Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பதுளை


இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர்வரும் அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு பதுளை அல்-அதான் முஸ்லிம் மகா வத்தியாலயத்தில் இலவச செயலமர்வை நடாத்த தீர்மானித்துள்ளது. இந் நிகழ்வு எதிர்வரும் யூன் 20 ஆம் திகதி(சனிக் கிழமை) வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்விற்கு பதுளை வலய உதவிக் கல்வி பணிப்பாளர்  திரு. வீ. கருணாகரன் பிரதம அதிதியாகக் கலந்துக் கொள்வார். வளவாளா்களாக தேசிய கல்வி நிறுவக தலமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதி முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார், தரண வெளிவாரி பட்ட பிரிவு நிறுவகத்தினர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்..

மு. நித்தியானந்தனின் "கூலித்தமிழுக்கு கனடாவில் விருது!



மலையக மக்களின் வரலாற்றை வெளியுலக மக்களுக்கு அறிமுகம் செய்துள்ள மு. நித்தியானந்தனின் "கூலித்தமிழ் நூலுக்கு கடனாவில் இயங்கிவரும் இலக்கியத்தோட்டம் அமைப்பினர் விருது வழங்கி கௌரவத்துள்ளனர்.

இந்த விருதை பெற்றுக்கொண்ட மு. நித்தியானந்தன் ஏற்புரையும் வழங்கினார்.

2014 ஆம் ஆண்டில் வெளியான புனை கதை சாராத நூல்களில் சிறந்த நூலாக எனது ‘கூலித்தமிழ்’ நூலைத் தேர்வு செய்து, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இந்த விருதிற்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த விருதினை ஈழத்தின் மலையக இலக்கிய மரபிற்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாக, மலையக இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட உயர் கௌரவமாக கருதுகிறேன்.

1869 ஆம் ஆண்டு ‘கோப்பிகிருஷிக்கும்மி’ என்ற கும்மிப்பாடலை இயற்றிய ஆபிரஹாம் ஜோசப்பிலிருந்து, நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை, இர.சிவலிங்கம், கே.கணேஷ், என்.எஸ்.எம்.ராமையா என்று மறைந்துபோன இலக்கிய ஆளுமைகளிலிருந்து,  இன்றும் மலையக இலக்கிய மரபை முன்னெடுத்துச் செல்லும் தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம், மாத்தளை வடிவேலன், மலரன்பன் ஆக்யோரையும் நினைவிலிருத்தி இந்த விருதினைப் பெறுவதில மனநிறைவடைகிறேன்.

 மலையகமக்களின் வரலாறு குறித்தும், அவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமைகள் குறித்தும் மலையகத்தில் முகிழ்ந்த அறிவுஜீவிகள் ஆழ்ந்த, விரிவான ஆய்வுகளை இன்று முன்னெடுத்து வருகின்றனர் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

 மலையகத் தொழிற்சங்க வரலாறு குறித்து அமரர் எஸ். நடேசனும், மலையக இலக்கிய முயற்சிகள் குறித்து அமரர் சாரல்நாடனும் மேற்கொண்ட சரித்திரப்பதிவுகள் விசேஷ கவனத்திற்குரியனவாகும்.

பேராசிரியர் சோ. சந்;திரசேகரம், பேராசிரியர் எம். சின்னத்தம்பி, பேராசிரியர் எம்.எஸ். மூக்கையா, எம். வாமதேவன், அ. லோறன்ஸ்,லெனின் மதிவானம்,  பெ. முத்துலிங்கம் ஆகியோர் தொடர்ந்து இத்துறைகளில் எழுதியும் பேசியும் வருகின்றனர்.    இவை மலையக மக்கள் மத்தியில் எழுந்துள்ள அறிவுஜீவிகள் தாம் சார்ந்த சமூகத்தின் மீது கொண்டுள்ள தார்மீக அக்கறையின் வெளிப்பாடுகள் ஆகும்.

கல்விப்புலத்தில் இன்று தெம்போடும் நம்பிக்கையோடும் கால்பதித்துவரும் இளையதலைமுறையினர் இந்தப்புலமைப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்பிக்கை கொள்ளும் நிலை இன்று சித்தித்துள்ளது.
  
 மலையக மக்களின் ஒன்றரை நூற்றாண்டுகால வாழ்வு துயர்மிக்கது; கொடூரமான சுரண்டலுக்குட்பட்டது.   இலங்கையைப் பொன் கொழிக்கும் நாடாக மாற்றிய இந்த மக்கள் கூட்டம்  இன்றும் அன்றாட நாட்சம்பள உழைப்பாளிகளாக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழலும் அவலம் இன்றும் தொடர்வது துரதிர்ஷடமானது.

தங்கள் வாழ்விடத்திற்காகவும், நாடசம்பள உயர்விற்காகவும் இன்றும் மலையக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மண்சரிவுகளில் அந்த மக்கள் புதையுண்டு போவதும், அந்த ஏழை எளிய மக்களின் லயங்கள் தீப்பற்றி எரிவதும் போன்று தொடரும் துயர் எப்போது நீங்கும் என்று தெரியவில்லை.

ஆண்டாண்டு காலமாய் இனவன்முறைக்கும், சட்டபூர்வமான புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்ட இச்சமூகத்தின் நிலை குறித்து கரிசனையும் சமூகநோக்கும் மலையக இலக்கியத்தின் அடிச்சாடாக மிளர்கிறது என்று கூறமுடியும்.

 மறைந்த என் இனிய நண்பரும் பேராசானுமான செல்வா கனகநாயகம் அவர்களின் நெறிகாட்டலில் இயங்கி வந்த கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய விருதுகளில் எனக்கு விமர்சனங்கள் எதுவும் இருந்ததில்லை.

உயர்ந்த நோக்கில்,  தங்களது இயல்புகளின் எல்லைக்குள் வழங்கப்பட்ட இந்த விருதுகள் உயரிய இலக்கியப்பணிகளை என்றும் அங்கீகரித்தே வந்துள்ளன.
செல்வா கனகநாயகம் என்ற அந்தப் பெருமகனுக்கு என் இதய அஞ்சலியைச் செலுத்தி,  இந்த ஏற்புரையை முடிவு செய்கிறேன்.  

நன்றி்  - கருடன்

1915 முதல் 2015 வரை! - அளுத்கம கலவரம் : 1 வருட நினைவு - என்.சரவணன்


நாளை 15 ஆம் திகதியோடு அளுத்கம கலவரம் நிகழ்ந்து ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. அது மட்டுமல்ல இந்த மாதத்தோடு கண்டிக் கலவரம் நிகழ்ந்து 100 வருடங்களும் ஆகின்றது. இந்த இரண்டையும் நினைவு கூறுவது என்பது வரலாற்றை தூசு தட்டி எழுப்புவது என்று அர்த்தமல்ல. மாறாக வரலாற்றில் மீள மீள நிகழ்ந்து வரும் ஒரே வகை போக்கைப் பற்றிய படிப்பினையை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

அளுத்கம சம்பவத்தின் பின்னால் ஒரு சிறு சம்பவமே காரணமென மேலோட்டமாக கூறப்பட்டாலும் அது அப்படியல்ல. மிகத் துல்லியமாக அப்பட்டமாக திட்டமிடப்பட்ட ஒன்று என்பது இன்று நாட்டிலுள்ள பலர் அறிந்த பரகசியம்.

அளுத்கம தொடக்கம்
கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் திகதி பொசன் போயா தினம். தர்கா நகர், ஸ்ரீ விஜயராம விகாரையின் பிக்குவான அயகம சமித்த தேரோ அன்று பகல் வாகன நெரிசல் நேரத்தில் தனது சாரதியுடன் வாகனத்தில் வந்துகொண்டிருந்த வேளை வாகன சாரதி தெருவில் கதைத்துக்கொண்டிருந்த இரு இளைஞர்களை ஒதுங்குபடி மோசமான தூசன வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இரு தரப்புக்கும் இடையில் நடந்த வாய்த்தகராறை அங்கு கூடிய மக்கள் சமாதானப்படுத்தி பிக்குவையும், சாரதியையும் பத்திரமாக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை தனக்கு அறிமுகமுள்ள பொதுபல சேனா பிரமுகருக்கு போட்டுகொடுத்துள்ளார் சாரதி. அங்கு தான் வந்தது வினை. முஸ்லிம்களுடன் முறுகிக்கொண்டிருந்த பொதுபல இப்படி ஓர் சம்பவத்துக்காகத்தான் நெடுநாளாக காத்திருந்தது. சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குவை அரச வைத்தியசாலையில் அனுமதிக்க செய்து அவர் தாக்கப்பட்டு கட்டிலில் கிடக்கிறார் என்கிற பிரசாரத்தை முடுக்கி விட்டது. சிங்கள ஊடகங்களும் இந்த சம்பவத்துக்கு கை கால் வைத்து ஊதிப் பெருப்பித்து நாடு முழுவதும் பரப்பி விட்டன.

போதாததற்கு சிங்கள இனவாத சமூகத்தளங்களினூடாக பொசன் போயா தினத்தன்று பிக்குவை தாக்கி விட்டனர் என்றும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் வேகமாக செய்தி பரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தர்கா நகர் பகுதி பதட்ட நிலைக்கு உள்ளானது. எதுவித அசம்பாவிதமும் நடக்காதிருப்பதற்காக அங்கிருந்த முஸ்லிம் பிரமுகர்களும், சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரும் சேர்ந்து அவர்களை அன்றே போலீசில் சரணடைய செய்திருக்கின்றனர். முஹமட் அஸ்தார், முஹமட் அமீன், முஹமட் அர்ஷன் ஆகியோர் அவ்வாறு ஆஜர் படுத்தப்படிருந்தனர். இந்த மூவர் பற்றிய விபரங்களை இனவாதப் பத்திரிகையான திவயின அவர்களின் விலாசங்களோடு செய்தி பிரசுரித்திருந்தது (14.06.2013).

12 ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களை தாக்குவதற்காக பிக்குமார் சகிதம் வந்த பெரும் கூட்டத்தை பொலிசாரும் இராணுவமும் கட்டுப்படுத்த முடியாதிருந்தனர். இறுதியில் ஒரு சில பிக்குமாரை பொலிஸ் நிலையத்துக்குள் அனுமதித்தனர். அவர்களோ உள்ளே சென்று அந்த மூவரையும் ஆத்திரம் தீர கடுமையாக தாக்கி காயப்படுத்திவிட்டு வந்தனர். யூன் 12 sinhala BBC சேவை அந்த சம்பவங்களின் காணொளியை வெளியிட்டிருந்தது.

மிக வேகமாக இனவாத பிரசாரத்தை நாடு முழுவதும் பரப்பியது பொதுபல சேனா. மிகப்பெரிய நாசச் செயலை செய்யுமுன் அதற்கான நியாயங்களையும், கற்பிதங்களையும் முன்கூட்டியே பரப்பும் கைங்கரியத்துக்கு பழக்கப்பட்டது இலங்கையின் இனவாத வரலாறு. சம்பவம் நடந்து மூன்றே நாட்களில் 15 அன்று மாபெரும் கூட்டமொன்றை சம்பவம் நடந்த அளுத்கமவில் ஒழுங்கு செய்தது. பாரிய அளவில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் உரையாற்றினார் ஞானசார தேரோ. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் பலர் வெளியிடங்களில் இருந்து பஸ்களில் இறக்கப்பட்டவர்கள். ஞானசாரவின் மோசமான இனவெறுப்பு பேச்சு குழுமியிருந்தவர்களை கரகோசம் செய்து வரவேற்கப் பண்ணியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“மகாசென் 969”
பொதுபல சேனாவின் முன்னணி அமைப்புகளில் ஒன்றான (front organisation) “மகாசென் 969” என்கிற பெயரிலேயே 15ஆம் திகதி அளுத்கமவில் கட்டவிழ்த்த காடைத்தனத்தை ஒழுங்கமைத்திருந்தது. அதே கூட்டத்தில் “மகாசென் 969” என்கிற பெயரில் உரிமைகோருகின்ற துண்டுபிரசுரமொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அதில்

“15ஆம் திகதி யூன் 2014 பிற்பகல் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் இன்னமும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பௌத்த விகாரைகளுக்கும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
தேசப்பற்றுள்ளவர்களே பௌத்த சீருடைகளுக்கு கை வைக்குமளவுக்கு எதிரிகள் விளைந்துள்ளார்கள். கௌரவம், பயம், வெட்கம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இது சிறு விடயமல்ல நாளை நம்மெல்லோரையும் பாதிக்கப்போகும் விடயம்.
இது நம் சிங்கள நாடு
நாம் பிறந்து... இறக்கும் நாடு...
இதற்கு எதிராக மாவனல்லை நகரத்தில் நடத்தப்படும் விசேட சத்தியாகிரகம் நடக்கவிருக்கிறது.
தேசத்தின் இக்கட்டான காலப்பகுதியில் உங்களனைவரையும் அழைக்கிறோம்.”
“மகாசென் 969”

இந்த “மகாசென் 969” என்கிற பெயரில் வெளியிடப்படுபவை வன்முறைக்கான ரகசிய அழைப்பென்றே சந்தேகிக்கப்படுகின்றது.

தற்போது ரோஹிங்கியாவில் முஸ்லிம்கள் மீதான படுகொலையின் பின்னணியில் இருக்கும் பௌத்த அமைப்பின் பெயரும் “969” என்பதே. இந்த அமைப்பு தொடர்ச்சியாக சில வருடங்களாகவே முஸ்லிம்களின் மீதான இனப்படுகொலையை நடத்தி வருகிறது. கடந்த வருடம் இந்த “969” அமைப்பின் தலைவர் அசின் விறாத்துவை போதுபல சேனா தமது மாநாட்டுக்கு தலைமை தாங்க வந்திருந்தவர் என்பது நாமறிந்ததே. பௌத்தர்கள் அல்லாதர்வர்கள் மட்டுமல்ல, தேரவாத பௌத்தர்கள் அல்லாதவர்கள் அனைவருமே அவர்களைப் பொறுத்தளவில் எதிரிகளாகவே கருதுகின்றனர்.

“969” என்பது பௌத்த அடிப்படை மூலங்களைக் குறிக்கும் எண்கள் அவை பௌத்தம், தர்மம், சங்கம். எனவே இந்த “969” என்கிற நாமத்தை முதன்மைபடுத்த பௌத்தர்களுக்கு அறைகூவல் விடுக்கின்ற சுலோகங்களை உலக பௌத்தர்களுக்கு விரிவாக்குகிறது இந்த இயக்கம்.

*மகாசேனன் (கி.பி. 334 - 362) : பௌத்த அந்தஸ்தை நிலைநிறுத்த  தமிழர்களுக்கு எதிராக போராடியதாக துட்டகைமுனுவுக்கு நிகராக மகாவம்சத்தில் போற்றப்படும் மன்னன் மகாசேனன். அக்காலத்தில் இருந்த சைவ கோயில்கள் பலவற்றை இடித்து விகாரைகளைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரம் மகாசென் மன்னனால் அழிக்கப்பட்டு பின்னர் மீளகட்டப்பட்டது வரலாறு.  மகாசேனனை சிலர் கடவுளாகவே வணங்குகின்றனர்.

ஆக இந்த “மகாசென் 969” என்கிற பெயரில் பௌத்தர்கள் அல்லாதவர்கள் மீதான தமது அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு தயார் செய்கின்றது என்றே கருத முடிகிறது.

“விழித்தெழு” நடவடிக்கை
15 ஆம் திகதி அளுத்கமவில் பொதுபல சேனாவால் நடத்தப்பட்ட கூட்டத்தின் தலைப்பு “விழித்தெழு”. இது பல ஆண்டுகளுக்கு முந்திய அநகாரிக்க தர்மபாலாவின் பிரசித்திபெற்ற இனவெறியூட்டும் உரையின் தலைப்பு. சிங்கள பௌத்தர்களை இனவெறியூட்டும் அந்த உரையின் தலைப்பை சமீப காலமாக பொதுபல சேனா சகல கூட்டங்களிலும் பாவித்துவருகிறது.

கூட்டத்தில் இனவெறியேற்றப்பட்ட மக்களும், பிக்குகளும், வெளியிடங்களில் பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய காடையர்களும் திட்டமிடப்பட்டபடி களத்தில் இறக்கப்பட்டார்கள். போலீசார் இவற்றை கண்டும் காணாததுபோலிருக்க பணிக்கப்பட்டிருந்தார்கள் என்றே அங்கிருந்த சாட்சியங்கள் கூறின. கண்துடைப்புக்காக தாம் தமது கடமையை செய்வதைப்போல காட்டிக்கொண்டார்கள் என்றும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறையில் ஈடுபட்ட காடையர்கள் கட்டுமீறி இருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த CCTVயில் பதியப்பட்டிருந்த ஆதாரங்களின்படி துப்பாக்கிகள், வாள்கள், இரும்பு ஆயுதங்கள், அலவாங்குகள், தடி பொல்லுகள், போத்தில்கள், பெட்ரோல் குண்டுகள் என இருந்திருக்கின்றன. வந்தவர்கள் அந்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் இல்லை, அவர்களை எப்போதும் கண்டதும் இல்லையென சிங்கள அயலவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் தெரிவித்திருந்தனர். ஞானசாரவின் கூட்டத்திற்கு பஸ்களில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டவர்களே தயாராக வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பிரயோகித்திருக்கக்கூடும் என்று பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான மொஹமட் அஸ்லம் ஜூன் 20 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி
“இச் சம்பவத்தில் தமிழர் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை மேலும் நான்கு பேர் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியால் மாரடைத்து மரணமாகினர். இதன்படி இந்த சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். 170 பேர் காயமடைந்துள்ளனர். 150 வீடுகள் ,கடைகள் மற்றும் 17 பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. 370 குடும்பங்களை சேர்ந்த 2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தால் 580 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு அழிவு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வர்த்தக நிலையங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதால் சுமார் ஆயிரம் பேர் வரையிலானோர் தொழில் வாய்ப்புகளை இழந்திருக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் தமது அனைத்து உடைமைகளையும் அது மாத்திரம் அன்றி 272 கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இங்கு 86 கொள்ளைச் சம்பங்களும் நடந்தேறியுள்ளன.” என்றார்

இதனை 1983ஆம் ஆண்டுக்குப் பின் நடந்த மோசமான கலவரமென பல ஊடகங்களும் குறிப்பிடுகின்றன.

இது குறித்து அசாத் சாலி குறிப்பிடுகையில்...
“பொதுபல சேனா இன்று கூட்டம் முடிந்து ஊர்வலமாக தர்கா நகருக்கு செல்லவிருக்கின்றனர் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கலாம் உடனேயே தடுத்து நிறுத்துங்கள் மீறி நடக்கும் அத்தனை அசம்பாவிதங்களுக்கு நீங்களும் அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று பொலிஸ் மாஅதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தோம். அப்படி இருந்தும் இதனை அனுமதித்தார்கள். இன்று இந்த படுகொலைகளுக்கும், சேதங்களுக்கும், இழப்புகளுக்கும் இப்போது யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்....
பல்கலைக்கழக மாணவர்கள் தமது கோரிக்கைகளுக்காகவும், சாதாரண அரசியல் கட்சிகள் தமது சிறிய கூட்டங்களுக்காகவும் அனுமதி கேட்டால் மறுப்பு தெரிவிக்கும் பொலிசாரும் அரசும் எப்படி இது போன்ற ஒரு இனவாத நடவடிக்கைக்கு அனுமதித்தார்கள். இப்படி நடக்கும் என்று புலனாய்வு தகவல்கள் கூட உறுதிசெய்திருந்தும். நாங்கள் எச்சரித்திருந்தும் பொலிசார் எப்படி அனுமதித்தார்கள்..." என்றார்.
ஊரடங்கு சட்டம் அமுலுக்கு கொணரப்பட்டு மக்களுக்கு உணவு கூட உள்ளே நுழையவிடாது தடுத்த போலீசார் காடையர்களை அனுமதித்தது எப்படி. வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டு, அழிக்கப்படும் வரை எங்கிருந்தார்கள். முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் படையினர் ஈடுபடுத்தப்படாதது ஏன். 

கோத்தபாயவின் பாத்திரம்
ஞானசார தேரோவின் உருவாக்கம் மற்றும் அவரை ஏவிவிடும் அம்பு என்பனவற்றின் பின்புலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ செயல்படுவதாக பலரும் நம்புகின்றனர்.

யூன் 27ஆம் திகதி வெளியான ராவய பத்திரிகையில் “கோத்தபாயவின் நிழல்” என்கிற தலைப்பில் ராவய பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதிகிறார்.

“...கோத்தபாயவுக்கும் ஞானசாரவுக்கும் இடையில் உள்ள உறவு அரசாங்கத்துக்குள் உள்ள அனைவருக்கும் தெரியும்.... அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மாத்திரமல்ல சில சிங்கள அமைச்சர்கள் கூட பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அளுத்கமவில் ஞானசாரவின் கூட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று கூறியிருந்தும் அந்த அதிகாரிகள் அதனை செவி சாய்க்காமல் இருந்ததன் காரணம் பாதுகாப்பு செயலாளர் ஏற்கனவே வழங்கியிருந்த அனுசரனையினாலேயே”

ஞானசார தேரோ அளுத்கம சம்பவத்தின் இரண்டாவது நாள் ஊடக சந்திப்பொன்றை கூட்டி இப்படி விளக்கினார்.

“புத்தர் அங்குலிமாலாவுக்கு சொன்னது போல... நாங்கள் உங்கள் எல்லோருக்கும் கூறுவது நாங்கள் நிறுத்தியிருக்கிறோம் நீங்கள் நிறுத்திக்கொள்ளுங்கள்.” என்று மிரட்டாமல் மிரட்டினார்.

யுத்தத்தின் பின்னர் ஏறத்தாழ தமிழ் மக்களின் அரசியல் ஒரு சவாலுக்குரிய ஒன்றாக இல்லை என்று ஆனதன் பின் முஸ்லிம் மக்கள் மீது அரசியல் நீக்க நடவடிக்கை வீச்சோடு ஆரம்பிக்கப்பட்டது எனலாம்.

இனி முஸ்லிம்களே உடனடி இலக்கு
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆயத்தமாகுமுன் முஸ்லிம்களுக்கு எதிரான கற்பிதங்களை புனைந்து. பரப்பி, நிறுவ வேண்டும். ஏற்கெனவே தமிழ் மக்கள் விடயத்திலும் இந்த கருத்துப்போரை வெற்றிகரமாக நிறுவியபின்னரே அரசியல் மற்றும் ஆயுத போராட்டத்தை துணிச்சலாக நடாத்தி முடித்தது. எந்த விலையை கொடுத்தும் போரை வெற்றிகொல்லும்படி தெற்கில் கிடைத்த ஆசீர்வாதம் இந்த கருத்துப்போரின் வெற்றியின் விளைவே என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

அதே வகை அணுகுமுறையே முஸ்லிம்கள் விடயத்திலும் கடைபிடிக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக இன்றல்ல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்ட வெறுப்புணர்ச்சி மேலிட்ட புனைவுகளை மேலதிக சேர்ப்புக்களுடன் புதுப்பித்து இன்றும் வலிமையாக நிறுவிவருகிறது.

வடக்கில் யுத்தத்தை முடித்த கையோடு தெற்கில் ஹலால் பிரச்சினையிலிருந்து அதன் அடுத்த வேட்டையைத் தொடக்கியது.

ஆக முஸ்லிம்களுக்கு எதிராக 100 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு முஸ்லிம்களின் வர்த்தகத்தை சிதைப்பது என்கிற பேரில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தாக்கங்களை பரப்பி இலங்கையின் முதலாவது இனக்கலவரத்தை சிங்கள பௌத்த பேரினவாதம் நடத்தி முடித்ததோ. அதே போல அந்த கறைபடிந்த வரலாற்றின் 100வது வருட நினைவை எட்டிக்கொண்டிருக்கும் போது அதே வர்த்தக காரணங்களை மையப்படுத்தி திட்டமிட்ட பிரச்சாரங்களை ஏற்படுத்தி ஒரு கலவரத்தையும் அளுத்கமவில் ஒத்திகை பார்த்திருக்கின்றது.

இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் தமிழ், சிங்கள, மலையக மக்களுக்கு எதிராக பல இனவாத கருத்துக்கள் உருவாக்கப்பட்டு அவை ஆழமாக நிலைக்கச்செய்திருந்தது பேரினவாத அமைப்புமுறை. அது போல பல பெரிய, சிறிய கலவரங்களையும் வெற்றிகரமாக நடத்தியும் காட்டியிருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இனவாத அரச கட்டமைப்புக்கு பல்வேறு தலைவர்களும், கட்சிகளும் தலைமை தாங்கியிருக்கின்றன. அரசு ஒருபுறம் அரச இயந்திரத்தை சிங்கள பௌத்த கட்டமைப்பாக மாற்றும் பணியை செய்துகொண்டிருக்க; அவர்களுக்கு நிகராக இனவாத அமைப்புகள் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை பலப்படுத்துவது, மக்கள்மயப்படுத்துவது அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவது என கடந்து வந்துள்ளது. அளுத்கம சம்பவம் ஒரு முடிவல்ல. அது ஒரு முடிவின் தொடக்கம்.

பெட்டிச் செய்தியாக இடக்கூடியது ஞானசாரவின் உரையின் சாராம்சம்

அளுத்கம கூட்டத்தில் ஞானசாரவின் உரையிலிருந்து
நமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக இன்றிலிருந்து அனைவரும் உத்தியோகபூர்வமற்ற போலீசாராக வேண்டும்.
இந்த நாட்டில் தமிழருக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். மரக்கலயன்களுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள்.. அய்யோ சிங்களவனுக்கு ஒரு தலைவனும் இல்லை. சிங்கவருக்கு தலைவரை இன்று உருவாக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறோம்.
இந்த நாட்டின் சக்கிலி அமைச்சர்கள் எங்களை இனவாதிகள் என்கிறார்கள்
நாங்கள் வீணடித்தது போதும் இனி நாங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிகால சந்ததியினர் நம்மை நிச்சயமாக சபிப்பார்கள்
இங்கு புத்தளம், காத்தான்குடி அம்பாறையில் இருந்து வந்த சண்டியர்கள் தான் தர்கா நகரில் இருக்கிறார்கள் (கூறும்போது கூட்டத்திலிருந்து “நாங்கள் வரவா” “நாங்கள் வரவா” என்று கத்துகிற சத்தம் கேட்கிறது)

இந்த பிரதேசத்தில் இருக்கின்ற சிங்கள அரசியல்வாதிகள் சரியாக பள்ளிவாசல்களுக்கு சென்று ஆண்குறி முனைகளை வெட்டி சுன்னத் செய்துகொண்டவர்களல்ல. அப்படி செய்தால் எல்லாம் தெரிந்துவிடுமல்லவா. இன்று சிங்களவர்களை போல இருப்பவர்கள் சிங்களவர்கள் அல்ல அவர்கள் ஆண்குறிமுனை அறுத்த “தம்பியாக்கள்”

சிங்கள வாக்குளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் சிங்களவர்களுக்காக கதைத்திருக்கிறார்களா... (மக்கள் மத்தியிலிருந்து “இல்லை... இல்லை...” என்கிற குரல்) அப்படியென்றால் போய் உங்கட அம்மாவோட சாரிக்குள்ள போய் வாக்கைக் கொடு.... இனியாவது உங்கள் வாக்குகளால் மக்களே சிங்களவர்களை தெரிவு செய்யுங்கள், பௌத்தர்களை தெரிவு செய்யுங்கள்.
நீங்களாக அடங்காவிட்டால் நாங்கள் அடக்க வேண்டிவரும். இரத்தத்திற்கு பழக்கப்பட்டவர்கள் நாங்கள்.

இல்லையேல் நாங்கள் அளுத்கமவிலேயே தொடங்குவோம்.

இனி நீங்கள் உங்கள் நிலத்தில் ஒரு சிறு துண்டைக்கூட முஸ்லிம்களுக்கு விற்காதீர்கள்

முஸ்லிம்கள் இந்த நாட்டை கைப்பற்றப் போகிறார்கள்,
இங்குள்ள தங்கமான இளைஞர்களை நோக்கி ஒரு வார்த்தை சொன்னாள் போதும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் இப்போது நிறுவனமயப்பட்டிருக்கிறோம்.

நாங்கள் பல இடங்களில் பாடம் கற்பித்திருக்கிறோம். இளைஞர்களே, யுவதிகளே உங்களுக்கு பொறுப்பு உள்ளது. உங்கள் போராட்டத்தை வீடுகளிலிருந்து தொடங்குங்கள்.

நீங்கள் அதிகம் ஆட்டம் போட்டால் அடுத்தது பேருவில, தர்காநகர், மக்கொன  எதுவாகவும் இருக்கலாம் நாங்கள் எங்கள் அளவுகளை காண்பிப்போம்.

”கல்வியில் மக்கள் பங்கெடுப்பதற்கான வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்” சம்மேளனத்தின் கல்விக் குழுத் தலைவர் எஸ். குமார்


அதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கு- கண்டி
(இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்)

கடந்த ஞாயிறு (07.06-2015) இலங்கை கல்விச் சமூக சம்மேளனர் அதிபர் தரம் 111 போட்டிப் பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கை  கண்டியில் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில்  ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் கண்டி வலய மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு. பி. ஸ்ரீதரன் கலந்து சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் ” கண்டி  பிரதேசத்தில் கல்வித் துறையில் வாண்மைத்துவ அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இத்துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் இங்கு வந்து இலவசக் கருத்தரங்குகளை நடாத்துவது வரவேற்றக்கத்தக்கது.  கல்வித் துறை மேம்பாட்டுக்கான பயிற்சிகள்  பாடசாலைக்குள்ளேயும் வெளியேயும் இடம்பெறுகின்றன. தற்காலத்தில் கல்வித் துறைச் சார்ந்தவர்கள் புதிய வகிபாகத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வாண்மைத்துவ அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இடமளிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வகையான செயலமர்வுகள் பரீட்சையை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல் கல்வித் துறைச் சார்ந்த அபிவிருத்திகளை நோக்கியும் பயணிக்க வேண்டும். இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர் இப் பணியை சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அவ்வமைப்பினருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து அவா்களது பணி தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்“ என்றார்.

சம்மேளனத்தின் நோக்கு, அதன் இயங்குதளம் குறித்து உரையாற்றிய சம்மேளனத்தின் கல்விக் குழு தலைவர் எஸ். குமார் தமது உரையில்

”மக்களிடம் ஒரு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். தேவைப்படும் கலாசார மாற்றத்தை கல்வித் துறையினூடாக ஏற்படுத்துவதற்கான மக்கள் பங்கேற்க கூடிய வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்.ஒரு ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் ஜனநாயக தன்மைக் கொண்டதாக இருக்க வேண்டுமானால் உறுப்பினர்கள் விவாதிப்பதற்கும், தங்களது கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதற்குமான திறந்த வெளிகளை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒருவகையில் இவ்வகையான செயலமர்வுகளின் ஊடாக இத்தகைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றோம். எமது இத்தகைய செயற்பாடுகள்  நாகரிகமிக்க சமுதாயத்தின் ஒரு பகுதி தேவையையாவது உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனபதை ஒரு துளி கர்வமும் இல்லாமல் பிரகடனப்படுத்திக் கொள்கின்றோம்.   "எனக் குறிப்பிட்டார்.

சம்மேளனத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் விளக்கினார்.வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். அதிபர்கள் சார்பில் திருவாளர்கள் மகேஸ்வரன்  கலந்துக் கொண்டார். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின்  உப தலைவர். ஆர். திலிப்குமார், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார், கலாசாரக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீறிஸ்கந்தராஜா,  கண்டி பிரதேச இணைப்பாளர் எஸ்.இரட்ணகுமார் ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் செயலமர்வில் கலந்துக் கொண்டனர்.

கண்டியில் அதிபர் தரம் 111 போட்டிப் பரீட்சைக்கான இலவச செயலமர்வு

இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர்வரும் அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு கண்டி கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் இலவச செயலமர்வை நடாத்த தீர்மானித்துள்ளது.
இந் நிகழ்வு எதிர்வரும் யூன் 14 ஆம் திகதி(ஞாயிறு) வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்விற்கு கண்டி வலய மேலதிக கல்வி பணிப்பாளரும் கல்வியியலாளருமான திரு. பி. ஸ்ரீதரன் பிரதம அதிதியாகக் கலந்துக் கொள்வார். வளவாளா்களாக தேசிய கல்வி நிறுவக தலமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார், எஸ். இரட்ணகுமார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையகத்தை சீரழிக்கும் முச்சக்கர வண்டி மோகம் - சி.கே.முருகேசு


பெருந்தோட்ட இளைஞர் மத்தியில் விஸ்வரூபமெடுத்துள்ள முச்சக்கரவண்டி மோகம் பல்வேறு சிந்தனைகளை தூண்டுவதாய் அமைந்துள்ளது. தேயிலை, இறப்பர் தோட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்களின் ஒரேயொரு கையிருப்பும் ஒரே சொத்தும் அவர்களது ஓய்வு பெறும் காலத்தில் கிடைக்கும் சேமலாப நிதியேயாகும். இந்த தொகையை நம்பி இவர்கள் காணும் கனவுகளோ அதிகம். அக்கனவுகளை-யெல்லாம் களைந்தெறியும் புதிய கலாசாரமாக இவ் ஆட்டோ கலாசாரம் உருவாகியுள்-ளது. 

எழுபது, எழுபத்தைந்து வயதினை எய்தியவர்களை தோட்ட குடிமனைகளில் காண்பதே அரிதாகும். அப்படியும் உயிரோடியிருப்பவர்கள் உடல் குன்றியும் நடைப்பி-ணங்களாகவும் வாடி வதங்கியும் காணப்படுகின்றனர். மிகக்குறைவான எண்ணிக்கை-யான பெற்றோரே பிள்ளைகளின் முறையான பராமரிப்புக்குள்ளாகியுள்ளனர். நலிந்து போயிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்களின் ஏக்கம் தமது வாழ்நாள் ஊதி-யத்தின் சேமிப்பாகிய சேமலாப நிதியை பிள்ளைகள் ஏப்பம் விட்டு விட்டார்கள் என்-பதே. 

பிள்ளைகளின் திருமணம் சொந்தக்காணி வீடு அல்லது வங்கியில் நிரந்தர வைப்பில் பணத்தை மூலதனம் செய்து வட்டியில் வாழ்க்கை நடத்துவதென பல்வேறு எண்ணங்கள் ஐம்பது வருடங்களின் பின்னர் சரமாரியாக வந்து போவது வழக்கம். 

ஆனால், அப்பாவின் அல்லது அம்மாவின் சேமலாப நிதி கிடைத்ததும் தானும் ஓர் முச்சக்கரவண்டிக்கு சொந்தமாகி விட வேண்டுமென்பது பிள்ளைகளின் கனவாக இன்று வியாபித்துள்ளது. இக்கனவை நிறைவேற்றிக்கொள்வதற்காக இவர்கள் அடம்பி-டிப்பதும் பலவந்தப்படுத்துவதும் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது. 

தோட்டத்தில் தாம் வசிக்கும் பிரிவில் தாம் குடியிருக்கும் லயத்தில் யாராவது ஒருவரிடம் முச்சக்கரவண்டியொன்று இருக்குமாயின் தானும் ஒரு வண்டிக்கு சொந்-தக்காரனாகி விட வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு தோன்றி விடுகிறது. 

பிள்ளை மலையேறி பாடுபடுவதை விட மழை, வெயில் என துன்புறுவதை விட அழுக்கு படாமல் உழைக்கட்டுமே என எண்ணி தமது வாழ்நாள் சொத்தை இவர்-களுக்கு தாரை வார்த்து விடுகின்றனர் பெற்றோர். இதன் விளைவாக பெருந்தோட்ட பகுதிகளை சேர்ந்த கடை வீதிகளில் அங்காடிகளை விட அதிகமாக முச்சக்கர வண்டி-களை காண முடிகின்றது. நகரில் தமிழ் இளைஞர்கள் முச்சக்கரவண்டிகளை தரிப்பி-டங்களில் வைத்து தொழில் புரிவதற்கு எதிராக இனவாத போக்குடன் நடந்து கொண்ட-வர்களையும் நடந்து கொள்பவர்களையும் கூட இப்பெருந்தோட்ட முச்சக்கரவண்டி இளைஞர்கள் கையூட்டி வசப்படுத்தி கொண்டு நூற்றுக்கணக்கில் நகர்ப்புறங்களில் அணிவகுத்து சவாரிக்கு காத்திருக்கின்றனர். 

ஒரு சிலர் தோட்டங்களில் தமது நாளாந்த தொழிலை பூர்த்தி செய்ததன் பின்னர் மேலதிக வருமானத்திற்காக தமது வசிப்பிடத்திலிருந்து கடை வீதிக்கு செல்பவர்களுக்-காக சவாரி வந்து போவதும் சிலர் மாலைவேளைகளில் முச்சக்கரவண்டி தரிப்பிடங்-களில் நின்று தொழில்புரிந்து மேலதிக வருவாயை ஈட்டிக்கொள்வதும் உண்டு. இவர்-களும் இவர்களது குடும்பங்களும் ஓரளவு வசதியுடனும் பிள்ளைகள் கல்வி வளர்ச்சி கண்டும் விளங்குவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. 

ஒரு சிலர் காலை முதல் மாலை வரை ஹோட்டல் சாப்பாடு, புகைத்தல் என்று உழைக்கும் பணத்தை வீண் விரயம் செய்கின் றனர். 

இன்னும் சிலர் தமது சகோதரிகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி அவர்கள் அனுப்பி வைக்கும் பணத்தில் பினேன்ஸ் கட்டிக்கொண்டு அப்பாவி பெண் பிள்ளைகளின் வாழ்க்கையையும் சீரழிப்பதையும் தோட்டங்களில் பரவலாக காணலாம். இந்த முச்சக்கரவண்டி தொழிலில் இறங்கி எத்தனை இளைஞர்கள் காணி வாங்கி-னார்கள்? எத்தனை பேர் வீடு கட்டினார்கள்? எத்தனை பேர் பிள்ளைகளை உயர்கல்விக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்? எத்தனை பேர் நகரில் கடை வைத்திருக்கிறார்கள்? என்று தேடிப்பார்ப்போமாகில் ஏமாற்றமே மிஞ்சும். 

நகரத்து வீதியில் நல்ல பொழுதை கழிக்கும் இவர்களுள் சிலர் தமது பாரம்பரிய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு நவீன யுகத்திற்குள் பிரவேசித்து குற்றச்செயல்-களில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக சவாரி போவதெல்லாம் பொலிஸாரால் கைது செய்யப்படும்போது அல்லது விபத்துக்கள் நிகழ்ந்த போது தான் வெளிச்சத்திற்கு வரு-கின்றது. 

அழுக்கு படாத நாகரிக உடையோடு தோன்ற வேண்டுமென்ற எண்ணத்தினால் போதிய வருவாய் இன்றி நாட்களை கழிக்கும் இவர்கள் நாளடைவில் உடலை வருத்தி உழைக்கும் தன்மையை இழந்து சோம்பேறிகளாக மாற்றம் காண்கின்றனர். 

இந்நாட்டு அரசியலாளர்களாக இருக்கட்டும், ஏனைய சமூகங்களாக இருக்கட்டும் இவர்களிடமிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென தனித்துவமான மதிப்பும் மரி-யாதையும் ஒரு விடயத்தில் இருந்ததுண்டு. அது இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சமூகம் என்பதாகும். தேயிலை, இறப்பர் மூலம் வெளி-நாட்டு பொருளாதாரத்தை பேணிய சமூகமாக அனைவருமே ஏற்றுக்கொண்டனர். அதன் காரணமாகவே குடியுரிமை முதல் கல்வி சுகாதார குடியிருப்பு தேவைகளை பற்றிய குரல்கள் எழும்போதெல்லாம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடிகின்றது. 

க.பொ.த (சா/த)கல்வி தேர்ச்சி கூட அற்றவர்கள் அரச தனியார் உத்தியோகங்-களை பெறுவது இயலாத விடயம். எனினும், பெருந்தோட்டங்களில் வெளிக்கள தொழிற்சாலை தொழில்களில் தாராளமாக ஈடுபட வாய்ப்புண்டு. நாளாந்த வேதனம் மேலதிக கொடுப்பனவு சேமலாப நிதி ஓய்வூதியம் என சலுகைகளும் உண்டு. காலை முதல் இரவு வரை வண்டிக்குள் அமர்ந்து கொட்டாவி விடுபவர்கள் இப்பெருந்தோட்ட தொழிலை பாதுகாக்கலாம். 

காணி வேண்டும், வீடு வேண்டுமென்று கோரிக்கை விடும்போது தோட்டத்தில் தொழில் செய்யாமல் கடைத்தெருவில் ஆட்டோ தரிப்பிடத்தில் காத்திருப்பவர்கள் முன்னுரிமை கோரும்போது நிராகரிக்கப்பட்டால் அது எவரது தவறுமாகாது. 

இதேவேளை முச்சக்கரவண்டி வருமானத்தின்மூலம் காணி, வீடு மற்றும் சொத்-துக்கள் வாங்கி நல்ல நிலைமையில் இருக்கும் பலரைக் காண்கிறோம். அவர்கள் உழைப்பையே உயர்வாக மதித்து, வீண் செலவைத் தவிர்த்து, வருமானத்தை சேமித்-துள்ளனர் அதனால் அவர்கள் தமது குடும்பத்தையும் நல்ல நிலைமையில் வைத்திருக்-கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது. 

பெருந்தோட்ட தொழில் என்பது இழிவான அல்லது மரியாதைக்குறைவானதா-கவே கருதப்படக்கூடிய தொழிலன்று. இன்று வெளிக்களமாக இருந்தாலென்ன தொழிற்-சாலைக்குள்ளாக இருந்தாலென்ன உத்தியோகத்தர்களிடமிருந்தும் துரைமார்களிடமி-ருந்தும் மரியாதை குறைவான வார்த்தைகள் வெளி வருவதில்லை. வர முடியாது. நன்றாக உடுத்தி கொண்டும் காலணிகளை அணிந்து கொண்டும் வேலைக்கு செல்-வதை தடுக்க முடியாது. 

எனவே நகர சந்திகளில் காய்ந்து கொண்டிராமல் குடியிருக்கும் தோட்டத்து தொழிலை மேற்கொண்டு மனைவி, பிள்ளைகளுடன் நலமே இல்லற வாழ்வு வாழ வழி தேடுவதே சாலச் சிறந்தது. 

 நன்றி - வீரகேசரி

நியமனத்தின் போதே இடமாற்றம் கேட்கும் ஆசிரியர்களின் செயற்பாடு சரிதானா? - எஸ். தியாகு



மலையகத்தில் தொழில்வாய்ப்பு மிக வும் குறைவாகவே காணப்படுகின்றது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக அரசாங்க வேலைகளுக்கு விண்-ணப்பிக்கின்ற பொழுது மலையக இளைஞர், யுவதிகளுக்கு அதற்கான கல்வித்தராதரம் போதாமல் இருக்கின்றது. தவிர இளைஞர், யுவதிகள் வர்த்தமானி அறிவித்தல்களை முறையாகப் பார்வையிட்டு அதற்கேற்றவாறு விண்ணப்பிப்பதில்லை. இப்படி பல குறைபாடுகள் இருக்கின்றன. 

ஆனால், ஆசிரியர் தொழில் மட்டுமே மலை 

யகத்தில் பலருக்கு தற்பொழுது கிடைத்து வருகின்றது. பெருந்தோட்ட இளைஞர், யுவதி 

களை மையப்படுத்திய பல நியமனங்கள் கடந்த காலங்களிலும் தற்பொழுதும் வழங்கப்படுகின்றன. இது தவிர கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சிபெற்று வெளியேறு-கின்றவர்களுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இப்படி பல வழிகளி லும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், இன்னும் அநேகமான பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகின்றது. ஒரு சில நகர்ப்புறப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக இருப்பதா-கவும் கூறப்படுகின்றது. அப்படி இருக்கின்ற பல ஆசிரியர்கள், நேர அட்டவணை கூட இல்லாமல் பாடசாலைகளில் வீணாகப் பொழுதை கழித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்குக் காரணம் என்னவென்று சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதன் மூலம் யாருடைய தனிப்பட்ட மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை. இதன் மூலமாக பல விடயங்களை வெளிக்கொணர வேண்டும் என்பதே நோக்கமாகும். 

ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகின்ற பொழுது பெரும் எண்ணிக்கையிலானோர் விண்ணப்பிப்பார்கள். சிலருக்கு மாத்திரமே 

அவர்களின் தகுதி அடிப்படையில் நியமனங் கள் வழங்கப்படும். ஆனால் இந்த தொழிலை பெற்றுக் கொண்ட பலரும் தங்களுக்கு வழங்கப்படுகின்ற பாடசாலைக்கு செல்ல முடி யாது என்ற காரணத்தை காட்டி தமது நியமனத்தின் போதே இடமாற்றத்-திற்கு விண்ணப்பிக்கின்றார்கள். ஆனால் இது எந்த வகை யிலும் நியாயமான ஒரு விடயமாகக் கருதமுடியாது. 

அரசாங்க வேலைக்காக நியமனம் பெறுகின்றவர்கள். இலங்கையின் எந்தப் பகு-தியிலும் தமது தொழிலைச் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியே நியமனத்தை பெறுகின்றனர். ஆனால் நியமனம் பெற்றுக் கொண்டு வந்தவுடன் அனைத்தும் தலைகீழாக மாறிவிடுகின்றது. தூரப் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது தங்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன என இடமாற்றம் வேண்டி அரசியல் தலைவர்களிடம் செல்வதை ஒரு வழக்கமாக இந்த ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றனர். 

ஆனால், அரசாங்க உத்தியோகத்தர்களைப் பொறுத்தவரையில் இவர்கள் மாத்தி-ரமே இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். காரணம் வேறு எந்த அரசாங்கத் தொழில் செய்கின்றவர்களும் இப்படி நடந்து கொள்வதில்லை. உதாரணமாக தாதியர்களாக நிய-மனம் பெறுகின்றவர்கள் அவர்களுக்கு எங்கே நியமனம் வழங்கப்படுகின்றதோ அங்கே சென்று கடமையைச் செய்கின்றார்கள். ஆனால் அதனை ஏனோ ஆசிரியர்களால் செய்ய முடிவதில்லை. 

பின்தங்கிய பகுதிகளுக்கு சென்று இவர்கள் கடமையைச் செய்யாவிட்டால் அர-சாங்கம் அங்கிருக்கின்ற பாடசாலைகளை எவ்வாறு நிர்வகிக்கும்? அல்லது அங்கிருக்-கின்ற மாணவர்களின் நிலை என்ன? அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட சிலர் மாத்-திரம் என்றுமே பின் தங்கிய பகுதிகளில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இருக்கின்றதா? ஆசிரியர்கள் சமூக ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டும். 

எல்லா ஆசிரியர்களையும் இங்கு குறிப்பிடவில்லை. ஒரு சிலர்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இடமாற்றத்திற்காக இவர்கள் கூறும் பொதுவான காரணங்கள் தாயை நான் தான் பார்த்துக் கொள்ள வேண் டும், தந்தைக்கு சுகமில்லை, வேறுயாரும் இல்லை, எனக்குப் பல நோய்கள் இருக்கின்றன. எனவே நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது இது போன்ற காரணங்களையே அநேகமானவர்கள் கூறுகின்றார்கள். 

அப்படியானால் அவர்கள் கொடுத்திருக் கின்ற வைத்திய சான்றிதழ் போலியா-னதா? என்ற சேள்வி எழுகின்றது. எத்தனை ஆசிரி யர்கள் இன்று சமூக உணர்வுடன் செயற்படுகின்றார்கள் என்பதும் ஒரு கேள்விக்குறியே? பாடசாலைக்கு காலையில் நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அதிபர்கள் இருக்கின்றார்கள். எல்-லோரும் அல்ல ஒரு சிலர்தான் இப்படி இருக்கின்றனர். இவர்கள் மாணவர்களுக்கு நேரத்தை முகாமைத்துவம் செய்வது எப்படி என்று எவ்வாறு பாடம் நடத்த முடியும். 

பாடசாலை நிறைவடைவதற்கு முன்னால் எத்தனை ஆசிரியர்கள் பாடசா-லையை விட்டு வெளியேறிவிடுகின்றார்கள். ஆனால் கடந்த 25–30 ஆண்டுகள் பின்-நோக்கிப் பார்த்தால் அன்று எந்த வசதியும் இல்லாமல் ஆசிரியர்கள் சிறப்பாக செயற்-பட்டதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். இன்று ஒரு சில சிக்கல்களும் ஆசிரியர்களுக்கு இருப்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். இன்று மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்க முடியாது. அப்படித் தண்டித்தால் உடனே பொலிஸ் முறைப்பாடு, மனித உரிமை ஆணைக்குழு என பல பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளன. இதன் காரணமாகவோ ஏனோ தானோ என ஒரு சில ஆசிரியர்கள் நடந்து கொள்கின்-றார்கள். 

ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டாலும் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப் பாடசாலையிலேயே தங்கிவிடுகின்றனர். இந்த நாட்டின் சட்டத் தைக் கடைப்பிடிக்க வேண்டியது அனைவ-ரதும் கடமையாகும். இப்போது கல்வித் திணைக்களத்துக்கும், கல்வி அமைச்சருக் கும் எதிராக போராட்டங்கள் நடத்துவது ஒரு வழமையாகிவிட்டது. 

போராட்டங்கள் உண்மையான விடயங்களுக்குத் தேவைதான். ஆனால் சட்-டத்தை அமுல்படுத்தவிடாமல் போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயமானது என்பது புரியவில்லை. மேலும் அரசாங்கம் பாரிய அளவில் நிதியை செலவு செய்து ஆசிரியர்களை பயிற்றுவித்துப் பாடசாலைகளுக்கு அனுப்புகின்ற பொழுது, அவர்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது. அவர்களுடைய கடமையை உணர்ந்து செயற்பட வேண்டி-யது அவர்களுடைய பொறுப்பாகும். சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும் சமூக உணர்-வுடனும் செயற்படுகின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். 

பல மைல்கள் கால்நடையாக நடந்து சென்று தமது கடமைகளை செய்கின்ற ஆசிரியர்களை நிச்சயமாகப் பாராட்ட வேண் டும். ஒருசில பாடசாலைகளில் நிர்வாகம் மிகவும் மோசமாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும். பாடசாலையின் சூழல் எந்த-விதமான பராமரிப்பும் இன்றிக் காணப்படுகின்றது. ஒரு சில பாடசாலைகளில் அரசியல் நடைபெறுகின்றது. இது குறிப்பாக மலையக பகுதிகளிலேயே அதிகம் நடைபெறுகின்-றது. கல்வி கற்ற சமூகம் ஏன் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்கின்றார்கள் என்-பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. 

நீங்கள் திறமையுடையவராக இருந்தால் நீங்கள் யாருடைய பின்னாலும் செல்ல வேண்டிய அவசியமில்லை. 

இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். அதிபர் ஒருவர் ஒரு கூட்டத்தில் பேசும் போது, நீங்கள் உங்களுடைய தொழிலுக்கு சலாம் போடாவிட்டால் மற்ற அனைவருக்கும் சலாம் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அது ஒரு தற்காலிக ஊழியராக இருந்தாலும் அவருக்கும் நீங்கள் சலாம் போடவேண்டி வரும். எனவே என்-றுமே உங்கள் தொழிலுக்கு சலாம் போட பழகிக் கொள்ளுங்கள் என்றார். இது முற்-றிலும் உண்மை. இன்று சில பாடசாலைகளில் நிலைமை இப்படித்தான் இருக்கின்றது. 

நன்றி - வீரகேசரி

தமிழ் முற்போக்கு கூட்டணி தடம் பதிக்குமா? – என்னென்ஸி



வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களை ஒன்றிணைத்து அவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. 

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று கட்சிகளுக்குமிடையில் கடந்த 3 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பி.திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மற்றும் மலை-யக மக்கள் முன்னணி அரசியல் பிரிவு தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரு-மான வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கைச்சாத்திட்டனர். 

இந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக ஜனநாயக மக்கள் முன்-னணி தலைவரும் பிரதித் தலைவர்களாக தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம் மற்றும் மலையக மக்கள் முன்னணி அரசியல் பிரிவுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் தெரிவாகினர். கூட்டணியின் பொதுச் செயலாளராக மலைய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் நியமிக்கப்பட்டார். 

இந்தக் கூட்டணி, தேர்தல் காலத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு உருவாக்-கப்பட்டதல்ல என்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் வாழும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதென்றும் கூட்டணியின் தலைவர்கள் கூறினர். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் மலையகம் உட்பட ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் உரி-மைகளையும் அபிலாஷைகளையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தக் கூட்டணி செயற்-படும் எனவும் தெரிவித்தனர். 

எவ்வாறெனினும் இந்தக் கூட்டணியில் மூன்று கட்சிகள் மட்டுமே இணைக்கப்-பட்டுள்ளன. மலையகத்தைப் பொறுத்தவரையில் மேலும் பல கட்சிகள், தொழிற்சங்-கங்கள் இருக்கின்றன. அந்தக் கட்சிகள் இக்கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்பட-வில்லை. அந்தக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அந்தக் கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ள மறுப்பு தெரிவித்தனவா என்று தெரிய-வில்லை. 

கடந்த சப்ரகமுவ மாகாண சபை தேர்தலின் போது சில மலையகக் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. தேர்தல் முடிந்ததும் கூட்-டணி காணாமல் போனது. அவ்வாறானதொரு நிலைமை இந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். 

மலையகத்தைப் பொறுத்தவரையில் தொழிற்சங்கம் சார்ந்த அரசியல் கட்சிகளே காணப்படுகின்றன. அதாவது தொழிற்சங்கங்களே அரசியல் பங்கினையும் வகித்து வரு-கின்றன. 

இன்றுவரை ஒருமுழுமையான அரசியல் கட்சி உருவாகவில்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்கனவே தவறவிடப்பட்டுள்ளன. மலையகத் தலைமைகள் இதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. 

எனவே, தமிழ் முற்போக்குக் கூட்டணி அந்த தேசிய அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு முன்வருமானால் அது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாக அமையும் அதுவே தற்போதைய மலையக மக்களின் தேவையுமாகும். அதனூடாகவே அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

நன்றி - வீரகேசரி

நாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்" - ஆர். சங்கரமணிவண்ணன்


இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரியில் அதிபர் தரம் 111 போட்டிப் பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கைஇன்று ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி. ஆர். கலாரமணி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் ” பலாங்கொடை பிரதேசத்தில் கல்வித் துறையில் வாண்மைத்துவ அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இத்துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் அர்பணிப்புணர்வுடன் இங்கு வந்து இலவசக் கருத்தரங்குகளை நடாத்துவது வரவேற்றக்கத்தக்கது. இவ்வாறான செயலமர்வுகளை ஒழுங்கமைத்த இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து அவா்களது பணி தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்“ என்றார்.

சம்மேளனத்தின் நோக்கு, அதன் இயங்குதளம் குறித்து உரையாற்றிய பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் தமது உரையில்”தனிநபர்களின் தனித்துவங்களையும் வேறுப்பாடுகளையும் கருத்திற் கொண்டு பொது இலக்கொன்றிக்காக ஒன்று சேர்ப்பது எமது இலக்காகும். இவ்வமைப்பு ஜனநாயக தன்மைக் கொண்ட அமைப்பாகும். நாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்"எனக் குறிப்பிட்டார்.

வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். அதிபர்கள் சார்பில் திருவாளர்கள் தம்பிராஜ், எம். கணேசராஜ், எம். வேல்முருகன் ஆகியோரும் கலந்துக் காண்டனர். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார், தே. கணேசன்,பாலாங்கொடை பிரதேச இணைப்பாளர் பி. பிரதீபன், ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தனர்.

தேர்தல் முறை திருத்தம் : ஜனாதிபதிக்கு ஓர் பகிரங்க கடிதம்


இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு - 01
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள்,
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம்

மலையக மக்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு
செய்துள்ளதோடு, காலத்திற்கு காலம் தேசிய அரசியல் மாற்றத்திற்கும் உந்து சக்தியாக இருந்து வருகின்றனர். இம்மக்களின் அரசியல் வலுப்பெற அரசியல் யாப்பின் 20ஆம் திருத்தமான தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் எமது ஆலோசனைகளை முன் வைக்கின்றோம். எமது ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தேர்தல் சட்டத் திருத்தக் குழு செயற்பட்டு அமைச்சரவைக்கு ஆலோசனைகளை வழங்குமென எதிர்பார்கின்றோம்.

நன்றி,

இங்ஙனம்,

மலையக சக ஆய்வு மையம்
மலையக பாட்டாளிகள் கழகம்
மலையக சிவில் சக அமைப்புக்களின் கூட்டிணைவு

தேர்தல் முறை மறுசீரமைப்பில் மலையக மக்களின் பங்கு

அறிமுகம்

இலங்கையில் வாழும் பிரதான தேசிய இனங்களின் ஒன்றான மலையகத் தமிழர் இன்றைய இலங்கையின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 15 இலட்சம் ஆகும். அதாவது, மொத்த சனத் தொகையில் 7.27 ஆகும். உத்தியோகபூர்வ கணக்கெடுப்புகள் இத்தொகையை குறைத்தே காட்டுகின்றன. இதற்குப் பிரதான காரணம் மலையகத் தமிழில் அநேகர் தங்களை இலங்கைத் தமிழர்களாக பதிவு செய்துள்ளமையே ஆகும். மலையகத் தமிழர் நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு, இரத்தினப்புரி, கேகாலை, மாத்தளை, புத்தளம், மாத்தறை, களுத்துறை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பரந்து வாழுகின்றனர்.

இலங்கையில் 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குமை அறிமுகப்படுத்தப்பட்ட போதே மலையகத் தமிழன் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அன்று நாடு முழுவதிலும் உருவாக்கப்பட்ட 50 தொகுதிகளில் மலையகத் தமிழருக்கு இரண்டு தொகுதிகள் (ஹட்டன், தலவாக்கலை) ஒதுக்கப்பட்டிருந்தன. 1947இல் 101 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் மலையகத் தமிழர் சார்பில் 08 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மேலும், பதுளை மற்றும் பலாங்கொடை என்பன இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாகவும் காணப்பட்டன. இருந்த போதிலும் சோல்பரி ஆணைக்குழு குறித்த தொகுதிவாரி தேர்தல் முறையின் கீழ் 14 அங்கத்தவர்களை குறித்த பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு மலையகத் தமிழருக்கு உள்ளதாக வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையிலேயே 1948ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலங்கை குடியுரிமை சட்டம், 1949ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய - பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் மற்றும் தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பன காரணமாக மலையகத் தமிழர் தங்கள் அனைத்து விதமான அரசியல் உரிமைகளையும் இழந்தனர்.

1948ஆம் ஆண்டு இழந்த குடியுரிமையை முழுமையாக பெறுவதற்காக 2003ஆம் ஆண்டு வரை போராட வேண்டி இருந்தது. இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே எமது மக்களின் பெருந் தொகையானோர் அவர்களின் அனுமதியின்றி இந்தியாவிற்கு பலாத்காரமாக நாடு கடத்தப்பட்டனர். இந்நிலையிலும் கூட இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப இன்றைய பாராளுமன்றத் தேர்தல் முறைமையின் கீழ் 16 உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால், பத்திற்கும் குறைவானவர்களே பாராளுமன்றத்தில் உள்ளனர்.

விகிதாசாரத் தேர்தல் முறைமை

ஜனநாயக விழுமியங்களின் ஒன்றான சுயாதீனமான தேர்தல் முறைமையில் மக்களின் தெளிவினை உச்சளவில் பிரதிபலிக்கும் ஒரு முறையாக விகிதாசார தேர்தல் முறைமை விளங்குகின்றது. இன்று உலகில் பல நாடுகளும் இந்த முறைமை பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளன. இம்முறைமை அனைத்து இன மக்களுக்கும் சார்பானது.

இலங்கையில் மலையகத் தமிழரை பொறுத்தமட்டில், சிதறி வாழும் மலையகத் தமிழ் மக்களை ஒரு அரசியல் அடையாளத்திற்குள் இணைப்பதற்கு இம்முறைமை உதவி உள்ளது. மாகாண சபைகளிலும், உள்ளுராட்சி சபைகளிலும் பிரதிநிதித்துவத்தை பெறக் கூடியதாக உள்ளது.

இந்த விகிதாசார தேர்தல் முறையில் அனைத்து இன மக்களுக்கும் சரியான பிரதிநிதித்துவத்தை வழங்கக்கூடிய விதத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதனூடாக இலங்கையில் வாழும் அனைத்து இனக்குழுமங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விகிதாசார தேர்தல் முறைமையில் தேவையான மாற்றங்களை கொண்டு வருவதனூடாகவும், விகிதாசார தேர்தல் முறைமையினை பாதுகாப்பதனூடாகவும் உறுதி செய்யலாம்.

குறிப்பாக மலையகத் தமிழர்களை பொறுத்த மட்டில் அவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மீள் நர்ணயம் செய்வதனூடாக இம்மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யலாம். உதாரணமாக, பதுளை மாவட்டத்தின் பல தேர்தல் தொகுதிகளில் பிரிந்து காணப்படும் மலையகத் தமிழர், செறிந்து வாழும் மலைத் தொடரை குறித்த தொகுதிகளிலிருந்து பித்தெடுத்து ஒரு தனி தேர்தல் தொகுதியாக மாற்றி அமைத்தல் வேண்டும். அதே போன்று வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட ஹங்குரன்கெத்த தொகுதி மீண்டும் கண்டி மாவட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இது போன்றே நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மலையகத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களில் இம்மக்களின் குடிசன செறிவுக்கமைய புதிய உள்ளுராட்சி நிறுவனங்களையும் உருவாக்குதல் வேண்டும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை

உத்தேச தேர்தல் முறையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 இருக்கும் என அறிய முடிகிறது. இந்த முறைமை தொகுதிவாரி, மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டம் என மூன்று பகுதிகளை கொண்டிருப்பதுடன், தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைமையின் கலப்பாகவும் இருக்கும் எனவும் அறிய முடிகிறது. இந்நலையில், உத்தேச தேர்தல் முறையில் மலையகத் தமிழன் பிரதிநிதித்துவம் உரிய வகையில் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

நுவரெலியா மாவட்டம்
1.1   இன்றைய நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதியானது 300,000 மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட பல்அங்கத்தவர் தொகுதி ஆகும். இத்தொகுதியானது 75,000 வாக்காளர்களைக் கொண்ட நான்கு தேர்தல் தொகுதிகளாக மீள் நிர்ணயம் செய்தல் வேண்டும்.

1.2   கொத்மலை தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

1.3   வலப்பனை தேர்தல் தொகுதிக்கு அண்மித்த ஹங்குரன்கெத்த தேர்தல் தொகுதியின் தோட்டப் பிரதேசங்கள் வலப்பனை தேர்தல் தொகுதியுடன் இணைக்கப்பட்டு வலப்பனை தேர்தல் தொகுதியானது இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

1.4   வலப்பனை தொகுதியுடன் இணைக்கப்பட்ட தோட்டப் பிரதேசங்கள் தவிர்ந்த ஹங்குரன்கெத்த தேர்தல் தொகுதியின் ஏனைய பிரதேசங்கள் மீண்டும் கண்டி மாவட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

பதுளை மாவட்டம்
2.1   பசறை, பதுளை, பண்டாரவளை தேர்தல் தொகுதிகளின் மலையகத் தமிழர் செறிவாக வாழும் தொடர் பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு தனி தொகுதியாக உருவாக்கப்பட வேண்டும்.

2.2   அப்புத்தளை மற்றும் ஹாலிஎல தேர்தல் தொகுதிகள் பல்அங்கத்தவர் தொகுதிகளாக மாற்றப்பட வேண்டும்.

கண்டி மாவட்டம்
3.1   பஸ்பாகேகோரளை மற்றும் உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவுகள் இணைக்கப்பட்டு தனி தேர்தல் தொகுதி உருவாக்கப்பட வேண்டும். தெல்தொட்ட, தொலுவ பிரதேச செயலகப் பிவுகளின் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளும் இதனுடன் இணைக்கப்பட வேண்டும்.

3.2   பாததும்பர தேர்தல் தொகுதியின் பன்விலை பிரதேச செயலகப் பிரிவுடன் குண்டசாலை தேர்தல் தொகுதியின் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் இணைக்கப்பட்டு தனித்தொகுதி உருவாக்கப்பட வேண்டும்.

கொழும்பு மாவட்டம்
4.1   மத்திய கொழும்பு தொகுதியின் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் கொழும்பு வடக்கு தொகுதியுடன் இணைக்கப்பட்டு கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

4.2   கொழும்பு கிழக்கும், பொரளைத் தேர்தல் தொகுதியும் இணைக்கப்பட்டு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட வேண்டும்.

4.3   கொழும்பு மேற்கும், கொழும்பு தெற்கும் இணைக்கப்பட்டு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட வேண்டும்.

மாவட்ட விகிதாசார முறைமை (னுPசு)
5.1   கீழ் குறிப்பிடப்படும் மாவட்டங்களில் மலையகத் தமிழன் பிரதிநதித்துவத்தை மாவட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் உறுதி செய்வதற்கு பொருத்தமான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

5.1.1  நுவரெலியா
5.1.2  பதுளை
5.1.3  கண்டி
5.1.4  இரத்தினபுரி
5.1.5  கொழும்பு
5.1.6  கேகாலை
5.1.7  மாத்தளை
5.1.8  களுத்துறை
5.1.9  புத்தளம்

5.2   இரட்டை வாக்களிப்பு முறைமையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக மாவட்ட மட்ட விகிதாசார முறையிலான தெரிவினையும் வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

பொது
6.1   அறிகப்படுத்தப்படும் புதிய தேர்தல் முறைமையானது ஜெர்மனிய முறையை ஒட்டியதான 50:50 முறைமையாக (507 தொகுதிவாரி ஊடாகவும், 507 விகிதாசாரம் ஊடாகவும் தெரிவு இடம்பெறும்) இருத்தல் வேண்டும்.

6.2   தொகுதிகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மீள் நிர்ணயத்தின் போது மலையகத் தமிழன் இனச் செறிவு, இன விகிதாசாரம் மற்றும் புவியியல் தொடர்ச்சி என்பன எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் அமைதல் வேண்டும்.

6.3   மாவட்ட அடிப்படையில் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போதும், தேசிய பட்டியலின் மூலம் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போதும் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும்.

6.4   பல் அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்கும் போது இருமொழி பிரதேச செயலகங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மலையக சக ஆய்வு மையம்
மலையக பாட்டாளிகள் கழகம்
மலையக சிவில் சக அமைப்புக்களின் கூட்டிணைவு.

மலையக அரசியல் கூட்டணி உதயம் - டி.ஷங்கீதன்


மலையகத்தில் முதன் முறையாக அரசியல் கூட்டணி புதன்கிழமை (3) கொழும்பில் உதயமாகவுள்ளது. இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மகாநாட்டில் வெளியிடப்படவுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மலையகத்தின் முக்கியத் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் பலர் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது

கடந்த இரண்டு வருடங்களாக மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து வந்தனர்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக கொட்டகலையில் போராட்டம் ஒன்றையும் இந்த கூட்டணி ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியிலேயே மலையக கூட்டணி ஒன்றின் முக்கியத்துவம் தொடர்பாக அனைவராலும் பேசப்பட்டு வந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு மட்டத்தில் நடைபெற்று வந்ததோடு மலையக புத்திஜீவிகள் பலரும் இந்த கூட்டணி தொடர்பாக வலியுறுத்தி வந்தனர்.

இதன் அடிப்படையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோர் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்ததை தொடர்ந்து இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான கே.வேலாயுதமும் கொள்கை ரீதியில் இணைந்து செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இந்த தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது.
அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் அதனை வரவேற்றுள்ளதோடு இந்த கூட்டமைப்புடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டமைப்பின் பெயர் நிர்வாக சபை மற்றும் இதன் செயற்பாடுகள் தொடர்பாக நாளை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்படும் என கூட்டணியில் அங்கம் வகிக்கின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து தரப்பினரையும் இதில் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டமைப்பு நுவரெலியா, கண்டி, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, பதுளை உட்பட பல மாவட்டங்களிலும் தமது உறுப்பினர்களை போட்டியிட வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. கூட்டணியாக செயற்படுவதன் மூலம் மலையக மக்களின் பல விடயங்களை வென்றெடுக்க முடியும் என இந்த கூட்டணி எதிர்பார்ப்பதாகவும் தெரியவருகின்றது.

இது மக்களுக்கான கூட்டணி எனவும் தலைவர்களுக்கான கூட்டணி அல்ல எனவும் இதில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - தமிழ்மிரர்

அதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பலாங்கொடை


இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர்வரும் அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு ஹட்டன், கண்டி, பலாங்கொடை, பதுளை ஆகிய பிரதேசங்களில் இலவச செயலமர்வுகளை நடாத்த தீர்மானித்துள்ளது.
இதன் முதல் நிகழ்வு எதிர்வரும் யூன் 7 ஆம் திகதி(ஞாயிறு) அன்று பலாங்கொடை கனகராயன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறும். இந்நிகழ்விற்கு பலாங்கொடை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் செல்வி ஆர். கலாரமணி பிரதம அதிதியாகக் கலந்துக் கொள்வார். வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ  ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார்(கையடக்க தொலைபேசி 0718533144) ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு முற்றமே வீதியாய் உள்ளது - வீ.மூர்த்தி


பெருந்தோட்டங்களை  ஆங்கிலேயர் நிர்வகித்து வந்த காலம் முதல் இன்றுவரை பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட அதே குடியிருப்புகளிலேயே இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடாத்திவருகின்றனர்.

ஒரு கூடமும் எட்டடி கொண்ட அறை ஒன்று மட்டுமே அமையப்பெற்ற இக்குடியிருப்பில் தனியான சமையல் அறையின்றி காற்று நுழையக்கூட வழி இல்லாத இருண்ட அந்த அறைக்குள்ளேயே அனைத்து கருமங்களையும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.

பொதுவாக வீடுகளில் சேரும் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டுவதற்கேனும் இடமில்லாதும், கழிவு நீர் சென்றடைவதற்கான வடிகான் வசிதியற்றவர்களாகவும் சிலர் இருந்து வருகின்றனர். வெளியாரின் ஆக்கிரமிப்பே இதற்கான காரணமாகும்.

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, பாலிந்தநுவர அஷ்க்க்வெலி தோட்டத்தில் 16 குடும்பங்கள் வசித்துவரும் வீட்டு ற்றம் பாதையாக மாறியுள்ளதால் குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக பெரும் பிரச்சினையை எதிர்நோக்கியவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இங்குள்ள குடியிருப்பு கட்டடத்தின் முன்னால் அடுத்தடுத்து எட்டு வீடுகளும், பின்புறத்தே வசையாக எட்டு வீடுகளும் அமைந்துள்ளன. இந்த லயன் கட்டடத்தின் வீட்டு  முற்றம் கலஹிட்டிய கிராமத்துக்கான பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பாதையினூடாகவே கிராமவாசிகளும், தோட்டமக்களும் போக்குவரத்துச்  செய்துவருவதுடன் அடிக்கடி வாகனப் போக்குவரத்தும் இடம்பெற்று வருவதுடன் இ.போ.ச. பஸ் ஒன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.


முற்றம் பாதையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் சிறுவர்கள் ஓடியாடி விளையாட டியாதுள்ளனர். தற்செயலாக முற்றத்துக்குப் போய் விளையாடுவார்களேயானால் விபத்தை எதிர்நோக்கவேண்டியுள்ளனர். இதனால் பெற்றோர் பிள்ளைகள் குறித்து மிகவும் அவதானத்துடனும், விழிப்புடனும் இருக்கவேண்டியுள்ளனர். அதுமட்டுமல்லாது வீடுகளில் மங்கள, அமங்கள காரியங்களை மனஆறுதலுடன் நிறைவேற்றிக்கொள்ளமுடியாது நம்மதியற்றவர்களாகவே தினம் பொழுதைக் கழித்துவருகின்றனர். வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் இறந்தவரின் உடலை வெளியில் வைத்து இறுதிக் கிரியைகளைத் தானும் செய்துகொள்ள முடியாத நிலையில் அந்த எட்டடி இருண்ட அறைக்குள்ளேயே வைத்து அனைத்து கருமங்களையும் நிறைவேற்ற வேண்டியுள்ளனர். உடலை முற்றத்தில் வைத்திருந்தாலும் வாகனம் வரும்போது உடலை சுமந்து வாகனத்துக்கு இடமளித்து மீண்டும் வைக்கவேண்டியுள்ளனர்.

நீண்டகாலமாக இந்த மக்கள் எதிர்நோக்கி வந்தப்பிரச்சினைக்கு புளத்சிங்கள பிரதேச சபை உறுப்பினர் நூ.ஜெயராஜ் முன்னாள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல ஊடாக தீர்வு பெற்றுத் தரும் வகையில் பாதையை மாற்றி அமைப்பதாக உறுதி அளித்து ஒருவருடம் கடந்தும் எதுவும் நிடைபெறவில்லை. ஓராண்டின் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின்போது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் இங்கு வந்து பாதையை மாற்றியமைப்பதாகக் கூறி டோசர் இயந்திரத்தின் நிலம் தோட்டக்காணியில் ஒரு பகுதியை வெட்டி ஆரம்பித்து வைத்தார். தேர்தலும் முடிந்து ஓராண்டு கடந்துவிட்டது. பாதை வேலை  கைவிடப்பட்ட நிலையிலேயே கிடக்கிறது.

தேர்தலில் போட்டியிட்ட இவருக்கு மக்கள் வாக்களிக்காது விட்டமையே வேலை தடைபடக்காரணம் என மக்கள் தெவித்துள்ளனர். ஆனால் இவரோ தோட்ட நிர்வாகம் தடை விதித்த காரணத்தினாலேயே வேலையை நிறுத்த வேண்டிய நிலையேற்பட்டது என்று கூறுகின்றார்.

வாக்குகளை எதிர்பார்த்து சேவை செய்வதை விடுத்து சேவை செய்து மக்களின் நில்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஆதரவு பெருகும் என்பதை சில அரசியல்வாதிகள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர். தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்களே இவ்வாறு நிடந்துகொள்ளும்போது பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கும் நிம்மவர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். அஷ்க்வெலி தோட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த வீதி தொடர்பான பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக இ.தொ.கா. 2012 டிசம்பர்  11, 12 ஆம் திகதிகளில் வெளியான பத்திரிகைச் செய்திகளில் குறிப்பிட்டிருந்தபோதிலும் எந்த ஒரு தீர்வும் கிடைத்ததாக இல்லை.

எவ்வாறாயினும் அனைத்தும் வழமை போன்று நிடந்தவண்ணமாகவே உள்ளன. ஆனால், எந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிராபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடனேயே  மக்கள் இருந்து வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் மட்டும் படையெடுத்து வந்து குசலம் விசாரித்து பசப்பு வார்த்தைகளைக் கூறி வாக்குறுதிகளை வாரி வீசிவிட்டு வாக்குகளைப் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் தோட்ட மக்களுக்கு எதுவும் நிறைவேற்றித் தருவதாக இல்லை. பாதையை மாற்றியமைத்து இங்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைத் தடுக்க முன்வரவேண்டும். அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் வந்து அனுதாபம் தெவித்து ஆறுதல் கூறுவதால் பயன் ஏற்படப்போவதில்லை.

களுத்துறை மாவட்ட தோட்ட மக்களின் அவல நிலை குறித்து மலையகத்தின் புதிய அமைச்சர்கள் சற்று திரும்பிப்பார்க்க முன்வரவேண்டும்.

“தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்” - ஏ. எஸ். சந்திபோஸ் அவர்களின் உரை.

“தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்”
மலையகத்தின் இருந்து தோன்றிய முதல் பல்கலைக்கழக விரிவுரையாளரும், ஓய்வுப் பெற்ற மூத்த பேராசிரியருமான மு. சின்னத்தம்பி அவர்கள் பல காலம் ஆய்வு செய்து எழுதிய “தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்” என்ற நூலின் அறிமுகவிழா ‘இலங்கை கோபியோ’வின் அனுசரையுடன் கடந்த 17.05.2015 மாலை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தொழிலதிபர் ஈ. முத்துகிருஸணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 
பல்கலைக் கழக விரிவுயாளருக்கும், மாணவர்களுக்கும்; வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்த பேராசிரியர் மு. சின்னத்தம்பி மலையக சமூகத்தின் பொருளாதார நிலைமையை கட்டுரை நூல் வடிவில் பல்கலைக்கத்தில் மட்டுமன்றி உள்நாட்டு மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். ஓய்வுப் பெற்ற பின் பல ஆய்வுகளை மேற் கொண்டு வருகிறார். அத்தகைய ஆய்வுகளில் ஒன்றான ““தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்”  என்ற நூலின் அறிமுக உரையாற்றிய திறந்த பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட சிரேஸ்ட விரியாளர் கலாநிதி ஏ. எஸ். சந்திபோஸ் அவர்களின் உரை.
தொகுப்பு வெள்ளவத்தை கரு. வசீகரன்.

பேராசிரியர் மு. சின்னத்தம்பியும், முன்னால் இராஜாங்க அமைச்சர். பி.பி. தேவராஜ் அவர்களும் இரவு பகலாக தயார் செய்தனர். இதனை அப்போதைய தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் நன்கு செவிமடுத்து சிறந்த முறையில் பேரம் பேசி தொழிலாளர்களின் வேதனங்களை நிர்ணயிப்பதில் வரலாற்று சாதனை புரிந்தார். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கற்றறிந்தவர்களை மக்களின் நலனுக்கு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. என்று ஓய்வு பெற்ற பேராசிரியர் மு.சின்னதம்பி எழுதிய “தேயிலையின் செழுமையும், தொழிலாளரின்; ஏழ்மையும்” என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 17.05.2015 அன்று கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இலங்கை கோபியோவின் அனுசரணையுடன் தொழிலதிபர் ஈ. முத்துகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற போது நூலை அறிமுகம் செய்து வைத்த இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்  உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் அங்குரார்ப்பண உரையை இலங்கை கோபியோவின் தலைவர்  உதேஸ் கௌசிக் நிகழ்த்த, பேராசிரியரியரின் மாணவர்களான பேராதனை பலக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி சோபனாதேவி இராஜேந்திரன், பேராதனை பலக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திரு எஸ். விஜேசந்திரன் ஆகியோர் 'குருவந்தனம்” நிகழ்த்த, சிரேஸ்ட ஒலி,ஒளிப்பரப்பாளர் நாகபு+}ணி கருப்பையா நிகழ்வை தொகுத்து வழங்கினார். நுன்றியுரையை எஸ் வௌ;ளாந்துரை வழங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ் அவர்கள்.

இந்த நூல் இலங்கை தேயிலை பொருளாதாரம் பற்றி முழுமையாக அவதானிக்கப்பட்ட முயற்சியின் விளைவாகும் என்றால் மிகையாகாது. ஒன்பது அத்தியாயங்களையும் ஒரு பின்னிணைப்பையும் கொண்டதாக 224 பக்கங்களில் மிக நேர்த்தியான முறையில்”  வெளியீட்டு விழாவை இலங்கை “கோபியோ கோலாகலமாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழிற்சங்க,அரசியல் பிரமுகர்கள் பத்திரிகையாளர்கள் வர்த்தக பிரமுகர்கள் என்று சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சபை நிறைந்த விழாவாக காணப்பட்டது.

இந் நூலின் முதல் மூன்று அத்தியாயங்களும் பெருமளவில் பெருந்தோட்டங்களின் வளர்ச்சி , இலங்கையின் பொருளாதாரத்தில் வழங்கிய பங்களிப்பு மற்றும் இத்துறை சார்ந்து ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி படிப்பினை தரும்; விடயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயங்களை வடிவமைப்பதற்கு பேராசிரியர்; மு. சின்னதம்பி அவர்கள் பிரசித்தி பெற்ற  சமூகவியலாளர்களான  G.L Becford,(1972) , V.Daniel, (1982), Eric Meyer (1990), Asoka Bandarage (1982) மற்றும்  பு.டு Pநசைளை  (1984)  எழுதிய பிரபல்யம் வாய்ந்த நூல்களை துணையாக கொண்டுள்ளார். பொதுவாக இவர்கள் ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட பெருந்தோட்ட கட்டமைப்பு அதன் மாற்றம் தொடர்பாக தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் மு.சின்னதம்பி வடிவமைத்துள்ளார்.;. இந் நூலாசிரியர் இதற்கான கடுமையான உழைப்பை நல்கியுள்ளார் என்பதை வாசகர்கள் நன்கு புரிந்து கொள்வர். இந் நூலில் உள்ள முதல் நான்கு அத்தியாயங்களும் பெருந்தோட்டத்துறை சார்ந்தது. தமிழ் மொழியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மிகவும் பயனுள்ள தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதனை உறுதியாக கூற முடியும்.

பேராசிரியர் சின்னத்தம்பி பெருந்தோட்ட துறையில் எந்தளவில் புலமை பெற்று காணப்படுகின்றார் என்பதை அடுத்துவரும் இரண்டு அத்தியாயங்களை வாசிக்கும் போது தெளிவாக புலப்படுகின்றது. ஒரு பொருளியல் பேராசான் என்ற நிலையில் உற்பத்திக் காரணிகள் எந்தளவில் தேயிலை பெருந்தோட்டச் செய்கையில் செயல்படுகின்றன. இதில் தொழிலாலர்களின் திறன் எந்தளவு பங்களிப்பு செய்துள்ளது என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார். இத்துறை குறித்து ஆய்வு செய்யும் பொருளியல் மாணவர்களுக்கு இவரது விளக்கங்கள் மிகவும் பயன்பாடு மிக்கதாகும். .இவரது வியாக்கியானத்தின்படி தொழில் திறனற்ற தொழிலாளர்களாக அடையாளப்படுத்தப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த மட்டத்திலேயே சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகவம் மேலதிகமாக சம்பளம் சலுகைகள் வழங்குவதனால் இவர்களிடம் இருந்து மேலதிக உற்பத்தியை எதிர்பார்க்க முடியாது என்ற வாதம் ஆரம்பகால ஐரோப்பிய பெருந்தோட்ட கம்பனி;களிடம் காணப்பட்டது என்று குறிப்பிடுகின்றார். இருப்பினும் பிற்பட்ட காலத்தில் எந்தளவில் தொழிலார்களது நலன் கவனிக்கப்படகின்றதோ அந்தளவில் துறைசார்ந்த உற்பத்தி அதிகரித்துள்ளது என்பதை பிற்காலத்தில் பெருந்தோட்ட துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பதையும் பேராசிரியர் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்

சின்னதம்பி அவர்கள் 1984 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த ஆண், பெண் இருபாலருக்கும் சம சம்பளம் மற்றும் அடிப்படை சம்பளத்தில் ஒரு உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு புள்ளி மாற்றங்களுக்கு ஏற்ப தொழிலாளர்களது நாளாந்த சம்பளம் அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்னணி ஆய்வு வேலைகளை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாக செயற்படுத்த உதவியவர்களில் முக்கியமானவராகும்.

இக் காலத்தில் சம்பளச் சபையுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கான ஆவணங்களை  பேராசிரியர் மு. சின்னத்தம்பியும், முன்னால் இராஜாங்க அமைச்சர். P.P தேவராஜ் அவர்களும் இரவு பகலாக தயார் செய்தனர். இதனை அப்போதைய தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் நன்கு செவிமடுத்து சிறந்த முறையில் பேரம் பேசி தொழிலாளர்களின் வேதனங்களை நிர்ணயிப்பதில் வரலாற்று சாதனை புரிந்தார். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கற்றறிந்தவர்களை மக்களின் நலனுக்கு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

இந்த அனுபவங்களை கொண்டு வேதனம் பற்றிய அத்தியாயங்களையும் ஓரளவிற்கு பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் சம்பந்தமான முழுமையான பார்வையை முன்வைக்க வேண்டும் என்ற இந் நூல் ஆசிரியரான மு.சின்னதம்பிக்கு இருந்திருக்கின்றது.

உண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்ககளின் வேதனம் பற்றி எழுதியவர்களில் முன்னால் மத்திய வங்கியின் ஆய்வாளரான திருமதி நுடயinநெ புரயெறயசனநயெ    மற்றும் தொழில் ஆணையாளராக இருந்த திரு யேறயசயவநெ போன்றவர்களின் வரிசையில் அவ்விடயம் பற்றிய தமிழ் மொழி மூலமான விவரமான ஆவணத்தை சின்னதம்பி படைத்துள்ளார் என்பது மிகையாகாது.

இந் நூலில் மிக ஆழ்ந்த சிந்தனைகளுக்கு விட்டுச் சென்ற அத்தியாயமாக 7 ஆம், 8 ஆம், 9 ஆம் அத்தியாயங்களை குறிப்பிடலாம். 7 ஆம் அத்தியாயத்தில் மிகை ஆக்கம் பற்றி சரியான தகவல்களை தந்துள்ள  நூலாசிரியர்; தேயிலை விற்பனையின்போது மேற்கொள்ளப்பட்ட வரிகள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். சட்ட ரீதியாக தொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் , அவை எவ்வாறு மிறப்படுகின்றன சட்டங்களால் கட்டுண்ட தொழிலாளர் வர்த்தகத்தின் சமூக மேம்பாடு பற்றிய ஆசிரியர்களின் கருத்துக்கள் என்பன ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பெரு விருந்தாக அமையும். ஊநுளுளு வரி, ஏலவிற்பனை, ஏற்றுமதி சந்தைபடுத்தல் போன்ற உப தலைப்புகள் பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளன. இதனை வாசிப்பவர்களுக்கு ஏன் “தேயிலையை” ஏல விற்பனையில் சந்தைபடுத்தினர், சாதாரணமாக ஏனைய பொருட்கள் போல சந்தையில் ஏன் விற்பனை செய்யப்பட வில்லை போன்ற வினாக்களுக்கு  பதில்களை பெற்றுக் கொள்ள முடிகின்றது.

இது போல பெருந்தோட்ட குடியிருப்பு அவர்களில் சமூக பொருளாதார நிலை என்பன நூல் ஆசிரியரின் சொந்த அனுபவங்கள் , அவரது ஈடுபாடு என்பனவற்றை  கோடிட்டு காட்டும் அத்தியாயங்களாக காணப்படுகின்றன. தோட்டங்களில் உள்ள வறுமையில் இருந்து விடுபெற்று கொள்வதற்காக கணிசமான தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு அதாவது நகரங்கள் கிராமங்கள் என்று இடம் பெயர்ந்து செல்கின்றனர். அவ்வாறே இடம் பெயர்ந்து செல்பவர்கள் தாம் செல்லும் இடத்தில் வளர்ந்துள்ள சமூகத்தில் தம்மை இணைத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை மாறாக அவர்கள் அங்கு வளர்ந்துள்ள சமூகத்தினால் உருவாக்கப்பட்டு வறுமையில் இருக்கும் சமூகத்தில் மேலும் ஒரு உறுப்பினர்களாக இணைத்துக் கொள்கின்றனர்.    

இலங்கையினர் தேயிலையை பற்றி முழுமையான பார்வையை வைக்க வேண்டும் என்பதற்காக பேராசிரியர் சிறு தோட்டங்களில் தேயிலைச் செய்கையையும் பின்னிணைப்பாக சேர்த்துள்ளார். இந்த வகையில் இந்நூல் மலையகம் தொடர்பாக இலங்கையின் கல்வி, சமூக பொருளாதாரம் தொடர்பாக 20 க்கு மேற்பட்ட நூல்களை எழுதிய ஓய்வு நிலை பேராசிரியர்  சோ. சந்திரசேகரம் இந் நூலானது தமிழ் மொழியில் வெற்றி வந்துள்ள முதலாவது விரிவான ஓர் ஆய்வு நூலாகும் என்று வர்ணித்து மகுடம்; சூட்டியுள்ளார்.
இந் நூலை வாசிக்கும் போது ஒரு விடயம் தெளிவாக புலப்படுகிறது அதாவது வறுமை நிலையில் வாழ்கின்ற சமூகம் தமது  வறுமையில் இருந்து விடுபெற்று கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வியடையும் போது வேறு ஒரு சூழலில் உள்ள வறுமை சக்கரத்தில் சிக்கிக் கொள்பவர்களாக காணப்படுகின்றனர். உதாரணமாக இலங்கையில் வடக்கு கிழக்கில் உள்ள வளர்ந்துள்ள தமிழ் சமூகத்துடன் ஒன்றினைந்திருப்போம் என்ற மலையக மக்கள் இடம் பெயர்ந்தாளும் அவ்வாறு இடம் பெயர்ந்தவர்களும் அங்குள்ள வறுமையான துறையிலேயே இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இடம் பெயர்ந்தாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் தொடர்ந்தும் வறுமையானவர்களாகவே வாழ்கின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates