Headlines News :
முகப்பு » » 20வது திருத்தச்சட்டம் : கசிந்துவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு!

20வது திருத்தச்சட்டம் : கசிந்துவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு!

20 வது திருத்தத்திற்கு உயர் நீதிமன்றம் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பை முடித்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. அந்தத் தீர்ப்பு பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அதில் உள்ள தகவல்கள் தற்போது கசிந்திருப்பதாகவும் அறியக்கிடைக்கிறது. இந்த தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

அரசாங்கம் முன்வைத்திருந்த 20வது திருத்தச்சட்ட நகலை எதிர்த்து மனித உரிமையாளர்கள், சட்ட நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் என பலரால் 39 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

உயர்நீதிமன்றத்தின் "உயர்நீதிமன்றத்தின் முடிவு" என்று தலைப்பிடப்பட்ட 61 பக்க அறிக்கையில், அரசியலமைப்பின் 20 வது திருத்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சில சிறிய மாற்றங்களை மாத்திரம் தவறு என்று அதில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. 

  • பிரிவு 33 (1) இன் கீழ் ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குவது தவறு என்று குறிப்பிட்டிருக்கிறது. (20 இல் 3வது).
  • ஜனாதிபதிக்கு எதிராக மனித உரிமைகள் மீது வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தை நீக்குவது தவறு (20 இல் 5வது).
  • தேர்தலுக்குப் முடிந்து ஓராண்டின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவது தவறு (20 இல் 14வது).
  • தீர்மானம் 20 இன் 14) தேர்தல் ஆணையம் அளித்த அளவுகோல்களை நீக்குவது தவறு (20 இல் 20வது).
  • மற்ற அனைத்து தீர்மானங்களும் அரசியலமைப்பின் 83 வது பிரிவுக்கு உட்பட்டவை.

முறைப்பாடுகளை முன்வைத்தோர் விபரம்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates