Headlines News :
முகப்பு » » "மன்னரின் நினைவு தினத்தை அரசாங்கம் அனுஷ்டிக்க வேண்டும்" ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் வாரிசுகள் கோரிக்கை

"மன்னரின் நினைவு தினத்தை அரசாங்கம் அனுஷ்டிக்க வேண்டும்" ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் வாரிசுகள் கோரிக்கை


கண்டி தேசத்தை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கன் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கையை மீட்க போராடிய மாவீரன். மதுரை நாயக்கர் வழிவந்த தமிழ் அரசன். சிறந்த வீரன். இலங்கை முழுதும் தமது அதிகாரத்தை பரப்பிய ஆங்கிலேயர் கண்டி இராஜ்ஜியத்தை மட்டும் நெருங்க முடியவில்லை. அதற்கு ராஜசிங்க மன்னனின் பாது-காப்பு வியூகங்கள் முக்கிய இடத்தைப்பிடித்தன.
இம்மன்னனின் மனைவி வழி வாரிசுகள் இன்னும் அதே கம்பீரத்துடன் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்-றனர். இதில் முக்கியமானவர் வி.அசோக்ராஜா.இவர் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் கொள்ளுப்பேரனாவார். இவரைக் கேசரி வார இதழுக்காக தமிழகத்தில் வைத்து சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் 186 ஆவது நினைவு தின நிழ்வுகளுக்காக அவர் தயாராகிக்கொண்டிருந்தார்.

தமிழ் மன்னனின் கொடியே இலங்கையின் தேசிய கொடி 
1962 ம் ஆண்டு வரை இலங்கை அரசு ஆங்கிலேயரிடம் மேற்கொண்ட உடன்படிக்கையின் படி வாரிசுகளுக்கு வழங்கி வந்த மானியம் (பென்சன்) நிறுத்தப்பட்டது. கண்டி தேசத்து தமிழ் அரசனின் ஆட்சிக் கொடியே இன்றைய இலங்கையின் தேசியக் கொடியாகும் என்றார் வி.அசோக்ராஜா.

இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக வீரப்போர் புரிந்த கண்டி தமிழ் மன்னன் எனது தாய் வழி தாத்தா-வாவார். ஆங்கிலேய படையுடன் நான்கு முறை போர்புரிந்து வெற்றி பெற்றவர் அவர்.

ஐந்தாவது முறை அரசனின் பிரதானியான எகலப்பொல, ஆட்சியை தான் கைப்பற்றும் எண்ணத்துடன் வெள்ளைக்-காரனிடம் அடிமையாகி அரசனைக் காட்டிக்கொடுத்தான். அதன் பின்னரே எனது தாத்தாவான ஸ்ரீ விக்ரமராஜசிங்-கனை வெள்ளைக்காரப் படையினர் கைது செய்தனர்.

ஸ்ரீ வீரநரேந்திரசிங்கன்(1706-1739) 1739, ல் இறந்தான். வீரநரேந்திரனது மரணத்திற்குப் பின்னர் 1739 இல் மன்னரின் மைத்துனனான ஸ்ரீ விசயராசசிங்கன் ஆட்சிக்கு வந்தார்.

இவர் எங்கள் நாயக்கர் வம்சத்தவர். முதலாம் விமலதர்மன் காலந்தொட்டு தொடர்ச்சியாக வந்த பழைய சிங்கள இராஜவம்சம் ஸ்ரீ வீரநரேந்திரசிங்க னின் மறைவுடன் மறைந்து விட்டது. நாயக்கர்களின் ஆட்சி கண்டிப்பிர தேசத்தில் தொடங்கியதும் கண்டி அரசசபையில் புதிய பழக்க வழக்கங்கள் தோன்றின. நாயக்கர்கள் மதுரையில் இருந்து கண்டிக்கு வருகைதரத் தொடங்கினர்.

ஸ்ரீ விசயராசசிங்கனின்(1739/1747) மறைவின் பின்னர் ஸ்ரீ கீர்த்தி இராசசிங்கன்(1747/1780) பின்னர் ஸ்ரீ இராசா-திராசசிங்கன் (1780/1798)ஆகியோர் சிறப்பாக ஆட்சி புரிந்தனர். இவர்கள் சிங்கள மொழிக்கும் ,சிங்கள இலக்கி-யத்திற்கும், பௌத்த மதத்திற்கும் பெரும் மதிப்பைக் கொடுத்தனர்.

கீர்த்தி ஸ்ரீயின் ஆட்சிக் காலத்தில் சிங்கள இலக்கியம் பெரிதும் வளர்ச்சியுற்றது. இலங்கையின் சரித்திர ஆய்விற்கு இன்றியமையாததொரு சாதனமாய் விளங்கும் “மகாவம்சம்” நூல் கீர்த்தி ஸ்ரீயின் கட்டளையால் எழுதப்பட்டதாகும். கங்காராம விகாரையையும் கீர்த்தி ஸ்ரீ நிர்மாணித்து பௌத்த மதத்தை வளர்த்தார். தம்புள்ள குகைகளில் காணப்படும் அழகு நிறைந்த ஓவியங்கள் கீர்த்தி ஸ்ரீயின் ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வாகும் என்கின்றார் கண்டி அரசன் வாரிசான வி.அசோக்ராஜா. மேலும் தொடர்ந்த அசோகராஜா, 1798 இல் ஸ்ரீ இராசாதிராசசிங்கனின் மறைவை அடுத்து எனது தாத்தா ஸ்ரீவிக்கிரமராசசிங்கன் 1798 இல் அரசுப் பொறுப்பை ஏற்றார். கண்ணுச்சாமி என்ற இவரின் இயற்பெயர் விக்கிரமராசசிங்கன் என அரச பதவி வழியில் மாற்றம் பெறுகிறது.

இவர் ஆட்சி ஏற்ற காலம் முதல் சிங்களப் பிரதானிகள் இவருடன் முரண்பட்டனர். இலங்கையின் எல்லாப் பிரதே-சத்தையும் கைப்பற்றிய ஆங்கிலேயரால் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற முடியாது திண்டாடினர். இவரின் ஆட்-சியை அழிக்க பலரும் பலமுறை முயன்றும் தோல்வியை அடைந்தனர். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் 18.02.1815 இல் காட்டிக் கொடுக்கப்பட்ட பின்னரே ஆங்கிலப் படையிடம் சரணடைந்தார். இது பெரும் வரலா-றாகும். எனது தாத்தாவைக் காட்டிக்கொடுத்த எகலப் பொலவும், 1817 இல் கைது செய்யப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாத தீவாந்திரதீவான மொறிசியஸ் தீவிற்கும் அருகேயுள்ள சிறு தீவில் தண்டனைக் கைதியாக அனுப்பப்பட்டு தனிப்பட்டு மரணமானான்.

இதன் பின்னர் எங்கள் தாத்தா விக்கிரமராஜசிங்கனுக்கும் ஆங்கிலப் பிரதானிகளுக்கும் இடையே இடம் பெற்ற உடன்படிக்கையின்படி மன்னருக்கும், பின்னரான பரம்பரையினருக்கும் இலங்கை அரசு மானியம் வழங்க வேண்-டுமென உடன் படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன்படி அரசுக்குப் பலசலுகைகளையும் ஆங்கில அரசு வழங்கியது.

ஆனால், 1962 இல் எல்லா சலுகைகளும் சிறிமாவோ அரசால் இல்லாதொழிக்கப்பட்டன. பெண் வழி வாரிசுக-ளுக்கு பென்சனை மொத்தமாக வழங்கி இல்லாதொழிக்கப் பட்டதாம். 

இதற்கு மன்னனின் வாரிசுகள் ஆட்சேபனை தெரிவித்தனர். அதற்கு உரிய பதிலாக ஸ்ரீவிக்கிரமராசசிங்கன் எங்கள் மன்னன் என்பதைத் தெரிவித்தனர். இலங்கையில் எங்களை குடியேறச் சொன்னார்கள். இலங்கையில் குடியே-றினால் அரச சலுகைகளை அனுபவிக்கலாம் இல்லாவிடின் எந்தவித சலுகைகளையும் வழங்க இயலாது என சிறி-மாவோ அரசு சொல்லியது. அதனை மன்னனின் வாரிசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கின்றார் வி.அசோக்ராஜா.

தொடர்ந்து விபரிக்கின்றார் அசோக்ராஜா, இதன் பின்னர் எங்களின் சிரேஷ்ட உறவினர்கள் அனைவரும் வழக்குத் தொடர முன்வந்தனர். சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொருளாதார சிக்கலால் வழக்கை முன்னெடுக்க இயலாது கைவிடப்பட்டது. இன்று இம் மன்னர் பரம்பரையின் இறுதி வாரிசுகளில் இருவர் மட்-டுமே உழைத்து முன்னேறியுள்ளனர் என விவரிக்கின்றார் அசோக்ராஜா.

வறுமை மனஅழுத்தம் காரணமாக மன்னரின் வாரிசுகளில் ஒருவரான என்.ஏ.துரைசாமிராஜா சென்னையில் கடலில்-பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மூன்று நாட்களின் பின்னரே இவரின் சடலம் கிடைக்கப் பெற்றது. இறு-தியில் அவரின் கழுத்தில் கிடந்த பதக்கம் மூலமே சடலம் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் கண்டி மன்னனுடன் கப்பலில் வேலூருக்கு ஆங்கிலேயரால் அனுப்பப்பட்ட27 குடும்பமும் வறு-மையில் வாழ்ந்தனர். இவர்கள் வறுமையினால் ஸ்ரீரங்கம், மதுரை, ஆந்திரா சித்தூரில் குடியேறினர். மன்னரின் முக்-கிய பிரதானிகள் தஞ்சாவூர் அரண்மனைக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் தஞ்சாவூர் ஆடக்காரத் தெருவில் நிர்மா-ணிக்கப்பட்ட “கண்டி பெலஸ்” எனப்படும் மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். இன்று இம்மாளிகையும் வேறு ஒரு கைக்கு மாறிவிட்டது. இவர்கள் அனைவரும் வறுமையின் காரணமாக இடம் பெயர்ந்து கண்டி மன்னன் என்ற அடையாளத்தை தொலைத்து வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒன்று கூடல்நிகழ்வொன்றை நடாத்தவுள்ளோம்.

இலங்கை அரசு கண்டி மன்னரின் நினைவு தினத்தை ஜனவரி 30 இல் அனுஷ்டிக்க வேண்டும். 30.01.1832 இல் கண்டி மன்னர் வேலூர் சிறையில் மரணமானார். இவ்வருடத்துடன் 186 வருடங்கள் கழிந்துவிட்டன. ஒரு வருடமாவது இலங்கை அரசு இம் மன்னனின் நினைவு தினத்தை அனுஷ்டித்ததா---? இலங்கையை ஆண்ட கடைசி மன்னன் விக்கிரமராசசிங்கன் என்பதையாவது அரசு நினைக்க வேண்டும். இலங்கை அரசு, அரச விழாவாக மன்னனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க வேண்டும்.மரியாதை வழங்க வேண்டும். எனது தாத்தாவின் நினைவு தினத்தை வருடா வருடம் வேலூரில் வெகு சிறப்பாக நடத்துகிறோம் என தகவல்களை வழங்குகிறார் அசோக்ராஜா. 

சிலாபம் திண்ணனூரான்

நன்றி - வீரகேசரி


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates