Headlines News :
முகப்பு » » பெருந்தோட்டத்துறையின் பெரும் சவால்கள்: ரொஷான் ராஜதுரை

பெருந்தோட்டத்துறையின் பெரும் சவால்கள்: ரொஷான் ராஜதுரை


தேயிலை என்பது சர்வதேச நுகர்வு பொருளாக அமைந்துள்ளது. இலங்கையின் மாபெரும் விவசாயத்துறையாக தேயிலை பெருந்தோட்டத்துறை அமைந்துள்ளதுடன், நாட்டின் மொத்த சனத்தொகையின் 10 வீதமான 2 மில்லியன் பேருக்கு தொழில் வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் துறையாக அமைந்துள்ளது. இந்த துறை மலையகத்தின் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யவும், குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலும் உயர்ந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. 

2012 இல் இலங்கை தேயிலை ஏற்றுமதியின் மூலம் 160 பில்லியன ரூபா ஏற்றுமதி வருமானமாக பெறப்பட்டிருந்தது. 2013 இல் இந்த பெறுமதி 197 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. ஆயினும், தொடர்ச்சியாக வெளியாகி வரும் எதிர்மறையான அறிக்கைகள் துறையை சவால் நிலையில் தள்ளியள்ளது. 'சர்வதேச போட்டி, மோசமான காலநிலை மற்றும் செலவீனம் ஆகியவற்றின் காரணமாக இந்த துறை பெருமளவு சவால் நிலையை எதிர்நோக்கியுள்ளது. விவசாய பொருளாதாரத்தில் எந்தவொரு துறையும் வெளிக் காரணிகளில் தங்கியுள்ளது. எனவே இது எப்போதும் சவாலானது, ஆனாலும் நெருக்கடியான நிலை அல்ல' என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் பெறப்பட்ட உயர்ந்த சாதனை மிக்க பெறுமதிகளின் வசைபாடிக் கொண்டிருப்பது என்பது, எதிர்காலத்தின் சவால்களுக்கு திர்வை பெற்றுக் கொடுக்காது, மீள் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது, உற்பத்தி செலவீனம் அதிகரித்துச் செல்வது, ஊழியர் பற்றாக்குறை, காலநிலை மாற்றங்கள், சிறுதோட்ட செயகையாளர்களின் பங்களிப்பு மற்றும் வெளிகள செய்கை முறை, பன்முக தன்மை, துறைசார்ந்தவர்களின் ஒன்றிணைந்த ஈடுபாடு, பயிற்சி மற்றும் ஆய்வுகள் போன்றன பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது மட்டும் போதுமானதாக அமையாது, ஆனாலும் இந்த செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு, பங்களிப்பு அதிகரிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என ரொஷான் ராஜதுரை மேலும் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,  

மீள் பயிர்ச்செய்கை மற்றும் நிரப்பு பொருள் 
'குறைந்தளவான விளைச்சலை பெறுவதற்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக அமைந்திருப்பது தேயிலைச் செடிகளின் முதிர்ச்சியடைந்த நிலையாகும். இவற்றில் சில சுமார் நூற்றாண்டு காலம் பழமையானதாகும். 'மீள் பயிர்ச்செய்கை என்பது தொழிலாளர் ரீதியிலும், நிதி ரீதியிலும் மிகவும் செலவீனம் நிறைந்த விடயமாக அமைந்துள்ளது. – ஒரு ஹெக்டெயார் பகுதியை மீள் பயிரிடுவதற்கு 3.9 மில்லியன் ரூபா வரையில் தேவைப்படுகிறது. மேலும் ஆரம்ப முதலீட்டை மீள பெற்றுக் கொள்ள சுமார் 20 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது'  

போதியளவு தொழிலாளர்கள் இன்மை மற்றும் நிதி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக, 2013 வரவுசெலவுத் திட்டத்தில் தேயிலை மீள் பயிர்ச்செய்கைக்காக ஹெக்டெயார் ஒன்றுக்கு 350,000 ரூபா வரை மானியமாக வழங்கவும், புதிய செய்கைகளை மேற்கொள்வதற்காக ஹெக்டெயார் ஒன்றுக்கு 250,000 ரூபா வீதம் வழங்க அரசாங்கம் பரிந்துரை செய்திருந்தது. 'மீள் பயிர்ச் செய்கை என்பது தேசிய மட்டத்தில் காணப்படும் பிரச்சனையாகும். அரசாங்கம் இந்த பிரச்சனை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, நீண்ட கால அடிப்படையில் நிதி உதவிகளை வழங்குவதற்கு தனது உறுதிமொழியை வழங்கியுள்ளது'. 

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் சிறுதோட்ட செய்கையாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் மீள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். பெருந்தோட்ட கம்பனிகள் பெரும்பாலும் மூன்றில் ஒரு பங்கான பகுதியை மீள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறை அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் 457 ஹெக்டெயர் நிலப்பரப்பில் தேயிலை மீள பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், புதிய செய்கை 261 ஹெக்டெயர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொழிலாளர்கள்
தேயிலைச் செய்கை என்பது பெருமளவு தொழிலாளர்களில் தங்கியுள்ள ஒரு தொழிற்துறையாகும். உறுதியான தொழிற்சங்களின் அழுத்தங்கள் காரணமாக உயர்ந்தளவு கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு கம்பனிகள் தள்ளப்படுகின்றன. மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக, எதிர்கால சந்ததியினரை இந்த தொழிற்துறையில் தக்க வைத்துக் கொள்வது என்பது பெரிதும் சவாலான விடயமாக அமைந்துள்ளது. 

'பெருந்தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை என்பது ஒரு பாரிய சிக்கலாக மாறி வருகிறது. எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் என்பது சிறுதொழில்களில் ஈடுபடுவதில் ஊக்கம் செலுத்துவதாக இல்லை. இலவச கல்வி முறை, மேம்படுத்தப்பட்ட வீதி மற்றும் தொலைத்தொடர்பாடல் வசதிகள் போன்றன இளைஞர்கள் மத்தியில் விவசாயத்துறைக்கு அப்பாற்பட்ட தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளன'. 

தேயிலைச் செய்கையை பொறுத்தமட்டில் 65 வீதத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி செலவு என்பது தொழிலாளர்களுக்கான கொடுப்பனவில் தங்கியுள்ளது. 

மேலும், பெருந்தோட்ட கம்பனிகள் இதர சமூக மற்றும் நலன்புரி அனுகூலங்களையும் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. ஏனைய நாடுகளில் இந்த பொறுப்பு அரசாங்கத்தினதும், இதர தொழிற்துறைகளினதும் பொறுப்பாக அமைந்துள்ளது. 

எமது தொழிலாளர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். அவர்களின் பிரத்தியேக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சாதனங்களை நாம் வழங்கியுள்ளோம். அவற்றை உபயோகப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வையும் நாம் ஏற்படுத்தி வருகிறோம். ஆளுமைகள், தொழில்முயற்சி கட்டமைப்புகள் ஆகியவற்றை அவர்கள் மத்தியில் ஊக்குவித்து வருகிறோம்'. 

'எமக்கு காணப்படும் மிகப்பெரிய சாதகமான நிலை என்பது, தனியார் மயமாக்கப்பட்டதன் பின்னர், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில் வழங்குநர் எனும் வகையில், நாம் ஏனையவர்களையும் பாதுகாக்க வேண்டும். இது சவாலான விடயமாக அமைந்துள்ளது' என்றார்.

இயந்திரமயமாக்கம்
சகல விதமான விவசாய செயற்பாடுகளிலும், தேயிலை பயிர்ச்செய்கை என்பது செலவீனம் நிறைந்ததாக அமைந்துள்ளது. தாவரத்தின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. 'பெருந்தோட்டத்துறை ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. இது உற்பத்தி திறனில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உற்பத்தி செய்யப்படும் தயாரிப்பின் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதற்காக தேயிலை உற்பத்தி செயற்பாடுகளையும், விளைச்சலை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டையும் இயந்திரமயமாக்கலுக்கு உட்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது'. 

வெளிக்கள செய்கை முறை
உற்பத்தித்திறன் என்பது இந்த துறையில் தற்போது பல ஆண்டுகளாக அடிபடும் ஒரு பொதுவான சிக்கலான விடயமாக அமைந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வாக வெளிக்கள செய்கை முறை பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பினருக்கும் ஏற்புடைய மாற்று முறையாகவும் இது அமைந்துள்ளது. இந்த முறைக்கமைவாக, தொழிலாளர்களுக்கு குறிக்கப்பட்ட காணித் துண்டொன்றில் விளைச்சலின் உரிமையை வழங்குவதுடன், அவற்றை பராமரிப்பதற்கு அவசியமான உரம் மற்றும் இதர தொழில்நுட்ப ஆலோசனைகள் போன்றன கம்பனியின் மூலம் வழங்கப்படும். பறிக்கப்படும் தேயிலையின் தரத்தை உறுதி செய்யும் வகையில், கம்பனிகள் தமது வழமையான மேற்பார்வை நடவடிக்கைகளை இந்த பகுதிகளில் முன்னெடுக்கும். குறித்த தேயிலை மரங்களை பாதுகாக்கும் பொறுப்பை தொழிலாளர்கள் கொண்டிருப்பதுடன், இதற்காக வெளிப்படையான, நியமமான முறையில் கொடுப்பனவுகள் அவர்களுக்கு வழங்கப்படும். 

'வெளிகள வளர்ப்பு முறை என்பது, நிலம் என்பது கம்பனிக்கு உரித்தானதாக இருக்கும், ஆனாலும் தாவரம் மற்றும் விளைச்சல் என்பது தொழிலாளர்களின் பொறுப்பில் இருக்கும். இந்த முறை மிகவும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. தற்போது காணப்படும் சம்பள கொடுப்பனவு முறையை தாங்கிக் கொள்ள முடியாத தன்மையின் காரணமாக, இந்த வெளிகள வளர்ப்பு முறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் இந்த முறையின் மூலம் இரு தரப்பினருக்கும் சிறந்த அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.

துறைசார்ந்தவர்களின் பங்களிப்பு
துறைசார்ந்தவர்கள் அனைவரினதும் பங்குபற்றல் என்பது தேயிலைத் துறையின் செயற்பாட்டை நீண்ட காலத்துக் முன்னெடுத்தச் செல்வதற்கு இன்றியமையாததாக அமைந்துள்ளது. 'இலங்கையின் பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், இந்த துறையின் நிலையாண்மையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும். 1.2 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் என்பது இந்த துறையில் தங்கியுள்ளது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படாவிடின், அதன் விளைவு அவர்களையும் பாதிக்கும். 'இந்த துறை பாரிய பின்னடைவை எதிர்கொள்ளுமாயின், தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் அதிகளவு பாதிக்கப்படுவார்கள்' என ராஜதுரை எதிர்வுகூறினார்.

அரசாங்கம், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள், தொழிற் சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். 'தொழிற்சங்கங்கள், அரசாங்கம் மற்றும் சிறிய தோட்ட செய்கையாளர்கள் ஆகியோர், இந்த தொழிற்துறையில் எத்தனை பேர் தங்கியுள்ளனர் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். எனவே இந்த துறையில் ஏதேனும் பாரிய தாக்கங்கள் ஏற்படின் அது குறித்த சமூகத்தினர் மத்தியில் எந்தவிதமான சுற்றாடல் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்' என ராஜதுரை குறிப்பிட்டார். 

பன்முகத்தன்மை
பயிர்ச்செய்கை பன்முகத்தன்மை என்பது பயிரிடப்படும் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளும் வகையிலும், அந்த நிலத்தின் வளத்தை நிலையான வகையில் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ள ஒரு வழிமுறையாக அமைந்துள்ளது. ஒயில் பாம் மற்றும் கருவா போன்ற ஏனைய மாற்று பயிhச்செய்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் கம்பனிகளின் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலையான வளர்ச்சிக்கு பாம் ஒயில் செய்கை என்பது சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. 

பெருமளவான கம்பனிகள் தேயிலை சுற்றுலா மற்றும் வலு போன்ற துறைகளுக்கு தமது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளன. 

நீண்ட கால கொள்கை அடிப்படையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலத்தின் வளம் குன்றாத வகையில் மாற்றுச் செய்கைகளையும் மேற்கொண்டு, தொடர்ந்து இந்த துறையின் நிலையாண்மையை கடைப்பிடிக்க வேண்டிய தேவை என்பது இந்த துறையை சேர்ந்தவர்களின் பொறுப்பாக அமைந்துள்ளது.  

ஆய்வுகளும் பயிற்சிகளும்
பயிற்சிகளும், ஆய்வுகளும் என்பது அபிவிருத்திக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதிகளவான தொழிலாளர்கள் உள்ளமையை கருத்தில் கொள்ளும் போது, நாம் பயிற்சிகளை மத்தியளவில் முன்னெடுக்கிறோம்' என ராஜதுரை குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கான பயிற்சிகள், அவர்களின் தொழில்நுட்ப ஆளுமைகளை விருத்தி செய்வது போன்றன தற்போதைய மாற்றமடைந்து வரும் சூழலில் கட்டாயம் பின்பற்றப்படவேண்டிய விடயங்களாக அமைந்துள்ளது' என ராஜதுரை குறிப்பிட்டார்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates