Headlines News :
முகப்பு » » "வெகுஜன இயக்கங்களின் பாத்திரமே இனி கோலோச்சும்" - பீ.ஏ.காதர் (நேர்காணல்)

"வெகுஜன இயக்கங்களின் பாத்திரமே இனி கோலோச்சும்" - பீ.ஏ.காதர் (நேர்காணல்)


1. நீண்ட இடைவெளிக்குப் பின்னரான உங்கள் இலங்கைப் பயணத்தின் நோக்கம் என்ன?

இது ஒரு தனிப்பட்ட விஜயம். எனது குடும்பத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவே இங்கு வந்தேன். அத்துடன் நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பது எனது நோக்கமாக இருந்தது.

2. தனிப்பட்ட பயணமாக வந்திருக்கும் நீங்கள் மலையக அரசியல் செயற்பாட்டாளர்களையும் சந்தித்திருக்கிறீர்கள். அவர்களுடனான அனுபவ பகிர்வு எத்தகையது?

தனிப்பட்ட நண்பர்களை விட குடும்ப அங்கத்தவர்களை விட எனக்கு அரசியல் செயற்பாட்டார்களுடனான நெருக்கமும் உறவும் அதிகம்.; உயிரையும் சொந்த நலன்களையும் துச்சமாக மதித்த போராட்ட அரசியலில் வளர்ந்த தோழமை உறவு அது. அவர்களில் சிலரையாவது சந்திக்க வேண்டும் என விரும்பினேன். அத்தகைய சந்திப்பை விரிவுரையாளர் விஜயசந்திரன் அவர்கள் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோறன்ஸ் அதன் சிரேஷ்ட துணைத்தலைவர் சரத் அத்து கோரளை ஆகியோரது துணையோடு ஹட்டனில் ஏற்பாடு செய்திருந்தார். அச்சந்திப்பிற்கு எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் மலையக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் இராதாகிருஷ்ணன் மாகாணசபை உறுப்பினர் இராஜாராம் ஆகியோரும் வருகைதந்திருந்தனா;. அதில் பாராளுமன்ற உறுப்பினர் திலகா; கலந்து கொண்டமை அச்சந்திப்புக்கு பொது தன்மையை ஏற்படுத்தியது. அச்சந்திப்பின் போது அவர்கள் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. 

அவர்கள்  நான் மீண்டும் அரசியலில் ஈடுபடவேண்டும் என உரிமையோடும் உணர்ச்சியோடும் கோரியபோது நான் திணறிப்போனேன். ஆயினும் எனக்கு மீண்டும் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் கிடையாது என்பதையும் எந்த ஒரு கட்சிக்கும் உரியவனாக அல்லமல் பொதுவான ஒருவனாக இருந்து சமூகத்திற்கு பங்காற்ற விரும்பும் எனது நிலைப்பாட்டையும் வெளிப்படையாக கூறினேன். அந்த சந்திப்பின் போதும் அதனையடுத்து நடைபெற்ற பல சந்திப்புகளின் போதும் நான் நேசிக்கும் மலையகம் என்னை நேசிக்கிறது என்பi உணர்த்தி நான் இம்மக்களுக்கு தொடர்ந்து ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவு படுத்தியது.
3. மலையக அரசியல் களத்தில் செயற்பட்டவர் என்ற வகையில் தற்கால மலையக அரசியல் நிலைமைகள் குறித்த உங்கள் பார்வை எத்தகையது?

வடக்கு கிழக்கு மக்கள் தமது முப்பது வருட உரிமைப் போராட்டம் நசுக்கப்பட்டதன் பேரழிவிலிருந்து மீள்வதற்கான பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அன்று அவர்களது உரிமை போராட்டம் தொடங்கப்படுவதற்கு ஏதுவாக இருந்த காரணங்களை விடவும் மலையக மக்களைப் பொருத்தளவில் வலுவான காரணங்கள் இருந்தன. நாடற்றர் பிரச்சினைக்கு முகங்கொடுத்த அதே சமயம் மிக மோசமாக சுரண்டப்படும் மக்களாகவும் அவர்கள் திகழ்ந்தனர். ஆயினும் பெருந்தோட்டதுறையில் அவர்களது அன்றாட வாழ்வாதராம் உத்திரவாதப்படுத்ப்பட்டிருந்தது. அன்று சுமார் 94 சதவீதமான மலையக மக்கள் பெருந்தோட்ட துறையில் சார்ந்திருந்தனர். தினமும் வேலை - தினமும் உணவு நிச்சயம் என்ற நிலைமை காணப்பட்டது. அவர்கள் தமது உரிமை சார்ந்த பிரச்சினையில் அதிக கரிசனை காட்டாததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அன்று காணப்பட்ட ‘உறுதிபடுத்தப்பட்ட வாழ்க்கை’ முறைமை ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இன்று அந்த நிலைமை கூட இல்லாமற் போயிருக்கிறது.

மலையக மக்களைச் சிதைப்பதற்கான பேரினவாத அரசுகள் கடந்த காலங்களில் நான்கு பாரிய தாக்குதல்களை இனவாத சட்டவாக்கம் மூலமும் அரசியல் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமும் மேற்கொண்டன. இவை யுத்தரீதியிலான தாக்குதல்களை விடவும் வெற்றிகரமானதாக இருந்தன. அவற்றில் முதலாவது தாக்குதல் 1948ல் கொண்டுவரப்பட் பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்ட்டது. பெரும்பாலான மலையக தமிழர் நாடற்றவராயினர். வாக்குரிமையற்ற அரசியல் அகதிகளாயினர். 

இரண்டாவது தாக்குதல் 1964 ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தமாகும். இதனால் சுமார் 60 சதவீதமான மலையக தமிழர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். அதுவரை இலங்கையில் சிங்களவருக்கு அடுத்தபடியான எண்ணிக்கையில் அதிகமான மக்கள் கூட்டமாக இருந்த மலையக தமிழர் படிப்படியாக நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். மலையக சமூகம் எண்ணிக்கை ரீதியில் பலவீனப்பட்டது.

மூன்றாவது தாக்குதல் 1972 ல் நில-சீர்திருத்தம் என்ன பெயரில் மேற்கொள்ளப்பட்டது.  முதற்தடவையாக தோட்ட தொழிலாளர்கள் தாம் உருவாக்கிய தோட்டங்களில் இருந்து விரட்டியடிககப்பட்டனர். சிவனுலட்சுமணனின் வீர சாவும் டெவன் தோட்ட தொழிலார்களது போராட்டமும் இதனை தடுத்து நிறுத்திய போது பாரிய நில இழப்பு ஏற்கனவே நடந்தேறிவிட்டது. முதற்தடவையாக மலையக தமிழர் வடக்கிற்கு இடம் பெயர்ந்தனர்.

நான்காவாது தாக்குதல் 1977 தொடக்கம் 1983 வரை இன வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. மலையக தமிழர் வடக்கிற்கு மேலும் இடம் பெயர்ந்தனர்.

தற்போது இத்தாக்குதல் வேறுவடிவில் மிக நாசுக்கான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றுள் பிரதானமானது தோட்ட தொழிலளருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேயிலைக் கன்றுகளை பகிர்ந்தளித்து அவர்களுக்குரிய ஊழியர் சகாய நிதி  (நுPகுஇ பசயவரவைல) போன்ற தொழிலாளர் தமது போராட்டங்களால் வெற்றி கொண்ட பல சலுகைளை இல்லாமற் செய்து அவர்களை உபரி தொழிலாளர்களாக மாற்றி பெருந்தோட்டத்துறையை நிர்மூலப்படுத்தும் சதிதிட்டமாகும். அடுத்ததுஇ அபிவிருத்தி என்ற பெயரில் மாற்று ஜீவாதார வழி முறைகளை வழங்காமல் தோட்டக் காணிகளில் இருந்து தொழிலாளரை வெளியேற்றும் முறையாகும்;. 

அதைவிட தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் யாப்பு திருத்தத்திலே மலையக மக்களுக்கு எதுவித அதிகார பரவலாக்களும் வழங்கப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை. இவற்றிற்கு சிகரம் வைத்தாற்போல தற்போது அரசாங்கத்தால் முன்வைக்கப்;படும் தேர்தல் சீர்திருத்தத்தில் மலையக பிரதிநிதித்துவம் முற்றாக இல்லாமல் செய்யப்படும் அபாயம் காணப்படுகிறது. இவை யாவும் மலையக தமிழ் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளன. 

4. உங்கள் வருகையோடு இணைந்ததாக ஜனநாயகத்திற்கான மலையக அமைப்பு எனும் அமைப்பு உருவாகியுள்ளது. அத்தகைய அமைப்பொன்றிற்கான தேவையாதென கருதுகிறீர்கள்?

ஏன்னுடனான உரையாடலின் போது மேற்கூறிய இருப்பு பற்றிய அச்சம் பலராலும் முன்வைக்கப்பட்டது. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு சகல சமூக சக்திகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய வரலாற்று தேவை வெகுவாக உணரப்பட்டது. அவற்றில் தேர்தல் முறை மாற்றத்தில் மலையக பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்துவது மலையக மக்களின் இருப்பை பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கையில் ஒன்று என இணக்கம் காணப்பட்டது. எனவே அரசியல் யாப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவுக்கு மலையக தமிழ் மக்கள் சார்பில் சிபாரிசுகளை முன்வைத்த சமூக நிருவனங்கள் பலவற்றை அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதற்கான கலந்துரையாடலை பிரிடோ அமைப்பின் அணுசரணையுடன் விரிவுரையாளர் விஜயசந்திரன் ஏற்பாடு செய்திருந்;தார். அச்சந்திப்பின் போதே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மலையக மக்களின் இனவிகிதாச்சாரத்திற் கேட்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் விதத்தில் விஞ்ஞான பு+ர்வாமாக தேர்தல் தொகுதிகளைவரைந்தும் திட்டவட்டமான வழிமுறைகளை கண்டறிந்தும் அவற்றை ஏற்கும் வரை அரசுக்கு நிர்ப்பந்தத்தை கொடுப்பதையும் உடனடி கடமையாக தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பு உரியமுறையில் செயற்பட்டால் மாத்திரமே மலையகம் காப்பாற்றப்படும் என திடமாகக் நம்புகிறேன். இனி ஒரு தொண்டமானோ சந்திரசேகரனோ மலையகத்தில் உருவாக முடியாது. தனி ஒரு தலைவரின் தலைமைக்கு இனி அங்கு இடமில்லை. எனவே சமூக அமைப்புகளின் பாத்திரம் இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் பெறப்போகிறது என நம்புகிறேன். 

5. ஆரசியலமைப்பு மாற்றம் மற்றும் தேர்தல் முறைமை மாற்ற விடயங்கள மலையக மக்கள் எதிர்கொள்ளும் அச்ச நிலைமைகள் யாவை? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என நினைக்கிறீர்கள்?

தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ள கலப்பு தேர்தல் முறையின் கீ;ழ் 140 ஆசனங்கள் தொகுதிவாரியாகவும் 100 ஆசனங்கள் விகிதாச்சார அடிப்படையிலும் உருவாக்கப்படவுள்ளன. பின்கூறிய விகிதாச்சார ஆசனங்களில் 5 சுடுதலான ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு கிடைக்கும். இதன்படி தற்போதுள்ள 160 தேர்தல் தொகுதிகள் 140 ஆக குறையப்போகிறது. இதனால் தமிழ் - முஸ்லிம் கட்சிகளுக்கு கிடைக்கக் கூடிய ஆசங்கள் குறையப் போகின்றன. மலையகத்தைப் பொருத்தளவில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 3 தமிழ் தொகுதிகள் அமையும். அதிலும் மலையக தமிழ் கட்சிகள் வெற்றிபெறுமா என்பது சந்தேகமே. ஏனெனில் இதொகாவும் முற்போக்கு தமிழ் கூட்டமைப்பும் தனித்தனியாக போட்டியிடும்போது தமிழ் வாக்குகள் பிரியும். ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் ஒருவர் வெற்றிபெறக் கூடிய நிலைமை இருக்கிறது. - அவர் தமிழராக இருக்க வேண்டியதில்லை. 1977 இல் நுவரெலிய மஸ்கெலிய மூவங்கத்தவர் தொகுதியில் காமினி திசாநாயவுக்கு மலையக தமிழர் வாக்களித்தும் அவர் அதிகபடியான வாக்குகளைப் பெற்று முதலாவது எம் பியாக தெரிவு செய்யப்பட்டதும் தொண்டமான் மூன்றாவது எம்பியாக தொpவு செய்யப்பட்டதும் வரலாறு. அன்று தொண்டமான் மூன்றாவது ஆசனத்தை வென்றது அத்தொகுதியில் வாழ்ந்த வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்கினால் தான் என்பது கசப்பான உண்மையாகும். தற்போது விவாதத்திலுள்ள விகிதாச்சார ஆசனங்களில் ஒன்றைத்தானும் மலையக தமிழ் கட்சிகள் பெறமுடியாது. அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தயவில் அதன் பட்டியலில் இடம்பெற்றால் மாத்திரமே தெரிவுசெய்யப் படுவர். இது ஒரு ஆபத்தான நிலைமையாகும். 

இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு மலையக சமூக அமைப்புகள் ஒன்றுதிரண்டு மலையக பாராளுமன்ற பிரதிநிதிகளின் ஊடாக பாராளுமன்றத்தில் தமது கோரிக்கையை வெறுமனே சுலோகமாக அன்றி விஞ்ஞானபூர்வமாக தெட்டத் தெளிவாக முன்வைப்பதோடு மலையக மக்களுக்கு இவ்வனர்த்தத்தைப் புரியவைத்து அவர்களை அணிதிரட்டி பாராளுமன்றத்திற்கு வெளியே கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும். அதே சமயம் ஏனைய தமிழ் - முஸ்லிம் கட்சிகளினதும் தெற்கிலுள்ள சமூக அமைப்புகளினதும் ஆதரவைப் பெற வேண்டும்.

நியு+சிவாந்தில் வாழும் மாவோரி மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் நடைமுறை மெய்ம்மைப்பாடு (ஏசைவரயட) முறையும் லெபனானில் இனவிகிதாச்சார அடிப்படையில் தேர்தல் தொகுதிகளை உறுதிபடுத்தும் இணக்க அடிப்படையிலான பிரதிநிதித்துவமுறையும் (உழகெநளளழையெட சநிசநளநவெயவழைn);  சிறிய தேசயங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் பிரத்தியேக ஆசன ஒதிக்கீட்டு முறை (சுநளநசஎநன ளுநயவள). இந்தியாவிலும் ஜோர்தானிலும் சோல்வீனியாவிலும் தாய்வானிலும் நைகரிலும் மேற்கு சாமோவா விலும் காணப்படுகிறது. இத்தகைய ஒரு பொறிமுறையை இனங்கண்டு மலையக மக்கள் திட்டவட்டமான கோரிக்கையை முன்வைத்து அதனை அடையும் வரைக்கும் ஒயாது அரசியல்ரீதியாக செயற்பட வேண்டும்.

இல்லையேல் தமது தனித்துவ அடையாளத்துக்காவும் பராhளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை உறுதிபடுத்தக் கோரியும் இயக்கம் நடத்திவருகின்ற உலகினால் மறக்கப்பட்ட ஜப்பானிலுள்ள ஐனு (யுஐNரு) என்ற ஆதிக் குடிகளைப் போல மலையக தமிழரின் நிலைமை ஆகிவிடும்.

6. செயற்பாட்ட அரசியலாளர் என்பதற்கு அப்பால் ஒரு ஆய்வாளராக மலையகம் குறித்த உங்களது நூல்கள் கவனத்தைப் பெற்றன. அவற்ளை இற்றைப்படுத்தி மலையக வராலற்றாவணமாக ஒரு நூலை வெளியிடும் உத்தேசம் ஏதும் உள்ளதா?

நிச்சயமாக இருக்கிறது. தொடர்ச்சியாக திரட்டிவரும் தகவல்களையும் ஆய்வுகளைத் ஆதாரமாகக் கொண்டு மலையக மக்களின் வரலாற்றை விரிவாக எழுதி நூலாக வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.  கணணி அச்சு செய்து உதவக் கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அத்தகைய ஒருவர் கிடைத்ததும் அப்பணி நிறைவேறும். நான் எழுதிய “இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்” என்ற நூலை மறு பதிப்பு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் நான் செல்லும் இடமெல்லாம் கேட்கிறது. அதனை மறுபதிப்பு செய்ய இலங்கையில் எவராவது முன்வந்தால் அதற்கான சம்மதத்தை வழங்க தயாராக இருக்கிறேன்.

7. மலையக அரசியலில் இன்று முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயங்கள் எவை என தாங்கள் கருதுகிறீர்கள்?

ஏற்கெனவே கூறியதைப் போல மலையக மக்களின் இருப்பே கேள்விக்குறிக்குள்ளாகி இருக்கிறது. எனவே இன்றைய அடிப்படை பிரச்சினை அவர்களது இருப்பை பாதுகாப்பதாகும். எனவே மிகவும் தந்திரமான முறையில் மலையக மக்களை நிர்மூலப்படுத்துவதற்காக அரசினால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களையும் குறிப்பாக தேயிலைக் கன்றுகளை பகிர்ந்தளிக்கும் திட்டத்தினையும் காணி சுவீகரிப்பையும் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தற்போது அரசினால் முன்னெடுக்கப்படுவதனால் எமது உடனடி கவனம் அதில் எமது உரிமைகள் உத்திரவாதப்படுத்தப்படுவதில் குறிப்பாக புதிய தேர்தல் முறையில் எமது பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்திக் கொள்வததிலும் அதிகாரப்பகிர்வில் எமக்கு கிடைக்கவேண்டியதைப் பெறுவதிலும் இருக்க வேண்டும். எமது பராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினையில் காட்டும் அக்கறையை மலையக மக்களின் அதிகாரப் பகிர்வு விடயத்தில் காட்டாமலிருப்பது கவலையளிக்கிறது.

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates