Headlines News :
முகப்பு » » " கண்டிச்சீமையிலே" Microstudy நுணுக்கமாக நோக்கும் ஓர் ஆய்வு - கே.எஸ்.சிவகுமாரன்

" கண்டிச்சீமையிலே" Microstudy நுணுக்கமாக நோக்கும் ஓர் ஆய்வு - கே.எஸ்.சிவகுமாரன்


இராசடகோபன் தந்துள்ள கண்டிச்சீமையிலே (கோப்பிக்கால வரலாறு-1823-1839) என்ற அருமை யான348 பக்க படங்களுடன் கூடிய ஆய்வுநூலுக்கு 2013இல் அணிந்துரை எழுதிய பேராசிரியர் சோ.சந் திரசேகரன் பதித்துள்ள சில விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.

19ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மார்க்சியவாதி ULUMTGOT ANTONIO GARMSCI (1891-1937) என்பார் ஒடுக்கப்பட்ட மக்களின் (SUBALTERN) வரலாறு அடையாளம் என்பன பற்றிய சிந்தனைகளை வெளியிட்டார். இவை பின்னர் ஆங்கில அறிஞர்களால் கருத்தில்கொள்ளப்பட்டது. 1970களில் சமூக வரலாற்றை கீழிருந்து நோக்கும் ஒரு புதிய பார்வை ஆரம்பமாயிற்று. இதில் கிராம்சியின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. வரலாற்றை உருவாக்குவது உயர் குழாத்தினர் (ELTE) மட்டுமன்றி, இதில் சாதாரண மக்களும் ஒரு முக்கிய பங்களிப்பு உண்டு என வெளிக்காட்டப்பட்டது.

மக்களுடைய வாழ்க்கை நிலையையும் பங்களிப்பையும் கருத்திற்கொள்ளாது வரலாறு முழுமையானதாகாது என்று கூறிய இவ்வாய் வாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதற்கு பதிலாக பொதுமக்கள், கீழ் மட்ட மக்கள், சலுகை குறைந்த மக்கள், பலவீனமான சமூகப் பிரிவினர் போன்ற சொற்களைக் கையாண்டனர். கிராம்சியின் நோக் கில் இருக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்கப்படாத வர்கள் அல்லது அலட்சியப்படுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் வரும்.

ஊடகவியலாளரும், கவிஞரும், நாடகத்துறை யில் ஈடுபட்டவரும், சட்டத்தரணியுமான இரா.சடகோபன் பற்றிய சோ.சந்திரசேகரனின் கணிப்பு இதுவாகும்.

நூலாசிரியர் இந்நூலில் (கண்டிச் சீமையிலே) தமது இரு பிரதான ஆளுமைகளை பிரதிபலிக் கின்றார். ஒருபுறம், ஓர் ஆய்வாளருக்குரிய தகவல் தேட்டத்திறன், பகுப்பாய்வுப் பாங்கு தர்க்க ரீதியான சிந்தனை என்பவற்றுடன் கூடிய எழுத்தாற்றல், ஒரு சட்டத்தரணிக்குரிய வாதத்திறன் மறுபுறம் கவிஞர் இலக்கியவாதி, பத்திரிகையாளர் என்போருக்குரிய கலையம்சத்துடனும், சமூக நேயத்துடனும் கண்ட றிந்தவற்றை தெள்ளிய அழகியல் உணர்வுடன் வாசகர் படிக்கும் படியான தமிழ்நடை ஆகிய இவைய னைத்தும் தன்னகத்தே கொண்ட அத்தியாயங்களாக கோப்பிகால மக்களின் அவலங்களும் இன்னல்களும் அவரது கை வண்ணத்தில் வரலாற்று வடிவம் பெறுகின்றன.

சோ.சந்திரசேகரன் திறனாய்வு தொடர்பாகவும் பிரயோகிக்கத் தக்க ஒரு முக்கியமான விளக்கத்தை தந்திருப்பதற்கு நன்றி. அவரது விளக்கம்-முறை யான ஆய்வாளர்களின் எழுத்து நடைக்கும், ஆய்வேட்டுப் பணிக்கும் சில வரையறைகள் உண்டு.

இங்கு உணர்வுகளுக்கு இடமிருக்காது. நிகழ்வுக்கு வியாக்கியானமளித்தல், மற்றும் அவ்வியாக்கியானங்களில் சொந்த முற்கோடல்கள், உணர்வுகள் படியாத மொழி நடையைப் (Dispassionate Language) பயன்படுத்துதல் என்பன இவற்றில் முக்கியமானவை. இவ்வியாக்கியானங்கள் முற்றி லும் விஞ்ஞானப் பாங்குடன் அமைதல் பெரிதும் வேண்டப்படுகிறது.

கலையம்சத்துடன் கூடிய இலக்கியப் பாங்கான மொழிநடை ஆய்வேடுகளில் தேவைப்படுவதில்லை. அது வலியுறுத்தப்படுவதுமில்லை. இதனால் ஆய்வேட்டுக் கட்டுரைகள் கட்டுரை இலக்கியம் என்ற வகைப்பாட்டுக்குள் உள்ளடங்கா.

ஆய்வேடுகள் இலக்கிய ஏடுகள் என்று எடுத்துக் கொண்டால் இலக்கியப்படைப்பாளிகளின் பெயர் மற்றவர்களை விட சமூகத்தின் கவ னத்தைக் கவர விசேட காரணம் உண்டு.

இலக்கிய ஏடுகளின் உள்ள டக்கம் சமூகத்துடன் நெருங்கி இருப்பதனாலும் அவற்றின் கலைத்தன்மையுடன் சமூகம் ஒன்றிப் போவதாலும் அவை சமூகத்தின் ஆழமாக நிலைபெற்று விடுகின்றன. தொடர்ந்து நினைவுகூரப்படுகின்றன.

இவ்வகையில் சடகோபனின் இவ்வெழுத்துக்களில் ஆய்வுப்பண்பும் சமூகப் பண்பும், கலைப்பண்பும் ஒருங்கே காணப்படுவது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ஓர் ஆய்வறிவாளர் என்பதை நாம் அறிவோம். அவர் திறனாய்வாளர்களுள் ஒருவர் என்பது பலர் அறியார்.

*(ELITE: மே நிலைப்பட்டோர்)

நன்றி - தினக்குரல் -27.11.2016
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates