Headlines News :
முகப்பு » » கறுப்பு தீபாவளி ஏன்? - "எழுக மலையகம்"

கறுப்பு தீபாவளி ஏன்? - "எழுக மலையகம்"


தீபாவளி என்றால் அது மலையகம்தான். ஆனால், இம்முறை???
01. 1000 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்து 19 மாதங்கள் காத்திருந்து – மாற்றத்தைக்காண வீதிக்கு இறங்கிப் போராடிய எம் மக்களுக்கு மாற்றமானது 730 ரூபா என்ற ஏமாற்றத்திலேயே முடிந்தது. அதனால்தான் கறுப்பு தீபாவளி.

02. மலையகத்தில் இன்று அடுப்பு எரியவில்லை. மக்களின் அடிவயிறே பற்றி எரிகிறது. தீபாவளிக்கு பலகாரம் சுட எண்ணெய்த்தாச்சி கொதிக்கவில்லை. ஏமாற்றத்தால் ஏற்பட்ட விரக்தியில் உள்ளம்தான் கொதிக்கிறது. அதனால்தான் கறுப்பு தீபாவளி.

03. பட்டாசு கொளுத்தி கொண்டாப்படவேண்டிய தீபாவளியானது, அரசியல்வாதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், முதலாளிமார் சம்மேளனத்தினர் ஆகியோரால் கொளுத்திப்போட்ட துரோகம் என்ற குண்டால் புஸ்வானமாகியுள்ளது. அதனால்தான் கறுப்பு தீபாவளி.

04. பிள்ளைகளுக்கு புதிய உடுப்பில்லை. சுற்றத்தாருக்கும், உறவினருக்கும், சகோதர மொழி பேசுபவர்களுக்கும் பகிர்ந்தளித்து உண்டு மகிழ பலகாரங்கள் இல்லை. பார்க்கும் இடமெல்லாம் 1000 ரூபா என்ற அழுகுரலின் ஓசையே எதிரொலித்துக்கொண்டிருக்கின்றது. அதனால்தான் கறுப்பு தீபாவளி.

05. சம்பள அதிகரிப்பில் ஏமாற்றம் இருந்தாலும், வீட்டில் இருக்கும் பிஞ்சுக் குழந்தைகளுக்காகவும், சிறுவர்களுக்காகவும், சேமித்து வைத்திருக்கும் கொஞ்சநஞ்ச நகையை அடகு வைத்துவிட்டு பேருக்கு தீபாவளியைக் கொண்டாடுவோர் எண்ணிலடங்காதோர். அதனால்தான் கறுப்பு தீபாவளி.

"எழுக மலையகம்"
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates