Headlines News :
முகப்பு » » பெருந்தோட்ட முன்பள்ளி கல்வித்துறையில் ஒரு புதிய திருப்பம் - எஸ்.வடிவழகி

பெருந்தோட்ட முன்பள்ளி கல்வித்துறையில் ஒரு புதிய திருப்பம் - எஸ்.வடிவழகி


நாட்டில் கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களாக பெருந்தோட்டத்துறை மக்களே கணிப்பீடு செய்யப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். நாட்டில் மலையக மக்களின் தொகை ஆறு அல்லது ஏழு விகிதமாக இருந்தாலும் ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களில் அனுமதிபெறும் மாணவர் எண்ணிக்கை இன்னும் 05% விகிதத்தை விடவும் அதிகரிக்காமல் இருப்பது பெருந்தோட்ட மக்கள் கல்வியில் எவ்வளவு பின்தங்கியுள்ளார்கள் என்பதற்கு தெளிவான சாட்சியமாகும். கடந்த காலங்களில் மலையக கல்வித்துறையில் படிப்படியாக மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுவந்துள்ளன என்பது உண்மை. ஆனா லும் நாம் கல்வி அபிவிருத்தியில் மற்றைய துறையினரை எட்டிப்பிடிக்க இன்னும் பல ஆண்டுகள் செல்லும்.

பிள்ளையின் கல்வி முன்னேற்றத்திற்கு முன்பள்ளிக் கல்வி அத்தியாவசியமானதாகும். இன்றைய நவீன கல்விமுறையில் பிள்ளை பாடசாலையில் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்க வேண்டுமானால் பாடசாலைக்கு செல்லும் முன்னர் பிள்ளை, முன்பள்ளியில் நன்கு ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். நகர, கிராம பகுதிகளில் பெற்றார்கள் தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் முன்னர் முன்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இன்று இது ஒரு கட்டாய தேவையாகிவிட்டது. ஆனால், பெரும்பான்மை யான பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக் கல்வி என்பது இன்னும் கூட முற்றிலும் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை பல்லாயிரக்கணக்கான பெருந்தோட்ட பெற்றார் கள் அறிந்திருந்தாலும் பெருந்தோட்ட பகுதிகளில் முன்பள்ளிகள் இல்லாமையால் தமது பிள்ளைகளுக்கு இந்த வசதியை பெற்றுத்தர முடியாத நிலையில் உள்ளனர்.

பெருந்தோட்டக் கல்வி எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறாமைக்கு முன்பள்ளிக் கல்வி வசதியில்லாமை முக்கிய காரணமாகும். இந்த பின்னணியில் பிரிடோ நிறுவனம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் முன்பள்ளிசாலைகளை நடத்தி வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் இந்த நிறுவனத்தால் முன்பள்ளிகள் நடத்தப்படும் பகுதிகளில் பிள்ளைகளின் அடைவு மட்டமும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவோர் எண்ணிக்கையும் முன்பள்ளிகள் இல்லாத பகுதிகளோடு ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகவுள்ளது என்பதை நுவரெலியா மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். ஆயினும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முன்பள்ளிக் கல்வியை பெருந்தோட்ட பிள்ளைகள் பெறுவதற்கு மலையக அரசியல்வாதிகள் எவரும் இதுவரை உதவியதும் இல்லை. அதைப்பற்றி பேசியதும் இல்லை. அதற்காக வளங்கள் ஒதுக்கியதும் இல்லை.

முன்பள்ளிகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில்வாய்ப்பைத் தருகிறது
முன்பள்ளிக்கல்வி மலையக கல்வி முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது என்பதைவிட, இலங்கையிலுள்ள எல்லா பெருந்தோட்டங்களிலும் சகல பிள்ளைகளுக்கும் முன்பள்ளிக் கல்வி கிடைக்க செய்வதானால் ஆயிரக்கணக்கான முன்பள்ளிகளை அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறு முன்பள்ளிகள் அமைக்கப்படும்போது ஆயிரக்கணக்கான பெருந்தோட்ட இளம் பெண்களுக்கு சமூக அங்கீகாரம் பெற்ற தொழில்வாய்ப்பு கிடைக்கும். பெருந்தோட்ட முன்பள்ளிக் கல்வி ஆயிரக்கணக்கான யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை தரும் ஒரு கெளரவான தொழிற்றுறை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆயினும் முன்பள்ளிகளை எவரும் தாம் நினைத்தபடி நடத்திவிட முடியாது. முன்பள்ளி ஆசிரியர்கள் தரமான பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். முன்பள்ளி ஆசிரியைகளுக்கு தரமான பயிற்சி வழங்குவதற்கு பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலம்வரை வாய்ப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் பெருந்தோட்ட பகுதியில் திறந்த பல்கலைக்கழங்களில் முன்பள்ளி ஆசிரி யைகளுக்கான கற்கைநெறி ஆரம்பிக்க வேண்டும் என்ற பரிந்துரை ஐந்து ஆண்டு களுக்கு முன்னரே முன்வைக்கப்பட்டது. ஆனால் மலையக அரசியல்வாதிகள் எவ ரும் அந்த முயற்சிக்கு உதவியளிக்கவுமி ல்லை. ஊக்கப்படுத்தவுமில்லை. தனியொரு நிறுவனமாகப் போராடியே ஹட்டன், கண்டி போன்ற பெருந்தோட்ட பகுதிகளில் திறந்த பல்கலைக்கழங்களில் தமிழ்மொழி யில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயி ற்சி நெறியை ஆரம்பிப்பதில் பிரிடோ நிறுவனம் வெற்றிகண்டது.

இந்த பின்னணியில் வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய பிரதியமைச்சர் பி.திகாம்பரம் பெருந் தோட்டங்களில் முன்பள்ளிக்கல்வி பரவ லான முறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அரசு, முன்பள்ளி ஆசிரியைகளுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ள 2500ரூபா கொடுப்பனவு பெருந்தோட்டப் பகுதி ஆசிரியை களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். தற்போது மாகாண சபை, பிரதேச சபை, நகர சபைகள் மூலம் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்திருந்தாலும் பெருந் தோட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இந் தக் கொடுப்பனவு ஒருபோதும் கிடைத்ததி ல்லை. அதுபற்றி எந்த வொரு மலையக அரசியல்வாதியும் பேசியதுமில்லை. இந்தப் பின்னணியில் பிரதியமைச்சரின் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற உரை பெருந்தோட்ட முன்பள்ளிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் அங்கீகாரமும், அவர்க ளும் பாடசாலை ஆசிரியைகளுக்கு சமமான முறையில் மதிக்கப்படவும், கொடுப்பனவு களை பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள் ளது.

நன்றி - வீரகேசரி - 23.11.2014

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates