Headlines News :
முகப்பு » » துரைவி ஞாபகார்த்த ஆய்வுக் கட்டுரைப் போட்டி - 2016

துரைவி ஞாபகார்த்த ஆய்வுக் கட்டுரைப் போட்டி - 2016


நோக்கம்
துரைவி பதிப்பக நிறுவுனர் அமரர் துரை.விஸ்வநாதன்  ஞாபகார்த்தமாக அன்னாரின் 85வது ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கையின் தமிழ் நாவல்கள் பற்றிய முழுமையான ஆய்வினை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டி.

தலைப்பு-தொனிப்பொருள்
ஈழத்து பிராந்திய நாவல் இலக்கியம்” 

ஆய்வுக்கட்டுரைக்கான பரப்பு
“ஈழத்து பிராந்திய நாவல் இலக்கியம்” எனும் தொனிப்பொருளில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரையானது, பின்வரும் நான்குப் பிராந்தியப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு  பிரிவை மட்டுமே மையமாகக் கொண்டு ஆய்வாளர்  ஒருவரால் ஒர் ஆய்வுக்கட்டுரை மட்டுமே சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பிராந்தியப் பிரிவுகள் பின்வருமாறு

1) வடக்கு (வட மாகாணம், வடமேல் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கியது)
(2) கிழக்கு (கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிவற்றை உள்ளடக்கியது)
(3) மலையகம் (மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் 
   ஆகிவற்றை உள்ளடக்கியது)
(4) தென்னிலங்கை(மேல் மாகாணம், தென் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கியது)

தகமை
போட்டியாளர் இலங்கையின் எந்த பிரதேசத்தை சேந்தவராகவும் இருக்கலாம். ஆனால் தான் ஆய்வுக்காகத் தெரிவு செய்யும் பிராந்தியத்தை தெளிவாக குறிப்பிட்டு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தல் வேண்டும்.

* போட்டியாளருக்கு வயதெல்லை கிடையாது.

முறைமை
  • கட்டுரைகள் 12 Point Bamini Font யில் கணிணியில் அச்சிடப்பட்டு 12 முதல் 15 தாள்களுக்கு (A4) மட்டுப்படுத்தப்பட்ட வடிவில் இருத்தல்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
  • கட்டுரையாளர்  பற்றிய எந்தவொரு குறிப்பும் பெயர்  உட்பட சமர்ப்பிக்கப்படும் கட்டுரைப் பிரதியில் குறிப்பிடலாகாது.
  • கட்டுரையாளர் பற்றிய அறிமுகக் குறிப்பு ஒன்றை ஒரு பக்கத்திற்கு மேற்படாத வகையில் தனியான தாளில் எழுதி இணைத்து அனுப்புதல் வேண்டும். 
  • மேற்கூறிய முறையில் அச்சடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் மூன்று பிரதிகள் தபாலில் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • போட்டியில் தெரிவுச் செய்யப்படும் கட்டுரைகள் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்குப்  பின் மேற்கூறிய முறையில்;(12 Point Bamini Font) MsWord யில் வடிவமைக்கப்பட்டு கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பரிசு விபரம்

துரைவியின் 85வது ஜனனதின நினைவை முன்னிட்டு 85000/=மொத்தப் பரிசுத்தொகையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

  • ஒவ்வொரு பிராந்திய ஆய்வுக்குமாக சிறந்த கட்டுரையொன்றுக்கும், ஆறுதல் பரிசொன்றுமாக இரண்டு பரிசுகள் வீதம் எட்டு பரிசுகள் வழங்கப்படும்.
  • சிறந்த கட்டுரைக்கான பரிசாக 12250/= பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்

ஆறுதல் பரிசாக 9000/=  பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்

முடிவுத் திகதி
போட்டிக்கான ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முடிவுத் திகதி- 30-09-2015

முடிவுகள்
போட்டி முடிவுகள் ஊடகங்கள்  ஊடாக அறிவிக்கபடுவதோடு தெரிவுச் செய்யப்படும் போட்டியாளார்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

முகவரி
Duraivi,   
C/o Vijaya General Stores, 
85, Wolfendhal Street  
Colombo-13.


மேலதிகத் தொடர்புகளுக்கு
மேமன்கவி-0778681464, திலகர்-077239765, துரைவி அலுவலகம்-011-2327011, மின்னஞ்சல்-duraivi1931@gmail.com
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates