Headlines News :
முகப்பு » » பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தவரவிட்டுவிட்டுள்ள மலையகத் தமிழ்க் கட்சிகள் - செழியன்

பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தவரவிட்டுவிட்டுள்ள மலையகத் தமிழ்க் கட்சிகள் - செழியன்


ஊவா மாகாண சபைத் தேர்த லில் மலையகத்தின் பிர தான தமிழ் கட்சிகள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றன. குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் பெருந்தோட் டத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதத்தின் மகனான வே.ருத்திரதீபன், முன்னாள் பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம்.பி.லோகநாதன், பொன்னுசாமி பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இது தவிர, ஊவா தமிழ்த் தேசிய முன்னணியும் போட்டியிடுகின்றது.
ஊவா மாகாணசபைத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் எதிர் க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவ தன் மூலம் தமது பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் பாரிய முன்னடுப்பை மேற்கொண்டுள்ளது. அதற்காகத் தமது முழுமையான சக்தியை பயன்படுத்துகிறது. இந்த வெற்றியை பாரியளவினதாக காட்டுவதற்காக மலையகத் தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் தமது கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொண்டுள்ளது.

எனவே, இந்த மாகாண சபைத் தேர்தல் ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு சவால் நிறைந் தது மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஆட்சி யைத் தக்கவைத்துக் கொள்வது தொடர்பான மக்கள் அபிபிராயத்தை ஏற்படுத்துவ தாகவும் அமைந்துள்ளது.
மட்டுமின்றி, அடுத்ததாக பொதுத்தேர்தலை நடத்துவதா அல்லது ஜனாதிப தித் தேர்தலை நடத்துவதா என்பதை தீர் மானிக்கும் தேர்தலாகவும் அமையப் போகின்றது. அந்த வகையில் அரசாங்கக் கட்சிக்கு இது மிக முக்கியமான தேர்தலா கும்.

அதேவேளை, பல்வேறு தேர்தல்களி லும் தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து வந்துள்ள ஐ.தே.க.வுக்கும் இது சவாலான தேர்தலாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள், தலைமைத்துவப் பிரச்சினை, உட்கட்சிப் போராட்டங்கள் எனப் பல சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு தமது இருப்பை உறதிப்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஐ.தே.க.வுக்கு உள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலை ஆரம்பமாகக் கொண்டு நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக ஐ.தே.க. கூறி வருகிறது. தமது கட்சிக்கு மக்களி டம் இருக்கும் செல்வாக்கை அறிந்து கொள்வதற்கும் எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதையும் அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி ஊவா மாகாணசபைத் தேர்தலில் முழு சக்தியையும் பயன்படுத்தி வெற்றிபெறத் துடிக்கின்றது.

எனவே, ஐ.ம.சு. கூட்டமைப்பும் ஐ.தே.கவும் தமது குறிக்கோள்களை ஊவா தேர்தலினூடாக நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்பில் உள்ளன என்பது பகிரங்க செய்தியாகும்.

ஆனால், ஊவா தேர்தலில் போட்டியி டும் தமிழ்க் கட்சிகளின் குறிக்கோள்கள் என்ன? எவ்வாறான கோரிக்கைகளை; எவ் வாறான மக்கள் நலன் திட்டங்களை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன? அல்லது பிரதான கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன? எந்தவொரு கட்சியுமே இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியிடவில்லை.

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமி ழ்க் கட்சிகள் முக்கிய திட்டங்கள் எதனையாவது அறிவித்திருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஊவா மாகாணத்தில் தற்போது சுமார் 9,60,000 சிங்கள  தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் பதுளை மாவட்டத்தில் சுமார் 1,20,000 தமிழ் வாக்காளர்களும் மொனராகலை மாவட்டத்தில் சுமார் 15,000 தமிழ் வாக்காளர்களுமாக சுமார் 1,35,000 பேர் உள்ளனர். இந்தத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது.

இந்த நிலையில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆளும் ஐ.ம.சு. கூட்டமைப்பிடம் ஊவா தமிழர்க ளின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து மலையகத் தமிழ்க் கட்சிகள் கூட்டணியில் இணைந்திருக்கலாம்.

*ஊவா மாகாணத்திற்கான தமிழ்க் கல்வி அமைச்சு, இந்து கலாசார அமைச்சு என்பவற்றை மீள ஏற்படுத்தித் தர வேண்டு மென்ற கோரிக்கையை முன்வைத்திருக்கலாம்.

*இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன் றைத் தமிழருக்கு அல்லது கூட்டணியிலுள்ள தமிழ்க் கட்சிகளில் ஒன்றுக்கு வழங்குமாறு கோரியிருக்கலாம்.

*வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துத் தருமாறு கேட்டிருக்கலாம்.

ஆனால், இவை எதையுமே மலையகத் தமிழ்க் கட்சிகள் கேட்டதாககத் தெரியவில்லை. வெறுமனே சில வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இணைந்து கொண்டதாகவே தெரிகிறது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கும் சரி, எதிர்க்கட்சிக்கும் சரி சிறுபான்மைத் தோட்டத் தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்கும் மிகவும் அத்தியாவசியமான தேவையாகும். தமிழ் மக்களின் வாக்குளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் கேட்பதைக் கொடுக்க வேண்டிய நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பன உள்ளன. இதனை அறிந்தும் அறியாதது போன்று எந்தவித கோரிக்கைகளையோ அல்லது நிபந்தனைகளையோ முன்வைக்காமல் தமிழ்க் கட்சிகள் கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளமை அக்கட்சிகளின் மெத்தனப்போக்கையே காட்டுகின்றது.

நாட்டில் பல தேர்தல்கள் வரலாம். ஆனால் அந்தத் தேர்தல்களை பயன்படுத் திக் கொள்ளும் பக்குவம் வேண்டும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தத் தேர்தலில் பேரம் பேசும் சக்தி மலையகத் தமிழ்க் கட்சிகளுக்கு இருந்தும் அவை பயன்படுத்தப்படவில்லை. இந்த விடயத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கடைப்பிடித்த சாணக்கியம் மகத்தானது. அவரைப் போன்று சந்தர்ப்பங்களைப் பயன்படு த்தி உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க யாராளும் முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

ஐ.ம.சு. கூட்டமைப்புடன் இணைந்திருக்கும் இ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு இன்னும் கூட சந்தர்ப்பங்கள் உள்ளன. கட்சி பேத ங்களுக்கு அப்பால் சமூக நோக்கோடு பிரச்சினைகளை அணுகுவது மக்களின் நம்பிக்கைக்கு வழங்கும் மரியாதையாகும்.

இதேவேளை, ஊவா மாகாண சபையை ஐ.தே.க. கைப்பற்றினால் மீண்டும் தமி ழ்க் கல்வி அமைச்சு, இந்து கலாசார அமைச்சு என்பன ஏற்படுத்தப்படும் என்று பாராளுமன்றக் கூட்டம் ஒன்றில் உறுப்பினர் கே.வேலாயுதம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஐ.தே.க. வெற்றி பெறுமானால் அவரது வாக்குறுதி நிறை வேற்றபடுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

எவ்வாறெனினும், மலையகக் கட்சிகள் தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர் பில் பேரம் பேசும் சந்தர்ப்பங்களை தவற விட்டுள்ளன என்பதே யதார்த்தமே.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates