மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் உபதலைவர் மு.சிவலிங்கத்தின் 'வெந்து தணிந்தது காலம்' சிறுகதை தொகுதி வெளியீட்டு விழா எதிர்வரும் 16.03.2014 ஞாயிறன்று மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்சங்கத்தில், காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் தலைமையில் நடைபெறும்.
பேராசிரியர் சோ.சந்திரசேகரன் பிரதம விருந்தினராகக் கலந்துக்கொள்ளும் இவ்விழாவில் வெளியிட்டுரையை மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இணைச்செயலாளர் இரா.சடகோபனும் ஆய்வுரைகளை எழுத்தாளர் கவிஞர் விமர்சர் மு.பொன்னம்பலம், எம்.வாமதேவன் (காப்பாளர் ம.எ.ம) ஆகியோர் நிகழ்த்துவர். கருத்துரையை மன்றத் தலைவர் தெளிவத்தை ஜோசப் நிகழ்த்துவார்.
இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிக்கும் இவ்விழாவில் வரவேற்புரையை மன்ற இணைச்செயலாளர் ஜி.சேனாதிராஜாவும் நிகழச்சி தொகுப்பினை மல்லியப்புச் சந்தி திலகரும் செய்கின்றனர். நூலசிரியர் மு.சிவலிங்கம் ஏற்புரை வழங்குவார். அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...