Headlines News :
முகப்பு » » தொழிலாளர் எதிகாலத்தைப் பாதிக்கும் வெளியார் உற்பத்தி முறை - பெ.முத்துலிங்கம்

தொழிலாளர் எதிகாலத்தைப் பாதிக்கும் வெளியார் உற்பத்தி முறை - பெ.முத்துலிங்கம்


தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கும்படி-யான கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் முற்றாக நிராகரித்து வரும் வே-ளையில் தோட்டங்கள் முகம் கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு மாற்றுத்திட்டங்களை முறையே தோட்டத்துரைமார் சங்கத்தின் தலைவர் ரோசான் இராஜதுரையும் ஜனவசம கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேரா-சிரியர் கென்னடி குணவர்தனவும் முன்வைத்துள்ளனர். தோட்டத்துரைமார் சங்-கத்தின் தலைவரும் ஜனவசமவின் தலைவரும் தற்போதைய நெருக்கடியிலிருந்து தோட்டங்கள் மீள வேண்டுமாயின் வெளியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்-துதே ஒரே மாற்று வழி என தமது விதந்துரைப்புகளில் குறிப்பிட்டுள்ளதுடன், அதனை நியாயப்படுத்துவதற்கான பல காரணிகளை முன்வைத்துள்ளனர்.

இப்பின்புலத்துடன் ஜனவசம தலைவர் 'அரச ஊழியர்கள் தனியார் பங்க-ளிப்பு முறை' என்ற தலைப்பில் முன்வைத்துள்ள விதந்துரைப்புகளை நோக்குவோ-மாயின் (1) ஜனவசம தோட்டங்களில் 10% வி..பி. தேயிலைகள் காணப்படுகின்றன. இதனை ஜனவசமவின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும். (2) இத்தோட்டங்களில் பயிரிட முடியாத இரண்டாம் வகையான காணிகள் இருக்கின்றன. இவற்றில் ஆங்-காங்கே 100 வருட பழைமை வாய்ந்த தேயிலை மரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மீண்டும் தேயிலையை பயிரிடுவதற்கோ அல்லது வேறு பயிர்களை பயிரிடுவதற்கோ தனியார் முதலீட்டாளருக்கு குத்தகை அடிப்படையில் வழங்-கலாம் (3)மூன்றாவது பகுதியாகக் காணப்படுவது பயிரிடப்படாத இடங்களாகும். இவற்றினை ஏதோ ஒரு பயிரைப் பயிரிடுவதற்கோ அல்லது பல்வேறு திட்டங்-களை மேற்கொள்வதற்கோ நீண்ட கால குத்தகைக்கோ தனியாருக்கு வழங்கலாம். (4) இன்னுமொரு பகுதி பயிரிடப்படாத இடங்களாகக் காணப்படுகின்றன இவ்விடங்-களை மிகவும் சிறு பகுதிகளாகப் பிரித்து தோட்டங்களில் 20 வருடத்திற்கும் மேலாக வாழும் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறு தொகை குத்தகைக்கு காய்கறி அல்லது மாட்டுப் பண்ணை வைத்துக்கொள்ள வழங்கலாம்.

(5) தேவைப்படின் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கேற்ப முழுத்தோட்டத்-தையும் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கலாம். (6) ஜனவசமத்திற்கு சொந்தமான சிறு தோட்டங்களையும் குத்தகைக்கு வழங்கலாம் (7) ஜனவசமத்திற்கு சொந்தமான காணிகள் சிலாபம் மற்றும் குருணாகல் கம்பனிகளுக்கு வழங்கப்பட்-டுள்ளன. இவற்றிலிருந்து ஜனவசமவிற்கு வருமானம் கிடைப்பதில்லை அதனால் இவற்றினைப் மீளப்பெற்று லாபம் பெறமுடியும். (8) தேயிலைத் தொழிற்சாலைக-ளையும் பங்களாக்களையும் வாடகைக்கு விடலாம் (9) இத்திட்டங்களை முன்னெ-டுக்கையில் தொழிலாளர்கள் விரும்பின் சுயவிருப்பு அடிப்படையில் நட்ட ஈட்டை வழங்கி வேலையிலிருந்து நீக்கலாம். இவையே ஜனவசம தோட்டங்கள் தொடர்-பாக முன்வைக்கப்பட்டுள்ள மாற்றுத் திட்டங்களாகும்.

கம்பனி தோட்டங்கள் சார்பாக தோட்டத்துரைமார் சங்கத்தலைவர் ரோசான் இராஜதுரை ''உற்பத்தி அடிப்படையிலான வருமான பங்கீடு முறை" என்ற தலைப்பின் கீழ் பின்வரும் விதந்துரைப்புகளை முன்வைத்துள்ளார்.

(1) தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் குறைந்தது 10 நாட்கள் மட்-டுமே தற்போதைய சம்பள அடிப்படையில் வேலை வழங்கப்படல் வேண்டும் (2) ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்திற்கும் கலந்த அடிப்படையில் அனைத்து தேயி-லைப்பகுதிகளும் (வி.பி. மற்றும் பழைய மரங்கள்) உள்ளடங்கும் வகையில் கிழ-மையில் மூன்று நாட்கள் வேலை செய்யும் வகையில் தேயிலை மரங்கள் பிரித்து அளிக்கப்படும். (3) தேயிலை மரங்கள் பிரித்துக் கொடுக்கும்போது அதனை பெறும் தொழிலாளிக்கும் தோட்ட முகாமைத்துவத்திற்கும் இடையில் 1 வருட குத்தகை ஒப்பந்தம் கைசாத்திடப்படும். இவ்வொப்பந்தம் ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்கப்-படும் (4) தோட்டத் தொழிலாளர்கள் இந்நிலத்திற்கான உரிமையை கோரமுடியாது. அக்காணி அரசாங்கத்திற்கும் தோட்டத்திற்கும் சொந்தமானதாகவே இருக்கும். (5) தோட்டத் தொழிலாளர் ஒப்பந்தம் செய்துக்கொண்டதன்படி தேயிலைக் காணியை பராமரிக்காவிடின் 7 நாள் அறிவித்தலுடன் காணியை அரசாங்கம் அல்லது தோட்டம் மீளப்பெற்றுக்கொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கும்.

(6) தேயிலைக்கான உரம், மருந்து உள்ளிட்ட ஏனைய பொருட்களை தோட்ட முகாமைத்துவம் வழங்குவதுடன் அதற்கான செலவை தேயிலைக்காணியை பரா-மரிக்கும் உற்பத்தியாளரிடமிருந்து மாத இறுதியில் அறவிட்டுக்கொள்ளும். (7) தோட்ட முகாமைத்துவம் கண்காணிப்பு வேலைகளை செய்யும். (8) பறித்துக் கொடுக்கப்படும் பச்சை கொழுந்து கிலோ ஒன்றிற்கு தேயிலை சந்தை விற்பனை விலை அடிப்படையில் அடிப்படையாக 35% வழங்கப்படும். (9) கொழுந்தினை குறிப்-பிட்ட தோட்டத்திற்கே வழங்கவேண்டும் (10) தொழிற் சங்கங்களுக்கு சந்தாப் பணம் அறவிடப்பட்டு அனுப்பப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் நட்டமடைந்துள்ள தேயிலைத் தொழிற்துறையை லாபகரமானதாக மாற்றலாம் என விதந்துரைத்-துள்ளார்..

இன்று பாரிய தேயிலைத் தோட்டங்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிக்கு மாற்று மூல உபாயமாக வெளியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்த முனை-வதை வரவேற்கத்தக்கதாக கருதினாலும் அம்மாற்று மூலஉபாயம் தோட்டத் தொழிலாளர்களை மறுபடியும் அதளபாதாளத்தில் தள்ளாதிருக்கும் வகையில் மேற்கொள்வது அவசியமாகும். மறுபுறம் இம்மாற்று மூல உபாயத்தைக் கடைபி-டிப்பதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய தனியார் உற்பத்தியா-ளர்கள்போல் தேயிலை நிலத்திற்கு சொந்தக் காரர்களாக அல்லது நீண்ட கால குத்-தகையாளர்களாக பரிணமிக்கும் வகையிலான தனியார் உற்பத்தி முறையாக இது அமைய வேண்டும். ஆனால் விதந்துரைக்கப்பட்ட தனியார் முறைமை தோட்டத்-தொழிலாளர்கள் நிலையற்ற ஊசலாடும் தனியார் உற்பத்தியாளர்களாக மாறும் தன்மையே காணப்படுகின்றது.

முதலாவது ஜனவசம தலைவர் அறிமுகப்படுத்தியுள்ள முறையை கவனத்-திற்கொள்வோமாயின் தனியாருக்கு தோட்டங்களில் மாற்று தொழிற்துறையை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுமாயின் அங்கு தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்பு இல்லாது போய்விடுவதுடன் மிகச் சிறு பிரிவினருக்கே வேலை-வாய்ப்பு கிடைக்கும். மறுபுறம் தனியார் மேற்கொள்ளும் தொழிற் திட்டங்களின் அடிப்படையில் வெளியாருக்கான வேலை வாய்ப்பு உருவாகலாம். இதனால் ஏற்-படும் தொழிலாளர் எதிர்ப்பினை சமாளிப்பதற்கு தோட்டத்தொழிலாளர்களுக்கு நட்ட ஈட்டுடன் சேவை நீக்கத்தினை விதந்துரைத்துள்ளார். ஆனால் அந்த நட்ட-ஈட்டுத் தொகை எதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதை விதந்து-ரைக்கவில்லை. இச்செயற்பாடானது தோட்டத்தொழிலாளர்களை தொழில் உத்தர-வாதமற்ற மற்றும் சமூகப் பாதுகாப்பற்ற பிரிவினராக மாற்றிவிடும். மறுபுறம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான குத்-தகை அடிப்படையிலான சிறு காணித்துண்டு 20 வருடம் வேலைசெய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமாயின் தோட்டத்தில் வாழும் பெரும்பாலான குடும்பங்-களைப் பாதிக்கும். இன்றைய சூழலில் ஜனவசம தோட்டங்களில் மிகவும் குறைந்த தொழிலாளர்களே தோட்டங்களில் வேலைசெய்து வருகின்றனர்.

ஜனவசம தோட்டங்களில் வாழ்வோரில் 40 % மானோர் வெளியிடங்களில் வேலை செய்தே தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். இந்நிலையில் மேற்கூறப்பட்ட திட்டத்தைப் பின்பற்றினால் தோட்டத்தில் வாழும் பெரும் பான்-மையோருக்கு சிறு துண்டு காணிகளைப் பெறமுடியாது போய்விடும். இதன்படி பார்க்கின்றபோது தற்போது இருக்கும் நிலையைவிட மிக மோசமான வாழ்க்கை நிலையையே இத்தோட்டங்களில் வாழும் மக்கள் சந்திப்பர்.

அதேவேளை அறிமுகப்படுத்தப்படும் தொழிற் திட்டங்களுக்கமைய வெளித்-தொழிலாளர்கள் வருகைத்தரின் அத்துடன் அவர்களுக்கான வாழ்விடங்கள் வழங்-கப்படின் இனப்பரம்பல் அடர்த்தியில் மாறுதல் ஏற்படலாம். இது எதிர்காலத்தில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். தோட்டத்-தொழிலாளர்களுக்கு சிறு துண்டு காணிவழங்கப்படுமாயின் தோட்டத்தில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் இதேவேளை பயிரிடப்பட முடி-யாத காணிகளை தனியாருக்கு வழங்குவதாயின் அம்முதலீட்டாளர்களது தொழிற்-துறையில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும.;

தோட்டத்துறையில் கூட்டுறவு பாற்பண்னைகைளையும் விவசாயப் பண்-னைகளையும் உருவாக்கலாம். அல்லது இத்துறையில் முதலீடு செய்யும் தனியார்-களுக்கு வழங்கலாம். அல்லது தற்போது கொழும்பில் இயங்கும் தேயிலைக்கு பெறுமதி சேர்க்கும் கம்பனிகளை ( எயடரந யனனநன வநய நஒpழசவ உழஅpயn-நைள) குறிப்பி;ட்ட தோட்டங்களில் உருவாக்க ஊக்குவிக்கலாம். அல்லது தோட்ட தொழிற்சாலைகளை கூட்டுறவு தொழிற்சாலைகளாக மாற்றி தோட்டத் தொழிலா-ளர்களையும் வெளியார் உற்பத்தியாளர்களாக மாற்றி அவர்களை கூட்டுறவு தொழிற்சாலைக்கு கொழுந்தை அளிக்கும் பங்காளர்களாக மாற்றலாம். இதற்கு தற்-போது தெனியாயவில் இயங்கும் கொட்டபொல உட்பட ஏனைய கூட்டறவு தேயிலை தொழிற்சாலைகள் நல் உதாரணமாகும். ஆனால் பேராசிரியர் கென்னடி குணவர்தனவின் விதந்துரைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த மக்களை மையப்படுத்தியதாக அல்லாது வெறுமனே உடனடி லாபத்தை பெறுவதை மைய-மாக வைத்தே முன்வைக்கப்பட்;டுள்ளது. தோட்டத்துறைக்கான மாற்று மூலஉபாய-மானது தோட்ட மக்களை மையப்படுத்தியதாகவே அமைய வேண்டும்.

இவற்றுடன் பாரிய கம்பனிகளை லாபகரமானதாக மாற்றும் முயற்சிக்கான ரோசன் இராஜதுரையின் விதந்துரைப்புகளை நோக்குவோமாயின், இராஜதுரை தொழிலாளர் அதிகளவு உற்பத்தியை பெற்றுக் கொடுக்காததன் காரணமாகவும், தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் சம்பள உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் காரணமாகவே தோட்டக்கம்பனிகள் நட்டமடைவதாக கூறியுள்ளாh.; இந்த இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டே தமது விதந்துரைப்புகளை முன்வைத்-துள்ளார். இதனை நியாயப்படுத்துவதற்காக ஏனைய பிறநாடுகளான இந்தியா மற்றும் கென்யாவை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார். 1992 இல் தோட்-டக்கம்பனிகள் தேயிலைத் தோட்டங்களைப் பொறுப்பேற்றதுடன் 1995 ஆண்டு வரை நட்டத்தில் இயங்கியதாகவும் 1996 முதல் 2002 வரையிலான பகுதியில் லாபம் அடைந்ததாகவும், 2003 ஆண்டு முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் நான்கு வருடங்களைத் தவிர (2004.2007:,2010,2011) ஏனைய வருடங்களில் பாரிய நட்டத்தை அடைந்ததாகவும் மேலும் 2014 ஆம் ஆண்டு மட்டும் தோட்டக்கம்ப-னிகள் 5 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாகக் தமது விதந்துரைப்பு கட்டு-ரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் 70.4 மூ ஊழியர்கள் ஒரு கிழமையில் 40 மணித்தியாளங்கள் வேலை செய்கையில் தோட்டத்தொழிலாளர்களில்; அரைவாசியாக இருக்கும் 50மூ ஆண் தொழிலாளர்கள் கிழமையில் 20-25 மணித்தியாளங்கள் மட்டுமே வேலை செய்கின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஏனைய நாடுகளுடன் ஓப்பிடு-கையில் நமது நாட்டின் கொழுந்து பறிப்போரின் தாக்கமுள்ள கொழுந்து பறிக்கும்; ( நுகநஉவiஎந Pடரஉமiபெ வுiஅந) நேரம் 40மூ மாகவும் ஏனைய நாடுகளில் 80மூ இ இருப்பதாகக் குறிப்பிட்டு இதனால் எமது கொழுந்து பறிப்போர் ஒரு நாளைக்கு 15-18 கிலோ (வி.பி. தேயிலை மலை) உட்பட பறிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதே-வேளை தென்னிந்தியாவில் கொழுந்து பறிக்கும் ஒருவர் ஒரு நாளைக்கு 50 கிலோவும் வட இந்தியாவில் 26 கிலோவும் பறிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்-துடன் கென்யா, மாலாவி, ருவன்டா, தன்சானியா போன்ற நாடுகளின் கொழுந்து பறிப்போர் 60-80 கிலோ பறிப்பதாகக் கூறியுள்ளார்.

இவற்றுடன் சம்பள விபரத்தைக் குறிப்பிடுகையில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ரூபா 688 வையும், தென்னிந்திய தொழிலாளர்கள் முறையே ரூபா 488 வையும் கென்யா ரூபா 443 ஐ பெறுவதாகக் குறிப்பிட்டுள்ள-துடன் உலக தேயிலை விலை எவ்வித மாற்றமுமின்றி 3 அமெரிக்க டாலராகவே இருக்கின்றது எனக்குறிப்பிட்டுள்ளார். இக்காரணிகளே தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதற்கு காரணம் என்கிறார். இதனால் ஏனைய நாடுகளைப்போல் உற்பத்தி-யுடன் தொடர்புடைய சம்பள முறையை அறிமுகப்படுத்தினால் தோட்டங்கள் நட்ட-மடைவதிலிருந்து காப்பாற்றலாம் என அவரது விதந்துரைப்பில் முன்வைத்-துள்ளார்.

இராஜதுரையின் தோட்டங்கள் நட்டமடைவதற்கு தோட்டத் தொழிலாளர் அதிகளவு கொழுந்தினை பறித்துத்தராமை, உற்பத்திக்கு சரிநிகரற்ற தொழிலாளர்-களின் சம்பள உயர்வு என்ற இருவிடயங்களை ஆராய்வோமாயின் 1992 முதல் இதுவரையான காலத்தில் அவரது கூற்றுப்படி ஆறு வருடங்கள் மட்டுமே தோட்-டங்கள் லாபம் அடைந்துள்ளன. இவ்வாறு பெறப்பட்ட லாபம் எவ்வளவு என்று குறிப்பிடவில்லை. கம்பனியொன்று தொடர் நட்டமடைந்தால் அக்கம்பனி நாள-டைவில் மூடப்பட்டுவிடும். ஆனால் அவ்வாறு நடைப்பெற்றதாகத் தரியவில்லை. மறுபுறம் இவ்வாறு பெறப்பட்ட லாபத்தில் எத்தனை விகிதம் மீள் நடுகைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது? எத்தனை விகிதம் தொழிலாளர்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்டுள்ளது? என்பதைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை. தோட்டங்களை கம்-பனிகள் கையேற்கும்போது 389,549 தொழிலாளர்கள் வேலை செய்தனர். தோட்டம் கையேற்கப்பட்ட ஒரு வருடத்தில் ஒருலட்சம் தொழிலாளர்கள் சுய பணிநீக்கத்-திற்கு ஊக்கமளித்து நீக்கப்பட்டனர். இன்று நிரந்தரத் தொழிலாளர்களாக 163.068 வேலைசெய்கின்றனர். தோட்டங்கள் கையேற்கப்பட்டவுடன் தேயிலை ஏற்றமதி வரி நீக்கப்பட்டது. தோட்டங்களின் மரங்கள் வெட்டி காசாக்க அனுமதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதாரம் தவிர பிரதான வைத்திய தேவைகள் அரசாங்கத்தினாலேயே வழங்கப்படுகின்றது. கல்வி வசதிகள் அரசாங்கத்தினாலேயே வழங்கப்படுகின்றது. வீட்டுத்திட்டங்கள், திருத்தங்கள், பாதை செப்பனிடல் என்பன அரசாங்கத்தினா-லேயே வழங்கப்படுகின்றன. ஆனால் இவையனைத்தும் முன்னர் தோட்டக் கம்ப-னிகளினாலேயே வழங்கப்பட்டன. சிறுவர் பராமரிப்பு தவிர பெரும்பாலான சமூக சேவைகளை அரசாங்கமே வழங்குகின்றது. இவ்வரப்பிரசாதங்களை கம்பனிகள் பெருவதை இராஜதுரை குறிப்பிடவில்லை. இதனால் தோட்டக் கம்பனிகள் பெறும் லாபத்தைக் குறிப்பிடவில்லை.

தொழிலாளர்களின் வேலை நேரத்தையும் கொழுந்து பறிக்கும் நிறையை ஏனைய நாடுகளுடன் ஒப்பீடும் இவர், அந்நாடுகளில் வழங்கும் ஊக்குவிப்பபை; குறிப்பிடவி;ல்லை. இந்தியாவிலும் தோட்டங்களில் ஆண் தொழிலாளர்கள் தமக்கு அளிக்கும் வேலைகளை முடித்தவுடன் வீடு திரும்பிவிடுகின்றனர். சில வேலை-களில் மேலதிக காசுக்காக கொழுந்து பறிக்கின்றனர். கென்யாவிலும் இவ்வாறான முறையே காணப்படுகின்றது. பெண்கள் ஒரு நாளைக்கு பறிக்கும் கொழுந்தினை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் இவா,; ஒரு உண்மையை மறைத்துள்ளார். தென் இந்தியாவில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் கத்தரிக்கொண்டே கொழுந்-தினை பறிக்கின்றனர். மேலும் இவர்கள் நாளொன்று பறிக்கும் கொழுந்தின் அள-விற்கேற்ப மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. தென்னிந்திய தொழிலாளர்-களது அடிப்படை நாள் சம்பளம் ரூபா 238 வாகும். அவர் குறிப்பிட்டுள்ளது போல் 488 ரூபாவல்ல. கொழுந்து இருக்கும் போது ஒரு நாள் சம்பளத்திற்காக 20 25 கிலோ பறிக்க வேண்டும் கொழுந்து இல்லாதபோது 5 - 10 கிலோ பறித்தாலும் 238 ரூபா சம்பளம் வழங்கப்படும். அதேவேளை கொழுந்து இருக்கும் போது ஒரு நாளைக்கு 26 30 கிலோ பறித்தால் ஒரு கிலோவிற்கு மேலதிகமாக 50 சதம் வழங்கப்டும். 30-40 இடையி;ல் ஒரு கிலோவிற்கு 1 ரூபா வழங்கப்படும். 40- 50 இடையில் ஒரு கிலோவிற்கு 3ரூபா வழங்கப்படும். இம்மேலதிக கொடுப்பனவிற்கு ஊ.சே.நி. வழங்கப்படுகின்றது. மேலும் இங்கு பெரும்பாலும் சி.டி.சி தேயிலையே உற்பத்தி செய்யப்படுவதுடன் தொழிலாளர்கள் கத்தரி கொண்டே கொழுந்து பறிக்-கின்றனர். இதனாலேயே அத்தொழிலாளர்கள் 40- 50 கிலோ பறிக்கின்றார்கள். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வி.பி. மீள்நடுகையை மேற்கொண்டமை-யினால் அங்கு கொழுந்து அதிகமாகக் காணப்படுகின்றது. இக்காரணிகளினாலேயே அங்கு கொழுந்து பறிப்போரின் தாக்கமுள்ள கொழுந்து பறிக்கும்; ( நுகநஉவiஎந Pடரஉமiபெ வுiஅந) நேரம் 80மூ மாக இருக்கின்றதுடன் நமது நாட்டில் 40மூ இருக்-கின்றது. அதேவேளை கவ்வாத்து வெட்டும் போது பழைய மரமாகின் மேலதிக கொடு;ப்பனவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. பெண்களுக்கு பிரசவ சகாயப் பணம் 94 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. நமது நாட்டில் 84 நாட்களுக்கே வழங்கப்படுகின்றது. இந்தியாவில் இனமாக கம்பளி வழங்கப்படுகின்றது.(ஆகக் குறைந்த கம்பளியின் விலை 300 ரூபாவாகும்) மலையில் வேலைசெய்யும் போது காலையில் பால் தேநீர் கட்டாயமாக வழங்கப்படுகின்றது. சில தோட்டங்களில் மாலையிலும் வழங்கப்படுகின்றது. மாதாமொன்றிற்கு 20 கிலோ அரிசி இனாமாக வழங்கப்படுகின்றது. (தொழிலாளர் உண்ணும் அரிசியின் ஒரு கிலோ விலை 17 ரூபாவாகும்.). 5ஆம் வகுப்பு வரையிலான பாடசாலையை தோட்ட நிர்வாகம் 5 ஆசிரியர்களைக் கொண்டு நடாத்துகின்றது. ஆரம்ப மருத்துவ வசிதி அளிக்கப்படு-கின்றது. இவ்வசதியினை வேலை செய்பவர் மட்டுமல்லாம் குடும்பத்திலுள்ள வயோதிபர் மற்றும் 18 வயதிற்கு குறைந்தோருக்கும் வழங்குகின்றது. இது மட்டு-மில்லாமல் அவர்கள் ஒய்வுபெறும்; போது ஊழியர் சேமலாபநிதியுடன் மாதா மாதம் பென்சனும் வழங்கப்படுகின்றது. இதற்காக வருடத்தில் ஒரு முறை ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 8.33 மூ அறவிடுப்படுகின்றது. இத்தனை சலுகை-களுடன் ஒப்பீட்டால் இலங்கை தொழிலாளருக்காக இலங்கை கம்பனிகள் வழங்கும் கொடுப்பனவுகள் சலுகைகளும் குறைவு என்றே கூறவேண்டும். இவ்வ-கையில் இலங்கை நாட்டை விட ஏனைய நாடுகளின் தோட்டத் தொழிலாளர்க-ளுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை அதிகமாக வழங்கப்படுகின்றது. எனவே இந்த தர்க்கத்தை வைத்துக்-கொண்டு இலங்கைத் தொழிலாளர்களின் கொழுந்து பறித்தல் அளவினை ஒப்பிட்டு பார்த்தல் பிழையாகும்.

இதேவேளை இலங்கையில் 4,25,000 வெளியார் உற்பத்தியாளர் இருப்பதா-கவும் அவர்கள் இரண்டு தசாப்தங்களில் தங்களது கொழுந்து உற்பத்தியை இரண்-டரை மடங்கு அதிகரித்தாகக் கூறியுள்ளார். அத்துடன் அவர்கள் ஒரு கிலோவிற்கு 60-65 ரூபாவை பெற்றுக்கொள்வதுடன் ஏனைய கொடுப்பனவுகளான ஊ.சே.நி. ஊ.ந.நி.(நு.P.கு.இ நு.வு.கு.) சேவைக்காலப்பணம் உள்ளிட்ட ஏனைய சேவைகள் வழங்கப்படாத போதிலும் அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்ததாக இருக்கின்றது எனக்குறிப்பிட்;டுள்ளார். இருபது வருடங்களுக்குள் வெளியார் உற்பத்தி இரண்டரை மடங்காக அதிகரிப்பதற்கு காரணம் அவர்கள் புதிய நிலத்தில் வி.பி. கன்றுகளை நாட்டியுள்ளதுடன் அரசாங்கம் அவர்களுக்கு மானிய முறையில் உரத்தையும் தேயிலைக் கன்றுகளையும் வழங்கியுள்ளது. மேலும் புதிய நிலமாக இருப்பதனால் மேல்மண் (வழி ளழடை) கழுவிச்செல்லாமையினாலும் விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டங்களில் 150 வருடங்கள் பயிரி;ட்டு மேல் மண் கரைந்து சென்றுள்ளது. புதிய வி.பி. தேயிலைகள் கம்பனி தோட்டங்களில் பாரிய அளவில் இல்லை என்பது ஒருபுறமிருக்க மறுபுறம் பெரும்பாலான தோட்-டங்களில் போதியளவு பசளையிடுவதில்லை இதுவே விளைச்சல் இன்மைக்கான பிரதானக்காரணம். மேலும் வெளி உற்பத்தியாளர்கள் வெறுமனே தேயிலைக் கொழுந்தினை 60-65 ரூபாவிற்கு விற்பதனால் மட்டும் அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடவில்லை.வெளி உற்பத்தியாளர்கள் குடும்பம் ஒவ்வொன்றும் காய்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருமானத்;தைப் பெறுகின்றன. குடும்பத்தில் குறைந்-தது ஒருவராவது அரச தொழிலிலோ தனியார் தொழிலிலோ ஈடுபட்டுவருகின்-றனர். இவையே அவர்களது பிரதான வருமான மார்கமாக இருக்கின்றதுடன் மற்றும் சமுர்தி உள்ளிட்;ட அரசாங்கம் வழங்கும் பல சமூக சேவைகளையும் பெறுகின்றனர். இதனால் அவர்கள் சிறப்பான வாழ்க்கைத்தரத்தை கொண்டிருக்கின-றனர். ஆனால் தோட்டத் தொழிலாளர் முழுமையக தங்களது குறைந்த சம்பளத்தி-லேயே தங்கியிருக்கின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கைத்தரம் குறைவாகவே உள்ளது. இவ்வுண்மையை திரு. இராஜதுரை சுட்டிக்காட்டவில்லை.

மேலும் தொழிலாளர்களின் கொழுந்து பறித்தலை மட்டும் சுட்டிக்காட்டி-யுள்ள இராஜதுரை தோட்ட முகாமைத்துவ செலவு மற்றும் கொழும்பு பணிமனை செலவு எவ்வளவு என்பதை மறைத்துள்ளார். தோட்ட முகாமையானருக்கு வழங்கும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் கொழும்பு பணிமனை முகாமையாள-ருக்கு வழங்கும் ஊக்குவிப்புகளை சுட்டிக்காட்டாது மறைத்துள்ளார்.

இராஜதுரையின் ஆங்கிலக் கட்டுரையை வாசிக்கும் ஒருவர் தொழிலாளர்-களே தோட்டக்கம்பனிகள் நட்டமடையக் காரணம் எனும் முடிவுக்கு வருவர். இது ஒரு தப்பான எடுத்துக்காட்டலாகும.; இன்றைய நிலையில் மாற்றுத் திட்டமொன்-றினை அடையாளம் காணுதல் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி-யாது ஆனால் அதனை நியாயப்படுத்துவதற்காக தோட்டத் தொழிலாளர் மீது பலியைப் போட்டு தோட்ட முகாமைத்துவம் தப்பிக்கலாது.

வெளியார் உற்பத்தியே மாற்றுத்திட்டமாக கருதினால் அத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களும் சமனான அல்லது ஏற்றுக்கொள்ளும் வகையிலான பயனைப் பெறவேண்டும் வெறுமனே கம்பனிகள் மட்டும் உச்ச பயனை (லாபத்தை) அடைவதாக இருக்கக் கூடாது. இவ்வகையில் இராஜதுரை கூறியுள்ள விதந்துரைப்-புகளை நோக்கும் போது அது பெருமளவு முதலாளிமார் சாhந்ததாக இருப்பதை அடையாளம் காண முடிகின்றது. அவரது கருத்துப்படி தொழிலாளர்களுக்கு தோட்-டத்தில் பத்து நாட்களே வேலை வழங்க வேண்டும் அதற்கே ஊ.சே.நி. உள்ளிட்ட ஏனைய கொழுப்பனவுகள் வழங்குவர். இதன்படி இன்றைய சம்பளத்தின் படி பார்த்தால் மாதம் 6200 ரூபாவாகவே அமையும். இன்று நாட்டின் தேசிய குறைந்த-பட்ச மாத அடிப்படை சம்பளம் 10,000 ரூபாவாகும். இன்று தோட்டத் தொழிலாளர் குறைந்த பட்ச மாதந்த சம்பளமாகப் 25 நாட்கள் வேலை செய்தால் பெறுவது 620 ஒ 25 ஸ்ரீ15இ500இ இதன்படி பார்க்கின்றபோது தற்போதைய சம்பளத்தில் சுமார் 1ஃ3 பகுதியாக மாற்ற முனைகின்றார். விலைவாசியைக் கருத்திற் கொண்டு இன்றைய நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக கேட்கும் வேளையில் இருக்கும் சம்பளத்தை மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கும படி கூறியுள்ளார். எனவே இதனை குறைக்க இடமளிக்காலாது. மாறாக 20 நாட்களுக்கு வேலை தரும் கோரலாம். அப்படி-யாயின் தொழிலாளர்கள் குறைந்தது 20ஒ620 ஸ்ரீ 12இ400 ரூபா சம்பளமாக பெறலாம். மிகுதி 5 நாட்களோ 10 நாட்களோ குத்தகைக்கு வழங்கிய காணியில் வேலைசெய்யலாம். நாட்டின் தேசிய அடிப்படை சம்பளத்தை விட குறைந்த சம்பளம் வழங்கவது நியாயமற்றதும் நீதியற்றதுமாகும்

மேலும் தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளித்து ஒரு கிலோ கொழுந்திற்கு 35 மூ சந்தை விலையின் அடிப்படையில் கொடு;க்கலாம் என விதந்துரைத்துள்ளார். இவ்விடயத்திலும் தந்திரோபாயத்தினை கையாண்டுள்ளார். தற்போது வெளியார் உற்பத்தியாளருக்கு சந்தைவிலையில் 68மூ வழங்கப்படுகின்றது. அதாவாது இலங்கை தேயிலைச் சந்தையில் குறிப்பிட்ட தோட்ட தொழிற்சாலையின் தேயிலை ஒரு கிலோவிற்கு 100 ரூபா நிர்ணயிக்கப்பட்டால் வெளிஉற்பத்தியாளருக்கு 68 ரூபா வழங்க வேண்டும மிகுதி 32 ரூபாவையே குறிப்பிட்ட தொழிற்சாலை உரிமையாளர் எடுத்துக்கொள்ள வேண்டும். இவரோ 35மூ கொடுப்பனவை விதந்துரைத்துள்ளார்.. தற்போது வெளி; உற்பத்தியாளருக்கு வழங்குவதில் அரைவாசி தொகையையே சிபாரிசு செய்துள்ளார். மறுபுறம் அவரது அடுத்த விதந்துரைப்பின்படி தேயிலைக்கான உரம், மருந்து, என்பவற்றுடன் கொழுந்து பறித்தலுக்கும் குறிப்பிட்ட தொழிலாளி தனது முதலீட்டையே பயன்படுத்த வேண்டும். தோட்ட முகாமைத்துவம் அதற்கான கடனை அளித்து அதனை மாத இறுதியில் கொழுந்திற்கு வழங்கும் பணத்தில் கழித்துக் கொள்ளும். உற்பத்திக்கான முழு முதலீட்டையும் மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு 68மூ கொடுப்பனவையே வழங்கவேண்டும். அதேவேளை கொழுந்து விலையேற்றத்திற்கேற்ப பேரம் பேசும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இவற்றுடன் தோட்டங்களைப் பகிர்ந்தளிக்கும் விதந்துரைப்பினை நோக்குவோமாயின் தேயிலை மரங்கள் ஒரு வருட குத்தகைக்கே வழங்கப்படும். அதேவேளை தோட்ட முகாமைத்துவம் விரும்பினால் ஏழு நாள் அறிவித்தலுடன் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். இது தொழிலாளர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முறையாவதுடன் தொழிலாளர் முழுமையாக ஈடுபட ஒருபோதும் ஊக்குவிக்காது. வெளியார் உற்பத்தியை அறிமுகப்படுத்த விரும்பினால் அத்தொழிலாளர்களுக்கு நம்பிக்கைய10ட்டும் வகையில் அவர்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் தேயிலைக்காணிகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் ஆகக்குறைந்து 3-5 வருடத்திற்காவது வழங்கவேண்டும். மேலும் தேயிலை மரங்களை வழங்குவதாயின் புதிய மற்றும் பழைய மலைகளை இணைத்தே வழங்க வேண்டும். வெறுமனே இரண்டு ஏக்கர் தேயிலைக்காணிகளை என வழங்கலாகாது.

இத்திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் தொழிற்சங்கங்கள் இவற்றினைக் கருத்திற் கொண்டு பேரம் பேசலை மேற்கொள்ளவேண்டும். நாங்கள் பயிரி;ட்ட காணிகளையே தொழிலாளர்களுக்கு வழங்குகின்றோம் என்று கம்பனிகள் கூறலாம் ஆனால் அக்காணிகளில் தொழிலாளரின் உழைப்பு மூலதனமும் உண்டு என்பதை முன்வைத்து தொழிற்சங்கங்கள் தமது பேரம் பேசுதலை முன்னெடுக்க வேண்டும்.

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates