Headlines News :
முகப்பு » » ஊவா மாகாண சபைத் தேர்தல் ஓர் பார்வை - முருகேசுப்பிள்ளை செல்வராசா

ஊவா மாகாண சபைத் தேர்தல் ஓர் பார்வை - முருகேசுப்பிள்ளை செல்வராசா


ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக பத்து (10) அரசியல் கட்சிகளும், (4) நான்கு சுயேச்சைக் குழுக்களும் தத்தமது வேட்பு மனுக்களை, தெரிவு அத்தாட்சி அலுவலர் ரோஹன கீர்த்தி திசாநாயக்கவிடம் கையளித்துள்ளன.

ஊவா மாகாண சபை பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். பதுளை மாவட்டத்திலிருந்து 18 பேரும், மொனராகலை மாவட்டத்தி லிருந்து 14 பேருமாக 32பேர் மக்கள் தெரிவாகவும் இருவர் போனஸ் ஆசனங்களுடன் 34 பேர் அங்கம் வகிக் கும் சபையாக, ஊவா மாகாண சபை இருந்து வருகின்றது.

பதுளை மாவட்டத்திலிருந்து 18 பேரைத் தெரிவு செய்ய பல்வேறு அரசியல் கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலு மிருந்து 294 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இம் மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் 6,09,966 வாக்காளர்களை மையப்படுத்தியே, மேற்படி வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழ் வாக்காளர்கள் 104702பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மையப்படுத்தியே 64 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 5 தமிழ் பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பு, மவ்பிம ஜனதா கட்சி, ஜனசெத பெரமுன கட்சி, ஜனநாயகக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா தொழிற்கட்சி, ஐக்கிய இலங்கை மகாசபா கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளும் நான்கு சுயேட்சைக் குழுக் களுமாக 14 கட்சிகளும் குழுக்களுமாக தலா 21 பேரடங் கிய வேட்பாளர்பட்டியல்கள், பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 48 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை மையப் படுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட் சைக் குழுக்களிலிருந்தும் 23 முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தேர்தல் தொகு தியில் 93387 பேரும், வியலுவை தொகுதியில் 50648 பேரும், பசறைத் தேர்தல் தொகுதியில் 61933 பேரும், பதுளை தேர்தல் தொகுதியில் 54,327 பேரும், ஹாலி எலை தேர்தல் தொகுதியில் 68278 பேரும், ஊவா - பரன கமை தேர்தல் தொகுதியில் 61,925 பேரும், வெலிமடை தேர்தல் தொகுதியில் 73308 பேரும், பண்டாரவளை தேர்தல் தொகுதியில் 82025பேரும், அப்புத்தளை தேர்தல் தொகுதியில் 64335 பேருமாக 609966 பேர் 9 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இத்தேர்தலில் ஐ.தே.கவின் பதுளை மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரான ஹரின் பெர்னான்டோ தமது எம்.பி பதவியை இராஜிநாமாச் செய்து விட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, ஊவா மாகாண சபை உறுப்பினராக இருந்த, பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளர் கே. வேலாயுதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

லுணுகலை பிரதேச சபையின் இ. தொ. கா உறுப்பினராக இருந்த ஆறுமுகம் கணேசமூர்த்தி ஆளும் கட்சி சார்பாகவும், அச் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான வேலாயுதம் உருத்திரதீபன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சி பதுளை மாவட்டப்பட்டியவில் முன்னாள் பிரதிக்கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன், முன்னாள் ஊவாமாகாணசபை உறுப்பினர்களான எம். பி. லோகநாதன், மக்கள் விடுதலை முன்னணி பொன்னுசாமி பூமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதத்தின் புதல்வர் உருத்திரதீபனும் போட்டியிடு கின்றனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், லுணுகலை பிரதேச சபை உறுப்பினரான ஆறுமுகம் கணேசமூர்த்தி, வெலிமடை மாவட்டத் தலைவர் ஆறுமுகம் சிவலிங்கம் ஆகியோர் இ. தொ. கா. சார்பாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பசறைத் தொகுதி அமைப்பாளரும், ஜனாதிபதியின் இணைப்புச் செய லாளருமான வடிவேல் சுரேஷ் மலையக மக்கள் முன்னணி சார்பாக ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பின ருமான அ. அரவிந்தகுமார், தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் எஸ். இராசமாணிக்கம் ஆகியோரும் போட்டியிடு கின்றனர்.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணி பதுளை மாவட்டத்தில் தனியாகவும், மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்தும் போட்டியிடுகின்றது.

பெண் பிரதிநிதித்துவம்

ஊவா மாகாண சபைத் தேர்தலின் பதுளை மாவட்டம் சார்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பட்டியல்களில் மொத்தம் 11 பெண்கள் போட்டியிடும் அதே வேளை 3 பெளத்த பிக்குகளும், இந்துமத குரு தலைமையில் 21 தமிழ் வேட்பாளர்களும் களம் இறங்கி யுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பட்டி யலில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் உள்ளடக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் 2 தமிழர்களும், ஜனநாயகக்கட்சியில் ஒரு தமிழ்ப் பெண்ணும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், சிவஸ்ரீ சுதாகர் சர்மாவின் புதல்வி மீரா தலைமையிலான சுயேட்சைக்குழுவும், பிறிதொரு தமிழ் வேட்பாளர்கள் அடங்கிய சுயேட்சைக் குழுவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

பதுளை மாவட்ட தேர்தல் களத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் ஹேமா ரட்னாயக்க, மவ்பிம ஜனதா கட்சியில் சமீலா தில்ருக்சி த சில்வா, ஜனசெத பெரமுன கட்சியில் பி. ஆர். மல்லிகா, சித்ராணி டெடிகம, டி. எம். அனுலாவதி, ஜனநாயக கட்சியில் கோமளம் பிரியதர்சினி, தேசிய சுதந்திர முன்னணியில் பி. எம். யசோமெனிகா, சுயேட்சைக்குழு 1ல் வேலாயுதம் சுந்தரவதனி, சுயேட்சைக்குழு 2ல் சிஸ்ரீ சுதாகர சர்மா மீரா தலைமையில் சாமூவேல் செல்வமலர், சிவபாலன் வசந்த குமாரி, ஸ்ரீ லங்கா தொழில் கட்சியில் எஸ். எம். குசுமாவதி என 12 பெண்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஐந்து பேர் தமிழ்ப் பெண்களர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் ஆறு தமிழர்க ளும், ஐக்கிய தேசியக் கட்சியில் நான்கு தமிழர்களும், இரு முஸ்லிம்களும், ஜனநாயகக் கட்சியில் ஒரு தமிழரும், ஸ்ரீலங்கா தொழில் கட்சியில் ஒரு தமிழரும், ஐக்கிய இலங்கை மஹாசபா கட்சியில் ஒரு தமிழரும், ஐக்கிய ஜனநாயக முஸ்லிம் கூட்டமைப்பில் மூன்று தமிழர்களும், பதினேழு முஸ்லிம்களும், சுயேட்சைக்குழுவில் 1 ல் 26தமிழர்களும், சிவஸ்ரீ சுதாகரசர்மா மீரா தலைமையிலான சுயேட்சைக்குழுவில் இருபத்தொரு தமிழர்களும், மாலிம்பட தலைமையிலான சுயேட்சைக்குழுவில் மூன்று தமிழர்களும், ஒரு முஸ்லிமும் ஜனசெத்த பெரமுன கட்சியில் ஒரு தமிழ ரும், ஒரு முஸ்லிம் என 64 தமிழர்களும் 23 முஸ்லிம்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

செப்டெம்பர் 20 ந்திகதி நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 617 வேட்பாளர்கள் மொத்தமாக களம் இறங்கியுள்ளனர். 9,42,390 பேர், இத் தேர்தலில் மொத்தமாக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 414 வேட்பாளர்களும், சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 203 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பதுளை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், மொன ராகலை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவதுடன் இருவருக்கு போனஸ் ஆசனங்களாக 34 பேர் நியமிக்கப்படுவர்.

அரசியல் கட்சிகளின் சார்பில் 33 வேட்பு மனுக்களும், சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 44 வேட்பு மனுக்களுமாக 44 வேட்பு மனுக்கள் இரு மாவட்டங்களிலும் சமர்ப்பிக் கப்பட் டுள்ளன. 2013ம் ஆண்டு வாக்களார் இடாப்பின் பிரகாரம் நடைபெறும் இத் தேர்தலில், பதுளை மாவட்டத் தில் 6,09966 வாக்காளர்கள் 516 வாக்களிப்பு நிலையங்களி லும் மொனராகலை மாவட்டத்தில் 3,32,764 வாக்காளர்கள் 318 நிலையங்களிலும் வாக்களிக்கவுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில், மொனராகலை, பிபிலை, வெல்லவாய ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளேயுள்ளன. 25 ஆசனங்கள் இருந்த பதுளை மாவட்டத்திலிருந்து மூன்று ஆசனங்கள் மொனராகலை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினகரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates