Headlines News :
முகப்பு » » மலையக மக்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கின்றோம்....!ஆர். சங்கரமணிவண்ணன் பொதுச் செயலாளர், இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்

மலையக மக்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கின்றோம்....!ஆர். சங்கரமணிவண்ணன் பொதுச் செயலாளர், இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்


கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடந்த மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் பேச்சுவார்த்தைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். இதன் பின் கொண்டு வரப்பட்ட இந்த புதிய ஒப்பந்தமானது கம்பனிக்காரர்கள் தொழிலாளர்களுக்கு எதிராகச் செய்த சதியின் விளைவாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் இதுவரை தமக்கு கிடைக்க வேண்டிய நிலுவையை கோரியும் தமது நியாயமான சம்பள உயர்வைக் கோரியும் மக்கள் சார்பான அரசியல் தொழிற்சங்கங்களும் மற்றும் பண்பாட்டு இயக்கங்களும் பல்வேறுப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வம்சம் மலையக மாணவர்களின் கல்வியில் பாரிய தாக்கம் செலுத்துவதாக இருப்பதால் இப்போராட்டங்களுக்கு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கான தமது ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதற்கான கலந்தரையாடல் கூட்டம் எதிர்வரும் 12-11-2016 அன்று ஹட்டனில் அமைந்துள்ள இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் காரியாலத்தில் நடைப்பெறும்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates