Headlines News :
முகப்பு » » 1000/= : !+? - ஜே.ஜி. ஸ்டீபன்

1000/= : !+? - ஜே.ஜி. ஸ்டீபன்


பாவப்பட்ட ஜென்மங்கள் எனும் வாசகத்து க்கு வரைவிலக்கணம் தேடுவதானால் தயக்கமே இன்றி தோட்டத் தொழிலாளர்களை ஞாபகப்படுத்தி இடித்துரைத்து கூற முடியும்.

தோட்டத் தொழிலாளர்கள் என்றதும் நீண்ட வரிசையில் அதாவது லைன் (LINE) முறைமையில் 16 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட இரண்டு அறைகளைக் கொண்டமைக்கப்பட்டுள்ள வீட்டு வாழ்க்கையும் சுகாதார வாழ் க்கையை எண்ணியும் பார்க்க முடியாதவொரு படமுமே மனக்கண்முன்னால் தோன்றுகிறது.

தோட்டத்தொழிலாளர்களின் சமூக பொருளாதார வாழ் க்கைச்சூழல் மாறாத கோட்டில் பயணித்துக்கொண்டிருப்பதற்கு முன்னால் நிற்பவரைப்பார்த்து விரல் நீட்டி குற்றம் சுமத்தி தப்பித்து விட முடியாது.

லயன் வாழ்க்கை முறைமை மாற்றியமைக்கப்படாதிரு ப்பதற்கும் தமது அடிப்படை சுகாதார வசதிகள் மேம்படாதிருப்பதற்கும் ஏனைய சமூகங்களோடு தம்மை ஒப்பி ட்டு போட்டித்தன்மையுடனான படிநிலைக்கு நகர்ந்து செல்வதற்கும் இன்னும் கூறப்போனால் பொருளாதார ரீதியில் தம்மை மேம்படுத்தி கொள்வதற்கும் அக்கறைய ற்றவர்களாகவே தோட்டத் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.

மலையக சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகள் தொடர்பில் அவ்வப்போது வெளிப்படுத்தல்கள் இருந்து வருகின்ற போதிலும் விழிப்பற்றவர்களாகவும் சோம்பேறிகளாகவும் இருக்கின்றனர் என்று கூறினால் அதில் பிழையில்லை. தோட்டத்தொழிலாளர்களின் மனோநிலையை நன்கு அறிந்து புரிந்து எடை போட்டு வைத்திருக்கும் நபர்கள் குறித்து நாம் அலட்டிக்கொள்ள முடியாதுள்ளது. ஏனெனில் அவர்களும் இவர்களிலிருந்துதான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு அந்தஸ்தையும் தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.

மலையகத்தை பொறுத்தவரையில் அங்கு கட்சிகளு க்கும் பஞ்சமில்லை. தொழிற்சங்கங்களுக்கும் குறைவி ல்லை. கோடிட்டுக் கூற வேண்டுமானால் 100 அங்கத்தவ ர்களைக்கூட கொண்டிராத தொழிற்சங்கங்களும் இருக்கின்ற நிலையில் உண்மையாகவே மக்களுக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் சிலர் இயங்கி வருவதையும் மறுத்து விட முடியாது.

இன்றைய நிலைமையில் தோட்டத்தொழிலாளி ஒருவ ரின் சம்பளமானது அனைத்து கொடுப்பனவுகளுடன் நாளொன்றுக்கு 620 ரூபாவாக அமைந்துள்ளது. இங்கு குறிக்கப்படுகின்ற 620 ரூபாவை ஒருநாள் சம்பளமாக பெற வேண்டுமானால் அதற்கான கடமை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

620 ரூபா எனும் சம்பளமானது குறைவான தொகை என்று கூறுவதற்கு இல்லை. தமக்கான சம்பளத்தொகை யை முழுமையாக பெற வேண்டுமானால் தொழிலாளி குறிப்பிட்ட நாட்களுக்கு வேலைக்கு சென்றிருத்தல் அவசியமாகும். சுகயீனம் மற்றும் ஏனைய காரணங்களை காட்டி வேலைக்கு செல்லவில்லையெனில் வேலைக்கு செல்லாத ஒருவருக்கு சம்பளத்தை வழங்குவதற்கு முதலாளியானவன் முட்டாள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நகர்ப்புறங்களில் தொழில் புரிகின்றவர்களது சம்பளத்துடன் ஒப்பிடுகையில் தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பளம் குறைவானது அல்ல என்று அடித்துக் கூற முடியும்.

தோட்டத் தொழிலாளரின் சம்பளத்துக்கு சமனான தொகையை பெறுகின்ற நகர்ப்புற வாசி ஒருவர் தமது குடும்பத்தினது பொருளாதார படிமுறையை கட்டமைத் துக்கொள்வதை போன்ற நிலைமை மலையகத்தில் இல்லை.

எந்த சந்தர்ப்பத்திலும் அடுத்தவரை நம்பியே பழகிப்போன மக்களாக இருப்பதாலேயே வாழ்க்கையில் முன்னேற முடியாத ஜென்மங்களாக இருந்து வருகின்றனர்.

தோட்டத்தொழிலாளி ஒருவரது குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் தொழில் புரிவோராக இருந்தால் மேற்கூறப்பட்ட சம்பளத்தொகையில் சிறந்த முகாமைத்துவத்தை கடைப்பிடித்து சிறப்பாக வாழ முடியும்.

நகர்ப்புறத்து வாசியையும் தோட்டத்தொழிலாளியை யும் வருமான ரீதியில் ஒப்பிட்டு பேச முடியாது என்கின்ற போதிலும் அடுத்தவரை பார்த்தேனும் தம்மை செதுக்கிக்கொள்ளும் இயலுமையாக இருக்க வேண்டும். குடும்ப வருமானத்தை சிறப்பாக முகாமை செய்து,வரையறுத்து, செலவு செய்து தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிலான நிரல்களின் அடிப்படையில் எம்மை நாம் ஆக்கிக்கொள்வோமெனில் வாழ்க்கை வளமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

குடிநீர், எரிவாயு, வீட்டு வாடகை என்ற செலவினங்கள் பெருந்தோட்டப்புறங்களில் இல்லை. ஆனால் நகர்ப்புறங்களில் இவை இணைந்துள்ளன. இப்படி இருக்கையில் திட்டமிடல்கள் இல்லாததாலேயே அரசியல்வாதிகளைக் குறை கூறுவதற்கு பழக்கப்பட்டு விட்டனர்.

மேலும் தோட்டத்தொழில் செய்யும் கணவன் மனைவி ஆகிய இரு தரப்பினருமே மதுவுக்கு அடிமையாகியிருப்பது மிக மோசமான கலாசாரத்தை வளர்த்து வருகின்றது. மலையகத்தில் மதுபானக் கடைகள், மதுபான வர்த்தக நிலையங்கள் அதிகரிப்பதற்கும் கள்ளச்சாராயக் கடை கள் முளைப்பதற்கும் கள்ளச் சாராயம் உற்பத்தி செய்யப்படுவதற்கும் இவ்வாறு ஆணும் பெண்ணும் போதை தலைக்கேறும் வரையில் குடியில் மிதப்பதே பிரதான காரணமாகும்.

இவ்வாறு மது போதையில் இருக்கும் கணவனும் மனைவியும் பிள்ளைப் பேறுகளை பெற்றுக்கொள்ளும் விடயத்திலும் தவறிழைப்பதால் இயல்பாக தேவைப்படுகின்ற கால இடைவெளி இல்லாது பிள்ளைப்பேறுகளும் உண்டாகி விடுகின்றன. இப்படியான நிலைமைகள் குடும்பத் தின் வறுமை நிலைக்கு பிரதான காரணிகளாகின்றன. இவை மாற வேண்டும்.

மலையகத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு செயற்படுகின்ற தொழிற்சங் கங்கள் தமது அங்கத்துவங்களை அதிகரித்துக்கொள்வதற்கு மிகச் சிறப்பாக செயற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் கணவன் ஒரு தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றிருக்க மனைவி பிறிதொரு சங்கத்தில் இணைந்திருப்பார். இதில் இன்னுமொரு விடயம் என்னவெனில் தாம் எந்த தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கி றோம் என்பதே தெரியாத நிலையிலும் இருக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் இத்தகைய நிலைமையை உணர்ந்து கொண்டதால்தான் அரசியல்வாதிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கோயிலுக்கு நாற்காலிகளும் ஒலிபெருக்கிகளும் இன் னும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் கூரைத்தகடுகளும் கொடுத்து விட்டால் போதும். எமது மக்கள் வலிந்து விடுவார்கள். கோயிலுக்கு ஒலிபெருக்கி கொடுக்கும் அரசியல்வாதியை தெய்வமாக்கி விடுவார் கள்.

இவ்வாறான சூழ்நிலைகள் மாறும் போதுதான் மலையமும் மாறும். மலையகத்தில் மாற்றம் வேண்டும் எனும் போது இப்படியான மாற்றமே எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படியான நிலையில்தான் மலையகம் தொடர்பிலும் மலையக சமூகம் தொடர்பிலும் அறிக்கை மன்னர்கள் சிலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

வெறுமனே பத்திரிகைகளில் அறிக்கைகளை வெளியிடுவதோடு அவர்களின் அரசியல் ஓடிக்கொண்டிருக்கி றது. அறிக்கை மன்னர்களாக இருப்போர் மலையக மக்களின் வாழ்விடங்களுக்கு சென்று எதனையும் கண்டறிவதாகவோ கேட்டறிவதாகவோ இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இங்கு புதுமையான விடயம் என்னவென்றால் தேயி லைத் தொழில் புரியும் பெண் தொழிலாளர்களில் நூறு வீதமானோரும் ஆண் தொழிலாளர்களில் 99 வீதமானேரும் பத்திரிகைகள் குறித்தோ அல்லது வேறு ஊடகங்கள் குறித்தோ பெரிதாக அலட்டிக் கொள்வது கிடையாது.

பாடசாலைச் சமூகம், படித்த சமூகம் மற்றும் வர்த்தக சமூகமே அதிகளவு உலக நடப்புக்களை அறிவதற்கு ஆவலாக இருப்பதைக் காணமுடிகிறது.

தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கின்றவர்களால் ஏற்பாடு செய்கின்ற கூட்டங்களுக்கு சென்று அங்கு கை தட்டுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் அரசியலே மலையகத்தில் காலூன்றியுள்ளது. இவ்வாறானவர்களுக்காகவே அறிக்கை மன்னர்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள். இப்படியானவர்களிடம் ஏதேனும் உண்மை நிலைமைகளை எடுத்துக்கூறினால் தலைமைகள் புரா ணம் பாடத்தொடங்கி விடுவர். நாம் அந்தக் காலத்தில் அதனைச் செய்தோம். இதனைச் செய்தோம் என்றும் போராட்டங்களை முன்னெடுத்தோம் என்றும் பிதற்றிக்கொள்வர். இந்த பிதற்றல்களில் இருக்கின்ற நியாயத் தன்மையை ஏற்றுக்கொண்டாலும் சம காலத்து போக்குகளுக்கும் சமூக பொருளாதார அரசியல் கலாசார மற்றும் விஞ்ஞான யுகத்துக்கும் ஏற்றாற் போல் நாமும் மாறி நமது சமூகத்தையும் இழுத்துச் செல்வோராகவே இருக்க வேண்டும்.

தற்போது மலையக அரசியல் களத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளப் பிரச்சினை, கூட்டு ஒப்பந்தம்,அரசாங்கத்தினால் தனியாருக்கு சம்பள அதிகரி ப்பு, ஆலோசனை தொடர்பில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படியான கால கட்டங்களில்தான் மலையக இளை ஞர் சமுதாயம் விழிப்படைய வேண்டிய தேவை எழுகின்றது. எமது முன்னோர்கள் கல்வியில் ஆர்வம் காட்டாத தால் நேர்ந்த கதி இன்று மலையகத்தில் உணரப்பட்டு விட்டது.

அந்த வகையில் இன்றைய மலையக இளைஞர் சமுதாயம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை கூறியே ஆக வேண்டும்.

இவ்வாறு எழுச்சி கண்டு வரும் மலையகத்தின் இளை ஞர் சமூகம் அதிகமாய் சிந்திக்க வேண்டியவர்களாகவும் மூத்தோர்களின் சிந்தனையை தட்டியெழுப்பி தூண்டி விடுபவர்களாகவும் மாற வேண்டும்.

மலையக இனத்தை கட்டிக் காப்பதாக கூறுகின்ற அரசியல் தலைமைகள் காலா காலமாய் அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தவர்கள் தோட்டப் புறங்களில் இருந்து படித்த இளைஞர்களை தெரிந்து அரச சேவைகளுக்குள் புகுத்தி விடுவதற்கு செயற்பட்டிருக்கின்றனரா என்பது பிரதான கேள்வியாக இருக்கின்றது.

ஆசிரியத் தொழில், தபால் ஊழியர் இல்லாவிட்டால் கிராம உத்தியோகத்தர் பதவிகளைத் தவிர்ந்த ஏனைய பதவிகளில் சந்தர்ப்பங்கள் கிட்டுவதாக இல்லை. அமைச்சர்களாக பதவியேற்றோர் தமது அமைச்சு நடவடிக்கைகளுக்காக பதவியில் அமர்த்தப்படுகின்ற இளைஞர்கள் அமைச்சுப்பதவிக்காலம் முடிவடைந்ததும் குறித்த இளை ஞர் வேறு தொழிலை தேடி அலையும் நிலைமை உருவாகின்றது.

அடுத்தவன் எந்த விதத்திலேனும் முன்னேறி விடக் கூடாது என்ற மகா எண்ணம் தமிழனிடம் மாத்திரமே இரு க்கின்றது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது இனத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். பாராளுமன் றம், தேர்தல்கள் செயலகம், சுகாதாரத்துறை, கல்வி நிர்வாக சேவை உள்ளிட்ட அனைத்து அரச பணிகளிலும் தமது சமூகத்துக்கு சந்தர்ப்பத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்து வருகின்றனர்.

இதில் சிங்களவர்களைப் பற்றி கூறித் தெரிய வேண்டி யதில்லை. ஆனாலும் மலையகத்தான் மாத்திரமே இது பற்றி எண்ணம் கொள்வது கிடையாது.

இப்படியான நகர்வுகள் ஏற்ற தாழ்வுகள் அசட்டுத் தன்மைகளுக்கு மத்தியில்தான் அப்பாவித் தோட்டத் தொழி லாளர்களின் சம்பள விடயத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள் நாட் சம்பளக்காரர்கள், நாட்கூலிகள் என்ற அந்தஸ்திலேயே வாழ வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளும் கொண்டிருக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளரின் ஒரு நாளுக்கான சம்பள த்தை இத்தனை ரூபாவில் அதிகரிக்க வேண்டும் என்ற பேச்சிலேயே மலையகத்தில் அரசியல் செய்யப்படுகிறது. ஆனால் தோட்டத் தொழிலாளிக்கு மாதச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்து அந்தஸ்தை வழங்குவதற்கு எவ ரும் முன் வந்தது கிடையாது. இப்படிக் கூறுவதற்கும் விள க்கம் சொல்வதற்கும் ஏராளமானோர் வருவர் என்பது புரிகிறது.

எத்தனையோ போராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றதாகக் கூறப்படுகிறதே? தோட்டத் தொழிலாளி க்கு குத்தப்பட்டுள்ள நாட்கூலி என்ற நாமத்தை துடை த்தெறிவதற்கு என்ன தான் செய்யப்பட்டது. மலையகத் தின் மூத்த அரசியல் வாதிகள் தங்களது காலம் முழுதும் இதனைப் பற்றி சிந்திக்காது இப்போது காலம் கடத்துபவர்களாக இருக்கின்றனர். அப்படியானவர்கள் தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையாவது முன்வைக்க முடி யும். இதிலிருந்தும் இவர்கள் தவறுகின்றனர்.

மேலே குறிப்பிட்டது போன்று இன்னும் சில மாதங்க ளில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயமும் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிலைப்படுத்தியே நாடு முழுவதும் காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மலையகம் மாத்திரம் இதற்கு விதிவிலக்காகி விடாது.

இந்நாட்டை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற, ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கங்களும் தோட்டத் தொழிலாளிகளின் உண்மையான நிலைவரங்களைப் புரிந்து கொண்டதில்லை. அரசாங்கத்திலிருந்து எந்தவித பரிந்துரைகளும் இதுவரையில் இல்லை என்ற போது அரசாங்கங்களால் நேரடியான எந்தவொரு நன்மையினையும் சலுகையினையும் பெற்றது கிடையாது. மலையக அமைச்சர்கள், எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தம க்கு ஒதுக்கீடு செய்வனவற்றில் பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டங்களை விட வேறு எதுவும் கூறுவதற்கு கிடையாது. இது பற்றி அதிக விளக்கமும் தேவையற்றது.

தற்போதும் புதிதாக பதவியேற்றுள்ள தேசிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறையினரு க்கு 2500 ரூபாவை சம்பள அதிகரிப்பாக வழங்குமாறு அரசாங்கம் தனியார் தொழில் தருநர்களுக்கு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

அது மாத்திரமன்றி 75 வீதமான தனியார் துறை தொழி ல் தருநர்கள் அரசாங்கத்தின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த அளவில் உண்மை இருக்கிறது என்பது புரியாத விடயமாகும்.

இந்நிலையில் அரசாங்கம் வழங்கியுள்ள ஆலோசனை யின் பிரகாரம் 2500 ரூபா சம்பள உயர்வை தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கான அழு த்தங்கள் தற்போது எழுந்துள்ளன.

எனினும் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு ஒரு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கப் போவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.

2500 ரூபாவை தோட்டத் தொழிலாளிக்கு பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில் நாளொன்றுக்கு 100 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. எனினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறுவது போன்று நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறுகின்றமையால் தோட்டத் தொழிலாளி ஒருவரது சம்பளம் நாளொன்றுக்கு 380 ரூபாவால் அதிகரிக்கப்ப ட்ட சம்பளமாக இருத்தல் வேண்டும்.

தற்போது கிடைக்கின்ற 620 ரூபாவுடன் அரசாங்கத் தின் பரிந்துரையின் பேரிலான 2500 ரூபா கிடைக்கும் பட்சத்தில் அதில் நிர்ணயிக்கப்படுகின்ற நாளொன்றுக்கான 100 ரூபாவையும் இணைத்தால் 720 ரூபாவாக உயர்கிறது.

இந்நிலையில் இத்தொகையோடு இன்னும் 280 ரூபா வை இணைத்து 1000 ரூபாவைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவே இ.தொ.கா. கூறுகிறது. இதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கத் தரப்புக்களையும் இணைத்துக்கொண்டு இணக்கம் காணப்போவதாகவும் கூறியுள்ளது. அவ்வாறெனின் இ.தொ.கா. வின் கணக்கின்படி மேற்குறிப்பிட்ட 2500 ரூபாவுடன் மேலும் 7000 ரூபாவை இணைத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 9500 ரூபாவால் அதிகரித்துக் கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

தனியார் ஊழியருக்கு 2500 ரூபாவை அரசாங்கம் பரிந்துரை செய்திருக்கின்ற நிலையில் அது அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில் நாட்கூலிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டவர்களாக இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு 9500 ரூபாவை மாதமொன்றுக்கான அதிகரித்த சம்பளமாக பெற்றுக்கொடுக்கப் போவதாக கூறுவது எந்தவிதத்தில் நியாயபூர்வமானது என்பது புரியவில்லை.

அத்துடன் இவ்வாறு 1000 ரூபா சம்பள உயர்வு குறித்து முன் வைக்கப்படுகின்ற கோரிக்கை நிராகரிக்கப்படின் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்துக் கொடுப்பதற்கு தாம் முழுமையான ஆதரவினை வழங்குவதாக மலையக தொழிற்சங்கங்கள் சில தெரிவித்துள் ளன.

உண்மையில் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. கூட்டு ஒப்பந்தம் நிறைவுக்கு வருகின்ற நிலையில் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் புதிய ஒப்பந்தத்திலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்.

மேலும் தேசிய அரசியலுக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங் கள் பாராளுமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் எதிர்வரும் ஜூன் மாத இறுதிப்பகுதி அல்லது ஜூலை மாதத்திலேயே கூட்டு ஒப்பந்தப் பேச்சுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என்ற நிலை உருவாகியுள் ளது.

மேலும் கூட்டு ஒப்பந்தத்தின் போது பல்வேறு இழு பறிகள் இடம்பெறுவது வழக்கமாகக் கொண்டிரு க்கின்ற நிலையில் 100 ரூபாவை அதிகரிப்பதற்கே முதலாளிமார் சம்மேளனம் மற்றும் கம்பனிகள் முன் வருவதில்லை. இவ்வாறான நிலையில் மேற்குறிப்பிடப்பட்டதான நாளொன்றுக்கு 380 ரூபா அதிகரிப்பு கோரிக்கையானது எந்தளவில் சாத்தியம் என்பது கேள்வியாக உள்ளதுடன் இதுவும் ஒருவித அரசியல் சித்து விளையாட்டாக இரு க்கின்றதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

ஆகவே தோட்டத் தொழிலாளர்கள் இவ்வாறான விட யங்களில் மிகவும் விழிப்பாக இருத்தல் அவசியமா னது. நிறைவேறாத அல்லது நிறைவேற்றப்பட முடியாத விடயங்கள் தூண்டி விடப்பட்டு இறுதியில் நிறைவேறா மலே ஆகி விட்டால் வெறுப்புத் தன்மையே தோன்றும்.

அப்பாவிகள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். எந் தச் சந்தர்ப்பத்திலும் தோட்டத் தொழிலாளர்கள் உண ர்ச்சி வசப்பட்டு விடக்கூடாது. அரசியல் களத்தில் கூற ப்படுகின்றவற்றை போல் அரசாங்கத்தினால் வழங்கப் படுகின்ற உறுதி மொழிகளையோ எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்படுகின்ற தர்க்கங்களையோ உடனடியாக நம்பி விடவும் வேண்டாம். பின்னர் ஏமாறவும் வேண்டாம். சிந்தித்து செயலாற்றினால் யாவருக்கும் ஜெயம் உண் டாகும்.

ஜூன் மாதத்தின் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் இந்திய வம்சாவளித் தமி ழர்களின் தொப்புள் கொடி உறவு எனக் கூறப்பட்டு வருகின்ற இந்திய தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் தரவுள்ள நிலையில் அவரிடம் மலையக சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கும் நேரடியாக அழைத்துச் சென்று தொழி லாளர்களின் வாழ்க்கைப் பொருளாதார நிலைமைகளை காண்பிப்பதற்கும் வழி வகை செய்வதற்கு மலையகத் தலைமைகள் முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்கால த்திலாவது நன்மைகள் வந்து சேர்வதாய் அமையும் என் பதிலும் ஐயமில்லை.

மலையக சமூகத்தின் பிரச்சினைகள் வெளிப்படுத்தப் படாமையே பின்னடைவுகளுக்கான பிரதான காரணி. இதனை புதிதாகவும் சொல்ல வேண்டியுள்ளது.
நன்றி - வீரகேசரி 
Share this post :

+ comments + 1 comments

6:50 AM

ஸ்டீபன் அவர்கள் தொழில் செய்யும் இடத்தில் அவர் முறையாக செலவு செய்தால்தான் சம்பள உயர்வு வழங்க முடியும் என்று சொல்வார்களாயின் அதனை அவர் ஏற்றுக் கொள்வாரா? உழைப்புக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டுமே தவிர பெற்ற சம்பளத்தை என்ன செய்கின்றார்கள் என்பதை வைத்து சம்பள உயர்வுகள் தீர்மானிக்கப்படுவதல்ல.

சம்பளத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்துடன் தொடர்பானது. மிகவும் அர்ப்பத்தனமான வாதங்கள் இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

பொதுவில் தோட்டத் தொழிலாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவர்களின் மதுபாவனை மற்றும் பிள்ளை பெறுதல் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. //மலையகத்தில் மதுபானக் கடைகள்இ மதுபான வர்த்தக நிலையங்கள் அதிகரிப்பதற்கும் கள்ளச்சாராயக் கடை கள் முளைப்பதற்கும் கள்ளச் சாராயம் உற்பத்தி செய்யப்படுவதற்கும் இவ்வாறு ஆணும் பெண்ணும் போதை தலைக்கேறும் வரையில் குடியில் மிதப்பதே பிரதான காரணமாகும்.

இவ்வாறு மது போதையில் இருக்கும் கணவனும் மனைவியும் பிள்ளைப் பேறுகளை பெற்றுக்கொள்ளும் விடயத்திலும் தவறிழைப்பதால் இயல்பாக தேவைப்படுகின்ற கால இடைவெளி இல்லாது பிள்ளைப்பேறுகளும் உண்டாகி விடுகின்றன. இப்படியான நிலைமைகள் குடும்பத் தின் வறுமை நிலைக்கு பிரதான காரணிகளாகின்றன. //

இது தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளளைகள் அனைவரும் போதை வெறியின் விளைவாக பிறந்தவர்கள் என்று கூறுவதாகும். இவ்வாறான அபத்தமான கூற்றுக்கள் இது கண்டிக்கத்தக்கது.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates