Headlines News :
முகப்பு » , » சாதாரண தர மாணவர்களுக்கு நாடகப் பயிற்சிப் பட்டறை

சாதாரண தர மாணவர்களுக்கு நாடகப் பயிற்சிப் பட்டறை


மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம் மற்றும் புதிய கலாசார தளம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள க.பொ.த (சா/த) மாணவர;களுக்கான இலவச நாடகப் பயிற்சிப் பட்டறை ஒன்று எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி இடம்பெறவுள்ளது. 

டிக்கோயா கிறிஸ்து நாதர், ஆலயத்தில் (க்ரைஸ் சர்ச் ஆலய மண்டபம்) 
காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நாள் 22.11.2013 மற்றும் 23.11.2013 ஆகிய இரு தினங்களில் இந்த பயிற்சிப் பட்டறை இடம்பெறவுள்ளது. 

இந்நாடக பயிற்சி பட்டறை கிழக்கு பல்கலைக்கழக நுண் கலை துறை தலைவர்; கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையில் இடம்பெறவிருக்கின்றது. 

இதில் சாதாரண தரத்தில் நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்தை தெரிவு செய்துள்ள மாணவரர்களை பங்குபெறச் செய்யும்படி பாடசாலை அதிபர் ஆசிரியர்களை வேண்டிக் கொள்கிறோம். 

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இப்பயிற்சிப் பட்டறை உதவியாக இருக்கும். 

பயிற்சிப் பட்டறை தினங்களுக்கு தேவையான உணவு, உடை (ட்ரெக்கிட்-Trackit டீசேட் T-shirt) என்பனவற்றை மாணவர்களே கொண்டு வர வேண்டும். 

மேலதிக தகவல்களுக்கு: ஆசிரியர் ஆர். யோகேசன் (தொடர்பு இல.0779259835).

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates