Headlines News :
முகப்பு » » முதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்

முதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்


உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று இன்று 09.01.2019 பதவிப்பிரமானம் செய்துள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான நீதிபதி பீ.ரி. சூரசேன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

கடந்த 13.12.218 அன்று நீதிபதி ஈவா வனசுந்தர தனது நீதிமன்ற சேவையில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அதற்கடுத்த தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் ணீதியரசர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சிதம்பரப்பிள்ளை துரைராஜா இலங்கையின் நீதியரசராக பதவி பெரும் முதலாவது மலையகத் தமிழர்.



Share this post :

+ comments + 1 comments

3:15 PM

Congratulations anna selvi trichy

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates