Headlines News :
முகப்பு » , , , » பௌத்த சின்னங்கள் ஆக்கிரமிப்பின் அடையாளங்கள் அல்ல! நமது சுவடுகளே! - டாக்டர் நிர்மலா சந்திரஹாசன்

பௌத்த சின்னங்கள் ஆக்கிரமிப்பின் அடையாளங்கள் அல்ல! நமது சுவடுகளே! - டாக்டர் நிர்மலா சந்திரஹாசன்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்களில் ஒரு பகுதியினரும் பௌத்தர்களாக இருந்தனர். மேலும் பல தொல்பொருள் தலங்கள் இந்து தலங்களைப் போலவே சிங்கள மற்றும் தமிழ் பௌத்த பாரம்பரியங்களையும் பகிர்ந்து கொள்கின்றன.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், தொல்பொருள் இடங்களை ஆய்வு செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் சமீபத்தில் நிறுவப் பட்ட செயலணிக்குழு, மக்களின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பது முக்கியமான ஒன்றாகும் என்பதால் இது ஒரு பயனுள்ள முயற்சியாகும். இந்த திட்டத்தை செயல்படுத்து வதற்கு இந்த கட்டமைப்புகள், அதாவது பௌத்த ஸ்தூபிகள், விகாரைகள் மற்றும் இந்து கோவில்கள் கட்டப்பட்ட வரலாற்று பின்னணி மற்றும் முன்னைய சகாப்தத்தின் கூட்டு பெளத்த / இந்து பாரம்பரியம் பற்றிய சரியான புரிதல் தேவைப் படுகிறது.

பெளத்தம், அதன் உயர்ந்த தத்துவத்துடன், ஒரு மத இலட்சியத்தையும் நெறிமுறையையும் அளித்தாலும், இந்து கடவுள்களின் வழிபாடும் தொடர்ந்தது. இலங்கையின் நெருங்கிய அண்டை நாடுகளே தென்னிந்திய இராச்சியங்களாகும், எனவே அங்கிருந்து மதரீதியான தாக்கங்கள் இலங்கையிலும், ஒட்டுமொத்தமாகவும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் உணரப்பட்டன. தென்னிந்தியா முழுவதிலும் பவுத்தம் பரவி இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அப்போது குறிப்பாக கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகம் (தற்போதைய தமிழக மாநிலத்தின் அளவை விட பெரிய பகுதி ) என்று அழைக்கப்பட்டது எனவே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்களில் ஒரு பகுதியினரும் பவுத்தர்கள் என்பதை நாம் ஊகிக்க முடியும், மேலும் இலங்கையைச் சுற்றிலும், தென்னிந்தியாவிலும் பல தொல்பொருள் தலங்கள் கல்வெட்டுகளிலிருந்தும் இந்து தலங்களைப் போலவே சி ங்கள் மற்றும் தமிழ் பவுத்த பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொள்வதை உறுதிப்படுத்தும் சான்றுகள் உள்ளன .

இன்று, கிழக்கு மாகாணத்தில் உள்ள விக்கிரம காலமேகன் பெரும் பள்ளி , இன்று தமிழர்களால் வெல்கம் விஹாரை / நடனார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு விஹாரை அல்லது பள்ளிக்கு ஒரு எடுத்துக்காட்டான (தமிழில் அழைக்கப்பட்டதால்) பகிர்ந்துகொள்ளப்பட்ட பாரம்பரியம். டாக்டர் பரணவிதான இதை தமிழ் மக்களின் பண்டைய பவுத்த ஆலயம் என்று வர்ணிக்கிறார். கி.பி 993-1070 அதாவது கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு காலப்பகுதியில் இலங்கையின் பெரும் பகுதி மீது ஆட்சி செலுத்தியிருந்த சோழ மன்னர்களான ராஜா ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோரின் ஆட்சிகாலப்பகுதி தமிழ் கல்வெட்டுகள், ஆலயத்துக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் தொடர்பாக திகதியிடப்பட்டுள்ளன.

அடித்தளத்தின் திகதி முன்பே இருந்தது என்பது டாக்டர் பரணவிதானவின் பார்வையாக இருந்தது. இலங்கையில் சோழர்களால் கட்டப்பட்ட பண்டைய 120 இந்து கோவில்களும் உள்ளன. சோழர்கள் பெரிய இந்து கோவில்களைக் கட்டியதால் (தென்னிந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஆட்சி செய்து தங்கள் செல்வாக்கை பரப்பிய மிக சக்திவாய்ந்த தமிழ் வம்சத்தினர் ) இந்து, அல்லது சைவ மதத்தவர்களென சித்தரிக்கப்பட்டாலும், அவர்கள் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பவுத்த தலங்களை கட்டியெழுப்பினர், பங்களிப்பு வழங்கினர் ஆதரித்தனர்.

வரலாற்றுச் சூழலில், கி.மு 2 ஆம் நூற்றாண்டில் பண்டிட் ஹிசெல் தர்மரத்ன மகா தேரர் தனது தென்னிந்தியாவில் பௌத்தம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபடி, கிமு 2 ஆம் நூற்றாண்டில் பௌத்தம் தென்னிந்தியாவுக்கு வந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இது தம்பபன்னி (இலங்கை ) உடன் சோழ மற்றும் பாண்டிய (தமிழ்) நாடுகளுக்குச் செல்லும் புத்த தூதுக்குழுக்கள் பற்றி குறிப்பிடுகிறது. பேரரசர் அசோகனின் மகனான வண. மகிந் ததேரரும் தேரரும் தென்னிந்தியாவில் உள்ள தமிழ் இராச்சியங்களில் தம்மத்தை பரப்பினார் என்பதற்கான சான்றுகள் உள்ளன என்றும் அவை தற்போதைய தமிழ்நாடு மற்றும் கேரளா வின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளன என்றும் மஹாதேரர் கூறியுள்ளார். கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளில் மற்றும் 14 ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் பவுத்தம் தொடர்ந்தது, சோழர்கள் மற்றும் பாண் டியர்கள் உள்ளிட்ட நீண்டகால வம்சங்களின் எழுச்சி மற்றும் பரவலின் போதும் வீழ்ச்சியின் மத்தியிலும் , இந்து மதத்தின் மறுமலர்ச்சி (வைணவம்) மற்றும் இஸ்லாமிய வெற்றியின் ஆரம்பம் அமைந்திருந்தது.

தென்னிந்தியாவில் பல்லவ மன்னர்கள் கி.பி 400-650 ஆட்சி காலத்தில், பௌத்தம் செழித்தது. 7 ஆம் நூற்றாண்டில் காஞ்சீபுரம் நகருக்கு விஜயம் செய்த சீன துறவி அறிஞர் ஹு சுவான் சாங், மக்கள் தொகையில் பெரும் பகுதி பவுத்தர்கள் என்றும், சுமார் 100 மடங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துறவிகள் இருப்பதாகவும், அவர்களில் இலங்கையைச் சேர்ந்த துறவிகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அசோக பேரரசர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் காஞ்சீபுரத்தில் ஒரு ஸ்தூபியை அமைத்திருந்தார். காஞ்சிபுரம் புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்தின் தலைவரான வன. தர்மபாலாவின் சொந்த நகரமாகவும் இருந்தது.

வியாபாரிகளும் வர்த்தகர்களும் பவுத்த மதத்தின் முக்கிய ஆதரவாளர்களாக விளங்கினர் எனவே சோழர்களின் தலைநகரான உறையூர் போன்ற நகரம், வண. புத்ததுத்தாவின் சொந்த ஊராகவிருந்ததுடன் நாகப்பட்டினம் கிரேக்க காலத்திலிருந்தே அறியப்பட்ட ஒரு செழிப்பான துறைமுகமாகவும் பவுத்தத்தின் பிரதான இடங்களில் ஒன்றாகவும் விளங்கி யது. 7/8 ஆம் நூற்றாண்டில் ஒரு இந்து மறுமலர்ச்சி ஏற்பட்டது, சில நூற்றாண்டுகள் கழித்து கலிங்கத்தின் மாகனின் படையெடுப்பின் போது, சிங்களபவுத்த பிக்குகள் தமிழ்நாட்டில் உள்ள மடங்களுக்கு தப்பி ஓடியது போலவே, தமிழ் பவுத்த பிக்குகள் இந்து மறுமலர்ச்சியின் போது இலங்கைக்கு தப்பி ஓடியதாக குறிப்பிட்டுள்ளனர். 9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சோழர் ஆட்சிக்காலத்தில் பவுத்தம் தொடர்ந்து நிலவியது, ஆனால் அரச ஆதரவு பற்றி அவ்வளவு தெளிவாக இல்லை . 13 ஆம் நூற்றாண்டில் தம்பதெனிய மன்னர் பராக்கிரமபாகு இலங்கையில் பௌத்தத்தை புதுப்பிக்க சோழ (தமிழ் ) நாட்டிலிருந்து துறவிகள் மற்றும் சமய நூல்களையும் தருவித்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இந்த துறவிகளில் முதன்மையானவர் வண தம்மகிட்டி. இவரே மகாவம்சத்தின் தொடர்ச்சியை மன்னர் ஸ்ரீமேவன் காலம் முதல் அவரது காலம் வரை எழுதினார். 14 ஆம் நூற்றாண்டு வரை கூட, மடங்கள் மற்றும் கற்றல் மையங்கள் தமிழகத்தில் இருந்ததுடன் இன்றும் இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது என்று தர்மரத்ன மகா தேரர் குறிப்பிட்டுள்ளார். பௌத்தர்களுக்கிடையில், தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பவுத்தர்களுக்கிடையில், சிறப்பான பிணைப்புக்கள் இருந்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த கற்ற பவுத்த பிக்குகளில், வண. புத்ததத்தா, வண். புத்தகோஷா மற்றும் வண. தர்மபாலா ஆகியோர் உள்ளடங்குகின்றனர். அவர்கள் வாழ்ந்து, தங்கள் விசுதிமகா போன்ற படைப்புகளை எழுதினர். அனுராதபுரத்தில் உள்ள மஹாவி ஹாரையில் புத்தகோஷா தங்கியிருந்து தனது பணிகளை மேற்கொண்டிருந்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநரும் பேராசிரியருமான டாக்டர் ஷஹிகோசாகே தனது தமிழ்நாட்டில் பவுத்தம் ஒரு புதிய முன்னோக்கு என்ற நூலில் இதைக் குறிப்பிடுகிறார், இந்த பரிமாற்றங்களை தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் உள்ள பவுத்தர்களுக்கிடையேயான சிறந்த நூல்களாக மேற்கோளிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த கட்டுரையில் நான் மற்றொரு விடயத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன், அது பெளத்த மதத்தை ஆதரிப்பதில் தமிழ் வர்த்தகர்கள் மற்றும் வணிகக் கழகங்கள் வகித்த பங்களிப்பாகும். இந்த உண்மை தாய்லாந்து, மேற்கு சுமத்ரா, மியான்மர், தென் சீனா மற்றும் இலங்கையில் காணப்படும் கல்வெட்டுகளில் சாட்சியமாகவுள்ளது பௌத்த நிறுவனங்களுடன் தமிழ் வணிகர்களின் தொடர்பு பற்றிய ஆரம்ப குறிப்பு இலங்கையிலிருந்து வந்தது. கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பிராமி கல்வெட்டு, அனுராதபுரத்தில் உள்ள பண்டைய அபயகிரிதாதுகோபுரத்தின் வடமேற்கில் உள்ள ஒரு கற்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. முத்திரை கல்வெட்டு டமேடாவனிஜா கா (பா) டி-விசாகஹலைன்' 'வீட்டுக்காரர் விசராகா தமிழ் வணிகரின் குகை' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது . வணிகக் குழுக்களின் கல்வெட்டுக்களில் நாம் காணும் பெயர்கள் ஐநூறுவர் மற்றும் நானதேசி. ஐநூறுவர் (500) மிக முக்கியமானவர்கள். மாத்தளை, குருநாகல் மாவட்டம், அனுராதபுரம் மற்றும் பொலநறுவை போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புத்த கோவில்களுக்கு நன்கொடைகளுடன் கல்வெட்டுகள் உள்ளது. பரக்ரமாபாகு 1 இன் துணைவியாரில் ஒருவரான ராணி லீலாவதி 1197-1212, தமிழ்வணிக சமூகத்திற்கும், பவுத்த ஸ்தாபனத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிய தகவல்களை அனுராதபுர கல்தூண் கல்வெட்டு வழங்குகிறது.

தமிழில் உள்ள இலங்காதிலக கோயில் கல்வெட்டு, ஒரு தமிழ்வணிக சமூகம் கோயிலுக்கு அளித்த ஒரு ஆஸ்தியை பதிவு செய்கிறது, அதேபோல் ஜெத்தவனா மரம் தலத்திலும். ஐநூருவரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன, அவை பௌத்த ஆலயங்களையும் இந்து கோவில்களையும் கட்டியதாகக் குறிப்பிடுகின்றன. ஜெயபாஹு 1, அதாவது கி.பி 1138 திகதியிட்ட ஜெயபாகு -1 இன் ஆட்சி க்காலத்தின் 28ஆவது ஆண்டில் திருகோண மலை மாவட்டத்தை அண்மித்த தம்பன் கடவை பகுதியில் உள்ள மொராக வேவிலிருந்து மற்றொரு தமிழ் கல்வெட்டு, நன்கொடையாளர் புத்தருக்கு நிலம் தருவதாகக் குறிப்பிடுகிறார், மேலும் மீறுபவர்கள் முண்டுருகோயிலால் (திரி ரத்னா மற்றும் முண்டுருவால் அழிக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்துகின்றனர் சேனைகளால், (மூன்று ஆயுதங்கள்) அதாவது வேளக்கார படையினரால் பொலநறுவையில் உள்ள புனித தாது நினைவுச்சின்னத்தின் கோயில் சிங்கள மன்னர்களால் பணியமர்த்தப்பட்ட வேளக்கார படையினரால் (தமிழ்) பாதுகாக்கப்பட்டதாக பொலநறுவை கல்வெட்டு கூறுகிறது.

திருகோணமலைக்கு வடக்கே சுமார் 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயிலங்குளத்தில், தமிழ் கல்வெட்டு ஒன்றில், ஸ்ரீ ஜெயபாஹு மன்னர் விக்கிரம கால மேகனின் வேளக்காரரை வரவழைத்து விக்கிரம கால மேகன் பெரும்பள்ளியை (பெரிய கோயில்) அவர்களின் பாதுகாப்பில் வைத்தார் என்று குறிபிடப்பட்டுள்ளது. பவுத்த நிறுவனங்களின் பாதுகாப்பிலும், வணிகக் அமைப்புக்கள் மற்றும் அரசபடைகளுக்கும் இடையிலான சாத்தியமான உறவிலும் வேளக்கார படையின் ஈடுபாட்டை பொலநறுவை கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. இந்த கல்வெட்டில், பொலநறுவையில் உள்ள புனித தாது நினைவுச்சின்னத்தின் பெரிய பவுத்த ஆலயத்தை உண்மையாக பாதுகாக்க வேளகாரப்படையினர் சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளனர்...

இந்த அனைத்து கல்வெட்டுகளிலிருந்தும், தமிழ் மன்னர்கள், தேரர்கள், வணிக சமூகங் கள் மற்றும் தமிழ் வீரர்கள், அல்லது கூலிப்படையினர் புனித தாது நினைவுச்சின்னத்தின் கோயில் உள்ளிட்ட பவுத்தம் மற்றும் பவுத்த நிறுவனங்களை பாதுகாப்பதிலும் மேம்படுத் துவதிலும் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பது தெளிவாகிறது. தமிழகத்திற்கு பௌத்த மதத் துடன் நீண்டகால தொடர்பு இருந்ததாகவும், மேலே இருந்து பார்த்தபடி பவுத்த பிக்குகளுக் கிடையில் தொடர்பு இருந்ததாகவும் சூழலில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் உட்பட இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நீண்ட கால தொடர்பு இருந்துள்ளது பௌத்தம் மற்றும் பவுத்த விழுமியங்களை விளக்கும் சீத்தலை சாத்தனார் எழுதிய 6ஆம் நூற்றாண்டின் உன் னத்தமிழ் இலக்கிய மான மணிமேகலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள நாகதீபத்தில் நயினா தீவு தமிழ் ப பவுத்தர்களைப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இப்போது ஜனாதிபதி செயலணி குழுவின் கீழ் வரும் பல தொல்பொருள் தலங்கள் சிங்கள மற்றும் தமிழ் பேசும் மக்களின் பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன என்பதையும், தமிழ் பேசும் மக்களின் கலாசார பாரம்பரியத்தைப் போலவே அவை இருப்பதையும் நாம் ஊகிக்கலாம். இந்த தலங்கள் அனைத்தையும் கணக்கெ டுத்து பாதுகாக்கும் பணியை செயலணி குழு கொண்டுள்ளது. இந்த தலங்களில், பாளி , சிங்களம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பண்டைய வடிவங்களில் கல்வெட்டுகள் இருக்கும், எனவே மொழியியலில் தகுதி பெற்ற ஆட்கள் மற்றும் மக்களின் பகிரப்பட்ட வரலாறுகள் மொழிகளின் அறிவைப் பெற்ற வர்கள் செயலணிகுழுவில் இணைக்கப்பட வேண்டும்.

தற்போது, கிட்டத்தட்ட முற்றிலும் தனி யான இன மற்றும் தனியான மத அமைப் பாகவே உள்ளது, எனவே ஒரு பிரத்தியே கமான பார்வையையே கொண்டுள்ளது.

கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்களான மட்டக்களப்பு மற்றும் ஒலுவிலிலும், இலங்கையின் பிற பல்கலைக்கழகங்களிலிருந்தும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறமையான தொல்பொருள் துறைகளைக் கொண்ட களனியா போன்ற பல்கலைக்கழகங்களிலிருந்தும், இந்தியாவை சேர்ந்த நிபுணர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டும், அவர்களில் சிலர் செயலணிக்குழுவின் உறுப்பினர்களாகவும் இருக்கலாம். கிழக்கு மாகாணத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் முஸ்லீம் சமூகத்தின் உறுப்பினர்களும் இந்த திட்டத்தில் ஈடுபட வேண்டும், இதனால் செயலணிக்குழு எந்தவொரு குழுவிற்கும் விரோதமாக கருதப்பட மாட்டாது மற்றும் இது அனைத்து சமூகங் களின் கூட்டுறவு முயற்சியாகவும் கருதப்படுகிறது. மேலும், 'தொல்பொருள் தலங்கள் மற்றும்' வரலாற்று நினைவுச் சின்னங்கள்' ஆகியவை மாகாண சபை பட்டியலில் இருப்பதால், அரசியலமைப் பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம், கிழக்கு மாகாண சபைக்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி, செயலணிக்குழுவால் ஒரு ஆலோசனை அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும். இந்த தலங்களின் வெற்றிகரமான அகழ்வாராய்ச்சிகள் மற்றும் அவற் றிற்கான பாதுகாப்புகளை மேற்கொள்ள கிழக்கு மாகாணத்தின் இந்த பகுதிகளில் வாழும் கிராம சமூகத்தின் ஒத்துழைப்பை மிக முக்கியமாக பெறவேண்டும். அகழ்வாராய்ச்சி நடைபெறும் அந்த பகுதிகளில் விவசாயிகளின் நிலம் மற்றும் பயிர்செய்கையில் முடிந்தவரை தலையிடக்கூடாது என்பதையும், இந்த மக்களின் நிலங்கள் அத்தியாவசியமான இடங்களைத் தவிர்த்து கையகப்படுத்தக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

'பௌத்தத்தை ஊக்குவிப்பதில் வர்த்தக மற்றும் தமிழ் வர்த்தகர்களின் பங்கு என்ற அவரது கட்டுரையில் வழங்கப்பட்டிருந்த பல தகவல்களுகாக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் டாக்டர் டி. தயாளனுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். டாக்டர் தயாளன் தென்னிந்தியாவில் பவுத்தத்தின் எச்சங்கள் என்ற நூலின் ஆசிரியரும் ஆவார். இந்த புத்தகத்தின் வெளியீடு கொழும்பில் மே 2017 இல் தினேஷ் குணவர்தனவின் ஆதரவின் கீழ் இடம்பெற்றிருந்தது. செயலணிக்குழு தனது அணியில் சேர தனது பணியை வளப்படுத்தக்கூடிய அத்தகைய நிபுணர்களை அழைப்பது நல்லது.

செயலணிக்குழுவின் நோக்கம், கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூகங்களிடையே நம்பிக்கையையும் நட்பையும் வளர்ப்பதும் சமூகங்களிடையே பொதுவான கலாசார மற்றும் மத பிணைப்புகளைக் காண்பிப்பதன் மூலம், புத்த பிரானால் பரிந்துரைக்கப்பட்ட இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மையின் கொள்கைகளை கடைபிடிப்பதாகும். உள்ளூர் மக்களுடனான அவர்களின் தொடர்புகள். பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் போன்ற மதக் கோட்பாடுகள் எந்தவொரு குழுவினரின் கோட்பாடுகளாகவும், உலகளாவிய பொருந்தக்கூடியதாகவும், இலங் கையர்களுக்கு சொந்தமானவையாகவும் இருப்பதால், எந்தவொரு குழுவினரின் ஒரே பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை மனதில் வைத்து, முன்னையகால காலனித்துவவாதிகளின் சிலுவைப்போர் அணுகுமுறையை அவர்கள் கைவிட வேண்டும். எல்லா சமூகங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியதாக அணுகுமுறை அமைய வேண்டும்.

The Island

(13.06.2020 தினக்குரலில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் காட்டுரை)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates