Headlines News :
முகப்பு » » பெருந்தோட்டப்புற பாடசாலை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவது அவசியம் - இரா .சிவலிங்கம்

பெருந்தோட்டப்புற பாடசாலை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவது அவசியம் - இரா .சிவலிங்கம்



''ஆசிரியப்பணியே அறப்பணி அத ற்கு உன்னை அர்ப்பணி'' என்ற கருத்துக்கு ஏற்ப பெருந்தோட்ட ஆசிரியர் சமூகம் செயற்படுகின்றதா என்பது கேள்விக்கு றியே. ஆசிரியர்கள் தங்களுடைய கடமையை அல்லது தொழிலை வியாபாரமாகக் செய்ய முடியாது. அது ஒரு சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக சமூத்தின் உயர்ச்சி – வளர்ச்சி முன்னேற்றம், அபிவிருத்தி இவை அனை த்தும் ஆசிரியரின் சேவை மனப்பான்மையிலேயே தங்கியிருக்கின்றது.

ஓர் ஆசிரியரின் மனப்பாங்கிலும் தன் சேவையின் அர்ப்பணிப்பிலும் மாணவர்களின் தேர்ச்சி மட்டங்கள், அடைவு மட்டங்கள் தங்கியுள்ளன. எந்தவொரு ஆசிரியர் இதனை தொழிலாகக் கருதாமல் ஒரு சேவையாகக் கருதி தன்னுடைய சமூகத்தி ற்கு தன்னை அர்ப்பணிக்கின்றாறோ அந்த சமூகம் விழிப்படையும் என்பதில் ஐயமி ல்லை.

இன்று ஆசிரியர்களுக்கு சமூக, அரசியல் ரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இன்றைய வாழ்க்கைச்செலவை சமாளிக் கக் கூடிய வகையில் ஆசிரியர்களுடைய சம்பளத்திட்டம் அமைவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. காலத்திற்கு காலம் வரவு–செலவுத்திட்டத்தில் அடிப்படைச் சம்பள உயர்ச்சியை அரசு பெற்றுக் கொடுத்தும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாதுள்ளது.

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற ஆசிரியர் சமூகம் இன்று சந்தோசமாக பாடசாலைகளில் தன்னுடைய சேவைகளை வழங்குகின்றதா? என்பதை ஆய்வு செய்து அறிய வேண்டிய காலத்தின் தேவையா கும்.

பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற ஆசிரியர் சமூகம் மத்திய தர வகுப்பினராக பெருந்தோட்டச் சமூகத்தில் வாழ்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ இவர்களின் வாழ்க்கை நிலைமைகளையும் அன்றாட சமூகச் செயற்பாடுகளையும் பாடசாலை நடவடிக்கைகளையும் ஒவ்வொரு தனி நபரும் அவதானித்துக் கொண்டு இருப்பதோடு காலத்திற்கு காலம் பல்வேறு விமர்சனங்களையும் செய்து கொண்டு இருப்பதைக் காணலாம்.

ஒரு ஆசிரியரின் பொது நிலையை அவதானித்தால் இவருக்கு கிடைக்கின்ற மாதாந்த சம்பளம் இவர்களின் ஆசிரியர் தரத்திற்கு ஏற்ப  SLTS – 1, SLTS – 2 :1, SLTS – 2 :11, SLTS – 3 : 11, SLTS – 3 : 1 அமைந்துள்ளது.

இந்த அடிப்படைச் சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கைச் செலவை ஈடு செய்து கொண்டு ஒரு மத்தியதர வகுப்பினராக வாழ முடியுமா என்பது கேள்விக்குறியே.
இன்றைய ஆசிரியர் சேவையில் இருக் கும் பெரும்பாலானோர் கடனில் வாழ்வது குறிப்பிடத்தக்கது. அநேகமான ஆசிரியர் கள் தங்கள் சமூகத்தில் பல அடிப்படைவசதிகளோடு வாழவேண்டும் என்பதற்காக பல நிறுவனங்களிலிருந்து கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக EDCS, SANASA, கல்வித்திணைக்களத்தால் வழங்கப்படும் 10 மாத சம்பளக்கடன், Credit Cards, 25 வருட வீடமைப்புக் கடன் (Housing Lone), வீட்டு வாடகை, விழா முற்பணம் (Festival Alavance), எனைய முற்பணம் (other alavance), வங்கிக்கடன்கள், குருசித்தக்கடன், சில அரசசார்பற்ற நிறுவனங்களின் கடன்கள் தவணை முறையில் பொருள் கொள்வனவு பாடசாலை ஆசிரியர் நலன் புரிச்சங்கத்தின் கடன், தனியார் கடன்கள், வட்டிக்கு கடன் வாங்குதல், விழாக்காலங்களில் புடைவைக்கடைகளில் மாதாந்த கொடுப்பனவு அடிப்படையில் கொள்வனவு, தவணை முறையில் பொருட்களை கொள்வனவு செய்தல், Motorbike leasing கடன் போன்ற பல்வேறு வகையான முறையில் கடன்களை பெற்றுக் கொண்டு தமது தொழிலை செய்யவேண்டிய காலகட்டத்தில் ஆசிரியர் சமூகம் உள்ளது.

இன்றைய சமூகத்தில் ஆசிரியர் தொழிலுக்கான மதிப்பும் மரியாதையும் கெளரவமும் குறைந்து செல்கின்ற ஒரு போக்கு காணப்படுகின்றது.

இதற்கு பல்வேறு சமூகக் காரணிகள் காரணமாக உள்ளன. இன்றைய சினிமா, நாகரிக வளர்ச்சி, சமூக கட்டமைப்பு மற்றும் உலக மயமாதலின் தாக்கம், நவீன தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி, கையடக்க தொலைபேசி பாவனை, வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு, பாதுகாப்பற்ற குடும்ப சூழல், தனிக்குடும்பத்தின் அதிகரிப்பு, கூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்மை, தாய் தந்தை இருவரும் தொழிலுக்கு செல்லுதல், வேலைப்பளு, சமூகத்தின் பாதுகாப்பற்ற நிலை, பிள்ளைகளின் செயற்பாடுகளிலும் வளர்சியிலும் கற்றல் செயற்பாடுகளிலும் பெற்றோர்களின் ஈடுபாடு இன்மை. புதிய புதிய நோய்கள், பரீட்சையை மையமாக கொண்ட கல்வி, பொழுது போக்கு வசதியின்மை, பிள்ளைகளை அவர்களுடைய வயதுக்கேற்ப தயார்படுத்தாமை, விழுமி யக் கல்வி பாடசாலைகளில் முறையாக கற்பிக்காமை, குடும்பங்கள் ஆசிரியர்கள் தங்களுடைய கடமையை பாடசாலை நேரங்களில் செய்யாமை, ஆசிரியர்களே மாணவர்களுக்கு பாதுகாப்பற்றவர்களாக விளங்குதல், இன்றைய பாடசாலை கல்வித்திட்டம் மாணவர்களுக்கு பொருத்தமற்றதாகக் காணப்படல், ஆசிரியர்களுக்கான பறிற்சிகள், தொழில்வாண்மை விருத்திக்கு போதிய ஊக்குவிப்பின்மை போன்றவற்றை குறிப்பிடலாம்.

எனவே, அடிப்படைச் சம்பளத்தில் கடன்கள் போக மிஞ்சுவது மிகச்சிறிய அளவு சம்பளமே. இதில்தான் இவர்களின் அன்றாட குடும்பச் செலவு, சுக துக்கங்களுக்கான செலவு, திருமணம் விழாக்கள், பாடசாலையில் நடைபெறும் நலன்புரி விடயங்கள், தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கான செலவு, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரக்கட்டணம், தொலைபேசிக்கட்டணம், நீர்க்கட்டணம், Mobile Phone reload காசு. நாகரிகமான உடைகள், கற்றல் உபகரணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு விடயங்களையும் செய்ய வேண்டி யவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வகையான ஒரு மன அழுத்தத்தின் பின்னணியிலேயே ஆசிரியர்கள் தங்களு
டைய தொழிலை செய்கின்றார்கள். இவர்க ளுக்கென ஒரு வீடமைப்புத்திட்டம் இல்லை.

பெரும்பாலனோர் வாடகை வீடுகளிலேயே வசிக்கின்றார்கள். எந்தவிதமான ஊக்குவிப்பு கொடுப்பனவோ அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை. அர்ப்பணிப்போடு சேவை செய்து ஓய்வு பெற்றவர்களும் தற்போது சேவையில் இருப்பவர்களையும் கூட பாரட்டி கெளரவிப்பதற்கு வலய, மாகாண, தேசிய மட்டத்தில் ஒரு முறையான வேலைத்திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு புலமைப்பரிசில், உயர்கல்விக்கான புலமைப்பரிசில் போன்றன அனைவருக்கும் கிடைப்பது மிகவும் குறைவு. எனவே, ஆசிரியர்களின் பொதுப் பிரச்சினைகள் என்று முழுமையாக தீர்க்கப்படுகின்றதோ அன்றுதான் அவர்களுடைய சேவையானது பாடசாலையில் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று பாடசாலை முடிந்தவுடனயே பிரத்தியேக வகுப்பை நோக்கி ஓடுகின்ற ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை. கல்வியை வியாபாரமாக வழங்கும் தனியார் வகுப்புக்களும் பெருந்தோட்ட பிரதேசத் தில் அதிகரித்துக்கொண்டு வருவதையும் காணலாம். இதனை குறைத்துக் கொள்வ தற்கு பாடசாலையில் பாடங்கள் முழுமை யாக நடைபெறுவதற்கு உறுதிப் படுத்த வேண்டும்.

எது எவ்வாறாயினும் ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு எப்போது செய்யத் தொடங்குகின்றார்களோ அன்றுதான் மலை யகச் சமூகம் முழுமையாகக் கல்வியில் உயர்ச்சியடையும். தான் பிறந்த சமூகத்திற் கும், இனத்திற்கும், மொழிக்கும் மண்ணுக் கும் பிரதேசத்திற்கும் ஆசிரியர்களை இனம் கண்டு அவர்களையும் பாராட்டுவதற்கு சமூக பிரதிநிதிகள் தொடக்கம் கல்வியாளர் கள், புத்திஜீவிகள், நலன் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும்.

நன்றி - வீரகேசரி 22.03.2015
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates