Headlines News :
முகப்பு » , , » கண்டிராசன் கதை - சச்சிதானந்தன் சுகிர்தராஜா

கண்டிராசன் கதை - சச்சிதானந்தன் சுகிர்தராஜா

கண்டியின் கடைசி ராசன் விக்கிரம ராஜசிங்கனின் கதையை சொல்லப்போகிறேன். அவரின் முழு வரலாறு அல்ல. ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டு அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டு, நாடு கடத்தப்பட்ட சம்பவங்கள் பற்றியது. நீங்கள் வாசிக்கப்போகும் இந்த வியாசத்திற்கு இரண்டு காலனிய கால ஆவணங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். இதில் ஒன்று ஆங்கிலேயத் துருப்புகளுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த ஒருவரின் நினைவுகூரல்; மற்றையது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், தனது அரச குவத்தினருடனும் சேவகர்களுடனும் கொழும்பிலிருந்து மதராஸ் பட்டினத்திற்குக் கொர்னவாலீஸ் என்ற கப்பலில் நாடு கடத்தப்பட்டதைப் பற்றிய ஆங்கிலச் சேவைத்துறை அதிகாரியின் நாட்குறிப்பு.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கைதானதை நேரில் பார்த்ததாகச் சொல்லுகிறவர் டி.வீ.ஏ. டியஸ். இதுபற்றி இவர் எழுதியது அந்த நாட்களில் பிரபலமான பத்திரிகையான சிங்கள சங்கரவாவில் 1861ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்தது. கைதான சம்பவம் கிட்டத்தட்ட இவரால் நாற்பது வருடங்கள் கழித்து நினைவுகூரப்பட்டிருக்கிறது. இதை நேரில் பார்த்த சிங்கள நினைவூட்டலின் ஆங்கில மொழிபெயர்ப்பு முப்பது வருடங்களுக்குப் பின் டி. பி. பொகத் என்பவரால் Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain and freland என்ற ஏகாதிபத்திய ஆய்விதழில் பிரசுரமாகியது. அதன் தவைப்பு: How the last King of Kandy was Captured by the British பொகத் தெரிவிக்கும் அதிர்ச்சியான செய்தி, டியஸ் என்ற மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இருந்ததாக அரச கோப்புகளில் குறிப்பு இல்லை. டியஸ் எழுதியதாகச் சொல்லப்பட்ட இது வாய்வழிப் புனைவுகளின் திரட்டு.

மற்றைய ஆவணம், ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனும் பரிவாரமும் கப்பலில் கொண்டுபோகப்பட்டது. பற்றி வீலியம் கிரன்வில் என்ற அரசாங்கப் பணித்துறைவர் எழுதியது. Deportation of Sri Vikram Rajasingha, Ceylan Literary Review 3 (II) 1936 & 3 (12 ) 1936: இவரின் குறிப்பின்படி அரச கைதிகள் கொழும்பிலிருந்து ஆங்கில முதலாம்மாதம் 25,1816 அன்று கொண்டுசெல்லப்பட்டனர். அடுத்த மாதம் 21ஆம் தேதி மதராஸ் துறைமுகத்தைச் சென்றடைந்தார்கள். முடியிழந்த மன்னருடன் இன்னும் அறுபது பேர் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கிரன்வில் தகவல் தருகிறார். அரசர், அவருடைய நான்கு மனைவிகள், அவருடைய தாயார், அவரின் சேவகர்கள், அவரைச் சார்ந்திருப்பவர்கள் எனப் பலரும் இவர்களில் அடக்கம். அன்றைய ஆணாதிக்க எழுத்து ஆசாரப்படி மனைவீயரின் பெயர்கள் தரப்படவில்லை. அவர்களின் பெயர்களை இங்கே தந்திருக்கிறேன். ஸ்ரீ வெங்கட ரங்கம்மாள் தேவி, ஸ்ரீ வெங்கட ரங்கம்மாள் ஆகிய இருவரும் சகோதரிகள். அத்துடன் தென்கள் சாமியின் இரு புதல்விகளான முத்துக்கண்ணம்மாள் தேவி, வெங்கட அம்மாள். இருவரும் பூப்பெய்தாத வயதில் மணய் முடிக்கப்பட்டனர். மன்னரின் தாயார் பெயர் சுப்பம்மா. இந்தப் பெண்கள் பற்றி அதிகத் தகவல்கள் இல்லை. ஸ்ரீ வெங்கட ரங்கம்மாள் தேவியின் உருவப்படத்தைக் கொழுப்பு அருங்காட்சியகத்தில் காணலாம். மன்னர் குடும்பத்தினர் பதினொரு மாத காலம் கொழுப்பில் தடுப்புக் காவலில் கைதிகளாக இருந்த நேரத்தில் ஆங்கிலேய ஓவியரான வில்லியப் டானியேல் அதனை வரைந்திருக்கிறார். நெற்றிப் பொட்டுடன் காணப்படும் ரங்கம்மாள் தேவி ஆங்கில, தென் இந்தியக் கலவையாகக் காட்சியளிக்கிறார்.

இந்த இரண்டு ஆவணங்களிலும் அதிகமாக வெளிப்படும் கேள்வி கைதியாக்கப்பட்ட மன்னர் எவ்வாறு நடத்தப் பட்டார் என்பதாகும். கிரன்வில்லும் டியஸும் அரசரைப் பற்றிப் படர்க்கையில் எழுதும்போது பரியாதைத் தன்மையாக மாட்சிமை தங்கிய', 'மேன்மை தங்கிய' என்ற முன்னொட்டுகளை உபயோகிக்கிறார்கள். கிரென்வில் அரசரை நேரில் அழைத்தபோது 'ஐயா' என்றார். ஆங்கில அதிகாரிகள் இவருக்குக் காட்டிய கண்ணியம், உபசாரம், பெருந்தன்மைகள் சிங்கள் முதலிகளிடையேயும் கண்டி மூப்பர்களிடையேயும் காணப்படவில்லை. அரசரைக் கைதுசெய்ய வந்த கண்டி குடி முதல்வர்களில் ஒருவரான எக்னெலிகொட அரசனின் கைகளைப் படர்கொடிகளினால் கட்ட முயன்றான். இவன் அரசரை 'பன்றி' என்று திட்டினான். அந்த நாட்களில் மலையக இந்தியர்களுக்குக் 'கள்ளத்தோணி' என்ற அவபதிப்புச் சொல் சிங்களப் பொது உரையாடலில் பிரயோகிக்கப் படவில்லை. அப்படி புழக்கத்திலிருந்திருந்தால் கட்டாயம் ஸ்ரீ விக்கிரய ராஜசிங்கனைக் கள்ளத்தோணி என்று எக்னெலிகொடை திட்டியிருப்பான். டியஸுக்கு இந்த மூர்க்கத்தனமான செய்கை பிடிக்கவில்லை. தன் தோளிலிருந்த சால்வையை எடுத்துக் கொடுத்து அரசரைக் கட்டும்படிச் சொன்னார். கடவுள்போல் பதித்தவரை இப்படிச் செய்யலாமா என்றும் கேட்டிருக்கிறார். அரசரை மட்டுமல்ல இரண்டு ராணிகளையும் கண்டி மூப்பர்கள் மிகக் கேவலமாக நடத்தினார்கள். அவர்களுடைய ஆடைகள் கிழிக்கப்பட்டன. அவர்களின் தோடுகள் பிடுங்கப்பட்டன. இந்த டியஸுதான் ஆங்கில அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பி அரசரையும் ராணிகளையும் மீட்டார்.

கிரன்வீல் நாடகுறிப்பில் காணப்படும் அரசர் எல்லா மனிதர்களையும் போலவே முரண்பாடுகளின் கலவை.

அறிவாளியாகவும் ஆத்திரக்காரராகவும் அதிகாரம் செலுத்துகிறவராகவும் காணப்படுகிறார். முடியை இழந்தாலும் அரசகம்பீரத்துடன் நடக்கிறார். இங்கிலாந்து அரசவை பற்றிய பரபொழுக்கங்களை அதிகம் அறிந்திருந்தார். இவை எப்படி தெரியும் என்று கிரன்வில் கேட்டதற்குச் சரித்திரம், ஆராய்ச்சி என்ற இரண்டு வார்த்தைகளில் பதில் சொன்னார். "வாசிப்பீர்களா" என்று கிரன்வில் கேட்டார். "சிலவேளைகளில் வாசிப்பதுண்டு. என்னுடைய சேவகர்கள் எனக்கு வாசித்துக்காட்டுவார்கள்" என்றார். "எழுதுவது உண்டா” என்ற கேள்விக்கு அதிகாரம் செலுத்திப் பழகிப்போனவர்களின் பதிலைச் சொன்னார்: "அது காரியதரிசிகளின் வேலை." இந்த பன்னரின் கடுஞ்சினத்திற்கு ஒரு வெட்கங்கெட்ட உதாரணம்: அரசருக்குப் பணியாற்றிய ஒருவர் ராச படுக்கையில் இருந்ததற்காகக் கோபத்தில் கட்டிலையே தூளாக்கினார்.

அரசர் ஆங்கிலேயர்களுக்குக் கொடுத்த தளத்தகையான (Strategic) தகவல் "சிங்கள முதலிகளான' எஹலபொல், பொலிகொட போன்றவர்களை நம்பாதீர்கள் என்னை இவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள். உங்களுக்கு எதிரியாக மாறுவார்கள். இவை மன்னரின் தீர்க்கதரிசனமான வார்த்தைகள் பின்னர் நடந்த கண்டிப் போரில் கெப்பட்டிபொலவுக்கு எஹலபொல பின் துணையாக இருந்திருக்கிறார்.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கும் கிரன்வில்லுக்குமிடையே நடந்த சங்கடயான சம்பாஷணை அரசரின் கொடுங்குரூரமான செயல்கள் பற்றியது. ஆங்கிவ வணிகர்களின் உறுப்புகளை ஏன் சிதைத்தீர்கள் என்றதற்கு அரசன் கொடுத்த வீடை, "இவர்கள் எஹலபொலவின் உளவாளிகள்..." அப்போது போர்க் குற்றங்கள் கோவிட்-9 போல் மக்களின் கரிசனைக்கு வந்திருக்கவில்லை.

கிறித்துவம் பரவ அனுமதி அளித்திருந்தால் நாடு நாகரிகம் அடைந்திருக்கும் என்று கிரன்வீல் சொன்னபோது மன்னரின் மறுமொழி, 'நாட்டின் பாதுகாப்பு முக்கியம்.' இவர் நாட்டின் பாதுகாப்பு என்று சொன்னது பௌத்த மதம். சைவ பதத்திற்கு நாயக்கர்கள் ஒன்றுமே செய்யவில்லை. இவர் தலதா மாளிகையில் கட்டிய எண்கோண மண்டபம் பௌத்தத்தின் தாஜ்மகால் இந்த ஒப்பிடல் கொஞ்சம் மிகையாகத் தெரியும் ஷாஜகானின் மனைவியை நினைவுகூராபல் இந்த வியத்தகு கட்டடங்களின் வெளித் தோற்றங்களை மட்டும் பாருங்கள். இந்த ஒப்பீட்டு மதிப்பீடு விளங்கும்.

கிரன்வில்லின் நாட்குறிப்பு காவனிய கால எழுத்துகளில் சற்று வித்தியாசமானது. கீழைத் தேசத்தவர்களைக் குறைவுபடுத்தும், இழிவுபடுத்தும் வரிகள் அதிகம் இல்லை. அரசர் அறிவுக்கூர்மையானவர் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார். இந்த ஆக்கமுறையான கணிப்புக்குக் காரணம் ஆங்கில கம்பனியார் வியாபாரிகளாக வந்ததுதான். கொம்பனிக்காரர்கள் இந்தியர்களையும் இலங்கையினரையும் சரிநிகராகப் பார்த்தார்கள். 1857 இந்தியச் சிப்பாய்களின் கிளர்ச்சிக்குப் பின் இந்தியத் துணைக் கண்டம் பிரித்தானிய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்தான் ஆண்டகைகள், ஆளப்படுவோர் என்ற துவித எண்ணய் உருவாகியது. அந்நியர்கள் பற்றிய இனம்சார்ந்த வெறுப்பு அதிகரித்தது.

கண்டி ஒப்பந்தத்தில் பன்னிரண்டு பேர் கையொப்ப மிட்டிருந்தார்கள். அவர்களில் நான்கு பேர் தமிழிலும், நான்கு பேர் சிங்களத்திலும் பீதியானோர் தமிழிலும் சிங்களத்திலுமாகக் கையொப்பம் போட்டிருந்தார்கள். தமிழில் கையொப்பமிட்ட நாயக்கர்களைத் தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்தவில்லை. இந்தக் கையெழுத்துப் போட்டவுடன் நாயக்கர்களின் மேலாதிக்கம் முடிவுக்கு வந்தது. இத்துடன் 2,357 வருட காலத் தீவின் சுதந்திரம் பறிபோயிற்று. இந்த 1815 கண்டிப் பந்தத்தைவிட மிக மோசமானது 1817 உடன்படிக்கை. இதன்படி ஆங்கிலேய அதிகாரிகளுக்கு முன்னால் சிங்களவர்கள் கைகட்டி நிற்க வேண்டும் தெருவில் ஆங்கிலேயர்களோ அல்லது அவர்களின் வாகனங்களோ வரும்போது நடுப்பகுதியை அவர்களுக்கு வீட்டுக்கொடுக்க வேண்டும். சிங்கள் மறுதலிப்பாளர்கள் செய்த இழிவுக்குரிய செயல் நாயக்க வம்சத்தினரிடமிருந்து தீவைக் கைப்பற்றி இன்னுமொரு அந்நிய ஹனோவேரியன் அரச குலத்திற்கு மாற்றியது. திராவிட ஆட்சி நீக்கப்பட்டு ஆரிய ஆட்சி மாற்றீடு செய்யப்பட்டது.

விலியம் கிரன்வில்லின் பதிவில் என் கவனத்தை ஈர்த்தது அரசன் அணிந்த உடைபற்றிய விவரங்கள். மணி வேலுப்பிள்ளையின் இலக்கிய மேதையையான மொழிபெயர்ப்பில் தந்திருக்கிறேன்: "மஞ்சள், சிவப்பு, பச்சை வரிகள் கொண்ட அகலமான பட்டுக் காற்சட்டை கணுக்காலில் குறுக்கப்பட்டிருந்தது. இருபுறமும் இடுப்பிலிருந்து கீழிறங்கும் பொன்மணிகள். மேற்புறம் பொன்மலர் வேலைப்பாடு கொண்ட வெண்பட்டு மேற்சட்டை அதன் கழுத்தைச் சூழ்ந்த பொன்விளிப்பு. ஸ்பானியரின் பாணியில் மிகுந்த பூவேலைப்பாடும் வெண்சரிகை விளிப்புகளும் கொண்டு குறுகி, அகன்று பொருமி, ஒடுங்கிய சட்டைக்கை கழுத்தைச் சுற்றி அகன்று கூர்ந்த சரிகைக் கொச்சகம். அதன் கீழே கஞ்சிப்பசை ஊறி மொறமொறப்பான, நேர்த்தியான சரிகைத் தோளணி பின்புறம் பிறைவடிவில் தொங்கியது. பணிகள் பதித்த பொன்வீளிப்புடன் கூடிய தொப்பி ஒன்று சிங்களப் பாணியில் தலையை மூடியிருந்தது. அதன் உச்சிக் கூம்பீல் பதித்த பொன்னணியில் அரிய மாணிக்க பணிகள், நீல மணிகள், பரகத பணிகள் சில தொங்கிக் குலுங்கின. அரசன் கைக்குட்டை ஒன்று வைத்திருந்தான். பொன் வேலைப்பாடு கொண்ட மென்பட்டுக் காலணிகள் பாதங்களை மூடி விரல்களுக்கு மேலே வளைந்திருந்தன."

இதே உடுப்புகளுடன்தான் மன்னர் கொழும்பிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டார். மதராஸ் அடைந்ததும் மன்னர் இதே அலங்காரங்களுடன்தான் கப்பலை விட்டு வெளியே வந்தார். அரசரும் அவரின் குலத்தினரும் பல்லக்கில்தான் வேலூருக்குத்தூக்கிப்போகப்பட்டார்கள். புகையிரத வண்டியில் பயணம் செய்ய ஆய் அந்த நாட்களில் நிலக்கரியில்தான் வண்டிகள் இயங்கின. மதராஸ்வாசிகள் இன்னும் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. மன்னருக்கும் அவருடைய சந்ததியாருக்கும் ஆங்கில ஆட்சியாளர்கள் வசதியான ஓய்வூதியம், மானியம் கொடுத்தார்கள். இது 964இல் நிறுத்தப்பட்டது. இதைச் செயலாற்றியவர் இடதுசாரி நிதி அமைச்சர் என். எம். பெரெரா. இது மட்டுமல்ல அந்த நாட்களில் என் போன்றவர்களின் ஆசைத் தின்பண்டங்களான Cadbury's Chocaiare, Huntly and Paimers Biscuits, Krafi Cheese ஆகியவற்றைத்தடைசெய்தவர் இவர். இவற்றைத் தமிழ்ப்படுத்தி எழுதினால் உங்கள் நாக்கில் சுவை ஊறாது. ஆகையினால்தான் ஆங்கிலத்தில் வர்த்தகப் பெயருடன் தந்திருக்கிறேன். ஏழு ஆண்டுகள் கழித்து இந்திரா காந்தி இந்திய அரசர்களுக்குக் கொடுக்கப்பட்ட மானிய வாக்குறுதியைத் துறப்பு செய்தார்.

மன்னரை வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது ஒரு முரணான நகைச்சுவை, இதே சிறைச்சாலையில்தான் சிப்பாய்கள் ஆங்கில கம்பனியருக்கு எதிராக 1803இல் கொதித்து எழுந்தார்கள். சாவர்க்கார் தன்னுடைய புத்தகத்தில் 1857தான் முதல் இந்திய விடுதலைப் போர் என்று உணர்வுப் பெருக்கோடும் சரித்திர நினைவு இழப்புடனும் வாதாடுகிறார். இவரின் நூலில் வேலூர் என்ற சொல்வே இல்லை. இந்த விடுபடல் அவரின் குறுகிய கருத்தியல் பார்வைக்கும் மூர்க்கத்தனத்துக்கும் வெளிப்படையான எடுத்துக்காட்டு.

ஏகாதிபத்தியம் செய்யும் மூலோபாயங்களில் ஒன்று, பதவி நீக்கப்பட்ட மன்னர்களை பேற்கத்தியர் தான் கைப்பற்றிய மற்றைய நாடுகளுக்குக் கடத்திவிடுவது. கடைசி மொகலாய மன்னர் ஷா பகதூர் 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு பர்மாவுக்கு - இன்றைய மியன்மார்நாடு கடத்தப்பட்டார். அதே போல் மூன்றாம் - ஆங்கில பர்மா போருக்குப் பின் 1885இல் பர்மாவின் கடைசி ஆட்சியாளர் தீபாவ்வும் அவருடைய மனைவி சுப்லாத்தும் அவர்களின் இரண்டு மகன்களும் மகாராஷ்டிரத்தின் நிரந்தரத் துயில்நிலையில் இருக்கும் கடலோரக் கிராமமான ரத்னகிரிக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். இவர்களுடைய கதையை The Glass Palace' என்ற நாவலில் அமிதாப் கோஷ் சுவையாக எழுதியிருக்கிறார்.

அரசியல் கைதிகளை நாடு கடத்துவது ஆங்கிலேயரின் சுயமான, அசலான செய்கை அல்ல. இதற்கு முன்பு டச்சுக்காரர்கள் செய்திருக்கிறார்கள். 1703இல் இந்தோனேசிய மன்னரான மூன்றாம் அமன்குராட் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒவ்வாந்தரிடம் சரணடைந்த போது அவர் தன் குடும்பத்தினருடன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவர்கள் சிறையிருந்த இடம் யாழ்ப்பாண டச் கோட்டை. இரு நூறாண்டுகள் கழித்து ஓர் அந்நிய நாட்டின் பாதுகாப்புக்குக் கட்டப்பட்ட ஒரு கோட்டைக்கு விடுதலைப் புவிகளும் இலங்கை இராணுவமும் சண்டை போடுவார்கள் என்று மூன்றாம் அயன்குராட் என்ன, தொலைநோக்குப் பார்வையாளர் நொஸ்ரட பஸ்கூட நினைத்துப் பார்த்திருக்க யாட்டார். யாழ்ப்பாணப் பட்டணத்தின் கடைசி அரசனான இரண்டாம் சங்கிலி போர்த்துக்கீசியரால் கோவாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு !623இல் அவருடைய தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவதற்கு முன் அவர் டோன் பிலிப்பு என்ற பெயருடன் கிறிஸ்தவரானார். இவருடைய சகோதரர்கள் வலுக்கட்டாயமாகக் கத்தோலிக்கத் துறவிகளாக மாற்றப்பட்டார்கள். சகோதரிகள் கன்னியாஸ்திரிகள் ஆக்கப்பட்டார்கள். இதற்கு அரச குடும்பயே இனி துளிர்விடக்கூடாது என்ற நோக்கப்தான் காரணம்.

கண்டி அரசனைப் பற்றிய கட்டுரையானாலும் அவருக்குத் துரோகம் செய்தவர்களையும் சில வரிகள் சொல்ல வேண்டும். இது விடுபட்டுப் போவது காந்தியின் கொவை பற்றிப் பேசும்போது கோட்சேயைத் தவிர்ப்பது போன்றது. ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆட்சியில் அரசரை மறுதலித்தவர்கள் இன்று யாவீரர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சரித்திரத் திருத்தல் பற்றி என்.சரவணன் தினக்குரலில் டிசம்பர் 11,2018 அன்று எழுதிய புலமைசார்ந்த கட்டுரையில் காணலாம். இதைவிட மோசமானது, ராஜபக்ஷவை இன்றைய எஹலபொல என்று அவருடைய அரசியல் பக்தர் ஒருவர் கூறியிருப்பது, ஒருவீதத்தில் இது சரியான ஒப்புவமை பழைய எஹலபொல தன்நாட்டை ஆங்கிலேயர் கைக்குக் கொடுத்தார். இன்றைய எஹலபொல சீனாவின் கையில் தீவைக் கொடுத்திருக்கிறார். அந்த நாளைய எஹலபொலவுக்கு ஆங்கில பிரடரிக் பிரவுன் ஆதரவாளர். இன்றையவருக்கு அனாமதேய சீனத் தூதர்கள். எஹலபொல பொரீஷியஸுக்கு நாடு கடத்தப்பட்டவர். அந்தத் தீவில் இவர் கழித்த நாட்கள் பற்றி ரோமேஷ் குணசேகரா 'The Prisoner of Paradise என்ற தலைப்பீல் அவருக்குச் சாதகமான நாவலாக எழுதியிருக் கிறார். ராஜபக்ஷ போக வேண்டிய இடம் சொரூசுத் தீவுகள் அல்ல, சர்வதேச நீதிமன்றம். பிலிப்பின்ஸ் பெரிண்ணட் மாக்கோசின் மகன், தனது தந்தையின் வரலாற்றைத் திருத்தி எழுதியதுபோல் 2080களில் நடக்கப்போகும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஷவின் வாரிசுகள் அவரின் காலத்தில் இலங்கையில் பாலும் தேனும் வழிந்தோடியது என்று பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உண்டு.

இந்தப் போர்களில் ஈடுபட்ட படைகளைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு இராணுவப் வருவதற்கு முதலே காலனிய காலத்தில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்காற்றிய படைகள் இருந்திருக்கின்றன. கண்டி அரசனை எதிர்த்துப் போராடியவர்கள் முழுக்க முழுக்க ஆங்கில இராணுவத்தினர் அல்லர். அந்தப் படையில் வங்காளிகள், மாவா நாட்டவர்கள், ஏன் கறுப்பர்களும் இருந்தார்கள். இந்தக் கறுப்பர்கள் கோவாவிலிருந்த அடியைச் சந்தையில் வாங்கப்பட்டவர்கள். இவர்களை ஆளுநராக இருந்த பிரடரிக் நோர்த் வாங்கியிருந்தார். எழுநூறு கறுப்பர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். அன்றைய நாணய பதிப்பில் ஒருவருக்கு நாற்பத்தைந்து பவுண்டுகள் கொடுக்கப்பட்டன. ஆங்கிலேயர் சார்பாக காரங் முகமது நுரூடீன், காரங் சைவுடீன் என்ற இரண்டு யாவானியச் சகோதரர்கள் பங்குகொண்டார்கள்.

இந்த யாவானியர்கள் இன்றைய புவியியலில் இந்தோனேசியர்கள். கண்டி அரசர் இவர்களைத் தன் பக்கம் மாறும்படிக் கேட்டபோது இவர்கள் அசையவில்லை. கண்டி அரசனின் படையை நடத்தியவர் சங்கலு என்ற பெயர்கொண்ட இன்னுயொரு யாவா நாட்டினர். இதையும் சொல்லியாக வேண்டும். ஆங்கிலேயர் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு எதிராகப் போர் தொடுத்தபோது அவர்கள் படையில் யாவா தேசத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். சினிமாக் கட்டபொம்மன் பேசிய "எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா? நாற்று நட்டாயா?" என்ற விசுவரூப வசனங்களை இன்னுமொரு காலகட்டத்தில் பிறந்திருந்தால் இதைக் கேட்கும் அரிய வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்திருக்கும். கட்டாயம் கட்டபொம்மன் பக்கம் சேர்ந்திருப்பார்கள்.

பொதுவாக ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு அவ்வளவு நல்ல பெயர் இல்லை. அந்த நாட்களில் எல்லா அரசர்களும் கெட்டவர்கள்தான், உன்னதமானவர் என்று கொண்டாடப்படும் அசோகர் அரை அரக்கர் தன்னுடைய முதலாவது மனைவி தனக்கெதிராகச் சதிசெய்தபோது ஏதோ தீபாவளிப் கொளுத்துவது போல் தனது மனைவியை எண்ணெய்யில் எரித்தவர், சிங்களவர்கள் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை பட்டாசு அந்நிய எதிரியாகப் பார்த்தார்கள்; இலங்கைத் தமிழர்கள் இவர் நம்பவர் அல்லர் என்று ஆர்வம் காட்டவில்லை உண்மையில் தமிழர்களுக்கு நாயக்கர்கள் ஏதும் செய்ததாகத் தகவல்கள் இல்லை. இந்த இரு சாரார் புறக்கணிப்பில் வீடுபட்டுப்போன முக்கியத் தகவல் காலனிய எதிர்ப்பில் இவர் வகித்த பெரிய பாகம் 'Legacy <fVailence நூலில் என்ற Caraline Elkins சரித்திர ஆசிரியரின் கணக்குப்படி 19 ஆம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 250 வருட ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகளில் இவரின் வெறுப்பெதிர்ப்பும் ஒன்று. சின்ன அப்பு என்ற இலங்கைப் புரட்சியாளர் ஆங்கில ஆட்சியின் முதல் ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்தபோது கண்டி அரசரின் ஆதரவு இவருக்கு இருந்தது. முதலாம் கண்டிப் போரில் ஆங்கிலப் படைகளை விரட்டியடித்தவர் இவர்.

எந்த ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டாரோ அதே ஆங்கிலேயர்கள்தான் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கைதான அதே பெத மகாநுவரை கிராமத்தில் அவர் நினைவாக ஒரு ஞாபக நடுகல்வை 1908இவ் நிறுவியிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் வாகை சூடி, புதிய எஹலபொல், புதிய துட்டகைமூனு என்று தன்னை அறிமுகப்படுத்திய ராஜபக்ஷவின் சிலை இன்று அவமானகரமாக அழிக்கப்பட்டிருக்கிறது. சரித்திரம் தரும் மகத்தான பாடம்: மகிமையானவர் என்று ஒரு காலத்தில் விழா எடுக்கப்படுகிறவர் இன்னொரு காலகட்டத்தில் மாசுள்ளவராக மதிக்கப்படுவார்; தென்படுவார். இந்த வரியை கோத்தபய ஏன் மோடிகூடப் படிக்கப்போவதில்லை; இது அவர்களின் கனிவான கவனத்திற்கு.

பின் குறிப்பு: நான் கேட்ட கேள்விகளுக்கு மூக்குச் சுளிக்காமல் தாராளமாகக் கவ்வித் தகைமையோடும் நகைச்சுவையோடும் தகவங்களைப் பகிர்ந்துகொண்ட என்.சரவணனுக்கு நன்றி.

மின்னஞ்சல்: rssugi@blueyonder.co.uk

நன்றி - காலச்சுவடு ஜுன் 2022



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates