Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இலங்கையின் வடபகுதியில் வாழும் தென் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் - மா. நாகராஜா

இக்கட்டுரை யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர்களால் 1980இல் வெளிக்கொணரப்பட்ட பொதிகை ஆண்டு மலரில் வர்த்தகமானி 1ம் வருட மாணவர் மா. நாகராஜா எழுதிய கட்டுரை.
அண்மைக் காலங்களில் ஏற்பட்டுவரு பல மாற்றங்கள், குறிப்பாகப் பொருளாதார, சமூக, அரசியல் மாற்றங்கள் இலங்கையிலுள்ள பல்வேறினங்களிடையேயும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களையும் ஒரு தேசிய இனமாகக் கணிக்கும் நிலேப்பாடு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேசிய இனமாகக் கணிக்கும்பொழுது அது பெரும்பாலும் இலங்கையில் மலையகத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழில்புரியும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களையே குறிப்பிடுவதாக அமைகின்றது. அதே சமயத்தில் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக இலங்கையின் வடபகுதியில் வாழும், இந்திய வம்சாவளித் தமிழின மக்களைப் பற்றிச் சில குறிப்புகளை சுட்டிக்காட்டவேண்டிய சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது. இவ்வடபகுதியில் இம் மக்கள் எத்தகைய பொருளாதார அடிப்படையையும், எவ்வாறான சமூக இருத்தலையும், அரசியல் அமைப்புக்களையும் இலக்கியப் பரிமாணங்களையும் கொண்டுளனர் என்பதனை ஒரு மேலோட்டமா பார்வையில் இக்கட்டுரை ஆராய்கின்றது

வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களை இரு பிரிவுகளின் அடிப்படையில் பிரித்து ஆராய்ந்து பார்க்கலாம் அப்பிரிவினை அவர்களின் குடியேற்ற காலத்தின் அடிப்படையில் பிரிக்கலாம்.
1. தென்னிந்தியாவில் ஏற்பட்ட வரட்சியின் பாதிப்பினால் நேரடியாக யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்.

2. மலையகத்தில் ஏற்படுத்தப்பட்ட, காணிச் சுவீகரிப்புப் போன்றவற்றினுல் பாதிப்படைந்து மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா, மன்னர், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்.
இப்பகுதிகளில் வசிக்கும் இம்மக்களின் வாழ்க்கையினைப் பொருளாதார அடிப்பபடைத் தேவையிலிருந்தே இனம் காண வேண்டியதாகின்றது. உண்மையில் அதுவே அடிப்படையாக அமைகின்றது அத்துடன் இவர்களிடமும் வர்க்க முரண்பாடு காணப்படுகின்றது. இவ்வர்க்க முரண்பாடு இந்தியாவிலிருந்து வரும்போதே உடன் இந்த வர்க்க முரண்பாடாகும். ஏனெனில் இந் தியாவிலிருந்து வந்த ஒரு சாரார் கூலித் தொழிலாளர்களாகவே வந்தனர். இக் கூலித் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மலையகத்துப் பெருந்தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தனர். ஏனையோர் உதிரிகளாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நகர்ந்தனர். இந்திய மலையாளிகள் தனிநபர்களாகவே இங்கு வந்தனர். இதனுல் இங்குள்ள சமூகங்களுடன் இணேவது அவர்களுக்கு இலகுவானதாக அமைந்தது. ஏனையவர்கள் குடும் பங்களாகவே இங்கு வந்தனர். இவர்களைச் சுரண்டப்படும் வர்க்கத்திற்குள்ளேயே அடக்கப்படவேண்டியதாகும். பிறிதொரு சாரார் சிறு தொகையினராக இருந்தாலும், இலங்கையின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதற்காக இந்தியாவிலிருந்து நேரடியாகவே மூலதனத்துடன், இங்கு வந்தவர்களாகும். இவர்களைச் சுரண்டும் வர்க்கத்திற்குள் உள்ளடக்கப்படவேண்டியதாகும். எனவே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களிடையேயும் வர்க்க முரண்பாடுகள் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன.

இங்கு வடபகுதியில் வசிக்கும் நிரந்தர இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் அடிப்படை வாழ்க்கை அமைப்பில் வர்க்க முரண்பாட்டுடன், சாதி அமைப்பு முறை யில் சில எச்சங்களும் காணப்படுகின்றன. இங்கு நகர சுத்திகரிப்புப் போன்ற தொழில்களைச் செய்யும் இந்திய வம்சாவளித் தமிழினமக்கள் இந்தியாவிலிருந்துவந்த ஹரிஜன மக்களாவர். இங்கும் அவர்கள் தமது பாரம்பரியத் தொழிலையே செய்கின்றனர். நாடு மாத்திரம், பெயர்ந்துள்ளனர். அத் துடன் இந்தியாவில் எப்படியயன சமூக மட்டத்தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, சுரண்டப்ட்டார்களோ அதிலிருந்து எள்ளளவும் அவர்கள் நிலை வடபகுதியிலும் மாறவில்லை. அதேவிதமான அடக்குமுறை தான் இங்கும் பயன்படுகிறது. அத்துடன் பிராஜா உரிமையற்ற மக்களாக இருப்பதனால் பொருளாதார ரீதியில் அதிகளவில் தாக்கப்படுகின்றனர்.

இந்த ஹரிஜன மக்களைவிட, மற்ற இனக் கீழ்மட்ட வகுப்பினர், இங்கு பல் வேறு தொழில்களைச் செய்கின்றனர். அவர்களும் இங்கு கூலித் தொழிலாளர் களாகவே இருப்பதுடன் உதிரிகளாகவே உள்ளனர். நிரந்தரமான இக்கூலித் தொழி லாளர்களின் பொருளாதாரம் அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்யமுடியாத மட்டத்திலேயே காணப்படுகின்றது. அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான போராட்டம் முடிந்தபாடில்லை. இதனால் சுரண்டப்படும் தன்மை மிக அதிகளவில் இவர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றது.

அடிப்படைத் தேவையில் ஒன்றான குடியிருப்புக்கள் நிரந்தரமானவையாகவோ, உரிமையுடையனவாகவோ காணப்படுவதில்லை. அத்துடன் அடிக்கடி இடம்பெயர்ந்து தான் இவ்வம்சாவளி மக்கள் வசிக்கின்றார்கள். மலையகத்து மக்களுடைய வாழ்விடங்கள் எந்த மாதிரியான உள்ளடக்கத்தைக் கொண்டு காணப்படுகின்றனவோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான நெருக்கமான இடப் பற்றாக்குறை கொண்ட இருண்ட வாழ்விட வசதிகளையே இவர்களும் கொண் டிருக்கிருர்கள். அத்துடன் இவ்வம்சாவளி மக்கள் இப்பிரதேசத்தை நிரந்தரமான வாழ்விடப் பிரதேசமாகக் கொள்ளவில்லை. ஏனெனில், இப்பிரதேசத்தின் இலங்கை வம்சாவளித் தமிழின மக்களுடன் இன்னமும் வேறுபட்டே காணப்படுகின்றனர். இங்கு தமிழ்மொழி பேசப்பட்டாலும் இதனையும் அந்நியப் பிரதேசமாகவே கருதுகின்றனர். அத்துடன் அரசியல் ரீதியிலான இனப் பிரச்சினை, இனக் கலவரங்களினால் வடபகுதியையும் நிரந்தரமற்ற வாழ்விடப் பிரதேசமாகக் கருதி, இந்தியா செல்லவே பலர் விரும்புவதனுல் இலங்கைப் பிரஜாவுரிமை பற்றிய விபரங்களில் அதிக அக்கறை கொள்வதில்லை. இதனால் இங்கிருக்கும் வரை எப்படியாவது எத்தொழிலைச் செய்தாவது இருந்துவிட்டு, இற க் கும் நாளுக்காக இந்தியா செல்வோம் என்னும் மனப்பாங்கு அவர்களின் அடிப்படை வாழ்விடப் போராட்டத்தை இன்னமும் முடிந்தபாடாக இல்லை" இந்நிலையில் சொந்தக் காணி பெற்றுக்கொள்வதை நினைத்துப் பார்க்கமுடியாது.

மேலும் வடபகுதியில் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் தொழில் ரீதியில் இழிவுக் கூலி மட்டத்திலும் பார்க்கக் குறைவான கூலியையே பெற்றுக்கொள்கின்றனர். ஒரு சாரார் ஒரளவு வருமானம் பெற்றாலும் அப்படைத் தேவைகளும் போதுமானதாகவில்லை. வரத்தக நிறுவனங்களில் வேலைசெய்யும் கணக்குப்பிள்ளை, தச்சுவேலை செய்வோர். நகைத் தொழிலாளர் போன்ருேர் இம்மட்டத்தவர்களாவர். இதனைவிடக் கடைகளில் சிப்பந்திகளாகவும், வீடுகளில் வேலைக்காரர்களாகவும் தொழில்புரியும் நபர்கள், மலையகத்திலிருந்து வந்த இந்திய வம்சாவளித் தமிழின மக்களாவர். இவர்கள் ஏனைய தொழில் புரியும் வடபகுதியில் வாழும் நிரந்தரமான இந்திய வம்சாவளி மக்களிலும் பார்க்க வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர். அதாவது நிரந்தரமான இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் இப்பிரதேசத்தின் மக்களுடன் தொழில் ரீதியில் சார்ந்திருக்கும் தன்மை காணப்பட சிப்பந்தி ஊழியர்கள், வீட்டு வேலைக்காரர்கள் இப் பிரதேசத்தின் மக்களுக்குக் கீழ்ப்பட்டு அடிமைகளாக வாழும் துர்ப்பாக்கியம் காணப்படுகின்றது. அதே சமயத்தில் இந்திய வம்சாவளிப் பிராமணர்கள் இப்பிரதேசத்தின் மதிப்பிற்குரிய மக்களாக இங்குள்ள பிராமணர்களிலும் பார்க்க மேம்பாடுடையவர்கள் எனப் போற்றப்படுகிறர்கள். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. இதற்குக் காரணம் இங்குள்ள சாதிக் கருத்துக்களே. அரசாங்கத் தொழில்களைப் பொறுத்தவரையில் பிரஜாவுரிமையற்ற காரணத்தினுல் புறக்கணிக்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் வடபகுதியில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின் மக்கள், அடிப்படையில் போதியளவு உணவு, நிரந்தர இருப்பிட, உடை, வசதிகனையோ, கொண்டிருக்கவில்லை. தொழில் ரீதியிலும், சாதி அமைப்பிலும் மிகவும் அடிமட்டங் களைக் கொண்டிருப்பதனல் அவர்களில் பெரும்பாலோரின் வாழ்ககை இன்னமும் அடிமட்டத்து உயிர் வாழ் தற்கான போராட்டமாகவே உள்ளது. இதற்குப் பிரஜாவுரிமையற்றவர்கள் என்பதும், பிரதேச மக்களுடன் இன்னமும் ஒரு மட்டத்திலானவர்கள் என்ற நிலைப்பாடும் இல்லாதவர்களாகும்.

இவ்வம்சாவளி மக்களின் சமூகவுணர்வு இவர்களின் பொருளாதார நிலைப்பாடுகளி ஞலும், பிரதேசத் தமிழ் இன மக்களின் செயற்பாடுகளினலும் உருவாக்கப்படுகின்றது. இவ்வடிப்படைப் பொருளாதார அமைப்பு இலங்கையிலும், இந்தியாவிலேயும் ஒரேமாதிரியாகக் காணப்படுகின்றது. ஏனெனில் சர்வதேச ரீதியில் முதலாளித் துவ ஏகாதிபத்தியமும், அதனுடைய கால னித்துவக் கொள்கையும், இவர்களின் சமூக உணர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தின. பின்னர் ஏற்படும் மாற்றங்களுக்குப் பிரதேச மக்களின் செயற்பாடும் காரணமாக அமைகின்றது.

இவர்கள், இங்கே வடபகுதியில் அநாதரவான நிலைமையையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இச்சமூகம், பல்வேறு சாதி, தொழில், குழுக்களாகப் பிரிந்து, பிரதேச மக்களுடன் சேரமுடியாத சமூகப் பிரிவுணர்வுகளுடன், அரசியல் ரீதியில் பிரஜாவுரிமை அற்றவர்களாக, நாடு அற் றவர்களாகத் தவறுசெய்த கைதி போன்ற குற்றவுணர்வுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் இருப்பதைக் காணலாம். இவ்வுணர்வுகள் பிரதேச மக்களிலிருந்து பிரிந்து வாழும் மனப்போக்கையே பிரதிபலிக்கின் றன. உதாரணமாக, ஒரு சம்பவத்தில் அவன் குற்றவாளியாயிருந்து, பிரதேச மக் களிற் பல ரா ல் தாக்கப்படும்பொழுது தான் நாடற்றவன் என்பதினல், "அடித்தால் யாரும் தட்டிக்கேட்பதற்கு முடியாது, அதுதான் பலர் சேர்ந்து அடிக்கிறார்கள்" எனக் கருதுகின்ருன். உண்மையில் அச்சம் பவத்தித்கு யார் பொறுப்பாக, குற்றவாளி யாக இருந்தாலும், இவ்வாறே தாக்கப்படுவார்கள் என்பதனை அவன் உணர்வதில்லை. இது அவனிடமுள்ள தாழ்வுமனப்பான்மை யினுல் ஏற்பட்டதாகும்.

இத்தாழ்வு மனப்பான்மை மாத்திர மல்ல, அவர்களிடமுள்ள மரபு ரீதியிலான புழக்கவழக்கங்கள்கூட அருகிவருகின்றன, ன்கவிடப்படுகின்றன. இதற்குக் காரணம் விருப்பமின்மை என்பதல்ல. அவர்களின் அடிப்படைத் தேவையின் உக்கிரமான போராட்டமும், பிரதேசச் சூழலும் மரபுகளைப் போற்றுவதற்கோ அல்லது பின் பற்றுவதற்கோ இடமளிப்பதில்லை. அத்துடன் அவற்றைக் கைக்கொண்டாலும் பல பிரதேசப் பழக்கவழக்கங்களையும் கையாண்டிருப்பதைக் காணலாம்.

இம்மக்களின் குடும்ப உறவுகள் சிதைவடைந்தே காணப்படுகின்றன. இந்தியாவிலிருந்து வரும்யொழுதே கணவனைப் பிரிந்து வந்த மனைவி, மனைவியைப் பிரிந்துவந்த கணவன், சகோதரர்களைப் பிரிந்து வந்தவர்கள், உறவினர்களைப் பிரிந்து வந்தவர்கள் என்ற நிலைதான் காணப்பட்டது. இங்கு வந்த பின்னர், இங்கு வந்த சாதி உறவுகளுக்குள் புதிய உறவுகள் ஏற்படுத்தப்ப டன. அவ்வுறவுகளின் சேர்க்கைகள் பின் னர் மீண்டும் உடைந்து, குடும்ப நபர்கள் தனித்தனியாகப் பிரிந்து வாழும் தன்மை ஏற்பட்டது. இதனல் அவர்களின் குடும்ப உறவுகள் இறுக்கமான பாசப் பிணைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. திருமண உறவுகளின் எதிர்பார்ப்புக்கள் இவர்களிடம் அதிகளவு ஆர்வத்திற்குரியதாக, இலட்சியமானதாக, கனவு காணக்கூடியதாக அமைந்திருக்கவில்லை. ஆண் பெண் திருமண உறவுகளை அவதானிக்கும்போது பல வேறுபாடுகளைக் காண முடியும் வயோதிபமடைந்த ஆண், வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்யும்போது அவனுடைய முதல் மனைவி பிறிதொரு நபருடன் வாழும்பொழுதும் மூத்த மகனே அல்லது மகளோ தன்னுடைய குழந்தைகளுடன் தகப்பனின் இத்திருமணத்தை நடத்திவை பார்கள். அது மாத்திரமல்ல, சாதியை பாதுகாக்கப் பெண்களுக்கு இளம் வயதிலும் திருமணம் செய்யப்படும், சிறுவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரும்பாலும் வாலிபப் பருவம் வந்தவுடன் திருமணங்கள் முடிந்துவிடும். அவை காதல் திருமணங்கள் என்றோ பெற்றோர்கள்  பார்த்தவை என்றே, சீதனம் பெற்றுக்கொண்டோ நடைபெறுபவையல்ல. மாறாக அப்போதிருந்த சூழ்நிலையின் வசதியில் இவை முடித்துவிடப்படுகின்றன. இதனுல் திருமணம் என்ற சொல்லின் அர்த்தமும், அவற் றுக்கான விளக்கங்களும் இவர்களின் திரு மண விடயங்களில் இவர்களினால் ஆராயப்படுவதில்லை. அவை பற்றி அக்கறை செலுத்தப்படுவதுமில்லை. இத்துரதிர்ஷ்டங்களுக்கு யார் பொறுப்பாளிகள்? அத்துடன் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள், இப் பிரதேச மக்களுடன் மேற்கொள்ளுகின்ற திருமண உறவுகளும் ஒருபக்கச் சார்புடை யதே ஆகும். அதாவது இவ்வம்சாவளி மக் களின் ஆண்கள் தான் இலங்கை வம்சாவளிப் பெண்களைத் திருமணம் செய்கின்றனர். பிரதேச இலங்கை வம்சாவளி ஆண் கள் இந்திய வம்சாவளிப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதில்லை. ஏனெனில் இங்கு நிலப்பிரபுத்துவத்தின், சொத்துடைமையின் எச்ச சொச்சங்கள் பெண்களுக்குச் சீதனப் பொருளாகக் காணப்படுகின்றது. இதனால் இந்திய வம்சாவளித் தமிழினத்தின் ஆண்கள் பிரதேசத்தின் இலங்கை வம்சாவளிப் பெண்களைச் சீதனம் இன்றி, அல்லது குறைந்தளவில் சீதனம் பெற்றுத் திருமணம் செய்கின்றனர். இவை இலங்கைப் பிரஜை உரிமை பெறுவதற்காகவும் நடைபெறலாம். ஆனால் இத்திருமணங்கனை எடுத்துப்பார்த்தாலும் அ வை சிதைந்து போன உறவுகளிலிருந்தே ஏற்படுகின்றன. பொருளாதார வசதி குறைந்த குடும்பங்கள் ஆண் துணையற்ற குடும்பங்கள், விதவைகள், கீழ்மட்டத்துப் பெண்களாகவே அமைந்திருக்கின்றன. அதே சமயத்தில் பிரதேச இலங்கை வம்சாவளி ஆண்கள் இந்திய வம்சாவளிப் பெண்களைத திருமணம் செய்துகொள்ளாமைக்கு அவையே காரணங்களாகவுள்ளன. திருமணம் செய்வதாக இருந்தால் சீதனம் இவர்களால் கொடுக்க முடியாது. அத்துடன் திருமணம் நடை பெற்றாலும் அடிமட்ட இலங்கை வம்சாவளி ஆண்களுக்கும், மனைவி அற்றவர்களுக்கும் வயோதிபம் அடைந்தவர்களுக்கும் மட்டுமே நடைபெறும். ஆகவே, இல்வினத்தைப் பொறுத்தமட்டில் திருமணம், விருப்பங்களையோ, ஆசைகளையோ பொறுத்ததல்ல. மாறாகப் பொருளாதாரங்களைப் பொறுத்ததாகும்.

மேலும் இம்மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமையினல் குடும்பத்தில் உள்ள சகலரும் தொழில்களில் ஈடுபடும் நிலை உள்ளது. சிறுவர்கள் தங்களுக்குரிய குணவியல்புகளைக் கொண்டிருப்பதில்லை. மாறாகச் சிறு வயதில் சமூகப் பாதுகாப்பின்மையினல் வெம்பி முதியவர்கள் ஆகிவிடு கின்றனர். அவர்களுக்குரிய கல்வி வசதி கிடைப்பதில்லை. பெற்றோர்கள் அக்கறை செலுத்துவதில்லை. சில பாடசாலைகள் இவர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. படித்தும் பயன் இல்லை என்பதனல் சிறு வயதிலேயே தொழிலுக்கு அனுப்பப்படுகின் றனர். அத்துடன் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் தொழிலுக்குப் போகின்றனர், எனவே பொருளாதாரத் தேவை அவர்கள்

எல்லோரையும் உழைக்கும் நிர்ப்பந்தத்திற் குள் தள்ளிவிடுகிறது. இதனல் இவ் இந்திய வம்சாவளி மக்களின் சமூக உணர்வானது இந்தப் பிரதேசத்தைத் தனக்குச் சொந்த மானது என்னும் மனப்பான்மையை ஏற் படுத்தவில்லை. அத்துடன் இவர்களிடம் எம் பொழுதுமே விரக்தி மனப்பான்மையே காணப்படுடுறது. தாங்கள் தனிமைப்பட்டவர்கள் என்பதாகவும், தாங்கள் பின்தங்கியவர்கள் என்பதாகவும் கருதுகின்றனர். இவர்களைச் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியின ருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந் நாடுகளின் இந்திய வம்சாவளியினர், அந் நாட்டின் பிரஜாவுரிமை பெற்றிருப்பதுடன் தொழில் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு என்பன கிடைப்பதஞல் அந்நாடுகளைத் தங்களுடைய சொந்த நாடாகவே கருதுகின்றனர். அவர்கள் பொருளாதார நிலையும் உயர்வானது. ஆனல் அவ்வுணைர்வு வடபகுதியில் வாழும் இந்திய வம்சாமளியினரிடம் இல்லாதிருப்பதைக் குறித்து வியப்படைவதற்கொன்றுமில்லை.

இவ்வின மக்களிடமிருந்து கலையுணர்வுகளையும் செயற்பாடுகளையும் எதிர்பார்க்கமுடியாது. இற்றைவரைக்கும் வடபகுதி இந்திய வம்சாவளி மக்களால் படைக்கப்பட்ட எந்தவித நாவ்லகளேயோ, சிறுகதைகளையோ, வேறு இலக்கிய வடிவங்களையோ இனங்காணமுடியாது. ஆனால் மலையகத்து இந்திய வம்சாவளி மக்களிடமிருந்து பல்வேறு இலக்கிய வடிவங்கள் தோன்றியிருப்பதை அறிந்துகொள்ளமுடியும். ஏனெனில் அவர்களும் பிரஜரவுரிமை அற்றவர்களாக இருந்தாலும், பொருளா தார ரீதியில் ஓர் அடிப்படையான அமைப்பையும், தங்களுக்கிடையில் தங்களையே அங்கீகரித்துக்கொள்ளும் பலமான சமூக அமைப்பையும் கொண்டுள்ளதால் கலை, இலக்கிய வடிவங்கள் உருவெடுக்கின்றன. ஆனால் வடபகுதி இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் ஓர் அடிப்படையான பொருளாதாரத்தையோ தங்களுக்குள் தங்களையே அங்கீகரிக்கும் செயற்பாட்டையோ கொண் டிருக்கமுடியாத அளவில் உதிரிகளாகக் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்

வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மிகவும் பின்தங்கியதான ஒரு செயற்பாட்டையே கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியிலான போராட்டங்களை அரசியல் ரீதியிலான போராட்டங்களாக மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இவர்களால் நடாத்தப்படவில்லை. இங்கு தோற்றுவிக்கப்பட்ட சில அமைப்புக்கள் கூட அரசியல் ரீதியான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளவில்லை. மாறாகப் பொருளாதார நலன்களைக் குறுகிய வட்டத்திற்குள், குறித்த சமூகத்திற்கு மாத்திரம் நிறைவேற்றிக்கொள்வதற்கு உருவாக்கப்பட்டவையாகும். இதனால் இவ்வகை அமைப்புக்கள்கூட வெற்றிகரமாக இயங்கவில்லை. அத்துடன் அரசியல் ரீதியிலான சில நடவடிக்கைகளை இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் சில தனிப்பட்ட நபர்கள் பல்வேறு கொள்கைகளையுடைய பிரதேச ரீதியிலான கட்சிகளின் அடிமட் டத்து ஊழியர்களாகவே செயற்பட்டனர். குறிப்பாக இளைஞர்கள் சில அரசின் நிறுவனங்களில் மேல்மட்டச் செயற்பாடுகளி லும் அதிகளவு அக்கறையுடன் செயற்பட்டனர், நாடற்றவர்கள் என்பதனால் அரசியலில் பிரவேசிக்க முடியாத தன்மையினுல் பிரதேசத்தின் எந்தவொரு அரசியல் கட்சிகளும் இம்மக்கள் பால் எள்ளளவும் கவனம் செலுத்தவில்லை. அதே சமயத்தில் இவ் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் இந்நாட்டின் அரசியலின் பாலும், இப்பிரதேச அரசியல் கட்சிகளின் பாலும், இங்குள்ள அரசியல் சூழ்நிலையிலும் அக்கறை செலுத்தாது, தென்னிந்திய7வின் பிரதேச ரீதியிலமைந்த கட்சிகளின் மீது அக்கறை கொண்டிருந்தனர். அங்குள்ள சூழ்நிலைகளிலேயே தங்களது கவனத்தைச் செலுத்தினர்.

மேற்கூறிய நிலைமைகள், வடபிரதேசத் தில் (யாழ்க் குடாநாட்டில்) வாழும் இந் திய வம்சாவளித் தமிழின மக்களின் போக்குகளாகும். அதே சமயத்தில் இப்பிரதேசத்தின் ஏனைய இடங்களில் வாழும், குறிப்பாக வவுனியா, மன்னர், கிளிநொச்சி போன்ற இடங்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் மலையகத்திலிருந்து குடியேறிய மக்களாகும். இம்மக்கள் பெருந்தோட்டத்தில் கூலிவேலை செய்தவர்கள் இங்கு விவசாயத் தொழிலைச் செய்கின்னர். அத்துடன் அத்துமீறிய காணிகளிலேயே பெருமளவு குடியேறியுள்ளனர். இங்கும் இம்மலையகத்து இந்திய வம்சாவளி மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்தின் இலங்கை மக்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாகே தொழில் செய்கின்றனர். இம்மலையக இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் கடின உழைப்பாளிகள் என்பதனலும், கல்வியறிவு அற்றவர்கள் என்பதனாலும், சொத்துடைமை அற்றவர்கள் என்பதனாலும் இவர்களை வடபகுதியின் வன்னிப்பகுதி செறிந்து கொண்டது. இவர்களினல் எந்தவிதமான பிரச்சினைகளும் தமக்கு ஏற்படாது என்பதனால் இப்பிரதேசங்களின் விவசாய நிலங்களில் கூலித் தொழிலாளர்களாக இவர்களைப் பயன்படுத்தப்பட்டனர். இங்கும் இம்மக்கள் அடிமட்டத் தேவைக்கான உயிர் போராட்டத்தையே நடத்துகின்றனர் இவர்களின் சமூக உணர்வும், செயற்ப பாடும் நிரந்தரமற்ற பாதுகாப்பின்மையை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உதிரிகளாக வாழும் இந் இந்திய வம்சாவளித் தமிழினத்தவர்களை விட வன்னிப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் பயன்லயகத்தின் எவ்வாறு தொழில் ரீதியில் ஒன்றிணைந்திருந்தனரோ அதே போன்று இங்கேயும் விவசாயத்தின் கூலித் தொழிலாளர்களாக ஒன்றிணைந்துள்ளனர். இதனால் சில நடவடிக்கைகளை இவர்கள் துணிந்து மேற்கொள்ளமுடிகின்றது. இதனாற் தான் ,மலையகத்தில் வேரூன்றிய பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இப்பகுதிகளிலும் இம் மக்களினூடாகத் தொழிற்சங்க அமைப்புக்களை ஏற்படுத்தி அவை ஊடாக இப்பிரதேச மக்களின் வாழ்க்கையில் ஒரளவு அக் கறை செலுத்தும் செயற்பாடு அதிகரித்து வருகின்றது. இது நிரந்தரமான இந்திய வம்சாவளித் தமிழினத்திற்குள்ள நிலை மையைவிடச் சா த க ம ன ஒரம்சமாகும்.

இவ்வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் மத்தியில் இன்று இளைஞர்களின் செபற்பாட்டினூடாகப் புதிய தொரு விழிப்புணர்வு ஏற்பட்டுவருகின்றது. ஏனெனில் இல்விளைஞர்கள் இந்நாட்டில் பிறந்தவர்களினுதலினல் இந்நாட்டையே தங்களுடைய சொந்த நாடாகக் கருதுவதுடன் தங்களை ஒதுக்கிவைத்திருக்கும் நாடற்றவர்கள் என்னும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளி மக்களுடன் சேர்ந்து தங்களுக்குரிய பொருளாதாரச் செயற்பாடு களை மேற்கொள்வதற்கும், அதனை அரசியல் ரீதியான போராட்டமாக முன்வைத்துச் செல்வதுடன் மாத்திரம் இந்த நாட்டில் புதியதொரு சமுதாய மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும். ஸ்தாபன ரீதியிலான அமைப்பு முறையை ஏற்படுத்த விழைகின்றனர். ஏனெனில் ஸ்தாபன அமைப்பே பிரதேச மக்களுடன் இணைவதற்கும், உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் ஒரு பாலமாக அமையும். இந்த ரீதியிலான மாற்ற உணர்வுகளே இன்று வளர்ந்துவரும் பேர்க்காகும். எனவே வட பகுதியின் இந்திய வம்சாவளித் தமிழினத்தின் விடிவும், மலையகத்து இந்திய வம்சாவளியினரின் விடிவும், பிரதேசத்தின் இலங்கை வம்சாவளியினரின் விடிவும், ஏன் இலங்கையில் வாழும் சுரண்டப்படும் வர்க் கங்களின் விடிவும் இளைய தலைமுறையின ரிடயே விடப்பட்டுள்ளது எனலாம்.
"தமிழ் ஐக்கிய முண்ணணி ஆதரவாளர்கள் எல்லோருமே வகுப்புவாதிகள் அல்ல. ஆகவே வகுப்பு வாதிகள் மிகச் சிறுபான்மையினரே என்பது உறுதியாகவில்லையr ? இது மகிழ்ச்சிக்குரிய விடயமில்லையா” - சி. சிவசேகரம்.
யாழ்ப்பாண வளாக 1977-ம் ஆண்டு 1 மாணவர் சங்க மாணவர்சங்க தேர்தலும் மலையகத் தமிழ் மாணவர்களும் (ஆவணங்களிலிருந்து).
தொகுப்பு- மூக்கையா நடராஜா.

யாழ் வேளாள குல உருவாக்கமும் அதிகாரத்துவமும் - ச.தில்லைநடேசன்

யாழ்ப்பாண சமூகத்தின் ஆதிக்க சக்தியாகக் கொள்ளப்படும் வேளாள குழுமத்தின் உருவாக்கம், ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப தமது அதிகாரத்துவத்தைத் தக்க வைக்கும் தன்மை, அதற்கான பொருளாதார, கலாச்சார, கருத்தியல் கட்டுமானங்கள் பற்றிய தேடலே இக்கட்டுரையாகும்.
யாழ்ப்பாண சமூகம் பற்றிய புறவயமான சமூகவியல் பார்வை கொண்ட ஆய்வுகள் மிகவும் குறைவு. இருப்பவைகளும் சமூக அமைப்பை விவரிக்கின்றதேயன்றி சமூக, பொருளாதார, வரலாற்று வழி நின்று சமூக உருவாக்கம் பற்றியவையோ அதன் அசைவியக்கம் பற்றியவையோ அல்ல. யாழ்ப்பாண சமூகத்தின் மையமாக கொள்ளப்படுபவர்கள் வேளாளர் என்பது ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இந்த வேளாளர் என்பவர்கள் யார்? இவர்கள்தான் எப்போதும் மேலாதிக்க சக்தியாக இருந்தவர்களா? இவர்களின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது? தமது அதிகாரத்தைக் காலமாற்றங்களுக்கு ஏற்ப பேணுவதற்கு இவர்களுக்கு உதவும் கட்டுமானங்கள் எவை?

யாழ்ப்பாண வேளாளர் சமூகம் ஒரு சாதியா? இதனை மறுக்கின்றார், 1957இல் யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்த பேங்ஸ். வேளாளர் பகுதி என்றே இவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்கிற எவரும் இதனை ஒப்புக் கொள்ளுவார்கள். வேளாளர் ஒரு சாதியல்ல. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்து ஐரோப்பியர் காலத்தினூடு விவசாய நிலத்தை மையமாகக் கொண்டு உருவான குழுமம். இதில் பல சாதிகள் பங்குபற்றியுள்ளன.

வேளாளர் - வெள்ளாளர் 
தமிழக-ஈழ சூழலில் வேளாளர், வெள்ளாளர் என்ற இரு சொற்களும் வழக்கில் உண்டு. இவை இரண்டும் ஒன்றுபோல் கருதப்பட்டாலும் இரண்டு சொற்களின் தோற்றுவாயும் வெவ்வேறு மூலங்கள் கொண்டது.

வேளாளர் 
இச்சொல்லின் மூலம் ‘வேள்’ என்பதாகும். இச் சொல்லுக்கு மூலத் திராவிட மொழியில் விருப்பம், தலைமை, ஒளிவிடு என்ற பொருள் உண்டு. யாழ்ப்பாண பேரகராதி ‘வேள்’ என்ற சொல்லுக்கு மண், தலைவன் என்று பொருள் தருகின்றது.

வேள் என்பது மன்னனுக்கும் வேந்தனுக்கும் இடையிலான அதிகாரப் படிநிலைச் சொல். வேள்கள் ஐந்திணைகளில் இருந்தும் தோன்றிய குடித் தலைவர்கள் என நிறுவுகின்றார், பழந் தமிழகத்தில் அரசுருவாக்கம் பற்றி ஆய்வு செய்த சு. பூங்குன்றன் (தொல்குடிகள்). கால் நடையுத்தத்தில் வணிக மையங்களைக் கைப்பற்றும் பூசல்களில் வெற்றி பெற்றவர்கள் ‘வேள்கள்’ ஆனார்கள். ‘வேள்’ என்பது குறிப்பிட்ட அதிகாரப் படிநிலைக் குரிய சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளாளருக்கும் விவசாயத்துக்கும்  ஆரம்பத்தில் எதுவிதத் தொடர்பும் இல்லை என நிறுவுகின்றார் நெல்லை நெடுமாறன்.  தமிழகத்தைப் போல் ஈழத்திலும் இச்சொல் சமகாலத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிராமிக் கல்வெட்டுகளிலும் மட்பாண்ட சாசனங்களிலும் இச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இச்சொல் இலங்கையில் பாவிக்கப்படுவதற்கு இலங்கை பெருங்கற்கால மக்கள் திராவிடராக இருந்ததே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அத்துடன் தமிழக வாணிபத் தொடர்பும் காரணமாகச் சொல்லப் படுகின்றது.

இலங்கையில் ‘வேள்’ என்ற சொல் வாணிபத் தலைவர் களுக்கு அதிகம் பாவிக்கப்பட்டாலும் அரச அதிகாரச் சொல்லா கவும் வழக்கில் இருந்துள்ளது. அரசு நிலைபெற்று வேந்தர்கள் தோன்றிய பின்பு வேள்கள் படைத்தலைவர்களாக, சமாந்தகர்களாக, வன்னிபங்கனாக மாறினார்கள். இவர்கள் போர்களில் அரசர்களுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தார்கள். வெற்றி பெற்ற புதிய நிலங்கள் இவர்களுக்கு மானியங்களாகக் கொடுக்கப் பட்டது.

வெள்ளாளர் 
தமிழ் இலக்கிய சமூகப் பார்வை நிலங்களை ஐந்திணை களாகப் பார்த்தது. இவை குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை எனக் குறிக்கப்படும். முல்லை நிலத்திலேயே பயிர்ச் செய்கை தொடங்கியபோதும் செம்மைப்படுத்தப்பட்ட விவசாயம் மருத நிலத்திலேயே உருவானது. பெருங்கற்காலத்தில் இரும் பின் அறிமுகத்துடனும் குளநீர்ப்பாசன வசதியுடனும் ஆரம்பிக்கப்பட்ட இவ்விவசாயம் செய்த மக்களை உழவர் என இலக்கியங்கள் குறிக்கும். இவர்களின் தலைமக்களை ஊரன், மகிழன், கிழான் எனக் குறிப்பர். மழைநீரை நம்பிய இவ்விவசாய மக்களை காராளர் எனவும் குறிப்பர். கி.பி. 4ம், 5ம் நுhற்றாண்டில் ஏரி, ஆறு, நதி நீர்ப்பாசன முறைகள் பெருவளர்ச்சி கண்டது. வாய்க்கால்களில் ஓடி வரும் வெள்ளத்தை (நீர்) தேக்கி வைத்து விவசாயம் செய்தவர்கள் வெள்ளாளர்கள் ஆனார்கள். இவ்வெள்ளாளர் மருதநிலத்து தலைமாந்தரில் இருந்து தோன்றினார்கள் என்பதே யதார்த்தம். நீர்ப்பாசனத்தை அவர்களே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். பின்பு நீர்ப்பாசன அதிகாரம் முற்றுமுழுதாக அரச நிர்வாகத்துக்குள் சென்றது.

ஈழத்திலும் நீர்ப்பாசனமுறை சமகாலத்தில் வளர்ச்சி அடைந்தது. ஆயினும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அல்லது இலங்கையின் வடபகுதியில் இது விருத்தியடையவில்லை. அதற்கான ஆறுகள், நதிகள், யாழ்ப்பாணக் குடாநாட்டில் இல்லை. உண்மையில் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் என்ற சாதியே தோன்ற வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஈழத் தமிழரும் வேள்களும் 
தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்களது அரசுருவாக்கம் நடந் தேறிய பிரதேசமாக யாழ்ப்பாணமே உள்ளது. பல்வேறு குறுநில வன்னிபத் தமைமைகள் இலங்கையில் வன்னி, கிழக்கு பிரதேசங்களில் உருவாகி இருந்தாலும் ஓரளவு வலிமையான அரசுரு வாக்கம் யாழ்ப்பாண அரசுருவாக்கமே.

யாழ்ப்பாண இராச்சியம் கி. பி. 13ம் நுhற்றாண்டில் உருவானது எனக்கொள்ளப்பட்டாலும், அதற்கு முன்னோடியாக ஆட்சி அதிகார மையங்கள் இலங்கையின் வடபகுதியில் இருந்துள்ளன. நாகதீபம் எனும் ஆட்சிப் பிரதேசம்பற்றி பாளி நுhல்கள் தகவல் தருகின்றன. அது உண்மையென ‘வல்லிபுர பொன் ஏடு’ நிரூபிக் கின்றது. தொல்லியல் சாசன சான்றுகளின்படி ஆனைக்கோட் டையில் கிடைத்த ‘கோவேத’ முத்திரை, பூநகரி வேளான் சாசனம், வல்லிபுர ஏட்டில் உள்ள ‘ராய’ என்ற குறிப்பு, இவைகள் ஆட்சி அதிகாரத்துடன் தொடர்புடைய சொற்கள் ஆகும். வன்னிப் பிரதேசத்திலும் வேள் ஓட்டைக் கொண்ட சாசனங்கள் மகாவம்சம் குறிப்பிடும் வேள்நாடு, வேள்கம, வடபகுதி தலைவர் பற்றிய குறிப்புகள் ஆட்சி அதிகார மையங்கள் இருந்ததற்கான சான்றுகள் ஆகும். இதனுடன் வெடி அரசன் பற்றிய ஐதீகமும் கவனிக்கப்படவேண்டியது.

யாழ்ப்பாண இராச்சியமும் - வேளாந்தலைவர்களும்
யாழ்ப்பாண இராச்சியம் என்று குறிக்கப்படும் அரசு 13ம் நுhற்றாண்டில் பாண்டியர் சார்பாக படை எடுத்து வந்த ஆரியச் சக்கர வர்த்தி தலைமையில் உருவானது என்பது ஆய்வாளர்கள் நிறுவிய ஒன்று. எனினும் இதற்கு முன்னோடியாக நாகதீப அரசு, சோழர் அரசு, கலிங்க மகான் அரசு, சாவகன் அரசு ஆகியன இருந்தன. சோழர்கள் இலங்கையில் ஆட்சியை நிறுவியபோது முன்பிருந்த ஆட்சி அலகுகளை நிலமானிய கட்டுமானங்கள் மூலம் பலப்படுத்தினார்கள். ஊர், பற்று, நாடு, வாணிபம், வளநாடு போன்ற ஆட்சிக் கட்டுமானங்கள் ஈழத்திலும் உருவானது.

யாழ்ப்பாண அரசு உருவானபோது ஆரியச் சக்கரவர்த்தியின் படைத் தளபதிகள், பிரதானிகள், வடஇலங்கை நிர்வாகிகளாக, முதலிகளாக, வன்னிபன்களா, உடையார்களாக பதவி பெற்றார்கள் என்கிறார் வரலாற்றாய்வாளர் சி. பத்மநாதன். இவர்களே வேளாந் தலைவர்கள் எனவும் வன்னியர்கள் எனவும் அழைக்கப்பட்டவர்கள். இப்படைத் தளபதிகள் பல்வேறு குல, சாதிகளில் இருந்து உருவாகி வந்தவர்கள். இதற்கு கைலாய மாலையும் யாழ்ப்பாண வைபவமாலையும் வையா பாடலும் சான்று தருகின்றது.

இலக்கியங்கள் குறிக்கும் 24 வேளாளர் தலைவர்களில், மழவர்-9, தேவர்-2, பாணர்-2, உடையார்-1, செட்டியார்-1, முதலிகள்-2, மீதி 6 வேளாந்தலைவர்களின் சாதி தெரியவில்லை என்கிறார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை (யாழ்ப்பாணக் குடி யேற்றம்).

முதலி, பிள்ளை
முதலி, பிள்ளை என்பனவும் பதவிநிலைப் பெயர்களே. இவை ஊர், பிரதேசத் தலைவர்களைக் குறிக்க தமிழகத்தில் வழக்கில் இருந்தது. தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் (சோழநாடு, தொண்டைநாடு) முதலி என்ற பெயரும், தெற்குப் பகுதியில் (பாண்டிநாடு) பிள்ளை என்ற பெயரும் வழக்கில் இருந்தது. ஈழத்தில் சோழர் வழக்கான முதலி என்ற பெயரே வழக்குக்கு வந்தது. எனினும் பிள்ளை என்பது சாதிப்பெயராக வழக்கில் உண்டு.

தமிழக வேளாளரும் - ஈழ வேளாளரும் 
தமிழகத்தில் சாதிய வடிவம் காலகட்டங்களுக்கு ஏற்ப மாற்றம் பெற்றே வந்துள்ளது. தொழில்வழிக் குழுக்களாக இருந் தவை, அகமணம் மூலம் சாதியாக நிறுவனப்படுத்தப்பட்டதும் ஏறுவரிசையில் சமூகத்தில் அவை கட்டமைக்கப்பட்டதும் நெடுங்கால சமூக இயக்கத்தில் நடந்தேறியது. சாதியத்தின் உச்ச வடிவம் விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலேயே நிகழ்ந்தது. ஆட்சிமொழி வேறுபாடு, பார்ப்பனிய செல்வாக்கு அதிகரிப்பு, வைணவமதம் அரசமதமாக மாறியது போன்றவை நிகழ்ந்த இக்காலத்தில் பூர்வீக வேளாளர் (பூர்வீக குறுநிலத் தலைவர்கள் + வெள்ளாளர்) சைவத் தமிழ் இறுக்கத்தைக் கொண்டு வந்ததும் மடங்கள் அமைத்து செயற்படத் தொடங்கியதும் நடந்தது. இக்காலத்தில்தான் வேளாளர் + வெள்ளாளர் இணைப்பு அல்லது கலப்பு தமிழகத்திலே முழுமை பெற்றது.

ஈழத்தில் வேறுமாதிரியான இயக்கம் நிகழ்ந்தது. யாழ்ப்பாண இராச்சியம் விஜயநகர மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் தனது தனித்துவத்தைப் பேணியது. போர்த்துக்கேயர் வந்து தலையிடும்வரை சுதந்திர அரசாகவே யாழ்ப்பாண அரசு இயங்கியது. அதன் அரசர்களாக ஆரியச் சக்கரவர்த்தி பரம்பரை திகழ்ந்தாலும் அதன் தூண்களாக இருந்தவர்கள் வேளான் முதலிகளே. இவ் வேளான் முதலிகள் பல்வேறு சாதிகளில் இருந்து வந்திருந்தாலும் தங்கள் அதிகாரத்தைப் பேணுவதற்கு தங்களுக்குள் திருமண உறவுகளைப் பேணிக் கொண்டார்கள். அத்துடன் யாழ்ப்பாண அரச குடும்பத்துடன் திருமணம் செய்து தங்கள் அந்தஸ்தையும் பறைசாற்றிக் கொண்டார்கள்.

போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தில் தலையிட்ட போது பல்வேறு நெருக்கடிகளை யாழ்ப்பாண அதிகார வர்க்கம் சந்தித்தது. அரச குடும்பத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் இரு மூத்த அரச குமாரர்கள் மரணத்தைத் தழுவ சங்கிலியன் ஆட்சிபீடத்தில் ஏறினான். பரநிருபசிங்கன் போர்த்துக் கேயர் பக்கம் சாய்ந்தான். முதலிகள் சங்கிலியன் சார்பானவர்கள். பரநிருபசிங்கன் சார்பானவர்களை இரு பகுதியாகப் பிரித்தார்கள். போர்த்துக்கேயரால் பரநிருபசிங்கனுக்கு அரச பதவியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனாலும் கி. பி. 1591இல்  யாழ்ப்பாண இராச்சியத்தை தங்கள் மேலாதிக்கத் துக்குள் கொண்டு வந்தபொழுது பரநிருபசிங்கன் வாரிசுகளுக்கு (பேரன்மாருக்கு) யாழ்ப்பாணத்தின் முக்கிய ஊர்களின் முதலி பதவிகளை வழங்கினார்கள். ஏற்கனவே முதலிகளாக இருந்தவர்கள் இதனால் அதிருப்தி அடைந்தார்கள். அரச குடும்ப முதலிகள் (மடப்பள்ளி வேளாளர்) ஓ வேள முதலிகள் முரண் இக் காலத்தில் உருவாகத் தொடங்கியது.

யாழ்ப்பாண இராச்சியம் முழுமையாக போர்த்துக்கேயர் கையில் கி. பி. 1619இல் விழுந்தபோது முடிக்குரிய அரச குடும்பம் நாடு கடத்தப்பட்டு கோவாவுக்கும் போர்த்துக்கல்லுக்கும் கொண்டு செல்லப்பட்டது. மற்றைய அரச குடும்பத்தவர்களுக்கும் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டது. இவர்களும் இவர்கள் சார்ந்த குடும்பத்தவருமே பின்பு மடப்பள்ளி வேளாளர் என அழைக்கப்பட்டார்கள். இவர்களைச் சார்ந்து போர் மறவர்களான கள்ளர், மறவர், அகம்படியார், மலையாள அகம்படியார் (நாயர், தீயர், பணிக்கர்), கரையார், சிவியார் செயல்பட்டதாகத் தெரி கின்றது.

போர்த்துக்கேயர் காலம் யாழ்ப்பாண வரலாற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. தோம்புகள் எழுதப்பட்டு காணிகள் விற்கப்பட்டன. இதனைப் பொருளாதார பலமுள்ள சாதிகள் வாங்கின. இத்தோம்புகளை எழுத உதவியவர்கள் வேளான் முதலிகளே. இத்தோம்புகளிலேயே விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் ‘வேளாளர்’ என முதன்முதலில் குறிக்கப்பட்டார்கள். வேளாளர் தலைமையில் மடப்பள்ளி வேளாளருக்கு எதிரான குழுமம் அணி திரண்டது. பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ‘வேளாளர்’ எனப் பதிவுரீதியில் அங்கீகரிக்கப்படல் இதன்மூலம் நடந்தது.

ஆரம்பத்தில் தோன்றிய இவ்வேளாள குழுமத்துக்குள் பாணர், மழவர், தேவர், உடையார், செட்டி, சீர்பரதர், வேளாள சாணார் போன்றோர் கலந்தனர். இவ்வேளாள குழுமம் ஒல்லாந்தர் வருகையை ஊக்குவித்தது. ஒல்லாந்தரும் இவர்கள் விசுவாசத் துக்குத் தக்கபடி பதவிகளை வழங்கினார்கள். இதனால்தான் மடப்பள்ளி வேளாளனான பூதத்தம்பி முதலி போர்த்துக்கேயருடன் இணைந்து சதி முயற்சியில் இறங்கினான். அது மேலும் ஆபத்தில் முடிந்தது. இருந்த பதவிகளும் பறிபோனது. இதனைத் தங்களுக்குச் சார்பாக்கிய வேளான் முதலிகள் மக்களைச் சுரண்ட ஒல்லாந்தருக்குத் துணை போனார்கள். மக்கள் நேரடியாக ஒல்லாந்தருடன் தொடர்பு கொள்ளும் வழிகளைத் தடுத்து தமது அதிகாரத்தினைப் பேணினர்.

மடப்பள்ளியினரும் மற்றவர்களும் தங்களுக்குப் பதவிகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். வேளான் முதலிகளிடம் முழுப் பதவிகளும் இருப்பது ஆபத்தென உணர்ந்த ஒல்லாந்தர் கி. பி. 1694இல் மடப்பள்ளியினருக்கும் ஏனையோருக்கும் பதவிகளை வழங்கினர். இதனை எதிர்த்து வேளாளர் கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி அடக்கப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் கி. பி. 1694க்குப் பின்பு முதலி பகுவகித்த சாதிகள்:

1. வேளாளர்,
2. மடப்பள்ளி வேளாளர்,
3. செட்டிமார்,
4. பரதேசி (கள்ளர், மறவர்),
5. மலையாளி (மலையாள அகம்படியார்),
6. கரையார்,
7. தனக்காரர்,
8. சிவியார்

இம் முதலி பதவி வகித்த சாதிகளுக்கும் நிலமானியங்கள் கிடைத்தன. இது இவர்கள் பின்பு வேளாள குழுமத்துக்குள் கலக்கக் காரணமாக இருந்தது. வேளாள ஒ மடப்பள்ளி வேளாள மோதல் ஆங்கிலேயர் கால முற்பகுதிவரை நீடித்தது. கி. பி. 1833இல் ககூல்புறூக் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டபோது ஒன்றுபட்ட இலங்கை உருவானது. தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவருக்கு வேலைவாய்ப்பு, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர் எனில் உத்தியோகங்களுக்கு முன் னுரிமை கொடுக்கப்பட்டது. பணப்பயிர் செய்கை ஊக்குவிக்கப் பட்டது. இது சமூக மட்டத்தில் பலத்த தாக்கத்தைச் செலுத் தியது.

ஒன்றுபட்ட இலங்கை, ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்பட்ட தென்னாசிய, தென்கிழக்காசிய சூழல், முதலாளித்துவ சமூகக் கட்டுமானம் என்ற பின்புலத்தில் வேளாள ஒ மடப்பள்ளி வேளாள முரண் காணாமல் போனது. இவர்களுடன் கள்ளர், மறவர், அகம் படியார், மலையாள அகம்படியார், தனக்காரர், செட்டி, தவசிகள், சிவியார் (வேளாள சிவியார்) என்பவர்கள் இணைந்த வேளாளர் குழுமம் ஆங்கிலேயர் காலக் கடைசியில் தோன்றி இருந்தது. இதற்கு ஆங்கிலக்கல்வி முறைகளும் உத்தியோகங்களும் நிலஉடைமையோடு சேர்ந்து உதவியது.

மறுபுறத்தில் கி. பி. 1810இல் கொண்டு வரப்பட்ட இலவச சேணுமுறை தடைச்சட்டம், கி. பி. 1844இல் கொண்டு வரப்பட்ட அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் என்பன நடுத்தர தலித் மக்களை நகர வைத்தது. இவர்களும் ஆங்கிலக் கல்வியை உத்தியோக வாய்ப்புகளை நாடினர்.

அதிகாரத்துவமும் கருத்தியலும்
யாழ்ப்பாண வேளாளர் அதிகாரத்தைத் தொடர்ந்து பேணு வதற்கு பல காரணிகள் துணை நின்றன.
1. பொருளாதாரம்
2. எண்ணிக்கை
3. கலாச்சாரம்
4. சமயம்
5. சட்டம்
6. கோயில்
7. பள்ளிக்கூடம்
8. இலக்கியம்
9. அரசியல்

பொருளாதாரம்
விவசாய நிலத்தைப் பொருளாதார மையமாகக் கொண்டு சுழலும் வேளாள குழுமம் பல்வேறு சாதிகளின் இணைவில் தோன்றி இருந்தாலும் இவர்களின் இணைவைச் சாத்தியமாக் கியது நிலமே ஆகும். இவர்களது மேலாதிக்கத்துக்கு காரண மாக உள்ளவற்றில் நிலத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

எண்ணிக்கை
1957ம் ஆண்டு பாங்ஸ் கொடுத்த புள்ளி விபரத்தின்படி வேளாளர் எண்ணிக்கை 50% ஆகும். இது வேளாளரை எண்ணிக்கை அடிப்படையில் வலிமையானவர்களாக மாற்றுகின்றது. இது எப்போதும் இருந்த நிலைமையில்லை என்பதுவும் உண்மையாகும். கி. பி. 1690க்கு முன்பு யாழ்ப்பாணச் சனத்தொகையில் வேளாளர் வீதம் கிட்டத்தட்ட 10ம% ஆகும். கிபி 1990இல் 30ம% ஆகவும் 1830இல் 40% ஆகவும் 1950 அளவில் 50% ஆகவும் மாறியது. இது வேளாளர் பல சாதிகளை உள்ளிழுத்துக் கொண்டதனால் ஏற்பட்ட மாற்றம் என்பது வெள்ளிடைமலை. இதன் மூலம் வேளாளர் பாராளுமன்றம் முதல் உள்ளுராட்சிச் சபை வரை தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. வேளாள குழுமம் உள்ளுர எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அதனை வெளித் தெரியாமல் மறைப்பது இதனால்தான்.

கல்வி
அரசர் காலம் தொடக்கம் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயர் காலம்வரை கல்விபெற்ற சமூகமாக வேளாள குழுமமே இருந்தது. அத்துடன் கல்வியை மற்ற சமூகங்களுக்கு மறுத்தவர்களாகவும் வேளாளர்கள் உள்ளார்கள். கல்விமூலம் கிடைத்த பதவிகளைத் தக்க வைக்கும் சமூகமாகவே வேளாளர் இருந்தனர். வேளாளர் பாடசாலைகள் நிறுவியபோதும் ஆரம் பத்தில் மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கலாச்சாரம்
கலாச்சார ரீதியில் தீண்டாமையையும் புறம் ஒதுக்கலையும் மற்றைய சமூகங்களுக்கு வழங்கிய வேளாளர் கலாச்சாரத் தளத்தில் மற்றையவரை விளிம்புநிலையில் வைத்திருக்கவே விரும்பினர். உடை, பாவிக்கும் பொருட்கள், கலாச்சார சின்னங்கள் போன்றவற்றை மற்றையவர்களுக்குத் தடைசெய்தார்கள். 

சமயம்
யாழ்ப்பாண வேளாள குழுமத்தை பொதுவாக சைவத்துடனும் தமிழுடனும் இணைத்துப் பார்க்கும் போக்கு உள்ளது. உண்மையில் இதுவும் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். இதனைக் கட்டமைத்தவர் ஆறுமுக நாவலர் (1822-1879). இந்துத்துவத் திற்கு எதிராக நாவலர் இதனைக் கட்டமைத்தார். இதன்மூலம் சைவ சித்தாந்தத்தையும் ஆகமநெறிகளையும் தூக்கிப் பிடித்தார். இது மறுபுறத்தில் சாதிய ஒடுக்குமுறை உக்கிரம் பெறவும் உதவியது. 

போர்த்துக்கேயர் காலத்தில் கி. பி. 1638இல் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக் கராக இருந்தார்கள். ஒல்லாந்தர் காலத்தில் கி. பி.1671இல் டச்சு அறிக்கையின்படி 142357 பேர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழ்ந்ததாகவும் அதில் 141456பேர் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலேயர் கால ஆரம்பத்தில் கி. பி. 1802க்குப் பின்பே பலர் இந்துமதத்திற்குத் திரும்பினர். எனினும் 1812க்குப் பின்பான மிசனரிமாரும் 1833க்குப் பின்பு புரட்டஸ்தாந்து கிறிஸ் தவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னுரிமை கிடைத்ததும் கல்விக்காவும் உத்தியோகத்துக்காகவும் பலர் மதம் மாறத் தொடங்கினர். இதற்கு எதிராக, கி. பி. 1842இல் சைவவேளாளரின் எதிர்வினையாக ‘சைவத்தமிழ்’ கருத்து வைக்கப்பட்டு அது வேளாளர் கருத்தியலாக மாறியது.

சைவவேளாளர் நவீனத்துவத்தை ஆதரித்தார்கள். ஆனால் அதனை மற்றையவர்களுக்குச் சுவற விடுவதற்குத் தயாராக இல்லை. இதுவே ஆறுமுக நாவலர் தொடக்கம் சேர் பொன் இராமநாதன்வரை தொடர்ந்தது. இதற்கு இவர்கள் தேசவழமைச் சட்டத்தை துணைக்கழைத்துக் கொண்டார்கள்.

சட்டம்
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் வேளாளர் மேலா திக்கத்தைப் பேண வழிவகை செய்தது தேசவழமைச் சட்டமே. போர்த்துக்கேயர் காலத்தில் தேச வழமைகள் அங்கீகரிக் கப்பட்டு இருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் அவை தொகுக்கப்பட்டு எழுதப்பட்டது.

கோயில்
யாழ்ப்பாண சமூக கட்டமைப்பைக் கட்டிக் காக்க அரசர் களுக்கும் பின்பு வேளாளருக்கும் கோயில்களும் உதவியது. ஒல்லாந்தர்கால நடுப்பகுதியில் கோயில்கள் தோன்றத் தொடங்கினாலும் ஆங்கிலேயர் காலத்திலேயே ஆகம முறைப் படுத்தல் முறையாக அமுல்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பல கோயில்களில் சாதிமுறையில் திருவிழா கொடுக்கப்பட்டது. இறங்கு வரிசைப்படி வெளிகள் பங்கீடு செய்யப்பட்டதும் நடைமுறையில் இருந்தது. இன்னும் இருக்கின்றது. இதனை எதிர்த்த நடுத்தர சாதிகள் தங்களுக்கு கோயில்கள் கட்டிக் கொண்டன. (கிறிஸ்தவர்களிலும் இது நடந்தது). கோயில்களில் நடந்த ஒதுக்கல்களுக்கு எதிராக பின்பு போராட்டங்கள் வெடித்தன. இன்னும் தலித்துக்கள் உள்நுழைய முடியாத கோயில்கள் யாழ்ப்பாணத்தில் உண்டு.

இலக்கியம்
யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் தோன்றிய இலக்கியங்கள் அரசை நிலைநிறுத்தும் இலக்கியங்களாகவும் அரசுக்கு கருத்து நிலை அந்தஸ்தை வழங்கும் இலக்கியங்களாகவும் இருந்தது. அவ்விலக்கியங்களில் வேளாளர்பற்றிய மிகைப்படுத்தப்பட்ட புலமைத்துவ விளையாட்டு உண்டு. ஒல்லாந்தர் காலத்தில் ஆக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலையும், தண்டி கனகராயன் பள்ளும், கரவை வேலன் கோவையும் வேளாளரைச் சிறப்பிக்கத் தோன்றியவையே.

அரசியல்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தரகு முதலாளிகளாக மாறிய யாழ்ப்பாண வேளாள ஆதிக்க சக்திகள் இலங்கை அரசியலில் முக்கிய சக்தியாகச் செயற்பட ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் ஆங்கிலக் கல்வி கற்ற வேளாள குழுமம் இலங்கை, இந்தியா, தென்னாசியா, தென்கிழக்காசியா, தென்னாபிரிக்கா, மொறி சியஸ் போன்ற இடங்களில் ஆங்கிலேயரின் நம்பிக்கைக்குரிய சேவையாளர்களாக மாறினார்கள்.சென்ற இடமெங்கும் அதிகாரத்தைப் பேணும் முயற்சியில் அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்குத் துணைபோய் தங்கள் மேலாண்மையைப் பேணிக்கொண்டார்கள். இதன் சமூக, அரசியல் விளைவுகள் பின்பு பலமாகவே எதிரொலித்தது.

குறிப்பு 1:
வேளாளர் என்னும் குழுமத்திலே சோழர்காலம் துவக்கம் படைத் தளபதிகளாக, பிரதானிகளாக, நிர்வாகிகளாக வந்தவர்கள் படைவீரர்கள். போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலங்களில் முதலிகளாக மாறி நிலமானியம் பெற்றவர்கள் என பல சாதிகள் இணைந்தனர். அவையாவன: மழவர், பாணர், தேவர், செட்டி, கள்ளர், மறவர், அகம்படி, மலையாள அகம்படி (நாயர், தீயர், பணிக்கர்) கணக்கர், மடப்பள்ளி வேளாளர், சீர்பரதர், பட்டினவர், தனக்காரர், தவசிகள், வேளாள சாணார், (சாணாரில் இருபகுதிகள் உண்டு) சிவியார் (சிவியாரில் இருபகுதிகள் உண்டு)

குறிப்பு 2:
கரையார்கள் தொடர்ந்து கடலோடு தொடர்பு கொண்டி ருந்ததால் அவர்கள் கடல் சார்ந்தவர்களாக மாறினார்கள். சில சாதிகள் கரையார் சமூகத்திலும் கலந்தனர். தேவர், சீர்பரதர், பட்டினவர். மயிலிட்டிக் கரையாரின் பூர்வீகம் தேவர்கள் என்று தெரிய வருகின்றது.

குறிப்பு 3:
யாழ்ப்பாண வேளாளரில் இப்போது உட்பிரிவுகள் உண்டு.
1. ஆதிசைவவேளாளர் - பிள்ளைமார் 
2. கார்காத்த வேளாளர் - மழவர் 
3. மடப்பள்ளி வேளாளர் - மடப்பள்ளி 
4. செட்டி வேளாளர் - செட்டி 
5. அகம்படி வேளாளர் - அகம்படியார்

குறிப்பு 4:
ஈழத்து வன்னிப தலைவர்களும் பல்வேறு சாதிகளில் இருந்து வந்தவர்களே. வன்னிபம் என்பது பதவிப் பெயரே. மலைய மான்கள், வன்னியர், முக்குவர், படையாட்சி, பாணர் தேவர் போன்றவர்களே வன்னிப பதவிகளை வகித்தனர்.

உசாத்துணை நுhல்கள்:
1. யாழ்ப்பாணக் குடியேற்றம் - முத்துக்குமாரசாமிப்பிள்ளை 
2. வையாபாடல் 
3. கைலாயமாலை 
4. யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகன புலவர் 
5. யாழ்ப்பாண வைபவ கெளமுது - க. வேலுப்பிள்ளை 
6. யாழ்ப்பாண சரித்திரம் - தொகுப்பு : சி.க. சிற்றம்பலம்
7. யாழ்ப்பாணம் - சமூகம் - பண்பாடு - கருத்துநிலை - பேராசிரியர் கா. சிவத்தம்பி, 
8. சிலோன் கசற்றியர்- சைமன் காசிச் செட்டி 
9. இலங்கையில் தமிழர் - பேராசிரியர் கா. இந்திரபாலா 
10. ஈழத்து இலக்கியமும் வரலாறும் - பேரா. சி. பத்மநாதன்
11. சமூக விஞ்ஞானம் - தொல்குடிகள் - ஆர். பூங்குன்றன்
12. தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - கலாநிதி வ. புஸ்பரட்ணம்
13. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு - கலாநிதி முருகர் குணசிங்கம்

நன்றி = ஆரையம்பதி http://www.arayampathy.lk/

நீர்வை : நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யுலிசஸின் குணாம்சமுடையவர் - பேரா.மௌனகுரு

பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்பை நன்றியுடன் பகிர்கிறோம்.
இலியட் ஒடிஸி எனும் கிரேக்க காவியத்தில் ஹோமர் படைத்த பாத்திரம் யூலிசஸ். ஹெலன் எனும் அரச குமாரியை மீட்க 10 ஆண்டுகள் கிரேக்கத்தில் நடை பெற்ற போர் பிரசித்தமானது. கிரேக்க மக்களின் பண்டைய வீரயுக வாழ்வோடு அது சம்பந்தமாக எழுந்த கதைகள் பின்னிப் பிணைந்தவை. பத்து ஆண்டுகள் போரிலும் பத்து ஆண்டுகள் பிரயாணத் திலும் கழித்தவன் யுலிஸஸ்

ஓய்வு என்பதே அறியாதவன்,

சும்மா இருக்கத் தெரியாதவன்.

புதிய. புதிய அனுபவங்களைத் தேடுபவன்
. புதிய புதிய திசைகளை நோக்கிச் செல்ல விரும்புவன
தேடல் நோக்கு அவனோடு பிறந்த ஒன்று.

கிழப்பருவமெய்திய யுலிசஸ் சொந்த ஊருக்கு மீள்கிறான்

. இளமைப் பருவத்தில் துடிதுடிப்போடு ஓடி ஆடித் திரிவதைப் போல இப்போது இருக்க அவன்முதுமை உடல் இடம் தருவதாயில்லை.

எனினும் ஊர் வந்து. ஓய்வு பெற்ற அவனால் எல்லோரையும் போல உண்டு, உடுத்து உறங்கி வறிதே இருக்க முடியவில்லை.

சுறுசுறுப்பான அவன் மனம் அதற்கு இடம் தரவில்லை.

மற்றவர்கள் “சும்மா” வாழ்வது அவனுக்கு வறிதாகத் தெரிகிறது

ஆங்கிலக் கவிஞர் தெனிசன் பாடிய இலியட் ஒடிசியில் வரும் யுலிசஸ் கூற்றை மொழி பெயர்த்துத் தந்துள்ளார் விபுலானந்த அடிகளார்

சும்மா இருப்பதை வெறுத்த யுலிசஸ்

பெறுபயன் சிறிதே, பெறுபயன் சிறிதே
வறிதிங்குறையும் மன்னன் யானே’

எனத் தன்னைத்தானே விமர்சித்துக் கொள்கிறான்
.
விளைவு குன்றிய களர் நிலமும்
புகைபடிந்த சாப்பாடும்,
மூப்பு வந்து சேர்ந்த மனைவியும் வந்து சேர,
எதுவும் செய்யாமல் வறிதேயிருப்பது அவனுக்கு வாழ்க்கையில் அலுப்பையே தருகின்றது.

என்னிழல் வாழ்வோர்
என்னியல் பறியார்
உண்பார், துயில்வார்:
செம்மை நலமிலாச்
சிறியோர்’

எனத் தன்னைச்சூழ சாதாரண வாழ்க்கை வாழும் மக்களைப் பரிதாபத்தோடு நோக்கும் அவன்
தான் பிரயாணத்திற் பெற்ற அனுபவங்களை நினைவு கூருகின்றான்.

செழுமையான பயன்மிக்க அந்த நாட்களை கூறுகிறான்.

விழைவுறு மனனோடு
அலைவுறு நாளில்
அளப்பில கண்டேன்
அறிந்தனபலவே
எத்தனை நகரம்
எத்தனை மக்கள்
எத்தனை ஒழுக்கம்
எத்தனை அவைக்களம்
.

எனத்தான் கண்ட
நகரம்,
மக்கள்,
ஒழுக்கங்கள்,
அரசவைகள்,
அரசியல்கள்
அத்தனையும் மகிழ்வோடு நினைவு கூர்வதுடன் தனது சாதனைகளையும் நினைக்கிறான்.

அந்த அனுபவத்திரட்சியினால் அவன் பெறும் ஞானம் பெரிது.
வாழ்க்கை என்பது உண்டு உடுத்து உறங்கி வாழும் சிறிய வட்டமன்று.
அத பெரிய வட்டம்.
சிறிய வட்ட வாழ்க்கைக்கப்பாலும் விடயங்கள் உள்ளன என்பதே அந்த ஞானம்.

வாழ்க்கை வட்டத்து
எல்லையில் இகந்த
வேற்றுப் புலங்கள்
மிகப் பல உள
செல்வழிச் செல்வழி
சேணிடை அகல்வன்.

என்கிறான் யுலிசஸ்

, ஆம் வாழ்க்கையை ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழாமல் தேடல் நோக்கோடு வாழ்க்கையைப் பார்ப்பவன் வேறு பல விடயங்களையும் வாழ்விற் காண்பான்.

வாழ்வின் அர்த்தத்தை,
வாழ்வின் அனுபவங்களைத்
தேடிச் செல்லச் செல்ல அவை இன்னும் இன்னும் என அகண்ட கொண்டே இருக்கும்

. அத்தகைய தேடல் எண்ணமுடையோன் ஓய்வு அறியா உளத்தினன்

. இத்தகைய உள்ளமுடையோர்க்குச் சும்மா இருக்கும் பொழுதுகள் அவப் பொழுதுகளாகவே தோன்றும்

அந்த. அவப்பொழுதுகளை அனபவித்த யுலிசஸ்

வாளா உயிர்த்தல்
வாழ்க்கையாமோ
அறிவு நிறைதலும்
அருஞ் செயல்புரிதலும்
ஓரிரு பிறவியில்
ஒழியும் நீர்மையவோ

என்கிறான்.

பிறவிதோறும் அறிவைத் தேடவேண்டும்.
பிறவி தோறும் அருஞ்செயல் புரியவேண்டும்
. இதுவே யுலிசஸின் நோக்கு
.
எனினும் அவனுக்கு வயது சென்றுவிட்டது
.
கிழவனாகி விட்டான்.

இறப்பதற்கு இன்னும் சில நாட்கள் தான் உண்டு.
இறப்பைப் பற்றிக் வலைப் படவேண்டிய யுலிசஸ் அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாது வாழும் நாளை அர்த்தமுடையதாக்க எண்ணுகிறான்.

யாண்டு பல கழிந்தன
ஈண்டு இப்பிறவியில்
ஏஞ்சி நாள் ஒரு சிலவே
அங்கவை
புதுப் பயன் விளையும் நாளாகுக.

எனக் கூறும் அவனது கூற்றில்

எஞ்சிய நாளையும் பயனுடன் கழிக்க வேண்டும் என்ற வாழ்க்கைப் பிடிப்பும் புலனாகின்றது.

நடை தளர்ந்து விட்டது.
திரை விழுந்து விட் ட து
உடல் முதிர்ந்து விட்டது
தோற்றம் மாறிவிட் ட து
உடல் இயக்கம் குறைந்து விட்டது

எனினும் அவனது ஆசையைப் பாருங்கள்.

விதிப்பட
மக்கள் யாத்த எல்லையினிகந்து
குணகடற் குளிக்கும் வான் மீன்போல
அறிவு நிறைதற் கிவ் அயல் கடல் கடக்க
நரைமுதிர் உள்ளம் நாடி நின்றதுவே.

மூப்பு அவனுக்கு ஒருதடை இல்லை

. அறிவுதேடுதலே அவனது வேட்கை.

சாதல் வருமுன் இன்னும் இன்னும் எனப் பயன்தரு காரியங்கள் புரிவதே அவன் நோக்கு.

தான் மாத்திரம் அப்படிச் செய்வது குறிகிய நோக்கு.
ஏனையோரையும் தான் கண்ட உன்னதவழி அழைப்பது விசால நோக்கு.

நண்பர்களையும் தன்னுடன் அழைக்கிறான் யுலிசஸ்

வம்மின் நண்பீர்,
என்னுடன் உழன்நீர்
யானும் நீரும்
ஆண்டினில் முதிர்ந்தனம்
மூப்பினும் வினையுள
. ஆக்கமும் உளவே

சாதல் எய்துமுன் மேதகவுடைய செயல் சில புரிகுவம்,
என்பது அவன் அழைப்பு.
‘மூப்பினும் வினையுள’
என்ற அடிகள் நயமிக்கவை.
மூப்பு நிலையிலும் செய்வதற்கு அதிகம் உண்டு என நினைக்கிறான்
மூப்பு அவனைப் பயப்படுத்தவில்லை

சாவதற்கு முன்னரும் ஏதும் செய்ய வேண்டும் என்பதே அவன் எண்ணம்

“இரிந்தன பலவெனின்
இருப்பவும் பலவே’
என்கிறான்

இவ்வரிகளில் அவன் உலக நோக்கு புலப்படுகிறது
.
இவ்வுலகத்தை மேலும் மேலும் அறிய,
மேலும் மேலும் துய்க்க,
வயோதிபப் பருவத்திலும் அறிய,
மரணம் வரும் வரை அறிய நினைக்கும்

யுலிசஸ்

காலம் சென்ற நீர்வை பொன்னையனை ஞாபகபடுத்துகிறான்

நம்முன் வாழ்ந்து காலமான நீர்வை பொன்னையனை நான் எனது பல்கலைக்ழக காலத்திலிருந்து அறிவேன்

மாணவப் பருவத்தில் நாம் அவரை ஒரு பயபக்தியுடனேயே அணுகினோம்

1970 களில் அவர் அன்றைய இளைஞர்களுக்கு ஓர் ஆதர்சம்

வேகம் வேகம் வேகம்,

அவரிடமிருகுந்த பெரும் குணாதிசயம்

அவருடைய பேச்சு
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என வெகு கறாராகவே இருக்கும்

அவரது நேர்மையான கண்டிப்பு
அவரது நண்பர்களை அவர் மீது பயமும் மரியாதையும் கொள்ள வைத்த து

கைலாஸ் என விழித்து பேராசிரியர் கைலாச்பதியை அவர் கண்டித்ததையும்

சிவா என விழித்து பேராசிரியர் சிவத்தம்பியை அவர் கண்டித்ததையும் நான் நேரிலேயே கண்டுள்ளேன்

அவர்கள் இருவரும் நீர்வைமீது பயம் கலந்த ஓர் மரியாதை வைத்திருந்தனர்

நீர்வை என்ன சொல்கிறார் இது பற்றி எனக் கேட்பர்

ஹெலனுக்காக நடந்த யுத்த த்தில் வாழ் நாள் முழுவதையும் செலவிட்டவன் காவிய நாயகன் யுலீசஸ்

தொழிலாளர் விவசாயிகளுக்காக நடந்த இன,மத சாதி பிரதேச பேதம் கடந்த் இலங்கைத் தொழிலாள வர்க்கப் போராட்டத்தில் தன் வாழ் நாள் முழுவதையும் செலவிட்ட நம் கால நாயகன் நீர்வை பொன்னையன்

மூப்பினும் இயங்கியவன் யுலிசஸ்

தன் முதிர் வயதிலும் இயங்கியவர் நீர்வை பொன்னையன்

தன் மாத்திரம் இயங்காது தன்னோடொத்த மூப்பு மிகுந்தோரையும்
யுலி சசைப் போல இயங்குங்கள் எனக் கூறி இயங்கிக் காட்டியவர் நீர்வை பொன்னையன்.

1960, 70 இலகையின் தொழிலாள வர்க்க எழுச்சியினதும் அதன் வீர மிகுந்த போராட்ட வரலாறும் அறிந்த அனைவரும் நீர்வை பொன்னையனை நன்கு அறிவர்

ஒரு சகாப்தத்தின் பழம் தலை முறையில் இன்றும் எஞ்சி நிற்போர் ஓரிருவரே

அந்தத் தலைமுறை வேகமாக மாறும் இவ்வுலகத்தையும்

தறிகெட்டு ஓடும் இளம் தலைமுறையையையும் கண்டு விக்கித்து நிற்கிறது

எல்லாமே தம் காலத்தில் மாறுவது கண்டும் சோராது இதுவும் மாற வேண்டும் என அர்ப்பணிப்போடு தமது தள்ளாத வயதிலும் தன்னாலான வேலைகளைச் செய்கிறது.

வெற்றி தோல்வி பற்றி அவர்கள் கவலைப்படவில்லை

அவர்களுக்கு அது ஓர் கர்ம யோகம்

செயல் படுதலே அவர்கள் கர்மம்

அந்த ஓரிருவரில் ஒருவர் இன்று நம்மிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டார்

தோழராக
நண்பராக
தந்தையாக
அண்ண்ராக
ஆசிரியனாக
என என்னுடனும் என் மனையாள் சித்திரலேகாவுடனும்

நேற்றுவரை மிக மிக உரிமையோடு பழகிய அந்த திருவுரு

இப்போது நம்முடன் இல்லை

அந்நினைவு
மலையின் பாரம் போல மனதை அழுத்துகிறது

மட்டக்களப்பில் நிற்கிறேன்,

அவரது மரண ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத நாட்டின் சூழல்

மேலும் மேலும் பாரம் தருகிறது.

இந்தப் பாரம் அவரோடு பழகிய அனைவருக்கும் இருக்கும்

சென்று வா எமது முதிர்ச்சி பெற்ற முதியவனான யுலிசஸே

சென்றுவா!

1948 நவம்பர் 15ல் : நாடற்றவரானோம் - (ஈரோஸ் 1985 வெளியீடு)

மலைகளில் உரமானோம் தேநீரில் இரத்தமானோம் ஆனாலும் இந்த மண்ணில்  அந்நியராக்கி விட்டார் ஆதலால் எமது மண்ணை உடைமையாய் மாற்றுவோம் போராடுவோம்
ஈழப்புரட்சி அமைப்பு EROS 
சற்று என்னைக் கவனியுங்கள். முதுகில் கனக்கும் கூடையுடனும் கையில் பூட்டிய விலங்குடனும் உங்கள் முன்னால் வந்து நிற்கும் என்னைக் கவனி யுங்கள். எனது எதிரிகள் நான் பேசக்கூடாது என்பதற்காக முப்பத்தேழு வருடங்களுக்கு முன் எனது வாய்க்குப் பூட்டிய பூட்டையும் கவனித்திருப்பீர்கள். ஆயினும் என்னால் உங்களுடன் பேசமுடியும். எனது உணர்வுகளை நான் ஓசையின்றிப் பேசப் போகி றேன், எனது கதையை, எனது எதிர்காலத்தைப் பற்றியே நான் சொல்லப் போகிறேன். 

நாள் தோறும் நீங்கள் பருகும் தேநீரில் எங்கள் உழைப்புத்தான் ஊறிப்போயிருக்கின்றது. நாங்கள் வருந்தி உழைத்தது வருடாவருடம் இலங்கைத் தீவின் தேசியவருமானத்தில் 400 கோடி ரூபாவென பதிவாகி வருகின்றது. ஆனால் எங்களில் பலருக்கு மாதமொருமுறை ஊதியமாய்க் கிடைத்து வருவது 100 ரூபாய் மட்டுந்தான் இந்தத் தொகையின் எங்கள் இருப்பிடங்களின் இலட்சனாமோ நூறு சதுர அடி விஸ்தீரணத்தில் தான் அடங்கி இருக்கிறது. இதற்குள் தான் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றேம். 

நாங்கள் தொழில் செய்யும் தோட்டத்திலிருந்து வெளியே செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசியத் தேவைகளுக்கு வெளியே செல்வதற்கு சிங்கள அதிகாரி கள் தான் எங்களுக்கு அனுமதி தரவேண்டும். நமது உறவினர் கூட எம்மைத் தேடி வருவதாயிருந்தால் இந்த நிர்வாகிகளே சம்மதம் கொடுக்க வேண்டும். ஆட்சியதிகாரம் எம்மீது மேற்கொள்ளும் எந்தவித மிலேச்சத்தனத்துக்கும் எதிராக நாங்கள் வேலை நிறுத்தம் செய்வதோ, ஊர்வலம் எடுப்பதோ தேசத்துரோகமெனச் சட்டமியற்றப்பட்டுள்ளது. 

எங்கள் பிள்ளைகள் படிப்பதற்கென்று பாடசாலைகள் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவற்றில் படிப்பு என்பது மருந்திற்கும் இல்லை. "கூலிக்கு வந்த உங்களுக்கு படிப்பெதற்கு'' என்பது தான் பாடவிதானமாய் அமைந்துள்ளது. எங்கள் மத்தியில் 60 சதவீதமானோர் கையெழுத்திடவும் முடியாதவர்களாய் காணப்படுகின்றனர். 

எங்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. சங்கத் தலைவர்கள் மாதமொருமுறை 10/- ரூபாயை சந்தாப்பணமாக வசூலிக்க எங்களிடம் வந்து போவர். எங்களது சந்தாப்பணத்தில் சுகமாக வாழும் இவர்களால் எங்களுக்குக் கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு, எங்களில் எவரும் இறந்து போய்விட்டால் சவப்பெட்டிக்கும் அன்றைய செலவுக்கும் இவர்கள் செய்யும் பண உதவி ஒன்றுதான். 

வருடாவருடம் 400 கோடி ரூபாயை வருமானமாக நாட்டுக்கு உழைத்துக் கொடுக்கும் நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகளல்லவென்று சட்டக்காகிதத்தில் எழுதிவைத்துள்ளனர். நாங்கள் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் உரியவர்களல்ல. நாங் கள் நாடற்றவர்கள் என்று நாமமிடப்பட்டவர்கள். 

எமக்கிழைக்கும் தீமைகளை எடுத்துச் சொல்ல அரசியல் அரங்கில் வாக்குரிமையும் எமக்கியே, மொத்தத்தில் நாங்கள் நடமாடும் பிணங்களாய் இனவெறியாளரால் மாற்றப்பட்டிருக்கிறோம். 

எமது வருகை 
நாங்கள் இங்கு வந்த கதையையும், மேலும் எமக்கு நேர்ந்த கதியையும் அடுத்து நான் சொல்ல விரும்புகிறேன். 

இலங்கைத் தீவின் மலைப்பகுதியில் சிங்கப்பிட்டியா என்றொரு கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் 1823 இல் கோப்பிச் செடியை பரீட்சார்த்தமாக வளர்ப் பதற்கு விரும்பியிருந்தார் ''ஹென்றி போட்'' என்ற பிரித்தானியர். இவர் தனது விருப்பத்தைச் செவ்வனே செய்ய எங்களில் 14 பேரை தமிழகத்திலிருந்து கொண்டு வந்திருந்தார். இதுவே எமது ஆரம்ப வருகையாய் அமைந்திருந்தது. இங்கு வந்து நாங்கள்பட்ட துன்பத்தில் 600 பவுண்கள் அவருக்கு இலாபமாய்க் கிடைத்திருந்ததாம். 

இவரது முயற்சி மேலும் பலரைக் கவர வைத்தது. பலதனியாரும் உயர் அதிகாரிகளும் கோப்பிச் செய்கை யில் கவனம் செலுத்தினர். கிழக்கிந்திய கம்பெனியும் இம் முயற்சியில் விரும்பி இறங்கியது. இவர்கள் தமது இலாபத்துக்காக எங்களில் பலரையும் தமிழகத்திலி ருந்து இறக்குமதி செய்தனர். 1850 வரை எங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் உடலுழைப்பிற்காகக் கடத்தி வரப்பட்டனர். கோப்பிச்செய்கை, தும்பறை, கம்பளை, பேரதெனியா பகுதிகளில் வேகமாகப் பரவியது. நாங்கள் சிந்திய வியர்வை 1880 இல் 100 கோடி ரூபாய் வருமானமாக வியாபித்திருந்தது. 

கோப்பிச் செய்கை செழித்து வளர்ந்த இந்தக் காலத்தில்தான் இச்செடி மீது நோய் ஒன்று தொற்றிக் கொண்டது. இது விரைவாகப் பரவி கோப்பிச் செய்கைக்கே ஆபத்தைக்கொடுத்தது. இதனால் 1880 இல் கோப்பி யுகம் முடிவுக்கு வந்தது. 

இந்தக் காலத்தில்தான் கோப்பிக்குப் பதில் தேயிலையை நாட்ட பலரும் ஆர்வம் கொண்டனர். ஜேம்ஸ் டெய்லர்'' என்பவர் 1867 இல் 50 ஏக்கர் நிலத்தில் தேயிலை பயிர் செய்து வெற்றியீட்டியிருந்ததே கோப்பிக்குப் பதில் தேயிலையைப் பயன்படுத்த பலரையும் தூண்டி விட்டது. இச்செய்கை ஹற்றன், நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, இரத்தினபுரி  முதலான இடங்களுக்குப் படர்ந்தது. சில இடங்களில் இரப்பர் செய்கையும் ஆரம்பமானது. 

இவற்றிற்கெல்லாம் தொழிலாளர் தேவை அதிகரிக்கவே எங்களில் மேலும் பலரை ஆசைவார்த்தை சொல்லி அழைத்து வந்தனர் பிரித்தானியர். 1939 இந்தியாவில் பயிற்றப்படாத தொழிலாளர் வெளியேறத் தடை விதிக்கும் வரை நாங்க இங்கு கொண்டு வரப்பட்டோம். இந்த ஆண்டில் மலையகம் முழுவதுமாக எங்களில் 10 இலட்சம் பேர் இருந்ததாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தக் காலத்தில் நாங்கள் செய்த அயராத உழைப்பு நாட்டு வருமானத்தில் 80% ஆக உயர்ந்திருந்தது. 

எமது உரிமைகள் பறிபோயின 
நாட்டு வருமானத்தில் 80% ஐ ஈட்டிக் கொடுத்து வந்த நாங்கள் நாளை இந்த நாட்டையே ஆட்டிப் படைத்து விடுவோம் என அஞ்சிய, சிங்கள இனவெறியர் எமது உரிமைகளை மெல்ல மெல்ல பறிக்க முயன்றனர். 1936 இல் அமைக்கப்பட்ட தனிச்சிங்கள மந்திரிசபையை எமக்கெதிராக முதலில் பிரயோகிக்க முனைந்தனர். இந்தச்சபையை அமைத்த அடுத்த ஆண்டே, உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களித்து வந்த எமது உரிமை பறிக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல், 1948 இல் பிரித்தானியர் சுதந்திரம்' கொடுத்தபோது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட டி. எஸ். சேனநாயகா, அதே ஆண்டு நவம்பர் 15 இல் எமது பிரஜா உரிமையையும் பிடுங்கிக் கொண்டார். அந்த நேரத்தில் இலங்கை முழுவதிலும் 30 இலட்சமாக இருந்த தமிழ் பேசும் மக்களில் 10 இலட்சம் பேரான எமக்கு இந்தக் கதி ஏற்பட்டது. நாடற்றவரான எங்களுக்கு வாக்குரிமையும் கிடையாதென்று அடுத்த ஆண்டே இன்னொரு சட்டமும் இயற்றப்பட்டது. 

எமது அடிப்படை உரிமையும், அரசியல் உரிமையும் முற்றாக களையப்பட்ட கையோடு, வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த எம்மினத்தின் மீது இனவெரியானது தனது கவனத்தை திசை திருப்பி இருந்தது. 56 இல் அமுலுக்கு வந்த சிங்களம் மட்டும்'' சட்டத்தைப் பற்றியே இங்கு நான் சொல்ல வருகிறேன். இந்தச் சட்டம் அரசசேவையில் - பட்டிருந்த ஏராளமான தமிழ் மக்களை வேலை இழக்கச் செய்திருந்தது. அதை அடுத்து 70 களில் உயர் கல்வி யில் இனரீதியான தரப்படுத்தல் திணிக்கப்பட்டது. இந்தத் திணிப்பு மாணவர் மத்தியில் தமது எதிர்காலத்தைச் சூனியமாக்கியது. 

நிலங்களும் சுவீகரிக்கப்பட்டன 
இவ்விதமாக, எம்மினத்தின் உரிமைகளை பறித் தெடுத்தவண்ணம், எமது வாழ் நிலங்கள் மீது கவனம் செலுத்தினர். அபிவிருத்தி என்ற பெயரில் எமது நிலங்களை படிப்படியாக அபகரிக்க ஆரம்பித் தனர். முதன் முதலில் (1944 இல்) முல்லோயா தோட்டத்தில் தொழிலாளரை விரட்டி சிங்களவரை குடியிருத்த முயற்சி செய்தனர். இந்த முயற்சி முதலில் தோல்வியில் முடிந்திருந்தாலும் 72இல் மாற்றுப்பயிர் செய்கை "நட்சா'' என்ற போர்வையில் தோட்டங் களில் புகுந்த போது இது சாத்தியமாயிற்று. இந்தத் திட்டங்களினூடாக தோட்டங்களை சுவீகரித்து எங்களை விரட்டியடித்து சிங்களவர்களை குடியமர்த்தினர். நாங்கள் இருந்த இருப்பிடங்களைச் சுற்றியே சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டிருந்தது. அப்போது எங் களில் பலருக்கு நகரவீதிகளே வசிப்பிடங்களாய் மாறின. பிச்சை எடுப்பதே எங்கள் தொழிலாய் மாற்றமடைந் தது. சிறிமா ஆட்சியில், எமக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஜே. ஆர். வந்ததும் ' நட்சா' திட்டமூடு மீண்டும் தொடர்ந்தது. 

“யுனெஸ்கோ” நிறுவனத்தின் நிதியுதவியில் வளர்ந்து சென்ற '' நட்சா'' திட்டம் எங்களில் பலரை மேலும் விரட்டியது. 

எங்களுக்கிவ்விதம் நடந்து வருகையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையும், அம்பாறையும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வந்தது. இந்த இடங்களில் சிங்களக் காடையரை குடும்பங்களாக இருத்தி ஆக்கிரமிப்புகளை நிறைவேற்றி வந்தனர்.

இந்தக் கூட்டம் 58 இலும், 77 இலும் 81 இலும், 83 இலும், எங்கள் மீது சீறிப்பாய்ந்தது. எண்கள் வீடுகள் தீயிடப்பட்டன, ஏராளமானோர்  கொலையுண்டனர், பல பெண்கள் மானமிழந்தனர். ஆட்சியாளரே முன்னின்று நடத்திய இந்தக் கொடுமையை “கலவரம்” என்று கூறி மூடிமறைத்தனர்.

நாட்டை விட்டு விரட்டப்பட்டோம் 
இவ்வாறு நாங்கள் குடியுரிமையும் வாக்குரிமையும், நிலவுரிமையும் மொழியுரிமையும் இழந்த நிலையிலேயே நாட்டை விட்டும் விரட்டப்பட்டோம்.

இலங்கைப் பிரதமர் சிறிமாவும் இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் 1964இல் சந்தித்துப் பேசிய பேச்சுக்களின் விளைவாக எங்களை நடைப்பிணங்களாக நாடுகடத்தும் ஒப்பந்தமொன்று கைச்சாத்தாகி இருந்தது. சிறியா. சாஸ்திரி ஒப்பந்தமானது எங்களில் 9,75,000 பேரை பங்கு போடுவது பற்றித் தீர்மானித்திருந்தது. இதன் படி எங்களில் 3,00,000 பேரை இலங்கை ஏற்பதென் றும் 5,25,000 பேரை இந்தியா ஏற்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. மீதியாயுள்ள 1,50,000 மக்களையும் பற்றி 74இல் தீர்மானிப்பதெனவும் இங்கு பேசப்பட் டது. 74இல் இந்திராகாந்தியும், சிறிமாவும் செய்து கொண்ட சந்திப்பில் மீதி மக்களை பாதிப்பாதியாகப் பிரித்தெடுப்பதென ஒப்பந்தம் செய்தனர். 

ஒப்பந்தமாகிய பின்னர் எங்களிடம் ஒரு விண்ணப்பப்படிவத்தைக் கொடுத்திருந்தனர். அதில் எங்கள் விருப்பம் இந்தியா செல்வதா அல்லது இலங்கையிலி ருப்பதா எனக்கேட்கப்பட்டிருந்தது. எங்களில் 7 இலட்சம் பேர் இலங்கையில் இருப்பதையே விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தனர். இது ஆட்சியாளரின் திட்டங்க ளுக்கு மாறாக வரவே எங்கள் மீது சதித்திட்டங்கள் தீட்டத் தொடங்கினர். 

இந்தியாவில் எங்களுக்கு சுகமான வாழ்க்கை கிடைப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்தபடியே எமது வாழ்விடங்களைப் பறித்து சிங்களக் குடியேற்றங்களைச் செய்யத் தொடங்கினர். இதனால் நாங்கள் இருப்பிடங்களை விட்டு ஓடவேண்டியதாயிற்று. 

1981 இல் ஜெயவர்த்தனா தலைமையில் நடந்த படுகொலைகள் இவர்களது சதி நடவடிக்கைகளின் உச்சமாய் அமைந்திருந்தது. அந்த நேரத்தில் சிறிமா = சாஸ்திரி முப்பந்தம் காலாவதியாகி இருந்தது. இதனே நீடிக்க வேண்டுமென்பது ஜெயவர்த்தனாவின் எண்ண மாய் உருவெடுத்தது - இந்தியாவிற்கு ' தப்பி ஓடுங்கள்' என்ற கோசமுடன் ஆட்சியாளர்களின் காடையர்கள் தோட்டங்களுக்குள் புகுந்தனர். 150 பேருக்கு மேற் பட்டவர்களைக் கொன்று குவித்தனர். 2 கோடி ரூபா பொருட்கள் நாசமாக்கப்பட்டன. பெண்களின் கற்பைச் சூறையாடினர். இந்தக் கலவரத்தால் 40,000 த்திற்கும் அதிகமானவர்கள் அகதிகளாகிப் பரிதவித்தனர்.

இவ்விதமாகக் கொலைவெறியாடிய ஜெயவர்த்தனா சூடுதணியுமுன்பே இந்தியா சென்று பிரதமர் இந்திரா வைச் சந்தித்து ' மக்கள் இந்தியா வர விரும்புகின்றார் கள்; 81 உடன் முடிவடைந்த ஒப்பந்தத்தை நீடிப்போமென' ' வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு பாரதப் பிரதமர் மறுக்கவே அதிருப்தியுற்றவராய் நாடு திரும் பினார் ஜெயவர்த்தனா. 

ஒப்பந்தப்படி எங்களில் சுமார் 4 இலட்சம் பேர் இந்தியாவிற்கு நாடுகடத்தப் பட்டுள்ளனர். இப்போது இலங்கையில் தொழிலாளராயிருக்கின்ற 6,37,000 பேரில் சுமார் 2 இலட்சம் பேருக்கே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. எமது மக்களில் மலையகத்தைச் சார்ந்தவர்களை நாடுகடத்தியது ஒரு புறமிருக்க வடபகுதியில் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களில் 1 லட்சம் பேரை ராணுவத்தை ஏவிவிட்டு இந்தியக் கரைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். 

இத்தனையும் அடுக்கடுக்காய் நிகழ்ந்துவந்த போது நாங்கள் காட்டிய எதிர்ப்புகள் சிலவற்றை இங்கு நான் சொல்ல விரும்புகின்றேன். 
* எமது நிலங்களைச் சிங்கள மயமாக்க முல்லோயாவில் முயன்றபோது கூட்டமாய்ச் சென்று கடுமை யாய் எதிர்த்தோம். அந்த இடத்தில் பொலிசார் சுட்டதில் கோவிந்தனை இழந்த போதும் நாங்கள் எமது மண்ணைக்காக்கத் தயங்காது நின்றோம். எமது உறு தியைக் கண்டு கலங்கிப் போன அன்றைய ஆட் சியாளர்கள் தமது முயற்சிகளை கைவிட்டு பின்வாங்கிக் கொண்டனர்.

* மொழி உரிமையை இழந்த நிலையில் 58 இல் 'ஸ்ரீ'' சட்டம் வந்தபோது, பொகவந்தலாவையில் நாங்கள் காட்டிய எதிர்ப்புகள் காலத்தால் அழியாத வை, அப்போது நாங்கள் செய்த எதிர்ப்பைத் தாங்க முடியாது பிரான்சிஸ் , ஐயாவு ஆகிய இருவரையும் பொலிசார் சுட்டு வீழ்த்தினர். இந்த ஈனச் செயலைக் கண்டு எங்களில் 5,000 பேர் கையில் அகப்பட்ட கருவி களுடன் பொலிசாரையும், இராணுவத்தினரையும் சுற்றி வளைத்தனர். எமது ஆத்திரத்தைக் கண்டு அஞ்சிய இராணுவத்தினர் இடத்தை விட்டு நகர்ந்து சென்றனர்.

* 76இல் டெவன் தோட்டத்தைச் சுவீகரிக்க ஆட்சி யாளர் வந்தபோது அதைத் தடுத்து நிறுத்த நாங்கள் திரண்டோம். அப்போதும் பொலிசார் சுட ஆரம்பித் தார்கள். சிவனுலட்சுமணன் அந்த மண்ணிலேயே உயிர் துறந்தான்.

* இராகலைத் தோட்டத்தில் 83 இல் எம்மை விரட்ட சிங்களவர் கூட்டம் திரண்டு வந்தபோது அதை எதிர்த்து நின்றேம். பின்வாங்கிச் சென்ற இனவெறிக் கூட்டம் மறு நாள் எங்கள் குணசீலனை அடித்துக் கொன்றது.

* எங்களுக்கிழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து கடந்த ஆண்டு ஏழு லட்சம் தொழிலாளர் பத்து நாட் களாய் வேலை நிறுத்தம் செய்து வந்திருந்தனர். ஆட் சியாளர்களிடம் சம்பள உயர்வு கோரியும், பாரபட்சங்களை நீக்கும்படியும் நாங்கள் கோரிக்கைகளை விடுத்திருந்தோம். மலையகம் முழுவதும் ஒன்று திரண்டு செய்த இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாகக் கணிக் கப்பட்டிருந்தது. இங்கு எமது கோரிக்கைகள் முற் நாக நிறைவேற்றப்படாத போதும் எங்கள் ஒற்றுமை ஒருவகை மிரட்டலாய் அமைந்திருந்தது.
ஒரு இனத்தின் இரு தலைமைகள் என்ன செய்தன?
இவ்வாறு நாங்கள் எமது மண்ணுக்காக-இழந்த உரிமைக்காக எமது உயிரையும் துறந்து போராட முன்வந்த போதெல்லாம் எமது தலைமை என்ன செய்தது என்பதை இனி நான் சொல்ல விரும்புகின்றேன். 

ஆட்சியாளர்கள் தமிழ் பேசுவோர்' என்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே அடக்குமுறைகளில் இறங்கி இருந்தனர். இவர்களின் இறுதித் தீர்வில் வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதமே கிடையாது. ஆனால் இந்த மக்களை இணைய விடாது தடுத்து வைத்து அழித்து வந்தது இவர்கள் தந்திரம். இந்த சூழ்ச்சிக்குப் பலியானவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியாகி 76 இல் தமிழீழம்' கோரி தனித்து நின்றனர். வடக்கையும் கிழக் கையும் மாத்திரம் இணைத்து மலையக பண்ணை முற்குக ஒதுக்கிய இவர்களின் கோஷத்தை பின்னால் வந்த விடுதலை இயக்கங்கள் பின்பற்றி நின்றன. இவர்கள் பார்வையில் மலையக மண்ணின் குத்தகைக்காரர் தொண் டமானாக பதிந்திருந்தது. 

இவ்வாறாக ஒரே இனத்தின் இரண்டு தலைமைகள் வெவ் வேறு திசைகளில் தமது இயலாமையை வெளிக்காட்டி உள்ளன. இவர்கள் இருவரும் எமது உணர்வுகளைத் திசைதிருப்புவதிலும் மழுங்கடிப்பதிலுமே கவனம் செலுத்தினர். ஆட்சியாளருடன் நட்புப்பூண்டு எமது எதிர்காலத்தை சுபீட்சமாக்கலாமென இவர்கள் எமக்குப் போதித்து வந்தனர். இவர்கள் போதனையின் போலித்தனங்களையும் இவர்கள் இயலாமையின் வெளிப்பாடுகளையும் இப்போது நாங்கள் இனங்கண்டு விட் டோம். இனியும் இவர்களின் பின்னால் செல்வது எமக்கே அபாயமாகும். 

எங்கள் பிரகடனம் 
இதனால் இப்போது நாங்கள் வடக்கும், கிழக்கும், மலையகமும் இணைந்த வாழ்வையே எமது எதிர்கால மாய் ஏற்று நிற்கிறோம். வடக்கும், கிழக்கும், மலையகமும் இணைந்த எமது வாழ்வை நாம் 'ஈழம்'' என்கி றோம். இதை மீட்பதே எமது பணியாய் பிரகடனம் செய்கிறோம்.

  • நாம் ஈழவர்
  •  நமது மொழி தமிழ் 
  • நம் நாடு ஈழம் 
இப்பிரசுரமானது 15 நவம்பர் 1985 அன்று ஈழமெங்கும் நடைபெறும் ஹர்த்தாலையொட்டி வெளியிடப்படுகிறது.
ஈழத்தில் 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முழு அடைப்பு நடைப்பெற்றதை ஒட்டி வெளியிடப் பட்ட சிறு வெளியீட்டின் ஒளியச்சு. இச்சிறு வெளியீட்டைத் தயாரிக்க அமைக்கப் பட்டக் குழுவில் முக்கிய பங்கு வகித்து எழுதியவர் கி.பி.அரவிந்தன். இவ்வெளியீட்டில் இடம் பெற்றுள்ள ஓவியத்தை வரைந்தவர் ஓவியர் அரஸ். இவ்வோவியம் சுவரொட்டியாக அச்சிடப்பட்டு ஈழம் முழுவதும் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தககது.

கொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது? - அ.மார்க்ஸ்

பேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று பாகங்களில் டாக்டர் புரூஸ் எய்ல்வாட்டின் (Dr.bruce aylward) நேர்காணலை பதிவிடுகிறார்.
நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ள இந்த நேர்காணல் சீனா எவ்வாறு இந்த கொடிய நோயை இத்தனை விரைவாகச் சமாளித்தது என்பதைச் சொல்கிறது. இது பிற முதலாளிய நாடுகளில் எந்த அளவு சாத்தியம் என்பது சிந்திக்கத் தக்கது. பெரிய அளவு மருத்துவம் தனியார் மயப்படுத்தப்பட்ட இந்தியாவில் இது சாத்தியமா என்கிற கேள்விக்குறி நம்முன் பெரிதாக எழுகிறது.
டாக்டர் புரூஸ் எய்ல்வாட் உலக நல நிறுவனத்தின் சார்பாக சீனாவுக்கு கொரானா தாக்குதலை அந்நாடு எவ்வாறு சமளிக்கிறது என்பதை நேரில் கண்டறிய அனுப்பப்பட்ட குழுவின் தலைவர். இரண்டு வார காலங்கள் அங்கு தன் குழுவுடன் தங்கி சீனா எவ்வாறு வியக்கத்தக்க முறையில் அந்தக் கொடுந்த் தாக்குதலைச் சமாளிக்கிறது என்பதை நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் சொல்லியுள்ளார்.

சீன அரசின் உடனடித் தீவிர நடவடிக்கைகளின் ஊடாக பிப்ரவரி தொடக்கத்தில் தினம்தோறும் 3,000 கொரோனா நோயாளிகள் வருகை என்பது இரண்டே வாரங்களில் வெறும் 200 என்பதாகக் குறைக்கப்பட்டதை அவர் வியந்து இந்த நேர்காணலில் பேசுவது நம் கவனத்த்குக்குரியது. நோய்த்தாக்குதல் எண்ணிக்கை இப்படிக் குறைந்தவுடன் சீனாவின் தேங்கிக் கிடந்த பொருளாதாரம் உயிர் பெறும்போது மீண்டும் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் இப்போதைக்கு அதிக எண்ணிக்கையில் உலகின் வேறுபகுதிகளில்தான் மக்கள் இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இன்றைய தாக்குதல் உலகளாவிய தாக்குதல் அல்ல. மாறாக உலக அளவில் ஆங்காங்கு நடக்கும் தாக்குதல் என்பதால் நாம் இதனை ஓரளவு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்கிறார் எய்ல்வார்ட்

சீனாவின் இந்த அனுபவம் பிற நாடுகளிலும் பயன்படுத்தப்படலாம். ஆனால் அது அதி வேகம், பொருட் செலவு, அரசியல் துணிவு, கற்பனைத் திறன் ஆகியவற்றைக் கோரும் ஒரு நடவடிக்கையாக அமையும் என்கிறார் நியூயார்க் டைம்ஸ் சார்பாக இந்த நேர்காணலைச் செய்தவர். போலியோ, எபோலா முதலான உலக அளவிலான நலம் சார்ந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் அனுபவம் மிக்கவர் டாக்டர் எய்ல்வார்ட் என்பது குறிப்பிடத் தக்கது.

நோய்க்குறிகளைத் தொடக்கத்தில் வெளிப்படுத்தாத ஒருவகையான நோய் இது. சோதிக்கும்போது பலருக்கு இந்தத் தாக்குதலுள்ளது தெரியாது. ஓரிரண்டு நாட்களில் அது வெளிப்படத் தொடங்கும். அதேபோல நாட்டில் ஒரு மிகப் பெரிய நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்பதும் முதலில் தெரியாது. பனிமலை ஒன்றின் மேல் நுனியைத்தான் நாம் பார்த்துக் கொண்டுள்ளோம் என்பது முதலில் தெரியாது.

பாதிக்கப்படும் பகுதியில் உள்ள எல்லோரும் முதலில் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கைகழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், வாய்க்கு மூடி அணிதல், கைகுலுக்காது இருத்தல் முதலியன. எல்ல்லா இடங்களிலும் மக்களை நிறுத்தி காய்ச்சல் உள்ளதா எனப் பரிசோதித்தல். அவசியம்.

இவை அனைத்தும் முறையாக சீனாவில் மேற்கொள்ளப்பட்டன.

கொத்துக் கொத்தாக நோய்த்தாக்குதல்கள் இருப்பது ஒரு பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட உடன் பள்ளிகள், தியேட்டர்கள், ஓட்டல்கள் மூடப்பட்டன வுஹான் மற்றும் அதற்கு அருகில் உள்ல நகரங்கள்தான் முழுமையாக 'லாக் டவுன்' செய்யப்பட்டன.

மொத்த மருத்துவ அமைப்பில் 50 சதத்தை சீன அர்சு 'ஆன்லைன்' தொடர்புக்கு மாற்றியது. மக்கள் நேரடியாக வந்து நோய்ப் பரம்பலைச் செய்வது இவ்வாறு தடுக்கப்பட்டது. உங்களுக்கு இன்சுலின் அல்லது இதய நோய் மருந்துகள் என எது தேவையோ அது அவர்கள் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்க்கப்பட்டன.

ஒருவருக்குக் கொரோனா தாக்குதல் இருப்பதாக அவர் கருதினாரானால் அவர் காய்ச்சலுக்கான கிளினிக்கிற்கு அனுப்பட்டார். காய்ச்சல் அளவு, பிற நோய்க்குறிகள் ஆகியவற்றை அவர்கள் சோதிப்பார்கள். உங்கள் மருத்துவ வரலாற்றைக் கேட்பார்கள். நீங்கள் சமீபத்தில் எங்கேனும் பயணம் செய்தீர்களா, வைரஸ் தாக்குதல் உள்ள யாருடனாவது உங்களுக்கு ஏதும் தொடர்பு இருந்ததா என்றெல்லாம் கேட்பார்கள். பிறகு முழுமையாக உங்கள் உடலை 'ஸ்கான்' செய்து பார்ப்பார்கள், ஒவ்வொரு ஸ்கான் எந்திரமும் நாளொன்றுக்கு 200 ஸ்கான்களைச் செய்தன. ஒரு ஸ்கானுக்கு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள்தான்!. சில நேரங்களில் பகுதி ஸ்கான்கள் மட்டும் செய்யப்பட்டன. மேலைத் தேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஒரு ஸ்கான் எந்திரம் ஒரு மணி நேரத்தில் ஒன்று அல்லது இரு ஸ்கான்களைத்தான் செய்ய இயலும். ஸ்காந்தான் செய்தாக வேண்டும். எக்ஸ்ரேக்கள் போதாது. பாதிப்புகள் அதில் தெரியாது. நாம் தேடும் குறிகள் உள்ளனவா இல்லையா என்பதை சிடி ஸ்கான்கள்தான் தெளிவாகக் காட்டும்.

நீங்கள் நோய்த் தாக்குதலுக்கு உட்பட்டதாக ஐயம் உண்டானால். உங்கள் உடலிலிருந்து சோதனைக்குத் தேவையானவை சுரண்டி எடுக்கப்படும். சளி (ஜலதோஷம்), ஃப்ளூ, மூக்குச்சளி ஆகியவற்றுடன் மக்கள் வருவார்கள். ஆனால அவை கோவிட் அல்ல. உடல் குறிகளை வைத்துப் பார்த்தால் 90% காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்; சளி இல்லாத வரட்டு இருமல் உடையவர்களில் 70%, மூச்சுத் திணரல் அல்லது ஏதோ ஒரு சோர்வு என வந்தவர்களில் 30%, மூக்கு ஒழுகலுடன் வந்தவர்களில் வெறும் 4% மக்கள்தான் கோவிட் பாதிப்பு உடையவர்களாக இருந்தனர்.

சுரண்டி எடுக்கப்பட்டது சோதனை செய்து ரிசல்ட் நான்கு மணி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. சமீப காலம்வரை அமெரிக்காவில் கூட அது அட்லான்டா வுக்கு அனுப்பித்தான் சோதனை முடிவுகள் அறியப்பட்டு வந்தன என்பது நினைவுக்குரியது.

அதுவரை மக்கள் வீட்டுக்கு அனுப்படவில்லை. ரிசல்ட் வரும் வரை அவர்கள் அங்குதான் காத்திருக்க வேண்டும். அலைந்து திரிந்து அவர்கள் நோயைப் பிறருக்குக் கடத்துவது இவ்வாறு தடுக்கப்பட்டது.

சோதனை முடிவு 'பாசிட்டிவ்' ஆக இருந்தால் அவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள். நோய்பாதிப்பிலிருந்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்குத் தொடக்கத்தில் 15 நாட்கள் பிடித்தன. குறிகள் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டே நாட்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது எனும் நிலை விரைவில் ஏற்படுத்தப்பட்டது. இது மிக முக்கியமான ஒன்று. நோய்த்தாக்குதல் எளிமையாக ஏற்படக் கூடியவர்களுக்கு நோய் கடத்தப்படுவது இவ்வாறு தடுக்கப்பட்டது.
வைரஸ் தாக்குதல் உறுதியானால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். ஆரம்பத்தில் நோய்த் தொடக்கத்திற்கும் அவர்கள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் தொடங்குவதற்கும் 15 நாட்கள் இடைவெளி இருந்தது. விரைவில் அது வெறும் இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு நோய் பரவுதல் இதன் மூலம் பெரிய அளவில் தடுக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்படல் என்பதற்கும் மருத்துவமனை சிகிச்சை என்பதற்கும் என்ன வேறுபாடு? நோய்க்குறிகள் கடுமையாக இல்லாத நோயாளிகள் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு (isolation centres) அனுப்பப்பட்டனர். 'ஜிம்நாசியம்கள்', 'ஸ்டேடியம்கள்' முதலியன 1000 படுக்கைகள் வரை அமைக்கப்பட்டு அங்கே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது அவர்கள் நேரடியாக மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் அவ்வாறே நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

தாக்குதல் மெலிதானது (Mild) என்றால் சோதனையில் நோய்த் தொற்று தெரியும். காய்ச்சல், இருமல் இருக்கும். நிமோனியாவாகக் கூட அது இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஆக்சிஜன் புகட்டுவது தேவைப்படாது. கடுமையான தாக்குதல் (Severe) என்றால் மூச்சு இழுத்து விடும் வீதம் மிக அதிகமாக இருக்கும். ஆக்சிஜன் 'சேசுரேஷன்' அளவு குறையும். அவர்களுக்கு உடன் ஆக்சிஜன் அளிக்கப்பட வேண்டும் அல்லது வென்டிலேடர் பொருத்தப்பட வேண்டும்.

ஆபத்தான நிலை (Critical) என்றால் சுவாசம் சாத்தியமற்றுப் போகும் நிலை மற்றும் பல உறுப்புக்கள் செயலிழக்கும் (respiratory failure or multi-organ failure) நிலை. இப்படியானவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டோரும் நேரடியாக மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

மருத்துவமனைகளும் பலதரமாகப் பிரிக்கப்பட்டன. தலைசிறந்த மருத்துவமனைகள் அனைத்தும் 'கோவிட் 19' தாக்குதல் சிக்கிச்சைக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டன. உடனடி அறுவை சிகிச்சை தேவையில்லாதவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன. மற்ற மறுத்துவ மனைகள் வழக்கமான சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டன. பெண்கள் பிரசவத்துக்கு வருவார்கள், வேறு நோய்களால் நெருக்கடியான நிலையில் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த மருத்துவமனைகளில் தடங்கலின்று மருத்துவ சேவை தொடர்ந்தது.

புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த மருத்துவ மனைகள் கோவிட் தாக்குடல் சிகிச்சைக்காகச் சீர்திருத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்படுவதற்கான போதிய வசதிகள் இல்லாதபோது நீளமான சிகிச்சைக் கூடங்கள் சுவர்கள் எழுப்பிப் பிரிக்கப்பட்டு சன்னல்கள் பொருத்தப்பட்டன. இப்படியாக "அழுக்கான" மற்றும் "தூய" பகுதிகள் உருவாக்கப்பட்டன. மருத்துவர்கள் உள்ளே நுழைந்தவுடன் உடலை மறைக்கும் 'கவுனை" அணிந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாம். பின்னர் மாற்றுவழி மூலமாக வெளியே வந்து போட்டிருந்த 'கவுனை" களைந்துவிட்டுச் செல்லலாம்.

எபோலா வைரஸ் சிகிச்சை போலத்தான் இதுவும். ஆனால் உடல் திரவக் கசிவுகள் இல்லை என்பதால் அந்த அளவு கிருமி நீக்கம் இங்கு தேவையில்லை.

தீவிர சிகிச்சை எந்த அளவிற்குத் தரமாக இருந்தது எனும் கேள்விக்கு டாக்டர் எய்ல்வர்ட் சொல்வது: "மக்களின் உயிரைக் காப்பது என்பதில் சீனா மிகவும் அக்கறையுள்ள அருமையான நாடு. நமது ஊர்களில், சுவிச்சர்லாந்த் போன்ற நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளைக் காட்டிலும் சீனாவில் மருத்துவ மனைகள் சிறப்பாக உள்ளன. எத்தனை 'வென்டிலேட்டர்கள்' இங்கே உள்ளன என நாம் கேட்டால் "50" என்பார்கள். அம்மாடி! வியப்போம். எத்தனை ECMO (extracorporeal membrane oxygenation machines) உங்களிடம் உள்ளன என்றால் "ஐந்து" என்பார்கள். எங்கள் குழுவில் ஒருவர் புகழ்பெற்ற 'ராபர்ட் கோச்' நிறுவனத்தில் இருந்து வந்தவர். "ஐந்தா? ஜெர்மனியில் மூன்று இருந்தாலே அதிகம்!" என்றார் அவர்.

சரி, இந்த சிகிச்சைக்கெல்லாம் யார் பணம் செலுத்தினார்கள்? அரசு இது குறித்துத் தெளிவாக இருந்தது. சோதனைகள் இலவசம். கோவிட் 19 என்பது உறுதியானால் உங்கள் காப்பீட்டுத் திட்டம் முடியும்போது அரசு எல்லாப் பொறுப்பையும் உடன் ஏற்றுக் கொள்ளும்.

ஆனால் அமெரிக்காவில் இந்த காப்பீடுத் தொகை பெறுவது முதலான பிரச்சினைகளில் சிகிச்சை தாமதமாகும். மக்களுக்குக் கவலை ஏற்படும். "நான் மருத்துவரைச் சென்று பார்த்தால் அதற்கு 100 டாலர் ஆகும். நான் I.C.U வுக்கு அனுப்பப்பட்டால் ஐயோ அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?" - இந்த சிந்தனையே ஒருவரைக் கொன்றுவிடும். அழிவிற்கு இட்டுச் சென்றுவிடும். 'முழுமையான நலப் பாதுகாப்பு' என இவர்கள் முழக்குவதும் உயிர் காப்பும் மோதிக்கொள்ளும் புள்ளி இது. அமெரிக்கா இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்."
மருத்துவத் துறை அல்லாதவர்கள் இதை எப்படி எதிர்கொண்டனர்?
தேசிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்றனர். "பாதிக்கப்பட்ட வுகான் மக்களுக்கு நாம் உதவ வேண்டும்" என்கிற எண்னம்தான் அவர்களிடம் வெளிப்பட்டது, ,"அட இந்த வூகான் நம்மை இந்த ஆபத்தில் சிக்க வைத்ததே" என அவர்கள் யாரும் நினைக்கவில்லை, பிறமாநிலங்களிலிருந்து வூகானுக்கு 40,000 வாலண்டியர்கள் வந்தனர். இவர்களில் பலர் பணி நிமித்தமாக அல்லாமல் தொண்டுள்ளத்துடன் பங்கேற்றனர்.

ஒரு நள்ளிரவில் வூகானை எங்கள் ரயில் அடைந்தது. நாங்கள் இரங்கத் தயாரானோம். இன்னொரு குழுவும் அதில் வந்திருந்தது. அது உதவி புரிய வந்த ஒரு மருத்துவக் குழாம். வூகானில் முடக்கப்பட்டிருந்த மக்களுக்கு எப்படி உணவு கிடைத்தது?

15 மில்லியன் - ஒன்றரைகோடி மக்கள். அவர்கள் அனைவரும் 'ஆன் லைனில்' உணவு ஆர்டர் பண்ணினார்கள். அத்தனை பேர்களுக்கும் சரியாக உணவு கொண்டுவந்து சேர்க்கப்பட்டது.

"சில நேரங்களில் வரும் உணவில் ஏதாவது ஒரு 'ஐட்டம்' குறையும். ஆனால் எனக்கொன்றும் எடை குறையவில்லை." - என்றார் ஒரு பெண்.

அரசு ஊழியர்கள் அவர்களது பணி தவிர மற்ற வேலைகளையும் செய்தனர். ஒரு நெடுஞ்சாலை ஊழியர் காய்ச்சல் இருக்கிறதா எனச் சோதிப்பார். அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொண்டு வந்து தருவார். ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண் எவ்வாறு பாதுகாப்பு 'கவுனை' அணிந்துகொள்வது என மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்கள் என்ன தொற்றுத் தடுப்பு குறித்துப் படித்தவரா?" எனக் கேட்டேன். "இல்லை. நான் இங்கே 'ரிசப்ஷனிஸ்ட்'. இதை நானாகக் கற்றுக் கொண்டேன்" என்றார்,

தரவுகளைக் கையாளவது பெரிய பிரச்சினை. 70,000 நோயாளிகள். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன என்றால் பள்ளிக் கட்டிடங்கள் மூடப்பட்டன என்பதுதான். மற்றபடி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடந்தன.

சிசுவான் எனும் பகுதிக்குப் போனோம். மிகப் பெரிய பரப்பு. கிராமப்புறம். ஆனால் 5G தொடர்புகள் இருந்தன. நாங்கள் தலைநகரில் இருந்தோம். ஒரு அவசர உதவி மையம் அது. மிகப் பெரிய ஒளித் திரை அங்கு அமைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்ளும் பிரச்சினை அவர்களுக்கு. தலைநகர அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டும் பிரச்சினை தீரவில்லை. எனவே அவர்கள் அந்தக் குழுவின் தலைமைக்கு தொலை பேசினர், அவர் 500 கி.மீ தொலைவில் இருந்தார். தொலைபேசியில் வீடியோ காலில் பேசினார். அவர்தான் ஆளுநர்.

Weibo, Tencent, WeChat முதலான செயலிகளின் ஊடாக துல்லியமான தகவல்கள் அவ்வப்போது கேட்பவர்களுக்குத் தரப்பட்டன. கூடவந்த நமது ஊடகவியலாளர்கள், "இதெல்லாம் நம்ம நாட்டில் நடக்காது" என அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தனர்.

சில பத்திரிகையாளர்கள், "இது ஒரு சர்வாதிகார நாடு. மக்கள் பயந்து கொண்டு வேலை செய்கிறார்கள்". அபத்தம். அமைப்புக்கு அப்பாற்பட்ட பலரிடமும் பேசினேன். ஓட்டல்கள், ரயில்கள் இங்கெல்லாம் சந்திப்பவர்களிடம் பேசினேன். ஒரு போர்க்கால நடவடிக்கையைப் போல செயல்பட அவர்கள் திரண்டிருந்தனர். தாங்கள் முன்னணியாளர்கள். மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புள்ளவர்கள் என்கிற உணர்வுடன் அவர்கள் செயல்பட்டனர். சீனர்களை மட்டும் பாதுகாப்பது என்பதல்ல. உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் கடப்பாட்டுடன் அவர்கள் இருந்தனர். வைரஸ் அச்சம்தான் அவர்களின் தூண்டு சக்தியாக இருந்தது.

படிப்படியாக ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரி அவர்கள் மீண்டும் வாழ்வைத் தொடங்கிக் கொண்டுள்ளார்கள். சில இடங்களில் பள்ளிகள் இன்னும் மூடிக் கிடக்கின்றன. சில இடங்களில் அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் உற்ற்பத்தி செய்யப்படுகின்றன. செங்டு வில் 5 மில்லியன் புலம் பெயர் தொழிலாளிகள் உள்ளனர். வேலைக்கு வருபவர்கள் ஒரு மருத்துவரிடம். 'ரிஸ்க்' இல்லை என ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். அது 3 நாட்களுக்குச் செல்லும். பின் ஒரு ரயிலைப் பிடித்து நீங்கள் வேலை செய்யும் இடத்திற்குப் போக வேண்டும். அங்கே இரண்டுவாரம் நீங்களாக குவாரண்டைனில் இருக்க வேண்டும். உங்கள் உடல் வெப்பம் முதலியன் ஃபோன் மூலமே நேரடியாகவோ தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

பாரம்பரிய மருந்துகளும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை சில எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில கலவைகள்தான். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் என அவர்கள் அநினைக்கிறார்கள்.அவை வைரல் எதிர்ப்பு மருந்துகள் அல்ல. ஆனால் அது அவர்களுக்குப் பழக்கமான மருந்து. அவர்கள் அதன் மூலம் நன்றாக இருப்பதாக உணர்கிறார்கள்.

கைகளைக் கிருமிநீக்கம் செய்யப்பயன்படுபவை குவிந்து கிடக்கின்றன. முகமூடியை நாமும் அணிந்துகொள்ள வேண்டும். அது அவர்கள் அரசின் கொளகை. நாங்கள் நோயாளிகளைச் சந்திப்பதில்லை. மருத்துவமனைகளின் ஆபத்தான பகுதிகளுக்கும் (hospital dirty zones) செல்வதில்லை.

சமூக ரீதியாகவும் நாம் அவர்களுக்குத் தொலவாக உள்ளவர்கள். பேருந்துகளில் வரிசைக்கு ஒருவர் என அமர்ந்து கொள்கிறோம். ஓட்டல் அறைகளுக்குச் சாப்பாடு வந்துவிடுகிறது. இல்லாவிட்டால் ஒரு மேசையில் ஒருவர் மட்டும் அமர்ந்து சாப்பிட வேண்டும். கருத்தரங்க அறைகளிலும் அப்படித்தான். ஒரு மேசையில் ஒருவர். மைக் மூலம் பேசிக் கொள்ளலாம். அல்லது குரலை உயர்த்தி சத்தம் போட்டுப் பேசலாம்.

அதனால்தான் நான் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கிறேன். ஆனால் என்னை சோதித்துக் கொண்டேன். எனக்கு கோவிட் இல்லை. சோதித்துப் பார்த்துவிட்டேன்.

யாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத்


1926 ஆம் ஆண்டின் மார்கழி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் சுமார் 400 தமிழர்கள் யாழ்ப்பாணத்தின் சுன்னாகத்தில் ஒன்று கூடியிருந்தனர். சுன்னாகத்திலிருந்தும் அயற் கிராமங்களிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புங்குடுதீவு போன்ற தொலைவிலிருந்த கிராமங்களில் இருந்தும்  கூட சிலர் வந்திருந்தனர். அவர்களில் குறித்த பிரதேசங்களின் ஊர்ப் பெரியவர்களும் பிரமுகர்களும் இருந்தனர்.

கந்தரோடை ஆங்கிலப் பாடசாலை முகாமையாளரும் கிராம நீதிமன்ற நீதிபதியுமாகிய கந்தையாபிள்ளை கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். தேவாரத்துடன் கூட்டம் ஆரம்பமானது.

கூட்டத்தின் நோக்கம் பற்றிப் பேசத்தொடங்கிய கந்தையாபிள்ளை ”பஞ்சமர்களை முன்னேற்றமடைய விடாவிட்டால் மற்றத் தமிழ்மக்கள் முன்னேற்றமடைய ஏதுவில்லை” எனும் கருத்தைச் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சிவதொண்டு குறித்து வழக்கறிஞர் எம். எஸ். இராசரத்தினம் விரிவாக உரையாற்றினார். சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும் மகாத்மா காந்தி தீண்டாமையைக் கண்டிக்கிறார் என்றும் அவர் உரைத்தார். மேலும் ”எங்களுடைய மதத்தினர் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பலம் பெற்றால்தான் நாங்கள் சுய ஆட்சி அடைவதற்கு வழியாகும்” என்றும் குறிப்பிட்டார். மேலும் சைவ புராணங்களையும் அறுபத்து மூன்று நாயன்மார் கதைகளையும் எடுத்துக்கூறி நாயன்மாரில் சாதி வித்தியாசமில்லை என்றும் நந்தன், கண்ணப்பர் முதலிய நாயன்மார் பற்றியும் நாயன்மாரில் வண்ணார் போன்ற சாதியினரும் இருந்தனர் என்றும் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டி இராசரத்தினம் உரையாற்றி அமர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து தெல்லிப்பழை துரையப்பாபிள்ளை, மானிப்பாய் ஆண்டி, புங்குடுதீவு பசுபதிப்பிள்ளை, நாகையா, அருளானந்தசிவம் ஆகியோரும் சிற்றுரைகள் ஆற்றினர். ”யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்” எனச் சங்கத்தின் பெயர் தெரிவானது. சங்கத்தின் தலைவராக எம். எஸ். இராசரத்தினமும் உபதலைவர்களாக ரி. எஸ். நாகலிங்கம், கே. முருகப்பர், எம். மண்டலம் ஆகியோரும் செயலாளர்களாக பி. கிருஷ்ணசாமி முதலியார், வி. எஸ். பூதப்பிள்ளை ஆகியோரும் பொருளாளர்களாக வி. எம். கந்தையா, கே. மூத்தர் ஆகியோரும் தெரிவாகினர். சங்க அங்கத்தவர்களாகவும் மேலும் பலர் தெரிவாகினர்.

அத்துடன் சுன்னாகம், மயிலணி, மல்லாகம், உடுவில், கோட்டைக்காடு, மயிலங்காடு, மாகையப்பிட்டி, சங்குவேலி, நாவாலி, தெல்லிப்பழை, பழை, பருத்தித்துறை, வதிரி போன்ற ஊர்கள் சார்பான உறுப்பினர்களும் தெரிவாகினர். இரவு பத்து மணியளவில் கூட்டம் கலைந்தது.

சங்கத்தின் கூட்டங்களை நடத்தவும் வாசிகசாலை ஒன்றைத் திறக்கவும் என ஓர் அலுவலகம் சுன்னாகம் சந்தைக்கு வடக்கில் அமைக்கப்பட்டது. 1927 பெப்ரவரி 11ஆம் திகதி இச்சங்கம் சார்பாக திராவிடன் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகள் வெளியான இந்த இதழிலிலிருந்து சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் உயர்ந்த சாதியென்று சொல்லப் படுவோரால் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ்வோர் கரையேற வேண்டுமென்றும் எங்களவர்களுக்கிடையில் ஒற்றுமையை அதிகரிக்க வேண்டுமென்றும் ஆங்கிலமும் தமிழும் கற்க ஆங்கிலப் பள்ளி வேண்டுமென்றும் பிறசமய நிந்தனைக்குள் இருந்து மீளவும் எல்லா இடங்களிலும் பரவியுள்ள எம்மவர் இணைந்து முன்னேற உதவவும் இச்சங்கம் தொடங்கப்பட்டதென்று திராவிடன் குறிப்பிடுகிறது.

”இந்து மதம் பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் எவ்வளவு சொந்தமோ அவ்வளவு சொந்தம் இவர்களுக்கும் உண்டு” எனவும் “இந்து மதத்தில் இருக்கும்போது இழிவாக நடத்தி இவர்களே கிறிஸ்து மத்ததில் சேர்ந்து விட்டால் சம மரியாதை அடைகிறார்கள்” என்றும் ”நாம் நம்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதியாரை மனிதரைப் போல தக்க அன்போடும் மரியாதையோடும் நடத்தும் காலமும் தங்களுடைய சமயத்தினை விட்டு அகலாதிருக்கும் பொருட்டு போதுமான கல்வியையும் போதிக்க வேண்டிய காலமும் நெருங்கிவிட்டது” என்றும் முதலாவது திராவிடன் இதழின் ஆசிரியத் தலையங்கம் குறிப்பிடுகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் சாதிக் கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்காகச் சைவ சமயத்தினைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுவதைத் தடுக்கும் முயற்சியாக இச்சங்கம் உருவாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் சம மரியாதையும் கிடைப்பதே அவர்கள் சைவ சமயத்தில் தொடர்ந்தும் இருக்க அவசியமானது எனக் கருதியே இச்சங்கம் உருவானது எனலாம்.

ஆனாலும் சைவ ஆதிக்க சாதியினரிடமிருந்து பெரிய அளவிலான ஆதரவு இச்சங்கத்துக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. இதுவரை எழுதப்பட்டுள்ள சாதியத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றில் இச்சங்கம் பற்றிய குறிப்பே இப்போது இல்லை. இச்சங்கத்துக்குப் பிறகு தொடங்கிய சங்கம் ஒன்றே முதலாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கான சங்கம் என வரலாறு எழுதப்பட்டுள்ளது.

சாதிமான்களான வேறு தமிழ்த் தலைவர்கள் அவர்களது ஏனைய செயற்பாடுகளுக்கான இப்போதும் நினைவு கூரப்படுகிறார்கள். ஆனால் எம். எஸ். இராசரத்தினம் போன்ற சைவத்துக்கும் தமிழுக்கும் உழைத்த தலைவர்கள் இப்போது நினைவுகூரப்படுவது கூட இல்லை.

அண்மைய காலச் சம்பவங்களை அவதானிக்கும் போது ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூடச் சைவ சமய நிறுவனங்கள் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தமது சமயத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலை பெறுவதற்கான குறிப்பிடத்தக்க செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்காத அல்லது முன்னெடுக்க விரும்பாத மனநிலையிலேயே இருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுகின்றது.

நன்றி - உதயன் : சஞ்சீவி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates