Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையக வேலைநிறுத்தப் போராட்டம்! துயர் கதை முடியவில்லை!

"..பிற்போக்குக் காரர்களால்பின்தள்ளப்பட்டீர்கள்முற்போக்குக்காரர் நாம்முறியடிப்போம் இன்னல் என்றார்எப்போக்குக்காரர் வந்தும்இன்னல் களையவில்லை-துன்பம் தொலையவில்லைதுயர்கதையோ முடியவில்லை...."
"...எத்தனையோ பேர்கள் வந்தார்கள்எதையெதையோ சொன்னார்கள்.மெத்தையிலே உன்னை வைத்துமேன்மையுறச் செய்வோமென்றுஅத்தனையும் நம்பியுள்ளம்ஆசையுடன் தொலையவில்லை..."
"...மண்ணதிர விண்ணதிர வாய்ச்சிலம்பமாடிமாண்டொழிந்த பழமையினை இன்னுமிங்குக் கூறிகண்ணெதிரே கொடுமை கண்டும்கற்சிலையாய் மாறிகாரேறிப் பவணிவரும் கனவான்கள் கூட்டம்உன்னுதிரம் உறிஞ்சியுடல் உப்புகின்றதை நீஓர் நிமிடம் சிந்தித்தால் உன் வாழ்வு மலரும்புன்னதனில் வேல் பாய்ச்சப் பொறுத்திருப்பதோடா?பொங்கியொழு சிங்கமென எந்தன் மலைத்தோழா!..."-குறிஞ்சித் தென்னவன் கவிதை ("ஒரு கனவு நினைவாகிறது"இலிருந்து)
மலையகத் தொழிலாளர்களின் பொங்கியெழுகின்ற போராட்டங்களின் போதெல்லாம், கூடச் சேர்ந்து தலைமைக் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு சென்று, இடையில் பிரேக் போட்டு நிறுத்தி நகர விடாது செய்கின்ற பாத்திரத்தை காலாகாலமாக மலையக தொழிற் சங்கங்கள் செய்து வந்திருக்கின்றன. அப்படியான தொழிற்சங்கங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் அதன் தலைவர் தொண்டாமானுக்கும் நிறையவே பங்குண்டு.ஏப். 22ம் திகதியிலிருந்து ஏப்.27ம் திகதி வரை நடந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தின் போதும் இதுவே நடந்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இறுதிவரை தோட்டக் கம்பனிகள் உடன்படாத போதும் வேலை நிறுத்தத்தை அநாயாசமாக கைவிட்டன தொழிற்சங்கங்கள். உண்மையிலேயே 'செத்தவனுக்கு தான் சுடுகாடு தெரியும்' என்பது போல இத்தனை காலமும் துன்பப்பட்ட தொழிலாளர்களுக்கே இப்போராட்டத்தின் வலிமை தெரியும்.வேலை நிறுத்தத்தின் இறுதி நாளான்று பல தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடரும்படி தொழிற் சங்கங்களை நோக்கிப் படையெடுத்த போதும் அவை நழுவிச் சென்றன. இறுதியில் போராட்டம் தெழிலாளர்களின் பலத்தைக் காட்ட மட்டுமே பயன்பட்டதேயொழிய தமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியவில்லை. உண்மையில் இதன் மூலம் வெற்றி பெற்றது ஆளும் வர்க்கமும் கம்பனி முதலாளிமார்களுமே என்பது தான் உண்மை. இப்போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தே மீள்பார்வையொன்றை செலுத்துவது இங்கு பொருத்தமானது.போராட்டத்தின் பின்னணி:இலங்கையில் ஏனைய துறைகளை விட தோட்டத் தொழிற்துறையைச் சார்ந்த தொழிலாளர்களே கடந்த பல வருடங்களாக குறைந்த சம்பளத்தைப் பெற்று வந்திருக்கிறார்கள்.அதற்காகப் போராடியும் வந்திருக்கிறார்கள். 1984 இலும் இதற்காகவே 12நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக சம்பள உயர்வு குறித்தும் சம சம்பள உயர்வு குறித்தும், இவ்வேலை நிறுத்தப் போராட்டம் நடந்திருக்கின்றது. அன்று ஆட்சியிலிருந்த ஜே.ஆர். அரசாங்கம் "கிழமைக்கு ஆறு நாள் வேலையையும், தோட்டத்துறை ஆண் தொழிலாளர்களுக்கும், பெண் தொழிலாளர்களுக்குமான சம சம்பளமாக 23.74 சதத்தையும்" வழங்குவதாக ஒப்புக் கொண்டது.அதன் பின்னர் அவ்வப்போது தொழிலாளர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காகவும் சம்பள உயர்வு குறித்தும் போராட்டங்கள் நடத்தி, ஒரு சில உரிமைகளை மாத்திரம் பெற்;றுக் கொண்டார்கள்.1987 ஆம் ஆண்டின் போதும் ஜே.வி.பி. யின் தொழிற் சங்கம்: தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மாதச் சம்பளமாக ஆக்க வேண்டுமென்றும்,அது 2500 ரூபாவாக இருக்க வேண்டுமென்றும், அப்போது கோரிக்கை விடுத்துமிருந்தது.1992ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் போது அரசாங்க ஊழியர்களுக்கு 20 வீதம் சம்பள உயர்வு வழங்கிய போது தோட்டக் தொழிலாளர்களுக்கும் 20ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி முதற் கட்டமாக ஜனவரியிலிருந்து 12ரூபா வழங்கப்பட்டதுடன், 1993 ஜீலையிலிருந்து மிகுதி எட்டு ரூபாவையும் சேர்த்து கொடுப்பதாக அன்றைய பிரேமதாச அரசாங்கம் ஒப்புக் கொண்டது. எனினும் இன்று வரை இந்த எட்டு ரூபா வழங்கப்படவில்லை. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தோட்டத்துறை தனியார் மயமாக்கப்பட்டதே 1992 {லையில் அரச கம்பனிகளில் பல தனியார் மயமாக்கப்பட்டு அரசுக்கும் கம்பனி துரைமார்களுக்குமிடையில் ஏற்பட்ட சமரச உடன்பாடுகளின் விளைவே தொழிலாளர்களின் வயிற்றில் ஏற்பட்ட இந்த அடி. அன்றைய அந்த 8 ரூபாவுக்கு போராடியவர்களே இன்றும் அதைத் தொடர்கிறார்கள். இன்று 1996ம் ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. வருடாந்தம் சகல துறையினருக்கும் வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுப்புள்ளி மாதாமாதம் உயர்ந்து கொண்டுதான் சென்றிருக்கின்றன. ஆனால் இவ்வப்பாவி தொழிலாளர்கள் 1993ஆம் ஆண்டின் போது கேட்டிருந்த 8 ரூபாவையே இன்றும் கேட்கின்றனர். 1994இன் சம்பள உயர்வையோ 1995ன் சம்பள உயர்வையோ 1996இனதோ அல்லது நியாயமாக அத்தனை வருடங்களினதோ சம்பள உயர்வை கேட்கவில்லை அவர்கள். ஆனால் அந்த 8 ரூபாவைக் கூட வழங்க மறுத்து விட்டன கம்பனிகள். 8 ரூபா என்ன 3 ரூபாவைக்கூட தற மறுத்துவிட்ட நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தையும் தொழிற்சங்கங்கள் இடைநிறுத்தி விட்டன. மலையக மக்கள் முன்னணியோ இன்னும் ஒருபடி மேலே போய் "அரசு, ரூபா 2.76சதம் தருவதாக ஒத்துக் கொண்டு விட்டது. இன்னும் என்ன?" என்று சிங்கள் பேரினவாத அரசு கேள்வி எழுப்புவது போல் கேட்டுள்ளது. ஆரம்பித்தது எப்படி?தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு உந்து சக்தியாக இருந்தது மார்ச் மாதம் ப+ண்டுலோயா சீன், மடகும்புர, வட்டகொட ஆகிய தோட்டங்களில் தொழிலாளர் மேற்கொண்ட போராட்டமே. அவ்வேலை நிறுத்தம் சில தொழிற் சங்கங்களினால் காட்டிக்கொடுப்பிற்கு உள்ளாக்கப்பட்ட தோட்டக் கமிட்டி தலைவர்கள் பலர் முன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதி கோரி கிளர்ந்தெழுந்த இத் தொழிலாளர்களின் பிரச்சினையைத் தொடர்ந்தே ஏனைய தொழிலாளர்களும் தன்னிச்சையாகவே வேலை நிறுத்தத்தில் ஈடுபட காரணமாகியது. இதைத் தொடர்ந்தே மார்ச் மாதம் 18 திகதி இ.தொ.கா. உத்தியோகத்தர் சபை கூடி ஏப் 22-27 வரை அடையாள வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தது. பிரதானமாக,ஃ 8ரூபா சம்பள உயர்வுஃ வருடத்தில் 300 நாள் வேலைஆகிய கோரிக்கைகளை முன் வைத்தது. அதனைத் தொடர்ந்து மார்ச் 26ம் திகதியன்று "தொழிற்சங்கங்களின் கூட்டான "பெருந்தோட்டத் தொழிலாளர் கூட்டுக் கமிட்டி" கூடி இ.தொ.கா. முன்வைத்த அதே கோரிக்கைகளையை முன்வைத்ததுடன் அவ்விரு கோரிக்கைகளையோ அல்லது தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளமாக 2000 ரூபாவை வழங்கும் படியும் கோரியது. ஒன்றிணைந்த போராட்டமாக நடத்த வேண்டும் எனக்கூறி இ.தொ.கா. அறிவித்த அதே திகதியில் தாமும் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தது. கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக காலவரையறையற்ற வேலை நிறுத்தம் என அறிவித்தாலும் முதலில் பின்னர் அதிலிருந்து பின்வாங்கி இ.தொ.கா. போன்றே '27ம் திகதி வரை' அடையாள வேலைநிறுத்தம் என அறிவித்தது.இதற்கிடையில் போராட்டத்துக்காக ஓரணியில் திரள முன்வராத இ.தொ.கா. கூட்டுக் கமிட்டி தாம் அறிவித்திருந்த 22ம் திகதியை தேர்ந்தெடுத்தற்காக கண்டித்தது. வேலைநிறுத்தத்தின் வெற்றி தமக்கு மட்டுமே சொந்தமானது என உரிமை கோருவதற்காகவே இதிலும் தனது சந்தர்ப்பவாதத்தைக் காட்டியது. இவ்வேலை நிறுத்த அறிவித்தலைத் தொடர்ந்து அரசாங்கம் தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆசைகளைக் காட்டி விலைபேசியது. ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சில தொழிற் சங்கங்கள் அரசிடம் சரணடைந்தன. காட்டிக் கொடுத்தன.அதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா மக்கள் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சூரியப்பெரும இப்படித் தெரிவித்தார்."எமது ஜனாதிபதி சிறுபான்மை இனங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசியல் தீர்வொன்றை ஏற்; படுத்த முயற்சி செய்து வரும் இவ்வேளை வேலை நிறுத்தம் செய்வது முறையல்ல.... இதனால் இந்த அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் இதில் பங்குபற்ற மாட்டோம்"மலையக மக்கள் முன்னனியோ "நாங்கள் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடச் சொல்லவுமில்லை. ஈடுபட வேண்டாமென்றும் சொல்லவுமில்லை". என்று நழுவி;யது. அக் கூற்றை மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரன் கூறியிருந்த அதே நேரம் அதன் செயலாளர் காதர் தொழிலாளர்களிடமிருந்து அறிக்கைக்கு எதிராக கேள்வி எழுப்பப்பட்டதனைத் தொடர்ந்து" தொழிலாளர் அல்லாத ஏனையோரையும் பங்குகொள்ளச் செய்து அதனை ஒரு அரசியல் போராட்டமாகவே மாற்றப் போகின்றோம். 22ம் திகதி நடக்கவிருந்த வேலைநிறுத்தத்தில் முழு வீச்சுடனும் ம.ம.மு. ஈடுபடும்.. அரசியல் கேரிக்கைகளை முன்வைத்து முழு மலையக மக்களையும் அணிதிரட்டி அரசியல் போராட்டமாக மலையகமெங்கும் நடத்தும்" என்று அறிக்கை விடுத்தார்.ஆனால், மீண்டும் சந்திரசேகரன் "லங்காதீப பத்திரிகைக்கு போடியளித்த போது ஏற்கெனவே தாம் சொன்னதைத் திருப்பிச் சொன்னதைத் திருப்பிச் சொன்னதன் மூலம் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு வெளியில் தாம் இருக்கப் போவதை உறுதியாக நிரூபித்தார். மலையக மக்கள் முன்னணி துரோகமிழைக்கப் போகிறது என்ற அச்சம் பரவலாகப் பரவியது.அப்போதுதான் சில தொழிற் சங்கங்கள் அத்தியட்சகர் பதவிக்கு மலையக மக்கள் முன்னணி, அமைச்சர் பதவிக்கு விலை போய் விட்டதாக கதைகள் பரவின. அவர்கள் விட்ட சுத்துமாத்து கதைகள் உண்மையிலேயே விi போய்விட்டனவோ என சிந்திக்கச் செய்தது.இவ்வேலை நிறுத்தத்திற்கு இடது சாரிக் கட்சிகளான கம்ய+னிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, நவ சமசமாஜக்கட்சி என்பவை ஆதரவு வழங்கி அறிக்கை வெளியிட்டதுடன், தொழிற்சங்க நடவடிக்கையை முறியடிக்க அவசரகால சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என அரசைக் கோரியன.ஈ.பி.டி.பி., ,ஈ.பி.ஆர்.எல்.எப்.,புளொட், ரெலோ, ஈரோஸ், ஆகிய ஐந்து தமிழ் இயக்கங்களும் கூட்டாக இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.ஏப்.11ம்திகதி ஜனாதிபதிக்கும் இ.தொ.கா.வுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் 16ம் திகதி கம்பனிகளுடன் கதைத்துவிட்டு பதில் சொல்வதாக தொண்டமானுக்கு உறுதியளிக்கப்பட்டது.இதேவேளை 23 கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முதலாளிமார் சம்மேளனமும் சமரசத்துக்கு அழைத்துப் பேசியது. சிறிதுகூட விட்டுக்கொடுக்க கம்பனிகள் தயாரில்லாத நிலையில் தொழிற்சங்கங்கள் தமது முடிவில் உறுதியாக இருந்தன.எனவே அரசு 14 அம்ச திட்டமொன்றை முன்வைத்தது.அத்தீர்வுத் திட்டத்தில் கூறப்பட்டவை எதுவுமே தொழிலாளர்களின் கோரிக்கைகளோடு முழுதும் தொடர்பு பட்டவையல்ல அக்கோரிக்கைகளோடு முழுதும் தொடர்புபட்டவையல்ல அக்கோரிக்கைகளில் எல்லாமே பொதுஜன முன்னணி அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் தேர்தலின் போது முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் "மலையகத் தொழிலாளர்" என்கிற தலைப்பின் கீழ் சொல்லப்பட்டவையே. (பார்க்க பெட்டிச் செய்தி) அதைப் புதிதாக வழங்கப்படும் மேலதிக சலுகையாகக் காட்ட அரசு முயற்சித்தது. அதைவிட அவை அம்மக்களின் உரிமைகள், சலுகைகள் அல்ல.இப் 14ஆம் அம்சத்திட்டத்தை எதிர்த்து புதிய ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தம்பையா வெளியிட்டிருந்த அறிக்கையில் "பெருந்தோட்டத் தொழில் அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள 14 அம்சத்திட்டம் பற்றி பேசி முடிவெடுக்க முன் நிபந்தனையாக வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. அவற்றையாவது நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அவற்றில் கூறப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, அரசாங்க உத்தியோகம் என்பன மலையக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள். பிச்சைகள் அல்ல...!" எனத் தெரிவித்தார்.இந்த 14 அம்சக் கேரிக்கையில் 13 ஆவது பிரிவானது முற்றிலும் தீர்வல்ல. "நிபந்தனை", "மிரட்டல்" என்பது தான் உண்மை.இதற்கிடையில் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி பொலிஸ் இராணுவத்தை அழையுங்கள் என துரைமார் சம்மேளனம் அரசைக் கோரியது. வேலை நிறுத்தத்தின் மூன்றாவது நாளன்று மலையகத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தெற்கில் களுத்துறை, காலி, மாத்தறை பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். போராட்டம் ஆரம்பமானது.திட்டமிட்டபடி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 7 இலட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். எவரும் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்தார்கள். பல இடங்களில் போராட்ட சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை தாங்கிக் கொண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 13ஆம் திகதியே டில்லி செல்வதாக புறப்பட்டு சென்ற தொண்டமான் தனது பேரனும் இ.தொ.க.வின் பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானை தலைமைத்தாங்க செய்திருந்தார் என்ற போதும் முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு முதல், தொண்டமானுடன் தொலை பேசி மூலம் அனுமதி பெறப்பட்டுக் கொண்டிருந்தது.தொடர்ந்து 23,24 ஆம் திகதிகளில் சாத்தியமாக நடத்தப்பட்டன. இடையில் ஒரு சில தோட்டங்களில் வெளி இடங்களிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வந்து வேலையில் கம்பனிகள் ஈடுபடுத்திய போதும், இரண்டாம், மூன்றாம் நாட்களில் அது அற்றுப்போனது அல்லது மிகக் குறைந்தது.மூன்றாவது நாள் 24ஆம் திகதி முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன. அந்நாள் தான் மலையக மக்கள் முன்னணி வேலை நிறுத்தத்திலிருந்து வாபஸ் வாங்கியது. மலையக மக்கள் முன்னணியின் துரோகத்தனம்:மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் தொலைக் காட்சிக்குப் பேட்டி கொடுத்தார். அரசு சந்திரசேகரின் வாபஸ் வாங்களை வானொலிச் செய்தியிலும் அறிவித்ததுடன் வானொலியிலும் பேட்டியை ஒலிபரப்பியது."ஆறுமுகம் தொண்டமானுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்குவதற்கு நாங்கள் ஏன் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்....அரசாங்கத்துக்கு இதைவிட நல்ல தீர்ப்பு வழங்க முடியாது. தோட்டத்தொழிற் துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது."எனப் பேட்டியளித்திருந்தார்.அதே தினத்தில் ம.ம.மு.வினால் பத்திரிகைகளுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையில்...."நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் ஒன்றை அரசு முன்வைத்துள்ளது. அரசின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சில காலம் அவகாசம் வழங்குவோம். தாம் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஏற்கப்பட்டிருக்கும் நிலையில் வேலை நிறுத்தத்திற்கு நாம் வழங்கிய ஆதரவை நிறுத்திக் கொள்வது எனத் தீர்மானித்துள்ளோம்." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி மலையக மக்கள் முன்னணியினருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது அதன் முக்கியஸ்தர் ஒருவர் இப்படிக் கூறினார்."இந்தத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் மூலம் இ.தொ.கா.வும் ஏனைய தொழிற்சங்கங்களுமே இலாபம் அடைகின்றன. அவற்;றின் உள் நோக்கங்களே இவ்வேலை நிறுத்தத்திற்கு காரணம். ஆனாலும் தொழலாளர்களின் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். முதல் மூன்று நாளும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கினோம்.ஆனால் அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்ததாலேயே நாங்கள் வாபஸ் வாங்கினோம். எங்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்தான் 14 அம்சக் கோரிக்கையை எங்களுடன் கதைத்து அரசு முன்வைத்தது. மேலும் அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நல்லவர். அவர் ஒத்துக் கொண்டால் செய்கிற ஆள். இதற்கு முன்னர் கூட தீபாவளி முற்பணம் 1000 ரூபாவை வழங்குதாக வாக்குறுதியளித்து நிறைவேற்றினார். அரசாங்கம் தான் 2.76 சதமாக சம்பளத்தை உயர்த்தியிருக்கிறதே! பின் என்ன? மேலும் அடையாள வேலைநிறுத்தம் என்றால் என்ன? ஒரு நாள் நடத்தினால் போதாதா? ஏன் ஏழு நாட்கள்?..." இப்படியாக இழுத்துக் கொண்டே போனார்."அப்படியென்றால் 14 அம்சத் தீர்வுத் திட்டத்தில் நீங்களே கூறியிருந்ததைப் போல் "அரசியல் தோரிக்கைகள்" எதுவுமுண்டா? அது என்னவென்பதையும் சொல்வீர்களா...?" இது எமது கோள்வி."சமுர்த்தி நியமனம், கிராம சேவகர் நியமனம்...." என்றெல்லாம் இருக்கிறதே என கூறிக் கொண்டே சென்ற போது, அடுத்த கேள்வியை கேட்பதற்குள்" தான் முக்கிய வேலையொன்றுக்காக வெளியில் செல்வதாகவும் இன்னொரு வேளை கதைப்போம்" என்றும் கூறி விடைபெற்றார்.உண்மையில் இவர் என்ன சொல்கிறார்? தொழிலாளர் தற்போது எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியையும் நியாயமான சம்பளத்துக்காகவும் தொழிலாளர்களுடன் நின்று போராட நீங்கள் தயாரில்லையா? நீங்கள் அரசியல் கோரிக்கையாகவும் அரசியல் போராட்டமாகவும் முன்னெடுக்கவேண்டும் என்கிறீர்களே. இந்த 14 அம்சத் தீர்வில் என்ன அரசியல் தீர்வுகள் இருக்கின்றன? சரி, நீங்கள் அரசியல் கோரிக்கைகளைகத் தான் இந்த சந்தர்ப்பத்தில் முன்னெடுக்க வேண்டுமாயின் கிராம சேவகர் நியமனமும் சமுர்த்தி நியமனமும் எப்படி அரசியல் கோரிக்கைகளாகும்? அப்படியென்றால் நிங்கள் அரசுடன் இணையும் போது முன்வைத்த 6 அம்ச கோரிக்கை என்னவானது? ("லங்கா தீப" வுக்கு அளித்த பேட்டியில் அப்படி எந்த நிபந்தனையும் விதிக்காமலேயே அரசுடன் இணைந்ததற்காக கதை விட்டிருக்கிறார்கள் என்பது வேறுகதை) நீங்கள் அரசியலமைப்பு சீர்த்திருத்தக் குழுவுக்கு முன்வைத்த பிராந்தியங்கள் உள்ளிட்ட அரசியல் கோரிக்கைகளுக்கு இன்று என்ன ஆனது? ஏன் உங்கள் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட 14 அம்சத் தீர்வில் அவை உள்ளடக்கப்படவில்லை? அவை உள்ளடங்காத தீர்வை அரசியல் தீர்வாக ஏற்க எப்படி உங்களால் முடிந்தது?நிச்சயமாகத் தெரியும் இவைபற்றி எல்லாம் இப்போது பேச மாட்டார்கள் என்று. ஆனால் இ,தொ.கா எந்நேரமும் வேலை நிறுத்தத்தை கைவிடக்கூடும் என்று அச்சமுற்றுக் கொண்டிருந்த எல்லோருக்குமே ம.ம.மு முந்தி;க்கொண்டு செய்தது என்னவோ கன்னத்தில் பளீர் என அறைந்தது போல் தான் இருந்தது.உண்மையில் ம.ம.முவினரின் இந் நடவடிக்கை தொண்டமானே கூறியது போல "எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்பது போல அரசாங்கத்திடம் நல்ல பேரெடுப்பவர்கள்" என்பது தான் உண்மை இவர்கள் இ.தொ.காவிடமிருந்து தான் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.மலையக மக்கள் முண்ணனி வாபஸ் பெற்ற அதே ஏப்,24ம் திகதி தான் பெருந் தோட்டத்துறை அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க இப்படி மிரட்டல் செய்திருந்தார்."2.76 சதம் சம்பள உயர்வும் 300நாள் வேலையும் தரப்படும். ஏற்றுக் கொள்ளுங்கள். கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாமல் வேலைநிறுத்தம் தொடருமாயிருந்தால் கிடைப்பதையும் இழக்க நேரிடும்" என்றார் அதே தினத்தில் தோட்டத் துறைமார்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் மகேந்திர அமரசூரிய விரகேசரிக்கு அளித்த பேட்டியில்..,"ஒரு வார வேலை நிறுத்தத்தினால் 50கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் தொழிலாளர்கள் கோருகின்ற 8ரூபா சம்பளம் ஒருபோதும் சாத்தியப்படாது" என்றார்.இதே வேலை இவ்வேலை நிறுத்தம் தொடர்பாக சிங்கள பத்திரிகைகளும் இனவாத அடிப்படையில் நோக்கின "லங்கா தீப", "திவயின", ஆகிய இரு பத்திரிகைகள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை இனவாத கோரிக்கைகளாகவே பிரச்சாரம் செய்தன. தொழிலாளர்களின் கோரிக்கைகளில் எவ்வித நியாயமும் இல்லையென்றும் இது தொண்டமான், யுத்த காலத்தில் புலிகளுக்கு வால் பிடிப்பதற்காகவும் அரசாங்கத்திற்கு நேருக்கடி கொடுப்பதற்காகவும் ஏற்படுத்திய ஒன்றே தவிர வேறென்றுமில்லை என்பதனை குறிப்பிட்டு கட்டுரைகளை வெளியிட்டன. தொண்டமானை புலியாக வரைந்து கார்ட்டுனும் வெளியிட்டிருந்தனர். தோட்டத் தொழிலாளர்கள் வசதியாக இருக்கின்றார்கள். தோட்டத் துறை தான் நஷ்டமடைந்திருக்கிறது என்பதை நிறுபிப்பதற்கான மிகுந்த பிரயத்தனம் செய்து பொய்யான ஆதாரங்களுடன் கட்டுரைகளை வெளியிட்ட ஏப்25ம் திகதிய இதழில் திவியன பத்திரிகை இப்படி கூறியது "தோட்டத் தொழிலாளர்களுக்கென்று இது வரை எல்லாச் சலுகைகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென்று ஈ.பீ.எப், ஈ.டீ.எப் என்பவற்றுடன் 72ரூபா ஒருநாள் சம்பளத்துடன் வீடு வசதி, போக்குவரத்து வசதி, இலவச சுகாதார மருத்துவ வசதி என்பவற்றுடன் இலவசமாக பாலும் வழங்கப்பட்டு வருகிறது விடுமுறை கொடுப்பனவு எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்ற சலுகைகளை தோட்டத் தொழிலாளர்கள் தவிர்ந்த வேறெந்த தொழிலாளர்களும் பெற்றதில்லை. மறுபக்கம் இப்படியான சலுகைகள் அற்ற மற்ற தொழிலாளர்களது உரிமை பற்றிப் பேச ஒரு அரசியல் வாதியுமில்லை."எவ்வாறிருந்த போதும் இறுதியில் 3ரூபாய் சம்பள் உயர்வு 300நாள் வேலை என்பதற்கப்பால் இறங்கி வர அரசு தயாராக இல்லாத நிலையில் 27ம் திகதி வரை போராட்டம் நடந்து முற்றுப் பெற்றது. இறுதி நாளன்று போராட்டத்தை நீடிக்க கோரி தொழிலாளர்கள் படையெடுத்த போதும் தொழிற் சங்கங்கள் அதை ஏற்க மறுத்தன.தொழிலாளர்களின் கோரிக்கைகள் வெற்றியளிக்கவில்லை. மாறாக வழமையாக 16 தொடக்கம் 18 கிலோ கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள், 22 கிலோ கொழுந்து பறிக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். ஏப்24ம் திகதியன்று கொட்டகலையிலுள்ள ஆறுமுகம் தொண்டமானின் வீட்டில் இ.தொ.கா தலைவர்கள், கூடி உரையாடியபோது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மேலும் ஒரு மாதம் வேலை நிறுத்தத்தை நீடிக்கும் ஆலோசனை ஒரு சில தலைமை உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டிருந்தது. உடனே இந்தியாவிலிருந்த தொண்டமானுடன் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, அதுபற்றி கேட்ட போது, 28ஆம் திகதி தாம் வந்ததன் பின் அதனைப் பற்றிக் கதைப்போம் என்று பதில் கூறப்பட்டது. ஆக தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக பெரும்பான்மையான தொழிற் சங்கங்களும் தொழிற்சங்கவாதிகளும் தமது சந்தர்ப்பவாத இருப்புக்காகவே வேலை நிறுத்தத்தையும் கையாள முயன்றிருக்கின்றனர்.தொழிலாளர்களின் கதி....?அவர்களது போராட்டம்...!?அவர்களது கோரிக்கைகள்....!?அவர்களது நம்பிக்கைகள்....!?எல்லாமே வெறும் கேள்விக் குறிகளாய் எழுந்து நிற்கின்றன.துன்பம் தெரியவில்லை.தொடர் கதையோ முடியவில்லை!
பொ.ஐ.மு.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்கள் பற்றிய வாக்குறுதிகள்
  • 1. மலையகத்தில் தொழில் புரிகின்ற தொழிலாள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் சூழல் மற்றும் சுகாதார அபிவிருத்திக்காகவும் விசேட செயற்திட்டங்கள் நடைமுறைப்புடுத்தப்படும்.
  • 2. மலையகத்தில் ஏற்பட்டுள்ள இருப்பிடப் பிரச்சினை நிலையான வீட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
  • 3. மலையகத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • 4. மலையகத்தில் வீடுகளுக்கு மின்சாரம், நீர் வழங்கள், பாதை வசதிகள் அமைப்பதற்கான செயற்திட்டங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்.
  • 5. மலையகத் தொழிலாளர்களுக்கான நிலையான மாதாந்த வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கான உறுதியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • 6. மலையகத்தில் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான பராமரிப்பு வசதிகள் அளிக்கக்கூடிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • 7. இந்திய வம்சாவழி சிறபான்மையினம் என அவர்கள் கருதப்பட்டு வருவதால், மலையகத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வரும் விசேட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
  • 8. சகல பிரஜைகளும் சாதாரண பிரஜைகளாக கருதப்படக்கூடிய வகையிலான சட்டத்திட்டங்கள் உருவாக்கப்படும்.
  • 9. மலையகத் தொழிலாளர்கள் வாழும் இருப்பிடங்கள் பிரதேசசபை ஆட்சிக்குள் கொண்டுவரப்படும்.
  • 10. மலையகத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் உரிமைகளையும் நலன்புரி வசதிகளையும் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வெஞ்சர் தோட்டத்தில் பொலிஸ் காடைத்தனம்!

பொலிஸார்-நிர்வாகம் சேர்ந்து நடத்திய காடைத்தனம்:"நாங்க என்னத்தத்தான் அவங் களுக்கு செஞ்சோம். அவங்களுக்கு ஒன்னுமே செய்யலியே. நியாயத்த தானே கேக்கப் போனோம். அதுக்கு போயி ஏனுங்க இத்தனை பெரிய கொடுமை."ஜனவரி.3ம் திகதியன்று நோர்வூட்-வெஞ்சர் தோட்ட நிர்வாகம் அத்தோட் டத்தின் தொழிலாளர்கள் மீது பொலி ஸாரை ஏவி கொடுரமாகத் தாக்கி விரட்டடியதுமல்லாமல் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டை எறிந்து நடத்திய அட்டுழியங்களைப் பற்றி ஒரு அப்பாவி தொழிலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.தோட்டங்கள் தனியார் மயமாக்க ப்பட்டதன் பின் ஏற்கெனவே அடிமை நிலைக்குள் தள்ளப்பட்டு இலங்கையிலேயே பின்தங்கிய வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வந்த மலையகத் தொழிலாளர்கள், மேலும் மோசமாக கீழே தள்ளப்பட்டு விட்டார்கள். நாளுக்கு நாள் அதிகார வர்க்கத்தினாலும் தம்மை நேரடியாக ஆதிக்கம் செலுத்தி வரும் கம்பனிகளாலும் மேற்கொள்ளப்ப ட்டுவரும் அநியாயங்கள் அடக்கு முறைகள் என்பவற்றினால் மிகச் சோகத்துக்குரிய அவலத்தை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு வெஞ்சர் தோட்டத்தில் கம்பனி முதலாளிகளும் கூலிப்படையினரும் கூட்டாக நடத்திய காடைத்தனம் ஒரு சிறந்த சான்று. எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையோ, போராட்டமோ நடத்தாது தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து நியாயம் கேட்கச் சென்றதற்கே இப்படியான அடக்கு முறையென்றால் அங்கு நிலவுகின்ற சூழலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த அவலத்தை தட்டிக் கேட்க இதுவரை எந்தவொரு சரியான தலைமையும் இல்லாதது அம்மக்களின் அவலத்தின் உச்ச மென்றே சொல்லலாம். இந்த வெஞ்சர் தோட்ட சம்பவத்தைப் பொறுத்தளவில் உண்மை நிலையைக் கண்டறியச் சென்ற எமக்கு, மலையகத்தின் பலம்பொருந்திய அமைப்பான இ.தொ.கா கூட கம்பனியின் நடவடிக்கைக்கு துணைபோகின்ற நிலையை காணக் கிடைத்தது.ஆரம்பம்:முழு நாள் வேலை.அரை நாள் கூலி!கடந்த ஜனவரி 2ம் திகதியன்று வழமைபோல் தொழிலாளர்கள் தமது வேலையைச் செய்தனர். பெண் தொழிலாளர்கள் எல்லோரும் தாம் பறித்த கொழுந்தை கொண்டு சென்று போட்டதன் பின் அவர்களில் 21 பேருக்கு அரைநாட் சம்பளமே போட்டனர். அத்தொழிலாளர்கள் 'இது அநியாயம் இவ்வளவு நேரமும் வேண்டா வெய்யிலில் வேலை செய்தும் அரைபேர் (அரை நாள் சம்பளம்) போடுவது அநியாயம் என்று கெஞ்சினர். ஆனால் நிர்வாகம் அதனை ஒரு பொருட்டா கவே எடுக்கவில்லை. சில மணிநேரம் காத்திருந்து கெஞ்சியும் அன்று முடிவாகவே கூறிவிட்டனர்."இவ்வளவு நேரம் வேல செஞ்சும் இவ்வளவு கொழுந்து தான் பிச்சிங்களா?"என்னங்க புரியாம பேசுரீங்களே! கொழுந்து இருந்தா தானுங்களே பிக்கிறதுக்கு..""அதெல்லாம் எனக்குத் தெரியாது அரைநாள் போட்டது போட்டது தான்.!"அன்று தொழிலாளர்கள் அனைவ ரும் வீடு திரும்பியதன் பின் அத்தோட்ட த்தைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் கூடி கதைத்தனர். காலையில் துரையிடம் சென்று இது பற்றி கதைப்பது என்றும் கூடவே தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய 10 வீத லாபத்தையும் கேட்பது என்றும் தீர்மானித்தனர்.அடுத்த நாள் ஜனவரி 3ம் திகதி காலை 8 மணியளவில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையின் அருகில் கூடினர். தோட்ட அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் தமது கோரிக்கைகளான 21 பெண் தொழிலாளர்களுக்கும் முழுநாள் சம்பளத்தைப் பெறுவது, மற்றும் லாபத் தில் 10 வீதத்தை பெறுவது ஆகியவற் றைக் கோரினர். கூட்டத்தினர் மீது அதிகாரிகள் மோசமான வார்த்தைக ளால் திட்டியுள்ளனர். அதற்கிடையில் தோட்ட (சுப்பிரின்டன்ட்) அதிகாரிக்கு இத்தகவல் ஏனைய அதிகாரிகளால் அனுப்பப்பட்டிருந்தது.யாருக்காக பொலிஸ்?சரியாக மணி 11.00 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவ்விடத்துக்கு தோட்ட அதிகாரியின் வாகனமும் அதன் பின்னால் பொலிஸார் நிறைந்த வாகனமும் வந்து சேர்ந்தது. தோட்ட அதிகாரி வரும் வழியில் நோர்வ+ட் பொலிஸாரைச் சரி செய்து கூடவே அழைத்து வந்திருப்பதை தொழிலாள ர்கள் தெரிந்து கொண்டனர். வந்திறங் கிய அதிகாரி ஏனைய அதிகாரிகளுட னும் பொலிஸாருடனும் கூடிக் கதைத் தார். தொழிலாளர்கள் தூரத்தே நின்று அவதானித்துக் கொண்டிருந்தனர்.அதிகாரி வந்து கூறினார், "எதையும் ஏற்க முடியாது. இடத்தை விட்டு போங்கள்... இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு காட்டுகிறேன் விளையாட்டு. நான் பதில் சொல்லப் போவதில்லை. பொலிஸார் பதில் சொல்வார்கள்.!" என கத்தினார்.தொழிலாளர்கள் ஏற்கெனவே பதட்டமடைந்திருந்தனர். நாங்கள் என்னத்தை பண்ணிபோட்டோம்? ஏன் பொலிஸாரை இவர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி வந்நதா லும் எங்களது நியாயத்தின் தரப்பிலல் லவா அவர்களும் இருக்க வேண்டும்? ஏன் எங்களின் நியாயத்தைக் கூட கேட்காது அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்?" என கலவரம டைந்திருந்தனர்.அடித்து நொறுக்கப்பட்ட தொழிலாளர்கள்கொஞ்ச நேரத்தில் பொலிஸாரின் திசையை நோக்கி சைகை காட்டப் பட்டது.தொழிற்சாலையின் வாசலில் இருந்த தொழிலாளர்களை நோக்கி "எல்லோரும் ஓடுங்கள்" என சத்தமிட் டுக்கொண்டே எட்டுப் பொலிஸார் தடியடிப் பிரயோகம் செய்தனர். ஆண், பெண் தொழிலாளர்கள் அத்தனை பேரின் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. கண்மண் தெரியாமல் அடித்து நொருக்கினர். எதிர்பாராத தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில் தொழிலாளர்கள் ஓட்டமெடு த்தனர். தொழிற்சாலையின் வாசலைத் தாண்டியதும் வாசற் கதவை இறுக்கி மூடிக் கொண்டனர்.தொழிற்சங்க தலைவர்கள் தொழி லாளர்களை நோக்கி அனைவரையும் போய்விட வேண்டாம் என அறிவுறுத்தி னர். பலர் காயப்பட்ட நிலையில் வாயிற் கதவுக்கு வெளியில் ஆங்காங்கு அமர்ந்திருந்திருந்தனர். தங்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட் டதை உணர்ந்து கொண்டனர். சில தொழிலாளர்கள் உரக்க சத்தமிட்டுத் திட்டினர். சில பெண் தொழிலாளர்கள்; பாதையோரத்தில் உட்கார்ந்தபடி சாபமிட்டனர்.பொலிஸ்-நிர்வாகம்:கூட்டாக காடைத்தனம்!கொஞ்ச நேரத்தில் திடீரென உள்ளேயிருந்த பொலிஸ் வாகனம் வெளியே வந்தது. அதில் நோர்வூட் பொலிஸ் ஸ்தானாதிகாரி (ழுஐஊ) உட்பட ஏனைய எட்டுப் பொலிஸாரும் இருந்த னர். பொலிஸ் வாகனம் அங்கிருந்து போவதாக நினைத்த தொழிலாளர்க ளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் தொழிற்சாலை வாயிலிலி ருந்து ஏறத்தாழ 30 மீற்றர் தொலைவில் வாகனம் நிறுதப்பட்டது. நிறுத்தப்பட்ட தும் வாகனத்திலிருந்து பொலிஸார் அனைவரும் இறங்கினர். அவர்களில் இருவர் கண்ணீர்ப்புகைக்குண்டு எறியும் துப்பாக்கியை ஏந்தியபடியிருந்தனர்.தோட்ட அதிகாரி சைகை செய்வதை தொழிலாளர்கள் பார்த்தார் கள். அவர்கள் சுதாகரிப்பதற்குள் முதலாவது கண்ணீர்ப்புகைக்குண்டு வந்து வேலு என்பவரின் வயிற்றில் விழுந்தது. அவர் அதிலேயே கதிறிக் கொண்டு சுருண்டு விழுந்தார். அதே நேரம் ஏனையோர் கண்களைக் கசக்கிக் கொண்டு ஓடுமிடம் தெரியாது கலவரமடைந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு கதறினர். இந்த ஓலத்தின் மத்தியில் இன்னுமொரு குண்டு வந்து விழுந்தது. அந்த இடத்தில் பல பெண் தொழிலாளர்கள் இருந்தனர். கதறிக் கொண்டே தடுமாறி ஓடினர். அவர்களில் வயது முதிர்ந்த பெண் தொழிலாளர்கள் உட்பட பலர் தடுமாறி விழுந்தனர். விழுந்தெழும்பிய சிலரால் ஓடமுடிந்தது. சிலர் விரைவாக ஓட முடியாது தவித்தனர். பொலிஸாரும் சில நிமிடங்களில் இடத்தை விட்டு அகன்றனர். காயப்பட்ட தொழிலாளர் கள் ஏனைய தொழிலாளர்களின் உதவியுடன் உடனடியாகப் பொகவந்த லாவ ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்ப ட்டனர். முதல் கண்ணீர்ப் புகைக்குண்டு வந்து விழுந்த பழனியப் பன் வேலு (வயது-51) அத்தோட்டத்தின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர் (அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்).வயிற்றில் விழுந்த காயம்!சம்பவம் நடந்து 20 நாட்களின் பின் சரிநிகர் அவரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்த போது அவர் அப்போதும் படுக்கையிலேயே காணப்ப ட்டார். ஆஸ்பத்திரிக்கு மருந்து எடுக்கச் செல்வதற்காக அவருடன் துணைக்குச் செல்ல இன்னும் சில தொழிலாளர்களும் அங்கு வந்திருந் தனர். அவர் சரிநிகரிடம் கருத்து தெரிவிக்கையில்,"நாங்கள் அவர்களிடம் சண்டை பிடிக்கப் போகவில்லை. ஆனால் எம்மீது அநியாயமாக தாக்கினார்கள். பொலி ஸார் கூட எங்களது நியாயத்துக் காகப் பேச முன்வரவில்லை. தோட்ட அதிகாரி தனது அதிகாரத்தையும் பலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி பொலிஸாரை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். பொலிஸார் அந்த இடத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை அறிவதில் அக்கறை காட்டவே இல்லை. நாங்களாக பேசியும் கூட அதனை அசட்டை செய்தனர்." என்றார்.இவரின் வயிற்றில் விழுந்த குண்டினால் ஏற்பட்ட புண்காயங்கள் அப்படியே இருந்தன. குனிய, எழும்ப மிகவும் கஷ்டப்படுகிறார். அந்த இடத்தில் ஒரு கட்டியொன்று காணப்ப டுவதாகவும் எமது கையை பிடித்து வயிற்றில் வைத்துக் காட்டினார்.இச்சம்பவத்தின் போது 6 பெண் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பு க்குள்ளாகியிந்தனர்.பெண் தொழிலாளர்களின் கதை!வீ.கந்தையா லெச்சுமி (வயது.47), கே.பார்வதி (வயது.38), செல்லத்துரை வள்ளியம்மா (வயது.38), மாரியாயி (வயது.35), புஸ்பராணி (வயது.32) ஆகிய ஆறு பேரே பாதிக்கப்பட்ட வர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஏழு நாட்களும் கூடியது 9 நாட்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றிருந் தார்கள். கந்தையா லெச்சுமி இப்படிக் கூறினார்."அன்றைக்கு நாங்கள் பறித்த கொழுந்து போதாது என்கிறார்கள். கொழுந்து இருந்தால் தானே பிய்க்கலாம். முடிந்தவரை நாங்கள் சேகரித்துச் சென்ற கொழுந்தை பறித்துவிட்டு அரைநாள் போட்டு விட்டார்கள். நான் ஆஸ்பத்திரியில் மொத்தம் 9 நாள் இருந்தேன்.ஆஸ்பத்திரியும் எம்மீது அலட்சியம்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இரு நாட்களில் என்னை வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். எனக்குப் பூரண சுகமாகாத நிலையில் என்னை ஏன் அனுப்பினார்கள் என்று முதலில் தெரியவில்லை. பின்னர் தான் நாங்கள் ஆஸ்பத்திரியில் தொடர்ச்சியாக இருப்பது பொலிஸாருக்கு நெருக் கடியை ஏற்படுத்தும் என்பதால் பொலிஸார் எங்களை உடனடியாக அனுப்பிவிடும்படி ஆஸ்பத்திரிக்கு தெரிவித்திருப்பது தெரியவந்தது. இது தவிர எமக்கு நட்டஈடு தரவேண்டியி ருக்கும் என்பதால் எமக்கு பெரிசாக ஒன்றுமே ஆகவில்லை என காட்ட வேண்டிய தேவை தோட்ட அதிகாரிக் கும் இருந்தது. தோட்ட அதிகாரியும் பொலிஸாருக்கு இது பற்றி சொன்ன தாக பேசிக் கொள்கிறார்கள். இரண்டா வது நாளே எங்களை அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். வீட்டுக்கு வந்ததன்பின் அத்தனை பேருக்கும் மீண்டும் வலி, காய்ச்சல், வாந்தியெடுப்பு என தொடர்ச்சியாக வருத்தம் எடுத்தத னால் தொழிற்சங்க தலைவர்கள் எங்களை திரும்பவும் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்கள். அதன் பின்பு சிகிச்சை பெற்று மொத்தம் 9நாட்களின் பின் குணப்படுத்தப்பட்டு வீடு வந்து சேர்ந்தேன். நாங்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அத்தனை நாளும் ஏனைய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவு கூட எங்களுக்கு வழங்கப்பட வில்லை. ஒரு வேளை கிடைத்தால், இரு வேளை கிடைக்காது. எங்களை மிகவும் அலட்சியமாகவே ஆஸ்பத்திரியிலும் நடத்தினர். இன்னும் எனக்கு வலது கண் தெரியவில்லை. நெஞ்சரிப்பு போகவில்லை. விழுந்ததில் பட்ட காயத்தின் வலி தீரவில்லை." என்றார். இவர் தொழிற்சங்க மொன்றின் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) தோட்டத் தலைவியும் கூட.கே.பார்வதி என்பவர் இப்படி தெரிவித்தார்."அன்று அடித்து விரட்டிய போது தலை தெறிக்க ஓடியதில் இடுப்பில் பலத்த அடிபட்டு இன்னும் வருத்தம். ஆஸ்பத்திரியில் 9 நாள் இருந்தேன். இன்னும் நடக்க கஷ்ரமாக இருக்கிறது. கண்கள் கலங்கிய வண்ணமே உள்ளது. ஆனாலும் என்ன செய்ய வேலைக்கு போகாவிட்டால் வயித்துப் பாட்டுக்கு என்ன தம்பி செய்ய" என்றார்.திருமதி.செல்வம் என்பவர் இப்படி சொன்னார்."இங்கே பாருங்கள் அன்றைய குண்டுவீச்சால் வாயெல்லாம் வெந்து போய் உள்ளது. சாப்பிடக் கூட கஷ்டம். இடுப்பு வலி இன்னும் இருக்கிறது. இங்கே பாருங்கள் கால் கூட வீக்கம் வற்றவில்லை. நான் ஆஸ்பத்திரியில் ஏழு நாட்கள் இருந்தேன்" என்றார்.வள்ளியம்மாள் என்பவர் இப்படிக் கூறினார்."அன்று பொலிஸ் விரட்டிக் கொண்டே வந்தது. நான் ஓடியும் கூட கட்டைக் கம்பால் அடித்த அடி முதுகில் பலமாக பட்டது. நெஞ்சு இன்னமும் வலிக்கிறது. எனது ஒரு வயது கூட ஆகாத குழந்தைக்கு பால் கொடுக்கக் கூட முடியவில்லை சாமி. நான் ஏழு நாள் ஆஸ்பத்திரியில் இருந்தேன்." என்றார்.ஆரம்பத்தில் இந்த தொழிலாளர் களை ஆஸ்பத்திரியில் அழைத்து சென்று அவர்களை கவனித்தது தொடக்கம். ஆஸ்பத்திரி அலட்சிய நிலை காரணமாக தொழிலாளர்களை தனியார் மருத்துவமனையொன்றிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்ததெல்லாம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத் தொண்டர்களே என்பது தெரிவந்தது.டொக்டர் சாந்தகுமார்அத்தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்திருப்பவர் புதிய ஜனநாயக முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டவருமான (சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு இரண்டு வருடங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட) ஹோமியோ பதி டொக்டர்.சாந்தகுமார் அவர்களே.அவர் இது பற்றி கருத்து தெரிவிக் கையில் "தோட்டத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எமது மக்களுக்காகக் குரல் கொடுக்க எந்த தலைமையும் இல்லை. அதிகார வர்க்கமும் தோட்ட முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை மூர்க்கமாக அடக்க முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இத்தொழிலாளர்களுக் காக குரல் கொடுக்க எவரும் முன்வராத பட்சத்தில் காலப்போக்கில் அவர்களே அவர்களின் எதிர்காலத் தை தீர்மானித்துக் கொள்வார்கள் என்பது மட்டும் உறுதி!" என்றார்.சம்பவம் நடந்த நாளிலிருந்து இத் தொழிலாளர்கள் தமது வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். அவ் வேலை நிறுத்தத்தின் போது தமது பிரதான கோரிக்கைகளாக பின்வருவ னற்றை முன்வைத்தனர்.தொழிலாளர்களின் கோரிக்கைகள்1.தனியார் மயமாக்கல் ஒப்பந்தத்தி ன்படி லாபத்தில் 10 வீதத்தை சகல தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.2. இருபத்தொரு பெண் தொழிலாளர் களுக்கும் முழு பேர் போடப்பட வேண்டும்.3. நடந்தசம்பவம் குறித்து பூரண விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.4. எமது பிள்ளைகளை பெயர் பதிய வேண்டும்.5. சம்பவத்துக்கு காரணமான தோட்ட அதிகாரி நீக்கப்படவேண்டும்.முதலாவது கோரிக்கையின் படி 1996ம் ஆண்டில் பெற்ற லாபத்தில் 10 வீதத்தையே தொழிலாளர்கள் கேட்டனர். ஆனால் இது வரை லாபம் ஒன்றுமே இல்லை. நட்டத்திலேயே இயங்குவதாக நிர்வாகம் கணக்கு காட்டி வருகின்றது. இது பற்றி வெங்சர் தோட்ட இ.தொ.கா தொழிற்சங்கத் உப தலைவர் எஸ்.கந்தையா தெரிவிக் கையில்,"லாபம் இல்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. இவர்கள் வழமயாகவே "லாபமில்லை" என்பதை கூறியே எங்கள் வயிற்றில் அடித்து வந்துள்ளனர். எங்கள் தோட்டத்தில் ஒருவருக்கு நாள் சம்பளம் 83 ரூபா. எல்லாம் கழிக்கப்பட்டு கைக்கு வந்து சேரும் போது ஒண்ணும் மிச்சமிருக்காது.நட்டத்துக்கு காரணம் யார்?சரி, லாபம் இல்லையென கூறுவோமே லாபமில்லாததற்கு யார் காரணம் தொழிலாளர்களா? அதிகாரி களா? ஏற்கெனவே தோட்டத் துறை, அதிகாரிகளின் லஞ்ச ஊழல் என்பவற்றால் மோசமாக பாதிக்கப்பட்டு ள்ளது. அவர்கள் சுரண்டி எடுத்துவிட்டு பழியை எங்கள் மீது போட்டு விடுகிறார்கள். தொழிலாளர்கள் தங்களது வேலையை சரியாக செய்து வருகிறார்கள். அன்றும் சரி இன்றும் சரி எந்தவித தொழில் நுட்ப கருவிகளு மின்றி தமது உடலுழைப்பாலேயே கொடுக்கப் பட்ட வேலையை சரியாக முடிக்கிறா ர்கள். உதாரணத்திற்கு 35 பேருக்கு ஒரு ஹெக்டேர் கவ்வாத்து வெட்ட கொடுக்கப்பட்டால் 35 பேரைவிட அதிக தொழிலாளர்கள் அதில் ஈடபடுத்தப்பட் டாலோ அல்லது ஒரு ஹெக்டேரை விட குறைந்த பரப்பில் கவ்வாத்து வெட்டப்ப ட்டாலோ நாங்கள் குற்றத்தை ஏற்போம். ஆனால் அப்படி நடப்பதில்லையே. அப்படியெ ன்றால் எங்கு பிழை தோட்டம் நஷ்டமைடைவதைக்காட்டி தொழிலா ளர்களின் சலுகைகளையும், அவர்க ளின் வசதிகளையும் குறைப்ப தையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்." என்றார்.நான்காவது கோரிக்கையான பெயர் பதிவது என்பது முக்கியமானது. 1993இல் பிரேமதாச ஆட்சியின் போது தோட்டங் கள் தனியார் மயமாக்க ப்படுவது தொடங்கப்பட்டது. அன்றிலி ருந்து இன்றுவரை காலியிடங்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்;த்துக் கொள்ளப்பட வில்லை. இன்னமும் வேலையில்லாமல் தமது பிள்ளைகள் நான்கு வருடங்களாக இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இறப்பு, விலகல், ஓய்வு பெறுதல், வேலை நீக்கம், என்பவற்றினால் இந்த நான்கா ண்டில் தொழிலாளர்கள் குறைந்துள் ளனர், அவர்களின் இடத்துக்குப் பதிலாக புதியவர்களை அமர்த்துவத ற்குப் பதிலாக குறைந்த தொழிலார்க ளைக் கொண்டு கூடிய உற்பத்தியைப் பெற முயற்சி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி தரப்படாத போது அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது.தோட்டத்துறையைப் பொறுத்த வரை 1992-1995க்குமிடையில் 14 வீதத்தவர் தமது தொழில் வாய்ப்பை இப்படி இழந்துள்ளனர் எனத் தெரிகிறது.'மீண்டும் ஏமாற்றப்பட்டோம்!"ஜனவரி 6ம் திகதி தொழிலாளர் திணைக்கள-ஹட்டன் பிரதேச பொறுப்பான உதவி ஆணையாளர் வேலை நிறுத்தம் தொடர்பாக சமரசம் செய்ய வந்தார்.இவர் கூறியது இது தான் "சம்பவம் பற்றிய விசாரணையை மேற் கொள்கி றோம். அதுவரை தோட்ட அதிகாரி இடைநீக்கம் செய்யப்படுவார். 21 பெண் தொழிலாளர்ளுக்கும் முழு பேர் போடப்படும். ஏனைய கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்கிறோம். எனவே வேலை நிறுத்தத்தை கைவிடுங்கள்."தொழிலாளர்கள் பெரிய எதிர்ப்பு எதுவுமின்றி மீண்டும் வேலைக்குப் போனார்கள்.ஆனால் ஒரு மாதமாகிவிட்ட நிலையில் இன்னும் எதுவித முன்னேற்ற முமில்லை. பழைய அதிகாரிக்குப் பதிலாக, புதிய அதிகாரி. மாறியது "அதிகாரி" ஒருவர் தான். அதிகாரம் அப்படியே இருக்கிறது. அதே நடை முறை அதே போக்கு. வழமைபோல் தொழிலாளர்கள் இம்முறையும் ஏமாற்றப்படடனர்.இதற்கிடையில் தோட்டக்கம்பனி அதிகாரியின் வேண்டுதலின் பேரில் இடை நீக்கம் செய்யப்பட்ட தோட்ட அதிகாரியை மீண்டும் நியமிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் வெஞ்சர் தோட்டத்து இ.தொ.கா. தொழிற்சங்க தலைவர்கள் இதற்காக கொழும்பிலுள்ள இ.தொ.கா. தலைமை யின் செல்வாக்கைப் பயன்படுத்த முயற்சித்து வருவதாகவும் பேசப்படுகி றது.பலமான முதலாளித்துவ சக்திகள். அதனை பாதுகாப்பதற்கான பலமான ஆட்சியதிகார கட்டமைப்பு, பலவீன மான தலைமைகள், பிழியப்பட்டு, பிழியப்பட்டே நலிந்து போன தொழிலாளர் படை. இது தான் மொத்த மலையகத்தினது நிலை.இலங்கையின் மொத்த பயிர்ச் செய்கை நிலப்பரப்பில் 40 வீதம் பெருந்தோட்டம். இலங்கையின் மொத்த ஊழியர்களில் ஆறில் ஒரு பகுதியினர் தோட்டத் தொழிலாளர்கள். இலங்கைக் கான மொத்த ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி பெருந்தோட்டத் துறையிலிருந்தே பெறப்படுகிறது. தேசிய வருமானத்தில் 15 தொடக்கம் 20 வீதம் வரை இவர்களின் உழைப்பிலிருந்தே பெறப்படுகிறது.21ம் நூற்றாண்டுக்கும் அடிமைகளே!தனியார்மயத்தின் பின் கடுமையான முறையில் மலையகத் தொழிலாளர்க ளின் உழைப்பு உறிஞ்சப்பட்டு வருகின்ற போதும் அவர்களின் நலனில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத அதே வேளை இருந்த நலன்களும் பறிபோய்க ;கொண்டிருக்கும் நிலையே அங்கு உள்ளது.ஒரு இடது சாரி இயக்க சிங்கள இளைஞர் ஒருவர் அண்மையில் இப்படிக் குறிப்பிட்டார்."இங்கு தோட்டங்கள் மாத்திரம் விற்கப்படவில்லை. கூடவே ஒரு சமூக த்தையும் சேர்த்தே ஒரு சில முதலாளிக ளுக்கு விற்று விட்டுள்ளனர்...."உண்மையிலும் உண்மை. இவர்கள் மாறி மாறி விற்கப்பட்டுக் கொண்டி ருக்கும் நவீன அடிமைகளே தான். 21ம் நூற்றாண்டுக்கும் இழுத்துச் செல்லப் படும் அடிமைகளே தான்.
(பெப்ரவரி.06.இதழ்-115)
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates