Headlines News :
முகப்பு » » இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்

இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்

எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி காலை 10.00 மணிக்கு இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம் தலைமையில் அட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  இந்நிகழ்வில் சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. பீ. . ஜீ. சுரேந்திரன் வரவேற்புரையை நிகழ்த்துவார். பேராசிரியர் தை. தனராஜ், கலாநிதி . எஸ். சந்திரபோஸ் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாளர்களாக கலந்து கொள்வார்கள். பொதுச்செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் சம்மேளனத்தின் யாப்பு விதிகள் பற்றி விளக்குவார். சம்மேளனத்தின் உபக்குழுத்தலைவர்களான திருவாளர்கள் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, எம். சந்திரன், எஸ். சுரேஷ்காந்தன், எஸ். குமார், எம். எஸ். இங்கர்சால் ஆகியோர் உரையாற்றுவார்கள். நிருவாகச்செயலாளர் கே. கிருஸ்ணன் நன்றியுரை வழங்குவார்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates