Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

The Story of Lovina Alphonso - A Dalit Heroine of her Time | N.Sarawanan


This article was published www.Dalithistory.com - Apr 9, 2019
The Original brief Articles was published Tamil  language in www.Namathumalayagam.com

This account is translated from the research and writings of N.Sarawanan, A Sri Lankan Tamil Dalit activist and author of the piece. You can read his original piece here in Namathu Malayagam. This contribution to Dalit History Month would not be possible without his work and his generosity. Translation from Tamil for this piece was done by Saivi, a Tamil Dalit writer, economist and mother. This piece was edited by Maari Z.Maitreyi.

Today in Dalit History, we look at how a Dalit woman, Lovina, negotiated with colonialisms in Sri Lanka and ultimately instituted benefits to her community.

The “Rodi” caste people are the most oppressed in the Sinhala community. Historically, this community was involved in folk religion, magic, mantras, and ritualised caste begging. Rodis were treated as untouchables and violently discriminated.

Rodiya men and women were denied permission to wear any upper-body covering. It was also forbidden for them to cover themselves below the knee. In one era, both men and women were only allowed to cover their genital area and nothing else. Even if they felt ill or cold and clothed themselves to feel warm, and an “upper” caste person caught them in the act, they would have to say, “Please forgive me, Lord, I was feeling too cold!” It was up to the “upper” caste person, then, to decide whether to allow the act of covering or not.

You can find many texts that use derogatory language to describe Rodiyas. In Sinhala, Dalit people are called “Sandalas” in various texts. In the book “The Taprobanian” (1886) by Hugh Nevill, the author calls the area where Rodipeople lived as “the Sandalas ghetto” John Doyle, another colonizer, in the19th century, describes Rodi people as living in a Rodi ghetto where they didn’t have a right to own or build independent homes. According to Doyle, they had to live in makeshift shacks and were not allowed to have windows or doors to their homes. They were not allowed to travel into the main villages or freely interact with people who were not Rodiya.

This was Lovina’s community, and this was her background.

Lovina’s story is known to us because it’s told through the narrative of one Sir Thomas Maitland, a 47-year-old English Governor. When he was posted to Sri Lanka in 1806, he was put up in a typical colonial bungalow. To make him feel “welcome”, occasionally, mestizo dancers come to the mansion. Among them was 16-year-old Lovina Alphonso. Lovina and many other Rodiyas in that area were of mixed heritage often part Portuguese, the previous colonisers of that region.

It’s said that this 47-year-old English colonial felt immediately and deeply “in love” with 16-year-old Lovina. He proposed a relationship to her and Lovina “accepted”. Quickly, he changed Lovina’s name to Lavinia, because he “preferred” that version.

News of this Governor’s love with an untouchable girl quickly spread among the British colonial elite and the message reached as far as King George’s ears. The result was that King George sent him a very stern message that threatened consequences should their relationship continue.

Maitland told Lovina not to come to visit him until he would say it was ok to do so. In the meantime, Maitland began the construction of an underground tunnel that went straight from the bungalow to a well, situated right inside of Lovina’s home in the ghetto.

Within six months, the tunnel was completed and Lovina and Maitland began meeting through this secret passageway. Lovina was taught special calls and sounds to make sure that it was only them using the tunnel, and no one else.


However, core to this story, are Lovina’s demands. While she had to be with Maitland, young Lovina made very specific asks. She asked that Maitland oversee several changes to the social conditions her people were living in. She pointed out that things like not being able to cover themselves or not being able to have windows and doors in their homes were deep injustices and absolutely no way to treat human beings. She urged Maitland to use his humanity and his power as the ruler in that area to end these oppressions.

Moved by her thoughts and words, Maitland ordered the immediate freedom of the people from the Rodiya ghetto. He granted written rights for them to cover themselves as they pleased and to build proper homes with windows and doors.

However, in 1811, an urgent letter came to Maitland from King George ordering the immediate removal of Thomas Maitland from the post of Governor. He was given just two weeks to leave Sri Lanka. The British Empire could not stand the thought of a white British man having an illicit relationship with — not just a “native” — but the lowest of the low natives at that. It’is thought that several secret tip-offs came from the bungalow and around town and that those were the reasons for the action against Maitland.

He promised Lovina he would return to her and appeared to have left in deep distress. He is also known to have said — “I do not know whether the next Governor will use this palace as his official residence. But before I leave, I suggest this house be named “Mount Lavinia”. I hope my desire can be fulfilled.”

After this point in time, there are no more references and there is no way for us to know what happened to Lovina.

During the second world war, the bungalow served as a military hospital. Today, “Mount Lavinia” has been converted into an upscale hotel. The tunnel that was closed off after Maitland left is now a tourist attraction in the city of Galkissa.


Where the Rodi ghetto one was, there is now a Galkissa Buddhist Girls’ School, and it is not clear how, why or where that community of Rodiyas went.

Many people do not think highly of Lovina. She is judged by various patriarchal yardsticks and has never been known as anything other than a white coloniser’s illegitimate lover. There are works in Sinhala — movies and novels — based on her life but written as cheap erotic fiction.

Despite all this — what is most important to note is that a very young girl, who came from a very oppressed community, managed to negotiate a serious change of conditions for her community.

Considering her young age and the deep power-imbalances between them, we will never know whether Lovina grew into a consentful relationship with Maitland. However, what we do know, is that she could have asked for many things — material, wealth or power — but what she asked for was for her people to be able to cover themselves, for them to have homes they could actually live in and, most of all, for their right to basic human dignity.

In this respect — Lovina was a Dalit heroine of extraordinary courage and integrity. And deserves to be memorialised and remembered as such.

N.Sarawanan, the author of this piece recently released a book about Dalits in Sri Lanka. You can get in touch with them here: nsarawanan@gmail.com

தலித்தின் குறிப்புக்கள் ( A Dalit’s Observations)

The original Tamil Article

தலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்

"செலினா" : நாம் மறந்துபோன ஒரு பெண் போராளி! - என்.சரவணன்

1930 களில் மோசமான மலேரியா தோற்று நோயால் பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையில் மாண்டார்கள். அந்த நினைவுகளில் ஒன்று தான் செலினா பற்றிய இந்தப் பதிவு. கொரோனா பீடிப்பில் உலகம் சிக்குண்டிருக்கிற இந்த சூழலில் இக்கட்டுரை பல நினைவுகளையும், வரலாற்று அனுபவங்களையும் நமக்குத் தரும்.
1986 மே மாத இறுதியில் கல்கத்தாவில் ஒரு பிரதேசத்தில் தொடர் மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்த பெண்ணை பல நாட்கள் காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் பொலிசாரிடம் தெரிவித்தனர். இத்தகவல்களைத் தொடர்ந்து பொலிசார் அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு அப்பெண்ணின் சடலத்தைக் கண்டுபிடித்தனர். அவர் இறந்து சில நாட்கள் ஆகிவிட்டிருந்ததை அந்த சடலத்தைக் கொண்டு அறிந்து கொண்டனர். இறப்புக்கான காரணம் குறித்து விசாரிப்பதற்காக சுமார் ஒரு மாதம் சடலத்தை அவர்கள் வைத்திருந்தனர். இறுதியாக, அவரது நண்பர்களும் அரசியல்  தோழர்களும் சேர்ந்து கண்ணியமான இறுதிச் சடங்கை நடத்தி, தென் கொல்கத்தாவின் சஹானகரில் தகனம் செய்தனர். இது நிகழ்ந்தது ஜூன் 15, 1986 அன்று.

அந்தப் பெண் செலினா மார்கரெட் பீரிஸ், செலினா பெரேரா என்று நன்கு அறியப்பட்டவர். ஆம் அவர் இலங்கையின் இடதுசாரி பிதாமகர்களில் ஒருவரான என்.எம்.பெரேராவின் மனைவி. இறக்கும் போது செலினாவுக்கு 77 வயது. அவர் இலங்கையில் இடதுசாரி இயக்கத்தில் சோசலிச போர்க்குணமிக்க பெண்களின் முன்னோடியான பெண். அவர் இறக்கும் வரை அரசியல் செயற்பாட்டில் இருந்தவர்.

ஊவா மாகாணத்தில் உள்ள பதுளை நகரில் நில உரிமையாளர்களின் பெரும் பணக்கார குடும்பத்தில் 1909இல் பிறந்த செலினா, ஆங்கிலக் கல்வியின் மூலம் கத்தோலிக்க கான்வென்ட்டில் கல்வியைத் தொடங்கினார். அங்கு அவர் திறமை மிகுந்த மாணவியாக அறியப்பட்டிருந்தார். பின்னர் அவர் கொழும்பின் மியூசியஸ் கல்லூரியில் நுழைந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, கல்கிஸ்ஸ பௌத்தப் பெண்கள் கல்லூரியின் அதிபராக ஆனார்.

இந்த நேரத்தில் செலினா தென் கொழும்பு இளைஞர் ஒன்றியமொன்றில் சேர்ந்து மாலை வேளைகளில் பள்ளி மைதானத்தில் அரசியல் கூட்டங்களை நடத்த அனுமதித்தார். அக்கூட்டங்களில் அவரும் பங்கேற்கத் தொடங்கினார். 1932 ஆம் ஆண்டில் இருந்தே பிலிப் குணவர்தனவும் இச்சங்கத்தில் இணைந்து நீண்ட காலமாக அதன் வழிகாட்டியாக இருந்து வந்தார். செலினாவும் படிப்படியாக "மார்க்சியத்தின்" மீது ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார். பிலிப் குணவர்தன அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் லண்டனில் சுமார் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பணியாற்றியவர். லியோன் ட்ரொட்ஸ்கியை  ஆதரிதத்தால் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மக்களைக் கவரக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்த பிலிப் இலங்கையின் "மார்க்சியத்தின் தந்தை" என்று அழைத்தனர்.

இந்தக் காலச் சூழலில் தான் இடதுசாரி கருத்துள்ள பலரால் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒரு இயக்கமாக “சூரியமல் இயக்கம்” தொடங்கப்பட்டிருந்தது. இதில் கொழும்பு தெற்கு இளைஞர் சங்கமும் இணைந்து சூரியமல் இயக்கத்துக்கு புது ரத்தம் பாய்ச்சியது. செலினா இந்த இயக்கத்தில் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் வினைத்திறனுடன் பணியாற்றத் தொடங்கினார்.

1933 ஆம் ஆண்டில், மலேரியா தொற்றுநோய் இலங்கைத்தீவைத் தாக்கியது. பிரித்தானியக் காலனித்துவ அரசு மலேரியாவைக் கட்டுப்படுத்தவோ, மக்களுக்கு நிவாரணங்களை அளிக்கவோ அக்கறை செலுத்தவில்லை. எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் மிகவும் மெதுவாகவே இருந்தன. இதன் விளைவாக, இரண்டே மாதங்களில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். சூரியமல் இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் தமது இயக்கத்தை ஒரு நிவாரண இயக்கமாக மாற்றிக்கொண்டனர். அதில் இருந்தவர்கள் விரைவாக கிராமங்களில் சுறுசுறுப்பாக மருந்துகள் மற்றும் உணவுகளை விநியோகிக்கத் தொடங்கினர். மந்த போசனத்தால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளுக்கு “ஏழைகளின் ஆட்டிறைச்சி” என்று சொல்லப்பட்ட இந்தியப் பருப்பைப் பகிர்ந்தார்கள். இதனால் என்.எம்.பெரேரா “பருப்பு மாத்தயா” என்று அம்மக்களால் அழைக்கப்பட்டார்.

செலினா இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக பணியாற்றும் ஒருவராக ஆகியிருந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் அவல நிலையை நேரடியாகக் காணவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை வெறும் மலேரியா தொற்றோடு சம்பந்தப்பட்டதில்லை என்பதையும் அது ஆரோக்கியத்தோடும் அதன் பின்னால் உள்ள வர்க்க அரசியலோடும் தொடர்பு கொண்டது என்பதை அவர் உணர்ந்துகொண்டார். இறந்த தாய்மார்களின் முலைகளை உறிஞ்சியபடி கிடந்த குழந்தைகளையும், அழுகிய பிணங்கள் இருந்த குடிசைகளையும் அவர் கண்டார். சமூக ஏற்றத்தாழ்வு கொண்ட சமூக அமைப்பு முறையை மாற்றுவதில் தன வாழ்நாள் முழுவதும் போராடப்போவதாக அங்கு தான் கங்கணங்கட்டிக்கொண்டார்.

அவர் அரசியல், சமூக விடயங்களில் தீவிரமாக இறங்கிய செலினாவுக்கு என்.எம்.பெரேராவுடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பிலிப் குணவர்தனவை பின்பற்றுபவராக இருந்தார். ஆரம்பத்திலிருந்தே, செலினாவும் என்எம்.பெரேராவும் அரசியல் நடவடிக்கைகளில் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினார்கள்.

இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சி என்பது மட்டுமன்றி இலங்கையின் முதலாவது கட்சி என்கிற அந்தஸ்தையும் கொண்ட லங்கா சம சமாஜக் கட்சியின் (எல்.எஸ்.எஸ்.பி) 1935 டிசம்பர் 18ஆம் திகதி உருவாக்கப்பட்டது. அக்கட்சியின் முதலாவது அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் செலினாவும் ஒருவர். அதுமட்டுமன்றி அவர் மத்திய குழுவுக்கு தெரிவுசெய்யப்பட்டார். கட்சியின் பொருளாளராகவும் பணியாற்றினார். அரசாங்க சபைக்கான தேர்தல் வந்தது. லங்கா சமமாஜக் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட நான்கு வேட்பாளர்களில் என்.எம்.பெரேராவும் ஒருவர். அவர் போட்டியிட்ட ருவன்வெல்ல தொகுதியில்  செலினாவும் தீவிர பிரச்சாரகராக இறங்கினார். 1936ஆம் ஆண்டு என்.எம்.பெரேராவின் வெற்றியில் செலினாவின் பங்களிப்பு அளப்பரியது. 1977 ஆம் ஆண்டு வரை என்.எம்.பெரேரா ருவன்வெல்ல தொகுதியில் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு உறுப்பினராகத் தொடர்ந்து வந்தார்.

மார்ச் 6, 1936 அன்று, செலினாவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தது. என்.எம்.பெரேராவும் செலினாவும் அன்று தான் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே ஒரே அரசியல் கொள்கைகளைக்கொண்ட, ஒரே இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள். செலினா கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தார் கலாநிதி குமாரி ஜெயவர்த்தனா எழுதிய “இலங்கையின் சோசலிசப் பெண்கள்” (Socialist Women of Sri Lanka) என்கிற நூலில் செளினாவைப் பற்றி குறிப்பிடும் போது “செலினா போர்க்குணமிக்க தீவிர இடதுசாரிப் பெண்ணாக திகழ்ந்தார்” என்கிறார்.

இந்தக் காலப்பகுதியில் தான் பிரஸ்கேர்டில் நிகழ்வு நடந்தது. மலையக மக்களுக்காகக் குரல் கொடுத்த பிரஸ்கேர்டிலை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த வேளை பொலிஸாரிடமிருந்து தப்பவைத்து அவரை பதுளையில் தங்கவைத்து தலைமறைவாகப் பாதுகாத்தது செலினா தான்.

செலினாவின் போற்குனமிக்க செயற்பாடுகளின் காரணமாக அவரின் பெற்றோர் கவலைகொண்டார்கள். அவரது தந்தை செலினா இங்கிலாந்து சென்று மேலதிக படிப்பைத் தொடர வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கான செலவு முழுவதையும் செய்தார். கட்சித் தலைமை இதை ஒரு வகையில் தமக்கான நல்ல வாய்ப்பாகக் கருதியது. பிரித்தானியா சென்று கற்கைப் பணிகளைச் செய்யும் அதேவேளை அங்குள்ள ட்ரொஸ்கிய அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கிவிட்டு வரும்போது மெக்சிகோவுக்கு சென்று அங்கு நாடுகடத்தப்பட்டுள்ள லியோன்  மெக்சிகோவுக்குத் திரும்பும் வழியில் ட்ரொஸ்கியையும் சந்தித்து வரும்படி பரிந்துரைத்தது. செலினா 1938 ஆம் ஆண்டு தனது கணவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை விட்டுவிட்டு தனது படிப்பு என்கிற பேரில் தனது அரசியல் செயற்பாடுகளுக்காக இங்கிலாந்து சென்றார். உலகில் மார்க்சிய இயக்கங்களைச் சேர்ந்த எவருமே சர்வதேசியவாதிகளாக எந்த நாட்டிலும் சென்று பணியாற்றத் தயாராக இருப்பவர்களாகவே வழிநடத்தப்படுவர். அந்த வகையில் ஆரம்பத்திலிருந்தே இலங்கையில் அந்தத் தன்மையை உணர்ந்து இயங்கினர் என்றால் அது மிகையில்லை.

செலினா இங்கிலாந்தில் உள்ள செம்மொழிகள், ஆப்பிரிக்க மொழிகள் பற்றிய கற்கைகளுக்குப் பதிவு செய்துகொண்டார். (அது லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது)அங்கு அவர் சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழியைக் கற்றார். ஜூன் 1939 இல் தனது கல்வியை முடித்து இந்தோ-ஆரிய மொழிகளில் இரண்டாம் வகுப்பு உயர் கௌரவ பட்டம் பெற்றார்.

இந்தக் காலபகுதியில் செலினா இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் ட்ரொட்ஸ்கிஸ்ட் குழுக்களுடன் நெருக்கமாக பணியாற்றினார். 2ஆம் உலகப் போரும் ஆரம்பமானது. செப்டம்பர் 1939 இல், பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனிக்கு எதிரான போரில் நுழைந்தன. செலினாவும் தனது பணியை நிறைவேற்றத் தயாரானார். அடுத்த மாதம் அவர் நியூயார்க்கிற்கு வந்து நான்காவது அகிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க கட்சியான சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் தலைவர்களைச் சந்தித்தார். அவர்கள் செலினாவை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். நவம்பர் 2 ம் தேதி நான்காவது சர்வதேச செயற்குழுவில் அவர் உரையாற்றும் வரை, அங்கிருந்த ட்ரொட்ஸ்கியும் பிற சர்வதேச ட்ரொட்ஸ்கிய ஆதரவாளர்களும் இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சி என்கிற பேரில் ட்ரொட்ஸ்கிய ஆதரவு கட்சி இருக்கிறது என்பதை அறிந்திருக்கவில்லை.

பாதுகாப்பு பிரசினைகளின் காரணமாக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இரகசிய தலைமறைவு வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வந்தார்கள். ட்ரொட்ஸ்கி மெக்சிகோவில் வசித்துவந்த கோயோகான் நகரத்துக்குச் சென்று ட்ரொட்ஸ்கியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை சோஷலிச தொழிலாளர் கட்சி ஏற்பாடு செய்தது. அந்தத் திட்டத்தின்படி டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சென் அந்தோனியோவுக்குச் சென்று அங்கிருந்து ட்ரொட்ஸ்கிக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார் செலினா. மெக்சிகோவில் ஒரு குறிப்பிட்ட பஸ் நிலையத்தில்  சந்திக்க முடியுமா என்றும் தனது தோற்றத்தைக் குறித்த விபரங்களையும் அவருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் லறேடா நகரத்தில் வைத்து அவருக்கு மெக்சிகோவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. சில தினங்களுக்குப் பின்னர் செலினா ட்ரொட்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில் தனது பயணம் தடைப்பட்டுப் போனதையும், தனது வாழ்க்கையில் ட்ரொட்ஸ்கியை சந்திப்பதற்கு இருந்த அரிய சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது என்றும் எழுதினார். செலினாவின் யூகம் சரியாகத் தான் இருந்தது. அதற்கடுத்த ஆண்டு  அதாவது 1940 ஆம் ஆண்டு ட்ரொட்ஸ்கி கொல்லப்பட்டார்.

1940 களின் முற்பகுதியில் இலங்கைக்குத் திரும்பிய செலினா பெரேரா; கட்சி விவகாரங்களில் மீண்டும் தீவிரமாக ஈடுபட்டார். அவர் மீண்டும் கட்சி அரங்கில் ஒரு தலைவராக இருந்தார். ஜூன் 1940 இல், பிலிப், என்.எம்.பெரேரா, கொல்வின், எட்மண்ட் சமரக்கோடி உள்ளிட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் பலர் ஆளுநரின் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். லெஸ்லி குணவர்தன மட்டும் தலைமறைவானார்.

இக்கைதை கைதுகளை எதிர்த்து பாரிய நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் மீது பொலிசார் மோசமாக தாக்கினர். செலினா தாக்கப்பட்டவர்களையும் அழைத்துக்கொண்டு வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கி ஊர்வலத்தை நடத்திச் சென்றார். ஊர்வலத்தினர் நோரிஸ் வீதியை அடைந்ததும் போலீசார் ஒரு லாரியில் வந்து வரிசையாக நின்று அவர்களுடன் தடியடி நடத்தினர். பலர் தடியடித் தாக்குதலுக்கு உள்ளானார்கள். மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். செலினாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பின்னர் செலினா விடுதலையானார்.

இனி பகிரங்கமாகப் போராடிய கட்சித் தொண்டர்களுக்கு தலைமையேற்று நடத்தும் தலைவராக செலினா ஆனார். அவரது செயற்பாடுகளின் காரணமாக  எப்போதுமே கைது அச்சுறுத்தல் இருந்தது. 1941 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து பேசியதற்காகவும், வெகுஜனங்களை கிளர்ச்சியூட்டும் வகையிலும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் செலினாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ரொக்மேன் சிகரெட் நிறுவனத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தபோது ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்ய முயன்றபோது செலினா அப் பொலிசின் முகத்தில் அறைந்து "இனிமேலும் பெண்களைத் தாக்காமலிருக்க இது உனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்" என்றார்.

ஏப்ரல் 5, 1942 அன்று உயிர்த்த ஞாயிறன்று ஜப்பானியர்கள் இலங்கை மீது குண்டு வீசினர். ஏப்ரல் 7 அதிகாலை,லங்கா சமசமாஜக் கட்சியின் நான்கு தலைவர்களும் கண்டி போகம்பர சிறையிலிருந்து தப்பி தலைமறைவானார்கள். அப்போது காந்தி வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தைத் தொடங்கியிருந்தார்.  இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள ட்ரொட்ஸ்கிச குழுக்கள் அனைத்தும் மே மாதம் பம்பாயில் கூடி இந்திய போல்ஷிவிக் லெனினிச கட்சியில் இணைந்தன. காந்தியின் போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக அறிவித்தது. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு மேலும் அச்சுறுத்தலாகக் கருதியது.

கண்டி சிறைச்சாலையிலிருந்து தப்பியவர்கள் ஒரு குழுவாக ஜூலை மாதம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். அவர்களில் பிலிப் மற்றும் என்.எம். கொல்வின் ஆகியோரும் அடங்குவர். சிலர் மதுரைக்குச் சென்றனர். செலினாவும் அங்கு சென்றடைந்தார். செலினா இன்னும் சிலருடன் சேர்ந்து பம்பாய்க்குப் புறப்பட்டனர். இந்திய போல்ஷிவிக் கட்சியைச் சேர்ந்தவர்களைப் போலத் தான் இலங்கையின் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவர்களையும் ஆபத்துமிக்கவர்களாகக் கருதி வந்தது பொலிஸ். இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் பற்றிய இரகசிய விசாரணை அங்கும் நடந்தது. என்.எம்.பெரேராவும் செலினாவும் தமக்குப் புனைபெயர்களைச் சூட்டிக்கொண்டு பம்பாயில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
சிறையிலிருந்து வெளியே வந்த போது என்.எம்.பெரேரா
செலினாவுக்கு பம்பாயில் ஒரு பாடசாலையில் ஆசிரியராக வேலை கிடைத்தது. என்.எம்.பெரேராவுக்கு ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இருவரும் தமது சம்பளத்தை இலங்கையிலுள்ள தமது கட்சியைப் பலப்படுத்த அனுப்பினார்கள். இதைவிட பம்பாயில் இந்திய போல்ஷிவிக் கட்சியின் இளைஞர்களுக்கு செலினா பயிற்சியளிக்கும் பணிகளை மேற்கொண்டார். அந்த வகுப்பில் இருந்தவர்கள் செலினாவை “மார்கி” என்கிற பெயரால் தான் அறிந்து வைத்திருந்தனர்.

இதற்கிடையில் என்.எம்.பெரேராவையும் மேலும் பலரையும் பொலிசார் கைது செய்தனர். செலினா, கொல்வின், லெஸ்லி மற்றும் விவியன் குணவர்தன ஆகியோர் மெட்ராஸுக்கு தப்பிச் சென்றனர். அங்கு இந்திய போல்ஷிவிக் கட்சியின் கிளை பலமாக இருந்தது. அவர்கள் கட்சிக்கு சொந்தமான வீட்டில் தங்கினார். செலினா கட்சி செயற்குழுவிலும் நியமிக்கப்பட்டார். 1943 ஆம் ஆண்டு என்.எம்.பெரேரா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு மீண்டும் சிறையில் வைக்கப்பட்டார். ஆனால் செலினா இலங்கை வரவில்லை. அவர் அங்கேயே தங்கி காலனித்துவவாத - ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் அங்கே இணைந்துகொள்கிறார். அதன் பின்னர் சுதந்திர இந்தியாவில் கல்கத்தாவில் குடியேறி அங்கேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார். இடதுசாரி இயக்கங்கள் இந்தியாவில் விஸ்தரிப்பதற்கான கதவு மேற்கு வங்கம் தான் என்று அவர் நம்பினார். ஆகவே கல்கத்தா தான் தனது இயங்கு தளம் என்பதைத் தீர்மானித்தார். 1952 இல் மேற்கு வங்க SP (Loyalists) கட்சியை ஸ்தாபித்து அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்தார். MKPயின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். புரட்சிகர தொழிலாளர் கட்சியின் (Revolutionary Workers Party) செயலாளராக 1958-1960 காலபகுதியில் இருந்தார். சோஷலிச தொழிற்சங்க சம்மேளனத்தில் (Socialist trade union federation) அதிகமாக ஈடுபாடு காட்டினர். இத்தனையையும் அவர் செய்துகொண்டே ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் இறக்கும் வரையில் புரட்சிகர அரசியல் செயற்பாடுகளில் இணைத்தபடிதான் வாழ்ந்தார்.

அவர் இறப்பதற்குள் ஒரே ஒரு தடவை தான் இலங்கைக்கு வந்துவிட்டு சென்றுவிட்டார். அதுபோல இந்த காதல் சோடி இறுதிவரை மீண்டும் இன்னொரு திருமணத்தைப் புரியவுமில்லை. ஆனால் என்.எம்.பெரேரா தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது இடையில் இந்தியாவுக்குச் சென்று செலினாவை சந்தித்து சுகதுக்கம் பரிமாறிவிட்டுச் செல்லும் பழக்கம் இருந்தது. அது போல சமசமாஜக் கட்சிப் பெண்கள் பலர் செலினாவுடன் தொடர்பில் இருந்தார்கள்.

1979 ஓகஸ்ட் மாதம் 14 அன்று என்.எம்.பெரேரா இறந்துபோனார். அவரது மரணச் சடங்கில் அந்தளவு வேகமாக செலினாவால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் என்.எம்.முக்காக சிகப்பு நிற ரோசாப்பூ கொத்தை அனுப்பி வைத்தார்.

ஒரு கால கட்டத்தில் அவருக்கு இலங்கையின் இடதுசாரி இயக்கங்களின் மீது வெறுப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. அதற்கு பல அரசியல் காரணங்கள் இருந்தன. ஆனால் செலினா இறந்தபோது அவரின் சொத்துக்களை எல்லாம் லங்கா சமசமாஜக் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டே இறந்தார்.

உபாலி ரூபசிங்க லங்காதீப பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்,

“1991இல் கல்கத்தா ராஜ்பவனில் இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன். நிகழ்வின் பின்னர் நிகழ்ந்த விருந்தின் போது மேற்குவங்கத்தை ஆட்சி செய்த கொம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் முதலமைச்சர் ஜோதி பசுவைச் சந்தித்தேன். நான் என்னை இலங்கையன் என்று அறிமுகப்படுத்தியதும் அவர் உடனடியாக ஹெக்டர் அபேவர்தன பற்றி கேட்டார். மேலும் அவர் “நாங்கள் ஒன்றாக அரசியல் செய்தவர்கள். மேலும் மேடம் செலினா எங்கள் அரசியல் குரு. அதுமட்டுமன்றி எங்கள் அமைச்சரவையில் உள்ள பலர் அவரின் வகுப்புக்குச் சென்றவர்கள்” என்றார்.

செலினா என்கிற ஒரு போராளியின் பெறுமதியை அங்கு அறிந்திருந்த அளவுக்கு இலங்கையர்கள் அறிந்திருக்கவில்லை. இலங்கையின் வரலாற்றில் "ஆண் மைய" துதிபாடும், வழிபாடும் வெகுஜனமயப்பட்ட அளவில் சிறிது கூட உண்மையான பெண் நாயகிகள் பேசப்பட்டதில்லை. அப்படி மறக்கப்பட்ட ஒரு புரட்சிகரப் பெண் செலினா. 

நன்றி - தினகரன் 19.04.2020


இலங்கையின் தொல்குடிகளான வேடர் சமூக வழக்காறுகள் : சி. ஜெயசங்கர்

இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும் உலகம் செய்வோர் குரல்
இன்றைய காலகட்டத்தின் அதிக பேசுபொருளாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். பழங்குடி மக்களை ஆதிக்குடிகள், தொல்குடிகள் என்று பொதுவாக அழைப்பர். ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் வெவ்வேறு பெயர்களைக் கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். அவுஸ்ரேலிய அபொறிஜின்கள், நியுசிலாந்தின் மயோரிகள் என பல்லாயிரக்கணக்கான தனித்துவமான பெயர்களைக் கொண்டவர்களாக பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் பழங்குடிகள் அல்லது தொல்குடிகள் ‘வேடுவர்’ என அழைக்கப்படுவர்.

பழங்குடி மக்கள் தேசத்தின் முதல் மக்கள் (Pநழிடந ழக குசைளவ யேவழைn) எனவும் உலகம் முழுவதும் அழைக்கப்படுகின்றனர். இந்த மக்களின் போராட்டத்தில் தான் இந்த உலகின் இருப்பு இருந்து வருகின்றது என்பதை அறிந்தவர் தொகை மிகக் குறைவு.

உலகத்தின் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயுதக்குவிப்பை நிகழ்த்தி பொருளீட்டுவதிலும், உலகின் வளங்களை கபளீகரம் செய்வதற்கான ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்குரிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து முன்னெடுப்பதிலும் பேராசை வெறிகொண்டு இயங்கும் அதிகார ஆதிக்க வலைப்பின்னலை எதிர்த்தும், நவகாலனியம் எனப்படும் புதிய தாராளமயவாத ஆக்கிரமிப்புக்களை பல்வேறு வழிகளிலும் உலகம் முழுவதிலும் எதிர்கொண்டும் இயற்கையையும், உயிர்களையும் காப்பாற்றும் மக்கள் குடியினராக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

உலகத்தின் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு என்பதன் அர்த்தத்தை பழங்குடி மக்களது போராட்டங்களிலும் வாழ்வியலிலுமே காணமுடியும். மாறாக மூலவளச் சுரண்டலுக்காகவும் மூலதனச் சுரண்டலுக்காகவும் போர்களையும் பயங்கரவாதத்தையும் உற்பத்தி செய்யும் சக்திகள் கட்டமைத்திருக்கும் பாதுகாப்பென்பது ஆக்கிரமிப்பிற்கும் ஆதிக்கத்திற்குமானது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது.

“மனிதர்களை மனிதர் கொல்லும்
வாழ்க்கை தன்னை வெற்றியென்போம்
மனிதருடன் மனிதர் வாழும் வாழ்க்கையெல்லோ வெற்றியாகும்”
(‘அபிமன்யு இலக்கணன் வதம்’ – மீளுருவாக்கப்பட்ட வடமோடி கூத்துப் பாடல்)

“இயற்கை மடியினில் கூடுகள் கட்டி
இயற்கை மகிழ்ந்திட வாழ்வினைக் கூட்டி
இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று
வாழவேண்டும் நாங்கள்
இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று வாழுவேண்டும்”
(மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவின் பாடலில் இருந்து)

பழங்குடி மக்களின் வாழ்க்கை என்பது இயற்கையுடன் இயற்கையாகச் சேர்ந்து வாழ்வது. இயற்கையைச் சுரண்டி வாழும் வாழ்க்கைக்கு எதிராகவும், சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலான காலனிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் உலகம் முழுவதும் போராடிய, போராடி வருகின்ற மக்கள் குடிகளும் இந்தப் பழங்குடிகள்தாம்.

நவீனமயமாக்கம், நாகரீகப்படுத்தல் என்ற பெயரில் உலக வளங்களை கபளீகரம் செய்யும் ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளது குரூரமானதும் தந்திரமானதுமான போர்களை எதிர்கொண்டவர்களும், பேரழிவுகளுக்கு இலக்கானவர்களும் இந்தப் பழங்குடி மக்கள்தாம்.

இத்தகைய புதைக்கப்பட்ட பேரழிவுகளின் மேல் நின்றே உலகின் நாகரிகம், நவீனமயமாக்கம், சனநாயகம், சட்டம், ஒழுங்கு என்பன கட்டமைக்கப்பட்டன. புதிதாகக் கட்டமைக்கப்பட்ட இந்நிலைமைகளை விரும்பியேற்கும் தலைமுறைகள் உருவாக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வெகுசன ஊடகங்கள்;, சட்டம் ஒழுங்கிற்கான அமைப்புக்கள், மதநிறுவனங்கள் என்பன இப்பணியினைச் செய்வதற்கென நிர்மாணிக்கப்பட்டன. அந்த நிர்மாணம் இற்றைவரை நிலைத்திருப்பதன் அடிப்படை, கடந்தகாலம் பற்;றிய நினைவழிப்புகளும், திரிபுபடுத்தல்களும், நவீனமாயைகளும் அறிவு பூர்வமானவையாக முற்போக்கானவையாக சனநாயகமானவையாக காலனிய வாழ்வியியலில் கட்டமைக்கப்பட்டதும் ஆகும்.

தேசிய விடுதலைப் போராட்டங்கள் இவற்றைக் கேள்விக்குட்படுத்தி காலனிய நீக்கத்திற்கான முனைப்புகளாகத் தோற்றம் கண்டன. விடுதலை பெற்ற தேசங்கள், பல காலனிய நீக்கம் பெற்ற வாழ்வியலைக் கட்டமைக்க முயன்றன. ஆயினும் காலனீயநீக்க முனைப்புகள் சனநாயக விரோதங்கள் என்ற யெயரில் உள்ளுர் சக்திகளின் ஒத்துழைப்புடன் கவிழ்க்கப்பட்டன. இதற்கு மாற்றீடாக அதிகார வேட்கை கொண்ட கறுப்புத் தோலில் அல்லது மண்ணிறத்தோலில் வெள்ளை மனிதர்கள் நிறுவப்பட்டனர். இது தொடர்ச்சியான பொருளாதாரச் சுரண்டலுக்கான நிலமையை உறுதிப்படுத்தியது.

புதிய உலக ஒழுங்கு என்பது மேற்கண்ட வகையிலே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய நிலைமையை வலுப்படுத்தும் புதிய கல்விக் கொள்கைகளும், பொருளாதாரக் கொள்கைகளும் நிராகரிக்கப்பட முடியாத வகையில் பரிமாறப்பட்டிருக்கின்றன. தட்டிக்கேட்க முடியாத மூலவளச் சுரண்டலுக்கும் திருப்பிக் கொடுக்கப்பட முடியாத கடன் சுமைக்கும் வெறுப்புப் பண்பாட்டுச் சூழலுக்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட சமூகங்களின் கூட்டாகவே உலகம் இயங்கி வருகின்றது. இத்தகைய நிலைமையினைப் பேணுவதே, பாதுகாப்பு என்ற கொள்கையாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்கான மக்கள் போராட்டங்கள், உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகின்றன. இவை குரூரமாக நசுக்கப்பட்டும் வருகின்றன. ஆயினும், மக்கள் கிளர்ந்தெழுவதென்பது நிகழ்ந்தே வருகின்றன. இத்தகைய கிளர்ச்சிகளில், ஒருபகுதி உலகின் ஆதிக்க ஒழுங்குகளை நிராகரிக்கும் அல்லது ஏற்றுக் கொள்ள மறுக்கும் அல்லது தமக்கான மாற்று ஏற்பாடுகளுக்கு முனையும் சக்திகளுக்கு எதிராகவும் உற்பத்தி செய்யப்படுவதும் வலுவாகக் காணப்படுகின்றது. இதற்கேற்ப மக்களை விமர்சன நோக்கற்ற, படைப்பாக்கத் திறனற்ற நுகர்வுச் சக்திகளாக கட்டமைக்கும் வேலைத் திட்டங்கள் வெற்றிகரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. வாழும் சூழல் பற்றிய கவனிப்பற்றதும் புதிய தொழில்நுட்பச் சாதனங்களின் வழி உற்பத்தி செய்து பரவவிடப்படடும் உலகத்துள் மூழ்கிக் கிடக்கும் சமூகங்களது உருவாக்கம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இராணுவப் பொருளாதார வல்லபமே உலகப் பாதுகாப்பென்றும், இயற்கையுடன் இணைந்த வாழ்வே உலகப் பாதுகாப்பென்றும் இரு நிலைகளில் நிகழ்த்தப்பட்டுவரும் போராட்டத்தில், இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்வே பாதுகாப்பானது எனும் நம்பிக்கையுடன் வாழ்க்கைப் போராட்டத்தை முன்னெடுக்கும் காலனிய நீக்கச் சக்திகளின் முன்னணியில் நிற்பவர்களாக 21ம் நூற்றாண்டிலும் பழங்குடி மக்களே திகழ்ந்துவருவதை உலகம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக உலகின் எதிர்காலம் பழங்குடி மக்களின் கைகளிலேயே இருக்கின்றது என்பது, உலகம் அதில் வாழும் உயிர்கள் பற்றிய அறிவும் அக்கறையும் கொண்ட அறிஞர்களின் கருத்தாக இருக்கின்றது. பழங்குடி மக்கள் அணிதிரண்டு தமக்குள் அமைப்பாகி சமூகவலைப்பின்னல்களை உருவாக்கிக் கொண்டு மக்கள் போராட்டங்களாகவும், சட்ட முன்னெடுப்புகளாகவும,; காலனிய நீக்கசூழல் உருவாக்கங்களாகவும், கலைப்பண்பாட்டு சூழல் உருவாக்கங்களாகவும், கலைப்பண்பாட்டுப் பொருளாதார மீளுருவாக்கங்களாகவும் வாழ்தல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத்தகையதொரு பின்னணியில் இலங்கைத்தீவின் நிலவரத்தைக் கருத்தில் கொள்வது முக்கியமாகின்றது. இலங்கையின் பழங்குடிகள் வேடுவர் என அழைக்கப்படுகின்றனர். இலங்கையின் பழங்குடியினராகிய வேடுவரின் நிலைமை மிகவும் பாரதூரமானது. ஆயினும் அதிகம் பேசப்படாதது. சமூகமயப்பட்டு அணிதிரளலுக்கான சக்திகளாக இலங்கை வேடர்கள் பரிமாணம் கொள்ளாத நிலைமையையே காணமுடிகின்றது. இது ஏனைய தென்னாசிய நாடுகளிலிருந்து மாறுபட்டதாகக் காணப்படுகின்றது. வேடர்களும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துபவர்களாக இருப்பினும், அவை கவனத்தில் கொள்ளப்படுவதாக இல்லை. மாறாக அறிஞர்களிற்கான ஆய்வுப் பொருளாகவும், ஊடகங்களுக்கு அவ்வப்போது ஆச்சரியப்படுத்தும் செய்தியாகவும், வணிகத்திற்கும், அரசியலுக்கும், கல்விக்கும் காட்சிப் பொருளாகவுமே பார்க்கப்பட்டு வருகின்றது.

வேடர்கள் எனும் ஆளடையாளப்பதிவிலிருந்து தமிழர்களாகவும், சிங்களவர்களாகவும் அடையாள மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டதன் காரணமாக உலக ரீதியான ஐ.நா. சட்டவாக்கங்கள், தேசத்தின் அரசியலைப்பில் காணப்படும் வாய்ப்புகளையும் பெறத் தகுதியற்றவர்களாகி இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்களது வாழ்வாதாரத்திற்கான வேட்டையாடுதல் பெருந்தண்டனைக்குரிய குற்றமாகக் கையாளப்படுவதை எதிர்கொண்டு வருவது யதார்த்தமாக இருக்கின்றது.

“நாங்கள் வேடர்கள்” என்ற அடையாளப்படுத்தலுடன் தங்களை நிலைநிறுத்தும் குரல் வலுப்பெற்று வருவது அவதானிக்கப்படுகிறது. வேடர் சமூகங்களுக்குள் இருந்தும் வெளியிலிருந்தும் இக்குரல் மெல்லிதாகக் கிளம்புகின்றன. இந்தக் குரலின் வலுவாக்கமும், உலகந்தழுவிய பழங்குடிச்சமூகங்களுடன் ஒண்றிணைதலும், வேடர்களை வலுப்படுத்தும் விடயமாக இருப்பதுடன் இலங்கைக்கு உரிமை கோரி ஆள்மாறி ஆள் அழிக்கும் வந்தேறிகளின் அடாவடிகளையும் மட்டுப்படுத்துவதாக இருக்கும்.
இயற்கையுடன் இணைந்து வாழும் உலகந்தழுவிய அரசியல் முன்னெடுப்புடன் இலங்கைத் தீவையும் இணைத்து வைக்கும் சக்தியாகவும் சரடாகவும் இது அமையும்.

ஆய்வுப் பொருளாகவும் வணிக மற்றும் அரசியல் காட்சிப் பொருளாகவும் ஆக்கப்பட்டிருந்த இலங்கைத்தீவின் பழங்குடி மக்களான வேடுவர்களின் வாழ்வியல் அவர்களுக்காக அவர்களே பேசுவதும் அவர்களுடன் இணைந்து அவர்களின் நிலைப்பாட்டில் நின்று அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதும் பேசுவதும் பங்குகொள் கலைச்செயற்பாடுகளாகவும் ஆய்வுச்செயற்பாடுகளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவின் மேற்படி முன்னெடுப்பிலும் அதன் தொடர்ச்சியாக கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவன முன்னெடுப்பிலும் இணைந்து நின்ற, நிற்கின்ற குமாரசாமி சண்முகம் அவர்களது “களுவன்கேணி வேடுவப் பரம்பரையினரின் வழக்காறுகள்” ஆய்வுநூல் கிழக்கிலங்கை வேடுவர்களுடனான நீண்டகால நெருக்கமான வாழ்வின் வெளிப்பாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகளின் நோக்கம் என்ன? ஆய்வாளருக்கும் ஆய்வுக்குரிய விடயத்திற்கும், ஆய்வுக்குரிய சமூகத்திற்குமான தொடர்பு என்ன? ஆய்வின் விளைவு என்னவாக இருக்கிறது? என்பதெல்லாம் முக்கியமாகச் சிந்திக்கப்பட வேண்டிய விடயங்கள். அப்பொழுதுதான் ஆய்வு என்பது பயன்பாட்டிற்குரியதாக இருக்கும். இல்லையேல் பயிற்சிக்கும் பதவியேற்றத்திற்கும், ஆய்வுக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்குமான நடைமுறையாகவே ஆய்வு காணப்படும். இந்தவகையிலானவையே மிகப்பெரும்பாலும் ஆய்வுகளாகக் கருதப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தகையதொரு பின்னணியில் வேடுவர் சமூகங்களுடன் மிகநீண்ட காலமாக இணைந்து வேலை செய்து வருகின்ற குமாரசாமி சண்முகம் அவர்களது நூல் குறிப்பிடப்பட வேண்டியது. வேடர் சமூகங்களின் சடங்குகள் உள்ளிட்ட வழக்காறுகளில் அவர்களுடன் இணைந்து இயங்கி வருகின்ற பட்டறிவு, படிப்பறிவுகளின் திரட்சியின் வெளிப்பாடாக இந்நூல் அமைகின்றது.

சூழல் சார்ந்ததும் மக்கள் மயப்பட்டதுமான வாழ்க்கையை உருவாக்குவதில் “களுவன்கேணி வேடுவர் பரம்பரையினரின் வழக்காறுகள்” நூல் கூறும் விடயங்கள் பல பரிசோதிப்புக்கள் ஊடாக வலுப்படுத்தப்படுவதும், மீளுருவாக்கம் செய்யப்படுவதும் அவசியமாகிறது. இந்தச்செயற்பாடு வேடுவர் சமூகத்தவரின் பங்குபற்றுதலுடனும், முன்னீடு முகாமைத்துவத்துடனும் அவர்களுக்கு உரித்துடனான வகையில் அமையவேண்டும். இந்தவகையில் இலங்கையின் ஆதிக்குடிகளான வேடுவர் சமூகங்களது வாழ்வியல் வழக்காறுகள் மொழி என்பவற்றின் இருப்பும் வலுவாக்கமும் இலங்கைத் தீவானது தன்னில் தங்கி நிற்கும் வளத்திற்குப் பங்களிப்புச் செய்யும் காரணிகளுள் சிறப்பிடம் பெறுவதாக இருப்பதுடன் வந்தேறு குடிகள் கொண்டாடும் இலங்கைத்தீவிற்கான உரிமம் பற்றிய வாதங்களின் பொய்மைகளைப் புலப்படுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதாக இருக்கும்.

இந்தப்பின்னணியில் வேடுவர் சமூகங்களது வாழ்வியலுடனும், வழக்காறுகளுடனும் இயல்பான உறவுகளும் தொடர்புகளும் கொண்ட குமாரசாமி சண்முகம் அவர்கள் இந்நூலை எழுதியிருப்பது முக்கியமானது. இத்தகைய முயற்சி, வேடர் சமூகங்களுக்குள் இருந்து வருவதும், அதற்கான முயற்சிகளும் முன்னெடுப்புக்களும் அவசியமானவை. அந்த வகையில், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்களுடன் இணைந்து வேடர் சமூகங்களுடனான கலை ஆற்றுகைகள், பங்குகொள் ஆய்வுச் செயற்பாடுகள் என்பவற்றின் வழி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் கலைச்செயல்வாத நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்குவகிப்பவராகவும் குமாரசாமி சண்முகம் விளங்கி வருகிறார். இத்தகையதொரு பயணத்தில் மேலதிக கற்றலுக்கும், புரிதலுக்குமான ஊடகமாக இந்நூல் அமைவதுடன் தொடர் உரையாடலுக்கும் வளர்த்தெடுப்புக்கும் உரியதாகவும் இருக்கிறது. களுவன்கேணி வேடுவர் சமூகம் பற்றிய ஆய்வு அவர்களுடன் இணைந்து மேலும் முன்னெடுக்கப்படுவதுடன் ஏனைய வேடுவர் சமூகங்கள் பற்றிய ஆய்வுகள், பங்குகொள் ஆய்வுகளாக சமூக வலுவாக்கத்திற்கும் வளர்ச்சிக்குமானதாகப் பரிமாணம் கொள்ள வேண்டும்.

வேடுவர் சமூகங்கள் நாகரிகப்படுத்தப்படல் வேண்டும், நவீனமயப்படுத்தப்படல் வேண்டும், அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்று காலனியப்படுத்தும் நோக்கில் வேடுவர் அடையாளத்தை, மொழியை, நம்பிக்கைகளை, வாழ்வியலை அழித்தொழிப்பது சமூகப்பண்பாட்டு வன்முறையாகவே அமையும்.

இலங்கையின் ஆதிக்குடிகள் சமூகமயப்பட்டு உலகம் முழுவதும் அணிதிரண்டு வருகின்ற பழங்குடி சமூகங்களுடன் இணைந்து உருவாக்குகின்ற வாழ்விற்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இயங்குவது அவசியம். இந்த அவசியத்திற்கு பங்களிப்புச் செய்வதாக இந்நூல் அமைகிறது.

உலகம் முழுவதும் மீண்டெழுந்து வருகின்ற பழங்குடி மக்களது வாழ்வும் இருப்பும் உலகத்தை, இயற்கையை மனிதருள்ளிட்ட உயிர்களைக் காக்கவல்லது. இந்தப்பயணம் பன்மைப் பண்பாட்டைக் கொண்டாடுவது, உயிர்களை மதிப்பது, உலகின் அழகை அர்த்தப்படுத்துவது.

கலாநிதி, சி. ஜெயசங்கர்
முதுநிலை விரிவுரையாளர்,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்,
இலங்கை.

நன்றி - https://www.supeedsam.com/

மகாவம்சம் கூறும் “தமிழரால் உருவான இலங்கையின் முதலாவது பட்டினிச்சாவு!?” - என்.சரவணன் (ஒஸ்லோ)

கொரோனா டயரீஸ் – ஏப்ரல் 5
கொரொனா நோய் வெறும் தொற்று மாதிரமல்ல தற்போது பஞ்சத்தையும் உருவாக்கி வருகிறது. ஏழை நாடுகள் மட்டுமல்ல, உயல்கின் பணக்கார நாடுகளிலும் கூட இந்தப் பஞ்சம், பட்டினி வெவ்வேறு வடிவங்களில் மனிதர்களை உருக்கிக் கொண்டிருக்கிறது.

சாவிலிருந்து தப்ப வேண்டுமா? வீடுகளில் முடங்கிக் கிடவுங்கள் என்பது உயிர்காக்கும் தாரக மந்திரமாக சர்வதேச அளவில் உச்சரிக்கப்படுகின்றன. அப்படி முடங்கும்போது உழைப்பில்லை, அதனால் ஊதியமில்லை, பணம் இருந்தாலும் பொருட்களை உரிய நேரத்தில் கொள்வனவு செய்ய முடிவதில்லை. பணம் இருந்தாலும் இனி பொருட்கள் அனைத்தும் சந்தையில் கிடைக்குமா என்கிற அச்சம் உலக அளவில் நிலவவே செய்கிறது. உலக அளவில் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே உள்ள பொருட்கள் நுகர்வுக்குள்ளாகி முடிந்ததும் அவற்றுக்கு தட்டுப்பாடு நிகழ வாய்ப்புண்டு என்கிற எச்சரிக்கையைக் காண்கின்றோம். இது அத்தியாவசியப் பொருட்களுக்கும் தான். இந்த முடக்கம் நீடித்தால் இந்த நிலமை உருவாவதற்கு வாய்ப்புண்டு என்பதை எந்த சீற்றறிவுக்கும் எட்டும். இந்த முடக்க நிலை நீடித்தால் மூன்றாம் உலக வறுமை நாடுகள் பாரிய பஞ்சத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கவே செய்கிறது.

உலகில் மோசமான நோய் பாரிய அளவில் பரவிய காலங்களில் எல்லாம் கூடவே பஞ்சமும் பட்டினியும் நிகழ்ந்திருக்கிறது என்பது வரலாற்றில் பல தடவைகள் பதிவாகியிருக்கிறது.

இலங்கையின் வரலாற்றில் கோரமான தொற்றுநோய்களால் ஏற்பட்ட மனிதச்சாவுகளும், பட்டினியால் உருவான மனிதச் சாவுகளும், யுத்தங்களால் உருவான மனிதப் பேரழிவுகளும் பல தடவைகள் பதிவாகியுள்ளன. அந்த வரிசையில் இலங்கையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய பட்டினிச்சாவுகள் பற்றி மகாவம்சம் கூறுகிறது.

மகாவம்சத்தில் ஏராளமான கட்டுக்கதைகளும், புனைவுகளும் இருந்தபோதும் அது மட்டுமே எழுத்தில் உள்ள தவிர்க்கமுடியாத வரலாற்று ஆவணமாக சிங்களவர்கள் அல்லாதவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை நிலவவே செய்கிறது. அது சொல்லும் காலம், அது பதிவு செய்துள்ள ஆட்சியாளர்கள், நிகழ்வுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே மேலதிகமான விரிவுபடுத்தல்களும், வியாக்கியானங்களும், தேடல்களும், உறுதிபடுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரும்பியோ விரும்பாமலோ இலங்கை பற்றி ஆய்வு செய்கிற சகல வரலாற்றாசியர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தவிர்க்க முடியாத மூல ஆவணமாக மகாவம்சம் இருக்கிறது. அவரவர் அவரவர்களுக்கு ஏற்றாற் போல அர்த்தப்படுத்தல்களை மேற்கொள்ள அதன் நம்பகத்தன்மையற்ற தகவல்கள் வழிகளை உருவாக்கிவிட்டிருக்கிறது.

“பெமினிதியா”
அந்த வகையில் இலங்கையில் ஏற்பட்ட கொடிய பட்டினிச்சாவு பற்றி மகாவம்சம் தரும் தகவல் மன்னன் வலகம்பா காலத்துக்குரியது. கி.மு 103-89 காலப்பகுதியில் இது உருவானதாக கூறப்படுகிறது. இதனை சிங்களத்தில் “பெமினிதியா” (බැමිණිතියා) என்று அழைக்கிறார்கள். அதாவது பெரும்பஞ்சம் எனலாம். கிட்டத்ததட்ட 12 ஆண்டுகள் நீடித்த பஞ்சம் இது. மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்து மலைநாட்டுப் பகுதிகளுக்குச் சென்று இலைகுழைகளைச் சாப்பிட்டு பசி போக்கினார்கள். பஞ்சம் நீங்கியதும் மீண்டும் பாழடைந்த தமது ஊர்களுக்குதித் திரும்பி தமது வாழ்க்கயைப் புதிதாகத் தொடங்கினர்.

மகாவிகாரையைச் சேர்ந்த இருபத்தி நான்காயிரம் பிக்குமார் பட்டினியாலேயே காடுகளில் சமாதியடைந்தார்களாம். பட்டினியால் பலர் மனித மாமிசத்தை உண்டார்களாம்.

இந்தக் காலப்பகுதி இலங்கையின் இருண்ட காலங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக குறுகிய காலத்துக்குள் ஏற்பட்ட பல தென்னிந்திய ஆக்கிரமிப்புப் போர்களால் விவசாயமும், உற்பத்தியும் பாரிய அளவில் பாதிப்படைந்தது. கடுமையான வறட்சியின் விளைவாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட போது; தென்னிந்திய படையெடுப்பாளர்கள் தாங்கள் ஆக்கிரமித்து ஆண்ட பகுதிகளில் தொட்டிகளையும் நீர்த்தேக்கங்களையும் பழுதுபார்த்து பராமரிக்க தவறியிருந்தனர் என்கிறது இலங்கையின் புராதன வரலாற்று நூல்களில் ஒன்றான “சீஹலவத்துப்பகரணய”  (සීහළවත්ථුප්පකරණය) என்கிற இதிகாசம். தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த ஐந்து தமிழ் மன்னர்களை வலகம்பா மன்னன் முறியடித்து விரட்டியதான் பின்னர் தான் இந்தப் பஞ்சம் கலைந்ததாம்.

“சீஹல வட்டு”
“சீஹலவத்துப்பகரணய” என்பதை “சீஹலவட்டு” (සීහල වත්ථු) என்றும் அழைப்பார்கள். கணிசமாக சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட மிகப் பழமையான ஒரு வரலாற்று இலக்கியமாக கொள்ளப்படுகிறது. “பனகதா” என்று சொல்லப்படுகிற பௌத்த பிரசங்கக் கதை வடிவில் எழுதப்பட்ட ஒன்று அது. அதுமட்டுமன்றி மகாவம்சத்தைவிடப் பழமையானது இது. மகாநாம தேரர் மகாவம்சத்தை வடிப்பதற்கு மூலாதாரமாக பயன்படுத்திய நூல்களில் ஒன்றாக இது இருக்கலாம் என்றும் கலாநிதி தம்மதின்ன உட்பட பல சிங்கள அறிஞர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 1959ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலப்பகுதியில் இது முதற் தடவையாக பாளி மொழியில் இருந்து சிங்கள மொழிக்கு பொல்வத்தே புத்ததத்த தேரரால் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் வேறு சிலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இந்த நூலில் தான் பஞ்சம் குறித்த முதலாவது இலங்கை வரலாற்று பதிவாகக் கருதப்படுகிறது. அது மட்டுமன்றி இந்த நூலில் தான் துட்டகைமுனுவின் மகன் சாலிய – அசோகமாலா ஆகியோரின் விவாகம் குறித்தும், அதில் துட்டகைமுனுவின் அணுகுமுறை, துட்டகைமுனுவின் மரணம் என பல நிகழ்வுகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

“பெமினிதியா” என இந்தப் பஞ்சத்தை ஏன் அழைத்தார்கள் என்பதற்கு ஒரு சுவாரசியமான விளக்கம் உண்டு. இந்தக் காலப்பகுதியில் தென்னிந்திய ஆக்கிமிப்புகளை நடத்தி தொடர் கிளர்ச்சிகளை செய்துகொண்டிருந்தவர்கள் பிராமணர்கள். அவர்களை “பெமினிட்டிய” என்று அழைப்பார்கள். அதிலிருந்தே “பெமினிதியா” என்கிற பதம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் கி.மு 89 இல் கைப்பற்றப்பட்ட பின்னர் சேதமடைந்த மற்றும் அழிக்கப்பட்ட அனைத்து சிறு குளங்களையும், பாசனக் குளங்களையும் மீளமைக்க நடவடிக்கை எடுத்தான் வலகம்பா.

இதன் மூலம் “பெமினிதியா” என்கிற பெரும் பஞ்சம் மறையத் தொடங்கியது. இந்த பாரிய பணியின் காரணமாக மன்னர் வாலகம்பா ஒரு சிறந்த ஹீரோவாக சிங்களவர்கள் மத்தியில் போற்றப்படுகிறான். அது மட்டுமன்றி

இந்த பஞ்சத்தைப் பற்றிய பல விபரங்களை சீஹலவத்துப்பகரணய” பதிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள்.

“ஆலோகோ உதபாதி” திரைப்படம்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் “ஆலோகோ உதபாதி” என்கிற ஒரு சிங்களத் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட் படம் அதுதான். இந்தத் திரைப்படம் பல விருதுகளை பெற்றுக்கொண்டது. இதன் முதல் திரையிடலின் போது அதைப் பார்த்துவிட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த “சகல சிங்களவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது” என்றார்.

2100ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.மு 89இல் மன்னர் வலகம்பா அரசாட்சி செய்த சமயத்தில் தென்னிந்தியாவிலிருந்து “தமிழ் – சைவ” சோழர்கள் படையெடுத்து வந்து நாட்டின் சொத்துக்களையும், ஆட்சியையும் கைப்பற்ற போர் நடத்தியதுடன், பௌத்தத்தை அழித்து தமது சமயத்தை நிறுவுவதற்கும் முயற்சித்தார்கள் என்றும், அப்போது ஏராளமான பிக்குகளை தமிழர்கள் கொன்றார்கள் என்றும், பிக்குமார் பலர் காடுகளிலும், குகைகளிலும் மறைந்து வாழ்ந்ததாகவும், 14 ஆண்டு காலம் சோழர்களை எதிர்த்து போராடிய அரசர் வலகம்பா பிக்குமாரை பாதுகாப்பாக இந்த அலுவிகாரைப் பகுதியில் தலைமறைவாக இருத்தச் செய்து திபிடகவை எழுதச் செய்தார் என்பது தான் கதை. இந்தத் திரைப்படத்தில் மக்கள் பஞ்சத்தால் பட்ட வேதனைகளும், வலகம்பா அரசனின் போர் வீரம், போர் ஞானம் பற்றி மட்டுமல்லாது வென்றதன் பின்னர் செய்த அபிவிருத்திகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

மகாவம்சம் போற்றும் துட்டகைமுனுவின் மரணத்தின் பின்னர் அவரது மகன் சாலியவுக்கு அரச பதவி கிடைக்கவில்லை. சாலிய "தாழ்த்தப்பட்ட" சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததால் தான் சாலியவுக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை என்கிறது சிங்கள வரலாற்று இலக்கியங்கள். ஆகவே துட்டகைமுனுவுக்குப் பின் அரச பதவி அவரின் சகோதரன் சத்தாதிஸ்ஸவுக்கே போனது. சத்தாதிஸ்ஸவின் மரணத்துக்கு பின் அவரது மகன்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் கொலை செய்து மாறி மாறி ஆட்சி செய்தனர். அவர்களில் கடைசி இளைய மகன் தான் வலகம்பா. “வட்டகாமினி” என்கிற பெயராலும் வரலாற்று நூல்களில் அறியப்படுபவர். அதாவது துட்டகைமுனுவின் தம்பியின் மகனே “வலகம்பா”.

பின் வந்த வரலாற்று நூல்கள் எல்லாமே இந்தப் பஞ்சத்தைக் குறிப்பிட்டு இந்தப் பட்டினிச் சாவுக்கு தமிழர்களே காரணம் என்று நிறுவுகிற போக்கைக் காண முடியும். தமிழர்களுக்கு எதிரான கட்டுக்கதை வரிசையில் இந்தச் சம்பவமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுகிறது.
“சீஹல வட்டு” உள்ளிட்ட பல சிங்கள பௌத்த வரலாற்றுக் காவியங்களை இந்த இணைப்பில் இருந்து தரவிறக்கலாம்

இராமநாதனை நாவலர் அரசியலுக்கு கொண்டுவந்த கதை - என்.சரவணன்

1879ஆம் ஆண்டு என்பது முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த வருடம். குறிப்பாக தமிழர் வரலாற்றில். அதற்கு முந்திய மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் பரவியிருந்த கொலரா நோயினால் ஏறத்தாள 7000பேர் இறந்தனர். கொலரா எதிர்ப்பு – நிவாரண நடவடிக்கையின் விளைவாக பல தமிழ் பிரமுகர்கள் சாதி மத பேதமின்றி ஒன்றுபட்டார்கள். 1879 அளவில் கொலரா நோய் நின்று நிலைமை வழமைக்குத் திரும்பியது. இந்த ஆண்டு தான் ஆறுமுக நாவலர் இறந்தார். சேர் முத்துக்குமாரசுவாமியும் இறந்தார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. சேர் முத்துக்குமாரசாமி; இராமநாதனின் தாய்மாமனான முத்துக்குமாரசாமியின் அரவணைப்பில் வளர்ந்தவர் தான் இராமநாதன்.

1879 மே 4 அன்று சேர் முத்துக்குமாரசாமி மறைந்தார். 1862 முதல் இறக்கும் வரை சட்ட நிரூபன சபையில் அவர் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவால் சட்டநிரூபனசபையில் அவரது இடம் வெற்றிடமானது. அவரது வெற்றிடத்திற்கான போட்டியில் கத்தோலிக்கரான “கிறிஸ்தோபர் பிறிற்ரோவிற்கு” திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை ஆதரவை வழங்கினார். தேசாதிபதியின் நியமனத்தின் மூலம் நியமிக்கப்படும் உறுப்பினராக பொதுச்சேவையில் நீண்ட அனுபவமும் பிரபல சமூக சேவையாளராகவும் ஒரு மாவட்ட நீதிபதியாகவும், இராணி வழக்கறிஞராகவும் அறியப்பட்ட கத்தோலிக்கரான பிறிற்றோவை நியமிப்பதன் மூலம் இலங்கைத் தமிழரிடையே மத ரீதியான காழ்ப்புணர்வை தவிர்ப்பதுடன் மக்களிடையேயான ஒற்றுமையும் அவர்களிற்கான சேவையும் பூரணமாக்கப்படும் என வெங்கடாசலம்பிள்ளை நம்பினார்.
சேர் முத்துக்குமாரசுவாமி
எனினும் அப்போட்டியில் “சைவவேளாளர்” என்னும் கோசத்தினை முன்னிறுத்திய ஆறுமுகநாவலரின் அதீத பிரச்சாரத்தினால் பொன்னம்பலம் இராமநாதன் எனும் உயர்குடி வேளாளரே தேசாதிபதியால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். நாவலர் இந்தப்பணியை முடித்து சில மாதங்களில் அதாவது டிசம்பர் 05.12.1879 அன்று இறந்து போனார். 

பிறிற்றோவுக்கும், இராமனாதனுக்கும் இடையில் நிகழ்ந்த இந்த அரசியல் போட்டி வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இன்றுவரை இராமநாதனின் அரசியல் பிரவேசம் குறித்து கூறப்ப்படும்போதேல்லாம். நாவலர் அரசியலுக்கு கொண்டுவந்தார். என்று சுருக்கமாக அந்தக் கதை முடிவதுண்டு. ஆனால் இதன் பின்னால் நிகழ்ந்த யாழ் – சைவ – வெள்ளாளத்தனத்தின் ஒரு அங்கமாக அந்த வரலாற்று நிகழ்வை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

கிறிஸ்தோபர் பிறிற்ரோ (Christopher Brito)
கிறிஸ்தோபர் பிறிற்ரோவின் தந்தை புத்தளத்தைச் சேர்ந்த பிலிப் பிறிற்ரோபுள்ளே. அவர் பலரும் அறிந்த முதலியாராகவும் அரசாங்கப் பதிவாளராகவும் இருந்திருக்கிறார். இன்று றோயல் கொலேஜ் என்று அழைக்கப்படும் அன்றைய கொழும்பு அக்காடமியிலேயே பிறிற்ரோ கல்வி கற்றார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். இலங்கை திரும்பியதும் தான் கற்ற கொழும்பு அக்காடமியில் கணித பேராசிரியராக கடமையாற்றினார். 1867 இல் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கி பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினார்.(1) பலரும் அறிந்த பிரமுகராகவும் இராணி வழக்கறிஞராகவும் செல்வாக்கு பெற்றவராக இருந்தார் பிறிற்ரோ. 1872 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். வழக்கறிஞர் சங்கத்தின் (BAR) தலைவராகவும் இருந்திருக்கிறார்(2) தமிழ், சிங்களம், ஆங்கிலம், லத்தீன், கிரீக், சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிப் பரிச்சயம் உடையவர்.

இலங்கை கத்தோலிக்கச் சங்கத்தின் (CATHOLIC UNION OF CEYLON) தலைவராகவும் இருந்திருக்கிறார்.(3) ஒரு தோட்ட உரிமையாளராகவும் இருந்திருக்கிறார் என்று பெர்குசன் டிரெக்டரி (1905-1906). கூறுகிறது.(4)

தமிழ்ப் பண்பாட்டறிவியலில் பிறிற்ரோவின் வகிபாகம்
மகாவம்சத்தை சிங்களவர்கள் இலங்கையின் வரலாறாகக் கொண்டாடி வருகின்ற போதும் அது சிங்கள பௌத்தர்களின் வரலாறு என்று நாம் கூறிவிடமுடியும். அதுபோல யாழ்ப்பாணத் தமிழர்களின் சரித்திரத்தைஅறிவதற்கு துணையாக இருக்கும் நூல்களாக இன்றும் பயன்படுத்தப்படுபவை “கைலாய மாலை”, “வையா பாடல்”, “பர ராஜ சேகரன் உலா”, “ராஜ முறை” “யாழ்ப்பாண வைபவமாலை”. இவற்றில் “யாழ்ப்பாண வைபவமாலை” ஒல்லாந்து அதிகாரி மேக்கறூனின் வேண்டுகோளுக்கு இணங்க மயில்வாகனப் புலவரால் 1736இல் முதன்முதலில் எழுதப்பட்டது.(5) ஆனாலும் அது முதன் முதலில் 1884 ஆண்டு தான் அச்சு வடிவில் வெளிவந்தது.(6)  இந்த நூலை அடியொற்றி 1928ஆம் ஆண்டு சுவாமி ஞானப்பிரகாசர் “யாழ்ப்பாண வைபவ விமர்சனம் – தமிழரசர் உகம்” என்கிற பெயரில் நூலாக வெளியிட்டார். “யாழ்ப்பாண வைபவ மாலை”யில் தாம் கண்ட முரண்பாடுகளை அவர் தனது பதிப்பில் எடுத்துச் சொல்கிறார்.(7) அவர் எழுதிய முக்கிய விமர்சனக் கட்டுரை ஆங்கிலத்தில்  “யாழ்ப்பாண வைபவ மாலையின் மூலங்கள்” (REVD. S. Gnana Prakasar - Sources of the Yalppana vaipava malai.) என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.(8)
மூல நூல் எழுதப்பட்டு ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர்  அதனை முதன்முதலில் தமிழ் மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தவர் தான் பிறிற்ரோ. 1879 இல் இது வெளிவந்தது. இன்னும் சொல்லப்போனால்; யாழ்ப்பாண வைபவமாலை தமிழ் மொழியில் அச்சில் வெளிவருவதற்கு முன்னரே ஆங்கிலத்தில் வெளிவந்துவிட்டதை அறிய முடிகிறது.(9) இன்றும் ஆங்கிலத்தில் யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றை ஆராய்வதற்கு மிக முக்கியமான ஆவணமாக பிறிற்ரோ மொழிபெயர்த்த யாழ்ப்பாண வைபவ மாலையே திகழ்கிறது. வெறும் மொழிபெயர்ப்பு என்று மட்டும் அதைக் கூறிவிட முடியாது. பல அடிக்குறிப்புகள், பின் குறிப்புகள், சொல் விளக்கம் என அவரின் ஆராய்ச்சித் தன்மையை அதில் காணலாம்.  பிறிற்ரோவின் பின்னணியை ஆராய்கிறபோது அவர் வரலாற்றறிவில் ஆழமும், தேடலும் உள்ள ஒருவராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக ராஜரீக ஆசிய கழகத்தின் கூட்டக் குறிப்புகளை நோக்கும்போது வரலாறு, இலக்கியம், அரசியல் குறித்து நிறைய பங்களிப்புகளை செய்திருக்கிறார்.

இந்த மொழிபெயர்ப்புக்காக அவர் வேறு பல வரலாற்று நூல்களையும் ஒப்புநோக்கியிருக்கிறார். அவ்வாறு ஆராயும்  போது அதில் “குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்  இந்த நூலில் நபர்கள், சம்பவங்கள், காலம் என்பன காணப்படுகின்றன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.(10)

அதே வேளை தாராள சிந்தனைக் கொண்ட அவரின் இந்த மொழிபெயர்ப்பில் பிரதேச உணர்வும், சாதிய மேலாதிக்க உணர்வும் கலந்திருப்பதாகத் தோன்றுகிறது என்று “பூதத்தம்பி” விடயத்தை அவர் விபரித்திருக்கிற விதத்தில் இருந்து உணர முடிவதாக ஜோன் மார்டின் (John. H. Martyn) குறிப்பிடுகிறார்.(11) ஜோன் மார்டின் யாழ்ப்பாண வைபவ மாலை தொகுக்கப்பட்டதிலும், கிறிஸ்தோப்பர் பிறிற்ரோவின் மொழிபெயர்ப்பிலும் இருக்கிற பல்வேறு சிக்கல்களை தனது நூலில் விவிவாக ஆராய்ந்திருக்கிறார்.

யாழ்ப்பாண வைபவ மாலையின் இரண்டாம் பதிப்பு யாழ்ப்பாணத்தில்  இயங்கிய அமெரிக்க மிஷனைச் சேர்ந்த எஸ்.ஜோன் என்கிற பாதிரியாரால் 1882 இல் வெளியிடப்பட்டிருப்பதாக ஜோன் மார்டின் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் வெளியிட்ட அந்த நூல் யாழ்ப்பாணச் சரித்திரம் (Yalpana Chariththiram or the history of Jaffna – S.John) என்பதே. இந்த நூல் யாழ்ப்பாண வைபவ மாலையை அடியொற்றியே எழுதப்பட்ட நூல். ஆனால் அதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். குறிப்பாக கைலாய வன்னியனும், அவரின் மைத்துனர் பூததம்பியும் கொழும்புக்குச் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை விபரிக்கின்ற தகவல்களில் வேறுபாடுகள் உள்ளன.
“இன்னொரு இடத்தில் இது பிறிற்ரோவின் “யாழ்ப்பாண வரலாறு” பிறிற்ரோ யாழ்ப்பாண வரலாறை எழுதியதில்லை. அவர் யாழ்ப்பாண வைபவ மாலையை மொழிபெயர்த்ததைத் தான் செய்தார். கூடவே சில பின்னிணைப்புகளை சேர்த்துக்கொண்டார். அப்படி ஒரு வரலாறை அவர் எழுதியிருந்தால் நிச்சயம் அதற்கு “யாழ்ப்பாண வரலாறு”
என்கிற பெயரை நிச்சயம் வைக்கமாட்டார். என்கிறார் ஜோன் மார்டின்.

பிறிற்ரோ மொழிபெயர்த்த இன்னொமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் “முக்குவர் சட்டம்” இது யாழ்ப்பாண வைபவ மாலை வெளியிடுவதற்கு முன்னரே  (1876) அது வெளியிடப்பட்டுவிட்டது. பிறிற்ரோ மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய காலத்தில் இந்தப் பணியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு மொழிபெயர்த்திருந்தார். “நூறாண்டுக்கு முன் இலங்கையின் அரசியல் நிலை” என்கிற தலைப்பில் அவர் நிகழ்த்திய விரிவுரை கட்டுரையாக வெளிவந்திருப்பதாக குறிப்பொன்று காணக்கிடைக்கிறது. ஆனால் அது எங்கே என்பது பற்றியோ அந்த கட்டுரையையோ கண்டு பிடிக்கமுடியவில்லை.(12) அவர் புலமைத்துவப் பணிகளில் ஆழ்ந்த ஈடுபாடுடையவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் ராஜரீக  ஆசிய கழகம் - இலங்கைக் கிளையில் (Royal Asiatic society - CEYLON BRANCH)  அங்கம் வகித்திருப்பத்தையும் (உதாரணத்திற்கு – 1865 ஆண்டு அங்கத்துவப் பட்டியல்), அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளில் H.C.P.Bell போன்ற பல ஆங்கிலேய ஆய்வாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியிருப்பத்தையும் வைத்து அறிய முடிகிறது. 

புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளரான H.C.P.Bell உடன் சேர்ந்து “தமிழர் பிரச்சினை” (The Tamilian Problem) என்கிற தலைப்பில் ஒரு ஆய்வுக்கடுரையையும் அவர் சமர்ப்பித்திருக்கிறார். பிறிற்ரோவுக்குப் பின்னர் தான் இராமநாதன், அருணாச்சலம் போன்றோரும் ராஜரீக  ஆசிய கழகத்தில் அங்கம் வகிக்கத் தொடங்கினர் என்பதும் அறிய முடிகிறது. பின்னர் ஒரே காலத்தில்  பிறிற்ரோ, இராமநாதன், அருணாச்சலம் ஆகியோர் அதில் இயங்கியிருக்கின்றனர். ஒரே கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர். 16.05.1895 இல் கொழும்பு மியூசியத்தில் நிகழ்ந்த அந்த கழகத்தின் கூட்டத்தில் பொன்னம்பலம் குமாரசுவாமி தலைமை வகித்திருக்கிறார் அதே கூட்டத்தில் புறநானூறு பற்றிய விவாதமொன்றில் பொன்னம்பலம் இராமநாதன் கருத்து வெளியிட்டிருப்பதையும், சிலப்பதிகாரம், கஜபா அரசனின் இந்திய விஜயம் பற்றிய விவாதத்திற்கான ஆவணங்களைப் பெறுவது பற்றி பிறிற்ரோ உரையாடியிருப்பது பற்றியும் குறிப்புகள் உள்ளன. (13)

இதைவிட பிறிற்ரோ ஒன்பதாம் பத்திநாத பாப்பரசர் சரித்திரம் (Life of Pope Pius IX. –Jaffna) என்கிற நூலை யாழ்ப்பாணத்தில் -   1892இல் வெளியிட்டிருகிறார் என்கிற தகவல் பிரிட்டிஷ் நூலகம் தொகுத்த தமிழ் நூல்களின் பட்டியல் என்கிற நூலில் இருந்து அறிய முடிகிறது.(14)

யாழ்ப்பாணத்தின் வரலாற்றை மீட்டெடுத்ததிலும், அதனை பரப்பியதிலும் அன்றைய முக்கிய தமிழ் கிறிஸ்தவ அறிஞர்களின் பங்கை மறுதலித்துவிட, முடியாது. காசிச் செட்டி, ஹென்றி மார்ட்டின், ஜோன், டானியல் சாமுவேல் போன்றோரின் வரிசையில் கிறிஸ்தோபர் பிறிற்ரோவுக்கும் பெரும்பங்குண்டு. இவர்களின் அந்த பங்களிப்புக்கு தமிழ் சமுதாயத்தில் கிடைக்காத அங்கீகாரம் தமிழ் சமுதாயத்துக்கு வெளியில் நிறையவே இருக்கிறது.

தமிழ்ச் சமூக பண்பாட்டறிவியலில் பிறிற்ரோவின் வகிபாகத்தை இத்தகைய பின்புலத்தையும் கணித்துத் தான் நோக்கவேண்டும்.

காசிச்செட்டி, பிறிற்ரோ, முத்துகிருஷ்ணா ஆகியோர் “கொழும்பு செட்டி”(15)  பின்னணியுடையவர்கள் என்றும் அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த புரட்டஸ்தாந்து பின்புலத்தைக் கொண்டவர்கள் என்றும் பெட்ரிக் பீப்ல்ஸ் குறிப்பிடுகிறார்.(16) ஆனால் அவரது நூலில் இந்த பகுதிக்கு மேலுள்ள பந்தியில் யாழ்ப்பாண வைபவ மாலையை மொழிபெயர்த்த கிறிஸ்தோபர் பிறிற்ரோவை குறிப்பிட்டு விட்டு அடுத்த பந்தியில் இதனை விளக்குவதால் இந்த இரு பிறிற்ரோக்களும் ஒருவரே என்பது போன்ற ஒரு தகவல் மயக்கம் வர வாய்ப்புண்டு. இதே காலத்தில் காசிச் செட்டியின் உறவினரான பிலிப் ஆர்.பிறிட்டோ பாபாபுள்ளே என்கிற ஒருவர் இருந்தார். பிரசித்தி பெற்ற வைத்தியர். நூல்களையும் எழுதியிருக்கிறார். அவரின் பெயரில் கொழும்பு கிராண்ட்பாஸ் இல் “பாபாபுள்ளே ஒழுங்கை” என்கிற வீதியுமுண்டு. அவரும் “செட்டி” பின்னணியைக் கொண்டவர் தான். ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தாய்வழி முன்னோர் கூட கொழும்பு செட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜே.ஆரின் சுயசரிதையை எழுதிய கே.எம்.டி.சில்வா மற்றும் ஹோவார்ட் ரிக்கின்ஸ் (Howard Wriggins) போன்ற வரலாற்றாசிரியர்களும் பதிவுசெய்திருக்கிறார்கள்.(17)

1981 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் போது யாழ் நூலகம்  எரிக்கப்பட்ட வேளை எஞ்சிருந்த ‘யாழ்ப்பாண வைபவ மாலை’யின் ஒரேயொரு மூலப்பிரதியும் அதில் அழிந்து போனது. மீட்கமுடியாத செல்வம் அது.

“யாழ்ப்பாண வைபவ மாலை”யை ஆங்கிலத்தில் கொண்டுவந்ததன் பின்னணியில் மகாவம்சத்தின் செல்வாக்கைப் பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டும்.

மகாவம்சத்துக்கு நேர்ந்த சவால்
ஆய்வுரீதியான புலமைத்துவ பணிகள் இலங்கையில் காலனித்துவவாதிகளால் காலனித்துவ காலத்தில் தான் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். நமது வரலாற்றை மீட்டுத் தந்ததில் அவர்களின் வகிபாகம் அளப்பெரியது.

இலங்கையின் வரலாறாக அதுவரை அறியப்பட்டிருந்த மகாவம்சம் 6ஆம் நூற்றாண்டில் தான் எழுதப்பட்டது. மகாநாம தேரரால் அது பாளி மொழியில் “சிங்கள பௌத்த”ர்களின் வரலாறாகவே புனையப்பட்டிருப்பதை வரலாற்றாசிரியர்கள் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். இலங்கையின் வரலாற்றை ஆராய முற்பட்டவர்களுக்கு பாளி மொழி தவிர்ந்த மொழிகளில் அது பல நூற்றாண்டுகளாக கிடைக்கவில்லை. 19ஆம் நூற்றாண்டில் இதனை மொழிபெயர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பூரணமாக வெற்றியளிக்கவில்லை. இறுதியில் முதற்தடவையாக அதனை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் ஜோர்ஜ் டேனர் (George Turnour). அவர் இலங்கையில் சிவில் நிர்வாகச் சேவையில் இருந்த காலத்தில் இதனை மொழிபெயர்த்து 1837இல் வெளியிட்டார். ஆனால் அதுவும் பிழைகளைக் கொண்ட பூரணமில்லாத ஒன்றென விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் “யாழ்ப்பாண வைபவ மாலை”யின் ஆங்கில மொழிபெயர்ப்பை பிறிற்ரோ 1879இல் வெளிக்கொணர்ந்தார். ஒரு வகையில் இது இலங்கையின் வரலாறை சிங்களவர்களின் வரலாறாக நிறுவ முயன்ற மகாவம்சத்தின் புனைவை உடைக்கும் ஒன்றாகவும் இருந்தது. வடக்கில் தமிழ் இராஜ்ஜியங்கள் பற்றியும் தமிழ் மன்னர்கள் பற்றிய விபரங்களையும் வெளிக்கொணரும் ஒன்றாக அது அமைந்தது. மகாவம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அவசியம் அப்போது தான் சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல ஆங்கிலேயர்களுக்கும் உணரப்பட்டது.

முன்னைய சிக்கலான மொழிபெயர்ப்பைக் கொண்ட ஜோர்ஜ் டேனரின் பதிப்பு வெளிவந்து சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின்னர் வில்ஹெல்ம் கெய்கர் (Wilhelm Geiger) ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். பின்னர் அதனை மீண்டும் ஆங்கிலத்துக்கு பாளி மொழி பாண்டியத்தியம் பெற்ற மாபெல் ஹெய்னஸ் போத (Mabel Haynes Bode) என்பவரின் மேற்பார்வையில் மொழிபெயர்த்து 1912 இல் வெளியிடப்பட்டது.

நாவலரின் தெரிவு இராமநாதன்
நாவலர் கத்தோலிக்கர்களை மட்டுமல்ல பல சைவர்களையும் பகைத்துக்கொண்டு இருந்த காலம் அது. கத்தோலிக்கரான பிறிற்ரோவுக்கு கத்தோலிக்க சமூகத்தினர் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. அன்றைய “The Guardian” பத்திரிகை, “இலங்கை நேசன்” உள்ளிட்ட பத்திரிகைகள் எல்லாம் பிறிற்ரோவுக்கு ஆதரவாக இயங்கின. “உதயபானு”  பத்திரிகை கூட பின்னர் தான் ஆரம்பிக்கப்பட்டன.

பிறிற்ரோவும் செல்வந்தராக இருந்தார். கல்பிட்டி, சிலாபம், மாதம்பே, நீர்கொழும்பு போன்ற இடங்களில் பிறிற்ரோ பல நிலங்கள் சொந்தமாக இருந்தன. 1878-1879 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கொலரா நோய் பரவி பலர் இறந்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆறுமுக நாவலருடன் சேர்ந்து உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். நாவலர் கஞ்சித்தொட்டி அமைத்து பல பிரமுகர்களிடமும் இருந்து நிதி சேகரித்து பல நாட்கள் கஞ்சி விழங்கி உதவினார். அந்தத்திட்டத்துக்கு நாவலர் 20 ரூபாய் நிதியை முதலாவதாக வழங்கி அந்த நிதியத்தை ஆரம்பித்து வைத்தார். நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 22 இலிருந்து 25  ரூபாய் வரை செலவாகியிருக்கிறது. இந்த கஞ்சித் தொட்டி திட்டத்துக்கு அப்போது பிறிற்ரோ 45 ரூபாயை வழங்கினார். கூடவே நாள்தோறும் பின்னேரம் நான்கு மணியளவில் கஞ்சித்தொட்டி நடத்திய இடங்களுக்குச் சென்று விபரங்கள் சேகரித்தார்.

அதன் பின்னர் பிறிற்ரோ சுதேசிகளுடன் சேர்த்து, யாழ்ப்பாண அதிபர் துவைனம் (W.C.Twynam) மாவட்ட நீதிபதி சேரம் (D.Saram), மாகாண உதவியாளர் பிறைம் (C.Prime) ஆகியோரையும் இணைத்து கஞ்சித்தொட்டி தரும சங்கம் ஒன்றினை 02.08.1877 அன்று ஏற்படுத்தினார். அதன் தலைவராக பிறிற்ரோவும் சேஷ் அளகக்கோன், ஆறுமுகநாவலர், அருணாசலம் முதலியார், சின்னத்தம்பி, தம்பு ஆகியோர் உறுப்பினர்களாகவும் தெரிவானார்கள். அதன் ஆலோசகர்களாக  துவைனம், சேரம் (D.Saram), பிறைம் ஆகியோர் தெரிவானார்கள்.(18)

ஏழைகளுக்கான நிவாரண நிதியம் ஒன்றை உருவாக்கி பிறிற்ரோ மேற்கொண்ட பங்களிப்பை அன்றைய அன்றைய யாழ் அரசாங்க அதிபர் துவைனம் மெச்சியிருக்கிறார்.(19)

பிறிற்ரோ 1879 இல் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஆறுமுக நாவலருடன் இணைந்து பிறிற்ரோ பணியாற்றியிருந்தாலும் பிறிற்ரோவுடனான அதிருப்தி அவருக்குத் தீரவில்லை. அவரது அதிருப்திக்கு பிரதானமான காரணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வழக்கு தொடர்பானது. 1876ஆம் ஆண்டு கோவிலைச் சேர்ந்த பிராமணர்களுக்கும் கோவில் நிர்வாகத்துக்குமிடையிலான சர்ச்சையொன்று வழக்கு வரை சென்றது. அந்த வழக்கில் நிர்வாகத் தரப்பு வழக்கறிஞராக வாதிட்டவர் பிறிற்ரோ. ஆறுமுகநாவலர் பிராமணர்களுக்கு பக்கபலமாக இருந்தார். ஆறுமுக நாவலர் நீதிமன்றத்துக்குள் நுழையும்போது பிறிற்ரோ உட்பட வழக்கறிஞர்கள் பலரும் எழுந்து மரியாதை செலுத்தினார்கள். எதிர்தரப்பு வழக்கறிஞராக வாதிட்ட பிறிற்ரோவின்ன் மீது நாவலருக்கு வெறுப்பு இருந்தது.(19)

பிறிற்ரோ சமூக அளவில் பெரும் செல்வாக்கு பெற்ற, படித்த, சமூக விடயங்களிலும் தீவிரம் மிக்க, புலமைத்துவ ஆற்றலையும், அரசியல் அனுபவங்களையும் கொண்ட, வயதில் மூத்தவராகவும் இருந்தார். ஆனால் அப்போதைய நிலையில் இந்தளவு தகுதியில்லாத இராமநாதனை அவர் அரசியலுக்குள் கொண்டுவந்தது அவர் ஒரு சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் தான். கிறிஸ்தவரான பிறிற்ரோவுக்கு அப்போதிருந்த செல்வாக்கை நாவலரால் சகிக்க முடியாது இருந்தது.

யாழ்ப்பாண வழக்கிறிஞர்கள் சங்கத்தில் (Jaffna Bar) 15.05.1879 வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து  பிறிற்ரோவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து திரட்டுவதற்கான ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். இராமநாதனுக்கு ஆதரவு தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் சமூகமளிக்காத அந்த கூட்டத்தில் பிறிற்ரோவுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர் என்று நாவலர் அணியினர் குற்றம் சாட்டினர்.

இதன் விளைவாக அடுத்த வாரமே ஆறுமுக நாவலர் 22.05.1879 அன்று வண்ணார்பண்ணையிலிருந்த சைவ பிரகாச வித்தியாயத்தின் மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்ட்டத்தைக் கூட்டினார். 

அந்த கூட்டத்திற்கு கிட்டத்தட்ட 3500 பேர் திரண்டிருந்தனர். அங்கு தான் தொடங்கியது இராமநாதனுக்கு ஆதரவான பிரச்சாரம்.

அந்த கூட்டத்தைப் பற்றிய ஒரு கட்டுரை அன்றைய கொழும்பு ஒப்சேர்வர்  (Colombo Observer 29.05.1879) பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் ஒப்சேர்வர் பத்திரிகை இராமநாதனையும், தி எக்சேமினர் (The Examiner) பத்திரிகை பிறிற்ரோவையும் ஆதரித்து இயங்கின.(20) “தி எக்சேமினர்” பத்திரிகையுடன் ஆருமுகநாவலருக்கு இருந்த பகையை அவரது எழுத்துக்களில் பிரதிபத்திருப்பதைக் காணலாம். குறிப்பாக ஆர் எழுதிய “யாழ்ப்பாணச் சமயநிலை” நூலில் சைவசமயிகளுக்கு எதிராக “தி எக்சேமினர்” தொடர்ந்துவந்த பிரச்சாரங்களைச் சாடியிருப்பார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியான சுதுமலையைச் சேர்ந்த கறோல் விஸ்வநாதப்பிள்ளை கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய போது சேர் முத்துகுமாரசுவாமியின் இழப்புக்கு வருத்தம் தெரிவித்து அவரது இடத்துக்கு அவரது உறவினரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞருமான இராமநாதனை முன்மொழிந்து அவரின் குடும்பப் பின்னணியின் மகத்துவத்தையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.(21)

இதனைத் தஞ்சாவூரில் நீதிவானாக இருந்த டீ.பொன்னம்பலம்பிள்ளை வழிமொழிந்தார். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அதனை ஏகமானதாக ஏற்றுக்கொண்டார்கள். ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டுக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த  நாவலர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு சத்தமிட்டார். என்னுடைய கடிதங்களையும், ஆவணங்களையும், தந்திகளையும் இங்கே கொண்டுவாருங்கள் என்று தனது உதவியாளருக்கு ஆணையிட்டார். 

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆறுமுக நாவலரும் பொன்னம்பலத்தின் குடும்பப் பின்னணி மற்றும் அவர் சட்டத்துறையில் ஆற்றிவரும் பங்களிப்பு பற்றியும் உரையாற்றினார்.
“அரச சபைக்குத் தெரிவானதன் பின்னர்  சேர் குமாரசுவாமி அவரது பணியின் காரணமாக யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வரவில்லை. இராமநாதன் ஏன் அதை செய்யக்கூடாது. அவருக்கு அதற்கான தகுதி இருக்கிறது”
என்று நீண்ட உரையை ஆற்றினார். முக்கிய பலரும் ஒவ்வொருவராக அன்று ஆற்றிய உரைகளின் இறுதியில் இராமநாதனை முன்மொழிந்தனர். எஸ்.தில்லையம்பலம் (சண்டிலிப்பாய் உடையார்), கந்தர் காசிப்பிள்ளை (வர்த்தகர்), எஸ்.டி.சிவப்பிரகாசப்பிள்ளை, ஈ.மயில்வாகனம் எஸ்.துரையப்பா செட்டியார் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கூட்டத்தில் இராமநாதனுக்கு ஆதரவு தெரிவித்து பலர் கையெழுத்திட்டார்கள். இந்த கூட்டத்தின் இறுதியில் அடுத்த பிரச்சாரக் கூட்டம் 24ஆம் திகதி சங்கானையிலும், 27 அன்று நல்லூரிலும் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இரு தரப்பின் கூட்டங்களும் பல இடங்களில் நிகழ்ந்தன.

இந்தக் காலப்பகுதியில் எல்லாம் வெகுஜன வாக்கெடுப்பு கிடையாது. ஓரிடத்தில் வாக்களிப்பு நடத்தப்படுவதும் கிடையாது. கல்விமான்களும், பிரபுக்களும் கூட்டன்கூடித் தங்கள் அபிப்பிராயத்தை அரசாங்கத்துக்கு அறிவிப்பது வழக்கம்.

இறுதியில் இராமநாதனை வெற்றியடையச்செய்தனர். 27.08.1879இல் இராமநாதன் தனது 27வது வயதில் அரச சபைக்கு அன்றைய தேசாதிபதி லோங்டனால் (James Robert Longden) நியமிக்கப்பட்டார்.

பொன்னம்பலத்தின் தெரிவு அறிவித்ததும் பிறிற்ரோ தனது முறைப்பாட்டை காலனித்துவ செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். 18.06.1879 திகதியிட்ட அவரின் இந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் பொன்னம்பலத்தின் நியமனத்தை ரத்து செய்து மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்குமாறு வேண்டியிருக்கிறார். தான் நாடளாவிய ரீதியில் நடத்திய கூட்டங்கள் குறித்தும், அதில் கிடைத்த ஆதரவு குறித்தும் அவர் விளக்கியிருந்தார். பெரும்பாலான தமிழர், முஸ்லிம்கள், மலே இனத்தவர்கலின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை அவர் விளக்கினார். ஆனால் பொன்னம்பலத்தை தெரிவு சரியானது என்று தேசாதிபதி அறிவித்திருப்பதை குறிப்பிட்டு அந்த பதில்; பிறிற்ரோவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.(22)

வீ.முத்துகுமாரசாமி எழுதிய "நவீன இலங்கையின் சிற்பிகள்" (FOUNDERS OF MODERN CEYLON) என்கிற நூலில் சேர் பொன் இராமநாதனைப் பற்றிய விரிவான ஒரு கட்டுரை காணக்கிடைகிறது. அக்கட்டுரையில் இராமநாதனின் அரசியல் நுழைவின் பொது நிகழ்ந்த சர்ச்சைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அறிக்கைகள், பத்திரிகைக் கட்டுரை, கூட்டக் குறிப்பு என்பவையும் அதில் உள்ளடக்கப்பட்டிக்கின்றன. ஆனால் அவை இராமநாதனுக்கு சாதகமான விபரங்களை மட்டுமே தொகுத்திருப்பதைக் காண முடிகிறது. பிறிற்ரோ தரப்பு விபரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதை எவரும் அடையாளம் காண முடியும்.

அந்நூலில் உள்ள  ஒரு சுவாரசியமான ஒரு கட்டுரையொன்றைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். 15.05.1879 The Observer பத்திரிகையில் நாட்டுக்கோட்டை செட்டிமார் இராமநாதனை ஆதரித்து ஒரு அறிக்கையை வெளியிடுகின்றனர். நாட்டுக்கோட்டை செட்டிமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இராமநாதனை ஆதரித்து கூட்டம் நடத்தி கையெழுத்துக்களையும் திரட்டியிருப்பதாகவும், இராமநாதனின் பூர்வீகம், குமாரசுவாமி அவர்களின் பங்களிப்பு, அவரின் பரம்பரை என்றெல்லாம் காரணங்களை அடுக்கி இராமநாதனை முத்துக்குமாரசாமியின் இடத்துக்கு நியமிக்கும்படி கோருகிறது அந்த அறிக்கை.

இதில் உள்ள வேடிக்கை என்ன வென்றால் 1836 இல் தெரிவான தமிழர்களின் இலங்கையின் நாடாளுமன்றப் பிரதிநிதியாக (தமிழ்-முஸ்லிம்களின் முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதியும் அவர் தான்.) கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி நியமிக்கப்பட்டார். 1830 ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் “கிறிஸ்தவரல்லாத தமிழர்”களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் குமாரசுவாமி. மேல்மாகாண கச்சேரியில் இதற்கான தேர்தல் நடந்தது. சாராய உற்பத்தித் தொழிலில் புகழ்பெற்றவரான தியாகப்பா குமாரசுவாமியோடு போட்டியிட்டார். அவர் செட்டி சமூகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. அத்தேர்தல் ஒரு வகையில் சைவ வெள்ளாளருக்கும், சைவ செட்டிமாருக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு அமைதியான மோதல் என்று தான் கூறவேண்டும். கொழும்பில் நெடுங்காலமாக செட்டிமாருக்கும் சைவ வேளாளர்களும் இடையில் ஒரு மோதல் இருந்துகொண்டிருந்தது. ஆனால் அதே செட்டிமார் சமூகம் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் வழிவந்த சைவ வேளாள வாரிசான சேர் பொன்னம்பலத்தின் நியமனத்துக்காக பிற்காலத்தில் போராடியிருக்கிறது.

சி.கணபதிப்பிள்ளை கூறுவது...
சேர் பொன் இராமநாதனின் நியமனம் நிகழ்ந்து அரை நூற்றாண்டுக்குப் பின்னர் நாவலர் நினைவு தினத்தன்று (15.12.1946) வெளியான ஈழகேசரியில் அந்நிகழ்வைப் பற்றி வெளியான ஒரு கட்டுரையைக் காண நேர்ந்தது. அந்தக் கட்டுரை தான் என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. (இந்தக் கட்டுரையின் பின்னிணைப்பாக அதனை இணைத்திருக்கிறேன்.) அக்கட்டுரையை எழுதியவர் சி.க. என்று காணப்படுகிறது. அது பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்.

சி.கணபதிப்பிள்ளை இதே சம்பவத்தை வேறு வடிவத்தில் எழுதியதாக ஒரு கட்டுரை “நாலவர் எழுந்தார்” என்கிற தலைப்பில் இலங்கையின் 10 ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய பாட நூலில் காணப்படுகிறது. அதில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“சேர் பொன் இராமநாதன் துரைக்கு அப்போது இருபத்தைந்து வயசு. சிரித்த முகம்; தங்க சொரூபம்; அப்பொழுதுதான் சென்னைப் பட்டணத்திலிருந்து படித்து விட்டு வந்தவர். யாழ்ப்பாணத்தவரேயாயினும் யாழ்ப்பாணத்தவர்க்கு அவரைப் பற்றி ஒன்ருந்தெரியாது. யாழ்ப்பாணம் வந்திருக்கிறார்.
பிறிற்றோ என்பவர் பிரசித்தி பெற்ற பழுத்த வழக்கறிஞர். அக்காலத்து சட்ட நிபுணர்களுள்ளே தலைசிறந்தவர் அவர். இலங்கயிலேயுள்ள எல்லாரும் அவரை அறிவர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அவருக்கு பெரிய பேர். பாரிய வழக்குகளுக்கும் அப்பீல்களுக்கும் அவரை நியமிப்பது வழக்கம். அவருக்கு யாழ்ப்பாணத்தில் அளவு கடந்த செல்வாக்கு அந்த நாட்களில் இருந்தது....”
இப்படி தொடரும் அந்த கட்டுரையில் இன்னோர் இடத்தில் நாவலருக்கும் பிறிற்ரோவுக்கும் உள்ள பகைக்கான காரணத்தையும் குறிப்பிடுகிறார்.

அதாவது நல்லூர் கந்தசுவாமி கோவில் வழக்கில் பிராமணர்களுக்கு சார்பாக நாவலர் இயங்கிக்கொண்டிருக்கும் போது கோவில் நிர்வாகத்துக்கு சார்பாக பிறிற்ரோ வாதிட்டாராம். ஒரு கட்டத்தில் பிறிற்ரோ தான் பிரமாணர்களுக்கு வெற்றி கிட்டகூடியவகையில் வழக்கி நடத்தி வைப்பதாகவும் பதிலுக்கு தன் வெற்றிக்கு நாவலரை சார்பாக இருக்கும்படியும் நாவலரின் சகாக்களிடம் கேட்டதாகக் குறிப்பிடுகிறார்.

நாவலர்: பிறிற்ரோவின் நேர்மையின்மையை முன்வைத்துத் தான் அவரை எதிர்த்தாக காட்ட முடிக்கிறார்.

சி,கணபதிப்பிள்ளை இதனை ஒரு ஊகமாகத் தான் அதில் குறிப்பிடுகிறார். அவரது வசனத்தில்
“பிறிற்ரோ நேரிற் சில கடிதங்களில், தந்திகளில் ஒருவாறு குறிப்பிட்டும் இருந்தார் போலும்”
இப்படி “போலும்” என்கிற வார்த்தைகளைத் தான் கணபதிப்பிள்ளை பயன்படுத்துகிறார்.

“நாவலர் எழுந்தார்” என்கிற இதே கடிதத்தில் இறுதியில்
“ஒரே ஒரு குறிப்பு : எனக்கிந்தக் கதையை ஆயிரம் முறை சொன்னவர்கள் கூட்டத்தை நேரிற் கண்ணால் கண்டவர்களும், அக்கூட்டத்தொடு தொடர்புபட்டவர்களும். நாவலர் அவர்களின் தமையனார் புத்திரரும், அவர்கள் சரித்திரத்தை எழுதியுள்ளவர்களும், என் ஆசிரியர்களுமாயுள்ளவர்கள்...”
என்கிறார்.

நாவலர் வழிபாட்டு மரபுடைய தமிழ்-யாழ்-சைவ-வேளாளத்தனம் என்பது வரலாறை அதன் பின் பதிவு செய்யும் சலுகை பெற்ற தரப்பாக இருந்ததை நாம் சொல்லித தெரியவேண்டியதில்லை. எனவே இந்த விடயங்களைப் இதுவரை பதிவு செய்தவர்களை பக்க சார்பாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

இராமநாதனும் பிறிற்ரோவும் உறவினர்கள்
மானிப்பாயைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான ஈ.நன்னித்தம்பியின் மகள்களைத் தான் இராமநாதனும் பிறிற்ரோவும் திருமணம் முடித்தார்கள். செல்லாச்சி அம்மாளை பொன்னம்பலம் இராமநாதன் (1874இல்) மணமுடித்தார். அடுத்த மகள் தங்கம்மாவை பிறிற்ரோ (1866இல்) மணமுடித்தார். அந்த வகையில் இராமநாதனும் பிறிற்ரோவும் நெருங்கிய உறவினர்கள். பிறிற்ரோவின் மகன் சீ.எம். பிறிற்ரோ (C. M. Brito) பிற்காலத்தில் புகழ் பெற்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞராக ஆனார். அவருக்கு வக்கீல் தொழிலை பழக்கியவர் சேர் பொன் இராமநாதன்.(23)
பிரபாகரனின் கொள்ளுப்பாட்டன் வல்வெட்டித்துறை திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை பிறிற்ரோவை அரசியலுக்கு வருவதை ஆதரித்தார். அதைத் தோற்கடித்து ஒரு சைவ வெள்ளாளனைத் தான் கொண்டுவரவேண்டும் என்று  ஆறுமுக நாவலர் தன் முழு முயற்சியுடன் இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சி நிகழாமல் இருந்திருந்தால் இலங்கையின் வரலாறு வேறொரு அரசியல் பக்கத்தை திருப்பியிருக்கக் கூடும்.

கிறிஸ்தவரான பிறிற்ரோவை ஆதரித்து கிறிஸ்தவர்களும் பொன்னம்பலத்தை ஆதரித்து சைவர்களைத் திரட்டி ஆறுமுக நாவலரும் கூட்டங்களை நடத்தினார். பொன்னம்பலம் சைவத்தையும், தமிழையும் அதன் பண்பாட்டிலும் ஆர்வமுடையவர் என்று ஆறுமுக நாவலர் பிரச்சாரம் செய்தார். நாவலருடன் சேர்ந்து ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை (J.R.Arnold), கறோல் வைரமுத்து, விஸ்வநாதப்பிள்ளை(24) போன்ற பெரும் பிரமுகர்களும் பிறிற்ரோவுக்கு எதிராகக் களமிறங்கினார்கள். தமிழர் அரசியலில் குறிப்பாக வடக்கு அரசியலைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட முதல் சந்தர்ப்பம் அது என்கிறார் டி.சபாரத்தினம்.(25) 

நாவலர் ஆங்கில அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் தமிழர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்கள் அதே வேளை அவர்கள் இந்துக்களாக தம்மைப் பேண இடமளிக்க வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட சாதியினரும் சமமாக ஒரு வகுப்பில் கற்பது பற்றிய எதிர்ப்பையே நாவலர் அப்படி காட்டினார் என்று ராஜன் ஹூல் குறிப்பிடுகிறார்.(26) இப்படியான உள்ளுணர்வின் வெளிப்பாடே இராமநாதன் என்கிற சைவ வெள்ளாளனை அரசியலுக்குள் புகுத்தி மற்றவர் வரவிடாமல் தடுக்கப்பட்டது.

பொன்னம்பலம் இராமநாதன் நாவலரின் சித்தாந்தத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சென்ற நாவலருக்கு சரியான சிஷ்யனாக இருந்திருக்கிறார் என்றே கூற வேண்டும். பிற்காலத்தில் டொனமூர் ஆணைக்குழு வந்திருந்தபோது  சர்வஜன வாக்குரிமையை அனைவருக்கும் ஒரே நேரத்தில் வழங்குவதற்கு ஆங்கிலேயர்கள் முன்வந்த போது அதை எதிர்த்தவர் இராமநாதன். பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும், படிக்காதவர்களுக்கும், வசதியில்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதுபோல முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளத்தை எதிர்த்ததன் மூலம் அவர்களுக்கு தனியான பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும், தமிழர் அடையாளத்தின் கீழேயே அவர்களின் பிரதிநிதித்துவம் தொடரலாம் என்றார்.

அவர் அன்று வைத்த அக்கருத்துக்கள் பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை ஏனைய உயர்சாதி ஆசிரியர்களிடமிருந்து பிரித்து தனித்து உணவுண்ணச் செய்த சம்பவத்தை பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிட்டு காட்டுகிறார்.(27)  நாவலரின் இந்துக் கல்லூரியில் 1960கள் வரை வெள்ளாளர் அல்லாத மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. (ராஜன் ஹூல்)

இராமநாதனின் குடும்பத்தவர்கள் கோல்புறுக் அரசியல் சீர்திருத்தக் காலத்தில் இருந்து அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கி வந்திருக்கிறார்கள். முதன் முதலாக தமிழர்களதும் முஸ்லிம்களதும் பிரதிநிதியாக 30.10.1830 இல் பிரித்தானிய அரசால் முதலியார் ஆறுமுகத்தாப்பிள்ளை குமாரசுவாமி (Coomaraswamy, Arumuganathapillai 1783 - 1836)(28) நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின் அவருடைய மருமகன் எதிர்மன்ன சிங்க முதலியாரும், அவருக்குப் பின் குமாரசுவாமி முதலியாரும், பின்னர் அவரின் மைந்தர் முத்துக் குமாரசுவாமியும், அவருக்குப் பின்னர் அவரின் மருமகன் இராமநாதனும், அவருக்குப் பின்னர் குமாரசுவாமியும் நியமிக்கப்பட்டார்கள்.(29) இலங்கையின் அரசியலில் /அரசாங்க சபையில் அரை நூற்றாண்டு காலம் பணியாற்றினார் இராமநாதன்.(30)

பிறிற்ரோவின் வரலாறு பங்களிப்பு இலங்கைக்கு, குறிப்பாக தமிழர்களின் முதுசத்துக்கு மறுவுயிர்ப்பை வழங்குவதில் பங்களித்திருக்கிறது. கிறிஸ்தோபர் பிறிற்ரோ 26.12.1910ஆம் ஆண்டு திருவானந்தபுரத்தில் இறந்ததாக அறியக்கிடைக்கிறது. 

பின்னிணைப்பு:
“பிரதிநிதித் தெரிவில் நாவலர் பெருமான்” (ஈழகேசரி 15.12.1946)
பொன். இராமநாதனுக்கு இருபத்தைந்து வயசு. யாழ்ப்பாணத்துக்குப் புத்தம் புதிய ஒரு சிங்கக் குருளை. ஈழகேசரி ஆகவில்லை. பிறிற்ரோ பழுத்த பெரிய அப்புக்காத்து, பலரும் அறிந்த பஞ்சதந்திரத் கிழநரி.

இலங்கைப் பிரதிநிதித் தெரிவு. பிடர் ரோமம் எட்டிப்பாராத சிங்கக்குட்டிக்கும், பல்லுப்போலேமுரசுபெலத்த கிழநரிக்கும் பலத்த போட்டி. நரிக்குஞ்சுகள் - நியாய துரந்தரக்குட்டிகள் -- நன்றாகக் குருவி நுழைந்தன, இன்றைக்கென்ன, அன்றைக்கென்ன அவைகள் அப்படிக் தான் இனத்தை இனம் காத்து நின்றன. பிறிற்ரோவின் கை பெலத்துக் கொண்டது. இது ஒருபடி இருக்க,

ஒரு கதை: நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முதலாளிக்கும், பிராமணர்களுக்கும் கோயில் விஷயமாக ஒரு பெரிய வழக்கு. முதலாளிக்கு ஏற்பட்ட அப்புக்காத்து பிறிற்ரோ. பிராமணர்களுக்குப் பக்கத்துனை ஆறுமுக நாவலர்.

இப்பொழுது இலங்கைக்கு என்ன காலமோ, அப்படித் தான் அப்பொழுதும் இலங்கைக்குத் தெரிவுகாலம். இரகசியத் தந்திகள் இரகசியத் தபால்கள் கொழும்பிலிருந்து, பிறிற்ரோவிடமிருந்து நாவலருக்குப் பறந்துவந்தன. வேறாகவும், கரிமூட்டைகள் பல நாவலரிடம் நேரில் வந்து -அடை கிடந்து இரகசியம் பேசி உடைந்து போயின. சில கூழாயின.

நாவலர் பிரதிநிதித் தெரிவில் பிறிற்ரோவுக்குத் துணை புரியவேண்டியது. பிறிற்ரோ, கோயில் வழக்கில், முதலாளிக்கு ஏற்பட்டபடி இருந்து கொண்டே, முதலாளிக்குப் பாதகமாக, பிராமணர்களுக்குச் சாதகம் செய்துவிடுவது. இந்த நம்பிக்கைத் துரோகந்தான் அந்தப் பரமரகசியம். ஐயோ பாவம்! இது தெரிவுகாலங்களின் கோலம். ஒளிக்க அறியாதவர்கள் அதிகாரி வீட்டில் ஒளித்தது மிகப் பழைய கதை. இந்தக் கதை இருக்க,

வண்ணார்பண்ணையிலே நாவலர் வித்தியாசாலையில் பிரதிநிதித் தெரிவுபற்றி ஒரு பகிரங்க கூட்டம் ; இராமநாதனின் கட்சிக் கூட்டம். கூட்டத்துக்குத் தலைவர் சுதுமலை வைரவநாதர் குமாரர் விசுவநாதப்பிள்ளை. இவர், இளமையில் கிறித்தவ கல்லூரியிற் படித்துக் கிறித்தவராய், 'கறல்' என்ற கிறித்துவப் பெயர் பெற்று, சமயவிஷயம்களில், நாவலரை எதிர்த்து நின்று, பலத்த வாதங்கள் பல செய்தவர். பிறகு சிதம்பரத்திலே நடராஜர் சந்நிதியில், பொன்னூசி காய்ச்சித் தமது நாவில் சுடுவித்துக்கொண்டு, பழையபடி சைவத்துக்குவந்து, நாவலருக்குச் சீஷர் ஆனவர். சென்னைச் சர்வ கலாசாலையார் முதன் முதல் நடத்திய பி.ஏ. பரீஷையில் சித்தியெய்திய இருவரில் ஒருவர் இவர். மற்றவர் சி, வை. தாமோதரம்பிள்ளை. பிள்ளைக்கு இவர் உபாத்தியாயர். கணித சாஸ்திரத்தில் மகா பண்டிதர். சம்ஸ்கிருதத்திலிருந்து வீச கணிதத்தை, அழகு ஒழுகுகின்ற தெளி தமிழில் பெயர்த்துத் தந்தவர்; மகா விவேகி, இவர் அன்றைய கூட்டத்துக்குத் தலைவர்.

கூட்டத்துக்குத் தலைமை வகி க்க வேண்டியவர் நாவலர். அவருக்கு அப்பொழுது காச நோய். மூச்சுக் கொய்து வாங்குகின்றது. ஒருபுறத்தில் ஒரு தூணுக்கு அருகில், ஒன்றன் மேலொன்றாகப் பல தலையணைகளை அடுக்கி, அவற்றின் மேல் முழங்கைகளை ஊன்றிக்கொண்டு, கூட்ட நடவடிக்கைகளை நோக்கியபடி நாவலர் இருக் கின்றார். விசுவநாதபிள்ளை கூட்டத்தை நடத்துகின்றார்.

எதிர்க்கட்சி, கூட்டத்துள் நுழைகின்றது. கொழும்பிலிருந்து வந்த பெரிய வேங்கைகள் சிறிய சிறுத்தைகள் - உறுமிப் பாய்கின்றன. வாதப் பிரதிவாதம், சண்டப்பிரசண்டமாய் ஒன்றை ஒன்று மோதுகின்றது. விசுவநாதபிள்ளை சிறிது நிலைகலங்கினார். நிலைமை மோசமாகிறது, அரைக்கணம்.

தலையணைகள் அங்கும் இங்கும் பறந்தன. காசம் அதற்கு முன்னமே பறந்தது. நாவலர் எழுந்தார். 'சற்றே விலகு பிள்ளாய்' என்றொரு வார்த்தை நாவலர் வாயிலிருந்து வந்தது. நந்தன் கீர்த்தனம் அல்ல. விசுவநாதபிள்ளை விலகி இடங் கொடுத்தார். நாவலர் மேடையில் ஏறினார்! பிடர் ரோமங்கள் சிலிர்த்தன. எடுத்து வாடா தந்தி தபாற் கட்டுக்களை' என்று காஜ்ஜனை செய்தார். அந்தரங்க கடிதங்கள் - தந்திகள் - பகிரங்கத்துக்கு வந்தன. அவைகளை ஒவ்வொன்றாக வாசித்து, பிறிற்ரோவின் துரோக சிந்தனைகளை வெளியில் எடுத்து வீசி, ஆறுமுகநாவலர் கர்ஜ்ஜனை செய்தார்.

அங்கே வந்து பபுகுந்த பெரியவேங்கைகள் - சிறிய சிறுத்தைகள்- கிழ நரிகள் -குட்டிகள், குஞ்சுகள், குருமன்கள் - எல்லாம், நா இழந்து வலி தொலைந்து, 'பேச்சு பேச்சென்றும் பெரும்பூனை வந்தக்கால், கீச்சுக்கிச்சென்னும் கிளி' களாய் நாவலர் சொல்வதையே தாமும் சொல்லிக்கொண்டு, மெள்ள மெள்ள ஒதுங்கி மறைந்து தொலைந்து போயின. கூட்டம் இனிது நடந்து முடிந்தது. இந்தச்சம்பவம்இலங்கை எங்கும் பரந்தது.

'பிறிற்ரோ அத்தமயனகிரியை அடைந்தார். இளவள ஞாயிறு கடலில் எழுந்தது. கீழ்வானம் பொன்மயமானது. நீலத் திரைகள் அதனைத் தீண்டிச் சிவத்தன. பொன். இராமநாதன் இலங்கையின் ஏகப் பிரதிநிதியாயினார். ஐம்பது யாண்டுகள் --ஒரு நூற்றாண்டின் அரைவாசிக்காலம் - சட்ட சபையில், பிரதிநிதிகள் மத்தியில் நடு நாயகமாய் விளங்கினார் சேர் பொன். இராமநாதன்.

இன்றைக்கும் சரி! அந்தச் சட்டசபை முன்றிலில் - அது உந்நத உருவில் -அசையாத சிலையில்-

முறுவல் எழுந்து தவழும் முகம்-அன்றலர்ந்த முகம் - அழகொழுகும் முகம் - யாவருக்கும் அறிமுகம்! யாவருடைய முகம்.

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ! இலங்கைக்கு இன்னும் என்வளவு காலம் உண்டு! இராமநாதனுக்கும் அவ்வளவு காலம் உண்டு.

இலங்கைக்கு அழிவு இல்லை!

இராமநாதனுக்கும் அழிவு இல்லை!

அந்த அமர வஸ்து  - சேர் பொன், இராமநாதன் - அன்றொருநாள் - இலங்கைப் பிரதிநிதித்தெரிவில், ஆறுமுக நாவலர் பெருமான் தேர்ந்தெடுத்துத் தந்த ஈழகேசரி!

தக்கார் தகவில ரென்பதவரவர்
எச்சத்தாற் காணப்படும்.
நாவலர் வாழ்க !
அவருடைய நேர்மை நிலவுக!
அடிக்குறிப்புகள்
  1. DICTIONARY OF BIOGRAPHY of the Tamils of Ceylon Compiled by S.Arumugam, 1997
  2. CENTENARY VOLUME of the Colombo Municipal Council 1865-1965 - By H. A. J. HULUGALLE - Published by the Colombo Municipal Council (september 1965)
  3. Ferguson's Ceylon Directory 1905-1906 (P.868)
  4. மாமனார் நன்னித்தம்பி எழுதிக்கொடுத்த சொத்துக்கள் பிற்காலத்தில் பிள்ளைகளின் சொத்துத் தகராறு வழக்கு வரை சென்றது குறித்த வழக்கு விபரங்களில் இந்த சொத்துவிபரங்கள் காணக்கிடைகின்றன. (BRITO v. MUTHUNAYAGAM. 331—D. C. Negombo, 9,946. http://www.lawnet.gov.lk/wp-content/uploads/2016/11/006-NLR-NLR-V-19-BRITO-v.-MUTHUNAYAGAM.pdf
  5. பிற்காலத்தில் “யாழ்ப்பாண வைபவ மாலை”யை மீண்டும் வெளியிடுவதற்காக பிட்டிஷ் நூலகம் சென்று பிரதியெடுத்துக்கொண்டு வந்து முதலியார் குல சபாநாதனால் பதிப்பிடப்பட்டது.  மூல நூல் மயில்வாகனப் புலவரால் 1736 இல் வெளியானதாக பிறிற்ரோவின் நூலில் குறிப்பிடுகிற போதும் குல சபானாதனின் நூலில் “யாழ்ப்பாண வைபவ மாலை” அதற்கும் சுமார் 50 வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பாக மயில்வாகனப் புலவர் வாழ்ந்த காலம் குறித்த தகவல்களில் உள்ள முரண்பாடுகளை ஆராய்வதுடன் மயில்வாகப்புலவர் 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை வாய்ந்திருக்க வேண்டும் என்பதை தர்க்கபூர்வமாக விவாதிக்கப்படுகிறது. (முதலியார் குல சபாநாதன் - யாழ்ப்பாண வைபவ மாலை -  “ஈழகேசரி” அதிபர் திரு.நா.பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது - 1949) 
  6. மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய “யாழ்ப்பாண வைபவ மாலை” – முதலியார் குல.சபாநாதன் அவர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகள்.- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் - 1995
  7. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - ஞானப்பிரகாசர், சுவாமி - Achchuvely - The Gnanaprakasa Yantra salai - 1928
  8. Ceylon Antiquary And Literary Register Vol.6 (1920-1921) by Office Of The Times Of Ceylon - 1920
  9. C. BRITO - The Yalpana-vaipava-malai, or, The History of the Kingdom of Jaffna - Translated from the Tamil with an appendix and a glossary - - Asian educational services New Delhi - Madras - 1999. (Frist Published: Colombo, 1879)
  10. Ibid - xxxiv
  11. Martyn's Notes on Jaffna: Chronological, Historical, Biographical - John H.Martyn - Asian Educational Services, New Delhi, India - 1923
  12. “BOOKS ON CEYLON” - Ceylon Antiquary And Literary Register Vol.6 (1921-1922) by Office Of The Times Of Ceylon – 1921 (p.48)
  13. JOURNAL, R.A.S. (CEYLON). [VOL. XIV. - 1897
  14. A catalogue of the Tamil books in the library of the British museum, compiled by L. D. Barnett - 1909
  15. இலங்கையில் செட்டிமார் ஒரு தனித்த சாதியாக இயங்கியிருப்பதை நாம் காணலாம். வெள்ளாளருக்கு நிகராக ஒரு ஆதிக்க சாதியாக இயங்கியமை பற்றிய விபரங்கள் ஏராளமாக உண்டு. யாழ்ப்பாணம் மரியராசா சுப்ரீம் கோர்ட்டுக்கு 02.09.1830 அன்று திகதியிட்டு அனுப்பிய பெட்டிசன், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் தோடுகள் அணிவதை அனுமதித்ததை எதிர்த்து வெள்ளாள செட்டி சாதியினர் விண்ணப்பித்திருப்பதைப் பற்றிய ஆதாரங்களை (Vellala Caste and Chetty Caste against permitting the Low caste to wear ear rings) கலாநிதி முருகர் குணசிங்கம் தொகுத்த PRIMARY SOURCES FOR HISTORY OF THE SRI LANKAN TAMILS WORLD-WI DE SEARCH என்கிற நூலில் விளக்குகிறார்.
  16. THE HISTORY OF SRI LANKA -Patrick Peebles - Greenwood Press - London (2006)
  17. People of Sri Lanka, “Sri Lankan” - Our Identity “Diversity” - Our Strength, Ministry of National Coexistence, Dialogue and Official Languages - 2017
  18. Founders of Modern Ceylon (Sri Lanka) EMINENT TAMILS - Vol I. Parts I & II - UMA SIVA PATHIPPAKAM - 1973
  19. ச. தனஞ்சயராசசிங்கம் “நாவலர் பணிகள்” - கொழும்பு தமிழ்ச் சங்கம் 2011
  20. Founders of Modern Ceylon (Sri Lanka) EMINENT TAMILS - Vol I. Parts I & II - UMA SIVA PATHIPPAKAM - 1973- p-36
  21. The life of Sir Ponnambalam Ramanathan – by M. Vythilingam, B. A. – Vol -1 – 1971.
  22. சேர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி 1835 மே 30 முதல் முதல் 1836 வரை முதலாவது சட்டவாக்கப் பேரவையில் உத்தியோகப்பற்றற்ற முதலாவது தமிழர் பிரதிநிதியாக இருந்தவர். ஆறுமுகம்பிள்ளை கண்டி கைப்பற்றப்பட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட நிகழ்வில் ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவர். ஆளுநர் ரொபர்ட் பிரவுறிக் அதற்காக அவருக்கு தங்க மோதிரமொன்றையும் பரிசளித்திருக்கிறார்.
  23. Founders of Modern Ceylon (Sri Lanka) EMINENT TAMILS - Vol I. Parts I & II - UMA SIVA PATHIPPAKAM - 1973
  24. Arnold wright - Twentieth Century Impression of Ceylon – Lloyd’s greater Britain publishing company limited (1907)
  25. விஸ்வநாதப்பிள்ளை : மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இருவரில் ஒருவர். மற்றவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. ஆரம்பத்தில் கிறிஸ்தவக் கல்லூரியில் கற்று கிறிஸ்தவராக ஆகி கறோல் என்கிற பெயரையும் சூட்டிக்கொண்டவர். ஆரம்பத்தில் நாவலரை எதிர்த்து வாதங்களும் செய்தவர். பின்னர் மீண்டும் சைவத்துக்குத் திரும்பி நாவலரின் நல்ல நண்பராக ஆனவர். 
  26. “Sri Lanka Tamil Struggle” - Chapter 15: Tamils Demand Communal Representation by T. Sabaratnam, November 16, 2010
  27. “C. W. Thamotharampillai, Tamil RevivaIist:” The Man Behind the Legend of Tamil Nationalism S. Ratnajeevan H. Hoole , An International Centre for Ethnic Studies Lecture November 17, 1997 - ICES Auditorium - Colombo
  28. Sri Lankan Tamil society and politics / Karthigesu Sivathamby - Madras : New Century Book House, 1995
  29. A. Jeyaratnam Wilson - Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth Centuries – Hurst & Company, London - 2000
  30. க.சி.குலரத்தினம் - நோர்த் முதல் கொபல்லா வரை – ஆசீர்வாதம் அச்சகம் – புத்தகசாலை / யாழ்ப்பாணம்1966 
  31. Martyn's Notes on Jaffna: Chronological, Historical, Biographical - John H.Martyn - Asian Educational Services, New Delhi, India - 1923
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates