Headlines News :
முகப்பு » » தொழிலாளரின் சம்பள உயர்வு: இலாப - நட்டகணக்கில் பிரசாரபோர் - ஏ.எஸ்.சந்திரபோஸ்

தொழிலாளரின் சம்பள உயர்வு: இலாப - நட்டகணக்கில் பிரசாரபோர் - ஏ.எஸ்.சந்திரபோஸ்


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வருமானம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பெருந்தோட்டத் தொழில்களை நடத்தும் முதலாளிமார் சம்மேளனம் தோட்டங்கள் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்குவதாகவும், கடந்த வருடம் ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலை விற்பனையின் போதும் 25 ரூபா நட்டத்தை எதிர்நோக்கியதாகவும் துரிதமான பிரசார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளன.

இந்நிலையில் 1000 ரூபா சம்பளம் என்பது எப்படி சாத்தியமாகலாம் தோட்ட வேலைகளில் வழங்கப்படும் சம்பளத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிைலவரங்கள் எப்படி காணப்படுகின்றன. தொழிலாளர்கள் தோட்டங்களில் நிர்ணயிக்கப்படும் சம்பளத்தில்தான் தொடர்ந்து வாழ வேண்டுமா போன்ற விடயங்களை அவதானிக்க வேண்டியது அவசியமாகும்.

மேற்குறிப்பிட்ட இவ்விடயங்களை அறிவதற்கு அரசாங்கத்தினால் 2009/10 காலப்பகுதியில் வெளியிடப்பட்ட குடும்ப வருமானம், செலவுகள் பற்றிய அளவீடு (House hold income and expenditure salary 2009/10) மற்றும் மத்திய வங்கியின் ஆண்டறிக்கை என்பவற்றில் வெளியிடப்பட்ட தகவல்களையும் மிக அண்மையில் இம்மக்களுடன் மேற்கொள்ளக்கூடியதாக இருந்த தொடர்புகளையும் மட்டும் பின்னணியாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தேயிலையில் உற்பத்திச் செலவு வருடா வருடம் அதிகரித்து வந்துள்ளது என்பது உண்மையானதாகும். உதாரணமாக அண்மைக் காலப்பகுதியில் இதன் உற்பத்தி செலவு வருடாந்தம் 10 வீதத்திற்கு அதிகமாக அதிகரித்து வந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

2012இல் ஒரு கிலோ கிராம் தேயிலையின் உற்பத்தி செலவே 390 ரூபாவாக காணப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டில் சுமார் 13 வீத அதிகரிப்புடன் 48 ரூபாவாகக் காணப்படுகின்றது.

உற்பத்திச் செலவில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தாலும் விற்பனையின் போது உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைந்த விலையில், நட்டத்தில் விற்பனை செய்துள்ளதாக எத்தகைய தகவல்களும் இலங்கை மத்திய வங்கியில் ஆண்டறிக்கையில் குறிப்பிடவில்லை. எடுத்துக் காட்டாக மேற்குறிப்பது போல 2012இல் உற்பத்தி செலவு 390 ரூபாவாக இருந்த போதும் அதனை ஏல விற்பனையின் போது ஒரு கிலோ கிராம் 392 ரூபாவாக விற்பனை செய்துள்ளனர். இதைவிட ஏற்றுமதியின் போது ஒரு கிலோ கிராம் 563 ரூபாவாக ஏற்றுமதி செய்துள்ளனர். இதுபோல 2013 இல் மேற்கொண்ட உற்பத்தியிலும் உற்பத்தி செலவு 418 ரூபாவாக காணப்பட்டாலும் ஏல விற்பனையின் போது ஒரு கிலோ கிராம் 445 ரூபாவாகவும் ஏற்றுமதியின்போது ரூபா 625/=க்கும் விற்பனை செய்துள்ளனர்.

மத்திய வங்கி காட்டும் புள்ளிவிபரங்களில் கம்பனிகளின் உற்பத்திகள், அது தோட்டங்களின் உற்பத்தி என்று வேறுப்படுத்தி காட்டுவதில்லை. இப்புள்ளிவிபரங்கள் இலங்கையில் வேறுபட்ட நிறுவனங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் தேயிலையின் சராசரி விலைகள் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் இப்புள்ளி விபரங்கள் சராசரியல்ல என்பதால் கம்பனிகளின் விலைகளிலிருந்து பெருமளவு வேறுப்பட்டதாக இருக்க முடியாது. எனவே, கம்பனிகள் தமது உற்பத்தியின் போது ஒவ்வொரு கிலோ கிராமுக்கும் ௨௫ ரூபா நட்டம் ஏற்படுகிறது என்பதற்கு அரசாங்க புள்ளி விபரங்களில் போதுமான தரவுகள் இல்லை என்பதனால் அதனை ஏற்றுக்கொள்வது என்பது விமர்சனத்திற்குரிய விடயமாகும்.

இதைவிடத் தொடர்ச்சியாகவே அதாவது, 10 வருடங்களுக்கு மேலாக நட்டத்தில் இயங்குகின்ற கம்பனிகள் தொடர்ந்தும் நட்டத்தில் தமது தொழிலை நடத்துவதற்கு எப்படி முடியும் முகாமைத்துவ ஒழுங்குவிதிகளின் படி குறைந்த பட்சம் 40 வீதத்தையாவது இலாபம் பெற்றுக்கொள்ள முடியாத கம்பனிகள் உடனடியாக மூடப்பட்டு, அதனை இலாபமீட்டும் தொழிற்றுறையாக மாற்றுவதற்கு உபாயங்களை பின்பற்ற வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும்.

இதைவிடத் தோட்ட முகாமையே தொழிற்சட்ட விதிகளின்படி அங்கு வாழும் தொழிலாளர்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும். இதுவிடயமாக கூறப்படும் விடயம் என்ன வென்றால், தோட்டங்களில் ஒரு தொழிலாளியின் உழைப்பில் அவர்களில் பின்னுள்ள நான்கு குடும்ப அங்கத்தவர்களின் நலன்களையும் தோட்டக் கம்பனிகளே பராமரிக்கின்றன என்பதாகும் உண்மையில் தோட்டங்களில் நிரந்தர பதிவு செய்துகொண்டு வேலை செய்யும் தொழிலாளர் ஒரு குடும்பத்தில் ஒருவராக இருக்கலாம்.

ஆனால் மற்றுமொருவர் தற்காலிக தொழிலாளர்களாக தோட்டத்திலேயே  தற்காலிக தொழிலாளருக்கு ஊழியர் சேமலாப நிதி மற்றும் அலுவலர் தோட்டங்களில் வழங்கப்படுவதில்லை. ஆனால் அவர்களது உழைப்பு அயராது தொழிலாளர்களின் பங்களிப்பினை எந்த வகையிலும் குறைந்துள்ளதாக கூறமுடியாது.

தோட்டங்களில் இப்போது சுமார் 332,000 நிரந்தர தொழிலாளர்களும் ஏற்கனவே நிரந்தர தொழிலாளர்களாக இருந்து தோட்ட வேலைகளில் இருந்து விலகி தற்காலிக தொழிலாளர்களாக சுமார் 200,000 மொத்தமாக சுமார் 430,000 பேர்  இவர்கள் பெருந்தோட்ட கம்பனிகளிடம் இருந்து சுமார் 118,000 ஹெக்டேயர் தேயிலைக் காணிகளிலும் சுமார் 92,000 ஹெக்டேயர் றப்பர் காணிகளிலும் தொழில் புரிபவர்களாக உள்ளனர். இந்நிலையில் கம்பனியால் தொழிலாளர்கள் யாவருக்கும் இலவச மருத்துவம் வீடு குடிநீர் என்று இந்த சலுகைகள் வழங்குவதால் நட்டம் ஏற்படுகின்றது என்று உறுதியான போதுமான ஆதாரங்கள் இல்லை.

இதைவிட தேயிலையில் மொத்த உற்பத்தி செலவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சலுகைகள் என்பன சுமார் 6070 வீதமாக காணப்படுகின்றது என்றும் எவ்வாறாயினும் மேலதிகமாக சம்பள அதிகரிப்பு என்று உற்பத்தி செலவை அதிகரிக்கும் என்பதால் அதற்கு உடன்படுவது இயலாது என்பது பொதுவாக முன்வைக்கப்படும் விவாதமாகும்.

உண்மையில் தேயிலையின் உற்பத்தி செலவினை கணிப்பிடுதல் போதுமான தகவல்கள் இதுவரை எவருக்கும் வழங்கப்படவில்லை. உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தாமே ஒரு கணக்கை போட்டு அதில் தொழிலாளர்களுக்கான செலவு அதிகமானது என்று குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். உற்பத்தி செலவு பற்றி தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் சுதந்திரமாக கணிப்பீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் முடிவுகள் கிடைக்கும் போதே அதன் உண்மைத் தன்மையை அறியலாம். இந்தியா பங்களாதேஷ்  போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக உற்பத்தி செலவுகள் பற்றி சுதந்திரமாக மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. இதனை ஏற்றுக் கொண்டு உற்பத்தி செலவு பற்றி தர்க்கரீதியாக மதிப்பீடு செய்யக்கூடிய தகுதி வாய்ந்தவர் அல்லது நிறுவனங்களிடம் மதிப்பீடு செய்வது தேயிலை இறப்பர் உற்பத்தியில் எதிர்காலத்துக்கு பயன்தரக்கூடிய செயலாகும்.

இப்போதைய நிலையில் தோட்டங்களை விட்டு வெளியேறும் குறிப்பாக ஆண் தொழிலாளர்கள்   விவசாய தொழில் துறைகளில் நாளாந்தம் 1000 முதல் 1500 ரூபா வரையிலான வருமானத்தைப் பெற்றுகொள்கிறார். House hold income.....   பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களின் சராசரி வருமானம் சுமர் 17000 ரூபாவாகும்.  கிராமங்களில் இவ்வருமானம் 23000 ரூபாவாக காணப்படுகிறது.

இதன்படி இரா தேர்தல்  மாதாந்த வருமாம் 85000 ரூபா என்பதாகும். ஆனால்  இது 11500ரூபா ஆக காணப்படுகிறது.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க வேண்டும். பெருந்தோட்டத்தில் காலப் சராசரி வருமானம் அங்கு வாழ்ந்த நாளாந்த வேலைக்கு வேதனம் பெற்றுக் கொள்கிறார். தொழிலாளர்களில் வருமானத்தினால் மட்டும் கொண்டதாக காணப்பட்ட தோட்டப் பகுதியில் தொழில்புரிய சகலராலும் உள்ளடக்கிய சராசரி கணிப்பாகும்.
இவ் பெருந்தோட்ட மாவட்டங்களை பெறுத்தவரையில் நுவரேலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை என்பவற்றுடன் குருநாகல், கண்டி, மாத்தறை, தலவாக்கலை உள்ளடக்கப்பட்டுள்ளன. குருநாகல், கண்டி, மாத்தளை மாவட்டங்கள் தேயிலை இறப்பர் போன்ற பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் வாழ்க்கையை முழுமையாக பிரதிபலிக்கும் மாவட்டங்களாக முடிவு செய்தல் பொருத்தமாக இருக்கமாட்டாது.

இப்போது தேயிலை என்பது பெருந்தோட்ட கம்பனிகளிடம் முழுமையாக  மொத்த உற்பத்தியை 70 வீதம் சிறுதோட்டங்களிலேயே மேற்கொள்கிறார்கள். இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் பிரதான தொழிலாளர் தேவை. தொழில் நல்ல முறையில் வளர்ந்துள்ளது. கம்பனிகள் சிறு தோட்டங்களை  கொண்டு தொழில் துறையை முன்னேற்ற வேண்டும். இதில் தொழிலாளர்களும் பங்காளிகளாக மாற வேண்டும். இந்நிலையில் சம்பளம் தீர்மானம் என்பது சந்தைகளில் கேள்வி நிரம்பல் கோட்பாட்டின்படி தீர்மானிக்கப்படும்போது அது   அபிவிருத்தியாக மாறலாம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates