Headlines News :
முகப்பு » » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - பகுதி 2 - இரா சடகோபன்

கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - பகுதி 2 - இரா சடகோபன்


தென்னிந்தியாவில் இருந்து கோப்பி பயிரிடுவதற்கென தருவிக்கப்பட்ட தமிழ் தொழிலாளர்கள்ள் ஒரு தலைவனின் கீழ் கூட்டம் கூட்ட செயற்பட்டனர். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குழுவினர் பல தலைவர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கினர். இத்தகைய குழுவினரை ‘கேங்’ என்று அழைத்தனர். இவர்களது தலைவனை கேங் லீடர் என அழைத்தனர்.

தோட்டத் துரைமார்களுக்கும் அதிகாரிகளுக்கும் இத்தொழிலாளர்கள்ளைத் தனித்தனியாக அடையாளம் காணமுடியாதிருந்தது. எல்லோரும் ஒரே மாதிரியான, ஒரே முகங்களாகவே தெரிந்தனர். அவர் களுக்கு வெவ்வேறு பெயர்கள் இருந்தபோதும் ஒட்டுமொத்தமாக "ராமசாமி' என்றே அழைத்தனர். துரைமார் யாரைக் கூப்பிட வேண்டு மென்றாலும் ‘ராமசாமியைக் கூப்பிடு' என்றே கூறினர். ‘ராமசாமி' என்ற பெயருக்கு மேலதிகமாக ‘கருப்பன்' என்ற பெயரும் பொதுவாக பாவனையில் இருந்திருப்பதாக கிறிஸ்டின் வில்சன் என்ற நூலாசிரியர் தனது நூலான ‘கசந்த கோப்பி' என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். ராமசாமிகள் அல்லது கருப்பன்கள் தென்னாப்பிரிக்காவில் நெசவுத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கொத்தடிமைகளைவிட வித்தியாசமானவர்கள் அல்லர் என ஒருசமயம் அரச சபையில் சேர்.பொன் அருணாசலம் தெரிவித்திருந்தார்.

இந்திய பெருந்தோட்டத் தொழிலாளர் எப்படி இருந்தனர் என்று கருத்துத் தெரிவிக்கையில், அப்போதிருந்த பிரதம குடிசார் மருத்துவ அதிகாரி டபிள்யூ.ஆர்.என்.கின்ஸி பின்வருமாறு கூறியுள்ளார்:

‘இந்தியக் கூலித் தொழிலாளி மிக மெலிந்தவனாக, மத்திய உயரம் கொண்டவனாக, நொய்ந்த, தசை நரம்புகள் புடைத்து வெளித்தெரிந்தவனாகக் காணப்பட்டான். அவனது நிறம் அடர்ந்த கருங்கல் நிறத்திலிருந்து மஞ்சள் கபில நிறம் வரை வேறுபடுகிறது. ஒரு சிலர் மாநிறமாக இருந்தனர். உருவத்தில் ‘காக்கேசிய’ வார்ப்புக்கள் போலிருந்தார்கள். உருவ அமைப்பில் வேறுபட்டாலும் வெறுக்கத்தக்கவர்களாகவோ, குரூபிகளாகவோ இருக்கவில்லை. இவர்களின் மண்டையோட்டு அமைப்பின்படி புத்திக்கூர்மை குறைந்தவர்களாகவும் முரட்டுத்தன்மையுடையவர்களாகவும் இருந்தனர். கண்கள் கறுப்பு நிறமாகவும் கண்மணிகள் துறுதுறுத்தபடியும் இருந்தன. குறுகியநெற்றி, அகன்ற கன்ன எலும்புகள், நிறைவானதும் சற்றே கீழ் நோக்கித் தொங்கும் உதடுகள், சற்றே கூடுதலான நாசியுடன் காணப்பட்ட இவர்களின் பார்வையில் ஒரு சோகமும் கையறு நிலையும் நிரந்தரமாகக் குடிகொண்டிருந்தது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

***
இலங்கை, இந்தியர் வரலாற்றில் கோப்பிப் பெருந்தோட்ட காலம் மிக சோகமயமானது. தலைக்கு ஐந்து சதம் "கொமிசனு'க்கு தமிழ்நாட்டில் இருந்து தொழிலாளர்கள்ளை அழைத்து வந்த கங்காணிகள் வரும் வழியில் எத்தனை பேர் இறந்தனர் என்று ஒரு கணிப்பீடு செய்தனர். வரும் வழியில் கப்பலில் வைத்தும், பின் தலைமன்னாரில் இருந்து நடந்து வரும் வழியில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து மீளமுடியாமலும் தொழிலாளர்கள்ளில் அரைவாசிப்பேர் இறந்து போயினர்.

எனவே, உண்மைத்தேவை 1500 தொழிலாளர்கள்ளாயின் அவர்கள் 3000 பேரை அழைத்து வந்தனர். 1500 பேர் வரும் வழியில் இறந்து போய்விடுவர் என்பது அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. கப்பலிலும் வரும் வழியிலும் தொழிலாளர்கள்ள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர். அவர்களுக்கு குடிப்பதற்கு போதுமான தண்ணீர் மாகவே வந்தனர். அவ்விதம் தோட்டங்களிலும் கூட்டம் கூட்டமாகவே  வழங்கப்படவில்லை. கடுமையான கொலரா நோயால் பீடிக்கப்பட்டு, வாந்திபேதி ஏற்பட்டு, உடல் வறட்சியடைந்து நிறையப்பேர் இறப்பது வழக்கமாகிப் போயிருந்தது.

‘தலைமன்னாரில் இருந்து மாத்தளையின் கண்டி வரையில் இவர்கள் வரும் பாதையின் இரண்டுபுறங்களிலும் மண்டையோடுகளும், கை, கால் எலும்புகளும் ஆங்காங்கே குவிந்து கிடப்பது வழமையான காட்சி’ என்று அப்போது பிரித்தானிய அரசின் காலனித்துவ செயலாளராக இருந்த பிலிப் அன்ஸ்ட் ரூதர் (1830-1845) தனது அறிக்கையில் இப்படித் தெரிவித்திருந்தார். இவர் 1843ஆம் ஆண்டில் தலைமன்னாரிலிருந்து அனுராதபுரம்வரை நடைபாதை ஒன்று அமைத்து இடைக்கிடை தங்குமிடவசதியும், நீர் அருந்த கிணறுகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்.எனினும், நோயுற்றோரை கவனிக்க எந்த மருத்துவ வசதியும் இருக்கவில்லை. சக தொழிலாளர்கள்ள் ஒன்றும் செய்ய முடி யாத நிலையில் நோயுற்றவர்களை சோகத்துடன் அவ்விடத்திலேயே விட்டுவிட்டுச் சென்றனர். இறந்தவர்களை ஓநாய்களும், நரிகளும், காக்கைகளும் கடித்துக் குதறுவதை எவரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

திருச்சிராப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரம் வரும் வழியிலும் தலை மன்னாரில் இருந்து கண்டி வரை வரும் வழியிலும், பின் தமது உடைமைகளுடன் திரும்பிச்செல்லும் வழியிலும் அவர்கள் பலராலும் கொள்ளையடிக்கப்பட்டனர். பல வழிகளில் சுரண்டப்பட்டனர். இம்சைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். உடைமைகளைக் கொள்ளையடிக்கும் போது பலர் கொலை செய்யப்பட்டனர். 1846 ஜனவரி மாதம் கூட ஒரு பத்திரிகை இவர்களின் நிலையை விளக்கி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அப்போதைய காலனித்துவ செயலாளராக இருந்த சேர் ஜேம்ஸ் டெனன்ட் என்பவர் கூலித்தொழிலாளரின் நலன்கள் கவனிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இலங்கையில் வந்திறங்கியதும் அவர்களுக்கு போதுமான வசதிகளை செய்து கொடுத்தல், பாதுகாப்பான பாதையமைத்தல், அவர்கள் மீதான வன்முறைகளில் இருந்து பாதுகாப்பளித்தல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல், வழித்தங்க ஓய்விடங்கள் அமைத்துக் கொடுத்தல், மனிதாபிமானத்துடன் நடத்தப்படுதல் என்பன தொடர்பில் அரசுக்கு எழுதிக் கேட்ட போதும் பலன் கிட்டவில்லை. இவை ஒரு போதும் தொழிலாளர்கள்ளைச் சென்றடையவும் இல்லை.

***
இலங்கையின் கோப்பிப் பெருந்தோட்டங்களினதும், பின்னர் தேயிலைத் தோட்டங்களிலும் தொழில் புரிவதற்கென இத்தனை பெருந்தொகையான இந்திய வம்சாவளித் தோட்டத்தொழிலாளர்கள்ள், இவ்வளவு துன்பதுயரங்களுக்கு மத்தியில் ஏன் வந்திருக்க வேண்டு மென பல பொருளியல் மற்றும் சமூகவியலாளர்கள்ள் ஆராய்ந்துள்ளனர். இவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் மிகக் கவனிக்கத்தக்கன.

கண்டிச் சீமையிலே தேயிலைச் செடிக்கடியில் தேங்காயும் மாசியும் (கருவாடும்) விளைகிறதாம். அங்கே காசு பண மெல்லாம் கொட்டிக் கிடக்கிறதாம். தேனும் தினைமாவும், பாலும் பருப்பும் திகட்டாமல் கிடைக்கிறதாம் என்ற ஆள் திரட்டும் கங்காணிகளின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கித்தான் நிறையப்பேர் இலங்கைக்கு வந்து இந்த மரணப்பொறியில் மாட்டிக்கொண்டனர் என்ற செய்தி தோட்ட மக்களின் பல வாய்மொழிப்பாடல்களில் காணக்கிடக்கின்றது. ஆனால், இது முற்றிலும் உண்மையாக இல்லாதிருந்தாலும் எல்லாக்காலங்களிலும் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காதவர் இல்லாமல் இல்லை.

பின்வரும் காரணிகளை ஆய்வாளர்கள்ள், இந்தியத்தொழிலாளர்கள்ள் இலங்கைக்கு வர தள்ளு காரணிகளாகவும் இழுப்புக் காரணிகளாகவும் இருந்தன என்று தெரிவிக்கின்றனர்.

01) வறுமையும் வறட்சியுமே மிகப் பிரதான காரணிகளாக இருந்துள்ளன. கிராமங்களில் அதிகரித்த சனத்தொகைக்கேற்ப விவசாயத்தைத் தவிர வேறெந்த தொழில் முயற்சிகளும் இல்லை. விவசாயமும் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பசி பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடியது. தென்னிந்தியாவின் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சனத்தொகை ஒரு சதுர மைலுக்கு 240 ஆகக் காணப்பட்டபோது இலங்கையில் சனத்தொகை விகிதாசாரம் 70 ஆக இருந்தது என்று அமித்ராதுத்தா என்ற ஆய்வாளர் கூறுகின்றார்.

02) மெட்ராஸ் மாநிலம் வறட்சியால் காய்ந்து போயிருந் தது. எல்லா இடங்களிலும் பட்டினிச்சாவுகள் ஏற்பட்டன. பாதையோரங்களில் மனிதர்கள் விழுந்து இறந்து கிடந்தனர். பிணவாடை சகிக்க முடியவில்லை. பிணங்களை வல்லூறுகளும், நாய்களும் பிய்த்துத்தின்றன என்று பிரிட்டிஷ் படையதிகாரி ஒருவர் தனது குறிப்புப் புத்தகத்தில் குறிப்பெழுதியிருந்ததாக பிரின்சிப் தெரிவிக்கின்றது.
03) இந்தியாவின் தென்மாநிலத்தில் வறட்சி அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தமது சகல உடைமைகளையும் இழந்தனர். தமது நிலம், வீடு,ஆடு, மாடு, நகைநட்டு என்பவற்றை நிலச்சுவான்தாரர்களிடம் அடகு வைத்துள்ளனர். அவர்கள் அநாதைகளாக வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி புலம் பெயர்ந்தனர். அத்தகையவர்களுக்கு இலங்கையில் வேலை கிடைக்கின்றது என்பதும், சில மைல்கள் படகில் சென்று இலங்கையை அடைந்துவிடலாம் என்பதும் பெரிய செய்தியாக இருந்தது.

04) இந்தியாவின் மிகக்கொடிய வறட்சியும், அதனைத் தொடர்ந்த பஞ்சமும் பட்டினியும் 1876களைத் தொடர்ந்து ஏற்பட்டது. 1881 வரை நீடித்த இப்பஞ்சகாலத்தின் போது 2,00,000 சதுர மைல் நிலம் வறண்டு போய்விட்டதென்றும் சுமார் 19 மில்லியன் மக்கள் இறந்து போய்விட்டனர் என்றும் இந்த பஞ்சம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்த ஆணைக்குழு (1901ஆம் ஆண்டு) தெரிவித்ததாக ஹியூடின்கர் என்ற ஆய்வாளர் தெரிவிக்கின்றார்.

5) மறுபுறத்தில் பலபேர் நில உடைமையாளர்கள்ளுக்கு கடனாளிகளாக இருந்தனர். இவர்கள் தமது கடன்களை அடைக்கவும், அடகு வைத்தநிலத்தை மீட்கவும் இலங்கை நோக்கி வந்தனர். இலங்கையில் வெறும் 2,3 வருடங்கள் வேலை செய்தால் எவ்வளவு வருமானம் வரும் என்று கணக்கு பார்த்து இங்கு வந்தனர். இப்படி வந்தவர்கள் இந்தியா மீண்டதும் காணிகள் கொள்வனவு செய்தனர் என மெட்ராஸ் பல்கலைக்கழக பொருளாளராக பேராசிரியர் கில்பர்ட் சிலேட்டர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
***
இலங்கையின் கோப்பித்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக இந்தியத் தொழிலாளர்கள்ள் இலங்கை வந்தபோது, (1850களில்) அவர்கள் தலைமன்னாரிலிருந்து கம்பளை வரை 150 கிலோ மீற்றர் நடைப்பயணமாகவே அழைத்து வரப்பட்டனர். இந்த நடைப்பயணம் அவர்களைப் பொறுத்தவரையில் மரணப்பொறியாகவே இருந்தது.

தென்னிந்திய மாவட்டங்களில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது அதில் இருந்து தப்ப இவர்கள் இலங்கை வந்தனர். இவர்கள் வந்த பாதையில் மரணமும் ஒரு பத்தடி தள்ளி இவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தது. இவர்களின் வரலாற்றை ஆராயும்போது இவர்களின் அதிகரித்த மரணத்தைப்பற்றி இலங்கையில் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்கைக்கு வந்த இவர்களில் நான்கில் ஒருவர் வரும் வழியில் மரணித்துவிடுவது வழக்கமாக இருந்தது.

இவர்களின் எண்ணற்ற இந்த மரணங்கள் தொடர்பில் நீதி வழங்க வரலாறு ஒருபோதும் முன்வரவில்லை. இது தொடர்பில் இலங்கையின் எல்லா ஆளுநர்களும் துரைமார்களும் கங்காணிகளும் குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது இவ்வரலாற்றைப் படிப்பவர்களுக்கு பல இடங்களில் புலப்படும்.

அக்காலத்தில் இலங்கையின் கோப்பித் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைபற்றி பலர் பலவிதமாக எழுதியுள்ளனர். அத்தகைய எழுத்தாளர்கள்ளில் வில்லியம் நைட்டன், சி.ஆர்.ரிக், வில்லியம் சபோனாடியர், பி.டி. மில்லி, ஜோன் கெப்பர், எட்வர்ட் சுலிவன் முதலானவர்கள் மிகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் கூற்றுப்படி இயற்கைகூட இத்தொழிலாளர்கள்ளுக்குக் கருணை காட்டவில்லை.

இவர்கள் பலசமயங்களில் கருமையான நீரில் ஓட்டைப்படகுகளில் பாக் நீரிணைக்கூடாக பயணம் செய்து காணாமல் போயினர். வறண்ட தென்னிந்திய பூமியிலும் பின் இலங்கையின் வடக்கு, வடமேற்கு மாகாணங்களின் காட்டுப்பாதையிலும் குடிக்க நீரின்றி, வாந்திபேதியால் பீடிக்கப்பட்டு மாண்டொழிந்து போயினர். எப்படியோ இவர்கள்
தப்பிப் பிழைத்து மத்திய மலைநாட்டின் மலைப்பிரதேசத்தை அடைந்த போது, மழையும் குளிரும் அவர்களை மேலும் வாட்டி வதைத்து உயிரைப் பறித்தன. வரும் வழியில் பதுங்கியிருந்த புலியும் சிறுத்தை களும் ‘ஊர்ந்து வந்த பாம்புகளும்கூட அவர்க உயிரைப் பறித்துக் கொண்டன’ என இவர்க தம் எழுத்துகளில் தெரிவித்துளனர்.

தொடரும்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates