Headlines News :
முகப்பு » » பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற மலையக தமிழ் பிரதிநிதிகள்

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற மலையக தமிழ் பிரதிநிதிகள்


எட்டாவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலில் மலையகத்திலிருந்து மொத்தமாக எட்டு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள னர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான பி.திகாம்பரம், அதே கட்சியைச் சேர்ந்த எம். திலகராஜ், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வே.இராதா கிருஷ்ணன் ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட ஊவா மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவர் அ.அரவிந்தகுமார் ஆகியோரும் கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி உபதலைவர் வேலுகுமார் ஆகியோரும் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மலையக தமிழ் உறுப்பினர்களாவர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட பி. திகாம்பரம் 1,01,528 விருப்பு வாக்குகளை பெற்று முதலிடத்துக்கு வந்துள்ளார். வே. இராதாகிருஷ்ணன் 87,375 விருப்பு வாக்குகளையும் எம். திலகராஜ் 67, 761 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஐ.ம.சு.கூ. சார்பில் போட்டியிட்ட இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் 61,897 வாக்குகளையும் அதன் தலைவர் முத்து சிவலிங்கம் 45,352 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர்.

பதுளை மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட அ.அரவிந்தகுமார் 53,741 வாக்குகளையும் வடிவேல் சுரேஷ் 52,378 வாக்குகளையும் கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட வேலுகுமார் 52,556 வாக்குகளையும் பெற்று வெற்றியடைந்துள்ளனர்.

வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பற்றிய சிறு குறிப்பு வருமாறு:

பழனி திகாம்பரம்
(தலைவர் தொ.தே.ச) (பிறப்பு 10.01.1967) மலையக மக்கள் முன்னணியினூடாக 2004 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபையின் உறுப்பினரான இவர், 2009 ஆம் ஆண்டு ஐ.தே.க. மூலம் மீண்டும் மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். மலையகத்தின் பழம்பெரும் தொழிற்சங்கங்கமான தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பொறுப்பேற்று அதனை மீண்டும் கட்டியெழுப்பினார்.

அதன் தலைவராக தொடர்ந்து செயற்பட்டு வரும் அவர் 2010 ஆம் ஆண்டு ஐ.தே.க. வினூடாக பாராளுமன்றத்துக்குச் சென்றார். அதன் பின்னர் கடந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் இணைந்து கொண்ட அவர், சிறிது காலம் பிரதியமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினார். அதன் பின்னர் அமைந்த தேசிய அரசில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவியேற்றார்.

வேலுசாமி இராதாகிருஷ்ணன்
(அரசியல் பிரிவு தலைவர் ம.ம.மு) பிறப்பு: 01–08–1952 இ.தொ.கா. வினூடாக அரசியலில் பிரவேசித்த இவர், 1991 ஆம் ஆண்டு நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவாகி அதன் தலைவராக செயற்பட்டார். 2004 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபை உறுப்பினராக தெரிவானதுடன், 2005 முதல் மத்திய மாகாண அமைச்சராக பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு ஐ.ம.சு. கூ ஊடாக மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், மீண்டும் தமிழ்க் கல்வியமைச்சராக நியமனம் பெற்றார். 2010இல் பாராளுமன்ற உறுப்பினரானார். பின்னர் அவர் இ.தொ.கா. விலிருந்து வெளியேறியதுடன், மலையக மக்கள் முன்னணியில் இணைந்து அதன் அரசியல் பிரிவு தலைவரானார். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவின் நல்லாட்சியில் இணைந்து கொண்ட அவர் கல்வி இராஜாங்க அமைச்சரானார்.

மயில்வாகனம் திலகராஜ்
(தொ.தே.ச) பிறப்பு: 29–09–1973 தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர். கவிஞ ரும் சமூக செயற்பட்டாளருமான இவர் ஒரு பட்டதாரி ஆவார். ஆசிரியரும் வணிக நிறுவனங்களின் ஆலோசகருமாவார்.

ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான்
(பொதுச்செயலாளர் இ.தொ.கா.) பிறப்பு: 29–05–1964
1994 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற பிரவேசம். தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றியவர். 1996 இல் சௌமியமூர்த்தி தொண்டமான் காலமான பின்னர் இ.தொ.கா. வின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டு செயற்பட்டு வருகிறார்.

முத்து சிவலிங்கம்
(தலைவர் இ.தொ.கா.) பிறப்பு: 20–07–1943 இ.தொ.கா. வின் சிரேஷ்ட உறுப்பினரான இவர் தற்போது இ.தொ.கா. வின் தலைவராக செயற்பட்டு வருகிறார். 1994 ஆம் ஆண்டு முதல் 2008 வரை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். அமைச்சராகவும் சேவையாற்றினார்.
2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் எம்.பி. யாக நியமிக்கப்பட்டு பிரதியமைச்சராகவும் கடமையாற்றியவர்.

வடிவேல் சுரேஷ்
பிறப்பு: 12–05–1971
இ.தொ.கா. வினூடாகவே அரசியல் பிரவேசம். 2004 இல் ஐ.தே.க. மூலம் பதுளையிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான இவர், சுகாதார பிரதியமைச்சராக பதவி வகித்தார். 2014 இல் ஐ.ம.சு.கூ. ஊடாக ஊவா மாகாண சபைக்கு தெரிவான இவர், அம்மாகாணத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஐ.தே.க. அரசில் மாகாண தமிழ் கல்வியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அருணாசலம் அரவிந்தகுமார்
(பொருளாளர் ம.ம.மு) பிறப்பு: 17.11.1954
மலையக மக்கள் முன் னணியின் பொருளாளர். ஊவா மாகாண சபையின் உறுப்பினராக 2004 இல் தெரிவு செய்யப்பட்டார். கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போதும் வெற்றி கிடைக்கவில்லை.

வேலுகுமார்
(உபதலைவர் ஜ.ம.மு)
ஆசிரியரான இவர் மலை யக மாணவர்களுடன் கல்வி மற்றும் சமூக விடய ங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஜனநாயக மக் கள் முன்னணியின் உபத லைவரான இவர் கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates