Headlines News :
முகப்பு » » வெஞ்சர் தோட்டத்தில் பொலிஸ் காடைத்தனம்!

வெஞ்சர் தோட்டத்தில் பொலிஸ் காடைத்தனம்!

பொலிஸார்-நிர்வாகம் சேர்ந்து நடத்திய காடைத்தனம்:"நாங்க என்னத்தத்தான் அவங் களுக்கு செஞ்சோம். அவங்களுக்கு ஒன்னுமே செய்யலியே. நியாயத்த தானே கேக்கப் போனோம். அதுக்கு போயி ஏனுங்க இத்தனை பெரிய கொடுமை."ஜனவரி.3ம் திகதியன்று நோர்வூட்-வெஞ்சர் தோட்ட நிர்வாகம் அத்தோட் டத்தின் தொழிலாளர்கள் மீது பொலி ஸாரை ஏவி கொடுரமாகத் தாக்கி விரட்டடியதுமல்லாமல் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டை எறிந்து நடத்திய அட்டுழியங்களைப் பற்றி ஒரு அப்பாவி தொழிலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.தோட்டங்கள் தனியார் மயமாக்க ப்பட்டதன் பின் ஏற்கெனவே அடிமை நிலைக்குள் தள்ளப்பட்டு இலங்கையிலேயே பின்தங்கிய வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வந்த மலையகத் தொழிலாளர்கள், மேலும் மோசமாக கீழே தள்ளப்பட்டு விட்டார்கள். நாளுக்கு நாள் அதிகார வர்க்கத்தினாலும் தம்மை நேரடியாக ஆதிக்கம் செலுத்தி வரும் கம்பனிகளாலும் மேற்கொள்ளப்ப ட்டுவரும் அநியாயங்கள் அடக்கு முறைகள் என்பவற்றினால் மிகச் சோகத்துக்குரிய அவலத்தை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு வெஞ்சர் தோட்டத்தில் கம்பனி முதலாளிகளும் கூலிப்படையினரும் கூட்டாக நடத்திய காடைத்தனம் ஒரு சிறந்த சான்று. எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையோ, போராட்டமோ நடத்தாது தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து நியாயம் கேட்கச் சென்றதற்கே இப்படியான அடக்கு முறையென்றால் அங்கு நிலவுகின்ற சூழலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த அவலத்தை தட்டிக் கேட்க இதுவரை எந்தவொரு சரியான தலைமையும் இல்லாதது அம்மக்களின் அவலத்தின் உச்ச மென்றே சொல்லலாம். இந்த வெஞ்சர் தோட்ட சம்பவத்தைப் பொறுத்தளவில் உண்மை நிலையைக் கண்டறியச் சென்ற எமக்கு, மலையகத்தின் பலம்பொருந்திய அமைப்பான இ.தொ.கா கூட கம்பனியின் நடவடிக்கைக்கு துணைபோகின்ற நிலையை காணக் கிடைத்தது.ஆரம்பம்:முழு நாள் வேலை.அரை நாள் கூலி!கடந்த ஜனவரி 2ம் திகதியன்று வழமைபோல் தொழிலாளர்கள் தமது வேலையைச் செய்தனர். பெண் தொழிலாளர்கள் எல்லோரும் தாம் பறித்த கொழுந்தை கொண்டு சென்று போட்டதன் பின் அவர்களில் 21 பேருக்கு அரைநாட் சம்பளமே போட்டனர். அத்தொழிலாளர்கள் 'இது அநியாயம் இவ்வளவு நேரமும் வேண்டா வெய்யிலில் வேலை செய்தும் அரைபேர் (அரை நாள் சம்பளம்) போடுவது அநியாயம் என்று கெஞ்சினர். ஆனால் நிர்வாகம் அதனை ஒரு பொருட்டா கவே எடுக்கவில்லை. சில மணிநேரம் காத்திருந்து கெஞ்சியும் அன்று முடிவாகவே கூறிவிட்டனர்."இவ்வளவு நேரம் வேல செஞ்சும் இவ்வளவு கொழுந்து தான் பிச்சிங்களா?"என்னங்க புரியாம பேசுரீங்களே! கொழுந்து இருந்தா தானுங்களே பிக்கிறதுக்கு..""அதெல்லாம் எனக்குத் தெரியாது அரைநாள் போட்டது போட்டது தான்.!"அன்று தொழிலாளர்கள் அனைவ ரும் வீடு திரும்பியதன் பின் அத்தோட்ட த்தைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் கூடி கதைத்தனர். காலையில் துரையிடம் சென்று இது பற்றி கதைப்பது என்றும் கூடவே தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய 10 வீத லாபத்தையும் கேட்பது என்றும் தீர்மானித்தனர்.அடுத்த நாள் ஜனவரி 3ம் திகதி காலை 8 மணியளவில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையின் அருகில் கூடினர். தோட்ட அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் தமது கோரிக்கைகளான 21 பெண் தொழிலாளர்களுக்கும் முழுநாள் சம்பளத்தைப் பெறுவது, மற்றும் லாபத் தில் 10 வீதத்தை பெறுவது ஆகியவற் றைக் கோரினர். கூட்டத்தினர் மீது அதிகாரிகள் மோசமான வார்த்தைக ளால் திட்டியுள்ளனர். அதற்கிடையில் தோட்ட (சுப்பிரின்டன்ட்) அதிகாரிக்கு இத்தகவல் ஏனைய அதிகாரிகளால் அனுப்பப்பட்டிருந்தது.யாருக்காக பொலிஸ்?சரியாக மணி 11.00 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவ்விடத்துக்கு தோட்ட அதிகாரியின் வாகனமும் அதன் பின்னால் பொலிஸார் நிறைந்த வாகனமும் வந்து சேர்ந்தது. தோட்ட அதிகாரி வரும் வழியில் நோர்வ+ட் பொலிஸாரைச் சரி செய்து கூடவே அழைத்து வந்திருப்பதை தொழிலாள ர்கள் தெரிந்து கொண்டனர். வந்திறங் கிய அதிகாரி ஏனைய அதிகாரிகளுட னும் பொலிஸாருடனும் கூடிக் கதைத் தார். தொழிலாளர்கள் தூரத்தே நின்று அவதானித்துக் கொண்டிருந்தனர்.அதிகாரி வந்து கூறினார், "எதையும் ஏற்க முடியாது. இடத்தை விட்டு போங்கள்... இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு காட்டுகிறேன் விளையாட்டு. நான் பதில் சொல்லப் போவதில்லை. பொலிஸார் பதில் சொல்வார்கள்.!" என கத்தினார்.தொழிலாளர்கள் ஏற்கெனவே பதட்டமடைந்திருந்தனர். நாங்கள் என்னத்தை பண்ணிபோட்டோம்? ஏன் பொலிஸாரை இவர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி வந்நதா லும் எங்களது நியாயத்தின் தரப்பிலல் லவா அவர்களும் இருக்க வேண்டும்? ஏன் எங்களின் நியாயத்தைக் கூட கேட்காது அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்?" என கலவரம டைந்திருந்தனர்.அடித்து நொறுக்கப்பட்ட தொழிலாளர்கள்கொஞ்ச நேரத்தில் பொலிஸாரின் திசையை நோக்கி சைகை காட்டப் பட்டது.தொழிற்சாலையின் வாசலில் இருந்த தொழிலாளர்களை நோக்கி "எல்லோரும் ஓடுங்கள்" என சத்தமிட் டுக்கொண்டே எட்டுப் பொலிஸார் தடியடிப் பிரயோகம் செய்தனர். ஆண், பெண் தொழிலாளர்கள் அத்தனை பேரின் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. கண்மண் தெரியாமல் அடித்து நொருக்கினர். எதிர்பாராத தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில் தொழிலாளர்கள் ஓட்டமெடு த்தனர். தொழிற்சாலையின் வாசலைத் தாண்டியதும் வாசற் கதவை இறுக்கி மூடிக் கொண்டனர்.தொழிற்சங்க தலைவர்கள் தொழி லாளர்களை நோக்கி அனைவரையும் போய்விட வேண்டாம் என அறிவுறுத்தி னர். பலர் காயப்பட்ட நிலையில் வாயிற் கதவுக்கு வெளியில் ஆங்காங்கு அமர்ந்திருந்திருந்தனர். தங்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட் டதை உணர்ந்து கொண்டனர். சில தொழிலாளர்கள் உரக்க சத்தமிட்டுத் திட்டினர். சில பெண் தொழிலாளர்கள்; பாதையோரத்தில் உட்கார்ந்தபடி சாபமிட்டனர்.பொலிஸ்-நிர்வாகம்:கூட்டாக காடைத்தனம்!கொஞ்ச நேரத்தில் திடீரென உள்ளேயிருந்த பொலிஸ் வாகனம் வெளியே வந்தது. அதில் நோர்வூட் பொலிஸ் ஸ்தானாதிகாரி (ழுஐஊ) உட்பட ஏனைய எட்டுப் பொலிஸாரும் இருந்த னர். பொலிஸ் வாகனம் அங்கிருந்து போவதாக நினைத்த தொழிலாளர்க ளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் தொழிற்சாலை வாயிலிலி ருந்து ஏறத்தாழ 30 மீற்றர் தொலைவில் வாகனம் நிறுதப்பட்டது. நிறுத்தப்பட்ட தும் வாகனத்திலிருந்து பொலிஸார் அனைவரும் இறங்கினர். அவர்களில் இருவர் கண்ணீர்ப்புகைக்குண்டு எறியும் துப்பாக்கியை ஏந்தியபடியிருந்தனர்.தோட்ட அதிகாரி சைகை செய்வதை தொழிலாளர்கள் பார்த்தார் கள். அவர்கள் சுதாகரிப்பதற்குள் முதலாவது கண்ணீர்ப்புகைக்குண்டு வந்து வேலு என்பவரின் வயிற்றில் விழுந்தது. அவர் அதிலேயே கதிறிக் கொண்டு சுருண்டு விழுந்தார். அதே நேரம் ஏனையோர் கண்களைக் கசக்கிக் கொண்டு ஓடுமிடம் தெரியாது கலவரமடைந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு கதறினர். இந்த ஓலத்தின் மத்தியில் இன்னுமொரு குண்டு வந்து விழுந்தது. அந்த இடத்தில் பல பெண் தொழிலாளர்கள் இருந்தனர். கதறிக் கொண்டே தடுமாறி ஓடினர். அவர்களில் வயது முதிர்ந்த பெண் தொழிலாளர்கள் உட்பட பலர் தடுமாறி விழுந்தனர். விழுந்தெழும்பிய சிலரால் ஓடமுடிந்தது. சிலர் விரைவாக ஓட முடியாது தவித்தனர். பொலிஸாரும் சில நிமிடங்களில் இடத்தை விட்டு அகன்றனர். காயப்பட்ட தொழிலாளர் கள் ஏனைய தொழிலாளர்களின் உதவியுடன் உடனடியாகப் பொகவந்த லாவ ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்ப ட்டனர். முதல் கண்ணீர்ப் புகைக்குண்டு வந்து விழுந்த பழனியப் பன் வேலு (வயது-51) அத்தோட்டத்தின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர் (அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்).வயிற்றில் விழுந்த காயம்!சம்பவம் நடந்து 20 நாட்களின் பின் சரிநிகர் அவரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்த போது அவர் அப்போதும் படுக்கையிலேயே காணப்ப ட்டார். ஆஸ்பத்திரிக்கு மருந்து எடுக்கச் செல்வதற்காக அவருடன் துணைக்குச் செல்ல இன்னும் சில தொழிலாளர்களும் அங்கு வந்திருந் தனர். அவர் சரிநிகரிடம் கருத்து தெரிவிக்கையில்,"நாங்கள் அவர்களிடம் சண்டை பிடிக்கப் போகவில்லை. ஆனால் எம்மீது அநியாயமாக தாக்கினார்கள். பொலி ஸார் கூட எங்களது நியாயத்துக் காகப் பேச முன்வரவில்லை. தோட்ட அதிகாரி தனது அதிகாரத்தையும் பலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி பொலிஸாரை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். பொலிஸார் அந்த இடத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை அறிவதில் அக்கறை காட்டவே இல்லை. நாங்களாக பேசியும் கூட அதனை அசட்டை செய்தனர்." என்றார்.இவரின் வயிற்றில் விழுந்த குண்டினால் ஏற்பட்ட புண்காயங்கள் அப்படியே இருந்தன. குனிய, எழும்ப மிகவும் கஷ்டப்படுகிறார். அந்த இடத்தில் ஒரு கட்டியொன்று காணப்ப டுவதாகவும் எமது கையை பிடித்து வயிற்றில் வைத்துக் காட்டினார்.இச்சம்பவத்தின் போது 6 பெண் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பு க்குள்ளாகியிந்தனர்.பெண் தொழிலாளர்களின் கதை!வீ.கந்தையா லெச்சுமி (வயது.47), கே.பார்வதி (வயது.38), செல்லத்துரை வள்ளியம்மா (வயது.38), மாரியாயி (வயது.35), புஸ்பராணி (வயது.32) ஆகிய ஆறு பேரே பாதிக்கப்பட்ட வர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஏழு நாட்களும் கூடியது 9 நாட்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றிருந் தார்கள். கந்தையா லெச்சுமி இப்படிக் கூறினார்."அன்றைக்கு நாங்கள் பறித்த கொழுந்து போதாது என்கிறார்கள். கொழுந்து இருந்தால் தானே பிய்க்கலாம். முடிந்தவரை நாங்கள் சேகரித்துச் சென்ற கொழுந்தை பறித்துவிட்டு அரைநாள் போட்டு விட்டார்கள். நான் ஆஸ்பத்திரியில் மொத்தம் 9 நாள் இருந்தேன்.ஆஸ்பத்திரியும் எம்மீது அலட்சியம்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இரு நாட்களில் என்னை வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். எனக்குப் பூரண சுகமாகாத நிலையில் என்னை ஏன் அனுப்பினார்கள் என்று முதலில் தெரியவில்லை. பின்னர் தான் நாங்கள் ஆஸ்பத்திரியில் தொடர்ச்சியாக இருப்பது பொலிஸாருக்கு நெருக் கடியை ஏற்படுத்தும் என்பதால் பொலிஸார் எங்களை உடனடியாக அனுப்பிவிடும்படி ஆஸ்பத்திரிக்கு தெரிவித்திருப்பது தெரியவந்தது. இது தவிர எமக்கு நட்டஈடு தரவேண்டியி ருக்கும் என்பதால் எமக்கு பெரிசாக ஒன்றுமே ஆகவில்லை என காட்ட வேண்டிய தேவை தோட்ட அதிகாரிக் கும் இருந்தது. தோட்ட அதிகாரியும் பொலிஸாருக்கு இது பற்றி சொன்ன தாக பேசிக் கொள்கிறார்கள். இரண்டா வது நாளே எங்களை அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். வீட்டுக்கு வந்ததன்பின் அத்தனை பேருக்கும் மீண்டும் வலி, காய்ச்சல், வாந்தியெடுப்பு என தொடர்ச்சியாக வருத்தம் எடுத்தத னால் தொழிற்சங்க தலைவர்கள் எங்களை திரும்பவும் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்கள். அதன் பின்பு சிகிச்சை பெற்று மொத்தம் 9நாட்களின் பின் குணப்படுத்தப்பட்டு வீடு வந்து சேர்ந்தேன். நாங்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அத்தனை நாளும் ஏனைய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவு கூட எங்களுக்கு வழங்கப்பட வில்லை. ஒரு வேளை கிடைத்தால், இரு வேளை கிடைக்காது. எங்களை மிகவும் அலட்சியமாகவே ஆஸ்பத்திரியிலும் நடத்தினர். இன்னும் எனக்கு வலது கண் தெரியவில்லை. நெஞ்சரிப்பு போகவில்லை. விழுந்ததில் பட்ட காயத்தின் வலி தீரவில்லை." என்றார். இவர் தொழிற்சங்க மொன்றின் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) தோட்டத் தலைவியும் கூட.கே.பார்வதி என்பவர் இப்படி தெரிவித்தார்."அன்று அடித்து விரட்டிய போது தலை தெறிக்க ஓடியதில் இடுப்பில் பலத்த அடிபட்டு இன்னும் வருத்தம். ஆஸ்பத்திரியில் 9 நாள் இருந்தேன். இன்னும் நடக்க கஷ்ரமாக இருக்கிறது. கண்கள் கலங்கிய வண்ணமே உள்ளது. ஆனாலும் என்ன செய்ய வேலைக்கு போகாவிட்டால் வயித்துப் பாட்டுக்கு என்ன தம்பி செய்ய" என்றார்.திருமதி.செல்வம் என்பவர் இப்படி சொன்னார்."இங்கே பாருங்கள் அன்றைய குண்டுவீச்சால் வாயெல்லாம் வெந்து போய் உள்ளது. சாப்பிடக் கூட கஷ்டம். இடுப்பு வலி இன்னும் இருக்கிறது. இங்கே பாருங்கள் கால் கூட வீக்கம் வற்றவில்லை. நான் ஆஸ்பத்திரியில் ஏழு நாட்கள் இருந்தேன்" என்றார்.வள்ளியம்மாள் என்பவர் இப்படிக் கூறினார்."அன்று பொலிஸ் விரட்டிக் கொண்டே வந்தது. நான் ஓடியும் கூட கட்டைக் கம்பால் அடித்த அடி முதுகில் பலமாக பட்டது. நெஞ்சு இன்னமும் வலிக்கிறது. எனது ஒரு வயது கூட ஆகாத குழந்தைக்கு பால் கொடுக்கக் கூட முடியவில்லை சாமி. நான் ஏழு நாள் ஆஸ்பத்திரியில் இருந்தேன்." என்றார்.ஆரம்பத்தில் இந்த தொழிலாளர் களை ஆஸ்பத்திரியில் அழைத்து சென்று அவர்களை கவனித்தது தொடக்கம். ஆஸ்பத்திரி அலட்சிய நிலை காரணமாக தொழிலாளர்களை தனியார் மருத்துவமனையொன்றிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்ததெல்லாம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத் தொண்டர்களே என்பது தெரிவந்தது.டொக்டர் சாந்தகுமார்அத்தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்திருப்பவர் புதிய ஜனநாயக முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டவருமான (சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு இரண்டு வருடங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட) ஹோமியோ பதி டொக்டர்.சாந்தகுமார் அவர்களே.அவர் இது பற்றி கருத்து தெரிவிக் கையில் "தோட்டத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எமது மக்களுக்காகக் குரல் கொடுக்க எந்த தலைமையும் இல்லை. அதிகார வர்க்கமும் தோட்ட முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை மூர்க்கமாக அடக்க முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இத்தொழிலாளர்களுக் காக குரல் கொடுக்க எவரும் முன்வராத பட்சத்தில் காலப்போக்கில் அவர்களே அவர்களின் எதிர்காலத் தை தீர்மானித்துக் கொள்வார்கள் என்பது மட்டும் உறுதி!" என்றார்.சம்பவம் நடந்த நாளிலிருந்து இத் தொழிலாளர்கள் தமது வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். அவ் வேலை நிறுத்தத்தின் போது தமது பிரதான கோரிக்கைகளாக பின்வருவ னற்றை முன்வைத்தனர்.தொழிலாளர்களின் கோரிக்கைகள்1.தனியார் மயமாக்கல் ஒப்பந்தத்தி ன்படி லாபத்தில் 10 வீதத்தை சகல தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.2. இருபத்தொரு பெண் தொழிலாளர் களுக்கும் முழு பேர் போடப்பட வேண்டும்.3. நடந்தசம்பவம் குறித்து பூரண விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.4. எமது பிள்ளைகளை பெயர் பதிய வேண்டும்.5. சம்பவத்துக்கு காரணமான தோட்ட அதிகாரி நீக்கப்படவேண்டும்.முதலாவது கோரிக்கையின் படி 1996ம் ஆண்டில் பெற்ற லாபத்தில் 10 வீதத்தையே தொழிலாளர்கள் கேட்டனர். ஆனால் இது வரை லாபம் ஒன்றுமே இல்லை. நட்டத்திலேயே இயங்குவதாக நிர்வாகம் கணக்கு காட்டி வருகின்றது. இது பற்றி வெங்சர் தோட்ட இ.தொ.கா தொழிற்சங்கத் உப தலைவர் எஸ்.கந்தையா தெரிவிக் கையில்,"லாபம் இல்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. இவர்கள் வழமயாகவே "லாபமில்லை" என்பதை கூறியே எங்கள் வயிற்றில் அடித்து வந்துள்ளனர். எங்கள் தோட்டத்தில் ஒருவருக்கு நாள் சம்பளம் 83 ரூபா. எல்லாம் கழிக்கப்பட்டு கைக்கு வந்து சேரும் போது ஒண்ணும் மிச்சமிருக்காது.நட்டத்துக்கு காரணம் யார்?சரி, லாபம் இல்லையென கூறுவோமே லாபமில்லாததற்கு யார் காரணம் தொழிலாளர்களா? அதிகாரி களா? ஏற்கெனவே தோட்டத் துறை, அதிகாரிகளின் லஞ்ச ஊழல் என்பவற்றால் மோசமாக பாதிக்கப்பட்டு ள்ளது. அவர்கள் சுரண்டி எடுத்துவிட்டு பழியை எங்கள் மீது போட்டு விடுகிறார்கள். தொழிலாளர்கள் தங்களது வேலையை சரியாக செய்து வருகிறார்கள். அன்றும் சரி இன்றும் சரி எந்தவித தொழில் நுட்ப கருவிகளு மின்றி தமது உடலுழைப்பாலேயே கொடுக்கப் பட்ட வேலையை சரியாக முடிக்கிறா ர்கள். உதாரணத்திற்கு 35 பேருக்கு ஒரு ஹெக்டேர் கவ்வாத்து வெட்ட கொடுக்கப்பட்டால் 35 பேரைவிட அதிக தொழிலாளர்கள் அதில் ஈடபடுத்தப்பட் டாலோ அல்லது ஒரு ஹெக்டேரை விட குறைந்த பரப்பில் கவ்வாத்து வெட்டப்ப ட்டாலோ நாங்கள் குற்றத்தை ஏற்போம். ஆனால் அப்படி நடப்பதில்லையே. அப்படியெ ன்றால் எங்கு பிழை தோட்டம் நஷ்டமைடைவதைக்காட்டி தொழிலா ளர்களின் சலுகைகளையும், அவர்க ளின் வசதிகளையும் குறைப்ப தையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்." என்றார்.நான்காவது கோரிக்கையான பெயர் பதிவது என்பது முக்கியமானது. 1993இல் பிரேமதாச ஆட்சியின் போது தோட்டங் கள் தனியார் மயமாக்க ப்படுவது தொடங்கப்பட்டது. அன்றிலி ருந்து இன்றுவரை காலியிடங்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்;த்துக் கொள்ளப்பட வில்லை. இன்னமும் வேலையில்லாமல் தமது பிள்ளைகள் நான்கு வருடங்களாக இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இறப்பு, விலகல், ஓய்வு பெறுதல், வேலை நீக்கம், என்பவற்றினால் இந்த நான்கா ண்டில் தொழிலாளர்கள் குறைந்துள் ளனர், அவர்களின் இடத்துக்குப் பதிலாக புதியவர்களை அமர்த்துவத ற்குப் பதிலாக குறைந்த தொழிலார்க ளைக் கொண்டு கூடிய உற்பத்தியைப் பெற முயற்சி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி தரப்படாத போது அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது.தோட்டத்துறையைப் பொறுத்த வரை 1992-1995க்குமிடையில் 14 வீதத்தவர் தமது தொழில் வாய்ப்பை இப்படி இழந்துள்ளனர் எனத் தெரிகிறது.'மீண்டும் ஏமாற்றப்பட்டோம்!"ஜனவரி 6ம் திகதி தொழிலாளர் திணைக்கள-ஹட்டன் பிரதேச பொறுப்பான உதவி ஆணையாளர் வேலை நிறுத்தம் தொடர்பாக சமரசம் செய்ய வந்தார்.இவர் கூறியது இது தான் "சம்பவம் பற்றிய விசாரணையை மேற் கொள்கி றோம். அதுவரை தோட்ட அதிகாரி இடைநீக்கம் செய்யப்படுவார். 21 பெண் தொழிலாளர்ளுக்கும் முழு பேர் போடப்படும். ஏனைய கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்கிறோம். எனவே வேலை நிறுத்தத்தை கைவிடுங்கள்."தொழிலாளர்கள் பெரிய எதிர்ப்பு எதுவுமின்றி மீண்டும் வேலைக்குப் போனார்கள்.ஆனால் ஒரு மாதமாகிவிட்ட நிலையில் இன்னும் எதுவித முன்னேற்ற முமில்லை. பழைய அதிகாரிக்குப் பதிலாக, புதிய அதிகாரி. மாறியது "அதிகாரி" ஒருவர் தான். அதிகாரம் அப்படியே இருக்கிறது. அதே நடை முறை அதே போக்கு. வழமைபோல் தொழிலாளர்கள் இம்முறையும் ஏமாற்றப்படடனர்.இதற்கிடையில் தோட்டக்கம்பனி அதிகாரியின் வேண்டுதலின் பேரில் இடை நீக்கம் செய்யப்பட்ட தோட்ட அதிகாரியை மீண்டும் நியமிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் வெஞ்சர் தோட்டத்து இ.தொ.கா. தொழிற்சங்க தலைவர்கள் இதற்காக கொழும்பிலுள்ள இ.தொ.கா. தலைமை யின் செல்வாக்கைப் பயன்படுத்த முயற்சித்து வருவதாகவும் பேசப்படுகி றது.பலமான முதலாளித்துவ சக்திகள். அதனை பாதுகாப்பதற்கான பலமான ஆட்சியதிகார கட்டமைப்பு, பலவீன மான தலைமைகள், பிழியப்பட்டு, பிழியப்பட்டே நலிந்து போன தொழிலாளர் படை. இது தான் மொத்த மலையகத்தினது நிலை.இலங்கையின் மொத்த பயிர்ச் செய்கை நிலப்பரப்பில் 40 வீதம் பெருந்தோட்டம். இலங்கையின் மொத்த ஊழியர்களில் ஆறில் ஒரு பகுதியினர் தோட்டத் தொழிலாளர்கள். இலங்கைக் கான மொத்த ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி பெருந்தோட்டத் துறையிலிருந்தே பெறப்படுகிறது. தேசிய வருமானத்தில் 15 தொடக்கம் 20 வீதம் வரை இவர்களின் உழைப்பிலிருந்தே பெறப்படுகிறது.21ம் நூற்றாண்டுக்கும் அடிமைகளே!தனியார்மயத்தின் பின் கடுமையான முறையில் மலையகத் தொழிலாளர்க ளின் உழைப்பு உறிஞ்சப்பட்டு வருகின்ற போதும் அவர்களின் நலனில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத அதே வேளை இருந்த நலன்களும் பறிபோய்க ;கொண்டிருக்கும் நிலையே அங்கு உள்ளது.ஒரு இடது சாரி இயக்க சிங்கள இளைஞர் ஒருவர் அண்மையில் இப்படிக் குறிப்பிட்டார்."இங்கு தோட்டங்கள் மாத்திரம் விற்கப்படவில்லை. கூடவே ஒரு சமூக த்தையும் சேர்த்தே ஒரு சில முதலாளிக ளுக்கு விற்று விட்டுள்ளனர்...."உண்மையிலும் உண்மை. இவர்கள் மாறி மாறி விற்கப்பட்டுக் கொண்டி ருக்கும் நவீன அடிமைகளே தான். 21ம் நூற்றாண்டுக்கும் இழுத்துச் செல்லப் படும் அடிமைகளே தான்.
(பெப்ரவரி.06.இதழ்-115)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates