Headlines News :
முகப்பு » , » மலையகத்தின் உதவி ஆசிரியர் நியமன சர்ச்சை பற்றி...

மலையகத்தின் உதவி ஆசிரியர் நியமன சர்ச்சை பற்றி...


மலையகத்தில் நீண்ட நாட்களாக பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்ற ஒரு விடயமாக உதவி ஆசிரியர் நியமனம் காணப்படுகின்றது.

இந் நியமனம் தொடர்பாக பல்வேறு கருத்துகளும், எதிர்ப்புகளும் வெளிக்கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக ஏற்கனவே நாங்கள் பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டியிருந்தோம். இந்நியமனம் நேர்மையற்ற முறையிலும் பக்கச்சார்பாகவும் கட்சி ரீதியாகவும் வழங்கப்படவுள்ளதாக பல தரப்புகளில் இருந்து கருத்துகள் பரிமாற்றப்பட்டிருந்தன. இதற்கு வலு சேர்க்கும் முகமாக தற்போது மீண்டுமொரு பிரச்சினை வெளிக்கிளம்பியுள்ளது. இவ்வுதவி ஆசிரியர் நியமனம் கடந்த மாதம் வழங்கப்பட இருந்த போதிலும் அது பல காரணங்களினால் பிற்போடப்பட்டு நாளைய மறு தினம் 08.05.2015 அன்று அலரிமாளிகையில் தெரிவு செய்யப்பட்ட 3028 உதவியாசிரியர்களுக்கான நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயினும் தற்போது இந்நியமனம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதால் நியமனத்தை வழங்குவதா? இல்லையா ? என்பது தொடர்பாக இழுபறி நிலை தோன்றியுள்ளது. அத்தோடு இந்நியயமனம் பக்கச்சார்பாகவும், அரசியல் நியமனம் என்ற ரீதியிலும் புத்தி ஜீவிகளால் நோக்கப்படுகின்றது.

இந்நியமனம் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் வருமாறு
01.இந்நியமனத்திற்கான போட்டிப்பரீட்சை நடாத்தப்ட்ட போது பரீட்சை கண்காணிப்பாளர்களாக பல பரீட்சை நிலையங்களில் இ.தொ.க உறுப்பினர்கள் கடமைகளில் அமர்த்தப்பட்டிருந்தமை

02. பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு இதுவரையில் பரீட்சை பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்படாமை

3. பரீட்சை பெறுபேறுகள் வெளிப்படுத்தப்படாமல் நேர்முக பரீட்சைக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டமை

04. ஒரு நபருக்கு பல இடங்களில் நடக்கும் நேர்முக பரீட்சைக்கு தோற்றுமாறு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டமை

05. நேர்முகப்பரீட்சையின் போது உளச்சார்பு மற்றும் திறமைகளை கண்டு கொள்வதற்கான பரீட்சையாக அமையாது வெறுமனே ஆவணங்கள் சரிபார்க்கும் பரீட்சையாக அமைந்தமை

06. நேர்முகப்பரீ;ட்சைக்கு தோற்றாதவர்களுக்கும் நியமன கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை

07. அத்தோடு க.பொ.த உயர்தரத்தில் அவர்கள் கற்ற பாடத்திற்கும் தற்போது நியமனித்தின் போது வழங்கப்படுவுள்ள கற்பித்தலுக்கான பாடத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாமை.

உ-ம் கா.பொ.த உயர்தரத்தில் வர்த்தக துறையில் கல்வி கற்றவர்களுக்கு தமிழ் மற்றும் வரலாறு பாடங்களிற்கான நியமன கடிதங்கள் அனுப்பி வைக்கப்ட்டுள்ளன.

08.இந்நியமனமானது பெருந்தோட்டப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமைவழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், இவை பெருப்பாலும் நகர்ப்புற மற்றும் மத்தியத்தர வர்க்கதினருக்கே வழங்கப்படவுள்ளது.

09.இந்நியமனத்தில் 600 முஸ்லிம் மாணவர்களுக்கு இந்நியமனத்தில் உள்வாங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெருந்தோட்ட மாணவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

10.அரசியல் நியமனமாக காணப்படுகின்றமை.

11.உதவியாசிரியர்களுக்கான கடமைகள் குறித்து தெளிவின்மை

இவ்வாறு இன்னும் பல்வேறு குறைபாடுகளை கொண்டும் காணப்படும் இந்நியமனம் உடனடியாக தடுத்த நிறுத்தப்பட வேண்டியதும், மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதும் ஆகும்.

அத்தோடு கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரின் ஊடாக நேர்முக பரீட்சைக்கு தோற்றாதவர்களுக்கும் நியமனக்கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்தும் உடனடியாக பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர் சமூகம், புத்தி ஜீவிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நன்றி - சுயாதீன ஊடகம் பசுமை தாயகம்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates