Headlines News :
முகப்பு » » அவிஸாவளை குளோரின் குழாய் வெடிப்பு 300 பேர் பாதிப்பு

அவிஸாவளை குளோரின் குழாய் வெடிப்பு 300 பேர் பாதிப்பு


அவிஸாவளை பென்ரித் தோட்ட நீர் குழாயில் குளோரின் கொண்ட நீர் குழாய் வெடித்ததன் காரணமாக 300ற்கும் மேற்பட்ட பொது மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது. 68 கிலோ கிராம் எடையுள்ள சிலிண்டர் ஒன்றில் இவ்வாறு வாயு கசிந்துள்ளது. சுமார் 300 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தற்போதைய நிலையில், 66 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவிசாவளை மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் இருவரின் நிலமை கவலைக்குரிய நிலையில் உள்ளதாகவும் அவர்கள் அவசர சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் நீர் விநியோக சபையின் உறுப்பினர்கள் மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.'

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates