Headlines News :
முகப்பு » , » மலையக உத்வேக அரசியலுக்கு வித்திட்ட போராளிகளை மறந்தது சரியா? - சிலாபம் திண்ணநூரான்

மலையக உத்வேக அரசியலுக்கு வித்திட்ட போராளிகளை மறந்தது சரியா? - சிலாபம் திண்ணநூரான்


மலையக பாட்டாளி வர்க்கத்தின் உரிமைக்காக இதுகாலம் வரையும் 36 பேர் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்-ளனர். தங்களின் உரிமைகளுக்காக பல்வேறு வடிவங்களில் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டங்கள் இடம்பெற்-றுள்ளன. ஆனால் இவை குறித்து மலையக மே தின நிகழ்வுகளில் என்றாவது பேசப்படுகின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாகக்கிடைக்கும்.

முதன் முதலாக 12.01.1939 இல் ஹேவாஹெட்ட, முல்லோயா தோட்டத்தில் 16 சத சம்பள உயர்வுக்காக இடம்-பெற்ற போராட்டத்தின் போது கோவிந்தன் என்ற இளம் பாட்டாளி, சுரவீர என்ற பொலிஸ் சார்ஜண்டினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நாட்டில் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு முதன் முதலாக தன் உயிரை நீத்தவர் தியாகி கோவிந்தன் ஆவார். மலையக வரலாற்று பதிவேட்டில் கண்டி பல்லேகல தோட்டத்தைச் சேர்ந்த தோழர் பழ-னிவேல் 1979 இல் தன் உயிரைப் பறிகொடுத்த இறுதி பாட்டாளியாக பதிவாகி உள்ளார். இம் 36 தோழர்களின் தியாகம் மிகவும் இக்கட்டான காலத்தில் இடம்பெற்ற துயர நிகழ்வுகளாகும். இலங்கை அரசியலில் மலையக அர-சியலுக்கு என வரையறுக்கப்பட்ட அரசியல் வரலாறு உள்ளது. 1947 இல் இடம் பெற்ற முதலாவது பாராளு-மன்றத் தேர்தலில் இந்தியத் தமிழர்கள் பெற்ற வெற்றியின் பின்னர் இரண்டாவது பிரவேசம் 1977 இல் இடம் பெற்றமை முக்கியவிடயம். 1977 இல் இடம் பெற்ற தேர்தலில் மலையக மக்கள் ஒரு பெரும் பிரளயத்தை இந்-நாட்டில் ஏற்படுத்தினர்.

பின்னர் சிங்கள தேசியத்திற்கு பின்னால் திரிந்த மலையக அரசியலில் ஒரு தேசிய உணர்வை இத்தேர்தல் உணர்த்தி-யது. உண்மையில் அன்று மலையகத்தின் பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் ஒரு விழிப்புணர்வை வெளிக்கொணர்ந்-தது. இந்த காலகட்டத்திற்கு மத்தியில் பல்வேறு போராட்டங்களில் தமது இன்னுயிரை நீத்த மலையக வீரத்தியா-கிகள் பற்றி சர்வதேச தொழிலாளர் தினத்திலாவது தற்போதுள்ள பிரதிநிதிகள் மறந்தேனும் வாய் திறந்து பேச மறுத்து வருகின்றனர். எமது மக்களும் அரசியல்வாதிகளும் சுகபோக வாழ்க்கை வாழ அங்கீகாரம் வழங்கியவர்கள் அனைவராலும் மறக்கப்பட்ட 36 தோழர்களேயாவர். மலையக மண்ணுக்காக அஹிம்சை வழியில் போராடி உயிர்-நீத்த இத் தோழர்களே நாகரிக அரசியல் அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தவர்களாவர். தம் உயிர்களைக் கொடுத்து மலையகத்திற்கு அரசியல் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த எமது தோழர்களுக்கு ஒரு நினைவு மண்டபமோ அல்லது தூபிகையோ நிர்மாணிக்கவில்லை.

1977 இல் மலையக அரசியலுக்கு விலாசம் வழங்கியவர் சிவனு இலட்சுமணன் என்ற இளம் (18 வயது) போராளி-யாவார். கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் கோபுரம் கட்டவும் நிதி ஒதுக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு இத்தியாகத் தோழர்களின் நினைவு இல்லாது போனமை கவலைக்குரியதாகும்.

11.5.1977 இல் சிவனு இலட்சுமணன் மலையக மண் சுவீகரிப்பிற்கு எதிராக அரசுக்கெதிரான போராட்டத்தின் போதே பொலிஸாரினால் பத்தனை டெவனில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மரணத்தை அடுத்து கொள்கை அரசியல் மலையகத்தில் விதைக்கப்பட்டது. தேர்தல் இடம் பெற பத்து தினங்கள் இருக்கையில் தோழர் சிவனு இலட்சுமணன் மரணம் பாட்டாளி வர்க்கத்தை அரசியல் களத்தில் இறங்க வைத்தது. அக்கொலை வஞ்சிக்கப்பட்ட பாட்டாளிகளை உசுப்பிவிட்டது எனலாம்.

சிவனு இலட்சுமணன் கொலையோடு 17.05.1977 கம்பளை சங்குவாரித் தோட்டத்தில் ஆறு லயங்கள் இனவெறி-யர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். இதேவேளை புசல்லாவை டெல்டா தோட்டத்தில் நூறு வீடுகளுக்கு மேல் தீ வைத்ததுடன் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த மூன்று சம்பவங்-களும் சேவல் சின்னத்தை 1977 தேர்தலில் கூவ வைத்தது எனலாம். பாட்டாளி வர்க்கம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். தன் மானத்தோடு வாழவேண்டும். தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு மே மாதம் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எழுந்தது.

மலையக வரலாற்றில் 30 வருட இடை வெளிக்குப் பின்னர் அமரர் எஸ்.தொண்டமான் வெற்றி பெறவும், பிரசா-ரத்தை மேற்கொள்ளவும் தோழர் சிவனு இலட்சுமணனின் மரணம் சங்குவாரித்தோட்ட கொள்ளைச் சம்பவம் டெல்டா தோட்ட லயன் அறை எரிப்புச் சம்பவங்கள் காரணங்களாகின.

 1977 இல் மலையக மண்ணுக்காக உயிர் துறந்த தோழர் சிவனு இலட்சுமணனின் மண்ணறையின் மீது எழுப்பப்-பட்ட கல்லறையும் பின்னர் பேரினவாதிகளால் தகர்த்தெறியப்பட்டது. இன்று தோழர் சிவனு இலட்சுமணனின் மண்ணறை மீது புல்லும், மரமும் வளர்ந்து காடாகிக் காட்சி தருகின்றது.

1961 இல் நாவலப்பிட்டி லெட்சுமி தோட்டத்தில் ஒரே நாளில் நான்கு தொழிலாளர்கள் போராட்டத்தில் உயிரை இழந்தனர். பின்னர் 1970 இல் மாத்தளை நாலந்த தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் உயிரை இழந்தனர்.

இந்த 36 தியாகிகளில் நால்வர் சகோதர சிங்கள இனத்தவர்கள் ஆவர். இவர்களில் 1953 இல் தெபுவான என்கல்-வல தோட்டத்தைச் சேர்ந்த அட்லின் நோனா என்ற பெண்ணும் அடங்குகின்றமை முக்கியமானதாகும். டயகம ரவுன்பங்களாத் தோட்டத்தைச் சேர்ந்த ஏப்ரஹாம் சிங்கோ,1959 இல் பசறை கமேவல தோட்டத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சில்வா,1961 இல் களுத்துறை மாவட்டம் இங்கிரிய ஹல்வத்துறை தோட்டத்தைச் சேர்ந்த விஜயசேன ஆகியோரே மற்றைய ஏனைய தியாகிகளாவர். இவர்களில் டயகம, ரவுன் பங்களாத் தோட்டத்தைச் சேர்ந்த ஏப்-ரஹாம் சிங்கோவின் வீரமரணம் நாட்டில் அரசியல் ரீதியாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவமாகும். இம் மரணம் அன்றைய தொழிற்சங்கத்தின் வலிமையை வெளிப்படுத்தியது எனலாம்.

அன்றைய காலகட்டத்தில் எஸ்..தொண்டமான், ஏ.அஸிஸ் ஆகிய இரு தொழிற்சங்கத் தலைவர்களும் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்தலைவர்களாக விளங்கினர். இருவர் மத்தியிலும் ஏற்பட்ட பிணக்கால் இ.தொ.கா.1956 இல் இரண்டாக உடைந்தது. ஒரு பிரிவு இ.தொ.கா.வாக அமரர் எஸ்.தொண்டமான் தலைமையில் இயங்க, மறுபிரிவாக அமரர் ஏ.அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார்.

டப்ளியூ.ஆர்.வென்டர் கிஸ்டி என்ற ஆங்கிலேய தோட்ட உரிமையாளர் தலைமையில் ‘The Planters Association of Ceylon’ என்ற பெயரில் இயங்கிய முதலாளிமார் சம்மேளனம் ஐ.தொ.காங்கிரஸ் தொழிற் சங்-கத்தை அங்கீகரிக்க வில்லை. இவ் எதிர்ப்பை தகர்த்தெறிய ஏ.அஸீஸ் தலைமையில் திம்புள்ள கம்பனிக்கு சொந்த-மான ரவுன் பங்களா தோட்டத்தில்1956 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வேலைநிறுத்தம் ஆரம்பமாகியது. இவ் வேலை நிறுத்தமானது, திம்புள்ள கம்பனிக்குச் சொந்தமான 17 தோட்டங்களுக்குள்ளும் பரவியது.

ஆங்கில தோட்டத்துரைமாரின் அடாவடித்தனத்தோடு பொலிஸார் எட்டுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைதுசெய்து பசுமலை பொலிஸ் நிலையத்தில் அடைத்தனர். இதன் உச்சகட்டமாக ஆங்கில தோட்ட நிர்வாகம் தங்-களின் பாதுகாப்பு கருதி ரவுன் பங்களாத் தோட்டத்தின் சின்னத்துரை பங்களாவுக்கு பொலிஸாரை வரவழைத்தனர்.

பொலிஸாரின் ஜீப் தோட்டத்துரையின் பங்களாவுக்கு செல்ல இயலாதவகையில் பாட்டாளிகள் தோட்ட இடு காட்-டுக்கு அருகில் உள்ள பாலத்தை உடைக்க முற்பட்டனர். அதேவேளை இடுகாட்டிற்கு மேல் பகுதியின் கருப்பந்தே-யிலை தோப்பில் கூட்டமாக கூடி இருந்த பாட்டாளி தோழர்கள் பெரும் கருங்கல் பாறை ஒன்றை பொலிஸாரை நோக்கி உருட்டிவிட முற்பட்டனர்.

. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பொலிஸார் கற்பாறையை உருட்டிவிட முயன்ற பாட்டாளிகள் கூட்-டத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் ஏப்ரஹாம் சிங்கோ என்ற பெரும்பான்மையின தொழிலாளி கொல்லப்பட்டார்.

 பின்னர் ஆவேசப்பட்ட தோழர்கள் பாலத்தை தகர்த்தனர். ஆவேசத்தில் பொலிஸார் மீது கல் எறியப்பட்டது. இதனால் ஆத்திரப்பட்ட பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் எஸ்.தொண்டமான், ஏ.அஸீஸ் தொழிலாளர்களுடன் பேசியபின்பே அமைதி நிலவியது.

அன்று இன, மத தொழிற் சங்கத் தலைமை பேதமற்ற வகையில் இப்போராட்டம் அல்லது ஹர்த்தால் பாட்டாளி வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. ஏப்ரஹாம் சிங்கோவின் மரண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பாட்டாளி வர்க்கம் இணைந்து இறுதி மரியாதை செலுத்தினர். தோட்ட ஆங்கில நிர்வாகமே இந்த இறுதி ஊர்வலத்தை கண்டு அதிர்ந்து போனது. எமக்கு உரிமையை பெற்றுக்கொடுத்தவர்களை எளிதில் மறந்து விட்டு வரலாற்றையும் புறக்க-ணித்து விட்டு வாழ்ந்து வருகிறோம். அவர்களின் புகைப்படங்களைக்கூட சேகரித்துவைக்க முடியாத துரதிர்ஷ்டசா-லிகளாக இருப்பதை நினைத்து வேதனையாகத்தான் உள்ளது. 

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates