Headlines News :
முகப்பு » » கலாபூஷணம் சுப்பையா ராஜசேகரன் - மல்லியப்பூ சந்தி திலகர்

கலாபூஷணம் சுப்பையா ராஜசேகரன் - மல்லியப்பூ சந்தி திலகர்


நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் தல­வாக்­கலை நகரில் இருந்து 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்­தி­ருக்கும் நகரம் வட்­ட­கொடை. ஏகப்­பட்ட வட்­ட­கொ­டைகள் நாட்டில் இருப்­ப­தனால் இதற்கு ஸ்டேஷன் வட்­ட­கொடை என்று பெயர். இந்த வட்­ட­கொடை ரயில் நிலை­யத்­துக்கு ஒரு சிறப்பு உண்டு.  

சிறிய ரயில் நிலையம் ஆயினும் நீண்ட இறங்கு மேடை ((Platform) இடது பக்கம் நீண்ட களஞ்­சிய அறை ((Goodsshed) என நீண்ட வர­லாறு கொண்ட இந்த ரயில் நிலை­யத்தில் வலது பக்க வாசல் வழி வெளியே­றினால் உள்ள சிறிய வீட்­டுத்­திட்­டத்­துக்குள் ஒரு பெட்­டிக்­க­டையும் ஒரு வகுப்­ப­றையும் என தனது வாழ்க்கைக் காலத்தை அர்ப்­ப­ணித்­துக்­கொண்­டி­ருப்­பவர் சண்­முகம் மாஸ்டர்.

ஊருக்கு இவர் சண்­முகம் மாஸ்டர் ஆயினும் தன்­னு­டைய முகநூல் பதி­வு­களின் வழி­யாக உல­கையே தன் ஊர்­பக்­க­மாக  திரும்­பி­ப்பார்க்க வைத்த இவ­ரது இயற்­பெயர்  சுப்­பையா ராஜ­சே­கரன். 

மலை­யகம் குறித்த வர­லாற்று ஆவ­ணங்கள், தக­வல்கள் வேண்­டுமா..? இவ­ரது முகநூல் பக்­கத்­திற்கு போனால் போதும். அங்கு இல்­லாத தக­வலா அவ­ரது முகநூல் பிரத்­தி­யேக செய்­திப்­பெட்­டியில் தொடர்பு கொண்டால் போதும் தேடித் தரு­கிறேன் சாமி என தக­வல்­க­ளையும் படங்­க­ளையும் திரட்டி தரும் பல்­துறை கலைஞர் இவர். 

'வட்­ட­கொடை ரயில் நிலை­யத்­துக்கு அரு­கா­மையில் அவ­ரது இல்லம் அமைந்­தி­ருந்­ததன் கார­ண­மாக சிறு­வ­யது முதலே ஹட்டன் ஹைலன்ஸ் கல்­லூ­ரியில் கற்கும் வாய்ப்பைப் பெற்­றவர். இளம் வய­தி­லேயே தந்­தையை இழந்­தவர். குடும்ப சுமை­தாங்க பாட­சாலை கல்­வியின் பின்னர்  தந்தை செய்த நகை பட்­டறை வேலையை செய்ய ஆரம்­பித்தார். எனினும் அவ­ருக்குள் பொதிந்து கிடந்த மலை­யக உணர்­வு­களால் உந்­தப்­பட்­ட­வ­ராக தனது கடைக்கு அரு­கா­மையில் ஒரு சிறிய குடில் அமைத்து ஸ்ரீ கிருஷ்ணா அற­நெறி பாட­சாலை என ஆரம்­பித்து மாலை நேர வகுப்­பு­களை ஆரம்­பித்தார். இதற்கு மேல­தி­க­மாக தனது ஓய்வு பொழு­து­களில் ஓவி­யங்­களை வரைய ஆரம்­பித்தார். சிறந்த ஓவி­ய­ரான இவர் கோட்டு ஓவி­யங்­களை வரை­வதில் வல்­லவர். கைப்­பணி பொருட்­க­ளையும் வடி­வ­மைப்பார். 

சமூக சேவை நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து மாண­வர்­க­ளுக்கு தலை­மைத்துவ பயிற்சி வழங்குவதில் ஆர்வம் காட்­டிய இவ­ரது அற­நெ­றிப்­பள்ளி ஏழை மாண­வர்­களின் இருப்­பிடம் ஆகி­யது. வட்­ட­கொடை நக­ருக்கு அண்­மையில் உள்ள தோட்­டங்­க­ளான மட­கொம்­பரை, வட்­ட­கொடை, யொக்ஸ்போர்ட், ஹொலிரூட், கிரேட் வெஸ்டர்ன் போன்ற தோட்­டங்­களில் இருந்து வரும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இவ­ரது அற­நெ­றிப்­பள்ளி அடைக்­களம் தந்­தது. இந்த பாட­நெறி என்ற எல்லை கிடை­யாது. எல்லா பாடங்­க­ளையும் கற்­பிப்பார். இவ்­வ­ளவு கட்­டணம் என்­பதும் கிடை­யாது. ஏழை மாண­வர்கள் கொடுக்கும் எந்­த­வொரு தொகை­யையும் புன்­ன­கை­யோடு வாங்கி அதனை அந்த மாண­வர்­க­ளுக்கே செல­வ­ழித்து விடுவார். பாட­சாலை முடிந்து பகல் உணவு இல்­லாமல் வரும் மாண­வர்­க­ளுக்கு தன் பெட்­டிக்­க­டையில் உள்ள பாணை வெட்டிக் கொடுத்து பசியை போக்­கி­வடும் பரோ­ப­காரி. இதனால் நாள­டைவில் ஸ்ரீ கிருஷ்ணா அற­நெ­றிப்­பள்ளி  ஸ்ரீ கிருஷ்ணா சமூக நலப்­பா­ட­சா­லை­யாக மாற்றம் பெற்­றது. இந்த பாட­சா­லையில் கற்ற பல மாண­வர்கள் இன்று உயர் பத­வி­களில் உள்­ளனர்.

நாட­கத்­து­றையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஹைலன்ஸ் கல்­லூ­ரியில் இர.சிவ­லிங்கம், செந்­தூரன் போன்ற ஆசி­ரி­யர்­களால் செப்­ப­னி­டப்­பட்­டவர். தனது பள்­ளிக்கு வரும் மாண­வர்­களை நாட­கத்­து­றை­யில் பயிற்சி வழங்கி நாட­கங்­களை தயா­ரித்து மேடை­யேற்ற வாய்ப்­ப­ளிப்­பவர். வளங்கள் பற்றி அலட்­டிக்­கொள்­ளாமல் கடை­வா­சலில் மேடை அமைத்து கடைக்கு வரும் பொதுமக்­களை பார்­வை­யா­ளர்­க­ளாக்கி மாண­வர்­களின் கலை­யாற்­றலை வளர்த்து வரு­பவர். அவ­ரது ஊரி­லேயே வாழ்ந்து மறைந்த அற்­ப­த­மான தோட்­டப்­புற பாடல் கலை­ஞ­ரான கபாலி செல்லன் ஊடாக மாண­வர்­க­ளுக்கு பாடும் பயிற்­சி­யையும் வழங்­குவார். நாட்டார் பாடல்கள் பல­வற்றை சேக­ரித்து வைத்தி­ருக்­கிறார்.

அதே­போல மாண­வர்­களின் விளை­யாட்­டுத்­து­றையை ஊக்­கு­விக்க வரு­டாந்த விளை­யாட்டுப் போட்­டி­களை நடத்தி ஊக்­கு­விப்­பவர். இவ­ரது பள்­ளியில் சுற்­றுலா செல்­வ­தற்கு பய­ணக்­கட்­டணம் தேவை­யில்லை. ஊரைச்­சுற்­றி­யுள்ள தெப்­பக்­குளம், சிண்­டாக்­கட்டி மலை, கிரேட்­வெஸ்டர்ன் மலை என நடை­ப­ய­ண­மா­கவே மாண­வர்­களை அழைத்துச் சென்று இயற்கை அழகை எடுத்­துச்­சொல்லும் இயற்கை நேசன் இவர்.  

மறு­பு­ற­மாக ஆரம்ப நாள் முதலே ஆவண சேக­ரிப்பில் அதிக கவனம் செலுத்­தி­யவர். அவ­ரது சிறிய இல்­லத்தின் பெரும்­ப­கு­தியை இந்த ஆவ­ணங்­களை சேர்த்து வைப்­ப­தற்கே ஒதுக்­கி­வைத்­துள்ளார். சி.வியின் மறை­வுக்­குப்­பின்னர் அவர் வாழ்ந்த இல்லம் அர­சாங்­கத்­தினால் அப­க­ரிக்­கப்­பட்­ட­போது சி.வியின் மைத்­து­ன­ரான ஊட­க­வி­ய­லாளர் சி.எஸ் காந்தியிடம் இருந்து பெற்று அவற்­றையும் தன் சேக­ரிப்பில் இணைத்­துக்­கொண்­டவர். இன்று மலை­யக கலை­வி­ழாக்­களில் சி.வியின் சேக­ரிப்­பு­களை கண்­காட்­சிக்கு வைத்து இளம் சமூ­கத்­தி­ன­ருக்கு சி.வி.வேலுப்­பிள்ளை பற்­றிய நினை­வு­களை மீட்­டித்­த­ரு­பவர். தன் இல்­லத்தை ஒரு ஆவ­ணக்­காப்­ப­க­மாக மாற்றி வைத்­தி­ருக்கும் இவ­ருக்கு சூரி­ய­காந்தி பத்­தி­ரிகை உரிய இடம் வழங்­கிய பின்­னரே உல­குக்கு தெரிய ஆரம்­பித்தார். இன்று உல­கமே முகநூல் வழி­யாக இவ­ரது பதி­வு­களை தினமும் ஆவ­லுடன் படித்து வரு­கின்­றது. அதே­போல உல­கெங்­கினும் இருந்து வரும் தமிழ் ஆர்­வ­லர்கள், மலை­யக ஆர்­வ­லர்கள், சமூக ஆவர்­வ­லர்கள் இவ­ரது இல்லம் நாடி வருகை தந்து அவ­ரது ஆவ­ணக்­காப்­பகத்தை பார்­வை­யிட்டுச் செல்­கின்­றனர்.

2000 ஆம் ஆண்டு ஹட்டன் லோயல் கல்­வி­யகம் இவ­ரது கல்­விப்­ப­ணிக்­காக சிறப்பு விருது வழங்கி கௌர­வித்­தது. 2005 ஆம் ஆண்டு மத்­திய மாகாண சாகித்­திய விழாவில் அப்­போ­தைய கல்வி அமைச்சர் எஸ். அருள்­சாமியினால் சமூ­கப்­ப­ணி­க­ளுக்­கான மாகாண சாகித்ய பரிசு பெற்ற இவர் 2015 ஆம் ஆண்டு ஆவண சேகரிப்புகளுக்காக மாகாண சாகித்ய பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

கல்வி, கலை, இலக்கியம், ஓவியம், சமூகம் மற்றும் ஆவணக்காப்பு, எழுத்து என அனைத்து துறைகளிலும் பிரகாசிக்கும் பல்துறை கலைஞரான வட்டகொடை சுப்பையா ராஜசேகரன் காலம் கடந்தேனும் கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்தினால் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது மாணவர்களில் நானும் ஒருவன் என்ற பெருமையோடு மலையக மக்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates