Headlines News :
முகப்பு » » இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட சம்மேளனம்-2013

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட சம்மேளனம்-2013

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட சம்மேளனம் அண்மையில் நுவரெலியா புனித சவேரியர் கல்லூரியில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் தலைமையில் நடைபெற்றது. மறைந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர்களை நினைவுபடுத்தும் முகமாக 1 நிமிட நேர மௌன அஞ்சலியுடன் சம்மேளனம் ஆரம்பமானது.
வரவேற்புரையினை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா வலயசெயலாளர் எஸ். ஜீவரட்னம் நிகழ்த்தினார். தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் தலைமை உரையின் போது சங்கத்தின் கடந்தகால படிப்பினைகளையும், மலையகத்தின் தற்போதைய கல்விபிரச்சினையில் ஆசிரியர்; அதிபர் மாணவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் பற்றியும், சங்கம் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து வலயங்களில் இருந்து வருகை தந்த  ஆசிரியர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
வலப்பனை கல்விவலயத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற  பிரச்சனைகள் எதிர்காலத்தில் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்களை வீ.. யோகேஸ்வரன் முன்வைத்தார்.
தொடர்ந்து ஹங்குரன்கெத்த வலயத்தைச்சேர்ந்த ஆசிரியை து. தாரணி கருத்து தெரிவிக்கின்ற போது இவ்வலயத்தில் 11 தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் காணப்படுகின்றபோதும் ஏனைய கல்விவலயங்களை போன்று  தமிழ்மொழி ஆசிரியர் ஆலோசகர்கள் இவ்வலயத்துக்கு நியமிக்கப்படவில்லை. எனவே ஆசிரியர்கள் எவ்விதமான ஆலோசனைகளையோ பயிற்சிகளையோ, தமிழ்மொழியில் பெறமுடியாத நிலை காணப்படுவதுடன் மாணவர்களும் கல்வியில் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுவதாகவும் கல்வித்திணைக்களத்தில் தமிழ் பிரிவுக்குபொறுப்பாக உதவிக்கல்விபணிப்பாளர் காணப்படுவதுடன் அவருக்கும் அதிகாரங்கள் குறைவாகவே காணப்படுவதுடன் கல்விதிணைகளங்களில் கோவைகளை பரணப்படுத்தமுடியாத நிலைமை காணப்படுவதுடன் ஆசிரியர் இடமாற்றங்களையும் இலகுவில் பெறமுடியாத நிலைமை காணப்படுவதாகவும் சம்மேளனத்தின் மூலமாக இவ் வலய ஆசிரியர்களுக்குமான தீர்வினைப் பெற்றுதருமாறு கேட்டுகொண்டார்.
தொடர்ந்து நுவரெலியா வலயத்தைச் சேர்ந்த மு. சுதாகுமார் கருத்துதெரிவிக்கின்றபொழுது 2007 ஆம் வருடம் பெருந்தோட்டபாடசாலைகளில் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களில் 10 வருடங்கள் ஓரே பாடசலையில் கடமையாற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தும், தற்போதும் வலப்பனை வலயத்தில் பெரும்தொகையான ஆசிரியர்களுக்கும் ஏனைய கல்வி வலயங்களில் ஓரு சில ஆசியர்களுககும் இடமாற்றங்களும்  வழங்கப்பட்டுள்ளன.  பின்தங்கிய பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு இடமாற்றஙகள் கிடைக்கவில்லை. அத்துடன் பின்தங்கிய பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு வசதியான பாடசாலைகளுக்கு இடமாற்றங்கள் கிடைப்பதில்லை. ஓரு சில ஆசிரியர்கள் நியமனம் பெற்றது முதல்      10-20வருடங்கள் ஒரே பாடசாலையில் கடமையாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து  எஸ். சிவபெருமான்; உரையாற்றுகின்ற போது மலையக ஆசிரியர் தொழிற்சங்கம் பற்றியும் எதிர்காலத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்; செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
நுவரெலியா வலய குழு உறுப்பினர்கள் பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஏஸ். ஜீவரட்ணம், எம். போல்ராஜ,; ஆர்.பெரியநாயகம். எஸ். கலைச்செல்வம், என்.. தயாலெனின்இ ரி.. மீனாம்பிகை,  என்.  ஹரியதர்சனி, ரி. சதிஸ்;, வீ. வேல்முகநாதன, பி;. சிவகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனா.;
வலப்பனை கல்விவலய உறுப்பினர்காளாக வே. இந்திரசெல்வன், ச. பரமேஸ்வரன்இ வ. விஜயாநந்தன்,               வீ.யோகேஸ்வரன், ஏ. மைக்கல், எஸ்.  நவரட்ணம், ஏ. கனேஸ்வரி,  எஸ். உலகநாதன,; எஸ். ஜனார்த்தனன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஆசிரியர் சம்மேளனத்தில் பின்வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
1. ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை உடன் நீக்கு
2. சமமான கல்வி வழங்கு
3. தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைபடுத்து
4. கல்வியை தனியாருக்கு விற்பதை நிறுத்து
5. ஆசிரியர் அதிபர்களின் கோவைகளின் பாதுகாப்பை கல்வி திணைகளங்களில் உறுதிசெய்
6. மலையக மாணவர்களுக்கும் தேசிய பாடசாலைகளின் வசதிகளை ஏற்படுத்திகொடு
7. மலையக மாணவர்களுக்கும் தனியான பல்கலைக்கழகம் அமைத்துகொடு;
8. தகுதிகேற்ற பதவி உயர்வுகளை வழங்கு
9. வழக்கு தீர்ப்புகளை உடனே நடைமுறைபடுத்து போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றபட்டன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர்  ஜோசப் ஸ்டாலின் உரை நிகழ்த்துகின்ற போது எமது தொழிசங்கத்திற்கு ஒரு வரலாறு இருக்கின்றது. எனவே மலையக ஆசிரியர் அதிபர் மாணவர்கள்  எதிர்நோக்குகின்ற பிரசினைகளை வெற்றிகொள்வதற்கு எமது தொழிற்சங்கம் கடமைபட்டுள்ளது. மேலும் சங்கத்தின் கடந்த கால வெற்றி தோல்விகள் பற்றியும் எதிர்காலத்தின் செயற்பாடுகள் பற்றியும,; குறிப்பிட்டதுடன் இவ் சம்மேளனத்தில் நிறைவேற்றபட்டுள்ள கோரிகைகள் தொடர்பாகவும் இங்கு முன்வைக்கப்பட்ட  ஏனைய விடங்கள் தொடர்பாகவும் மத்தியமாகாண கல்வி செயலாளருடன் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தொடர்ந்து தொழிற் சங்க செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து அட்டன், கொத்மலை, நுவரெலியா, வலப்னை, ஹங்குரன்கெத்த கல்விவலயங்களை சேர்ந்த ஆசிரியர்கள் அங்கத்துவங்களையும் பெற்றுக்கொண்டனர். தயாலெனின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates