Headlines News :
முகப்பு » , » நட்டமென கூறும் பெருந்தோட்ட கம்பனிகள் வெளியேறுமா? - அருட்தந்தை. மா சத்திவேல்

நட்டமென கூறும் பெருந்தோட்ட கம்பனிகள் வெளியேறுமா? - அருட்தந்தை. மா சத்திவேல்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள மற்றும் நல விடயங்கள் தொடர்பில் இவ்வாண்டு செய்யப்பட வேண்டிய ஒப்பந்தம் காலம் தாழ்த்திய போதும் எப்போது செய்யப்படுமென தெரியாத நிலையில் முதலாளிமார் சம்மேளனம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ரூபா வேனும் அதிகரிக்க முடியாது என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத பொறுப்பற்ற அடாவடித்தனமாகும். இதனை மலையக சமூக ஆய்வு மையம் வன்மையாக கண்டிக்கின்றது.

ஆட்சியிலிருக்கும் புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு மலையக மக்கள், குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படாது தமது வாக்குகளை அளித்தனர். புதிய அரசாங்கம் தமக்கு வாக்களித்த அரசாங்க ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சம்பள அதிகரிப்பை செய்துள்ளது. தனியார் துறையினருக்கும் அதிகரிக்க சொல்லியுள்ளது. ஆனால், முதலாளிமார் சம்மேளனம் ஒரு ரூபா ஏனும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்க முடியாது என்பது மைத்திரிக்கு வாக்களித்தமைக்கு பழிவாங்கவா? எனும் வினா எழுகின்றது. 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்றால் தொழிலாளர்கள் வேறு வழியின்றி உழைப்பிற்காக தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு வெளியேறினால் ‘தேசிய பௌதிகவியல் திட்டம் - 2030 (National Physical Plan – 2030) எனும் மஹிந்த சிந்தனையை இலகுவில் நடைமுறைப்படுத்தலாம். வேறு தேவைகளுக்காகவும் மலையக நிலங்களை கையகப்படுத்தப்படுவதோடு, குறிப்பாக புதிய குடியேற்றங்களையும் உருவாக்கலாம். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்படும் கூட்டு சதி முயற்சிகளில் சம்பளம் அதிகரிக்க முடியாது என்பதும் ஒன்று. இது பெருந்தோட்டத் தொழிலாளர்களை சுயமாக இடம் பெயர வைத்து மேற் கொள்ளப்படவிருக்கும் இன அழிப்புச் செயற்பாட்டுக்கு முன்னோடி எனலாம். 

இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு விதமான கடன் சுமையோடு வாழ்விற்காக தினமும் போராடுகின்றனர். அரசாங்கம் அறிவித்த ரூபா 2,500 சம்பள அதிகரிப்பும் இல்லை. நாட் சம்பள அதிகரிப்பும் இல்லையாயின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் என்பதற்காகவும், தமிழா;கள் என்hதற்காகவும் பொருளாதார ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.

புதிதாக ஒப்பந்தம் செய்யப்படும் காலத்தில் மட்டுமே கம்பனிகளின் நட்டம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனம் கூறுகிறது. இலாபம் அடையும் காலத்தில் இலாபத்தை மக்களுக்கு கூறாதது ஏன்? இலாபம் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லையே ஏன்? 

கம்பனிகள் நட்டமடைவதாயின் நிர்வாகச் சீர்கேடு, பயிற்சி பெற்ற நிர்வாகிகள்/உத்தியோகஸ்தா;கள் இன்மை, மீள் நடுகை இன்மை, முறையான பராமாpப்பின்மை, சுகபோக நிர்வாக செலவீனம் என்பவற்றோடு ஏல விற்பனை எனும் சதியினையும் குறிப்பிடலாம். இவற்றுக்கு எந்த வகையிலும் தொழிலாளர்கள் பொறுப்பில்லை. மேலும், கம்பனிகள் நட்டமடைவதாயின் நட்டத்தில் இயங்கும் வருவாய் தொழிலை விட்டு வெளியேறலாமே. இவர்கள் ஏன் வெளியேறுவதில்லை? இவர்கள் சமூக சேவையா செய்கின்றார்கள்? எனவே, தொழிலாளர்களுக்குரிய சம்பள அதிகரிப்பை காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும். இல்லையேன், தோட்டங்களை அரசிடம் கையளித்துவிட்டு வெளியேறலாம்.

இந்நிலையில், அரசாங்கம் கம்பனி தோட்டங்களை பொறுப்பேற்று தொழில் அனுபவமும், முதிர்ச்சியும், கடின உழைப்பிற்கும் சொந்தக்காரா;களான மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கட்டவும், விவசாயம் செய்யவுமான காணியை உறுதிப்பத்திரத்துடன் கொடுப்பதோடு, மலையக தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்கள் என்ற நிலைக்கு உயா;த்த வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டமே மலையகத்திற்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், அவர்களது வாழ்வு கலாசாரத்திற்கும், கூட்டு வாழ்விற்கும் பாதுகாப்பு கிடைப்பதோடு, பொருளாதார, சமூக அபிவிருத்தியும் ஏற்படும்.

இன்று சிறு தோட்ட உரிமையாளர்களே 70மூ தேயிலை உற்பத்தியை மேற் கொள்வதோடு, சமூக பாதுகாப்போடும், கௌரவத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய கௌரவத்தை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அடைய வேண்டும். ஏனெனில், இவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே. 

இன்றைய இக்கட்டான அவசர கால கட்டத்தில் மலையக அரசியல் கட்சிகளும், அவற்றிற்கு துணை நிற்கும் தொழிற்சங்கங்களும் தமது மலட்டு அரசியலை கைவிட்டு முதலாளித்துவத்தின் எடுப்பிடிகளாக நின்று தொழிலாளர்களை ஒடுக்கும் வன்புணா;ச்சியில் ஈடுப்படாது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி சுதந்திர வாழ்வை அடிப்படையாக கொண்டு செயற்பட சமூக சக்திகளோடு கை கோர்க்க வேண்டும் என்பதோடு, மலையக மக்களின் விழிப்பே மலையகத்தின் எதிர்காலம் என மலையக சமூக ஆய்வு மையம் வலியுறுத்துகின்றது. 

மலையக சமூக ஆய்வு மையம்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates