Headlines News :
முகப்பு » » ஆசிரிய ஆலோசகர்களுக்கான சேவை நிரந்தரமாக்கப்பட வேண்டும் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன்

ஆசிரிய ஆலோசகர்களுக்கான சேவை நிரந்தரமாக்கப்பட வேண்டும் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன்


மிக நீண்ட காலமாக(1962 ஆம் ஆண்டு முதலாக) இலங்கை கல்வி முறையில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிப்பவர்கள் ஆசிரிய ஆலோசகர்கள். இதுவரை இவர்களுக்கான சேவை ஒன்று உருவாக்கப்படவில்லை என்பது துரதிஸ்டவசமான ஒன்றாகும். இச்சேவையின் அவசியம் குறித்து ஆராய்ந்த கல்வி அமைச்சர் ஆசிரிய ஆலோசகர்களுக்கான தனியான சேவையை உருவாக்க வேண்டும் என்ற பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

இந்நிலையில், இச்சேவையைக் கொண்டு வருகின்றபோது பக்கச் சார்பற்ற நிலையில், குறிப்பாக ஆசிரிய ஆலோசகர்களின் தகைமைகளை      அடிப்படையாகக் கொண்டு நியமனம் வழங்க வேண்டியுள்ளது. குறைந்தது ஒரு வருடக் காலத்திற்கு மேலான சேவையில் உள்ளவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட வேண்டும் என இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் அவர்கள் கல்வி அமைச்சருக்கும் செயலாளருக்கும் விண்ணப்பங்களை அனுப்பியிருக்கின்றார். இச்சேவை கொண்டு வரப்படவேண்டும் என்பது கல்விச் சமூகத்தினரது எதிர்பார்ப்பாகும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates