'இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள 'நோ இந்தியா' என்ற திட்டத்தின் மூலம் நூறு சதவீத நிதியுதவிகளை பெருந்தோட்டப் பகுதி மாணவர்கள் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் அதற்கு தகுதியானவர்கள் அனேகமானோர் அது பற்றி அறிந்திராத காரணத்தால் அதனை தவறிவிடுகின்றனர்' என இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் ஆறுமுகன் நட்ராஜன் தெரிவித்தார்.
கண்டி உண்ணஸ்கிரிய சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மலையக மாணவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு ஒழுங்கு செய்த இந்நிகழ்வில் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், மூக்குக் கண்ணாடி உற்பட பல்வேறு பொருட்கள் இலவசமாகக் வழங்கப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.
'மலையக மக்களுக்கு சேவை செய்வதற்கென்றே நிறுவப்பட்டுள்ள கண்டி இந்திய உதவித் தூதுவராலயத்தை இந்தியாவின் சகோதர உறவைக் கொண்ட எம்மவர்கள் பயன்படுத்தாமை கவலைக்குறியது. ஆனால் மலையக மக்களுக்காக வழங்கப் படும் இத்தகைய சலுகைகளை இந்திய வம்சாவழி மலையக மக்கள் தவிர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
உயர்கல்வியைப் பொறுத்தவரை அது எத்தகைய துறையாகிலும் இந்தியாவில் மலையக மக்களுக்காகக திறந்து விடப்பட்டள்ளது.
மலையக மக்கள் அதனைப் பயன்படுத்தி பலனடைய வேண்டும் என வேண்டுகிறேன்' என்றார்.
நன்றி - தமிழ்மிரர்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...