Headlines News :
முகப்பு » » இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் அங்குரார்ப்பணம்

இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் அங்குரார்ப்பணம்

காலத்தின் தேவைதான் பெரும அரசியல்சமூகபெருளாதாரகலாசார நிறுவனங்களை தோற்றுவிக்கின்றது எனக் கொண்டால் இன்றைய சமூகத் தேவைதான்- வரலாற்றுத் தேவைதான் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தையும் (Sri Lanka Educational Community Organisation- SLECO)   தேற்றுவித்தது எனலாம்கடந்த ஞாயிறு (12-10-2014) அன்று ட்டன் பொஸ்கோ கல்லூரியில் நடைபெற்ற உறுப்பினர் தெரிவுக் கூட்டத்தில் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவர் - திரு. லெனின் மதிவானம், உப தலைவர்கள் - திருவாளர்கள் பீ.ஆர். ரவிசந்திரன், ஆர். திலிப்குமார், பொதுச் சொயலாளர் - திரு.ஆர்.  சங்கர மணிவண்ணன் , நிர்வாக செயலாளர் - கே. கிருஸ்ணன், பொருளாளர் - திரு. எஸ்.. மணாளன்,  பிரதம் இணைப்பாளர் - திரு.எஸ். சேகர், அதிபர்களுக்கான இணைப்பாளர்கள் - திருவாளர்கள் எம். கணேசராஜ், என்.நாகராஜ், வேலுசாமி, ஆசிரிய ஆலோசகர்களுக்கான இணைப்பாளர்கள் - திருவாளர்கள் சாரங்கன், எஸ். விஜயன், வீ. சிவபாலசுந்தரம், நலன்புரி குழு தலைவர் - திரு. என். சந்திரன், நலன்புரி குழு உப தலைவர் - திரு. பீ. ராமு, கலாசார குழு தலைவர் - திரு. எஸ் ஸ்ரீஸ்கந்தராஜா, கலாசார குழு உப தலைவர் - திரு. என் சதீஸ், கல்வி அபிவிருத்தி குழு தலைவர் - திரு. எஸ். குமார், கல்வி அபிவிருத்தி குழு உப தலைவர் - திரு. வீ. சிவநேசன், விளையாட்டு குழுத் தலைவர் - திரு. எஸ். சுரேஸ்காந்தன், விளையாட்டுக் குழு உப தலைவர் - திரு. எம்.எஸ். கென்னடி, பத்திரிகை மற்றும் பிரசாரக் குழு தலைவர் - திரு. எம்.எஸ். இங்கர்சால், பத்திரிகை மற்றும் பிரசாரக் குழு உப தலைவர் - திரு. டி. கணே\ன், செயற்குழு உறுப்பினர்கள் - திரு. வீ. ஜெயக்குமார், திருமதி. வீ. வசந்தி, திரு. கே. பொன்வேந்தன், திரு. எஸ். உலகநாதன், திருமதி. என். நிர்மலாதேவி, ஆலோசகர்கள் - கலாநிதி. ஏ.எஸ். சந்திரபோஸ், திரு. பீ. ஈ.ஜீ. சுரேந்திரன், திரு. எஸ்.என். குரூஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


காலத்தின் தேவைதான் பெரும அரசியல், சமூக, பெருளாதார, கலாசார நிறுவனங்களை தோற்றுவிக்கின்றது எனக் கொண்டால் இன்றைய சமூகத் தேவைதான்- வரலாற்றுத் தேவைதான் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தையும் (Sri Lanka Educational Community Organisation- SLECO) 

  
தேற்றுவித்தது எனலாம். அந்தவகையில் கல்விசார் பணியாளர்களான ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள்  மற்றும் கல்வி அதிகாரிகள், ஆகியோர் எதிர் நோக்கும் பிரச்சனைகளை அவர்களின் துன்பத் துயரங்களை வெவ்வேறு வகைகளிலும் வடிவங்களிலும்  உணர்ந்து அதற்கான மாற்றுச் செயற்பாடுகளை முற்போக்கான திசையில் முன்னெடுப்பதே இவ்வியக்கத்தின்  நோக்கமென அவ்வமைப்பினர் பிடகடனப்படுத்தியுள்ளனர். அவ்வாறே, தமது செயற்பாடுளை எத்தனங்களை ஒரு பிரதேச எல்லைக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தேசம் தழுவிய அமைப்பாக இது செயற்படும். ஐக்கியம் புதிய தளம் அமைக்கும் என்ற தாரக மந்திரத்துடன் தோற்றங்கொண்டுள்ள இவ்வமைப்பு  எந்தவொரு கட்சிக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. அந்தவகையில் எந்தக் கட்சியிலும் உள்ள ஒருவர் தனது கட்சிக்குரிய அமைப்பாக்கும் நோக்கம் இல்லாமல், தனது கட்சிக்கு விரோதமாயல்லாத வெகுஜன செயற்களங்களில் இவ்வமைப்போடு சேர்ந்து இயங்க இயலும். இது பரந்துபட்ட சமூக தளம் என்கிறவகையில், வெவ்வேறு சமூகத்தின்- குறிப்பாக பின்தங்கிய சமூகங்களின் கல்வி வளர்ச்சியை தமது இலக்காக கொண்டே இவ்வமைப்பு செயற்படும். 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates