Headlines News :
முகப்பு » » இயற்கையின் சீற்றம் தொடர்கின்றது; 9,37,671 பேர் பாதிப்பு

இயற்கையின் சீற்றம் தொடர்கின்றது; 9,37,671 பேர் பாதிப்பு


நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 8 மாகாணங்களின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வாரத்துக்குள் மட்டும் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினால் இந்த 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேற்று மாலை வரை 9 இலட்சத்து 37 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் 4182 வீடுகள் முற்றாகவும் 13037 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வெள்ள அனர்த்தம் அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன் மண்சரிவால் 14 பேர் நேற்று மாலைவரை உயிரிழந்துள்ளனர்.

மண்சரிவால் பதுளை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்துக்கு அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.பதுளை மாவட்டத்தில் மண்சரிவு காரண மாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1179 குடும்பங்களை சேர்ந்த 4297 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பதுளை மாவட்டம் முழுவதும் நேற்று சீரற்ற கால நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெள்ளம் காரணமாக கிழக்கில் மட்டும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் பல இடங்களுக்கான போக்கு வரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் மூன்று மரணங்களும் புத்தளத்தில் ஒரு மரணமும் கண்டி மாவட்டத்தில் மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன. கண்டி மாவட்டத்தில் பதிவான மூன்று மரணங்களும் மண் சரிவினால் ஏற்பட்டவையாகும்.

இதனைவிட நேற்று வரை அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

நேற்று மாலைவரை பாதிக்கப்பட்டிருந்த 6,69,557 பேரில் 17,459 குடும்பங்களை சேர்ந்த 60,414 பேர் 315 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உலர் உணவுகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கிவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் தலை நகர் கொழும்பு, கம்பஹா, களுத்துறையும் வடக்கின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லை தீவு,மன்னார் மாவட்டங்களும், கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களும் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும், வடமேல் மாகாணத்தின் குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலையிலும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் மண்சரிவு அச்சுறுத்தலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

இந்த அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

கிழக்கு நிலைவரம்
கிழக்கை பொறுத்தவரை நேற்றும் அடை மழையுடன் கூடிய கால நிலை நீடித்தது. .இதனால் வெள்ளம் காரணமாக திருகோணமலையில் 11291 குடும்பங்களைச் சேர்ந்த 40632 பேரும் மட்டக்களப்பில் 124524 குடும்பங்களை சேர்ந்த 443112 பேரும் அம்பாறையில்20493 குடும்பங்களை சேர்ந்த 77062 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கை பொறுத்தவரை மொத்தமாக 560806 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 8643 குடும்பங்களை சேர்ந்த 30037 பேர் 109 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக கிழக்கில் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளம் காரணமாக கிழக்கில் 3442 வீடுகள் முற்றாகவும் 7184 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்டுள்ளன.

அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகமான பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்த நகரத்தின் வழமையான நடவடிக்கைகள் நேற்றும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் திஸ்ஸமஹராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்தும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்கெடுத்துள்ளது.

அனுராதபுரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதா கவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்திலும் வெள்ள அச்சுறுத்தல் தொடர்கின்றது. பொலன்னறுவையை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதாகவும் இதனால் பல குளங்களின் வான் கதவுகள் நேற்றும் திறக்கப்பட்டிருந்ததாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.பொலன்னறுவை மாவட்டத்தை பொறுத்தவரை 3579 குடும்பங்களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்பாலும் தடை பட்டுள்ள நிலையில் மகாபராக்கிரமபாகு, கவுடுல வாவி, மின்னேரிய குளம், ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வடக்கு நிலைவரம்
இதேவேளை நிலவும் சீரற்ற கால நிலையால் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் 4656 பேரும் வவுனியாவில் 12299 பேரும், கிளிநொச்சியில் 16294 பேரும், முல்லை தீவில் 9715 பேரும் மன்னாரில் 9385 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

இதனை விட வடக்கில் 80வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 3465 வீடுகள் பகுதியளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.

மலையகம்
மலையகப் பகுதியில் மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. மாத்தளையில் 1298 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியாவில் 845 பேரும் கண்டியில்3548 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றும் மலையகத்தில் பெய்த அடை மழை காரணமாக பிரதேசங்கள் பலவற்றினதும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
அத்துடன் கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் பதுளை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மட்டும் மண் சரிவு காரணமாக நேற்ரு மட்டும் 9 மரணங்கள் பதிவாகின. பதுளை மாவட்டம் முழுதும் மண் சரிவு அபாயம் மிக்க பிரதேசமாக அனர்த்த முகாமைத்துவ மஹ்திய நிலையத்தினால் அறிவிக்கப்ப்ட்டுள்ளது. இதனைவிட அங்கு பெய்து வரும் அடை மழை காரணமாக மண் சரிவு எச்சரிக்கை குரித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்ப்ட்டுள்ளது.

வடமேல் மாகாணம்
மழை வெள்ளம் காரணமாக வடமேல் மாகாணத்தின் புத்தளம், குருணாகல் ஆகிய மவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் புத்தளத்தில் 15540 பேரும் குருணாகலில் 1549 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. புத்தளத்தில் நேற்று பெய்த அடை மழை காரணமாக அனுராதபுரம் வீதியும் மன்னார் வீதியும் போக்கு வரத்துப் பாதிப்புக்களுக்கு உள்ளானது. அத்துடன் புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த பகுதியில் மட்டும் 6000 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருந்தனர். குறித்த கிராம மக்கள் படகு மூலமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம்
இதேவேளை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டித்திலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன. அத்துடன் அம் மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கின. இதனைவிட பலத்த காற்றும் வீசி வரும் நிலையில் கொழும்பை விட கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

மழை வெள்ளம் காரணமாக புத்தளம், அனுராதபுரம் ஊடான வடக்கை நோக்கிய போக்குவரத்து பாதையும் ஹபரண, பொலன்னறுவை ஊடான ிலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன. அத்துடன் அம் மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கின. இதனைவிட பலத்த காற்றும் வீசி வரும் நிலையில் கொழும்பை விட கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

மழை வெள்ளம் காரணமாக புத்தளம், அனுராதபுரம் ஊடான வடக்கை நோக்கிய போக்குவரத்து பாதையும் ஹபரண, பொலன்னறுவை ஊடான கிழக்கை நோக்கிய போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை விட மலையகத்தின் மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மஹியங்கனை வீதியிலும் போக்கு வரத்து குறைந்துள்ளன. அத்துடன் குருணாகல், பாதெனிய ஊடான வடக்கு நோக்கிய போக்கு வரத்தும் முற்றாக தடை பட்டுள்ளன.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates