Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

நாடற்றவர் சிக்கலை திருமதி பண்டாரநாயக்கா எவ்வாறு தீர்த்து வைத்தார்? - டபிள்யூ. ரி. ஜயசிங்க

'சண்டே ஒப்சேவர்'  பத்திரிகையில் (Sunday Observer - 30-07-95 ) வெளியான இந்தக் கட்டுரை அதன் பின்னர் 1995ஆம் ஆண்டு யூலையில் வெளியான "தேர்ந்த கட்டுரைகள்" என்கிற விடுதலைப் புலிகளின் சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. "தேர்ந்த கட்டுரைகள்" சஞ்சிகையில் இப்படி பல முக்கிய நல்ல கட்டுரைகள் அப்போது மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருகிறது.
பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திரு.டபிள்யூ.ரி.ஜயசிங்க அவர்களினால் தற்போது எழுதப்பட்டு வரும் புத்தகத்தி லிருந்து ஓர் அத்தியாயத்தை வெளியிடுகின்றோம் . இந்த அத்தியா யம், இந்திய இலங்கை உறவுகளில் நீண்ட காலம் பிரச்சினையாக இருந்துவந்த நாடற்ற இந்தியத் தோட்டத் தொழிலபளர்களின் சிக் கல்களில் பிரதம மந்திரி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா கையாண்ட தந்திரோபாயங்கள் பற் றிக் கூறுகின்றது. இந்த எழுத் தாளர் தற்போது ‘எயர்லங்காவின்' தலைவராக இருந்து வருகின்றார். 

'ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார் . அந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதம மந்திரியாக அவர் பொறுப் பேற்றபோது, 1954 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஆறு ஆண்டுக்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையிலுள்ள இந்தியக் குடியேற்றவாசிகளின் குடியுரிமை பற்றியும் அவர்களை இந்தியாவுக்கு அனுப்புவது பற்றியும் பேச்சுவார்த்தைகளை நடத்த, அது தான் உகந்த நேரமாக இருந்தது. 

இந்தக் குடியேற்றவாசிகள், இன்னமும் இந்திய நாட்டவரல்லர் என்ற இந்தியாவின் வாதத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வில்லை . 1953 ஆம் ஆண்டில் இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த திரு. தேசாய் அவர்கள், இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களுக்கும், இந்தப் பிரச்சினை பற்றி ஆர்வம் கொண்டிருந்த இலங்கையர் அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில் முதன் முதலாக இந்தக் கருத்தை வெளி யிட்டார்கள். 1945 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டையைத் தவிர்ப்பதற்காக சேர் ஜோன் கொத்தலாவல அவர்களும் பிரதமமந்திரி நேரு அவர்களும், குடியுரிமை வழங்குதல், பதிவு செய்தல் ஆகிய இரு நடை முறைகளையும் இயன்றளவில் துரிதப்படுத்துவதற்கும், இந்தச் சிக்கலான விடயம்பற்றி மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பின்தள்ளிப் போடுவதற்கும் உடன்பட்டனர். 

இந்தியர், பாகிஸ்தானியர் குடியுரிமைச் (பிரசாவுரிமை) சட்டத்தின் கீழ் இலங்கைக் குடியுரிமை அளிப்பது இப்போது பெரும்பாலும் முடிவுற்று இருந்த அதேவேளை, அந்தச் சட் டத்தின்கீழ் குடியுரிமை வழங்கப்படாத இந்தியர்கள் 1954ஆம் ஆண்டு உடன்படிக்கையின்கீழ் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்தில் தங்களை இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்துகொள்ள, ஆறு ஆண்டுக்காலம் இருந்தது . 

குடியேற்ற நாட்டு அரசாங்கத்தால் தோட்டங்களில் வேலை செய்வதற்கென இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியக் குடிறேற்றவாசிகளின் பிரச்சினை பற்றி மேலும், பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவுக்குக் கொண்டுவருவதற்காகத் தயார் செய்வதற்கும், அதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும் அது தான் உகந்த நேரமாகவிருந்தது . அந்த நேரம், இலங்கைக்கு உகந்ததாகவிருக்கவில்லை என்பதைத் திருமதி பண்டாரநாயக்க உணர்ந்தார். தற்போது கிட்டத்தட்ட பத்து லட்சம் இந்தியர்கள் இலங்கை மண்ணில் இருந்து பாதுகாப்பாகத் தொழில் செய்து வந்ததுடன், அவர்கள் விரைவாகத் தங்கள் இந்தியத் தொடர்புகளையும் இழந்து வந்தனர். 

சிறிமாவோ பண்டாரநாயக்காவும், இலங்கைப் பிரதமர் திரு. டி எஸ். சேனநாயக்கா அவர்களைப்போன்று, இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று ஈடுபாடு கொண்டார். கண்டி இராச்சியத்தின் மத்தியில் பிறந்து வளர்ந்த அவர், நிலமின்மையால் பிழைப்பதற்கு வெளியே வழி தேடுகின்ற. பிழைப்பாதாரத்துக்கு மேல் வாழ்க்கை நடத்துவதற்கு வாய்ப்பு 'இன்றியிருந்த கண்டிப் பாமரமக்களினது நெருக்கடி நிலையைக் கூர்மையாக உணர்ந்திருந்தார். 

கண்டிப் பாமரமக்கள் ஆணைக்குழு (Kandyan Peasantry Commission) வினால், கண்டியர்களது - வறுமையை இல்லா தொழிக்க எதுவும் செய்யமுடியவில்லை. தோட்டங்களிலுள்ள கணிசமான இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பு வார்களானால், அவர்களது இடங்களை இலங்கைத் தொழிலாளர்கள் பிடித்துக்கொள்ள முடியும். இந்தியாவிற்குள் நுழை வதற்கு அனுமதியும், கடவுச்சீட்டும் அவர்கள் வைத்திருக்க வேண்டும் என இந்தியா வற்புறுத்தியபடியால் 1954 ஆம் ஆண்டு முதல் அத்தொழிலாளர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட் டிருந்தனர். 

தொடக்கத்தில், அவர்கள் அனுமதியின்றியே தோட்டத்திலுள்ள அதிகாரியினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை யுடன் இந்தியாவிற்குப் பயணம் செய்து வந்தார்கள். அதுவன்றியும், கண்டிய விவசாயிகளை அரசாங்கம் உஷ்ணவலயப் பகுதி களிலுள்ள குடியேற்றத் திட்டங்களில் மீளக் குடியமர்த்த வேண் டியிருந்தது. இந்தக் குடியேற்றத் திட்டங்களை உருவாக்குவதற்கு நீண்டகாலம் எடுத்ததுடன், அதிகளவு நிதியும் தேவைப்பட்டது. 

பிரதம மந்திரி, சம்பந்தப்பட்ட விடயங்களில் அறிவுபடைத்தவராய் இருந்ததோடு, பேச்சுவார்த்தை மேசைகளில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய தந்திரோபாயங்களுக்குப் புதியவராகவும் இருக்கவில்லை. 1940ஆம், 1941ஆம், 1945ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் டில்லியிலும் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சு வார்த்தைகளின்போது அவரது கணவரான திரு. பண்டாரநாயக்கா முக்கிய பங்கு வகித்துள்ளார். 1957ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பிரதம மந்திரி என்ற ரீதியில் புதுடில்லி சென்றபோது அவர் பண்டித நேரு அவர்களுடன் இந்த விடயம் பற்றிக் கலந்துரையாடியதுடன், தன்னுடன் அடிக்கடி டில்லிக்குப் பயணம் செய்த மாணவியான சிறிமாவோ பண்டாரநாயக்காவுடனும் தனது கருத்துக்களையும், அனுபவங்களையும் பங்கிட்டுள்ளார். 1945இல் டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர், எப்படி, காலஞ்சென்ற தனது கணவர் 1945ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் வெளியிடவிருந்த அறிக்கையைத் தயாரிப்பதில் நடுநிசிவரை வேலைசெய்து சோர்வுற்றுப்போன அதிகாரிகளுக்கு உதவினார் என்பதை, அவர் எனக்கு நினைவுபடுத்தினார்.. 

மனிதனின் விலக்க முடியாத முடிவின் வளர்ச்சியில், எதிர் பாராதவற்றினதும் தற்செயல் நிகழ்ச்சியினதும் பங்கை, வர லாறு கற்கும் ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் இனங்கண்டு கொள்ளவேண்டும் என எச். ஏ. எல். பிஷர் என்பவர் • ஐரோப்பாவின் வரலாறு,' என்ற நூலுக்கு எழுதிய தனது புகழ்சார்ந்த முன்னுரையிற் கூறியுள்ளார். நாடுகளுக்கிடையிலான பிணக்க களை அல்லது சிக்கல்களைத் தீர்ப்பதில் தலைவர்களினது தகுதியும், அவர்களிடையே இருந்துவரும் உறவும், முடிவாக வரவிருக்கும் முடிவில் தீர்க்கமான பங்கை வகிக்கின்றது. 

1964ஆம் ஆண்டில் உருவான இந்திய-இலங்கை உடன் படிக்கைக்கான பல கலந்துரையாடல்களின்போதும், செய்திப் பரிமாற்றங்களின்போதும் இது காணப்பட்டது . இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான கடலெல்லையை வரையறை செய் வது பற்றியும், கச்சதீவுப் பிரச்சினை பற்றியும் 1974/75 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வீறாப்பு மிக்க பிரதம மந்திரியான இந்திரா காந்தியுடன் திருமதி. பண்டாரநாயக்கா கலந்துரையாடியபோதும், தகுதியும் நட்பும் பெரும் பங்கு வகித்தது . 

ஒத்துழைப்பு 
பண்டாரநாயக்கா குடும்பம் நேரு குடும்பத்துடன் நட்புறவு வைத்திருந்தது. திருமதி. பண்டாரநாயக்கா பிரதம மந்திரி யாக வந்தபின், நேரு விடுத்த அழைப்பை ஏற்று அவர் தனது குழந்தைகளுடன் இந்தியாவில் உள்ள புத்தக் கோயில்களுக்குப் புனித யாத்திரை செய்த போது, அவர்களது உறவு புதுப்க்கப்பி பட்டது. பிரதம மந்திரியாக வந்த பின்னர் அவர் வெளிநாடு சென்றமை இதுவே முதற்தடவையாகும். 

1960களில் திருமதி. பண்டாரநாயக்கர் ஓர் உலக அரசி சியல் மேதையாகக் கணிக்கப்பட்டபோது, இந்தியத் தலை வர்களுடனான அவரது மதிப்பு உச்சமடைந்திருந்தது . 1961ஆம் ஆண்டில் பெல்கிரேட் (Belgrade) நகரில் நடைபெற்ற முதலா வது அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது அணுஆயு தத்தைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்ததின் மூலம், அவர் முதன் முறையாக மேடையில் தோன்றினார். நான், பிரதம மந்திரி என்ற முறையில் வேண்டவில்லை ஒரு தாயென்ற முறை யில் வேண்டிக்கொள்கிறேன் என அவர் விடுத்த இந்த வேண்டுகோள், அனைத்துலக மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1962ஆம் ஆண்டு சீனாவுக்கும் இந்தியாவிற்கு மிடையிலான சிக்கலில் நடுவராகப் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டபோது, இவரைப்பற்றிய எண்ணம் மேலும் உச்ச மடைந்தது. 

திருமதி. பண்டாரநாயக்கா தனது பதவியை ஏற்றவுட னேயே, தனக்கு முன்னுள்ள பெரும் பணியினை எதிர்கொள்வதற்குத் தீர்மானித்துக் கொண்டார். இந்தியாவின் கண்களில் நாடற்றவர்களாகியுள்ள இந்தியக் குடியேற்றவாசிகளின் பிரச்சினையை இனங்கண்டு கொண்டு, அவர் அதற்கு முன்னுரிமை கொடுத்தார். பாராளுமன்றத் திறப்புவிழாவின்போது 12. 08. 1960 அன்று ஆற்றிய (சிம்மாசன) அரசியாரின் பேச் சில், அந்தப் பிரச்சினையை அரசாங்கம் தனது திட்டத்தில் சேர்த்துக்கொண்டது. “இந்தப் பிரச்சினைக்கு ஒரு திருப்திகரமான தீர்வை எட்டும் நோக்கில். இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழிப் பிரசைகளின் விடயத்தை எனது பிரதம மந்திரி தனது கவனத்துக்கு எடுத்துக்கொள்வார்'' எனத் தேசாதிபதி வில்லியம் கோபல்லாவ கூறினார். 

தனது தந்திரோபாயத்தின்படி பரந்தளவில் தீர்மானங்களை எடுக்கும் வகையில், பிரதம மந்திரி பல்வேறு விடயங்கள் பற்றிய உண்மையான நிலையைத் தயார்ப்படுத்தி வைத்துக் கொண்டார். 

பேச்சுவார்த்தைகளின்போது அவருடன் இணைந்து பணி யாற்றுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட குழு, திறமையும், அதற்காகத் தன்னை அர்ப்பணிக்கக் கூடியதாகவுமிருந்தது . அவரது பாராளுமன்றச் செயலாளர் பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டார நாயக்கா, நிரந்தரச் செயலாளர் என். கியூ. டயஸ், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சேர் றிச்சர்ட் அலுவிகார, அவரின் பின்னர் இலங்கைத் தூதுவராகப் பதவியேற்ற எச். எஸ் . அமர சிங்க ஆகியோரே அந்தத் திறமைசாலிகளாவர். 

நாட்டினது அரசியற் சக்திகளின் சமநிலையில் ஏற்படும் இடர்களை உணராமல், இலங்கை ஏற்கனவே இயன்றளவு இந்தியக் குடியேற்ற வாசிகளை ஏற்றுக்கொண்டுள்ளது என்று கண்டியர்களது நலன்களைப் பிரதிநிதிப்படுத்தும் அமைப்புக்களும், மலை நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கொண்டிருந்த உணர்வை திருமதி. பண்டாரநாயக்கா தனது மனதில் வைத்துக் கொண்டார். அதேநேரம், தோட்டப் பகுதிகளில் கணிசமானளவு அரசியல் மற்றும் பொருண்மிய ஆற்றல் பெற்றிருந்த ஒரேயொரு பெரிய தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாலர் கொங்கிறஸ், அவர்களெல்லோரையும் இலங்கைக் குடிமக்களாக ஏற்கவேண்டும் எனப் போராடியது. இன்று வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம்போல், தொடக்கத்திலிருந்தே இவ்விடயமும் உணர்ச்சியைத் தூண்டுவதா யிருந்தது.

அரசியலுக்குப் புதியவராக இருந்தபோதும், இந்த விடயம், கட்சி அரசியலுக்கப்பால் ஒரு தேசியச் சிக்கல் என்ற ரீதியில் கையாளப்பட வேண்டும் என்ற துணிவான, சரியான தீர்மானத்தை அவர் எடுத்தார். அத்துடன் இந்த விடயத்தில் இலங்கையில் பரந்தளவிலான இணக்கம் ஏற்படுவது, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் அவரது கரத்தைப் பலப்படுத்துவதாக இருக்கும். இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் திரு. டட்லி சேனநாயக்கா அவர்கள் இருந்துவந்தமை இலங்கையின் அதிர்ஷ்டமாகும். அத்துடன், அவர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினது தலைவருமாவார். 

திரு. டட்லி சேனநாயக்கா, சம்பந்தப்பட்ட விடயங்களில் மட்டும் அறிவு படைத்தவராக இருக்கவில்லை. ஆனால், இந்த விடயங்கள் பற்றிய அவரது கருத்துக்கள் கூட, அதிகளவில் பிரதம மந்திரியின் கருத்துக்களுடன் ஒத்திருந்தன. 1953 ஆம் ஆண்டு லண்டனில் திரு. நேரு அவர்களுடன் நடத்திய பேசுச் வார்த்தைகளின்போது ஓர் உடன்பாட்டுக்கு வரத்தவறிய அவர், தற்போது, புதிய பிரதம மந்திரி பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்குத் தனது முழு ஒத்துழைப்பையும் நல்கினார். 

பேச்சுவார்த்தைகளின் போது கைக்கொள்ளவேண்டிய தந்திரோபாயங்கள் பற்றி பிரதமமந்திரி அவர்கள் சிந்தித்து வகுத்துக் கொண்டிருந்த அதேவேளை, இந்திய - பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத்தின்கீழ் குடியுரிமை வழங்காதோரின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, ஓர் ஆண்டுக்குள் குடியுரிமை வழங்கி முடிக்கப்படவேண்டும் எனவும் பணிப்புரை விடுத்தார். குடியுரிமை வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டத்தின்கீழ் அதற்குரிமையுள்ளோர்க்குக் குடியுரிமை வழங்குவதற்கான இலங்கையின் பணி முடிந்து விடும். அதன் பின்னர், நாடற்றவர்களாக இருப்போரின் எண்ணிக்கை தெரியவரும் . இது. பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பெரிதும் உதவியாகவிருக்கும். 

இந்தியக் குடியேற்றவாசிகளின் குடியுரிமைத் தகுதிபற்றி மூன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அவர் கைக் கொண்ட கொள்கையற்ற நிலையிலிருந்து இலங்கை வழுவக் கூடாது எனத் திருமதி. பண்டாரநாயக்கா மிக முக்கியமாகத் தீர்மானித்துக்கொண்டார். இந்தியக் குடியேற்றவாசிகள் அனைவரும் இந்தியக் குடிமக்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு இலங்கையில் நிரந்தரமான அழியாத அக்கறையுண்டு என்ற நோக்கில், குடியுரிமை வழங்குவதற்காகத் திரு. டி. எஸ். சேனநாயக்கா 1949 ஆம் ஆண்டில் இந்திய - பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றினார். உண்மையில், அவர்கள் இலங்கைக் குடியுரிமை பெறும்போது, இந்தியக் குடியுரிமையைத் துறந்துவிடவேண்டுமெனப் பண்டிதர் நேரு கூறியிருந்தார். ஆனால் இந்தப் பிரச்சினையின் கடைசித் தீர்வுக்கான நடவடிக்கை எனப் புதிய சட்டத்தின்கீழ் இலங்கை தானாகவே குடியுரிமை வழங்கவிருந்ததை 1953 ஆம் ஆண்டு இந்தியா முற்றாகத் தகர்த்துவிட்டது . 

அவர்கள் முன்னர் இந்தியக் குடிமக்களாகவிருந்தாலும், 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாளிலிருந்து நடை முறைக்கு வந்த புதிய அரசியல் யாப்பின் பிரகாரம், அவர்கள் பிறப்பினால் இந்தியப் பிரசைகளாகக் கருதப்படுவர் என இந்தியா வாதிட்டது. அதன்படி, அவர்கள் இந்தியாவுக்கு வெளியே சாதாரணமாக வசித்துவருகின்றமையால் , இந்திய அரசியல் யாப்பின் 8வது விதியின்கீழ் இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்யப்படுவதற்கு அவர்கள் இப்போது விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. 

திட்டம் 
இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்வதற்கு, 55 வயதை அடையும் வரை அவர்களுக்கு இலங்கையில் வேலைவாய்ப்புண்டு என உறுதி செய்யப்பட வேண்டும் போன்ற பல முன் நிபந்தனைகளை இந்தியா விதித்தது. தனது குடிமக்களின் உரிமையை மறுக்கும் இந்த முயற்சி, இந்தச் சிக்கலுக்கு முற்றிலும் புதிய, எதிர்பாராத பரிணாமத்தைக் கொடுத்ததோடு, முட்டுக்கட்டை நிலை ஒன்றையும் உருவாக்கியது.

இந்தக் குடியேற்றவாசிகள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சாதாரணமாக இந்தியாவில் வசித்து வந்தார்கள் எனக் கணிக்கப்படாவிட்டாலும், அவர்கள் இந்தியாவிலுள்ள தங்களது சொந்த இருப்பிடங்கனை இழக்கவில்லை. ஆகவே  அது, இந்தியாவின் புதிய அரசியல் யாப்பின் கீழும் அவர்கள் இந்தக் குடிமக்களே என இலங்கை வாதாடியது. 

பிரித்தானியாவில், குடியுரிமை விடயத்திலும் சர்வதேசச். சட்டங்களிலும் சிறந்து விளங்கும் அதிகாரிகளுடன் ஆலோசிப் பதற்குப் பிரதம மந்திரி முடிவு செய்தார். இந்த நடவடிக்கை, பேச்சுவார்த்தையின்போது இலங்கைக்கு வலுவூட்டும். அத்துடன், சர்வதேச நீதிமன்றத்தினாலோ அல்லது சபையினாலோ இந்த விடயத்தைத் தீர்த்துவைக்கும் சாத்தியங்கள் பற்றியும் கவனத்தில் எடுக்க, பிரதம மந்திரி விருப்பமில்லாமல் இருக்க வில்லை .

அதேவேளை நாட்டில் நடைபெறுபவற்றையும் திருமதி பண்டாரநாயக்கா கடுமையாக நோக்கினார். 1954ஆம் ஆண்டு உடன்படிக்கையின் கீழ் இந்தியத் தூதரகத்தினால் இந் தியக் குடிமக்களாகப் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உற்சாகமூட்டுவதாகவில்லை. 40, 000 பேரே பதிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் அதிகமானவர்களும் தோட்டப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இந்தப்பிரச்சினை பற்றி, தொட்டுக்கூடப் பார்க்கப்படாமல் இருந்தது . 

1954ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்தைகளின்போது, இந்தியக் குடிமக்களாகப் பதிவுசெய்யப்பட்டவர்களில் தொழில் பார்ப்பவர்கள் 55 வயதுவரை அதாவது ஓய்வு பெறும்வரை வேலை செய்வதற்கும், அதன் பின்னர் அவர்கள் நாட்டை... விட்டு வெளியேறும்போது நட்டஈடு வழங்குவதற்கும் ஒரு திட் டத்தைக் கொண்டுவர உத்தேசித்துள்ள தாகவும் இலங்கை குறிப்பிட்டது. பதிவுசெய்வதை ஊக்குவிப்பதற்கு, கூடுதல் தூண்டு தல் அளித்தால் அதிகமானோர் பதிவு செயவர் எனக் பிரதம மந்திரி நினைத்தார். அந்த விடயம்பற்றி ஆராய்வதற்கு அவர் ஒரு குழுவையும் நியமித்தார். 

தொழிலாளர் ஓய்வு பெற்று, தாய் நாட்டுக்குத் திரும்பும் போது ஓர் ஊக்குவிப்புப்படி வழங்குமாறு அக்குழு விதந்துரைத்தது. அந்தத் தொழிலாளி, தன்னுடன் பதிவு செய்த வயது குறைந்த தன்னுடைய குழந்தைகளையும் தான் போகும்போது அமைத்துச் செல்ல முடியும். அதனால் தோட்டத்தில் ஏற்படும் வெற்றிடத்தை இலங்கைத் தொழிலாளரைக்கொண்டு நிரப்பி விட முடியும். 

தந்திரோபாயம் 
இந்த ஊக்குவிப்புடன், தோட்டங்களில் இலங்கையர்கள் வேலை செய்வதற்கான ஆக்கபூர்வமான துரித நடவடிக்கைகளைப் பிரதம மந்திரி மேற்கொள்ள வேண்டும். இந்த நாட்டவரல்லாதோர் தோட்டங்களில் வேலை செய்வதைக் கட்டுப்படுத்தும் ஒரு மசோதா 23, 05. 02 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தோட்டங்களில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தொழிலாளர்களின் எண்ணிக்கையை அமைச்சர் குறிப்பிடுவார். கிராமப்புறத் தொழிலாளர்கள் தோட்டவேலைகளை ஏற்பதற்கு வசதிகள் அளிக்கப்பட வேண்டும். இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெறுவதற்காக இந்த மசோதா வைக்கப்பட்டது . 

பிரதம மந்திரி அதற்கப்பாலும் ஒரு படி சென்றார் . தோட்டங்களை உருவாக்குவதற்காக, குடியேற்ற நாட்டு அரசாங்கம் நிலத்தினை அபகரித்ததை மனதிற் கொண்ட பிரதம மந்திரி, இலங்கையரல்லாதோர் இலங்கையரின் காணிகளைப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டத்தை இயற்றும்படி பணித்தார். 

இந்த விடயத்திற் காணப்பட்ட சிக்கல் காரணமாக, சட்ட நகலைத் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இலங்கையரல்லாதோரின் சொத்துக்களைச் சுவீகரிப்பதற்கான ஒரு சட்டம் 09. 07. 64 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், நிதிச் சட்டங்களுக்கமையத் திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிப்பதற்காக அது மீண்டும் பெறப்பட்டது . 

திருமதி. பண்டாரநாயக்காவின் தந்திரோபாயங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டன? ஒவ்வொரு கட்டத்திலும் இந்தியாவினுடைய எதிர் நடவடிக்கைகள் எப்படி அமைந்தன? என்பவை பற்றி அடுத்த அத்தியாயங்களிற் கூறப்படும்.

தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் - எஸ்.கே.விக்னேஸ்வரன்

ஊடகங்கள் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை செய்திகளையும் தகவல்களையும் தெரிவு செய்தல்,பகுத்தல், தொகுத்தல், ஆய்வுக்குட்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற பல பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவை. ஒரு தகவல் செய்தியாவது ஊடகங்களின் நோக்குநிலையைப் பொறுத்தது. ஒரு ஊடகத்தில் செய்தியாக்கப்படும் தகவல் இன்னொரு ஊடகத்தின் கவனத்தில் முக்கியமற்றதாகப் படலாம். 'சந்தியில் இருவர் கைகலப்பு' என்பது ஒரு தகவல். இது மேலதிக விபரங்கள் சேராத வரையில் ஒரு செய்திக்கான முக்கியத்துவம் அற்றதாகி விடுகிறது. மேலதிகமாக அது நடந்த இடம் (உதாரணமாக யாழ் கச்சேரியடியில்) என்று குறிப்பிடப் படும்போது அதற்கு சற்று அதிகமான கவனிப்பு கிடைக்கிறது செய்தியை அறியவிரும்பும் ஆர்வத்தை அது தூண்டுகிறது. அந்தப் பகுதி மக்களின் கவனத்தை இது நிச்சியமாக ஈர்க்கும். இந்தச் செய்தி 'புனர்வாழ்வுக்கான மானியம் வழங்கப்பட்டபோது' என்று சேர்கையில் அது அந்தப் பிரதேசத்தின் அக்கறைக்குள்ளானதாக மாறுகிறது. இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 'விநியோகத்தின் போது நடந்த குழறுபடிகளால் ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்புக்கு இட்டுச் சென்றது' என்று சேரும்போது அது நாடு முழுவதுக்குமான செய்தியாகிவிடுகிறது. செய்தி ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக திரட்டப்படும் தகவல்களால் உருவாக்கப்படுகிறது. அந்தச் செய்தியை உருவாக்குபவருக்குள்ள நோக்கம், பார்வை என்பவற்றைப் பொறுத்து அந்தச் செய்தியின் தன்மை அல்லது தொனி வேறுபடுகிறது. சேர்க்கப்படும் அல்லது தவிர்க்கப்படும் தகவல்களைப் பொறுத்து அந்தச் செய்தியின் அர்த்த பரிமாணங்கள் வேறுபடுகின்றன. இதன்போது நடந்த சம்பவத்தைவிட அதற்கு கற்பிக்கப்படும் அர்த்தங்கள் முக்கியமாகிவிடுகின்றன.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் முகநூல் 'வாதப் பிரதிவாத' குறிப்புக்கள் யாழில் நடந்த ஒரு சம்பவம் பற்றிய தகவல்கள் குறித்துத் தொடங்கியிருப்பது எனக்கு ஒருவகையில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும். ஏனென்றால் தமிழ் ஊடகங்களில் வரும் தகவல்கள் சரிபார்க்கப் படாமலே பிரதிசெய்யப்படுதல் இலங்கைத் தமிழ் சூழலில் வெகு சாதாரணம் அல்லது வழமை. அப்படியிருக்க இந்தத் தகவல்கள் இப்போது கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன என்றால் அது வரவேற்கப் படவேண்டியதுதான். ஆனால் தகவல்களுக்கு அரசியல் பரிமாணம் கொடுத்து அர்த்தப்படுத்தும் வேலையயும் அவை செய்யும் போது அவை தகவல்களென்பதற்கு மேலாக, ஒரு செய்தி என்பதற்கு மேலாக ஒரு கருத்துருவாக்கம் என்ற மட்டத்தை நோக்கிச் சென்றுவிடுகிறது.

கருத்துருவாக்கத்தின் போது திட்டவட்டமாக தெரிந்த ஆதாரங்கள் போதியளவு இல்லாதபோது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துருவாக்கங்கள் உருவாகும் வாய்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது. நடந்துகொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட சர்ச்சையில் நடப்பது இதுதான். நூலகம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டபின் திறந்து வைக்கப்பட என மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்ட திகதியில் அதைத் திறக்க வேண்டாம் என புலிகள் யாழ் மேயரிடம் கூறினார்கள் அல்லது மிரட்டினார்கள் என்பதுதான் தகவல். எதற்காக அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தார்கள் அல்லது மிரட்டினார்கள் என்ற முக்கியமான தகவல் எந்த ஊடகத்தாலும் பதிவு செய்யப்படவில்லை அல்லது அத்தகைய பதிவு எதுவும் தற்போது கிடைக்கவில்லை.

ஆனால் சம்பந்தப்பட்ட நிகழ்வின்போது நேரடியாக களத்தில் நின்ற ஊடகவியலாளர் சோமீதரனும் மாநகரசபை உறுப்பினர் தங்கமுகுந்தனும் புலிகளுக்கு நூலகத்தைத் திறந்துவைப்பதில் உடன்பாடு இல்லை என்று கூறுகிறார்கள். புலிகள் திறக்கக் கூடாது என்று மிரட்டிய்தை எதிர்த்து மேயர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் தமது பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஒரு அறிக்கை வெளியிடுகிறார்கள். அந்த அறிக்கையில் மாநகரசபை ஊழியர்கள், மேயர் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் அனைவரும் புலிகளின் அரசியற் பிரிவால் தாம் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கின்றார்கள். அந்த அறிக்கையில் சாதி தொடர்பான எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அதேவேளை இந்த அறிக்கை வெளியான அதே தினமுரசு இதழில் மேயர் அவர்கள் அளித்த பேட்டியில் தனது சாதி காரணமாக தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே புலிகள் திறப்பு விழா நிகழ்வைத் தடை செய்ததற்கான காரணம் என்று கூறுகிறார். அதேவேளை அந்த காரணத்தை புலிகள் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாக அவர் பேட்டியில் வேறெந்த இடத்திலோ, பெரும் இழப்புகள் நடக்குமென இளம்பருதி மிரட்டியதை விபரித்தபோதோ தெரிவிக்கவில்லை.

எது எப்படி இருப்பினும் இந்தத் தகவலின் அடிப்படையில் இப்போது நடக்கும் விவாதங்கள் இரண்டு விதமான அரசியல் நிலைப்பாடுகள் அல்லது மதிப்பீடுகளிலிருந்து முவைக்கப் படுகின்றன. இரண்டுமே புலிகளின் அரசியல், சாதீயம் பற்றிய கருத்துக்கள் எப்படி இருந்தன என்பதை தத்தம் பின்னணியிலிருந்து விளக்கம் தருபவையாக அமைந்திருக்கின்றன.

ஆனால் இங்கு முக்கியமானது, எந்தக் காரணத்துக்காகவெனினும் நூலகம் திறக்கப்படுவது தடைசெய்ய்ப்பட்டது என்பதே. அது எந்தக் காரணத்துக்காகச் செய்யப்பட்டிருந்தாலும் மிக மோசமான ஒரு தவறென்றே சொல்லவேண்டும்.

நடக்கும் விவாதத்தில் அந்தவிடயம் கணக்கில் எடுக்கப்படவில்லை அல்லது இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய விடயம்.

அதேவேளை இது சாதியக் காரணத்துக்காக தான் நடந்தது என்று கூறும் தரப்பினர் இதற்கு வேறும் ஒரு பக்கம் இருப்பதாகக் கூறுவதை கணக்கிலெடுக்கக் கூடத் தயாராக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

தகவல்களைப் பதிவிடும் ஊடகங்களின் செய்தியாக்கல் பற்றிய பொறுப்பற்ற போக்கு அப்போது இரண்டு விடயங்களைச் செய்திருக்கிறது. ஒன்று முழுக்கமுழுக்க இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்தது. மற்றையது கிடைத்த தகவலை முழுமைப்படுத்தாமல் அப்படியே பதிவுசெய்தது. ஆங்கில ஊடகங்கள் சிலவும் இந்தச் செய்தியை வேறு சரிபார்ப்புக்களெதும் செய்யாமல் அப்படியே வெளியிட்டன. இதுவே இன்றைய நிலமையை இவ்வளவு வாதப்பிரதிவாதங்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

எவ்வாறாயினும் நமது நாட்டின் கட்சிகள், அரசாங்கங்கள், அரசியல் சூழல், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டு முறைமை என்பவை பற்றிய தொடர்ச்சியான அவதானிப்பும் புரிதலும் உள்ள எவருக்கும் என்ன நடந்திருக்க வாய்ப்பு அதிகம் என்பதை ஊகிக்க முடியும்.

புலிகள் எந்த அரசியல் ரீதியான முடிபுகளையும் சரி, நிர்வாகரீதியான முடிவுகளையும் சரி ஜனநாயக ரீதியான முறையில் மக்களை வென்றெடுத்து நடைமுறைப் படுத்தியவர்கள் அல்ல. அவர்களது முடிவுகள் சரியானவை, நியாயமானவை, தவறானவை, மிக மோசமானவை என எந்த வகைப்பட்டவையாக இருந்தபோதும் அவர்களது வழிமுறை இப்படித்தான் இருந்தது. ஒரு கதவடைப்புப் போராட்டம் கூட மக்கள் மத்தியில் ஜனநாயபூர்வமான வழியில் பங்கேற்கவைத்துச் செய்யப்பட்டதில்லை. ஜனநாயக வழிமுறைகளைப் புறக்கணித்தமை, அதிகாரத்துவ நடைமுறையை வலியுறுத்தியமை, தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது அவற்றை எதிர் நிலையில் அணுகியமை, அமைப்பின் கீழ்மட்ட உறுப்பினர்களின் தவறான நடவடிக்கைகளைக் கூட நியாயபடுத்தியமை என்று பல தவறான பக்கங்களை புலிகள் கொண்டிருந்தனர். அதேவேளை அவர்களிடம் தமிழ் மக்களின் அரசியற்கோரிக்கை சார்ந்து விட்டுக்கொடுக்காத போராடும் இயல்பும் இருந்தது என்பதையும் குறிப்பிடவேண்டும். ஆனால் துயரம் என்னவென்றால் முடிவு வழிமுறையை நியாயப்படுத்தும் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் வழிமுறையே தனக்கேயுரிய விதத்தில் முடிவையும் மாற்றிவிடும் என்பதை அவர்கள் இறுதிவரை தெரிந்து கொள்ளவில்லை. அல்லது அப்படி ஆகும் என நம்பத் தயாராக அவர்கள் இருக்கவில்லை. இதனால் அவர்கள் இந்தச் சர்ச்சையைப் போல் பல அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

அநுராதபுரப் படுகொலைகள்,முஸ்லீம் பள்ளிவாசற் படுகொலைகள், யாழிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது, ரஜிவ் காந்தி படுகொலை, மாற்று இயக்கங்களையும் அவற்றின் உறுப்பினர்களையும் அழித்தது அல்லது இயங்குவதை ஆயுத பலத்தால் தடை செய்தது போன்ற சில உதாரணங்கள் அவர்களது அரசியல் இருப்புக்கு எவ்வளவு பெரும் நெருக்கடிகளைத் தந்தன என்பது வரலாறு.

இத்தகைய தவறான போக்குகளால் அவர்கள் செய்யாத செயல்களுக்கும் சேர்த்து அநுபவிக்க வேண்டிய நிலை உருவானது. அவற்றில் ஒன்றுதான் இந்தச் சாதி காரணமாகவே திறப்புவிழா தடுக்கப்பட்டது என்றகுற்றச்சாட்டும் கூட. உண்மை முக்கியம் என்பதை விட, அவர்கள் செய்திருக்கலாம் என்று மக்கள் மத்தியில் அபிப்பிராயம் எழுவதற்கான ஒரு நிலை இருக்கவே செய்தது என்பதே, இது பற்றி அந்தக் காலத்தில் யாருமே அலட்டிக் கொள்ளவில்லை என்பதற்கான காரணமும் கூட. அதைப்பற்றிப் பேசியவர்களுக்கும் ஆதாரங்களை விட அனுமானங்களே போதுமாக இருந்தது. கூடவே இந்தத் தகவலைத் தவறென்று அடித்துச் சொல்லவும் யாரும் அக்கறைப்படவுமில்லை, புலிகள் உட்பட.

இப்போது ஊடகவியலாளராக எனக்கு மிகநெருக்கமான நண்பர் சோமீதரன் இந்த நூலகத் திறப்புவிழாபற்றி எழுதப்போக ஊக அடிப்படையில் வரலாறு எழுதியவர்களுக்கு அது ஒரு பெரும் சிக்கலாக வந்திருக்கிறது. அப்படி ஒரு பக்கம் இருக்கிறதா என்று கேட்டு உரையாடும் அளவுக்குக் கூட அவர்களுக்கு பொறுமை இல்லாதிருக்கிறது. தமிழ் சூழலில் இன்றெல்லாம் இப்படி எத்தனையோ கற்பிதமான கதைகள் அரைகுறையாகக் கேள்விப்படும் தகவலை வைத்துக்கொண்டே கட்டியெழுப்பப் படுவது மிகச் சாதாரணமாக நடக்கிறது. அன்மையில் சுமந்திரனின் சிங்கள மொழிப் பேட்டி ஒன்றுக்கு எழுந்த எதிர்வினை இதற்கு நல்லதொரு உதாரணம். இப்போது நடக்கும் சர்ச்சையில் ஆளையாள் தனிப்பட்ட முறையில் குரோதத்துடன் தாக்குவதுப்தொடர்கிறது

தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு காரணமுமில்லாமல் ஒருசில அரசியல்வாதிகளின் சதிகார நோக்கத்தால் நடந்த ஒன்று என்று முடிவுரை எழுதும் அளவுக்கு வன்மமும், இலங்கையின் சோசலிசப் புரட்சியை அதுவே பின்னோக்கித் தள்ளி விட்டதென்ற கடுங்கோபத்துடன் தமது இன்றைய நிலையை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்தச் சர்ச்சை ஒரு கொண்டாட்ட மனோநிலையை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.

ஆனால் சமயங்களில் வரலாறு கற்பிதங்களாலும் புனைவுகளாலும் கட்டப்படுவது அவ்வப்போது நடந்து வந்தாலும் நின்று நிலைப்பதில்லை. உண்மைகள நீண்டகாலத்துக்குப் புனைவுகளால் மறைத்து வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதையும் அது வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறது.

அந்தவகையில் நடந்துகொண்டிருக்கும் இச் சர்ச்சை ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல பலவீனமான தகவல்களால் பின்னப்பட்ட கருத்துருவாக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு சர்ச்சை என்பதில் மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தக்கதே. ஆனால் சர்ச்சை, தகவல்கள் வரலாறு தொடர்பான விவாதங்கள் என்பவற்றுடன் தொடர்வதற்குப் பதில் தனிமனித தாக்குதல்களாக அமைவது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல, எத்தகைய பயன்விளைவையும் தரப்போவதில்லை.

உரையாடல்களும் விவாதங்களும் தெளிவுபெறுவதாக அமையட்டும்!

எஸ்.கே.விக்னேஸ்வரன் தனது முகநூலில் எழுதிய பதிவை நன்றியுடன் பகிர்கிறோம்.

சாதியத்தின் நிர்ப்பந்தங்களும் நீட்சியும் | என் அனுபவத்திலிருந்து - சிவா சின்னப்பொடி


எனது ஊர் வடமராட்சியில் ஒரு காலத்தில் சாதிய கட்டமைப்பு இறுக்கமாக இருந்த புலோலி தெற்கில் ஒருபகுதியையும் துன்னாலை வடக்கின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய வல்லிபுரக்குறிச்சி மற்றும் கொத்திய வத்தையாகும். குறிப்பாக சொல்வதானால் இது சாதிய கட்டமைப்பு இறுக்கமாக இருந்த ஊர்களால் சுற்றிவழைக்கப்பட்டிருந்த ஒரு சிறு கிராமமாகும்.

1974 ல் இந்த இரண்டு ஊர்களுக்கும் பொதுவான பெயராக 'சிங்கை நகர்' என்ற பெயரை பாவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நான் கொண்டுவந்தேன். அப்போது எழுத்துலகிலும் ஊடகத்துறையிலும் பிரவேசித்த 'நான் சிங்கைத் திவாகரன்' என்று எனது புனைபெயரை அமைத்துக்கொண்டேன்.1975 என்று நினைக்கிறேன் இந்தப் பெயரில் நான் எழுதிய 'இலட்சியங்கள் சாவதில்லை' என்ற சிறுகதைக்கு தேசிய இளைஞர் சேவை மன்றம் இலங்கை தழுவிய அளவில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு கிடைத்தது. இது எங்கள் ஊருக்கு கிடைத்த முதல் கௌரவமாக கருதப்பட்டது.இன்று கொத்தியவத்தை என்ற பெயர் எனது அண்ணர் தங்கவேலின் தீவிர முயற்சியால் சிங்கை நகர் என்று சட்டரீதியாக மாற்றம் பெற்றுவிட்டது.

1970 காலகட்டத்தில் எங்களுரில் ஏறக்குறைய 82 குடும்பங்கள் இருந்தன. இதில் ஒரு நான்கு குடும்பங்களை தவிர மற்ற அனைவரும் சீவல் தொழிலையே செய்தார்கள். இந்த தொழிலுக்குரிய பனை தென்னைகள் பெரும்பாலும் அயலூரிலுள்ள உயர்சாதியனருக்கு சொந்தமானதாக இருந்தது.அந்தக் காலகட்டத்தில் 20 பேர் வரை தான் ஓஎல் தாண்டிய கல்வியை கற்றிருந்தார்கள். ஏ எல் தாண்டிய கல்வியை கற்றது 5பேர். பட்டப்படிப்பு படித்தது 2 பேர். இதில் அரசு உத்தியோகங்களை பெற்றிருந்தது 12 பேர். அதில் எனது மாமா செல்லத்துரை(தற்போது டென்மார்க்கில் வசிக்கிறார்)தான் உயர் பதவியில் இருந்தவர்.அவர் கொழும்பு மத்திய தபாலகத்தில் தபாலதிபராக இருந்தார்.

ஏமது ஊரில் முதல் கலப்பு திருமணம் செய்தவர் எனது இன்னொரு மாமா பசுபதி.இவர் கொழும்பு பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவரது பிள்ளகைளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு காத்திரமான பங்களிப்பை செய்திருந்தனர்.

.அடுத்து எனது அண்ணா (பெரிப்பாவின் மகன்)சிவபாதம்.ஆசிரியராக இவர் தமிழீழ தேசித்தலைவரின் இரத்த உறவு முறையான பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார்..இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.இறுதி யுத்தத்தின் போது இராணுவத்iதால் கைது செய்யப்பட்டு காணாமல் போய்விட்டார்.இவரது மகன் அருண் தமிழீழ சட்டவாளராக இருந்தவர் இறுதியுத்தத்தில் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டு விட்டார். எனது அண்ணியும் ஒரு ஆசிரியை.ஒரு மகள் பாதுகாப்பு காரங்களுக்காக அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை நான் இங்கு குறிப்பிடவில்லை.

எனது இன்னொரு அண்ணர் தங்கவேல் அகிம்சைவாதி .தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவர்.அறவழி போராட்ட குழுவின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தவர். பனம்பொருள் அபவிருத்தி சபையின் மூத்த அதிகாரியாகவும் இருந்தவர்.எமது ஊரின் முன்னேற்றத்துக்கு தனது வழியில் பெரும்பங்காற்றியவர். அவரது மனைவியான எனது மூத்த அண்ணி மந்திகை அரசினர் மருத்துவமனையில் மிக நீண்டகாலம் மருத்துவராக இருந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.அவர்களுக்கு மூன்று பெண்கள் மூவரும் பட்டதாரிகள்.

எனது மைத்துணர் ஒருவர் தெங்கு பனம்பொருள் கூட்டுறவுச்சங்கத்தின் முகாமையானராக இருந்தவர் தற்போது இறந்துவிட்டார். அவரது மகன் தமிழீழ தேசியத்தலைவரின் மெய் பாதுகாப்பு பிரிவின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். (பாதுகாப்பு கருதி அவரின் பெயரை நான் இயங்கு குறிப்பிடவில்லை.

எனது அப்பா 1965க்கு முற்பட்ட காலகட்டத்திலும் எனது சித்தப்பா செல்லத்தம்பி 1960-1975 காலகட்டம் வரையிலும் எமது சமூக விடுதலைக்கான காத்திரமான பணிகளை செய்திருக்கிறார்கள்.எனது சித்தப்பாவின் மகன் எம்சி என்று அழைக்கப்படும் லோகநாதன் முதலில் புளொட்டில் இருந்ததவர் பின்னர் தீவிர இடதுசாரி செயற்பாட்டாளராக டென்மாரக்கில் இருந்து இறக்கும் வரை செயற்பட்டவர்.

ரவி நாராயணமூர்த்தி தேவராஜ் பகவத்சிங் இரத்தினமணி செல்லமணி (இன்னும் சிலரது பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் தகவல் தந்தால் இணைத்துக்கொள்கிறேன்) போன்றவர்கள் 1970 களில் எமது ஊர் மற்றும் சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தவர்கள்.

சாதியும் தீண்டாமையும்
1960 வரை எமது ஊரவர்கள் மீது தீண்டாமை என்பது மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டது.சேட்டு போட முடியாது தோழில் சால்வை போட முடியாது. செருப்பு போட்டு வீதியில் நடக்க முடியாது.பிற்காலத்தில் தோழில் சால்வை பேட முடியும் என்றாலும் உயர்சாதியினர் வீதியில் வந்தால் அதை கக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டு கும்பிடு போட்டு ஒதுங்கிச் செல்லவேண்டும்.பிணம் எரிக்க வேண்டும்.வீடுகளில் முற்றம் கூட்டவேண்டும். ஆடு மாட்டுக்கு ஓலை வெட்டிக் கிழித்துக்கொடுக்க வேண்டும், திருமணங்களில் கா காவவேண்டும். பனை தென்மரங்களில் கள்ளிறக்குவதற்கோ பதநீர் இறக்குவதற்கோ பயன்படுத்த வேண்டும் என்றால் ஒன்றவிட்ட ஒருநாள் வருமானத்தை அதாவது மாதத்தில் சரி அரவாசி நாள் வருமானத்தை 'வாரம்' என்ற பெயரில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.உயர் கல்வி கற்க முடியாது. ஆரம்ப பாடசாலைகளிலும் நேரடியாத தீண்டாமை பார்க்கப்பட்டது.எந்தக் கோவில்களுக்கும் உள்ளே சென்று வழிபட முடியாது. போத்தலில் தான் தண்ணீரும் தேநீரும் தரப்பட்டது. தட்டுவத்தில் தான் சாப்பிட வேண்டி இருந்து.பொது போக்குவரத்தில் ஆசனங்களில் அமரமுடியாது.பொது கிணறுகளிலும் தண்ணீர் அள்ள முடியாது.

1970 களில் எங்களது இளமைக்காலத்தில் இந்த நிலை மாறத் தொடங்கியது பிணம் எரிப்பதில்லை ,முற்றம் கூட்டுவதில்லை.நாங்கள் சேட்டுப் போட்டோம் டவுசர் அணிந்தோம்.கூழைக் கும்பிடு போட மறுத்தோம்.போத்திலில் தண்ணீரும் தேநீரும் குடிக்க மறுத்தோம்.தட்டுவத்தில் சாப்பிட மறுத்தோம்.அடக்குமறைகள் இருந்து கல்வியை கற்றோம்.

'நீங்கள் ஊத்தையங்கள்.நீங்கள் மூடர்கள். நீங்கள் அறிவில்லாதவல்கள். நீங்கள் இன்ன தொழிலைத்தான் செய்ய முடியும் மற்ற தொழிலைச் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை. சாதி எண்டது பிறப்பால வருவது அது மாத்தேலாது.சாதி அடிப்படையில் நீங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் உயர்ந்தவர்கள். தாழ்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கின்படி தான் நடக்க வேண்டும்.' என்ற சாதி வெறியர்களின் சமூக உளவியலை நாங்கள் புரிந்துகொண்டோம்.சாதி என்பது ஒரு சாக்கடை அதற்குள் உழலுவது எந்த மாற்றத்தையும் தராது என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம்.

தேநீர்கடைகளில் இரட்டை டம்ளர் அல்லது போத்திலில் தண்ணிர் தேநீர் தரும் முறையும் தட்டுவத்தில் அல்லது தாமரை இலையில் வெளியில் இருந்தி சாப்பாடு தரும் முறையும் (1965-70) ஒழிக்கப்பட்டது. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சமத்துவத்துவ வழிபாட்டுக்கு அனுதிக்கப்பட்டது.அதன் சுற்றாடலில் இருந்த எல்லா மடங்களுக்குள் செல்லவும் அங்குள்ள எல்லாகிணறுகளிலும் தண்ணீர் அள்ளவும் அனுமதிக்கப்பட்டது.

தீண்டாமைக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டம் 'ஒடுக்குபவனின் ஒடுக்குமுறையை ஒடுக்கப்படுபவன் மௌனமாக ஏற்றுக்கொண்டிருக்கும் வரை ஒடுக்குபவன் ஒடுக்கிக்கொண்டே இருப்பான். ஒடுக்கப்படுபவன் தனது ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற பொழுதுதான் ஒடுக்குபவனின் ஒடுக்குமுறையை ஒழிக்க முடியும் என்ற உண்மையை எங்களுக்கு புரிய வைத்தது.அது எங்களுக்கு பெரும் உத்வேகத்தை தந்தது.

ஆனால் 70 களின் ஆரம்பத்தில் இடது சாரி இயக்கத்தின் ஒரு பகுதியினர் பௌத்த சிங்கள பேரினவாதிகளுடனனும் குறிப்பாக சிங்கள உழைக்கும் மக்களை ஒடுக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திடம் சரணடைந்துவிட, இன்னொரு பகுதியினர் செயலற்று தாங்களாகவே முடங்கிவிட அல்லது தங்களது செயற்பாடுகளை குறுகிய வட்டத்துக்குள் மட்டுப்படுத்திவிட நாங்கள் கைவிடப்பட்டவர்களாக உணர்ந்தோம்.

1983 க்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய போது அது என்னையொத்த இளைஞர்களுக்கு ஒரு வெளிச்சத்தை தந்தது.ஏனென்றால் பௌத்த சிங்கள பேரினவாதம் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மட்டுமல்ல சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிராக இருந்தது.சிங்கள அதிகாரவர்க்கம் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதத்தை சிங்கள மக்களுக்கு ஊட்டி வளர்த்துவிடுவதன் மூலம் தங்களது ஈவிரக்கமற்ற சுரண்டல் அமைப்பையும் சமூக ஒடுக்குமுறையையும் நவீன வடிவத்தில் தக்க வைத்துக்கொண்டது.

இந்த பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான தமிழீழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த போது அதில் பங்கெடுத்த அனைத்து இயக்களுமே 'சேசலிசத்தமிழீழம்' என்ற கொள்கையை முன்வைத்தன.இது எங்களை ஈர்த்தது.

எங்கள் ஊரில் இருந்து நானும் எனது தம்பி எம்.சி.லோகநாதனும் புளொட்இயக்கத்தக்கு சென்றோம்.எனது அண்ணா சிவாபாதம் (அருள் மாஸட்டர்) உட்பட பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சென்றார்கள்.பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. இந்த இரண்டு இயக்கத்தையும் தவிர வேறெந்த இயக்கத்தக்கும் எங்கள் ஊரவர்கள் யாரும் செல்லவில்லை.

புளொட் இயக்கம் (1984) எங்களுரில் வாங்கிய சாப்பாட்டு பார்சலுக்கு நூல் கட்டி அதை ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த அயலூர் போராளிகளுக்கு கொடுத்ததை தவிர எமது ஊருக்கு எதுவும் செய்யவில்லை. இதை தட்டக் கேட்டதற்காக எனது தம்பி லோகநாதன் புளொட் கனவான்களால் அச்சுறுத்தப்பட்டான்.

எமது ஊரில் மிக முக்கியமான பிரச்சனையாக குழுச்சண்டைகள் இருந்தன.அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் சுடுபட்டு இறந்ததும்,ஆளையாள் வெட்டிக்கொலை செய்தததும் தொடர்கதையாக இருந்து வந்தது.இதை தீண்டாமை ஒழிப் போராட்டத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் இதை தடுத்துநிறுத்தியது. வெளியிலிருந்து குழுமோதலை தூண்டியிட்டு எமது ஊரை பிளவு படுத்தி அதில் குளிர்காய்ந்தவர்கள் பச்சை மட்டை அடிவாங்கி தப்பி ஓடினார்கள்.

அதேபோல் பனை தென்னை மரங்களை சீவல் தொழிலுக்கு பயன்படுத்தும் போது அதில் கிடைக்கும் வருவாயின் சரி அரைவாசிப்பகுதியை அந்த மரங்களின் உடைமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எழுதா சட்டம் விடுதலைப்புலிகளால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.மரங்களை குத்தகை அடடிப்படையில் எடுக்கவும் அந்த குத்தகைப்பணம் என்பது அந்த மரங்களின் உற்பத்திப் பொருட்களின் பெறுமதியில் மூன்றில் ஒரு பகுதிக்கு கீழேயே இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதேபோல எமது மக்களின் வாழ்க்கையோடு இணைந்து தொங்கு பனம் பொருள் அபிவிருத்திச் சங்ககங்கள் அந்தக்காலகட்டத்தில் ஊழல் நிறைந்ததாக இருந்தது.ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 20 போத்தல் கள்ளை இறக்கி அந்த சங்கத்துக்கு கொடுத்தால் அந்த கள்ளு விற்கப்படாமல் ஊற்றப்பட்டுவிட்டது என்று கணக்கு காட்டி அரைவாசி கள்ளுக்குரிய பணமே வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பொறுப்பாக இருந்த பலர் அந்த கள்ளை விற்றுவிட்டு எஞ்சிய சொற்ப கள்ளுக்கு தண்ணீர் கலந்து அதன் அளவைக் கூட்டி ஊற்றிட்டு, விற்ற கள்ளின் பெறுமதியை தாங்கள் சுருட்டிக்கொண்டது நீண்டகாலமாக நடந்துவந்தது.இந்த மோசடியை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி எமது மக்களின் உழைப்பு எமது மக்களாலேயே சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்தினார்கள்.இதில் கடற்புலிகளின் தளபதி சூசை நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்.

புலம் பெயர்வு
எமது ஊரிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது 1970 களில் ஆரம்பித்துவிட்டாலும் பணப்பிரச்சனை காரணமாக எல்லோராலும் அது முடியமால் இருந்தது.

1983-84 ல் 22 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இதற்கு உதவியவர் அன்று பிரலமான பிரயாண முகவராக இரந்த எனது மாமா திருநாமம்.

சமூக மாற்றம்.
அன்று 82 குடும்பங்களாக இருந்த எமது ஊர் இன்று அங்கு 184 குடும்பங்களும் புலம் பெயர் நாடுகளில் 121 குடும்பங்களுமாக பெருகிவிட்டது.இன்று எமது ஊரில் 4 குடும்பங்களை தவிர மற்ற அனைத்து குடும்பங்களும் புலம்பெயர்நாட்டு தொடர்புடைய குடும்பங்களாக இருக்கின்றன.

முன்பு அயல் கிராமங்களில் நாங்கள் காணி வாங்க முடியாத நிலை இருந்தது.ஆனால் இன்று எமது கிரமத்தை ஒட்டிய எல்லைப்பகுதியில் இருந்த காணிகள் எல்லாம் எம்வர்களால் வாங்கப்பட்டு கிராம எல்லை விரிந்துவிட்டது.

அன்று ஒரு 50 ரூபா பணத்துக்காக உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று மணிக்கணக்கில் தவமிருந்த நிலை இருந்தது.ஆனால் இன்று ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் ரூபா பணத்தை சுலபமாக புரட்டக் கூடிய அளவுக்கு எம்மவர்களின் பொருளாதார நிலை மாறிவிட்டது.இன்று அயலூரிலுள்ள உயர் சாதியனர் எம்மவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்குவது இயல்பான ஒன்றாக இருக்கிறது.

அன்று நாங்கள் கல்வி கற்க தடை இருந்தது. நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம், அவமானப்படுத்தப் பட்டோம்.ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை இல்லை.பருத்தித்துறை ஹாட்லிக்கல்லாரில் கல்வி கற்ற எங்களுர் சிறுவன் மகேந்திரன் சிவதர்சன் கண்மருத்துவம் மற்றும் எல்இடி தொழில் தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பொன்றை செய்து இளம் கண்டுபிடிப்பாளருக்கான விருதை பெற்றதுடன் அமெரிக்காவின் பெல்சில்வேனியாவுக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறான்.

இலங்கையின் பல்வேறு பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றது உயர் கல்வி நிறுவனங்களில் டிப்ளோமே பெற்றது உட்பட 41 பேர் உர் கல்வி கற்றிருக்கிறர்கள்.புலம் பெயர் நாடுகளில் 112 பேர் பட்டப்படிப்பை முடித்திருக்கிறர்கள்.13 மருத்துவர்கள் 16 பொறியிலாளர்கள், 3 மருத்துவ விஞ்ஞானிகள் 6 உயர் நிறுவன அதிகாரிகள், 40 வரையிலான தொழில் நுட்பவிலாளர்கள் கல்வியாளர்கள் வழக்கறிஞர்கள் என்று எமது பிள்ளைகள் புதிய உச்சம் தொட்டிருக்கிறார்கள்.

எமது ஊரில் அரச உயரதிகாரிகளாகவும் ஊழியர்களாகவும் தனியார் நிறுவன அதிகாரிகளாகவும் தொழில் முனைவோராகவும் 120 பேர் இருக்கிறர்கள். 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏஎல் தாண்டியிருக்கிறர்கள். பலர் பல்கலைகழக தெரிவுக்காக காத்திருக்கிறர்கள்.

இதைவிட முக்கியம் இன்று எமது ஊரில் 4 குடும்பங்கள் மட்டும் தான் சீPவல் தொழிலை செய்கின்றன.அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதை செய்கிறார்கள்.

சாதி எவ்வாறு உயிர் வாழ்கிறது.
எமது அயலூரிலுள்ள உயர் சாதி பெண்களையோ இளைஞர்களையோ எமது பெண்களும் இளைஞர்களும் காதலிக்க முடியாது திருமணம் செய்ய முடியாது. ஆனால் பிற ஊர்களை சேர்ந்த 6 பேரை எமது இளையேர் கலப்பு திருமணம் செய்திருக்கிறர்கள். எமது ஊரைச்சுற்றியுள்ள 5 கோவில் அதிகாரபூர்வமாக திறந்துவிடப்படவில்லை. அவற்றுக்குள் நமது இளைஞர்கள் சர்வசாதாரணமாக சென்றவருவதை சாதியின் பெயரைச் சொல்லி யாரும் தடுப்பதில்லை. அதிகாலையில் கோலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சுண்டல் வாங்கிச் சாப்பிடும் மனநிலையில் நமது இளைய சமூகம் இல்லை.அவர்களது சிந்தனைதளம் விரிவடைந்துவிட்டது. அவர்களது இலக்குகள் வேறாக இருக்கின்றன. எங்களுரில் எங்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்படவில்லை என்பது ஒரு முக்கியமான விடயம். அதே போல முன்பு எங்களை சோடியம் என்று குறியட்டு பெயர் சொல்லி அழைத்த அதே மனோநிலையில் எங்கள் அயலூர் இளைஞர்கள் இன்று இல்லை. அவர்களில் பலர் எமது இளைஞர்களுடன் நண்பர்களாக இருக்கிறர்கள்.ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று ஒன்றாக இருந்து உணவருந்த முடியாது.

இன்று எமது ஊர் சுற்றுவட்டத்தில் சாதி என்பது கலாச்சாரத்தளத்தில் தான் உயிர் வாழ்கிறது.பொருளாதாரம் மற்றும் சமூக கட்டுமானத்துக்கான பிடியையும் அதிகாரத்தையும் அது இழந்துவிட்டது.

எமது ஊரின் பொருளாதாரமும் அதிகாரமும் எங்கள் சொந்தக்கையிலே இருக்கிறது.எங்களை யாரும் எவரும் சாதியின் பெயரை சொல்லி அடிமைப்படுத்திவிட முடியாது. அரசியல் தளத்தில் கூட எனது அண்ணர் தங்க வேல் தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவர். ஏற்கனவே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறர். பல இளைஞர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்வற்றி செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள்.

இன்றைக்கு கிராமசேவகராக இருக்கும் எனது பெறா மகளை 'உன்னை யாரும் சாதிபார்த்து தொழில் ரீதியாக மட்டம் தட்டுவதில்லையா?' என்று கேட்டேன்.
'நான் என்னை சாதி ரீதியாக அடையாளப்படுத்தவில்லை. கல்வி ரீதியாகவே அடையாளப்படுத்துகிறேன். நான் ஒரு இரண்டை பட்தாரி. சட்டம்படித்தவள். சாதிகடந்து நான் எல்லா மக்களுக்காவும் செயற்படுகிறேன். என்னை மட்டம் தட்டுவதற்கு எதுவும் எல்லை. அப்படி யாராவது மட்டம் தட்டினால் அதை தாண்டிச் செல்லும் அறிவும் துணிச்சலும் எனக்கு இருகிறது'
என்று கூறினாள். இது தான் இன்றைய யதார்த்தம்.
பின்குறிப்பு:- ஏதே இந்திய ரேஞ்சுக்கு ஈழத்தில் தீண்டாமையும் சாதியும் இருக்கிறது என்று நிறுவதற்கு லண்டனிலும் பாரிசிலும் இருந்து கொண்டு பூதக்கண்ணாடி வைத்து தேடிக்கொண்டிருப்பவர்கள் எமது ஊருக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்யலாம். அப்படி விரும்பினால் அதற்கான தொடர்புகளை நான் ஏற்படுத்தி தருவேன்.
அடுத்து இப்போது இந்த முக நூலில் ஏதோ ஏதெற்கெல்லாம் சலெஞ் வைக்க்pறார்கள, நான் எனது நண்பர்களையும் என்னை நேசிக்கும் இளைய தலைமுறையினரையும் அழைக்கிறேன். வாரம் ஒரு முறை ஒரு ஊர் என்ற அடிப்படையில் உங்கள் ஊரைப்பற்றி எழுதுங்கள்.
எமது வடமராட்சி பிரதேசத்தில் பெரும் பாச்சலுக்கு உள்ளான ஒரு ஊர் கூவில்.அந்த ஊர் தம்பிகளை முதலில் அழைக்கிறேன் அடுத்த வாரம் உங்கள் ஊரைப்பற்றி அது அடைத்திருக்கும் வியத்தகு மாற்றம் பற்றி எழுதுங்கள்.

சிவா சின்னப்பொடி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து  நன்றியுடன் பகிரப்படுகிறது.

"தமிழ் மக்களிலிருந்து விடுதலைப்புலிகளைப் பிரிக்கமுடியாது" - 92' இல் தொண்டமான் வழங்கிய பேட்டி


சண்டே டைம்ஸ் பத்திரிகையில் (Sunday Times 22-3-92) வெளியான இந்த நேர்காணல் அதன் பின்னர் 05.05.1992 அன்று வெளியான "தேர்ந்த கட்டுரைகள்" என்கிற விடுதலைப் புலிகளின் சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. "தேர்ந்த கட்டுரைகள்" சஞ்சிகையில் இப்படி பல முக்கிய நல்ல கட்டுரைகள் அப்போது மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருகிறது.
இந்த வாரம் தென்னாபிரிக்காவின் வெள்ளைக்கார அரசு தனது கொள்கைகளை மாற்றி கறுப்பின மக்களுடன் செயலுரிமை பரவலாக்கலுக்கு ஒத்துக்கொண்டது போல் இலங்கையும் தனது கண்களைத் திறந்து இயல்பு நிலையை உணர்ந்து இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில் நல்ல முடிவுக்கு வர வேண்டுமென அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு தலைவருமான திரு. சௌ.தொண்டமான் தனது நீண்டகால வாளாமையை (மௌனம்) கலைத்துக்கொண்டு கூறினார். தமிழ் மக்களிலிருந்து விடுதலைப் புலிகளைப் பிரிக்கமுடியாது எனத் திரு. தொண்டமான் வலியுறுத்திக் கூறினார்.
பத்திரிகையாளரின் நேர்காணலில் சில பகுதிகள் 
(1) கேள்வி:- நீங்கள் தற்போது வாளாமையாக இருப்பதனால் பல ஊகங்கள் வெளிவருகின்றனவே. இதற்கு யாதேனும் காரணங்கள் உண்டா ? 
பதில் : எனது இணக்க கருத்துக்களைப் பற்றி வெளியில் பேசவேண்டாமெனப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்ட தனால் நான் எனது இணக்கக் கருத்துக்களைப் பற்றி இப்போது பேசுவதில்லை. அதனால் நான் வாளாமையாக இருக்கின்றேன் என்று பொருள் கொள்ளப்படாது. நானும் பாராளுமன்றத்தெரி - வுக்குழுவில் அங்கம் வகிப்பதால் பேசாமல் இருக்கின்றேன். 

(2) கேள்வி : விடுதலைப் புலிகளுடன் எதுவித பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதையும் இந்தியா எதிர்ப்பது போல் தெரிகிறதே? அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களையும் நாடுகடத்தும்படி கோருகின்றது. இந்த நிலையை நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்? 

பதில்:- எங்கள் நாடு ஒரு சுதந்திரநாடு. எங்கள் நாட்டு எங்கள் நாட்டு நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே நாம் எங்கள் சிக்கல்களை பார்க்கவேண்டும். மற்றைய நலன்களெல்லாம் இரண்டாவதாக இருக்க வேண்டும். இந்தியாவுடன் நல்லுறவைப் பேண வேண்டும். ஆனால் எங்கள் தேசிய நலன்களே மிக முக்கியமானவை. 
(3) கேள்வி:- பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடிக்க வேண்டும் அல்லது அவர்களின் வலிமையை அடக்கவேண்டுமென ஒரு சாரார் கருதுகின்றனரே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? 
பதில் - நீங்கள் எண்ணுவது போல் விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது என்பது வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு , தமிழரையும் தோற்கடிப்பதற்கு இணையாகும் என்பது எமது கருத்தாகும். ஒன்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது. அனைத்துத் தமிழ் மக்களிலிருந்தும் விடுதலைப் புலிகளைப் பிரிக்க முடியாது. விடுதலைப் புலிகளை அழிப்தென்பது தமிழர்களை அழிப்பதற்கு ஒப்பாகும். தமிழ் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் புலிகளைப் போன்று கடும் போக்காளர்களும் இருக்கத்தான் செய்வார்கள். விடுதலைப் புலிகள் சரியாகவோ அல்லது வேறு வகையிலோ தமிழர்களின் வேட்கை ளை பிரதி பலிக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 
(4) கேள்வி: அதிகமான தமிழர்கள் மட்டுமல்லாது தமிழ் அரசியல் கட்சிகளும் விடுதலைப் புலிகளைத் தமிழர்களின் தலைவர்களென ஏற்க மறுக்கின்றனவே? இதை எப்படி விளக்குவீர்கள்?
தமிழர்களின் பிரச்சினைகளில் இறுதியாக விடுதலைப் புலிகள் மாத்திரம்தான் முன் நிற்பார்கள். 
(5) கேள்வி: அவர்கள் தவறுகளைப் பற்றி?
அவர்கள் தவறு செய்கிறார்கள். யார் தான் தவறு செம்யவில்லை? விரும்பியோ விரும்பாமலோ புலிகள் விடுதலைப் போராளிகளாக வளர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் குறிக்கோளில் தடுமாற்றம் இல்லாத போராளிகளாக இருக்கின்றார்கள். மற்றைய தமிழ்க் கட்சிகள் சண்டையில் களைப்புற்றோ அல்லது கொள்கை நடைமுறைகளில் உறுதியற்றோ இருப்பதுமல்லாமல் தாங்கள் எதற்காகக் கட்சியைத் தோற்றுவித்தார்களோ அந்த இலட்சியத்தை அடையுமுன்பே களைத்து விட்டார்கள்.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பற்றிக் கேட்டீர்கள். முதலாவதாக இந்தப் போருக்கான சரியான காரணத்தை ஆராயவேண்டும். 
(6) கேள்வி:- அவர்களுடைய ஈழக்கோரிக்கை சிங்களப் பெரும்பான்மையினரால் ஏற்கக்கூடியதல்லவே? 
பதில்:- ஈழம் என்றோ , தமிழர்களின் வேணவா என்றோ அல்லது வேறு எந்தப் பெயரிலும் நீங்கள் அழைத்தாலும் அது தான் அவர்களின் இலட்சியமாகும். அரசியல் யாப்புக்கமைய அவர்களுடைய வேட்கைகளை முழுமை செய்வதற்கு நாங்கள் வழிவகைகளைக் கண்டறிதல் வேண்டும். தற்போது அதைத்தான் செய்வதற்கு நாம் எத்தனிக்கிறோம். 

தென்னாபிரிக்காகூட நல்ல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. நீண்டகாலப் பாரம்பரியமும், நாகரிகமும், பண்பாடுமுள்ள நாம் எங்கள் அறிவுக் கண்களைத் திறந்து பார்க்கவில்லை. இது சோகமானது. எல்லோருக்கும் சமாதானம் தேவைப்படுகின்றது. ஆனால் ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை எவரும் முன்வைக்கிறார்களில்லை. பாராளுமன்றத் தெரிவுக்குழு நல்ல ஒரு தீர்வை முன்வைக்கும் எனவும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் எனவும் நம்புவோமாக, 
(7) கேள்வி- உங்கள் நடவடிக்கைகள் மேல் சிங்கள மக்கள் ஐயம் கொள்கிறார்கள். இந்த ஐயத்தை நிவர்த்தி செய்ய உங்களின் செயல்பாடுகள் என்ன? 
பதில்:- சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு என் மேல் ஐயமில்லை என்பதை நான் தங்களுக்குக் கூற விரும்புகிறேன். இவர்களில் சிலர் எங்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் அங்கம் வகிக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் தொழிலாளர்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதால் இந்த நாட்டுக்கு எது உகந்தது என் பது அதிகமான சிகிகள மக்களுக்குத் தெரியும் என்பதை நான் கண்டுள்ளேன். 

உள நிறைவற்ற சில சிங்கள அரசியல்வாதிகளும், பக்கம் சார்ந்த சில பத்திரிகைகளுமே என் மீது ஐயம் கொள்கின்றன. பாரம்பரியங்களாலும், குடும்பப் பின்னணியினாலும் சில பௌத்த மதத் தலைவர்கள் துரதிர்ஷ்டவசமாக இவர்களை ஆதரிச் கின்றனர். 

திரு. காமினி ஜெயசூரியாவைப் பாருங்கள். அவர் என்னு டைய உற்ற நண்பன் அத்தோடு நல்லநோக்கங்களைக் கொண் டவர். இந்திய இலங்கை இணக்க ஒப்பந்தத்தை எதிர்த்து அவர் பாராளுமன்றத்தில் இருந்து விலகிய போதும் அவருக்கு நாட்டில் ஆதரவு கிடைக்கவில்லை . அவர் அவசரப்பட்டுப் பதவியிலிருந்து விலகினார் என நான் நினைக்கிறேன்.
(8) கேள்வி - பதுளையையும் மத்திய மாகாணத்தையும் உங்கள் உரிமைப்பாட்டுள் கொண்டுவரும் வழிமுறைகளில் நீங்கள் இறங்கியுள்ளீர்கள் எனப் பயப்படுகிறார்களே? இதையிட்டு உங்கள் கருத்து என்ன? 
பதில்:- முதலில் எனக்கு இதைச் சொல்லுங்கள். தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் இந்தப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் சென்ற 50 ஆண்டுகளாக என்ன செய்துள்ளன? சிங்கள மக்களில் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது அப்படிப்பட்ட ஆசைகளோ எனக்கு இருக்கின்றதென்று திரு. ஜெயசூரியா போன்றவர்கள் நினைப்பது சரியல்ல. ஐந்து சதவீத இந்திய வம்சாவளி மக்களைக் கொண்ட என்னால் எப்படி அப்படிச் செய்ய முடியும் சிங்கள மக்களைப் பாதுகாப்பதாகப் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்ற சிறி லங்கா சுதந்திரக் கட்சியாலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியானோ சிங்கள மக்களின் மேல் உரிமைப்பாட்டை செலுத்த முடியாதிருக்கிறது நான் தனிமனிதனாக இருந்து கொண்டு உரி மைப்பாடு செலுத்துவதென்று நினைப்பது மடத் தனம். என் சொல்லைக் கேட்டு நடக்கச் சிங்கள மக்கள் மடத்தனமானவர்கள் அல்லர். 
(9) கேள்வி முஸ்லிம் கட்சிகள், சிங்கள ஆரக்சக சங்விதானய போன்ற இனவாரியான கட்சிகளைத் தடை செய்வது நல்வது என நினைக்கிறீர்களா? 
பதில்:- கட்டாய தேவைகளினால் இக்கட்சிகள் எழுச்சி பெறுகின்றன. இவைகளின் குறைகளை களைந்தால் இக்கட்சிகள் வளரமாட்டா. இக்கட்சிகளும் விடுதலைப்புலிகள் போன்றவையேயாகும். இக் கட்சிகளை உருவாக்குவதற்கு இருக்கும் காரணிகளைக் கண்டறிந்து தீர்த்து வைக்கவேண்டும். 
(10) கேள்வி:- இந்தியத் தமிழர்களை மீண்டும் நசுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறிச் சில நாட்களுக்கு முன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் கூட்டத்தில் கண்ணீர் வடித்தீர்ளே? ஏன்? 
பதில்: நான் இதை ஏன் கூறினேன் என்றால் அரசாங்கத்திற்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைச் சீர்குலைக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது சிலர் இந்த ஒற்றுமையைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள். 

50 வருடங்களாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒதுக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. இன வெறுப்பைத் தூண்டக் கூடிய பிரசாரத்துக்கு அஞ்ச அரசாங்கம் இந்தியத் தமிழர்களுக்கு உதவுவதைத் தவிர்த்துக் கொண்டு வந்தமையால் அண்மைக் காலம் வரை இந்தியத் தமிழர்கள் நாடற்றவர்களாகவே இருந்தனர். 

தற்போது அரசாங்கம் இந்தியத் தமிழர்களுக்கு உதவியதுடன் அவர்களை இலங்கைக் குடிமக்களாகவும் மற்றவர்களுக்கு இணையாகவும் ஆக்கியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இது மட்டும் போதாது அவர்களை மேம்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை இன வெறுப்பைப் தூண்டுவோர் இந்தியத் தமிழர்களால் ஏற்படப் போகும் அச்சுறுத்தல்கள் என்ற ஒரு மாயையை உருவாக்கி அதை வைத்தே இப்போது அரசியல் இலாபம் தேட முனைகின்றார்கள்.

இந்தியத் தமிழர்களைப் பொறுத்த வரை அரசாங்கம் இன்னமும் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. எனக்குப் பின் இவர்களுக்காகப் போராடுபவர் யார்? ஜனாதிபதி எங்கள் பிரச்சினகைளைப் பற்றி நன்கு அறிந்துள்ளதுடன், அவர் தன்னாலானவற்றைக் தீர்த்து வைத்திருந்தும், இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. மூன்று மாதங்களாகப் போராடி இந்தியத் தமிழர்களது வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளேன். இந்தியத் தமிழர்களுக்கு வருவாயை அதிகாரித்த போது, இந்த அதிகரிப்பு தெனியாய, காலி ஆகிய இடங்களிலுள்ள சிங்களத் தொழிலார்களுக்கும் கிடைத்துள்ளன என்பதை ஏன் இந்த மக்கள் உணர்கிறார்களில்லை. 

இந்தியத் தமிழர்களின் நிலைமையை முன்னேற்ற அரசாங்கம் தன்னிச்சையாக எந்த நடவடிக்கைகளிலும் இறகாவிலை. ஜனாதிபதி எங்கள் சிக்கல்களை நன்கு அறிந்துள்ளதோடு அவற் றைத் தீர்ப்பதற்கு அவர் எடுக்கும் முயற்சிகளை முறி படிப்பதற்கு ஒரு குழு அவருக்கெதிராக இயங்குகின்றது. கடந்த நாற்பதாண்டுகளாக இருந்து வரும் இச்சிக்கல்களுக்கு மும் கொடுக்கும் தலைவர்களில் எங்கள் ஜனாதிபதி மாத்திரம் ஒருவர் அல்ல. இந்தியத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எடுத்த நட வடிக்கைகளுக்கு இனக்காழ்ப்பாளர்கள் தடங்கல் ஏற்படுத்தியுள்ளனர். இந்தியத் தமிழர்களின் பிரச்சினைகள் தேசியப் பிரச்சினைகளாகக் கருதி அவற்றைத் தீர்க்கத்தக்க வகையில் நடவடி க்கைகள் மேற்கொள்ளப்படவில்லை இன்னல்களுக்கு நடுவில் போராடிப் படிப்படியாக முன்னேறியுள்ளேன்.
(11) கேள்வி - மத்திய மாகாணசபை அரசாங்கத்தில் மகன் அமைச்சராக இருக்கிறாரே இது உங்களுக்கு உதவுவதாகக் தெரியவில்லையா?
பதில்:- இதில் என்ன சிறப்பு இருக்கிறது அவர் ஒரு குடிமகன் மற்றையோரைப் போல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் அவருக்குக் கிடைக்க வேண்டியதைப் பெற்றுக் கொண்டார். அதில் ஒரு சிறப்பும் இல்லை.

தமிழ்நாடு சங்ககாலத்தில் மக்கள் ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஐந்து நிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. கடற்கரையை சார்ந்த நெய்தல் நிலத்தில் உள்ளவர் பரதர் எனப்பட்டனர். மலைகளிலும், மலைசார்ந்த நிலமாகிய குறிஞ்சியில் வாழ்ந்தவர் குறவர் எனப்பட்டனர். காட்டு நிலமாகிய முல்லையில் வாழ்ந்தவர் ஆயர் எனப்பட்டனர். அவர்கள் இடையர்கள். ஆற்றோரங்களைக் கொண்ட மருத நிலத்தில் உழுதுண்டு வாழ்பவர் உழவர். பாலைவனப் பகுதிகளில் வேட்டையாடியும், கொள்ளையடித்தும் வாழ்ந்து வந்தவர் என்றனர்.

(சண்டே ரைம்ஸ் 22.3.92) 
நன்றி – தமிழர் சார்பு

1962ம் ஆண்டு நடாத்தப்பட்ட “ஒபறேசன் கோல்ட்வாச்டு" (Operation Holdfast) என்னும் சதி - ஜமந்த சோமசுந்தரம்


தி ஐலன்ட் பத்திரிகையில் (Island 26-1-92) வெளியான இக்கட்டுரை அதன் பின்னர் 02.04.1992 அன்று வெளியான "தேர்ந்த கட்டுரைகள்" என்கிற விடுதலைப் புலிகளின் சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. "தேர்ந்த கட்டுரைகள்" சஞ்சிகையில் இப்படி பல முக்கிய நல்ல கட்டுரைகள் அப்போது மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருகிறது.
1962 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை தன்னைச் சந்திக்கும்படி உதவிக் காவல்துறை மா அதிபரான திரு. சி. சி. திசநாயக்கா, கொழும்புக் காவல்துறை அதிபரான திரு. ஸ்ரான்லி சேனநாயக்கா அவர்களைக் கேட்டுக் கொண்டார். தனக்கு எதிராக நடாத்தப்பட்ட வழக்கின் விசா ரணையின் போது நாட்டில் உறுதிப்பாட்டை உருவாக்குவதற்கு ஏதுவாக முக்கியமான அரசியல் வாதிகள் பலரைக் கைது செய்யும்படி மேலிடத்திலிருந்து தனக்கு உத்தரவு கிடைத்திருந் ததாக திரு. ஜங்கின் திசநாயக்கா கூறியுள்ளார். 

இலங்கை கவசப்படையணியைச் சேர்ந்த மேஜர் வீரசேன ராசபக்சவும், மேஜர் விக்டர் யோசப்பும், இலங்கைப் பீரங்கிப் படையைச் சேர்ந்த மில்ரன் வைற்றும் உதவிக் காவல்துறை அதிபர் கொலின் வன் றீசனும், தொண்டர் படைத் துணைத் தளபதி எப்.சீ.த. சேரத்தின் இல்லத்தில் தங்கள் அன்றைய இரவு உணவை வைத்துக்கொண்டனர். அதன் பின் இவர்கள் பம்பலப்பிட்டியிலுள்ள மெல்போர்ண் சாலையூடாகக் கடற்கரைக்குச் சென்றனர். திருமதி, சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டுமென அங்கு கூடியிருந்தவர்களுக்குத் திரு. டெறித் த சேரம் கூறினார். 

இதேவேளை கொழும்பிலுள்ள மூன்று தொலைபேசி பரிவர்த் தனை நிலையங்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப் பாகவிருந்த இலங்கைப் படைத்துறை இரகசிய செய்திப்பரிவர்த்தனை (தொண்டர்படை) அறிவிக்கும் குழுவின் தளபதி கேணல் பசில் யேசுதாசன் மருதானையிலுள்ள மத்திய தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையத்திற்கும், கவ்லொக்ரவுணில் உள்ள தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்திற்கும் சென்று பார்வை இட்டார். 

27 ம் திகதி காலை 9.15 மணிக்குக் காவல்துறைத் தலை மையகத்திற்கு உதவிக் காவல்துறை அதிபர் பெடே யோன் பிள்ளை அவர்களை அழைத்த திரு. ஜங்கின் திசநாயக்கா, தான் அன்று அரசாங்கத்தைக் கைப்பற்ற இருப்பதாகவும், காவல்துறை வானொலி தொடர்பு வாகனங்களையும், ஆயுதம் தாங்கியவர்களைக் கொண்ட, உந்துருளிகளையும், காவல்துறைப் போக்கு வரத்துப் பகுதி செயலகத்தில் அன்றிரவு 11.00 மணிக்கு ஆயத் தமாக வைத்திருக்கும்படி பணித்தார். 

முன்னாள் கடற்படைத்தளபதி றியர் அட்மிரல் றொயிஸ் த மெல், படைத்தளபதி கேணல் மொறிஸ் த மெல், மூன்றாவது பீரங்கிப்படைத் தளபதி கேணல் டபிள்யூ எஸ். ஆபிரகாம்ஸ், மேஜர் பசில் லோயலா. மின்னியல், இயந்திரவியல் பொறியிய லாளர் பகுதியைச் சேர்ந்த தளபதி நோயல் மத்தியூஸ், மேஜர் ராசபக்ச, கப்டன் வைத், கப்டன் ஜே. ஏ. ஆர். பீலிக்ஸ் ஆகி யோர் அன்று மாலை பம்பலப்பிட்டியிலுள்ள எலிபாங் வீதியிலுள்ள திரு பசில் பேசுதாசனுடைய வீட்டில் சந்தித்ததன் பின்னர், கின்றோஸ் சாலைக் கடற்கரைக்குச் சென்று, சதித்திட்டத்தைப் பற்றிய பேச்சுக்களின் போது சங்கேத மொழியாக “யத்துற" என்னும் வார்த்தையை உபயோகிக்கவேண்டும் எனவும். சதித்திட் டத்தின் பெயர் கோல்ட் வாச்டு' என இருக்குமெனவும் தீர் மானித்தார்கள். 

28 ம் திகதி ஞாயிறு காலை 1-00 மணிக்கு சதி ஆரம்பிக்கு மெனவும் இலங்கைத் தொலைபேசி பரிவர்த்தனைச் செயலகத்தை லெப்டினன்ட் கேணல் மத்தியூஸ் கண்காணிப்பாரெனவும், இராணி மாளிகையையும், கிரிலப்பனைப் பாலத்தையும் கவனிப்பதற் காகத் தலா நான்கு கவசவாகனங்களை மேஜர் ராசபக்ச அனுப்ப வேண்டுமெனவும் ஏரிக்கரைப் பத்திரிகைக்காரியாலயத்தை கப்டன் பீலிக்ஸ் கண்காணிப்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

இந்த ஒழுங்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், சதியில் சம்பத்தப்பட்ட மற்றவர்களுக்குத் தெரியாமல் அம்பலாங் கொடை சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தனது மாமனாருமான திரு. பீ. த. எஸ் குலரத்தினாவுடன் திரு. ஸ்ரான்லி சேனநாயக்கா அன்று காலை தொடர்பு கொண்டதன் காரணமாக, திரு. பீ. த, எஸ் குலரத்தினா அன்று மாலை 3.00 மணிக்கு கொழும்பு வந்து சேர்ந்தார். திரு. ஸ்ரான்லி சேன நாயக்கா கூறிய யாவற்றையும் கேட்டறிந்து கொண்ட திரு குல ரத்தினா அன்று மாலை 5.00 மணிக்கு ஒறியன் கிளப் (Orion Club) புக்குள் சென்று அன்றைய காவல்துறை மா அதிபரான திரு. மொறிஸ் அபயக்கோனிடம் இச் சதிபற்றித் தெரியப் படுத்திய பின், அன்றைய பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளரான திரு. பீலிக்ஸ்டயஸ் பண்டாரநாயக்காவுக்கும் இதைத் தெரியப்படுத்தச் சொன்னார். அன்று மாலை 7.15 மணிக்கு அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்ட காவல்துறை மா அதிபர் வழமைக்கு மாறானவர்களிடமிருந்து வரும் கட்டளைகளை ஏற்கக்கூடாதென எல்லா காவல்துறை நிலையங்களுக்கும் பணிப் புரை வழங்கினார். அலரி மாளிகையைப் பாதுகாக்க மூன்று கவ சவாகனங்களை அனுப்பும்படி மேஜர் ராசபக்சாவுக்கு காவல் படையின் தளபதி கேணல் சேபால ஆட்டிகலை அன்று நடு இர வில் பணித்தபின், 2-ந் திகதி அதிகாலை 1. 0 மணிக்கு பிறென் துப்பாக்கிகள் ஏந்திய 300 துருப்புக்கள் திரு. ஜங்கின் திசநாயக்கா வசிக்கும் லோங்டன் சாலையிலுள்ள அவர் வீட் ஓடச் சுற்றிவளைக்க ஏற்பாடு செய்தார். இப்படியே கோல்ட் வாச்டு' என்ற சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

அரசிற்கு எதிராகப் போர் தொடுத்தார்கள் எனக் குற்றஞ் சுமத்தப்பட்ட 24 பேர்களுள் 10 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்கள். இக்குற்றவாளிகளான நிர்வாக சேவையைச் சேர்ந்த டக்கிளஸ் லியனகே, மற்றும் கேணல் மொறிஸ் தமெல், கேணல் டெறிக் த சேரம், ஜங்கின் திசநாயக்கா. முன்னாள் துணைகாவல் துறை மா அதிபர் சிட்னி த சொயிசா றோயிஸ் தமெல், லெப் ரினன்ட் கேணல் நோயல் மத்தியூஸ், கேணல் பசில் யேசுதாசன், உதவிக் காவல்துறை அதிகாரிகளான ரோணி விஜயசிங்க மற்றும் லயனல் ஜெரசிங்க காவல்துறை அதிபர் எல் ஸ்ரர் பெரேரா ஆகியோருக்கு பத்து வருடச் சிறைத்தண்டனையையும், அவர்கள் சொத்துக்கள் யாவற்றையும் பறிமுதல் செய்யும்படியும் நீதிமன் றம் உத்தரவிட்டது.

வெற்றிபெறாத ஒரு வெறும் இராணுவ சதி நடவடிக்கையாக 'கோஸ்ட் வாச்டு' சதி நடவடிக்கையைக் கருதமுடியாது இலங்கையின் அண்மைக்காலச் சரித்திரத்தில் அது பெரும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டிருந்த வேளையில் நடாத்தப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகவே இதைக் கொள்ள வேண்டும்.

சமய சார்பற்ற அரசமுறை 

தன்னாட்சி அதிகாரங்கொண்ட ஒரு அரசை உருவாக்க வேண்டுமென்று விருப்புக்கொண்ட திரு. டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையிலுள்ள எல்லாச் சமூகங்களையும் பிரதிபலிக்கத்தக்கதான அரசியல் முறை ஒன்றை உருவாக்க விரும்பினார். லங்கா சமசமாசக்கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் தீவிர மதச்சார்பற்ற, பக்கச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடித்தமையாலேயே ஐக் கிய தேசியக்கட்சி தன்னை ஒரு தேசிய மதச்சார்பற்ற, அமைப்பாக அதன் முதல் பத்து ஆண்டுகால வரலாற்றில் காட்டிக் கொள்ள முடிந்தது. இலங்கையிலுள்ள இந்தியப் பூர்வீக மக்களாகிய தோட்டத் தொழிலாளர்களுடைய வாக்குரிமையை இல்லாது செய்தது போன்ற சிறுபான்மையினருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்ட போதெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சி அதை ஒரு இனத்தின் பிரச்சினையாகக் காட்டிக்கொள்ளாது ஒரு வர்க்கத்தின் பிரச்சினையாகவே காட்டிக்கொண்டது.

நிருவாகத்தில் மேல்மட்டத்தினருக்கும் மத்தியதரத்தினருக்கு மிடையே தொடர்ச்சியான ஒற்றுமை 1956 வரை நீடித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் மேல் நாட்டுப் பண்பாட்டை பின்பற்றிய ஆங்கிலம் கற்ற நகரப்புற மக்களுக்கும், கிராமப்புறங் களில் வசித்த சிங்களம் அல்லது தமிழ் மாத்திரம் கற்ற மக்களுக்கு மிடையே விரிசல் ஏற்பட்டுக்கொண்டு வந்தது. பாடசாலைகளில் ஒன்றாக கல்விகற்றதன் காரணமாக இனத்துவேசமற்ற மதச் சார்பற்ற சூழ்நிலை காரணமாகவும் 50ம் ஆண்டுக்கு பிற்பகுதியில் தோன்றிய இனவாத உணர்வுகள் அப்போது தோன்றவில்லை. 

சமய சார்பற்ற எல்லோருக்கும் இலங்கையரென்ற தேசிய வாதம் வளர்ந்துகொண்டிருந்த அதேவேளையில் மதக் கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் ஒரு அரசியலும் உருவாகிக் கொண்டு வந்தது. இந்தச் சமயவாதிகளுக்கு 1873ம் ஆண்டு வண. மிக்கெற்றுவத்த குணானந்த அவர்களால் பாணந்துறையில் நடாத்தப்பட்ட கலந்துரையாடல் உந்துகோளாக அமைந் தது. அத்துடன் 1880ம் ஆண்டில் கேணல் ஹென்றி ஒல்கொட் அவர்களின் வருகையும், திரு. தர்மபாலா அவர்களின் மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களும் உத்வேகம் கொடுத்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தால் உத்வேகம் அடைத் திருந்தவர்களும், 1940 களில் சாந்திநிகேதனில் கல்விகற்றவர்களுமான வணக்கத்துக்குரிய வல்பொல ராகுல மற்றும் உடகென் தவல சரணங்கார போன்றோர் 1947ம் ஆண்டு இலங்கையில் நடாத்தப்பட்ட முதலாவது பொதுத்தேர்தல் காலத்தில் வித்தி யாலங்காரப் பிரிவேனாவுக்கு வந்து சேர்ந்தனர். 

1950ம் ஆண்டு டிசம்பர் மாத ஆரம்பக் காலத்தில் தன்னைச் சிந்தித்த புத்த பிக்குகளின் தூதுக்குழுக்களிடம் அரசாங்கம் சமய சம்பந்தமான விடயங்களில் தலையிடாதென திரு. டீ. எஸ். சேனனாயக்கா கூறியுள்ளார். பௌத்த சாசன ஆணைக்குழு வொன்றை அமைக்கும்படியும், புத்த சமயத்துக்கு அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அகில இலங்கை பௌத்த காங்கிரஸில் இது நடந்த அடுத்தவருடமே அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுத்தது. இந்த இரு கோரிக்கையும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த மூத்த நிருவாக சேவை அதிகாரியான திரு. என். கியூ. டயஸ் அவர்களும், வண. கென்பிற்றிகெதற ஞான சீக அவர்களும் கிராமங்கள் தோறும் பௌத்த சாசன சபைகளை உருவாக்கி பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய விடயங் களான புத்த சமயத்தவர்களால் நடாத்தப்படும் பாடசாலைகளின் நிலை போன்ற விடயங்களை இவை மூலம் எழுப்பிவந்தனர். அத்துடன் மருத்துவமனைகளில் கடமையாற்றி வந்த கத்தோலிக்கக் கன்னியாஸ்திரிகளுக்கு எதிராகவும், அரச மொழி சம்பந்தமாகவும் அரசாங்கத்துக்கெதிராகப் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்த னர். அத்துடன் திரு. எல். எச். மேத்தானந்தா அவர்களால் உரு வாக்கப்பட்ட தேர்தல் தொகுதி வாரியான அமைப்புக்களான சங்க சபைகளின் ஒத்துழைப்புடன் 1956 ம் ஆண்டு எக்சத்பிக்கு பெரமுன என்ற முன்னணியை அவர்கள் உருவாக்கினார்கள். 

புத்தசமய முற்போக்காளர்களின் அரசியல் வேட்கைகளை நிறைவேற்றத் திரு. எஸ். டபிள்யூ. ஆர் டி. பண்டாரநாயக்கா எண்ணியிருந்தாராயினும் 1956 ம் ஆண்டில் எக்சத் பிக்கு பெர முனவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள அவர் சம்மதித் தார். மகாஜன எக்சத் பெரமுன அரசாங்கம் பதவியிலிருந்த வேளையில் எல்லோருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற பண்டாரநாயக்காவின் நோக்கம் அக்கட்சிக்குள் இருந்த மத சார்புடைய வலதுசாரி அணி ஒன்றினால் முறியடிக்கப்பட் டது. இந்த நெருக்கடி வேளையில் திரு. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார். நெருக்கடி மிக்க அரசியல் 

1956 ம் ஆண்டுக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளும் நாட்டின் உறுதிப்பாட்டைச் சீர் குலைப்பனவாக இருப்பதாக முற்போக்கு அரசியலாளர்கள் கருதினர். 1960 ம் ஆண்டு திருமதி. சிறிமாவோ பண்டார நாயக்கா பதவி ஏற்றதன் பின்பே இந்த நிலை தீவிரம டைந்த தாகவும் அவர்கள் கருதினர். சமூகங்களுக்கிடையே அரசகரும் மொழிக்கொள்கையின் காரணமாக உருவாக்கப்பட்ட வேறுபாடு களும், 1956 ம், 1958 ம் ஆண்டுகளில் சிறுபான்மையினரான தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல் களும், 1961 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை உபயோகப்படுத்தியதும், புத்தபிக்குகளின் தீவிரவாத அரசியல் பங்களிப்பும், சமய சார்புடைய பாடசாலைகளை அரசு எடுத்த தும், தங்கள் தீய நோக்கங்களை நிறைவேற்றப் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு சட்டம், ஒழுங்கு ஆகியவற்றைச் சீர்குலைக்க இடம் கொடுத்ததும் தொழிற்சங்கங்களுக்கிடையே ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவைகளால் நடாத்தப்பட்ட வேலை நிறுத்தங்களும், தொழிற்சங்கங்களின் நடவடிக்கை மூலம் மார்க்சீச வாதிகள் அரசாங்கத்தைக் கைப்பற்றி விடுவார்களென எழுந்த அச்சமும், இடது சாரிக்கட்சிகளுடன் அன்றைய அரசாங்கம் கூட்டுச் சேர்ந் ததும், தேசியமயமாக்கக் காரணமாகத் தனியார் துறைக்கு எழுந்த பாதுகாப்பின்மையும், நெருக்கடி காலச் சட்டத்தை கால வரையின்றி நீடித்ததன் காரணமாக ஜனநாயகத்துக்கு விடுக்கப் பட்ட அச்சுறுத்தலும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள இராணுவத்தைப் பயன்படுத்தியதும், பத்திரிகைகளை தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதும், திரு. பீலிக்ஸ் டயஸ் பண் டாரநாயக்கா அவர்களின் எதேச்சாதிகாரப் போக்கும் ஆகிய இவைகளே அரசாங்கத்தைக்கைப்பற்ற சதிப்புரட்சியில் ஈடுபட்ட வர்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. 

அரசாங்கம் கடைப்பிடித்து வந்த தவறான கொள்கை களால் ஏற்படவிருக்கும் பயங்கரமான விளைவுகளை இராணு வத்தினரும், காவல்துறை பிரிவினரும் நன்கறிந்திருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களைச் சிங்களக் குண்டர்களிடமிருந்து பாதுகாக்க மகாதேசாதிபதி அவர்கள் இராணுவத்தை 1958 ம் ஆண்டு அழைக்க வேண்டி யிருந்தது. திரு. தார்சி வித்தாச்சி தான் எழுதிய 'எமர்சென்சி 58" என்ற நூலில் (நெருக்கடி காலச்சட்டம் 58) மேஜர் டெறிக் தசேரம் இரத்மலானையிலுள்ள இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தொழிலாளர்களை எப்படிச் சமாளிக்க வேண்டியிருந் தது என்றும், நீர்ப்பாசன இலாகாத் தொழிலாளர் களையும், பதவிய குடியேற்ற வாசிகளையும் மேஜர் எம். ஓ. குணரத்தினா எப்படி அடித்து விரட்டினார். என்றும் எழுதியிருந்தார். இச் சக்திப்புரட்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பதினைந்து நிமிடங்கள் பிந்திவந்தமையால், பாணந்துறையில் உயிருடன் எரிக்கப் பட்ட இரண்டு இந்துமதக்குருக்கள்களை அவரால் காப்பாற்ற 

முடியவில்லை. இப்படியான சம்பவங்கள் தொடருவதை விரை விலே நிறுத்தவேண்டுமென இச்சம்பவம் அவருக்கு உணர்த்தியது. 

இப்படியான குழப்பக்காரக் கும்பல்களை வழிநடத்திய புத்த பிக்குகள் விடயத்தில் கவனமாக இருக்கவேண்டுமென இவர்களுக்கு 1956-ம் ஆண்டு அறிவுறுத்தப்பட்டதாக இந்தச்சதியில் சம்பந்தப்பட்ட இன்னொருவர் கூறினார். அரசாங்கம் மதச்சார்பற்ற ஒன்றாக இருக்கவேண்டும் என்பதையே அவர் கொள்கையாகக் கொண்டிருந்தார். 

மதத் தலைவர்களால் வழிநடத்தப்படும் அரசாங்கம் ஒன் றின் பகுதியாக தாங்கள் மாறி வருவதாகக் காவல்படை மற்றும் இராணுவத்திலுள்ள அதிகாரிகள் அஞ்சினர். துணைக் காவல் துறை மா அதிபரான திரு. ஜங்கின் திசநாயக்காவை பார்த்த பண்டா “ஜங்கின் ஜல்கின் நீ மட்டும் புத்தசமயத்தைச் சார்ந்த ஒருவராக இருந்திருந்தால் உன்னை காவல்துறை மா அதிபராக ஆக்கியிருக்கலாம் எனக் கூறினார்'' கொயகம புத்த சமயத்தவர் ஒருவர் காவல்துறை மா அதிபராக இருப்பதையே மக்கள் விரும் புகிறார்கள் எனவும் திரு. பண்டாரநாயக்கா அவருக்குக் கூறி யிருந்தார். 

சகிக்க முடியாத ஒரு காலகட்டத்துக்கு தாங்கள் வந்துள் ளதை அதிகாரிகள் 1961ல் உணர்ந்தனர் மதசார்பான பாட சாலை களை அரசாங்கம் பொறுப்பேற்றதை றோமன் கத்தோலிக்கத் தேவாலயங்கள் எதிர்த்தபோது அதையடக்க முதன் முதலாக இராணுவம் பயன்படுத்தப்பட்டது. சிங்கள மொழியை, அரசகரும மொழியாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழரசுக்கட்சியால் வடக்கில் நடாத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது இதன் பின் இராணுவம் பயன்படுத்தப்பட்டது.

வடக்குக்கு இந்தச் சத்தியாக்கிரகத்தின் போது கடமைக்கு அனுப்பப்பட்டவரும் இந்தச்சதியில் சம்பந்தப்பட்டவருமான ஒரு அதிகாரி சத்தியாக்கிரகம் அமைதியாக நடந்து கொண்டிருந்த தைக் கண்டதும், அரசாங்கம் வன்முறையைக் கையாள்வதைத் தவிர்க்க வேண்டுமென்று ஆலோசனை கூறினார். ஆனால் மந்திரிசபைக் கூட்டமொன்றில் இவர் கலந்து கொண்டபோது, தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என அதில் பங்குபற்றியவர்கள் வலியுறுத்தியதைக் கண்டார். அவர்கள் வலி யுறுத்தியதற்கு அமைய 3 வது பீரங்கிப்படை அணியை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப அரசாங்கம் பணித்தது. இந்தப்படை அணியின் தளபதி கேணல் ஆபிரகாமும், அவரது உதவியாளர் மேஜர் லோயவாவும் இந்தப்படையணியுடன் கோட்டைப் புகையிரத நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ளவிருந்த வேளையில் தமிழர்கள் என்ற காரணத்தால் இவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இவர்களுக்குப் பதிலாக காலாட்படை அணியின் தளபதியும், தீவிர சிங்கள பௌத்தரு மான கேணல் றிச்சாட் உடுகம் அனுப்பப்பட்டார். - 

இராணுவத்தினரிடையே பௌத்த சித்தாந்தத்தை உருவாக்குபவர் எனக்கருதப்பட்ட கேணல் உடுகம் ஒரு பௌத்த சங் கத்தை இராணுவத்தில் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார். இவருடைய சங்கத்தில் சேர விரும்பாத அதிகாரிகள் இவரை வெறுத்தனர். இவருடைய இனத்துவேசப் போக்கைக் கண்ட அவர்கள் இவரை இழிசொற்களால் பேசி வந்தனர். அதே நேரத்தில் இராணுவத் தளபதி பதவிக்கு இவர் உருவாக்கப்பட்டு வந்ததால் அவர்கள் அச்சமுமுற்றிருந்தனர் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளைச் சரிவரச் செய்து முடிக் கவும், நடவடிக்கை எடுக்கப்பின் நிற்கும் அதிகாரிகளை கண்டிக்கவும் பாதுகாப்பு அமைச்சின் அன்றைய நிரந்தரச் செயலாளர் என். கியூ. டயஸ் இவர்களுடன் சென்றது மட்டுமல்ல பல வேளை களில் இவரே கட்டளைகளைப் பிறப்பித்தார். 

சிங்கள பௌத்த எழுச்சிக்குத் தலைமை தாங்குபவர்களில் ஒருவராக திரு. பீலிக்சுடயசு இருந்தார். திரு. பீலிக்சுடயசு அவர்களுடைய சர்வாதிகாரப் போக்கின் காரணமாகவே தாங்கள் அரசாங்கத்தைக் கைப்பற்ற இருந்ததாக இவர்கள் நீதி விசாரணையின் போது கூறியுள்ளார்கள். படையணிகளைத் தான் நினைத்தது போல் நகர்த்துமளவுக்கு அவர் இராணுவ விடயங் களில் தலையிட்டிருந்தார். 

திரு. பீலிக்சுடயசு பண்டாரநாயக்கா மீது இராணுவ அதி காரிகள் கடும் வெறுப்புற்றிருந்ததாக இந்தச் சதியைப் பற்றிய தனது ஆய்வில் திரு. டோனால்ட் கொறோவிற்ஸ் எழுதியுள் ளார். இவரைப் போல் ஒருவரைத்தாங்கள் முன்னெப்பொழுதும் சந்தித்திருக்கவில்லையென்றும், கொடூரமானவன், இழிவானவன், வீண் பெருமை கொண்டவன், வஞ்சம் தீர்ப்பவன், தற்புகழ்ச்சிக்காரன், இரக்கமற்றவன், நேர்மையற்றவன், பைத்தியக்காரன் என இவருடைய குணாதிசயத்தைப் பற்றி அதிகாரிகள் வர்ணித் துள்ளதர்கவும் அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். 

சதித்திட்டம் 

கள்ளக்குடியேற்றத்திற்கெதிராகவும் தமிழ் மக்களால் நடாத் தப்பட்ட சத்தியாக்கிரகத்துக்கு எதிராகவும் நடவடிக்கையை மேற்கொள்ள இராணுவத்தினரை அனுப்பிய பகுதியிலேயே சதிப் புரட்சிக்கான எண்ணம் உருவாகியது. மன்னாரில் அரச அதிகாரப் பதவி வகித்த காலத்தில் திரு டக்ளஸ் லியனகே அவர்கள் மட்டக் சளப்பு, திருகோணமலைப் பகுதிகளில் பீரங்கிப் படையணியைச் சேர்ந்த அதிகாரிகளுடனும், கவசப்படையணியைச் சேர்ந்த அதிகாரிகளுடனும், தொடர்பு கொண்டிருந்தும் 1962ம் ஆண்டு டிசெம்பர் மாதம் காவல்துறை பயிற்சிக்கலாசாலையைச் சேர்ந்த உதவி காவல் துறை அதிபர் திரு. வி. கே. ஆறு முகம் போன்ற அதிகாரிகளுக்கு நாடு எதிர் கொள்ள விருக்கும் அபாயம்பற்றி அவர் கூறிவந்துள்ளார். 

இராணுவத்தில் இச்சதித்திட்டம் பீரங்கிப்படைப் பிரிவில் உருவாகி பணிட புரை ஒழுங்கு கீழ்க்காணும் வகையில் சென்றது. 

கேணல் த சேரம் அவர்கள் கேணல் த மெல் அவர்களுக்கு வழங் கும்பணிப்புரை கேணல் ஆபிரகாம்ஸ் அவர்களுக்கு கேணல் த மெல் அவர்களால் வழங்கப்பட்டு அதன்பின் மற்றைய இராணுவ அதி காரிகளுக்கு கேணல் ஆபிரகாம்ஸ் அவர்களால் வழங்கப்பட்டது. கொழும்பு மாநகர காவல்துறைப் படைப்பிரிவு திரு. ஜங்கின் திசநாயக்கா தலைமையிலும், மாகாணங்களிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்குத் திரு சிட்னி சொயிசாவின் தலைமையிலும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. 

மேல் மட்டத்திலுள்ள சிங்களக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், அக்ஸ்பர்ட் பல்கலைக் கழக துடுப்பெடுத்தாட்ட விளையாட்டு வீரரும், வழக்கறிஞரும், புத்தசமயத்தவருமான திரு டெரிக் த சேரம் அவர்கள் இனபேதம் அற்றவராக இருந்ததுடன் இராணுவத்தில் உயர்வாக மதிக்கப்பட்ட ஒருவராயும் இருந்ததுடன் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். கைதிகளை சிறை வைக்கவிருக்கும் காலிமுகத்திடலுக்கு இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் டீ எபரி அபேசிங்க போன்ற முக் கிய அதிகாரிகளை இவர் 1961ம் ஆண்டு ஜனவரிமாதம் அழைத்து வந்தார். அச்சதிசம்பந்தமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் பொறுப்புகள் பம்பலப்பிட்டியில் நடாத்தப்பட்ட கூட்டங்களில் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் ஒப்படைக்கப்பட்டன. 

திரு ஜங்கின் திசநாயக்கா காவல் துறை சேவையில் ஒரு மூத்த அதிகாரியாக இருந்தது மாத்திரமன்றி, அந்தச் சேவைக்கு உள்ளேயும் வெளியேயும் பெரிதும் மதிக்கப்பட்டிருந்தார். கொழுபிலுள்ள பல முக்கிய காவல்துறை அதிகாரிகள் இவர் மூலம் இந்தச்சதித் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். உதவிக் காவல்துறை அதிபர் கொலின் வன்றிசன் அவர்களுடன் குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரி டபிள்யூ. எல். ஜெபநேசன், எம். பி. டெடிகம, காவல்துறை அதிபர் சி. பி ஆன்ட். உதவிக் காவல்துறை அதிபர் செறி விஜேசிங்க, உதவிக் காவல்துறை அதிபர் ஜம்போ ஜய திலக, உதவி காவல் துறை அதிபர் பி. ஆர். செனவிரத்தினா ஆகியோர் 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ம் திகதி அரசி யல் வாதிகளைத் தடுத்து வைத்திருப்பது பற்றியும், காவல்துறை வானொலிக் கட்டுப்பாட்டு நிலையம், மற்றும் புதிய தலைமைச் செயலகம், நாரண்பிட்டியிலுள்ள வானொலி ஆய்வுகூடம் ஆகி யனவற்றைப் பாதுகாப்பது பற்றியும், அறிவுறுத்தப்பட்டனர். 

முன்னாள் உதவிக் காவல்துறை மா அதிபரான திரு சிட்னி த சொயிசா ஒரு சிலரைத் தவிர மற்ற முக்கியமான காவல்து எற உத்தியோகத்தர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். 25ம் திகதி இவர் மாகாணங்களிலுள்ள காவல்து உற நிலையங்களுக்குச் சென்று, மாத்தறை காவல்துறை அதிபர் டேவிட் தம்பையா, காவல் துறை அதிபர் புனோசியர், உதவிக் காவல்துறை அதிபர் ஓற் கழுத்துறைக் காவல்துறை பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த உதவிக் காவல்துறை அதியா திரு. வீ கே. ஆறுமுகம் ஆகியோரைச் சந்தித்தார், 

பிரதம மந்திரி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவும். பாராளுமன்றக்காரியதரிசி திரு. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக் காவும் நாட்டில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கு வழி வகுக்கிறார்கள் எனக் கருதியமையாலேயே இவர்களுக்கு எதிரா கச் சதிப்புரட்சியை நடாத்த திட்டமிடப்பட்டது. திரு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க வெளிப்படையாகவே சிறு அளவு ஆகுதல் சர்வாதிகாரம் இருக்கவேண்டுமெனக் கூறியுள்ளார். நாட்டில் அன்று நிலவிய நெருக்கடிகளின் காரணமாக இடதுசாரியினர் சர்வாதிகார ஆட்சியொன்றை அமைக்கும் சாத்தியக் கூறுகள் இருந்தமையால் இடதுசாரிகளை மையமாக வைத்தும் சதிப்புரட்சியாளர்கள் புரட்சியை நடாத்தத் திட்டமிட்டனர். இதன் காரணமாகவே திருவாளர்கள் என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா , பீற்றர் கெனமன், எம். ஜீ. மெண்டிஸ், எஸ். பி. அமரசிங்கம் போன்ற இடதுசாரிகளையும் கைது செய்யக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 

குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் பிரிவுக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தபோது அவர்கள் குற்றவாளிகள் அல்லர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் இந்த வழக்கும் முடிவுற்றது. 

முப்பது வருடங்களுக்கு முன்னர் என்ன சூழ்நிலையில் இந்தச் சதிப்புரட்சியை நடாத்தத் திட்டமிடப்பட்டதோ அதே நெருக்கடியான சூழ்நிலை தற்பொழுதும் நிலவுவதுடன், அடுத்த சந்ததியினரும் இதனால் பாதிக்கப்படவிருக்கின்றனர். 

இந்த நாட்டில் பல சமூகங்களைக் கொண்ட மதச்சார்பற்ற அரசாங்கமா? அல்லது இனரீதியான மதச்சார்புள்ள ஆரசாங் கமா? அமையவேண்டுமென்பதே முக்கியமானதாகவிருக்கின்றது. இராணுவத்தின் இயல்பும், அமைப்பும் அரசாங்க விவகாரங்ககளில் அவர்கள் வகிக்கும் பங்கும், அரசாங்கத்துக்கு எதிராகவுள்ள சட்டரீதியான தீவிரவாத அணியினரை இவர்கள் கையாளும்முறையும் இரண்டாவது பிரிவினையாகவிருக்கின்றது. 

ஒப்பரேசன் கோல்டுவாச்டு' என்ற சதிப்புரட்சியில் ஈடுபட்டதன் மூலம் தங்களுடைய உயிர்களுக்கும், பதவிகளுக்கும் ஆபத்தைத் தேடிக்கொண்டவர்களின் தற்கொடை உணர்வை எவரும் எக்காலத்திலும் கணக்கில் எடுக்கவில்லை. இருப்பினும் அவர்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதுப்பொலிவு பெற்று உன்னத நிலைக்கு உயர்ந்துள்ளனர்.
  • C. C. Dissanayake - Deputy Inspector General of Police 
  • Stanley Senanayake - Superintendent of police Colombo
  • Major Weerasena Rajapakse - Ceylon Armoured Corp
  • Major Victor Joseph – CAC
  • Major Wilton White  - Ceylon Artillery
  • Colin Vandendriesan - Assistant Superintendent of  Police
  • Colonel F.C, de Saram - Deputy Commandant Ceylon Volunteer Force.
  • Colonel Basil Jesudason - Commander Ceylon Signa Corp (Volunteers)
  • Bede Jobopulle - ASP to police Head quarters
  • Rear Adm Royce de mel - Former Navy Commander
  • Colonel Maurice de Mel - Chief of Staff of the Army
  • Colonel W. S. Abraham - Commander 3rd Field Artillery Regiment.
  • Major Basil Loyala -CA
  • Lt. Col. Noel Mathysz - Commander Ceylon Electrical and Mechanical Engineers
  • Colonel Sepala Attygalle - Commander Ceylon Armoured Corp
  • Lt, ColonelD.F.T.Abeysinghe - Ceylon Army ordinance Corp

"தேர்ந்த கட்டுரைகள்" - சஞ்சிகையில் (02.04.1992) வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை இது

ஜோர்ஜ் ஃப்ளாய்டுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கிறீம் விளம்பரதாரிகள் - என்.சரவணன்


ஜோர்ஜ்  ஃபிலொய்ட்  இறந்த பிறகு, பொலிவுட் நடிக நடிகையர்கள் இனவெறிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இதில் உள்ள பெரும் முரண்நகை என்னவென்றால் இவர்களில் பலர் பல்தேசியக் கம்பனிகளால் தயாரிக்கப்படும் தோல் நிறத்தை வெளிராக ஆக்குவதற்கான கிறீம்களை பயன்படுத்தும்படி விளம்பரங்கள் கொடுத்து வருபவர்கள் என்பது தான்.

இவர்கள் உண்மையிலேயே ஜோர்ஜ்  ஃபிலொய்ட் கொல்லப்பட்டதன் பின்னால் நிறவாதம் இருப்பதாகக் கருதுவதாயின் நிறம் ஒரு பொருட்டல்ல என்கிற தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருந்திருக்கவேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஜோர்ஜ்  ஃபிலொய்ட் மீதான அனுதாபத்தை அல்லது எதிர்ப்பை ஒரு பிரக்ஞை கொண்ட ஒரு வெளிப்பாடாக நாம் கருதியிருக்க முடியும். அவர்களுக்கு அத்தகைய எதிர்ப்பை வெளியிடுவதற்கு தார்மீகம் இருப்பதாகவும் நாம் கருதிக்கொள்ள முடியும். 

மாறாக பெண்கள் தமது இயற்கையான நிறத்தை மாற்றி வெளிராக காட்டுவதன் மூலம் தான் அழகாகவும், மற்றவர்களை கவரச் செய்வதாகவும் அர்த்தம் பொதிந்த விளம்பரங்கள் இந்த சமூகத்தில் எதைப் போதித்து வந்துள்ளன? வெளிர் நிறத்தின் மீதான ஆர்வத்தையும், ஈர்ப்பையும், அக்கறையையும் தூண்டுவதன் மூலம் வெளிர் அல்லாத நிறத்தை ஒரு வகையில் அழகற்ற, கவர்ச்சியற்ற ஒன்றாகத் தான் நிறுவிவிட்டுள்ளார்கள். 

நடிப்பு அவர்களின் தொழில் ஆகவே பணத்துக்காகத் தான் அதைச் செய்தார்கள் என்று இவர்களின் விளம்பரத்தை நாம் இலகுவாக நியாயப்படுத்திவிட முடியாது. இதகைகைய விளம்பரங்களை ஒருவித போதனையாகவும், பரிந்துரையாகவும் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் வேறு பெயரில் நடிக்கவும் இல்லை அவர்கள் நேரடியாக தமது சொந்த அடையாளத்துடன் தான் இத்தைகைய பரிந்துரைகளை செய்கிறார்கள். அந்த விளம்பரங்களுக்காக கொடுக்கப்படும் கொடுப்பனவு வெறும் நடிப்புக்காக மட்டுமல்ல, அவர்களின் அடையாளத்துக்கும் சேர்த்து தான். மேலும் பெரும்பாலான இத்தகைய அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களுடன், அவற்றுக்கான தூதுவர்களாகவும் (Brand ambassador) நியமிக்கப்பட்டுவிடுகிறார்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.


சோனம் கப்பூர், தீபிகா படுகோனே, திஷா பட்டானி போன்ற பல பொலிவூட் நடிகைகள் இத்தகைய கிறீம்களுக்கு விளம்பரம் செய்பவர்கள் தான். அனைவரும் சருமத்தை வெளிராக ஆக்குவது பற்றிய இந்திய தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது பெயார் எண்ட் லவ்லி என்கிற கிறீம். நடிகை திஷா பட்டானி கடந்த வாரம் “எல்லா நிறங்களும் அழகே” என்று செய்த கிராஃபிக் ஒன்றை ட்வீட் செய்தபோது, ட்விட்டர் பயனர்கள் திஷா பட்டானி பொன்ட் (Pond) கிறீமை விளம்பரப்படுத்தும் படங்களை பதிலுக்கு ட்வீட் செய்தனர்.

ஜோர்ஜ்  ஃபிலொய்ட்டுக்கு ஆதரவு தெரிவித்து பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ஒருபுறம் கருத்து வெளியிட்டிருக்கிறார். மறுபுறம் உலகப் பிரசித்தி பெற்ற கார்னர் (Garnier) என்கிற கிறீமுக்கு விளம்பரம் செய்வதுடன் அதன் தூதுவராகவும் இயங்கிவருபவர். ஆனால் பிரியங்கா சோப்ரா கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இராணுவத்துக்கும், காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்கும் அரசுக்கும் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார்.

அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சிகள் சர்வதேச ஆதரவு அந்தஸ்த்தை பெறுகிற போது அதில் தமக்கான பிரமுகர்த்தன விளம்பரம் தேடுகின்ற பாசாங்கு மிக்க அணுகுமுறையாகவே இத்தைகைய போக்குகளை விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் நாளாந்தம் தம் கவனத்துக்கு எட்டக்கூடியவகையில் அருகாமையிலேயே நிகழும் பல்வேறு அடக்குறைகள், நாசச் செயல்கள் என்பவற்றுக்கு இதுபோன்ற எதிர்ப்பை ஏன் தெரிவிப்பதில்லை. இவற்றை எதிர்த்து இயங்குபவர்களுக்கு பகிரங்கமாக ஏன் ஆதரவு தெரிவிப்பதில்லை. அப்பிரச்சினைகளுக்கு சர்வதேச கவன ஈர்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்பார்களா இவர்கள் என்கிற கேள்வி நமக்கு எழாமல் எப்படி இருக்கும்?

நடிகை தமன்னா ஜோர்ஜ்  ஃபிலொய்ட்  கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது முகத்திலும் கழுத்திலும் கருப்பை பூசிக்கொண்டு ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். தோல் நிறமூட்டும் கிறீம்களின் விளம்பரத்தை செய்துகொண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று தமன்னாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதை பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சருமத்தை வெளிராக்கும் கிறீம்களுக்கான விளம்பரங்களை பல நடிகைகளுக்கும் நடிகர்களும் செய்யவே செய்கிறார்கள். அது அவர்களுக்கு பணத்தை அள்ளித்தரும் தொழில் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்கள் நிறவாதத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் தார்மீகத்தை இழந்தவர்கள். அவர்களின் இரட்டை முகம் குறித்து நாம் இங்கு விமர்சிப்பது; இப்படியானவர்களை இரட்டை முகமற்ற சமூக பிரக்ஞையுடன் அணுகுவதற்கு உந்துவதற்குத் தான்.

பிரபல முன்னணி இந்தி நடிகர் ஷாருக்கான் கூட Fair and Handsome கிறீமுக்கு விளம்பரம் செய்பவர். அதன் தூதுவரும் கூட.

கருப்பு நிறம் பற்றி நம் சமூகத்தில் நிலவுகிற ஐதீகங்கள் வெறுமனே அழகோடு மட்டும் மட்டுப்படவில்லை. அது அபச குணத்தோடும் தான் தொடர்புபடுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் இதன் வீரியம் அதிகமாகவே தென்படுகிறது.

சமூக ஒடுக்குமுறையினதும், பாரபட்சத்தினதும் அங்கமாக நிறவாதம் குடிகொண்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் சமூகத்தில் கருப்பு x வெள்ளை என்கிற பாரபட்ச பார்வை பற்றிய கருத்துருவையும், நம்பிக்கைகளையும் இல்லாதொழிப்பதே இன்றைய தேவை. மாறாக வெள்ளை நிறத்தை உயர்ந்ததாக போற்ற எடுக்கப்படும் சகல முயற்சிகளும் சமூகத்தால் புறக்கணிக்கப்படவேண்டியதே.

நன்றி - தினகரன் (21.06.2020)

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates