Headlines News :
முகப்பு » , , » யாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத்

யாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத்


1926 ஆம் ஆண்டின் மார்கழி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் சுமார் 400 தமிழர்கள் யாழ்ப்பாணத்தின் சுன்னாகத்தில் ஒன்று கூடியிருந்தனர். சுன்னாகத்திலிருந்தும் அயற் கிராமங்களிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புங்குடுதீவு போன்ற தொலைவிலிருந்த கிராமங்களில் இருந்தும்  கூட சிலர் வந்திருந்தனர். அவர்களில் குறித்த பிரதேசங்களின் ஊர்ப் பெரியவர்களும் பிரமுகர்களும் இருந்தனர்.

கந்தரோடை ஆங்கிலப் பாடசாலை முகாமையாளரும் கிராம நீதிமன்ற நீதிபதியுமாகிய கந்தையாபிள்ளை கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். தேவாரத்துடன் கூட்டம் ஆரம்பமானது.

கூட்டத்தின் நோக்கம் பற்றிப் பேசத்தொடங்கிய கந்தையாபிள்ளை ”பஞ்சமர்களை முன்னேற்றமடைய விடாவிட்டால் மற்றத் தமிழ்மக்கள் முன்னேற்றமடைய ஏதுவில்லை” எனும் கருத்தைச் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சிவதொண்டு குறித்து வழக்கறிஞர் எம். எஸ். இராசரத்தினம் விரிவாக உரையாற்றினார். சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும் மகாத்மா காந்தி தீண்டாமையைக் கண்டிக்கிறார் என்றும் அவர் உரைத்தார். மேலும் ”எங்களுடைய மதத்தினர் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பலம் பெற்றால்தான் நாங்கள் சுய ஆட்சி அடைவதற்கு வழியாகும்” என்றும் குறிப்பிட்டார். மேலும் சைவ புராணங்களையும் அறுபத்து மூன்று நாயன்மார் கதைகளையும் எடுத்துக்கூறி நாயன்மாரில் சாதி வித்தியாசமில்லை என்றும் நந்தன், கண்ணப்பர் முதலிய நாயன்மார் பற்றியும் நாயன்மாரில் வண்ணார் போன்ற சாதியினரும் இருந்தனர் என்றும் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டி இராசரத்தினம் உரையாற்றி அமர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து தெல்லிப்பழை துரையப்பாபிள்ளை, மானிப்பாய் ஆண்டி, புங்குடுதீவு பசுபதிப்பிள்ளை, நாகையா, அருளானந்தசிவம் ஆகியோரும் சிற்றுரைகள் ஆற்றினர். ”யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்” எனச் சங்கத்தின் பெயர் தெரிவானது. சங்கத்தின் தலைவராக எம். எஸ். இராசரத்தினமும் உபதலைவர்களாக ரி. எஸ். நாகலிங்கம், கே. முருகப்பர், எம். மண்டலம் ஆகியோரும் செயலாளர்களாக பி. கிருஷ்ணசாமி முதலியார், வி. எஸ். பூதப்பிள்ளை ஆகியோரும் பொருளாளர்களாக வி. எம். கந்தையா, கே. மூத்தர் ஆகியோரும் தெரிவாகினர். சங்க அங்கத்தவர்களாகவும் மேலும் பலர் தெரிவாகினர்.

அத்துடன் சுன்னாகம், மயிலணி, மல்லாகம், உடுவில், கோட்டைக்காடு, மயிலங்காடு, மாகையப்பிட்டி, சங்குவேலி, நாவாலி, தெல்லிப்பழை, பழை, பருத்தித்துறை, வதிரி போன்ற ஊர்கள் சார்பான உறுப்பினர்களும் தெரிவாகினர். இரவு பத்து மணியளவில் கூட்டம் கலைந்தது.

சங்கத்தின் கூட்டங்களை நடத்தவும் வாசிகசாலை ஒன்றைத் திறக்கவும் என ஓர் அலுவலகம் சுன்னாகம் சந்தைக்கு வடக்கில் அமைக்கப்பட்டது. 1927 பெப்ரவரி 11ஆம் திகதி இச்சங்கம் சார்பாக திராவிடன் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகள் வெளியான இந்த இதழிலிலிருந்து சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் உயர்ந்த சாதியென்று சொல்லப் படுவோரால் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ்வோர் கரையேற வேண்டுமென்றும் எங்களவர்களுக்கிடையில் ஒற்றுமையை அதிகரிக்க வேண்டுமென்றும் ஆங்கிலமும் தமிழும் கற்க ஆங்கிலப் பள்ளி வேண்டுமென்றும் பிறசமய நிந்தனைக்குள் இருந்து மீளவும் எல்லா இடங்களிலும் பரவியுள்ள எம்மவர் இணைந்து முன்னேற உதவவும் இச்சங்கம் தொடங்கப்பட்டதென்று திராவிடன் குறிப்பிடுகிறது.

”இந்து மதம் பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் எவ்வளவு சொந்தமோ அவ்வளவு சொந்தம் இவர்களுக்கும் உண்டு” எனவும் “இந்து மதத்தில் இருக்கும்போது இழிவாக நடத்தி இவர்களே கிறிஸ்து மத்ததில் சேர்ந்து விட்டால் சம மரியாதை அடைகிறார்கள்” என்றும் ”நாம் நம்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதியாரை மனிதரைப் போல தக்க அன்போடும் மரியாதையோடும் நடத்தும் காலமும் தங்களுடைய சமயத்தினை விட்டு அகலாதிருக்கும் பொருட்டு போதுமான கல்வியையும் போதிக்க வேண்டிய காலமும் நெருங்கிவிட்டது” என்றும் முதலாவது திராவிடன் இதழின் ஆசிரியத் தலையங்கம் குறிப்பிடுகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் சாதிக் கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்காகச் சைவ சமயத்தினைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுவதைத் தடுக்கும் முயற்சியாக இச்சங்கம் உருவாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் சம மரியாதையும் கிடைப்பதே அவர்கள் சைவ சமயத்தில் தொடர்ந்தும் இருக்க அவசியமானது எனக் கருதியே இச்சங்கம் உருவானது எனலாம்.

ஆனாலும் சைவ ஆதிக்க சாதியினரிடமிருந்து பெரிய அளவிலான ஆதரவு இச்சங்கத்துக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. இதுவரை எழுதப்பட்டுள்ள சாதியத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றில் இச்சங்கம் பற்றிய குறிப்பே இப்போது இல்லை. இச்சங்கத்துக்குப் பிறகு தொடங்கிய சங்கம் ஒன்றே முதலாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கான சங்கம் என வரலாறு எழுதப்பட்டுள்ளது.

சாதிமான்களான வேறு தமிழ்த் தலைவர்கள் அவர்களது ஏனைய செயற்பாடுகளுக்கான இப்போதும் நினைவு கூரப்படுகிறார்கள். ஆனால் எம். எஸ். இராசரத்தினம் போன்ற சைவத்துக்கும் தமிழுக்கும் உழைத்த தலைவர்கள் இப்போது நினைவுகூரப்படுவது கூட இல்லை.

அண்மைய காலச் சம்பவங்களை அவதானிக்கும் போது ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூடச் சைவ சமய நிறுவனங்கள் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தமது சமயத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலை பெறுவதற்கான குறிப்பிடத்தக்க செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்காத அல்லது முன்னெடுக்க விரும்பாத மனநிலையிலேயே இருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுகின்றது.

நன்றி - உதயன் : சஞ்சீவி
Share this post :

+ comments + 5 comments

It's a great article. It's pleasure to get to know about such a legend. Hats off for the service that he rendered in order maintain equality and respectability among unprivileged people in the society which was influenced with different caste, religions and ethnic groups. My heartfelt appreciation for writing such inspirational article.

10:47 AM

அருமையான தகவல்
நன்றி

இக் கட்டுரையை ஒரு pdf create தயாரித்து தரமுடியுமா?

10:59 AM

இக்கட்டுரையை விசித்து முடிக்கும் போது தமிழர் உரிமைப் போராட்டம் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதலிருந்து, அவர்களின் உரிமைகளுகாகாக போராட முழு தமிழ்சமூகமும் இயக்கப்படும் போதுபோது மட்டுமே, மலையகத்திலிருந்து தலைமைகள் எழும் அங்கிருந்தே தமிழினத்தின் தேசியம் வளர நிலை பெறும் என்ற ஆரம்பகால போராட்ட கருதுகோள் எவ்வளவு சரியானது என்பதும்.

இது, இதை யாழ் மேலாதிக்கமும் இனவாதிகளும் தவறாகவும், தமது சுய தலத்துகாகாகவும் ஊதிப் பெருப்பித்து இந்தியாவை இழுத்து வந்து எப்படிக் கெடுத்து அளித்தோம்

என்ற உணர்வு மேல் எழுகின்றது.

PART--02
சாதியத்தை உருவாக்கியவர்கள் தமிழர்களா அல்லது கிறிஸ்தவர்களா?


ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறிஸ்துவ மதத்தில் நிறவெறி , சமத்துவம் இன்மை , மொழிவெறி ,சாதிய பிளவுகள் அதிகமாகவே காணப்படுகின்றது ஆதியாகமம் 12:2. "Jesus" சாதியம் பேசுகின்றாா் "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்." நீய் பொிய சாதியாக இருந்தால்தான் கா்த்தா் ஆசீவதிப்பாா், நீய் கீழ்சாதியாக இருந்தால் உன்னை ஆசீர்வதிக்கமாட்டாா்.என்பதானது சாதியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மதமாகும்.

Vatican (வற்றிக்கான்) னின் போப்பாண்டவராக வெள்ளைதோல் உடையவா்கள்தான் வரமுடியும் அத்துடன் பெண்கள் என்றுமே வரமுடியாது இங்கு நிற வெறி சுட்டி காட்டப்படும் அதேவேளை பெண்கள் என்றுமே போப்பாண்டவராக வரமுடியாது என்பது பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டும் உள்ளது. இதனை நீங்கள் வற்றிக்கானின் ஆரம்ப கால வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும் .

இலங்கையில் வற்றிக்கானின் நேரடி பிரதிநியாக "Archdiocese of Colombo" (கொழும்பு உயர் மறை மாவட்டம்) சிங்கள மொழி பேசுகின்ற Bishop வரமுடியும் கொழும்பு உயர் மறை மாவட்டம் என்பது எல்லோரிலும் பாா்க்க சாதியத்தால் கூடியவர்கள் என்பதனை காட்டுகின்றது .

ஆனால் என்றுமே"Archdiocese of Colombo" இன் தலைமையாக Bishop of Mannar என்றுமேவரமுடியாது அதே போன்று கன்னியாஸ்திாிகள் என்றுமே Bishop ஆக வரமுடியாது .

தமிழ் மொழி பேசுகின்ற கிறிஸ்தவர்களிலும் , சிங்கள மொழி பேசுகின்ற கிறிஸ்தவர்களிலும் குறைந்த சாதியினர் என்றுமே " Bishop "வரமுடியாது. இதனை நீங்கள் கிறிஸ்தவர்களின் ஆரம்ப கால வரலாற்றுகளில் இருந்து கற்றுக் கொள்ள முடியும்.

லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள் ,

இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள்,

இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள் ,

இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள்,

இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள் ,

இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ்சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள்,

இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள்சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள்

மதமாற்றங்களை நியாயப்படுத்துபவர்கள், "சாதிய " கொடுமைகளால் மதம் மாறுகின்றனர்’ என பிரசாரம் செய்கின்றனர். உண்மை என்னவென்றால், "சாதிய " கொடுமைகளை நீக்குவதாக சொல்லி மதமாற்றம் செய்யும் மதங்களில் அதிகமான " நிறவெறிகள் , மொழிவெறிகள் , பெண்களுக்கான சமத்துவங்கள் , சாதியங்கள் , " அதிகமாகவே காணப்படுகின்றன.

கிறிஸ்தவ மதத்தில்இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பது சாதியம் காரணமாகவே நடைபெறுகின்றது . சாதியம் கிறிஸ்தவத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.

PART--1
சாதியப் பிரச்சனை சைவ சமயத்தால் உருவானதல்ல---

" அன்பே சிவமாக ", “ யாதும் ஊரே யாவரும் கேளிர் ” எல்லா ஊரும் எம் ஊர் , எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்புதான் சிவமாக ,உயிர் நேயம் பேசி , தவமே வாழ்வாக வாழ்தலே வழிபாடுகளாக கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

தமிழர் நிலத்திணைகளில் அடங்குகின்ற தெய்வங்கள் யாவும் சைவ ஆலயத்தில் தமிழர்களாள் எவ்வித வேறுபாடுகள் இன்றி வழிபடுவதுடன் தெய்வீக தமிழ் போற்றுகின்றது.

“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

தொழில்களை அடிபடையாக கொண்டு உருவாக்கப்பட்ட சாதிய முறமை சைவசமயத்தால் உருவானதல்ல தொழில்களை அடிப்டையாக கொண்டு கட்டி எழுப்பப்பட்ட சாதியத்தை கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய சாதிய வாதிகளே சாதியத்தை தமிழர்கள் மீது திணித்தவர்கள் "

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் பேசுகின்றாா் "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி"

மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம். நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்.

நாங்கள் கோவிலில் வைத்து வணங்கும் ஆழ்வார்களில் , நாயன்மாா்களில்,சித்தா்களில் , ​ சிவன் அடியாா்களனைத்து அனைத்து தொழில்களும் செய்தவா்கள் உள்ளனர்.சாதியப் பிரச்சனை சைவசமயத்தால் உருவானதல்ல.

கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய சாதிய வாதிகளே சாதியத்தை திணித்தாா்கள்.

ஆகவே சாதியத்தை தமிழர் உருவாக்கவில்லை என்பது என்பது புலனாகின்றது.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates