். கோவில்களின் சமயத் துறவிகளுக்கு அவர்களின் அறுவடையின் ஒரு பகுதி வழங்கப்பட்டது. ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் கோவில்களுக்குத் தமது சேவைகளை வழங்கினர். இவர்களுக்குச் சேவைக்குரிய கூலியாக அரிசி வழங் கப்பட்டது. அல்லது கோவில் நிலத்தில் பயிரிடும் உரிமை வழங் கப்பட்டது. கோவில்களைக் கட்டுதல், பிறதொழில் நுட்பவேலை கள் தெரிந்த உழைப்பாளர்களையும், சித்திரவேலைகள், வர்ணம் பூசுதல் போன்ற வேலைகளில் தேர்ந்தவர்களான ஆட்களையும் நவண்டன சாதிக்குழு வழங்கியது. செங்கல், ஓடு, மட்பாண்டங் கள், என்பனவற்றைக் கோவில்களுக்கு வழங்குபவர்களாக குயவர் சாதியினர் பணி செய்தனர், கோவில்களதும், மடாலயங்களின் சுவர்களுக்கு வெள்ளையடிக்கவும், நிலத்திற்கு வெள்ளையடிக்க வும், தேவைப்பட்ட சுண்ணாம்பை 'குணு ' சாதியினர் வழங்கினர். 'ரதவ்' எனும் வண்ணார் குலத்தவர் சலவை செய்த துணியையும், விளக்கு எரிப்பதற்கான திரிச்சீலையையும் கொடுத்தனர். 'பெர வயோ' எனப்படும் சாதியினர் மேளமடித்தல், குழல் ஊதுதல், நட னம் ஆடுதல் ஆகிய பணிகளைக் கோவில்களில் நிகழ்த்தினர். 'படுவோ' சாதி ஆட்கள் சுமைகளைத் தூக்கிச் செல்லுதல், கோவி லின் தலைமைத் துறவியைப் பல்லக்கில் வைத்துக் காவிச் செல் லுதல் ஆகிய பணிகளைச் செய்தனர். இவ்விதமாக வெவ்வேறு சாதிகள் கோவிலின் பிரதம துறவிக்கு ஆற்றிய பணிகளை நோக் கும்போது, நிலப்பிரபுவிற்கும் சேவைச் சாதிகளுக்கும் இடையி லான உறவுமுறை கோவில் அமைப்புக்குள்ளே செயல்பட்டதைக் காண்கிறோம்.'

1753ல் சியாம் நிகாய நிறுவப்பட்டமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை முன்னர் குறிப்பிட்டோம். சியாம் நிகாய பௌத்த சங்க அமைப்பின் அதிகாரம் மிக்க தலைமைப்பீடம் ஆகியது. 1765ம் ஆண்டில் அரசன் இட்ட ஆணைப்படி மல் வத்தை அல்லது அஸ்கிரிய மடாலயங்களில் ஏதாவது ஒன்றில் மட்டுமே 'உபசம்பாத' சடங்கு நிகழ்த்தலாம் என விதிக்கப்பட்டது. இதனால் கரையோர மாகாணங்களின் கோவில்களின் 'சமனேராக் கள்' (இளம் பிக்குகள்) உபசம்பாத பரீட்சைக்காக கண்டிக்கு அழைத்து வரும் தேவை இருந்தது. இப்பரீட்சையின் மாதிரி வினாக்கள் வருமாறு:

(பரீட்சகரான பிரதம குரு பரீட்சார்த்தியான இளம் பிக்குவை நோக்கிக் கேட்பவை)

பிரதம குரு : உமது பிறந்த இடம் யாது?

இளம் பிக்கு : (பதில் தருகிறார்)

பிரதம குரு: எந்த 'ஹெதர' (வீடு - குடும்பம்)?

இளம்பிக்கு : (பதில் தருகிறார்)

பிரதம குரு: அப்பகுதியின் கௌரவம் வாய்ந்த 'ஹெதர'வாகத் தெரியவில்லையே?

இளம்பிக்கு : (பதில் தருகிறார்)

'நீர் கொவிகம சாதியினரா?' என்ற வினாவே சுற்றி வளைத்து இவ்வாறு பரீட்சார்த்தியிடம் கேட்கப்பட்டது.

(மேற்படி விபரிப்பு எச்.எல். செனிவிரத்தின என்ற ஆய்வாளரின் ஆய்வுக் கட்டுரையில் இருந்து சரத் அமுனுகம அவர்களின் நூலில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது. (பார்க்க: சரத் அமுனுகம் 2016: 79).

கரையோர மாகாணங்களில் ஒல்லாந்தர் காலத்தில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களின் பயனாக சலாகம், கராவ , துராவ சாதியினர் உயர்ச்சி பெற்று மேல்நிலைக்கு வந்தனர். சியாம் நிகாயவின் சாதி மேலாண்மையை எதிர்த்து 'அமரபுர நிகாய என்ற சங்க அமைப்பு 1803ம் ஆண்டு நிறுவப்பட்டது.

19ம் 20ம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய வர லாற்றில் இரண்டாவது மறுமலர்ச்சி இயக்கம் இடம் பெற்றது. இவ் விரண்டாவது மறுமலர்ச்சி அலையில் கரையோர மாகாணங்களின் அமரபுர நிகாய அதில் இருந்து பிரிந்து சென்ற ராமண்ய நிகாய என்பன முக்கிய பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை:

  1. Amunugama, Sarath: The Loins. Roar - Anagarika Dharma, Pala and the Making of Modern Buddhism, Vijitha Yapa Publication (2016) Colombo
  2. Phadnis Urmila: Religion and Politics in Srilanka, 2nd Edition Manohar (2020)
  3. சண்முகலிங்கம்.க. New Delhi இலங்கையின் சமூக பண்பாட்டு வரலாறு, குமரன் புத்தக இல்லம் (2014), கொழும்பு. சென்னை

நன்றி - தாய்வீடு - மார்ச் 2021

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates