Headlines News :
முகப்பு » » சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஒர் மீள்பார்வை இரா. ரமேஸ்

சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஒர் மீள்பார்வை இரா. ரமேஸ்

தொண்ணூறுகளின் அரம்பத்தில் பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட போது கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்பட வில்லை. அப்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச் சட்டங்கள் மற்றும் பொதுவாக காணப்பட்ட தொழிற்சட்டங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால் சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்பட்டன. 1998ம் ஆண்டு முதலாவது கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநித்துவப்படுத்திய தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்றது. அதன் பின்;னர் இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது ஒரு பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களின் நலன்களோடு தொடர்புடைய ஒன்றாக மாறியது. ஒரு வகையில் அது முழு மலையக மக்களினது வாழ்வியலைத் தீர்மானிக்கும் அம்சம் என்றே கூறலாம். மறுபுறமாக கூட்டு ஒப்பந்தம் அரசியல் தொழிற்சங்க ரீதியில் மலையக்தில் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளதுடன்,  தேசிய ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் விடயமாகவும் மாறியுள்ளது. உண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது விடயத்தில் வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களும், பணி பகிஸ்கரிப்பும் இடம்பெற்றுவந்துள்ளன. அந்தவகையில் இன்று தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெறுகின்றன. இதனடிப்படையிலேயே கடைசியாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினை ஆராய வேண்டும்.
2013.03.31ம் திகதி 2011ம் ஆண்டு செய்த சம்பள கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2013.04.04.ம் திகதி சம்பளம் தொடர்பாக பெருந்தோட்ட தொழிற் சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையிலேயே சம்பளம் பற்றி பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் சம்பள உயர்வுக்காக போராடுவதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த வாய்பையும் வழங்க கூடாது என்ற எண்ணத்தில் இம்முறை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புதிய சம்பள கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்கள்  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் பல்வேறு விதமான கருத்து நிலைகளைத் தோற்றுவித்துள்ளது. அத்தகைய கருத்துக்களை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். உண்மையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தை நான் சம்பள கூட்டு ஒப்பந்தம் எனக் குறிப்பிடுவதற்கு காரணம், அது வெறுமனே சம்பளம் குறித்து மாத்திரம் பேசப்படுவதனாலாகும். கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் சம்பளம் என்பது ஒரு பகுதியேயாகும். அதற்கப்பால் தொழிலாளர் உரிமைகள், தொழில் நியமங்கள், தொழிலாளர் நலன்கள் எனப் பல விடயங்கள் அதனுள் அடங்கும். ஆயினும் பெருந்தோட்ட மக்களின் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தமானது வெறும் சம்பளத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு, அவர்களுக்குள்ள ஏனைய உரிமைகள், நலன்கள், தேவைகள், தொழிலாளர் உரிமைகள் குறித்து பேசாமையானது ஓர் உண்மையான கூட்டு ஒப்பந்தத்துக்கான அந்தஸ்த்தினை இழந்த ஒன்றாகவே நோக்க வேண்டும்.
உண்மையில் இம்முறையாவது கூட்டு ஒப்பந்தம் சம்பள கூட்டு ஒப்பந்தமாக அன்றி தொழிலாளர்களின் ஒட்டு மொத்த நலன்கள் மற்றும் உரிமைகள் குறித்து பேசும் ஒன்றாக அமைய வேண்டும் என பெரியளவில் எதிர்பார்த்தோம். ஆயினும் அவை நிறைவேறாமல் அந்தரங்கமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை தொழிலாளர் சமூகத்தையும்,  இம் மக்களின் நலன் தொடர்பாக செயற்படும் தரப்பினரிடத்திலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதில் தவறில்லை. வேறும் வகையில் கூறின் இம்முறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பான எதிர்பார்ப்புக்கள் குறித்து தொழிலாளர்கள் மத்தியிலும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறுபட்ட தொழிற் சங்கங்களிடமும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர் வாய்ப்பு  வழங்கப்படாமையானது மிக முக்கிய குறைபாடாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (டுதுநுறுரு) மற்றும் ஒருங்கிணைந்த பெருந்தோட்டக் கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் தன்னிச்சையாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது ஏனைய தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலனில் கொண்டுள்ள கடப்பாட்டினை மறுதலிப்பதுடன,; அத்தொழிற்சங்கங்களை சார்ந்துள்ள மக்களின் விருப்பு, வெறுப்புக்களையும் புறந்தள்ளுவதற்கு சமனாகும். எதிர்காலத்தில் இந் நிலை மாற்றமடைய வேண்டும். அதே வேளை தொழிலாளர் பலத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். காலத்தின் தேவைக்கு ஏற்ப சர்வதேச தொழிலாளர் நியமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டு ஒப்பந்தம் மறுசீரமைப்புக்கு உள்ளாக வேண்டும்.
புதிய கூட்டு ஒப்பந்தப்படி சம்பளம் கட்டமைப்பினைப் பார்க்கும் போது அது வேறுப்பட்ட கருத்துக்களைக் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் சார்ந்து செயற்படும் அமைப்புகளிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இன்று 620ஃஸ்ரீ சம்பளம் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கிறது என்பது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களின் வாதமாகும். அதன் உண்மையான விளக்கம் தெரியாதவர்கள் இந்த சம்பள அதிகரிப்பை பெரிய சாதனையாக பார்க்கின்றார்கள். அத்தகைய மனநிலையை கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் உருவாக்கியுள்ளன என்பது பொருத்தமாகும். இந்த 620ரூபா சம்பளம் மொத்த தொழிலாளர்களில் 10விகிதத்துக்கு குறைவானவர்களுக்கே கிடைக்கும் என்பதே இங்குள்ள முக்கிய விடயமாகும். பங்களா சேவை, சுகாதார ஊழியர்கள், தொழிற்சாலையில் வேலை செய்வோர் போன்ற சிறிய எண்ணிக்கையானோருக்கே கிடைக்கும். ஏனைய தொழிலாளர்கள் 450ஃஸ்ரீ அடிப்படை சம்பளத்தினையே பெறுவர். இது விடயத்தில் தொழிலாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும். புதிய சம்பள ஒப்பந்தப்படி 450ஃஸ்ரீ அடிப்படைச் சம்பளமும், வரவுக்கான கொடுப்பனவு 140ஃஸ்ரீ, நியமக் கொடுப்பனவு 30 ஆகவும் காணப்படுகின்றது. இங்கு அடிப்படைச் சம்பளம் 380 இருந்து 450ஃஸ்ரீ அதிகரிக்கப்பபட்டுள்ளது. அதன்படி பார்த்தால் அடிப்படைச் சம்பளத்தில் 80 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறமாக 105ஃஸ்ரீவாக இருந்த வரவுக் கொடுப்பனவு 140ஃஸ்ரீ அதிகரிக்கப்பட்டுள்ளது. நியமக் கொடுப்பனவில் மாற்றம் ஏற்படவில்லை. வரவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டமைக்கு முக்கியக் காரணம், அது அனைத்து தொழிலாளர்களாலும் பெற முடிவதில்லை என்பதாகும். வேலை வழங்குகின்ற நாட்களில் (ஞாயிறு தவிர்ந்த) 75மூ வருகை தந்திருந்தால் புதிய ஒப்பந்தப்படி வரவுக்கான கொடுப்பனவாக 140ஃஸ்ரீவை ஒரு நாளைக்கு பெற முடியும். உதாரணமாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டிருந்தால் 19 (76மூ) நாள் வேலைக்கு சமூகமளித்திருத்தல் வேண்டும். அதன்போது வரவு கொடுப்பனவுக்கு ஒரு தொழிலாளி உரித்துடையவராகின்றார். ஆயினும் இது எல்லா தொழிலாளர்கலுக்கும் சாத்தியமாவதில்லை.
புதிய சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 3 கிழமைகளுக்குப் பின்னர் பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர்களிடம் இந்த புதிய சம்பள அதிகரிப்பு தொடர்பாக பேசும் போது 90மூ மானவர்கள் இந்த சம்பள அதிகரிப்பு திருப்தியற்றது என்ற கருத்தினை வெளிப்படையாகக் குறிப்பிட்டனர். இதனைக் கொணடு 5 பேர் கொண்ட குடும்பத்தை நடாத்துவது மிகவும் கடினம். இன்றுள்ள விலைவாசி, பிள்ளைகளின் கல்வி செலவு, மருத்துவ செலவு, பயணங்கள், திருமணம் மற்றும் ஏனைய சடங்குகள் ஆகிய பல தேவைகளைப் பார்க்கும் போது இந்த சம்பள அதிகரிப்பு நியாயமற்றது என்றனர். இரண்டு பேர் தொழில் செய்யும், மாற்று வருமானங்களை கொண்ட குடும்பங்களுக்கு இச்சம்;பளம் சமாளிக்க கூடியதாக அமையும் என்றனர். நாளுக்கு நாள் மனித தேவைகள் அதிகரித்து வருகின்றன, அவற்றைப் பூர்த்தி செய்ய  இந்த சம்பளம் போதாது என்பது  பெரும்பாலானோரின் கருத்தாகக் காணப்பட்டது. உண்மையில் அடிப்படை சம்பளம் 500ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம் என்றனர்.  ஏனைய 10மூ மானோர் இந்த சம்பள அதிகரிப்பை ஓரளவு திருப்திகரமானதாகக் குறிப்பிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இரண்டு பேர் குடும்பத்தில் வேலை செய்பவர்களாகவும், சராசரியாக ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் குடும்பமாகவும்,  வீட்டுத் தோட்டம் செய்பவர்களாகவும் காணப்பட்டனர். இங்கு மாற்று வருமானத்தின் கிடைப்பனவு மற்றும் தங்கிவாழ்வோரின் எண்ணிக்கை மற்றும் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சம்பள அதிகரிப்பு தொடர்பான தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
மேலும் வரவு கொடுப்பனவு பற்றி அவர்களிடம் கேட்டப்போது, அது எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை என்பதில் உடன்பட்டார்கள். 75மூ வேலைக்கு சமூகமளிப்பது நடைமுறையில் கடினமான விடயமாக குறிப்பிட்டனர். அத்துடன், 75மூ வேலைக்கு செல்ல முடியாமைக்கு திருமணங்கள,; பாடசாலையில் நடக்கும் கூட்டங்கள், சடங்குகள், தவிர்க்க முடியாத பயணங்கள், அரச காரியாலயங்களுக்கு செல்லுதல், மருத்துவ தேவைகளுக்கு செல்லுதல், ஞாயிற்றுக் கிழமை வேலை செய்வதனால் ஏற்படும் உடல் நோவு போன்ற பல காரணங்களைக் குறிப்பிட்டனர். உண்மையில் இவை தவிர்க்க முடியாத குடும்ப அர்ப்பனிப்புகள். குடும்ப நலன், சமூக உறவு, ஆரோக்கியமான வாழ்க்கை என்பவற்றை உறுதிப்படுத்த மேற்கூறிய விடயங்களுக்கு தொழிலாளர்கள் தமது ஒரு நாள் வேலையை அர்ப்பனிக்க வேண்டிய நிலைக்காணப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள் தேவையற்ற விடயங்களுக்காக விடுமுறை எடுக்கின்றார்கள் எனக்கூறுவது நியாயமற்ற வாதமாகும். மேற்கூறிய காரணங்களால்  தொழிலாளர்களால் 75மூ வேலைக்கு சமூகமளிக்க முடிவதில்லை. இதன் மூலம் தோட்டங்ளுக்கே இலாபம் என்பதனை நாம் பிரிந்து கொள்ள வேண்டும். 100 பேர் தொழில் செய்யும் ஒரு தோட்டத்தில் 75பேருக்கு வரவுக் கொடுப்பனவு கிடைக்காவிடின், அதன் மூலம் தோட்ட முகாமைத்துவத்துக்கு பெருந்தொகை இலாபம் கிட்டும். சில தோட்டங்களில் கை காசுக்காக (ஊயளா Pடரஉமiபெ) ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை வழங்கப்படுகின்றது. பணத் தேவைக்காக பெரும்பாலான தொழிலாளர்கள் ஞாயிறு தினங்களில் வேலைக்கு செல்கின்றார்கள். அத்துடன் மிகவும் உடலை வருத்தி வேலை செய்கின்றார்கள். இதனால் கிழமை நாட்களில் வேலைக்கு செல்ல முடிவதில்லை. இது வரவு கொடுப்பனவை பெற முடியாமைக்கு பிரிதொரு காரணமாகவிருக்கின்றது. இம் முறை 30ஃஸ்ரீ வால் வரவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பயனற்றது. இந்த 30ஃஸ்ரீ அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிக்கப்பட்டிருக்குமாயின் தொழிலாளர்கள்  எதிர்பார்ப்பினை ஏதோ ஒரு வகையில் நிறைவு செய்வதாக அமைந்திருக்கும். உண்மையில் எல்லோரினதும் எதிர்பார்ப்பு அடிப்படைச் சம்பளம் 500ஃஸ்ரீ அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகக் காணப்பட்டது. இந்த முறை சம்பள அதிகரிப்பு மிகவும் அந்தரங்கமாகவும் தந்திரமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 பெருந்தோட்டக் கம்பனிகளில் 20 பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பின்றி இம் முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் அர்த்தம் யாதெனில் கம்பனிகள் இலாபத்தில் செல்கின்றன என்பதாகும். இன்னும் இலாபத்தை உழைக்க முடியும் என்பதாகும். பெருந்தோட்ட பயிர்களுக்கு பெரியளவில் கேள்வி உண்டு என்பதனை இது வெளிப்படுத்துகின்றது. பொதுவாக கம்பனிகள் தங்களின் உண்மை இலாபங்களை கணக்கறிக்கைகளில் காட்டுவதில்லை என்ற போதும் 2011ம் ஆண்டு 19 கம்பனிகள் 450 கோடியே 94 இலட்சத்துக்கும் அதிகமாக இலாபம் பெற்றுள்ளன. மறுபுறமாக 2012 ம் ஆண்டு 18 கம்பனிகள் 404 கோடியே 86 இலட்சத்துக்கும் அதிக இலாபத்தை பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கதாகும்.
வெளி அழுத்தங்களுடன் (கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற் சங்கங்கள், சிவில் அமைப்புகள்)சரியான முறையில் பேச்சுவார்த்தை இடம் பெற்றிருந்தால் 500 ரூபா அடிப்படைச் சம்பளத்தை எட்டியிருக்க முடியும். 500ஃஸ்ரீ வாக அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படாமை தொழிலாளர்கள் மத்தயில் காணப்படும் பெரும் அதிருப்தியாகவும் ஏமாற்றமாகவும் காணப்படுகிறது.  அரசாங்க புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் 2013 பெப்ரவரி மாதம் ஆகின்ற போது 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்று தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மாதாந்தம் ரூபா 47600 தேவை என குறிப்பிடுகின்றது. இதற்கு வாழ்க்கை செலவு அதிகரிப்பே காரணமாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் சம்பள அதிகரிப்பு கிடைக்காமையினால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  நிதமும் போராட வேண்டிய நிலைக்கு பெருந்தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  இந்த நிலைமை இம்முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திலும் கவனத்தில் எடுக்கப்படாமை பெரிதும் வருந்ததக்க விடயமாகும்.
உண்மையில் இம் முறை சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் வகையிலும், தொழிலாளர்களின் ஏனைய உரிமைகள் ஃ நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணும் வகையிலும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டு;ம் என்ற நோக்கில் பல்வேறு பிரதேசங்களில் சிவில் அமைப்புக்கள், மாணவர் சமூகம், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்க அமைப்புக்கள், நலன் விரும்பிகள் பல செயற்பாடுகளை மேற்கொள்ளத் தயாரானார்கள். இவை பெரிதும் தனித் தனி செயற்பாடுகளாக அமையாது, கூட்டு செயற்பாடுகளாக அமைந்தமை ஓர் முக்கிய அம்சமாக குறிப்பிட வேண்டும். இவை படிப்படியாக தீவிரத் தன்மையினை எட்டவிருந்தன. உண்மையில் இத்தகைய செயற்பாடுகள் தொழிலாளர் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும், இம் முறை சகலராலும் எற்றுக்கொள்ளக் கூடிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்ற நம்பிக்கையை பெரிதும் வளர்த்தது. மறுபுறமாக இது விடயத்தில் சிவில் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் நல்லதொரு தலையீட்டினை செலுத்த முன் வந்தன. ஆயினும் இதன் பயனை பார்ப்பதற்கு முன்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பெரும் ஏமாற்றத்தினையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியது.  அத்துடன் இதன் தாக்கத்தை முன் கூட்டியே உணர்ந்தோ என்னவோ, மிகவும் அந்தரங்கமாக, பெரியளவிலான ஊடக  செய்திகள் இன்றி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனப் பலரையும் எண்ணத் தோன்றியது. விசெடமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவை, அதற்கான நியாயம் என்ன, கம்பனிகளின் வருமானம், செலவு ஆகியன தொடர்பான புள்ளிவபரங்களுடன் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக நீதிக்கான மலையக ஒன்றியம் (மலையக புத்திஜீவிகளையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் கொண்ட தன்னார்வ அமைப்பு) சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட தருனத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம்  முடிவடைந்து குறைந்தது இரண்டு மாதங்கள் கழிந்த பின்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது வரையில் பேச்சுவார்த்தைகளும் ஆர்பாட்டங்களும், பேரம் பேசலும் இடம்பெற்றது. அத்தகைய எந்தவொரு செயற்பாடுகளும் இன்றி மிக வேகமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையானது பலரின் மத்தியிலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளதுடன,; இதன் பின்னணியில் வேறு ஏதும் காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளதா என எண்ணத் தூண்டியுள்ளது. இது குறித்த கருத்துக்களையும் பத்திரிகைகளில் காணமுடிந்தது. மேலும், ஏன் முதலாளிமார் சம்மேளனமும் குறித்த மூன்று தொழிற்சங்கங்களும் இது விடயத்தில் அவசரப்பட்டு செயற்பட்டன என்ற கேள்வியை எழுப்பியது.
எவ்வாறாயினும் இம் முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தமும் வழமையில் இருந்து எவ்வகையிலும் மாறவில்லை என்ற முடிவுக்கு வரலாம். மேலும் இது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பினை முழுமையாக திருப்தி செய்யவில்லை. மக்கள் கருத்துக்களுக்கு இடம் கொடுக்காத ஒரு ஒப்பந்தம், வேதன அதிகரிப்பு முறைகேடானது, அது தொழிலாளர் சமூகத்தின் வாழ்வியலை சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த போதுமானதல்ல. தொழிலாளர் மத்தியில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஓர் எழுச்சியை ஏற்படுத்த முன்னர் அதனை தடுக்கும் வகையில் செய்யப்பட்ட ஓர் ஒப்பந்தம் எனக் கூறலாம். அடிப்படைச் சம்பளம் 500ஃஸ்ரீ வாகவும் வரவுக் கொடுப்பனவு 105ஃஸ்ரீ வாகவும் நியமக் கொடுப்பனவு 30ஃஸ்ரீ வாகவும் காணப்பட்டிருந்தால் அது எற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும் என்பதில் எனது உடன்பாடு காணப்படுகின்றது.
எல்லாவற்றுக்கும் அப்பால், இந்த கூட்டு ஒப்பந்தம்  கிழித்தெறியப்பட வேண்டும், சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், இது முறைகேடான ஒப்பந்தம் என்ற கோசங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டங்களை நடாத்தி தமது எதிர்ப்பினைக் காட்டின. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. இராதாகிருஸ்ணனும் இதற்கெதிராக போராட்டத்தை தனித்து நின்று செய்தார். அவை எதுவும் பயனளிக்கவில்லை. இவை காலம் தாழ்த்திய செயற்பாடுகள் என்றே சொல்வேன். இவை மிக தீவிரமான வழிகளில் சரியான தந்திரோபாயத்துடன், ஒப்பந்தம் முடிவடைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரேயே மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாளர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள்  என்பன இது விடயத்தில் முன்கூட்டியே செயற்பட வேண்டும் என்பதனை இம் முறை கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தெளிவுப்படுத்தியுள்ளது என்பது பொருத்தமாகும். ‘வரு முன் காப்போம்’ என்ற உபாயத்தினை எதிர்காலத்தில் பின்பற்றுவதன் மூலமே தொழிலாளர்களுக்கு சார்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்பதனை இம்முறை கைச்சாத்திடப்பட்டள்ள கூட்டு ஒப்பந்தம் எமக்கு கற்பித்துள்ளது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates