Headlines News :
முகப்பு » » மலையக வீட்டுத்திட்டத்திற்கு அடிகல் நாட்டப்பட்ட இடம் வாழ்வு பூமியா மக்களின் எதிர்கால மையான இடமா?

மலையக வீட்டுத்திட்டத்திற்கு அடிகல் நாட்டப்பட்ட இடம் வாழ்வு பூமியா மக்களின் எதிர்கால மையான இடமா?


இலங்கையில்ன் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவழியை சேர்ந்த மக்களின் லயன் அறை வாழ்க்கைக்கு முடிவு கட்டவும் அம்மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக கடந்த காலங்களில் இந்திய அரசாங்கம் இலங்கையரசின் ஊடாக பல உதவிகளை செய்து வருவதனைக் காணலாம். அந்தவகையில் இந்திய அரசின் நிதியுதவியின் ஊடாக இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட மமைலயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 50000 வீடுகளுக்கான வீடமைப்புத் திட்டத்தினை அறிமுகம் செய்திருந்ததது. இந்த வகையில் மலையகத்தில் நுவரெலியா,ஹட்டன், மஸ்கெலியா. தலவாக்கலை, போன்ற பிரதான நகரங்களை அண்மித்தப்பகுதிகளில் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் இவ்வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக இடம்பெற்றிருந்தது.

சிலர் மத்தியில் இவ்வீடமைப்புத்திட்டமானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுமென்ற வதந்தியும்? மறுப்புரம் அவ்வாறு வழங்கப்பட மாட்டாது, இவ்வீடமைப்புத்திட்டத்தில் எவ்விதமான அரசியல் தலையீடும் இருக்காது என்ற விவாதங்களிலும் பல மலையத் தலைவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தமை மகிழ்ச்சியை மக்கள் மனங்களில் வாரியிறைத்திருந்தது? ஆனால் இவ்வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் புற்கள் வளர்ந்துள்ளதே தவிர வீடுகள் அமைக்கப்படுவதற்கான எவ்விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

தற்போது மலையகம் எங்கும் வீட்டு உரிமை காணியுரிமை பிரச்சினை தலைத்துக்கியுள்ளதுடன் இந்த வீடமைப்புத்திட்டத்திற்கான அடிகல்லை நாட்டிய கௌரவ அமைச்சர் ஆறுமுகதொண்டமான் எவ்விதமான கருத்தையும் வெளியிடவில்லை அடிகல் நாட்டப்பட்ட இடம் மலையக மக்களுக்கு வீடுகளை பெற்றுகொடுக்குமா அல்லது மக்களின் மையான பூமிக்கு ஒதுக்கப்படுமா இதற்கான விடை யாது?

வெருமனே மக்களை ஏய்ச்சி பிளைப்பு நடாத்தும் மலையகத்தலைவர்களினால் இதற்கான அழுத்தங்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வெளிப்படுத்தவில்லை, ஏற்கனவே லயன் வாழ்க்கைமுறையின் சுவடுகள் 180 ஆண்டுகள் கழிந்தும் மாறாத நிலையில் சபிக்கப்பட்ட வாழ்க்கை வாழும் இம்மக்களின் வாழ்க்கை மீட்சிக்காக தலைவனென்று கூறிக்கொள்ளும் எவரும் தம் மக்களுக்காக முன்வருவதில்லை. இவ்வாரான வீடமைப்பு திட்டத்திற்கான ஏற்பாடுகள் வடகிழக்குப்பகுதிகளில் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மலையகத்தில் மாத்திரம் இன்னும் வீடமைப்பிற்கான அத்திவாரம் கூட இடப்படாத நிலையி இருக்கின்றமை கவளையளிக்கின்றது.

அவ்வாரான அலட்சியப்போக்கினை பார்க்கும் போது கொஸ்லாந்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்து கொடுப்பதில் எவ்வாரான இழுபரி நிலை ஏற்படுமோ மலையக தலைவர்களுக்கே வெளிச்சம். அத்தோடு தமது உறவுகள் லயன் அறைக்குள் இருந்து படும் துன்பத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசும் இதில் தமது முழுமையான கவனத்தினை செலுத்த மலையக அரசியல் தலைமைகள் வலியுறுத்த வேண்டும்.
குறிப்பாக இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் வாடும் போது முதலைக்கண்ணீர் வடிக்கும் தமிழக கட்சிகளும், இந்திய அரசும் 180 வருடங்களாக மலைமுடுக்குகளில் சிறைவாசம் அனுபவிக்கும் தமது தொப்புல்கொடி உறவுகளுக்காக தமது ஆதரவினை தந்து மேற்படி வீடமைப்புத்திட்டத்தினை முன்னெடுக்க வழிசமைத்து தருவது போற்றத்தக்கது.

ஆகவே மலையகத்தில் தடைப்பட்டுக்கிடக்கும் இந்திய வீடமைப்புத்திட்டம் ஆரம்பிக்கலும், அதனூடாக மக்களின் வீட்டுரிமை பிரச்சினைகள் தீரவும் மலையகத்தலைவர்கள் தமது தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான வழித்தெரியாவிட்டால் வடகிழக்கு அரசியல் தலைவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வது நல்லது. ஏனென்றால் வடகிழக்கு தழிழர்கள் தலை நிமிர்ந்து வாழவும். எம் தலைவர்கள் வாள் பிடித்து வாழவும் இவர்களின் மனங்களே காரணம். எனவே மக்கள் வெருமனே அரசியல் தலைவர்களை மட்டும் நம்பியிராது தாமும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது அழுத்தங்களை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு வேற்றுமைகள் களைந்து ஒன்றுபட்டால் எம் மக்களின் வாழ்க்கை வலம் பெரும் 
நன்றி

அன்புடன் பசுமை தாயக மைந்தன்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates