Headlines News :
முகப்பு » » தேர்தல் விஞ்ஞாபனங்களும் மலையகமும் - சிவலிங்கம் சிவகுமாரன்

தேர்தல் விஞ்ஞாபனங்களும் மலையகமும் - சிவலிங்கம் சிவகுமாரன்


பொதுத்­தேர்­த­லுக்கு இன்­னமும் மூன்று வாரங் ­க­ளுக்கு குறை­வான காலமே இருக்கும் நிலையில் நாட்டின் பிர­தான கட்­சிகள் தமது தேர்தல் விஞ்­ஞா­பனங்­களை வெளியிட்­டுள்­ளன. முக்­கி­ய­மாக ஐ.தே.க மற்றும் ஐ.ம.சு.கூட்­ட­மைப்பு போன்ற பிர ­தான கட்­சி­களின் விஞ்­ஞா­ப­னங்­களில் நாட்டின் இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கு­ரிய எந்தவித நட ­வ­டிக்­கைகள் குறித்தும் தீர்­வுகள் முன்­வைக்­கப்பட ­வில்லை. இச்­சந்­தர்ப்­பத்தில் இந்­திய வம்­சா­வளி மக்கள் மற்றும் மலை­யக பெருந்­தோட்ட சமூகம் குறித்து ஆக்­க­பூர்­வ­மான எந்­த­வித வசனங்களும் அதில் இடம்­பெ­ற­வில்லை.

ஐ.தே.க தனது விஞ்­ஞா­ப­னத்தில் இந்­தியவம்சா­வளி மக்­களை சமூ­க­ம­ய­மாக்கல் மற்றும் தொழி ­லா­ளர்­க­ளுக்கு காணி,தனி வீடு குறித்து தெரி­வித் ­துள்­ளது. ஆக அடுத்த ஆறு வரு­டங்­க­ளுக்கு புதிய அர­சாங்­கத்­தினால் கிடைக்­க­வி­ருக்கும் வரப்­பி­ர­சாதம் இந்த அம்சம் மட்டும்தான் போலுள்­ளது.

இந்த மக்­களின் சமூக அடிப்­படை பிரச்­சினை என்­பது காணியும் வீடும் மட்­டும்­தானா என கேள்வி எழுப்­பத்­தோன்­று­கி­றது. தேசிய கட்­சிகள் சார்­பாக இன்று மலை­ய­கப்­ப­கு­தி­களில் போட்­டி­யி­டு­கின்ற பிர­தி­நி­திகள் குறித்த கட்­சி­களின் தேர்தல் விஞ்­ஞா­ப ­னங்­களை படித்­துப்­பார்த்­தார்­களோ தெரி­ய­வில்லை. ஏனெனில் விஞ்­ஞா­பனம் தயா­ரிக்­கப்­படும் போது தமது கட்­சிக்­காக இந்த மக்­களின் வாக்­கு­க­ளைப் ­பெற்­றுத்­த­ரு­கி­றார்­களே என இவர்­க­ளிடம் யோச ­னைகள் கேட்­கப்­பட்­டதா என்­பதே சந்­தேகம்தான்.

அந்த வகையில் பிர­தான இரண்டு கட்­சிகளும் வெளியிட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் இந்த மலை­யக வேட்­பா­ளர்கள் மக்­களிடம் கூறப் ­போ­வது என்ன? சுதந்­திரம் கிடைத்த வருடம் அன்றே ஒப்­பந்­தங்கள் மூலம் மலை­யக மக்­களின் பிரஜா உரி ­மைகள் பறிக்­கப்­பட்டு நாடற்­றவர் என்ற நிலைமை 2003 ஆம் ஆண்டு வரை நீடித்­தது. எனினும் பாரா ­ளு­மன்றில் கொண்டு வரப்­பட்ட சட்­டங்­களின் மூலமே தற்­போது இந்த மக்கள் இலங்கை பிர ­ஜைகள் என்ற அந்­தஸ்த்­தோடு வாழ்ந்து வரு­கின்­ற ­னரே ஒழிய அர­சி­ய­ல­மைப்­புக்குள் இந்த சமூ­கத்தின் உரி­மை­களை உள்­ள­டக்க கடந்த காலத்தில் எவ ­ருமே நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.கூறப்­போனால் இந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­பட் ­டுள்ள பிரஜா உரி ­மையில் சட்­டச்­சிக்­கல்கள் இல்­லா­ம­லில்லை.

மேலும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குள் பெருந் ­தோட்­டப்­ப­கு­தி­களை உள்வாங்­கு­வ­தற்­கான நடவ ­­டிக்­கை­க­ளுக்­குக்­கூட பேரி­ன­வாத கட்­சி­களும் அர சாங்­கங்­களும் தடை­யாக இருக்­கின்­றன.இந்த சூழ்நி ­லையில் இந்த சமூ­கத்தின் எதிர்­கால வேலைத் ­திட்­டங்கள் குறித்த எந்த ஒரு சமூக பிரக்­ஞையும் இல்­லா­தி­ருக்கும் கட்­சி­க­ளுடன் கூட்டு வைத்து தேர்தல்­களில் போட்­டி­யி­டு­கின்­ற­வர்கள் தமது அரசியல் இருப்பையும் சுயநலத்தையும் மட்டுமே கருத்திற்கொண்டு செயற்படுகின்றவர்களாக இருக் கின்றனர்.

இன்று தேர்தல் மேடைகளில் முழங்கி வருகின்ற மலையக வேடப்பாளர்கள் தாம் இணைந்திருக்கும் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் மலையக மக்களுக்கான தீர்வு என்ன என்பது குறித்து பே சுவதற்கு தயாரா?

சிவலிங்கம் சிவகுமாரனின் முகநூலிலிருந்து நன்றியுடன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates