Headlines News :
முகப்பு » » "தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை" 1939 வீரகேசரி தலைப்பு

"தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை" 1939 வீரகேசரி தலைப்பு


" 1939ம் ஆண்டு இலங்கை கிராமக் கமிட்டி"
இங்கு 1938ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி வெளி வந்த வீரகேசரி பத்திரிக்கை. இதன் தலையங்கமே தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை

இதற்கு மன்னரான 6ம் ஜோர்ஜ் அங்கீகாரம் அளித்து விட்டார். என்பதாகும்.
இலங்கை கிராமக்கமிட்டி வாக்குரிமையானது, இனி தோட்டத் தொழிலாளர்களுக்கு அதாவது தோட்டத்து ரைமார்களினால் கொடுக்கப்பட்ட கட்டிடங்களில் (லயங்களில்) வசிக்கும் தொழிலாளர்க்கு அளிக்கப்படமாட்டாது. எனும் திருத்தச் சட்டத்தை மன்னரும் ஏற்றுக் கொண்டார். என்பதை இப்போது கூட நாம் பார்க்கும்போது பலத்த அதிர்ச்சியாக உள் ளது.
இது சம்பந்தமான மசோதா 1938ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாங்க சபையில் விவாதிக்கப் பட்டபோது, அப்போதைய அரசாங்க சபை அங்கத்தவர்களில் சிறு பானமைக கட்சியினரும் எதிர்த்தனர். அப்போதைய அரசாங்க சபையினில் அங்கம் வகித்த இந்திய சமூ கத்தின் பிரஜையாக இருந்த 'ஐ.எக்ஸ்.பெரைரா' தமது பலத்த எதிர்ப்பை காட்டினார். இந்திய பத்திரிக்கைகள் கூட இதனை விமர்சித்து எழுதியிருந்தன.
அக்காலத்தில் சிங்களத் தலைவர்கள் மத்தியில் இரு ந்து, இலங்கையில் ஜீவனோபாயத்திற்காக வந்த அப் பாவித் தொழிலாளர்கள் மீதே துவேசம் காணப்பட்ட து. முடிவில் மன்னரின் சம்மதம் பெற்று, தோட்டத் தொழிலாளர்க்கு கிராமிய கமிட்டி வாக்குரிமை இல் லாதே ஆக்கிவிட்டார்கள்

சு.இராஜசேகரனின் Old is Gold (முகநூல் வழியாக)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates