Headlines News :
முகப்பு » , , » மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் - சாரல் நாடன்

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் - சாரல் நாடன்


மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் இரண்டு ஆண்டறிக்கைகளை வெளியிட்டி-ருந்தது. முதலாவது ஆண்டறிக்கை 1960க்குப் பின் என்ற தலைப்பில் பொது செயலாளராகவிருந்த எஸ்.எம். கார்மேகத்தினால் 30.-12.-1966இல் எழுதப்பட்டது.

இரண்டாவது அறிக்கை மன்றச் செயலாளர் தெளிவத்தை எஸ்.ஜோசப்பினால் 20.05.1973 இல் எழுதப்பட்டதாகும்.

முதலாம் அறிக்கை 4.2.1967 இல் அட்டன் கலை விழாவில் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் குறிஞ்சி மலர் வெளியிடப்பட்டது. 1971இல் 'கதைக்கனிகள்' தொகுப்பு வெளியிடப்பட்டது. 1973இல் கோகிலம். சுப்பையாவின் நாவலுக்கு வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இதன்போது இரண்டாவது அறிக்கை வெளியானது.

உண்மையில் அதன் பிறகு பல முயற்சி கள் எடுக்கப்பட்ட போதும் ஏனோ எழுத்தா ளர் அங்கத்தினர்களிடையே தேவையான ஒத்துழைப்பு இல்லாதிருக்கிறது.

15-.12.-1980 தோற்றம் பெற்ற மலையக கலை இலக்கியப் பேரவை 1981இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் க.கைலாசபதியைக் கொண்டு சி.வி. வேலுப்பிள்ளைக்கு ''மக்கள் கவிமணி பட்டம்'' சூட்டியது. அதே ஆண்டு இலங்கையில் வெளியான தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைத் தொகுதி, என்.எம்.எஸ். இராமையாவின் சிறுகதைத் தொகுதி, மாத்தளை வாழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதி ஆகியவற்றுக்கு கலாநிதி சபா. ஜெயராஜா, நாவலாசிரியர் செ. கணேசலிங்கம், தமிழகத்து கொ.மா. கோதண்டம் ஆகியோரைக் கொண்டு விமர்சனம் செய்-யப்பட்டது. அக்கரப்பத்தனை நகரில் அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் 4.12.1987 இல் பாரதி விழாவைக் கொண்டாடிய அவ்விழாவில் கவிஞர் தமிழோவி யனை கௌரவித்து நினைவுப் பரிசளித்தது. கவிஞர் தேவதாசன் ஜெயசிங் எழுதிய 'யெளவனம்' நூலை லிண்டுலை நகரில் விழா நடத்தி அமைச்சர் தொண்டமான் தலைமையில் வெளியிட்டு வைத்தது.

21.12.1986 இல் கண்டியில் எழுத்தாளர் ஒன்று கூடலை நடாத்த எஸ்.முரளிதரனின் கவிதை நூலையும், சாரல்நாடனின் சி.வி. சில சிந்தனைகளையும் வெளியிட்டு வைத்தது. 22.02.1987 இல் பூண்டுலோயா நகரில் கூடி கவிஞர் தென்னவனின் கவிதை நூலை விமர்சனம் செய்தனர். அதே ஆண்டு 10.10.1987 இல் ஹப்புத்த-ளையில் கூடி இல க்கிய விழா ஒன்றை பிரமாண்டமாக நடத்தினர்.

7.8.1988 இல் கொழும்பு நகரில் ஹோட் டல் தப்ரபேனில் கூடி அமைச்சர்கள் சௌமியமூர்த்தி தொண்டமானையும் செல்லையா இராசதுரையையும் அழைத்து ஒரே மேடையில் பேச வைத்து தேசபக்தன் கோ. நடசய்யர் நூலை வெளியிட்டு வைத்தார்.

காலப்போக்கில் இம்முயற்சிகள் எல்லாம் தடைபட்டுப்போயின. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தையும் மலையக கலை இலக்கிய பேரவையையும் ஒன்றி-ணைக்கும் முய ற்சிகள் நடைபெற்றன. அவற்றின் செயற்பாடுகள் வெவ்வேறு திசையை நோக்கியனவாக இருந்தமையால் எண்ணிய நோக்கம் நிறைவேறவில்லை.

இன்றுள்ள நிலையில் தனியொருவர் தமது படைப்புகளை புத்தகமாக வெளி-யிடுவது என்பது சிரம சாத்தியமானது என்று 1973இல் தெளிவத்தை ஜோசப் கூறியிருந்தாலும் மலையக இலக்கிய பேரவை பல புத்தகங்களை வெளியிட வைத்தி-ருக்கிறது.

அவற்றை அச்சில் வெளியிடும் முயற்சி யில் மன்றம் அக்கறை செலுத்து-மானால் அது பெரும் பணியாக அமையும் என்ற அவரின் கருத்து சீர் தூக்கிப் பார்க்கத்தக்கவையாகும்.

மன்றம் வெளியிட்ட குறிஞ்சிமலரில் மலையகத்தின் முன்னணி எழுத்தா-ளர்கள் மூவரின் குறுநாவல் வெளிவந்திருந்தன. அது பிறகு 'கொழுந்து' இதழில் வெளிவந்திருந்தது. அதுவே பின்னர் 'பிணம் தின்னும் சாத்திரங்கள்' நூலில் கடைசி குறுநாவலாக சேர்க்கப்பட்டிருந்தது.

மு.கு.ஈழக்குமார், சி.பொன்னுத்தம்பி, தமிழோவியன் வழுத்தூர் ஒளியேந்தி, வி.கந்தவனம் முதலானோர் சேர்ந்து எழுதிய காப்பியம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

தலைவர் தொண்டமான் எம்மவரின் வரலாற்று நூலை எழுத வேண்டும் என்று தன் ஆசையை தனது வாழ்த்துரையில் கூறி இருந்தார்.

தமிழ் மணங்கமழும் பிரதேசங்களில் ஒரு சிறந்த பகுதியாக விளங்கும் மலையகம் அம் மொழி வளர்ச்சிக்கு மேலும் மேலும் ஆக்கமும் ஊக்கமும் தகும் வாலிப எழுத்தாளர்களை ஊக்குவிப்பது எமது கடமை என்று தலைவர் ஜனாப் ஏ.அஸீஸ் கூறி இருந்தார்.

எஸ்.எம். கார்மேகம் தனதுரையில் தம்முடைய மனக்குறையையும் குறிப்-பிட்டிருந் தார்.

குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் தங்களுடன் ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டதுபோல இலக்கியத் துறையில் நம்மவர்கள் ஈடுபட்டு வருகின்-றார்கள். அதன் பலனாக மலையகத்தைப்பற்றி பிறர் அக்கறையுடன் எழுதும் அள-வுக்கு நாம் ஒரு சில துறைகளை விட்டு வைத்து விட்டோம். இக்குறைபாடுகளை நமது எழுத்தாளர்கள் களைந்து எறியப் போகிறார்கள் என்பதற்கு அவர்களது வேகம் நம்பிக்கையூட்டுகிறது.

இன்று நமது நினைவில் சி.வி. வேலுப்பிள்ளை, டீ.எம்.பீர் முஹம்மது ஆகி-யோர்களின் படைப்புகள் தாம் பதிந்து கிடக்கின்றன என்று கூறும் தற்கால இலக்கிய முயற்சிகள் பற்றி கருத்துக்கூறும் எம்.வாமதேவன் மலை நாட்டைப் பற்றி எழுதப்படும் நாவல் கள், மலைநாட்டவரின் போராட்டக் குரலை உயர்த்தாது, மலைநாட்டவர்களின் வாழ் க்கைப் போராட்டங்களை இரத்த உணர்வு உணர்ந்தவர்களின் அனுபவங்கள் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றுடன் நாவலாக பரி ணமித்தால் மலையகத்தின் பெருமைக்கு அதைவிட வேறொரு கருதுகோள் அவசிய மில்லை என்று எழுதி உள்ளார்.

மலையக எழுத்தாளர்கள் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி இது.

நன்றி - வீரகேசரி 01.06.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates