Headlines News :
முகப்பு » » மலையகத்தில் தமிழரின் பெயரில் பௌத்த விகாரை

மலையகத்தில் தமிழரின் பெயரில் பௌத்த விகாரை


இன்று நாட்டில் மதம் தொடர்பிலான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றன. பிறமதங்களை தூற்றுவதனாலோ அல்லது அவமரியாதைக்கு உட்படுத்துவதாலோ யாருக்கும் எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அவரவர் மதத்தின்மீது அவரவர்களுக்கு மதப்பற்று அதிகரிக்கவே செய்யும். அதுமட்டுமின்றி எல்லா மதங்களும் அன்பையும், ஒழுக்கத்தையும், சிறந்த பண்புகளையுமே போதிக்கின்றன. இவ்வாறான நிலையில் “எம்மதமும் சம்மதம்” என்று இருக்கும் இந்து ஆலயங்கள், இந்து தெய்வச் சிலைகள் என்பனவும் அண்மைக்காலங்களில் உடைக்கப்பட்டும் பொருட்கள் திருடப்பட்டும் வந்துள்ளதை பத்திரிகைகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

எமது முன்னோர்கள் மத சார்பான விட யங்களில் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வந்து ள்ளனர். ஏனைய மத ங்களுக்கு மதிப்பளித்தும் வந்துள்ளனர். இன்றும் மதிப்பளித்து வருகின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக கண்டி மாவட்டத்தின் கம்பளை, தொழுவ பிரதேச செயலகத்தி ற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள விகாரையைக் குறிப்பிடலாம்.

மலையக தோட்டத் துறை வரலாற்றில் தோட்டங்கள் ஒருகாலத்தில் தனியாருக்குச் சொந்தமானதாகக் காணப்பட்டன. அவ் வாறு இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்பிரமணியம் முதலாளி புப்புரஸ்ஸ தோட்டத்தை நிர்வகித்து வந்தார். அந்தக் காலப்பகுதியில் தமது தோட்டத்தில் ஒரு விகாரை அமைக்கப்படவேண்டும் என்ற சிந்தனை அவரது மனதில் உருவானது. அதற்கமைய தனது சொந்தக்காணியில் பௌத்த விகாரைக்கு என ஒரு பகுதியை வழங்கி 1958ஆம் ஆண்டு வேலைத்திட்டத்தை ஆர ம்பித்து வைத்தார். அதன் பயனாக அவரது தோட்டத்தில் பௌத்த விகாரை அமைந்ததோடு அந்தப் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்பட்டதுடன் ஒரு சிறிய நகரமும் உருவானது.

தற்போது இந்த பிரதேசத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்ந்து வருகின் றனர். இந்த பௌத்த விகாரை உருவாவதற்குக் காரணமாக இருந்தவரின் பெயரே விகாரைக்கும் சூட்டப்பட்டது. இவரது பெயர் எம்.எம்.சுப்பிரமணியம் என்பதனால் “சுப்ரமணியராமய” என பெயர் பெற்று தற்போதும் அந்த பெயரிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக அந்தப் பிரதேசத்தில் பௌத்த மத சார்பான விடயங்களையும் தஹம்பாசல் என அழைக்கப்படும் அறநெறி பாடசாலையும் பௌத்த மக்களுக்கும் இந்து மக்களுக்கும் தேவையான விடயங்களை செய்து வருகின்றது. இதற்குக் காரணமாக இருந்தவர் அமரத்துவம் அடைந்த ஸ்ரீ விமலானந்த தேரர் ஆவார். இவர் இந்த விகாரையை பல வருடங்களாக நிர்வகித்து வந்ததுடன் பிரதேச மக்களுக்கு ஆன்மிக ரீதியில் பல சேவைகளை செய்து வந்துள்ளார். இடைக்காலப்பகுதியில் இந்த பெயரை மாற்றுவதற்கு பலர் முயற்சித்தபோதும் தேரர் அதனை செய்யவிடவில்லை.

இவ்வாறு நம் முன்னோர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வந்துள்ளமை சமூகத்திலுள்ள ஏனையோருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். எனவே இதுபோன்ற செயற்பாடுகளைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோமானால் நாட் டில் சாந்தி, சமாதானம், சமத்துவம் நில வும் என்பதில் ஐயமில்லை. அதேவேளை தேரர் எந்த அளவுக்கு நன்றி உடையவராக இருந்துள்ளார் என்பதையும் நாம் கவனத் தில் கொள்ளவேண்டும். இது அனைவரை யும் சிந்திக்கவும், பெருமைப்படவும் வைக் கின்றது. தற்போது இந்த விகாரை புனர்நிர் மாணம் செய்யப்பட்டு வருகின்றது.
(இரட்டைப்பாதை நிருபர்)

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates