Headlines News :
முகப்பு » » இலங்கை பொருளாதார வளரச்சியின் முதுகெலும்பு மலையக மக்களுக்கு தனி வீடு கட்டிக் கொடுக்க அரசாங்கத்திடம் நிதி இல்லையாம் - வெட்கம் கேவலம் - பழனி விஜயகுமார்

இலங்கை பொருளாதார வளரச்சியின் முதுகெலும்பு மலையக மக்களுக்கு தனி வீடு கட்டிக் கொடுக்க அரசாங்கத்திடம் நிதி இல்லையாம் - வெட்கம் கேவலம் - பழனி விஜயகுமார்

இரத்தம், வியர்வை சிந்தி பிறரின் உதடுகளுக்கு சுவையான தேயிலை வழங்கும் மலையக மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை பட்டியலிடப் போனால் அதற்கு ஒரு கட்டுரை எழுதி போதாது. அந்த பிரச்சினை மூடைகளில் முக்கியமானதுதான் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினை. இலங்கை திருநாட்டில் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து வரும் மலையக மக்களுக்கு சொந்த வீடு, காணி இல்லை என்பது மிகப்பெரிய அவலம்.

உழைத்து உழைத்து ஓடாய் தேயும் மலையக தோட்டத் தொழிலாளர் மக்களுக்கு லயன் குடியிருப்பு ஒன்றே சொந்தமாகவும் சொர்க்கமாகவும் விளங்குகிறது. சில தோட்டங்களில் வேலை இல்லை என்றால் அதற்கும் ஆப்பு. 

மலையகத் தோட்டத் தொழிலாளர் மக்களது காணி வீட்டுப் பிரச்சினை எப்போது தீர்;க்கப்படும். 10 பேஜ் காணியில் தனி வீடு, 7 பேஜ் காணியில் தனி வீடு என்ற கோரிக்கை தற்போது ஆகக்குறைந்தது 5 பேஜ் காணியில் தனி வீடு என்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகிவிட்டது. 

மலையக மக்களுக்கு மாடி வீடு என்ற திட்டத்தை கொண்டுவந்து ஒரு லயத்தின் மேல் இன்னொரு லயத்தை ஏற்றி வைத்தார்கள். அத்திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. காணிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில் மலையக மக்களுக்கு எதற்கு மாடி வீடு என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தது. 

பாராளுமன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் வாசிக்கப்பட்ட 2014ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது மாடி வீடா தனி வீடா என்பதில் குழப்பம் நிலவியது. காரணம் ஜனாதிபதி உரையின் சிங்களத்தில் மாடி வீட்டுத் திட்டம் என்னும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வீட்டுத் திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும் குறித்த 50,000 வீட்டுத் திட்டத்திற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது அல்லது எங்கிருந்து பெறப்படும் என்று தெளிவாக அறிவிக்கப்படவில்லை. 

எனினும் மலையக மக்களுக்கு மாடி வீடு கட்டிக் கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அரசாங்கத்துடன் கூட்டுசேர்;ந்துள்ள மலையக கட்சிகள் தொழிற்சங்கங்களும் எதிர்கட்சியில் உள்ள மலையக பிரதிநிதிகளும் சிவில் அமைப்புக்கள் பலவும் எதிர்;ப்பு தெரிவித்திருந்தன. 

இந்நிலையில் மாடி வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தனி வீட்டுத் திட்டம்தான் வேண்டும் எனவும் வலியுறுத்தி மலையக சிவில் அமைப்புக்களான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம், கண்டி சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் அரசியல் கட்சியான மலையக மக்கள் முன்னணியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. 

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு கடந்த 2013 டிசம்பர் 13ம் திகதி பதில் கடிதம் கிடைக்கப்பெற்றது. மேலதிக நடவடிக்கைகளுக்காக கடிதம் வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்படும் என அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. (கடிதம் 01)


அதன்படி, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு குறித்த நிறுவனத்தால் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் பிரதி ஒன்று மலையக சிவில் அமைப்புக்களுக்கும் ஜனாதிபதியின் சிரேஸ்ட உதவி செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (கடிதம் 02)

அதில் இரண்டு முக்கிய கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

01. 'புது வீட்டுத் திட்டம் ஆரம்பித்து தோட்ட மக்களுக்கு தேவையான வீடுகளைக் கட்டிக் கொடுக்க போதுமான நிதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு கால்நடை வள அபிவிருத்தி அமைச்சால் 2011ம் ஆண்டுக்குப் பின் அனுப்பி வைக்கப்படவில்லை. மலையக தோட்ட சேவையாளர்களுக்கு வீட்டுத் திட்டம் ஆரம்பிக்க தேவையான நிதி திரைசேரியாலும் தேசிய வீடமைப்பு அதிகார அபிவிருத்தி சபையாலும் ஒதுக்கப்படவில்லை.”

02. 'அதனால் வீடமைப்பு திட்டத்திற்குத் தேவையான நிதியை உங்கள் அமைச்சின் இருந்து வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்வதோடு, அவ்வாறு நிதி வழங்கினால் அந்தந்த தோட்டங்களுக்குத் தேவையான வீடுகளை அந்த தோட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள காணியை கவனத்தில் கொண்டு பொருத்தமான தனி வீட்டுத் திட்டத்தை தயாரித்து அறிக்கை ஒன்றை சமர்பிக்க முடியும் என்பதை விருப்பத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் உள்ள முக்கியமான விடயம் அவலம் என்னவென்றால் இலங்கை திருநாட்;டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க திரைசேரியில் பணம் ஒதுக்கப்படவில்லை என்பதுதான். மலையக மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

உண்மையில் வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட 50,000 வீட்டுத் திட்டம் ஒரு வெற்றுத் திட்டம் என்பதோடு ஏமாற்று நாடகமாகும். காரணம் வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மலையக வீட்டுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த மஹிந்த அரசாங்கம் மலையக மக்களை ஏமாற்றுகிறது என்பதும் அதற்கு அரசாங்கத்தில் இணைந்துள்ள மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கங்கள் துணை போகின்றன என்பதுவும் தெளிவாகிறது.

வீடமைப்புத் திட்டம் அறிவித்து அதற்கு நிதி ஒதுக்காமல் போனது ஏன் என மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வுசுருளுவு (பெருந்தோட்ட மனித வள அபவிருத்தி நிதியம்) 2011ம் ஆண்டுக்கு பிறகு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு நிதி வழங்காதது ஏன் என அமைச்சர் அறுமுகன் தொண்டமானும் வுசுருளுவு மூலம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு இதுவரை வழங்கப்பட்ட நிதியில் எத்தனை தனி வீடுகள் மலையகத்திற்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் விமல் வீரவன்சவும் மலையக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates