Headlines News :
முகப்பு » » கல்வி நிலையை உயர்த்துவதை குறிகோளாகக் கொண்டுள்ள மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் - ஜே.ஜி. ஸ்டீபன்

கல்வி நிலையை உயர்த்துவதை குறிகோளாகக் கொண்டுள்ள மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் - ஜே.ஜி. ஸ்டீபன்

கே.சிவசுப்பிரமணியம்
கூலிகளாய் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமூ கம், தாம் நடக்கத் தாமே பாதை அமைத்த சமூகம் பற்றைக் காடுக ளையும் பள்ளம், மேடுகளையும் பயிர் நில ங்களாய் பட்டை தீட்டிய சமூகம். இன்று வரை நாட்டின் பொருளாதார சுமையை தன் தோளிலும் முதுகிலும் சுமந்து கேள்விக்குறியாய் வளைந்து 200 வருடங்களாக இன்னொரு வர்க்கத்துக்கென தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருக்கும் மலையக சமூகத்தின் எதிர்காலம் இளம் சந்ததியினரின் கைகளிலேயே தங்கியுள் ளது. அதற்கு அவர்கள் கல்வியினால் பலம் பெற வேண்டிய தேவையை உண ர்ந்து தலைநகரில் செயற்பட்டு வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் எட்டு ஆண்டுகளைக் கடந்து ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது என்று மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் கே. சிவசுப்பிரமணியம் மற்றும் மன்றச் செயலாளர் ஏ. பாஸ்கரன் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி ஒன்பதாம் ஆண்டில் அடியெடித்து வைக்கின்ற நிலையில் கேசரி வார இதழுக்கு மேற்படி இருவரும் இணைந்து வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினர். அதன் விபரம் வருமாறு,

கேள்வி: 8 ஆண்டுகளைக் கடந்து 9 ஆவது ஆண்டில் தடம் பதித்திருக்கும் இன்றைய நிலையில் உங்கள் மன்றத்தின் கனவு நனவாகி இருக்கின்றதா?

பதில்: நிச்சயமாக எமது கனவு நனவாகி வருகின்றது என்றுதான் கூற வேண்டும். 2006.08.26 அன்று மிகச்சிறிய அளவில் போதிய பொருளாதாரமோ ஏனைய வசதிகளோ இன்றி சுமார் 10 அங்கத்தவர்களுடன் கொழும்பு, செட்டியார் தெருவில் தொழில் புரியும் இளைஞர்களால் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. வறுமை காரணமாக இடை நடுவில் கைவிட்ட கல்வியை எமது சந்ததியினராவது கற்றுப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்து டன் கடைகளில் தொழில் புரிந்த நாம் எமது தொழில் தவிர்ந்த ஏனைய நேரங்களை இம் மன்றத்தின் வளர்ச்சிக்காக நேரத்தைச் செலவிட்டோம். எமக்குக் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை மன்றத்தினூடாக சேவைகள் செய்வதற்கென்று ஒதுக்கினோம். எமது மன்றம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 02 வருடங்க ளாக குறைவான உறுப்பினர்களையே கொண்டு இயங்கியது. உறுப்பினர்களின் சந்தா பணத்தினைக் கொண்டு முதல் உதவித்திட்டமாக இரத்தினபுரி மாவட்டத் தின் இதலென்ன தமிழ் வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்களை வழங்கினோம். அதனைத் தொடர்ந்து எமது சேவையறிந்து பல உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டனர். தாராள மனம் படைத்தவர்களின் உதவியுடன் இன்றுவரை கல்விக்குத் தேவையான சேவைகளை மலையகத்தைச் சார்ந்த, சாராத 650க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றோம். நாம் மிகப்பெரிய தொகையினை மலையகக் கல்விக்காக செலவழித்து வருகின்றோம். அதேநேரம் எமது குறிக்கோளை உணர்ந்து நல்ல மனம் கொண்ட தொழில்தருநர்கள் நலன்விரும்பிகள் எனப் பலர் எம்முடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் உதவியால் எம்மால் பல்வேறு சேவைகளை சிறப்புற செயற்படு த்த முடிகின்றது.

இந்த சேவைகளை மெருகூட்டி முன்னெடுத்து வரும் எம்முன்னே எமது சமூ கம் பாரிய சுமை ஒன்றினை வைத்துள் ளது. அச்சுமையினை சுகமாக ஏற்று எங் கள் சமூகத்தின் விடிவுக்காக 2500க்கும் மேற்பட்ட மன்ற உறுப்பினர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் எமது மன்றத்தின் கனவை நனவாக்கி வருகின்றோம் என்றே சொல்ல வேண்டும்.

கேள்வி: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் கடந்து வந்த பாதையில் எந்த அளவு திருப்தியை அடைந்து இருக்கின்றது என்பதை கூற முடியுமா?

பதில்: தூரநோக்கு சிந்தனையோடு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவரும் எமது மன்றம் இதுவரை 3 கோடி ரூபாக்களு க்கு மேற்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையை நினை த்து பெருமிதம் கொள்கின்றோம். எமது வேலைத்திட்டங்களில் இதுவரை கால மும் 500ற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில்களை வழங்கி வந்துள்ளோம். இவ ர்களில் பலர் இன்று சமூகத்தில் உயர் பதவிகளில் உள்ளதுடன், அவர்களது வாழ்க்கை தரம் உயர்ந்த நிலையில் உள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அது எமது சேவைக்கு கிடைத்த வெற்றி என்று கருதுகின்றோம். அதேவேளை இவர்களில் கணிசமான தொகையினரே எம்முடன் இணைந்து உதவி வருகின்றதென்பதையும் கூற வேண்டும். இது ஒருபுறமிருக்க ஏனையோர் எமது சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயற்படுவதும் எம்மை மனங்குளிரச் செய்கின்றது.

மேலும் வருடந்தோறும் தரம் 05 புலமை ப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட முன்னோடிப்பரீட்சை செயலமர்வுகளை நடத்தி அவர்களின் பெறுபேறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றோம். அத்தோடு க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களின் பயனாக இம்மாணவர்களின் பெறுபேறுகளில் குறிப்பாக விஞ்ஞானம் கணிதம் மற்றும் ஆங்கிலப்பாடங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

அத்தோடு எமது சமூகத்தின் கல்வி தேவைகளில் முக்கிய இடம் வகிக்கும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய தொண்டர் ஆசிரியர்களை நியமித்து அவர்களூடாக ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். இத்தொண்டர் ஆசிரியர்களுக்கான வேதனமும் மன்றத்தால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் பாடசாலைகளுக்கான பெளதீக வளங்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்ப வற்றை நேரடியாகச் சென்று வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பதில் திருப்தி அடைகின்றோம். எனினும் கல்வித்துறைச் சார்ந்த சிலர் இவ்விடயங்களில் கவனம் செலுத்தாமையும் கவலைக்குரியதொன்றாகவும் இருக்கின்றது.

கேள்வி: உங்களது மன்றம் பெருந்தொகையான நிதியை மலையகச் சமூகத்துக்காக செலவிட்டு வருவதாகக்கூறும் நீங்கள் இதற்கான நிதி திரட்டல் ஒத்துழை ப்புகள், உடல் உழைப்புகள் என்பவை குறித்து விளக்க முடியுமா?

பதில்: எமது மன்றம் சேவைகளை முன்னெடுக்க தொகையான நிதியினை எம்முடன் இணைந்து எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சமூக அக்கறையோடு வாரிவழங்கி வரும் உறுப்பினர்களின் சந்தாப்பணமே உறுதுணையாக இருக்கின்றது. அத்தோடு எந்த நேரத்திலும் எமது தேவைகளை பூர்த்தி செய்யத் தயங்காத மன்றத்தின் போஷகர்களின் உதவியுடன் நிதியினை பெற்றுக் கொள்கின்றோம். நிதிச் சேகரிப்புக்கான பிரத்தியேக அணுகு முறைகளை கையாண்டு வருகின்றோம். உதாரணமாக விளையாட்டு, கலைத்துறையினூடாக நிதிதிரட்டலை மேற்கொள்கின்ற அதேவேளை அவை உறுப்பினர்களை ஊக்கப்படுத்துவதாகவும் அமைகின்றன. மேலும் ஆரம்ப காலத்திலிருந்தே குழுவாக செயற்படும் திறனைப் பெற்றிருப்பதால் அதனூடாகவே மக்களின் உடல் உழைப்பை பெற்றுக் கொள்ள முடிகிறது இதில் உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

கேள்வி: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சேவைகள் மலையக சமூகத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருக்கின்றதா?

பதில்: நிச்சயமாக இல்லை. மலையகக் கல்வி அபிவிருத்தி என்னும் தொனிப்பொருளில் நாம் இயங்கி வந்தாலும் எம்மை அணுகும் நாட்டின் சகல பகுதிகளுக்கும் எமது சேவை தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, சிலாபம், அநுராதபுரம் போன்ற பிரதேசங்களிலும் எமது சேவையை விஸ்தரித்தும் செயற்படுத்தி யும் வருகின்றோம்.

கேள்வி: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்திற்கான அங்கீகாரம் எவ்வாறு இருக்கின்றது?

பதில்: எமது சேவையினை பலரும் அங்கீகரித்துள்ளனர். குறிப்பாக ஆசிரிய சமூகத்தினர், பல்கலைக்கழக பேராசிரியர் கள், புத்தி ஜீவிகள் மத்தியில் எமக்கென ஒரு நல்ல அங்கீகாரமும் கிடைத்துள்ளது. பெற்றோர்களும் எமக்கு உதவிக்கரம் நீட்டும் ஊடகங்களும் எமது அங்கீகாரத்தை உறுதிப்படுத்துகின்றன.

கேள்வி: மன்றத்தின் வளர்ச்சிக்கும் அதன் பயணத்திற்கும் உந்து சக்தியாக இருக்கும் காரணிகளை கூற முடியுமா?

பதில்: உண்மையில் ஒரு சாதாரண அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட எமது மன்றம் இத்தகைய பாரிய வளர்ச்சி யை அடைவதற்கு உந்து சக்தியாயிருந்த காரணங்களையும் இப்போது நிச்சயம் நினைவுகூர வேண்டும். அந்த வகையில் எவ்வித பலனையும் எதிர் பார்க்காது தமது உழைப்பின் ஒரு பகு தியை அர்ப்பணிப்புடனும் சமூக அக்க றையுடனும் எமக்களித்து வரும் உறுப் பினர்களான கூலித்தொழிலாளர்கள் தம் மையும் பங்காளிகளாக இணைத்துக் கொண்டுள்ளமை முக்கிய அம்சமாகும். அத்தோடு நல்ல ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வரும் எமது போஷகர்கள் எம்மை அங்கீகரித்து ஊக்கப் படுத்தி வரும் கல்வித்துறை சார்ந்த வர்கள் என்றும் எமக்கு பக்க பலமாய் இருந்து வரும் ஊடகத்துறையும் அதனைச் சார்ந் தவர்களுமே எமக்கு உந்து சக்தியாய் உய ர்ந்து நிற்கின்றனர். இவர்கள் எம்மோடு இருக்கும் வரை எமது சேவைகள் என்றும் தொடரும்.

மேலும் எமது கல்விக்குக் கண்திறப் போம் என்ற பயணத்தில் இணைந்து கொள்ள விரும்பும் நல்ல உள்ளங்கள், முகப் புத்தகம்,ஸ்கைப் ஊடாகவும் தொட ர்பு கொள்ள முடியும் என்பதையும் தெரி வித்து கொள்கிறோம் என்றனர்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates